முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இளைய தலைவர் விஜய் எம்ஜிஆர் இடத்தை பிடிப்பார் கே.ஏ.செங்கோட்டையன் கணிப்பு

விமானத்தில் கோயமுத்தூர் வந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிராந்திய அமைப்புச் செயலாளர், கே. ஏ. செங்கோட்டையனுக்கு 4 மணிநேரம் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்த தவெக கட்சியினர்.


பின் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,, "எம்ஜிஆர் என்னை அடையாளம் காட்டினார். இன்றைக்கு மக்கள் சக்தியாக இருக்கிற நாளைய முதல்வர் விஜய் 2026 ல் முதல்வராக அமர்வார்.

வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் மாற்று சக்தியை உருவாக்க விஜய் புறப்பட்டிருக்கிறார். புனித ஆட்சியை தமிழகத்தில் இடம் பெற வைக்க விஜய் துணிந்து புறப்பட்டிருக்கிறார். அந்த வழியில் நானும் பயணிக்கிறேன்.



இரண்டு ஊழல் ஆட்சிகளும் வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.4 மணி நேரம் காத்திருந்து எளிய தொண்டனாக என்னை கோயமுத்தூரில் வரவேற்றிருக்கிறார்கள். 9 முறை சட்டமன்றப்பேரவை உறுப்பினராக இருக்கிறேன்.



வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.

இரண்டு ஆட்சிகளும் வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.4 மணி நேரம் காத்திருந்து எளிய தொண்டனாக என்

பின்னால் மக்கள் இருக்கிறார்கள்". என அவர் குறிப்பிட்டார்.தவெகவில் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் நேற்று இணைந்தார்.  அவருக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் பிராந்திய அமைப்புச் செயளாளர் உள்ளிட்ட இரண்டு பதவிகள் வழங்கப்பட்டன. நேற்று முன்தினம் தன் சட்டமன்ற உறுப்பினர், பதவியை ராஜினாமா செய்தார், தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகம் தலைவரான விஜயை, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.





 இந்த நிலையில், சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபாமா உள்ளிட்ட தன் ஆதரவாளர்களுடன் நேற்று காலை செங்கோட்டையன் வந்தார்.

பின்னர், ஆதரவாளர் களுடன் விஜய் முன்னிலையில், த.வெ.க.,வில் முறைப்படி சேர்ந்தார். அவருக்கு சால்வை மற்றும் த.வெ.க., கட்சித் துண்டு அணிவித்து விஜய் வரவேற்றார்.





மேலும், த.வெ.க.,வில், செங்கோட்டையனுக்கு நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலர் பொறுப்பும் வழங்கப்பட்டன.

பின், அங்கு கே. ஏ.செங்கோட்டையன் அளித்த பேட்டி:

"கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது, பின்னால் அணிவகுத்த தொண்டர்களில் நானும் ஒருவன். ஆனால், இன்றைய நிலை வேறு.

அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தினேன்; கெடு விதிக்கவில்லை; பேச்சை துவக்க வேண்டும் என்றேன். கெடு என சொல்ல வைத்தது பழனிசாமி.





கட்சியில் இருந்து என்னை வெளியேற்ற முடிவு செய்து, சரியாக காய் நகர்த்தினார். கட்சிக்காக 50 ஆண்டுகளாக உழைத்ததற்கு கிடைத்த பரிசு. மகேஷ் என்பவரின் மாமா, விபத்தில் இறந்து விட்டார். அவர் வீட்டிற்கு சென்று நான் துக்கம் விசாரித்ததற்காக, அவரையும் கட்சியில் இருந்து நீக்கினார். இது, தற்போதுவரை தமிழகத்தில் நடக்காத நிகழ்வு.

அதன்பின், தெளிவான முடிவெடுத்து,  சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.,வில் இணைந்துள்ளேன். இன்று, அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டு கட்சிகளும் வேறல்ல; இரண்டுமே ஒன்று தான்; ஒன்றாக இணைந்து பயணம் செய்கின்றன.

ஒரே ஒரு கருத்து மட்டும் சொல்கிறேன். நான் தான் என்று ஒருவன் நினைத்தால், ஆண்டவன் பார்த்துக் கொள்வான்; தண்டித்து விடுவான். எல்லாருக்கும் மேலே இருக்கும் இறைவன் நம்மை கண்காணித்து கொண்டு இருக்கிறான்.






துாய்மையான ஆட்சி தமிழகத்தில் மலர, விஜய் கட்சியை துவக்கி மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். குழந்தைகள் கூட, அவருக்கு ஓட்டளிக்கும் படி பெற்றோரைக் கேட்கும் நிலை உள்ளது.

ஜெயலலிதா படம் எல்லா நாடுகளிலும், மாநிலங்களிலும், மாற்றங்கள் உருவாகின்றன. டில்லியில் இரு பெரிய கட்சிகளுக்கு மத்தியில், ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்தது. பஞ்சாபிலும் புதிய கட்சி ஆட்சிக்கு வந்தது. தமிழகத்திலும் புதிய கட்சி ஆட்சிக்கு வரும். த.வெ.க., தலைவர் விஜய் வெற்றி பெறுவார்.



எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புனிதமான ஆட்சியை வழங்கினர். ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டு வேறு; அவர் துாய்மையானவர். ஒரு அரசு நினைத்தால், எப்படி வேண்டுமானாலும் வழக்கை ஜோடிக்க முடியும். தி.மு.க.,வோ, தேசிய கட்சிகளோ, என்னை சந்திக்கவில்லை; அமைச்சர் சேகர்பாபு என்னை சந்திக்கவில்லை.

என் சட்டை பையில் வழக்கமாக வைத்திருக்கும் ஜெயலலிதா படத்தை மாற்றினால், ஒரே நாளில் மாற்றி விட்டார் என்பீர்கள். ஆனால், யார் படத்தை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், த.வெ.க., ஒரு ஜனநாயகக் கட்சி." இவ்வாறு அவர் கூறினார்.




த.வெ.க.,வில் இணைந்த பின், முன் னாள் முதல்வர்கள் டாக்டர் சி. என்.அண்ணாதுரை, டாக்டர்.எம்.ஜி.ஆர்., டாக்டர் ஜெ. ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களில் செங்கோட்டையன் தவெக கட்சி பிரமுகர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார். செங்கோட்டையனை வரவேற்று, த.வெ.க., தலைவர் விஜய் கூறியதாவது:, "செங்கோட்டையன் 20 வயது இளைஞராக இருந்த போதே, எம்.ஜி.ஆரை நம்பி, அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சின்ன வயதில், எம்.எல்.ஏ., என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன்பின், தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களின் நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். இப்படி, 50 ஆண்டுகளாக ஒரே கட்சியிலிருந்த செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்துள்ளார். அவரது அரசியல் அனுபவம், களப்பணி ஆகியவை த.வெ.க.,வுக்கு உறுதுணையாக இருக்கும். அவருடன் த.வெ.க.,வில் கைகோர்க்கும் அனைவரையும் வரவேற்கிறேன். நல்லதே நடக்கும்; நல்லது மட்டும்தான் நடக்கும். வெற்றி நிச்சயம், ".எனக் கூறியுள்ளார்.கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நவம்பர் 26 அன்று அவர் ராஜினாமா செய்திருந்தார். அதைத் தொடர்ந்து தவெகவில் இணைந்துள்ளார்.





அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர்.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன், நம்பியூர் அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் சுப்பிரமணியம், கோபிசெடடிபாளையம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த குறிஞ்சிநாதன்,




முன்னாள் யூனியன் தலைவர்கள் மௌடீஸ்வரன், பி.யூ.முத்துசாமி, அத்தாணி பேரூர் கழகச் செயலாளர் எஸ்.எஸ்.ரமேஷ் உள்ளிட்டோரும் செங்கோட்டையனுடன் தவெக-வில் இணைகின்றனர். மேலும் புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதனும் தவெக வில் இணைகிறார். அவருடன் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் இணைகிறார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...