இலங்கை ஜீவன் குமாரவேல் தொண்டமானையும் நாச்சியார் ஸ்ரீ சீதையையும் திருமண பந்தத்தில் இணைத்து வைத்த எஸ்டேட் தொழில்
இலங்கை ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டமானயும் இரா.நாச்சியார் ஸ்ரீ சீதையையும் எஸ்டேட் தொழிலால் இணைத்து வைத்த திருமண விழா.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (23.11.2025) திருமண பந்தத்தில் இணைந்தார்., ஜீவன் குமாரவேல் தொண்டமான் இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்பவருடன் திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார்.
அவருடைய திருமணம் நேற்று (23.11.2025) திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அவரது மனைவி மற்றும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஜீவன் தொண்டமானின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.இதேவேளை, இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இந்தியாவில் திருமண விழாவினைத் தொடர்ந்து இலங்கையில் கொழும்பு மற்றும் கொட்டகலயில் திருமண வரவேற்புகள் நடைபெறவுள்ளன.ஜீவன் தொண்டமான்
நாடாளுமன்ற உறுப்பினராக12. 08. 2020 ஆம் தேதி நுவரெலியா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வாகி பதவியில் உள்ளார்
ஜீவன் குமாரவேல் தொண்டமான் 09. 11.1994 (வயது 31) ல் பிறந்த இலங்கைக் குடியுரிமை கொண்டவர் இவரது தாத்தா காலஞ்சென்ற முன்னால் இலங்கை அமைச்சர் சௌமிய மூர்த்தித் தொண்டைமான் பட்டமங்கவம் அருகில் முத்துராமலிங்கபுரம் புதூரைச் சேர்த்த தஞ்சாவூர் கிளை கள்ளர் வழி மரபு வந்தவர்
இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி துவங்கும் முன் இவரது குடும்பம் எஸ்டேட் கங்காணி பணி செய்து பின் அந்த் தொழிலாளர் சார்பில் கட்சி துவங்கி நடத்தி இலங்கை அரசியலில் ஒரு இடம்பிடித்தவர் அவரது பேரனும்
முன்னாள் அமைச்சரும், தொழிற்சங்கத் தலைவருமான காலஞ்சென்ற ஆறுமுகத் தொண்டைமான், அவரது மகன் ஜீவன் குமாரவேல் தொண்டைமான் தற்போது இலங்கை தேயிலை தோட்டத் தொழிலாளர் பொதுஜன முன்னணி கட்சியைச் சார்ந்தவர் கொழும்பு, கேட்வே ஆரம்பப் பாடசாலை, சென்னை, ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் சின்மயா பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்று இங்கிலாந்து நோர்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 2017 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இலண்டனில் சிறிது காலம் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பின்னர், தந்தையின் அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் இணைந்து மூன்றாம் தலைமுறை வாரிசு அரசியல் காரணமாக இலங்கை திரும்பினார்.
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தந்தை ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவிற்குப் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டார். 2020 நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, மாவட்டத்திலேயே அதிகம் கூடிய விருப்பு வாக்குகள் (109,155) பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வான நிலையில் 12.08.2020 ல் கோத்தபைய ராஜபக்ஷ்வின் இரண்டாவது அமைச்சரவையில் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதேபோல் மெட்ராஸ் மாகாணம் இராமநாதபுரம் ஜில்லா தற்போது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூரில் 22, பிப்ரவரி மாதம் 1915-ஆம் ஆண்டு நாகப்ப பிள்ளை தங்கம்மாள் தம்பதியரின் நான்கு புதல்வர்களில் மூன்றாவது மகனாக ஆறுமுகம் பிள்ளை பிறந்தார். மூத்தவர் சிவசாமி பிள்ளை. இரண்டாமவர் பெரியசாமி பிள்ளை. இளையவர் ரெங்கசாமி பிள்ளை. இவர்களின் தந்தை நாகப்ப பிள்ளை இளம் வயதிலேயே காலமானார்.
ஏழ்மையும் வறுமையும் வாட்டிய நிலையில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை தன் சகோதரரின் துணையுடன் 1929-ல் தமது 14-வது வயதில் ரஜூலா கப்பலில் மலாயா வந்தார். அவரும் அவரின் சகோதரர்களும் தந்தை காட்டிய வழியில் பொட்டியடி கணக்கப்பிள்ளையாக வெ. வீர. நாகப்ப செட்டியாரின் எஸ்டேட் பணி செய்து பின்னர் தன் சகோதரருடன் சில மளிகைக் கடைகளில் பணியாற்றி மளிகை வியாபாரம் பினாங்கு சுங்கை ரம்பை (புக்கிட் மெர்டாஜாம்) என்னுமிடத்தில் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை. பின்னர் சகோதரர்கள் சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டனர்.
முன்பே கிட்டங்கி உட்பட பல இடங்களில் பணியாற்றிய அனுபவம் இருந்ததால் தொழிலில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. இவரோடு ரேணா என்று அழைக்கப்பட்ட இவரது இளைய சகோதரர் ரெங்கசாமி பிள்ளையும் மலேசியாவில் முன்னால் இராமநாதபுரம் நாடாளுமன்ற முதல் உறுப்பினர் வெ. வீர. நா.நாகப்ப செட்டியார் மறைந்த பின் திடீர் செல்வந்தராக அடையாளம் காணப்பட்டு பின் உயர்ந்தார்கள். குடிசை வீடு திருப்பத்தூரில் மாளிகையானது
என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை 1938-ஆம் ஆண்டில் அவரது 23-ஆவது வயதில் சீதையம்மாளைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு நாகராஜன், தங்கவேலு, தங்க நாச்சியார் என மூன்று பிள்ளைகள்.1950-ஆம் ஆண்டுகளில் மலேசியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் மற்றும் செட்டிஆர்கள் தாயகம் திரும்புவதற்கு முன்பு தங்கள் வசமிருந்த ரப்பர் தோட்டங்களை விற்றும் மற்றும் தங்கள் பணியாளர்களின் பொறுப்பில் விட்டும் வெளியேறினர் என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு நில தரகுத் தொழிலில் ஈடுபட்டு தோட்டங்களை வாங்கிப் பிரித்து சிறு முதலாளிகளிடம் விற்றார். அத்தொழிலின் வழி பெரும் செல்வந்தராகவும் வளர்ந்தார். மேலும் தோட்டங்களைத் தானே வாங்கி நிர்வகிக்கவும் தொடங்கினார். சுங்கைப்பட்டாணியில் 11.5 ஏக்கர் ரப்பர் தோட்ட நிலத்தை 55 லட்சம் ரிங்கிட் வெள்ளிக்கு வாங்கினார். யுனைடெட் தோட்டம் என்றும் யுபி தோட்டம் என்றும் பின்னர் யுபி ஆறுமுகம் பிள்ளை தோட்டம் என்றும் பெயர் மாற்றம் கண்டதில் 3000 இந்தியர்கள் வேலை செய்தனர்.
அப்போது உறுவான இலங்கை சௌமிய மூர்த்தித் தொண்டைமான் மற்றும் ஆறுமுகம் பிள்ளை நட்பு தற்போது பேரன் பேத்தி திருமண உறவில் முடிந்தது
தொடர்ந்து பினாங்கில் நிபோங் திபால், கிரியான், ஜாவி, ஜூரு, கெடாவில் பாடாங் சிராய் சுங்கை பத்து, சுங்கை தாவார், ஜித்ரா, அலோர் பொங்சு, புக்கிட் ஜூனுன், புக்கிட் தம்புன் போன்ற பல இடங்களில் தோட்டங்களை வாங்கி பதினோரு தோட்டங்களின் பெருநிலக்கிழாராகத் திகழ்ந்தார். என்.டி.எஸ் ஆறுமுகம் பிள்ளை வாங்கிய தோட்டங்களில் பைராம் தோட்டம் மட்டும் தென்னை மரங்கள் கொண்ட தோட்டம். மற்றவையாவும் ரப்பர் மரத் தோட்டங்களே. இவர் பிற்காலத்தில் துவங்கியது தான் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரி அதன் தாளாளராக தந்தை ஆறு நாகராஜனுக்கு பின் இராமேஸ்ரன் உள்ளார். ஆறு நாகராஜன் திருப்பத்தூர் சட்டமன்றத் தேர்தலில் 1977 ஆம் ஆணடில் போட்டியிட்டு தோல்வியடைந்தார், தற்போது மனமகள் தந்தை இராமேஸ்வரன் கல்லூரித் தாளாளராகவும், ரஜினிகாந்த் மன்றத்தின் மாவட்டச் செயலாளராகவம் உள்ளார்.
ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியின் தாளாளர் இராமேஸ்வரன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்கள் ஆ. ஜீவன் குமரவேல் தொண்டமான், LLB., M.P., பொது செயலாளர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இரா. சீதை ஸ்ரீ நாச்சியார், MBBCH-BAO, Hons இவர்களை நேரில் சந்தித்து பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச் ராஜா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அமைச்சர்கள், ஸ்ரீ தர்வாண்டையார் மற்றும் அதிமுக உள்ளிட்ட பலகட்சிகளின் பகுதித் தலைவர்கள் மற்றும் சமூக பல நாடுகளில் வாழும் பிரமுகர்கள் திருமண வாழ்த்துகளை தெரிவித்தனர்
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயலாளர் அமர் பிரசாத் ரெட்டி மற்றும் வினோஜ் செல்லம் சிவகங்கை மாவட்டத் தலைவர் பாண்டித்துரை உள்ழிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்ஜீவனின் திருமண நிகழ்வில் பங்கேற்க இந்தியாவில் பங்கேற்ற இலங்கை முன்னால் அதிபர் ரணில் -விக்ரமசிங்க நுகேகொடையில் நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள மாட்டார் எனவே இந்தியாவில் திருப்பத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.






























.jpg)




.jpg)











கருத்துகள்