சிவில் வழக்கில் லஞ்சம் வாங்கிய ஆதனக்கோட்டை காவல் சார்பு ஆய்வாளர் கைது! 
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணி செய்யும் சங்கர் தனிநபர் சிவில் விவகார நிலப்பிரச்சனையில் புகார் மீது சி எஸ் ஆர் தருவதற்கு 10,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது ஊழல் தடுப்புகா கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பணம் பெற்ற கையுடன் அவரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அருகிலுள்ள பணிரெண்டாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா மகன் வீரமணி(வயது 47). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் சிவில் விவகாரம் நிலப் பிரச்சனை இருந்துள்ளது. அந்தப் பிரச்சனை சம்பந்தமாக வீரமணி ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகார் குறித்து விசாரித்த காவல்துறையினர் சிவில் பிரச்சனை என்பதால் நீதிமன்றத்தில் அப் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். ஆனால், ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணியிலுள்ள கீரனூர் கிருஷ்ணபாரம்பட்டி ராசு மகன் சங்கர் (வயது 57) வீரமணியைத் தொடர்பு கொண்டு உன் புகார் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கிறேன் ரூபாய்.10 ஆயிரம் பணம் கொடு என்று கேட்டு தொந்தரவு செய்துள்ளார். சார்பு ஆய்வாளர் சங்கரிடம் லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமணி புதுக்கோட்டை மாவடட ஊழல் தடுப்புக் கண்கணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாரளித்தார்.
அதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி வீரமணி ரூபாய்.10 ஆயிரம் பணம் வேதியியல் பரிசோதனை முடித்து அரசு சாடசி உடன் கொண்டு போய் ஆதனக்கோட்டை சார்பு ஆய்வாளர் சங்கரிடம் கொடுத்து அவர் பெற்ற போது அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கணகாணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் இராதாகிருஷ்ணன், ஆய்வாளர் ஜவஹர் உள்ளிட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பு ஆய்வாளர் சங்கரை ணம் பெற்ற கையுடன் பிடித்து லஞ்சம் வாங்கிய பணத்தைப் பறிமுதல் செய்து கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுததிய பின் சிறையில் சேர்த்தனர், மேலும், இந்த சர்பு ஆய்வாளர் சங்கர் வேலை செய்த ஆவுடையார்கோயில், அன்னவாசல் எனப் பல காவல் நிலையங்களிலும் புகார் கொடுக்க வருவோரிடம் லஞ்சம் வாங்கிக் குவிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் பல முறை காவல் உயர் அலுவலர்கள் எச்சரித்து இடமாறுதலும் செய்துள்ளனர்.
கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு அன்னவாசலில் இது போல பிரச்சனைகளில் சிக்கியதால் ஆதனக்கோட்டைக்கு இவர் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறும் காவலர்கள் தற்போது வசமாக சிக்கிச் கொண்டார். இனி பணியிடை நீக்கம் செய்யபடுவார். தொடர்ந்து சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெறுவதற்குள் குற்றமற்றவராக நீதிமன்றத்தில் நிருபித்தால் தான் பணப்பலன்களுடன் பணி ஓய்வுபெற முடியும், இந்த வழக்கு முடிய பல ஆண்டுகள் ஓடிவிடும், நேர்மை தவறியதால் இந்த நிலை.
கருத்துகள்