முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேஜக கூட்டணி ஆட்சியா? அதிமுக தனி ஆட்சியா? பழனிசாமியின் இறுதி முடிவுக்குக் காத்திருக்கும் பாஜக!

தேஜக கூட்டணி ஆட்சியா? அதிமுக தனி ஆட்சியா? பழனிசாமியின் இறுதி முடிவுக்குக் காத்திருக்கும் பாஜக! 



அ.தி.மு.க.,விலிருந்து முன்னால் செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, கட்சியிலும், அமமுகவை கூட்டணியிலும்  இணைப்பது தொடர்பாக கே.பழனிசாமியின் முடிவு தெளிவாகத் தெரியாததால், கடந்த வாரம் தமிழ்நாடு வரவிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாகவே தகவல் வருகிறது,









ஜெ.ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட நாள் முதல் அதிமுக சுயமாக சுய காலில் நடக்கவில்லை, ஜெ.ஜெயலலிதா வி. கே.சசிகலா நடராஜன் குற்றவாளிகள் என தீர்ப்பு வர ஜெ.ஜெயலலிதா மரணமடைந்து வி. கே.சசிகலா நடராஜன் சிறை செல்ல கடசியும் சிதறியது காரணம், பெரியகுளம் தேநீர் கடை ஓ.பன்னீர் செல்வம் போல சிலுவம்பாளையம் வெல்லக்கட்டி கோணிப்பை சணல் சாக்கு வியாபாரம் சிலுவம்பாளையம் கே.பழனிசாமியிடம் கட்சியை ஒப்படைத்துச் செனறவர்களிடம் நேர்மையாகத் திருப்பி அவர் வழங்கவில்லை என்பது முதல் நம்பிக்கை மோசடி










இவர் முதல்வராகி இருந்த காலத்தில் மக்களுக்கோ அல்லது கட்சிக்கோ, நாடடுக்கோ நல்லது எதுவும், செய்யவில்லை கடசியை தன்வசப் படுத்துவதே நோக்கம் கொண்ட நிலையில், தற்போது அரசியல் களம் மாறிய நிலையில் 2026 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு, இன்னும் நான்கு மாதங்களே உள்ளதனால், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை பலப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஈடுபட்டுள்ளார். பா.ம.க.,வில் மருத்துவர் ச.ராமதாஸ், மருத்துவர் இரா.அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள தந்தை மகன் மோதலைச் சரி செய்து, ஜி. கே.மணி இல்லாத ஒன்றிணைந்த பா.ம.க., மற்றும் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் உள்ள தே.மு.தி.க.,வையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில், பாரதிய ஜனதா கடசியின் மேலிடத் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். இரு கட்சிகளின் தலைவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முறை சந்தித்துப் பேசினால், அக்கட்சிகள் கூட்டணியில் சேர்ந்து விடும் என, அவருக்கு ஒரு யூகத் தகவலும் சொல்லப்பட்டதாம். அதிமுக இந்த நிலைக்கு வரக் காரணமே  மைலாப்பூர் ஆடிட்டர் ஒருவரின் திட்டம் தான், என்பது பலருக்கும் தெரியும், 











தேசிய ஜனநாயகக் கூட்டணியில், டி.டி.வி.தினகரனின் அமமுக எனும் அதிமுக 2, ஓ.பன்னீர்செல்வம் வைத்துள்ள ஒருங்கிணைப்பாளர் அணி எனும் அதிமுக 3 ஆகியோரைச் சேர்த்தால், அ.தி.மு.க., - பா.ஜ க., கூட்டணிக்கு, அதிக இடங்களில் வெற்றி வாய்ப்பு என ஒரு தகவலும் தெரிவிக்கப்பட்டது. (தாங்கள் உடைத்த கண்ணாடியை தாங்களே ஒட்டவைக்கும் முயற்சி) ஆனால் நடிகர் விஜய் கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்கும் நிலையில் அது சாத்தியமில்லை, அடுத்த தலைமுறை வாக்கு வங்கி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் எனபதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பு நன்றாகவே அறியும்.


இந்த நிலையில் அவர் டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, தமிழ்நாடு வந்து, சீட்டுக் கட்டுகளாக களைத்துப் போடடப்பட்டுள்ள ஜெ.ஜெயலலிதா இல்லாத அதிமுக, மற்றும் மனைவி அணி, துனைவி அணி என இரண்டு பிரிவாக உள்ள பா.ம.க., - மற்றும் விஜயகாந்த் இல்லாத தே.மு.தி.க., உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்துப் பேசவும், டி. டி.வி.தினகரன் அமமுக {எடப்பாடி முதல்வராக இல்லாத கூட்டணி) மற்றும் தாசில்தார் பணி செய்தவர் பின் அதே அலுவலகத்தில் பியூனாகவம் தயாரான எதற்கும் துணிந்த ஓ.பன்னீர்செல்வத்தையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து, அ.தி.மு.க.,வின் தற்காலிகப் பொதுச்செயலாளர் கே.பழனிசாமியுடனும் பொதுச்செயலாளர் சசிகலா நடராஜனுடனும் ஆலோசிக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர, மருத்துவர் ச.ராமதாஸ் ஜி. கே. மணியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் பிடி கொடுக்கவில்லை. இதன் பின்னணியில், தி.மு.க., இருப்பதாக, பா.ஜ.க, மேலிடத்துக்கு தகவல் சென்றுள்ளது.

வாய்ப்பிருந்தபோதும், மருத்துவர் ச.ராமதாசுக்கு நெருக்கமானவர்கள் வாயிலாக, மருத்துவர் ச.ராமதாசை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்துப் பேசினால், அவரும் தே.ஜ.,கட்சிகளின் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என, பா.ஜ.,க தரப்பில் கட்சியின் மேலிடத்துக்கு சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல, டி. டி. வி.தினகரன் கட்சி அமமுக , மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து, நேற்று சென்னையில் நடந்த கட்சிப் பொதுக்குழுவில் ஆலோசித்து விட்டு பதில் கூறுவதாக, சிலுவம்பாளையம் கே.பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும்.


எனவே, அ.தி.மு.க., பொதுக்குழு முடிந்த பின், தமிழ்நாடு வர அமித் ஷா முடிவு செய்துள்ளார். அதன் காரணமாகவே, டிசம்பர் மாதம் 7ஆம் தேதி, அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதென கட்சி வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் அ.தி.மு.க., தலைமையில் கூட்டணி என நேற்று வாணகரதில் நடந்த அதிமுக

பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில்

தமிழ்நாட்டில், அ.தி.மு.க. தலைமையில் தான் கூட்டணி என பொதுக்குழுவில் திட்டவட்டமாகவும் மற்றும்

செயற்குழு பொதுக்குழுக் கூட்டம்  ன முடிவு செய்த நிலை 

தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க இணைந்துள்ளதற்கு பொதுக்குழு ஒருமனதாக ஒப்புதலும் வழங்கியதாக 

அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை கே. பழனியப்பன் தான் முடிவு செய்வார் எனவும், அது அமித்ஷா இல்லை என மறைமுகமாக அறிவித்து பின்.



நீதித்துறைக்கு தி.மு.க ஆட்சியாளர்கள் சவால் விடுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தும், 

நீதித்துறை தனித்தன்மையோடு சுயமாகச் செயல்பட, ஆட்சியாளர்களின் தலையீடு இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தலும்,

கோயம்பத்தூர், மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் எனவும்,



சேலம், கோயம்பத்தூர், மதுரைக்கு பஸ் போர்ட் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும்,

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; அந்நிய முதலீட்டிலும் தமிழ்நாடு ஆமை வேகம் என பல தீர்மானங்களை நிறைவேற்றவே பாஜகவின் தரப்பு இனி இங்கு வந்து அதை ஆதரிப்பாரா? இல்லை தேஜக கூடடணி ஆடசி தான் என்பாரா எனவும், அப்படியானால் முதல்வர் வேட்பாளர் யார் எனற வினாவும்,அரசியல் கட்சிகள் மத்தியில் எழுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...