முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

SIR பணிகளை அரசு ஊழியர்கள் புறக்கணித்தால் ஊதியமில்லை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!

SIR பணிகளை அரசு ஊழியர்கள் புறக்கணித்தால் ஊதியமில்லை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!       



அதீத பணி நெருக்கடி னக் காரணம் கூறி எஸ்.ஐ.ஆர். பணிகளை செவ்வாய்கிழமை முதல் புறக்கணிக்கப் போவதாக வருவாய்த்துறை ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதேபோன்று தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கி, பணிகளை முறைபடுத்திட வேண்டும்;  நிலஅளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும், வட்டம், குறுவட்டம் நகர சார் ஆய்வாளர், ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நவம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இன்று பணிக்கு வராத அரசு ஊழியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளில் ஆசிரியர்கள், வருவாய்த் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் வாங்கும் ஊதியத்துடன்  தேர்தல் ஆணையமும் ஊக்க ஊதியம் வழங்குகிறது 

இந்தத நிலையில், உரிய திட்டமிடல், பயிற்சிகள் (எதற்கு பயிற்சி) அளிக்காமல், கூடுதல் பணிகளைச் சுமத்தி இருப்பதாகவும் , நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசர கதியில் எஸ்.ஐ.ஆர்.பணிகளைச் செய்ய நிர்ப்பந்திப்பதாகவும் தங்களுக்கு கடுமையான பணிச்சுமை ஏற்படுவதாக வருவாய்த்துறை ஊழியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. இதனால், செவ்வாய்க்கிழமை முதல் எஸ்.ஐ.ஆர் தொடர்பான அனைத்துப் பணிகளையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்தில், அனைத்து கிராம உதவியாளர்கள், {தலையாரிகள் )கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவர், ஆய்வாளர், வட்டாட்சியர் என அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் சிப்பந்திகளும் முழுமையாக ஈடுபட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. எஸ்.ஐ.ஆர்.பணிக்கு உரிய கால அவகாசம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.


அதேபோல பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவிகிதத்துக்கும் மேல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ ஜியோ,  இன்று அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் அனைத்து துறையின் செயலாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாட்டில் நவம்பர் 18-ந் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தின் பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும், வேலைநிறுத்தம் அல்லது வேலைநிறுத்த அச்சுறுத்தல் அல்லது அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது அல்லது அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும் ஆர்ப்பாட்டம் அல்லது வேறு எந்த வகையான போராட்டமும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973 இன் விதிகள் 20, 22 மற்றும் 22-A ஐ மீறுவதாகும். எனவே ஊழியர்கள் அரசின் விதிகளை மீறக் கூடாது. பணியில் உள்ள ஊழியர்களுக்கு வேலை செய்யவில்லை என்றால் ஊதியம் இல்லை என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கக்கூடாது.

மேலும் தொகுப்பூதியம், பகுதி நேரத்தில் பணியாற்றும் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள். எனவே, எந்தவொரு அரசு ஊழியரும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளை மீறினால், ஊழியர்கள் அங்கீகரிக்கப்படாத முறையில் பணியில் இல்லாததற்காக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது மேலும் வேலைநிறுத்த நாளில் தற்காலிக விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர , வேறு எந்த விடுப்புக்கும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படாது. மேலும் பணிக்கு வந்தவர்களின் விவரத்தை காலை 10.15 மணிக்குள் மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...