முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகவுக்கு கொடி மாம்பழம் சின்னம் தேர்தல் ஆணைய அங்கீகாரம்

மருத்துவர் அன்புமணி ராமதாஸ்


தலைமைக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் மாம்பழச் சின்னம் உறுதியானது. பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான்!"    இந்தியத் தேர்தல் ஆணையம் மருத்துவர் ச.ராமதாசுக்கு  எழுதிய கடிதம். கட்சித்தலைவர் பதவி குறித்த உங்களது முரண்பாடுகளைத் தீர்க்க நீதிமன்றத்தை அணுகும்படி மருத்துவர் ச.ராமதாஸ் சார்ந்த சிறிய அணிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

கட்சியின் சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மருத்துவர் அண்புமணி ராமதாஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். "நமக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டார்கள். என்னை கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார்கள். மாம்பழம் சின்னம் நமக்கு ஒதுக்கி விட்டார்கள். தேர்தல் ஆணையம் 'Aபார்ம்' மற்றும் ' Bபார்ம்' கையெழுத்து போடும் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள்.

நீதிமன்றம் அல்லது எங்கு சென்றாலும் எதுவும் ஆகப் போவது கிடையாது. அதைப் பற்றியும் நான் பேசவும் வேண்டாம்" என்று உறுதியளித்தார். மேலும், கட்சியின் நிறுவனர் அய்யா ராமதாஸ் அவர்களைப் பற்றி மாற்றுத் தரப்பினர் பேசும் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.



அங்கு இருப்பவர்கள் தினமும் அய்யா (மருத்துவர் ராமதாஸ்)பெயரை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய சுயநலத்திற்காக, திமுகவின் கைக்கூலிகள் இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றிப் பேச வேண்டாம், நம் வேலைகளைச் செய்வோம்" என்று கூறினார். வரவிருக்கும் தேர்தல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகளிருக்கு முக்கியத்துவம் மற்றும் போராட்ட ஆயத்தங்கள்

வரவிருக்கும் தேர்தலில் கட்சிப் பணிகளில் தொகுதிப் பொறுப்பாளர்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் பேசினார். "கட்சியில் வந்திருக்கின்ற தொகுதிப் பொறுப்பாளர்கள் தான் ஹீரோ" என்று பாராட்டினார். குறிப்பாக, மகளிர் பங்களிப்பு குறித்துப் பேசியபோது, "நூறு தொகுதிகளிலும் மகளிர்களையும் தொகுதிப் பொறுப்பாளர்களாகப் போட உள்ளேன். பெண்களுக்கு முறையான பாதுகாப்பு மற்றும் மரியாதை கிடைக்க வேண்டும். அவர்களைப் பத்திரமாகத் தங்க வைத்துப் பாதுகாக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அவர்கள், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக, அன்புமணியின் தங்கைகள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும், மாவட்டச் செயலாளர்கள் அதற்கான தேதிகளைச் சீக்கிரமாக வாங்கிக் கொள்ள வேண்டும் என்றும், இதன் மூலம் மகளிர் வாக்குகளைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

வரவிருக்கும் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி போராட்டத்திற்கு ஆயத்தமாகும் விதமாக, ஒவ்வொரு வருவாய் மாவட்டமாகத் தான் வர இருப்பதாகவும், அதற்காகத் துண்டுப் பிரசுரங்கள் தயார் செய்து, ஒவ்வொரு வீடாகச் சென்று கொடுக்க வேண்டும் என்றும், திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார்.



இறுதியாக, அன்புமணி ராமதாஸ், "நிம்மதியாக இருக்கிறேன், சந்தோஷமாக இருக்கிறேன், தைரியமாக இருக்கிறேன், தன்னம்பிக்கையுடன் இருக்கிறேன்" என்று கூறி, கட்சிப் பயணத்தின் மீதான தனது உறுதியை நிர்வாகிகளுக்கு உணர்த்தினார் நீணட காலமாக பதவியை அனுபவித்து உண்மைத் தொணடர்களை தனது கோஷ்டி சேர்த்த ஜி. கே மணி  இல்லாத நிலை வந்தது!  வழக்கறிஞர் கே பாலுவின் முயற்சி மற்றும் நடவடிக்கைக்கு, பாட்டாளி மக்கள் கட்சியினுடைய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தொடர்கிறார், அவரது பதவி காலம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி செய்துள்ளது! திமுகவை அகற்ற உள்ள கூடடணியில் பாமக இருக்கும் என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...