தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை தேர்தலுக்கு பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 மத்திய அமைச்சர்களை பொறுப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சித் தலைமை நியமித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. மெகா கூட்டணியை அமைக்க அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் பழனிசாமி தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தும் நிலையில் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்.ஆனால் பாஜக, பாமக, தேமுதிக மற்றும் சில கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி எனக் கூறும் நிலை, அதிமுக, மேலும் கட்சிகளை சேர்த்து கூட்டணியை பலப்படுத்தும் முயற்சி பாஜகவின் மூலம் நிறைவேறவில்லை குறிப்பாக, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளையும், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் பணிகள் நடைபெறுகிறது.
சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வரும் பாஜக, தமிழக தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக தலைமை நியமித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சியின் தேசியத் தலைவர், தேர்தல் பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதன்படி, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ் கோயல் தமிழநாடு சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். சட்டம் மற்றும் நீதித்துறை (தனிப்பொறுப்பு) அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், சிவில் விமானப் போக்குவரத்துத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதர் மோஹோல் தேர்தல் இணைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பொறுப்பாளராக பாஜக தேசிய துணை தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைஜயந்த் பாண்டா நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்று மத்திய அமைச்சர்கள் கொண்ட குழுவை புதிய பொறுப்பாளர்களாக பாஜக அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக கே.பழனிசாமி பியூஷ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போதும் தமிழ்நாடு பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.தமிழ்நாடு அரசியல் சூழ்நிலைகளை நன்கு அறிந்தவர் என்பதாலும், அதிமுக வின் பழைய பிரமுகர்களிடம் நெருங்கிப் பழகக்கூடிய நண்பர் என்பதாலும், பியூஷ் கோயல் மீண்டும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அதிமுக - பாஜக கூட்டணியை வலுப்படுத்த முடிவு செய்துள்ள இந்தக் குழுவினர், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி. தினகரன் உள்ளிட்டோரையும் மற்றும் மருத்துவர் இராமதாஸ் - மருத்துவர் அன்புமணி இடையே நிலவி வரும் பிரச்சினையை சரிசெய்து, இருவரையும் ஒன்றாக இணைத்து ஒன்றுபட்ட பாமகவை கூட்டணியில் சேர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவம் கூறப்படுகிறது.
அதன் அடிப்படை யில் பியூஷ் கோயல் டி. டி.வி. தினகரனுடன் முதல சந்திப்பை டில்லியில் நிகழ்த்தியுள்ளார்
அதேபோல், கடந்த முறை அதிமுகவிடம் 20 தொகுதிகளை பெற்ற பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் 50 ம் கூட்டணி தினகரன் மற்றும் ஓ. பன்னீர் செல்வம் தரப்புக்கு கூடுதல் 20 தொகுதிகளையம் சேர்த்து 70 தொகுதிகளையும் கேட்க பாஜக முடிவு செய்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அதிமுகவுடன் இந்தக் குழுவினர் ஈடுபடவுள்ளனர். மத்திய அமைச்சர். பியூஷ் கோயல் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராகவும், மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் மத்திய இணை அமைச்சர் முரளிதர மோஹல் இணைப் பொறுப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாபெரும் வெற்றியைப் பதிவு செய்யும் என இவர்களின் பணி சிறக்க, பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.








கருத்துகள்