முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தாசில்தாரைக் கடித்த நாயால் மக்களுக்கு ஏற்பட்ட நல்ல தீர்வு

இந்தியாவில் தெரு நாய்கள் பிரச்சனை அதிகரித்து வருகிறது.


தெரு நாய்கள் பற்றிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது இந்த நிலையில் தான் தற்போது அம்பத்தூரில் நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், காவலர் ஒருவரை விலங்கு நல ஆர்வலர் ஒருவர் (பெண்) மரியாதைக் குறைவாக, கடுமையாக பேசிய காணொளி ஒன்றை காண நேர்ந்தது. தெருவில் திரியும் நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும் தொல்லை குறித்த வழக்கில்  சமீபத்திய உச்சநீதி மன்ற உத்தரவில், தெரு நாய்களுக்கு சாலைகளில் உணவிடக் கூடாது என்றும், உள்ளாட்சி நிர்வாகங்கள் நாய்களுக்கு உணவிடுவதற்கு தனியாக இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் தெருக்களில் நாய்களுக்கு உணவிடக்கூடாது. அப்படி உணவிடுவது குற்றம் என்றும், எந்த ஆர்வலரும், அமைப்பும் இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகளை எதிர்ப்பதோ, அவர்களின் பணியில் இடையூறு செய்வதோ கூடாது என்றும் அப்படி செய்தால் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுக்கும் குற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. 


ஆகையினால், பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் தெரு நாய்கள் விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. நீதிமன்ற உத்தரவை மதிப்பதோடு நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே நாய்களும் பேணிகாக்கப்படும் என்பதை உணர்ந்து நாய் ஆர்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட வேண்டும். இல்லையேல் சட்ட ரீதியாக அவர்களின் மீது நடவடிக்கை பாயும் என்று உணரவேண்டும்.தெரு நாய்களை அழிப்பது என்பது நோக்கமல்ல.  சிவகங்கை மாவட்டம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஒவ்வொரு தாலுகாவிலும் வட்டாட்சியர் அல்லது ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலர்களைக் கடித்தால் மட்டுமே தான் நடவடிக்கை எடுத்து தெரு நாய்கள்  ஒழிக்கப்படும். நகராட்சி நிர்வாகத்திறகு மாவட்ட நிர்வாகம் எழுதிய கடிதம்  சிறப்பு மேலும் பீடடா உள்ளிட்ட நாய் ஆர்வலர்கள் ஒவ்வொருவரிடமும் பத்து தெருநாய்களை பிடித்து ஒபபடைக்க உத்தரவிடடால் இதபோல எங்கும் பிரச்சனைகள் வராதுசிவகங்கையில், இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற தேர்தல் பிரிவு தாசில்தாரை  தெருநாய்கள் விரட்டி விரட்டிக் கடித்ததில், பலத்த காயமடைந்தவர் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டார்.


இந்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பொற்கொடி நேரடியாக கள ஆய்வு செய்து, தெரு நாய்களைக் கட்டுப்படுத்தத் தவறிய நகராட்சி ஆணையர், கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில், 200க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. ஒரு வாரம் முன் காலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத் திடலில், தேர்தல் பிரிவு தாசில்தார் மேசியதாஸ், வயது 55, என்பவர் நடைபயிற்சி மேற்கொண்டார். பின், இரண்டு சக்கர வாகனத்தில் திருப்புத்துார் சாலையில் சென்ற போது, சில நாய்கள் அவரை விரட்டி விரட்டிக் கடித்ததில், பலத்த காயமடைந்தவர் மாவட்ட ஆட்சியர் பொற்கொடிக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர், அவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடனடியாக நாய்கடி சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த ஆட்சியர், திருப்புத்துார் சாலையில் திரியும் நாய்கள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்தார்.


நகராட்சி ஆணையர் அசோக்குமாரை, மொபைல் போனில் அழைத்த ஆட்சியரின் அழைப்பை அவர் ஏற்கவில்லை. அதிருப்தியடைந்த  ஆட்சியர், நேரடியாக நகராட்சி அலுவலகம் சென்று, அங்கிருந்த அலுவலர்களிடம் கடுமையான முறையில் கடிந்து கொண்டார். மேலும், நாய்களுக்கு தடுப்பூசி போடத் தவறிய நகராட்சி ஆணையர் அசோக்குமார், கால்நடைப் பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நந்தகோபால் ஆகியோர் மூன்று நாட்களில் விளக்கம் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினார்.


நகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறுகையில், ''நகரில் இருக்கும் 200 நாய்களில், 135 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி விட்டோம். திருப்புத்துார் சாலையில் தாசில்தாரைக் கடித்த இரண்டு நாய்களைப் பிடித்து நேற்று உடனே ஊசி செலுத்தி விட்டோம். விரைவில் அனைத்து நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்,'' என்றார். 

இதில் வேடிக்கை என்னவென்றால் ஊழல் நிறைந்த நிர்வாகத்தில் சாமானிய மக்களுக்கு நாய் கடித்த போது கண்டும் காணாமல் போன நிர்வாகம் தாசில்தாரைக் கடித்த காரணமாகத் தீர்வு வருகிறது,  பல ஊர் நாய் கடி சம்பவங்கள் மாவட்டம் முழுவதும் உள்ளது, இதன் பின்னராவது தீர்வு வந்தால் சரி தெரு நாய்களின் தொல்லையாலும், வெறி நாய்க்கடியாலும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பாதித்த போதெல்லாம் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், தங்கள் அரசு பணி அலுவலர் பாதிக்கப்பட்டவுடன் விரைந்து நடவடிக்கை எடுக்கும் நிலை , சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலர்களிடம் விளக்கம் கேட்கிறார்கள், என்று சிவகங்கை மக்கள் பேசுகிறார்கள். ஊழல் அதிகம் உள்ள மாவட்டமாக சிவகங்கை கடந்த மூன்றாண்டுகளாககிறது வேதனையில் பல மக்கள் பேசும் கருத்து இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...