முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவண்ணாமலை மஹாதீபமும் நகரத்தார் உள்ளிட்ட பலரது ஆன்மீக நற்பணிகளும்

திருவண்ணாமலை மஹாதீபம்  கார்த்திகை தீபத் திருவிழாவில் 10-ஆம் நாள் திருவிழா. இந்த மஹாதீபம்


இலக்கியங்களில் "சர்வாலய தீபம்"மற்றும் "கார்த்திகை விளக்கீடு" எனப்படுகிறது.

காலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பதுவே பரணி தீபமாகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இந்தத் தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"எனப்படும். 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும்.


பஞ்ச பூத ஸ்தலத்தில் அக்கினி ஸ்தலமாகும்.

தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும்



மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மஹாதீபம் எனலாம். இந்தத் தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் காணும் மலை 2668 அடி உயரம் கொண்டது. மலை மீது தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட 



கொப்பரையை 1668- ஆம் ஆண்டு  பிரதானிவேங்கடபதி ஐயர் செய்து கொடுத்தார். பின்பு 1991- ஆம் ஆண்டில் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போதுள்ளது. இது பக்தர்களின் உபயம். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் ஆலவாய் அரசி உமையவள் அன்னை ஸ்ரீ மீனாட்சியம்மை  உதித்த குலமான மீனவராவர்.





இத் தீபம் ஏற்ற சுமார் 3௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது. இந்த ஆணடு மஹாதீபம் அரநிலையத்துறை சில அடாவடிச் செயல்கள் காடடினாலும் தீபம் சிறப்பாக நடைபெற்றது.           




இனி வரலாற்றுப் பார்வை.:-        நினைத்தாலே மோடசம் தரும்  ஈசன் எம்பிரான் ஸ்ரீ அண்ணாமலையாரிடம் "பொன்னும் மணியுமில்ல பூவும் பொருளும் இல்ல
மல்லிப்பூவா எந்தன் மனம் இருக்கு - உன்
மலர்ப்பாதம் படைத்தால் போதும் எனக்கு
வந்தேன் வந்தேன் இறைவா என்னைத்
தந்தேன் தந்தேன் தலைவா"

"உள்ளம் எல்லாம் அன்பிருக்கு - உன்
சொல்படி நடக்கிற தெம்பிருக்கு
இதயத்தில் நிறைவிருக்கு ஆ
இறைவா இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு"

"இருப்பதெல்லாம் கொடுத்தேன் - என்னை
இறையருள் நிறைத்திட வரம் கேட்டேன்
வாழ்ந்திடும் நாளெல்லாம் ஆ
மனிதம் மலர்ந்திட உழைத்திட திறம் கேட்டேன்"   எனும் உந்தன் திருப்பணி செய்த மனனர்கள் பின்வந்த நகரத்தார் பெருமக்கள் உதவிய வேட்டவலம் ஜமீன் இந்த வரலாறு பெரிது 








ஆனால் இந்து சமய அறநிலையத்துறை ஒரு விபூதி பொட்டலம் கூட சொந்தமாக வழங்கியதா என்பதை இந்துக்கள் வினவினாலே நலம்,  அது நடக்குமா என்பது தெரியாது காரணம் இனி வரும் தலைமுறை வரலாறு அறியாது அறியவும் முயற்சிக்காது. வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகப்போகும் நிலை இருந்தால் முத்திரை பதிக்க முயலாது போனாலும் பரவாயில்ல கடந்த தலைமுறை செய்த செயலை இந்தத் தலைமுறை பாதுகாக்க வேண்டாமா? இதுவே எழு வினா.

ஸ்ரீ அண்ணாமலையாருக்கு நகரத்தார் நல்கிய நகைகள் அதிகமுள்ளது அலுவல் சார்ந்த 100 ஆண்டுகளுக்கு முன் அலுவலர்
த. கோ.பரமசிவம் கருத்து
உட் பொக்கிஷம், வெளிப்பொக்கிஷம் என
இரு அறைகள் பொக்கிஷ மேடையில் உள்ளன. அன்றாடம் தேவைப்படும் ஆபரணங்கள் வெளிப் பொக்கிஷத்திலும், திருவிழாக் காலங்களில் மட்டும் சாத்தப்பெறும் விசேட ஆபரணங் கள் உட் பொக்கிஷத்திலும் வைத்துப் பாது காக்கப்படுகின்றன.



இவற்றை நிர்வகிக்கத் தனி ஆள் உண்டு. உட் பொக்கிஷத்தின் கதவு 7 பூட்டுகளால் பூட்டப் பெற்று 7 சாவி களில் சிவாச்சாரியர்களிடம் நான்கு. அறங்காவலர் இருவரிடமும் இரண்டும், ஏழாவது சாவி நிர்வாக அதிகாரியிடமும் ஒப்படைக் பெறுகின்றன. இவர்கள் அனைவரும் தான் விசேட நாட்களில் உள்பொக்கிஷத்தைத் திறந்து ஆபரணங்களை அலங்காரம் செய்பவர்களிடம் ஒப்படைக்கின்றனர். மீண்டும் வைக்கும் போதும் இப்படியே  ஆபரணங்களில் வைக்கின்றனர். சரிபார்த்து குவிந்துள்ள பொன்னும்
மணியும் முத்தும் பவழமும் பச்சையும் கெம்யும், நீலமும், வைரமும் அளவிடற்கரிய மதிப்புடன் திகழ்கின்றன.
ஆனால் அதை தற்போது அறநிலையத்துறை பாதுகாக்கிறதா என்பதை வழங்கிய பல குடும்பம் சார்ந்த அடுத்த மூன்றாம் நானகாம் தலைமுறை அறியுமா என்பது தெரியவில்லை.












அனைத்துமே சென்ற நூற்றாண்டு இவை 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டிலும், நடப்பு 21 ஆம் நூற்றாண்டிலும் நாட்டுக்கோட்டை நகரத்தார் அற்பனித்தல் அன்று காணப்பெறும் நகைகள் இன்று இல்லை என நகரத்தார்கள் கூறுவது குறித்து ஆய்வு செய்ய நீதி நிலைநாடட நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மூலவர்க்கும், அம்மனுக்கும் தனித்தங்கக் கவசங்களும் வெள்ளிக் கவசங்களும் உள்ளன. பரிவார தெய்வங்களான கணபதி, தண்ட பாணி. வேணு கோபாலர், ருக்மணி, சத்திய பாமா, தட்சிணுமூர்த்தி, துர்க்கை போன்ற எல்லாத் தெய்வங்கட்டும் வெள்ளிக் கவசங் கள் உள்ளன. உத்சவ வினாயகருக்குத் தங்கக் சுவசம் உள்ளது.
மரத்தாலும், வாகனங்களில் யாலும் ஆன வாகனங்கள் பல உள்ளன. ரிஷப வாகனம் மரத்தில் இரண்டும், வெள்ளி வெள்ளி யில் சிறியது, பெரியது என மூன்று வாகனங் களும் உள்ளன. மாத உத்சவங்களிலும், பிற பிரம்ம உற்சவங்களிலும் மரவாகனங்களும், வெள்ளி வாகனங்களும் பயன்படுத்தப்பெறும்.

பெரிய வெள்ளி வாகனங்கள் கார்த்தி கைப் பிரம்ம உத்சவத்தின் போதே பயன் படுத்தப் பெறுகின்றன. இன்னும் வெள்ளி கற்பக விருட்சம், வெள்ளி யானை, வெள்ளி மூஷிகம், வெள்ளி மயில், வெள்ளிப் பிரபை கள், வெள்ளிக் காமதேனு ஆகிய வாகனங்களும் உள்ளன. இவையேயன்றி வெள்ளியால் ஆன விமானங்களும் பல உள்ளன. அவற்றிலும் சிறியன பெரியன உண்டு.
வெள்ளி இந்திர விமானங்கள் சில பெரியனவும், சிறியனவுமாக உள்ளன. வெள்ளித்தேரும் உள்ளது. இது கார்த்திகைப் பெரு விழாவில் மட்டுமே பயன்படுத்தப்பெறுகிறது.
வெள்ளி மற்றும் மரத்தால் பல வாகனங்களும் உள்ளன. வாகனங்களுக்கு இணையாகவும் இணையில்லாத சில புதிய வாகனங்களும் உள்ளது தனி அம்மனுக்கும், சோமாஸ்கந்தகுளும் மெனத் தனித்தனி வாகனங்கள்
இரண்டு உள்ளன. சப்பரங்கள் சில உள்ளன. பெரிய தேர் இரண்டு.
தங்க வைர நகைகளில் மிகச் சிறப்பாக உள்ள சிலவற்றை மட்டும் காண்போம். 96 தலைகள் கொண்ட பிரம்ம ரெக்கபால மா ஒன்று தங்கத்தாலேயே செய்யப் பெற்றுள்ளது. இந்த அணிகலன் வேறு எங்கும் இல்லை இந்த ஸ்தலத்தைத் தவிர  நடராசருக்கு உரிய
சிறப்பான உத்சவ காலங்களில் இது அணிவிக்கப் பெறுகிறது.

பவுன்மாலைகள்:
காசு மாலைகள் என்ற பெயரில் பல உள்ளன. முழுப் பவுன்களா லேயே 130 பவுன்களைக் கொண்ட மாலை ஒன்றுள்ளது; விக்டோரியா ராணியின் ஆட்சியில் 1871, 1872 ஆகிய வருடங்களில் அச்சிடப் பட்டுள்ள காசுகளால் இணைத்துச் செய்யப் பட்டது.
இவ்வாறே அரைப் பவுன்களைக் கொண்ட சரடுகள் மூன்றும், காற் பவுன்களைக்கொண்ட சரடுகள் மூன்றும் தூய தங்கத்தால் ஆக்கப் பெற்றுள்ளன.
புரிநூல்களும் தங்கத்தால் உள்ளன.
சேரடுகள் கொண்ட புரிநூல் பவித்திர முடியும் நேர்த்தியாக உள்ளது. அம்மனுக்கும், மூல வருக்கும், உத்சவமூர்த்திக்கும் என தங்கத்தால் பல தாலிகள் உள்ளன. அதில் வைரத்தாலி ஒன்றும் நேர்த்தியாக உள்ளது. கர்ணபத்ரம் என்ற காதணிகள் ஒவ்வொரு மூர்த்திக்கும் என, சுற்கள் இழைக்கப் பெற்ற தங்கத்தில் வைரம் பதித்து பல்வேறு அளவுகளில் உள்ளன.
மூலவருக்குச் சாத்தப்பெறும் வெள்ளி நாகா பரணமே யல்லாமல் விசேட காலங்களில் சாத் தப் பெறும் தங்க நாகாபாணமும் ஒன்றுள்ளது. ஐத்து தலை அரவுடன் மூன்று சுற்றுக்கள் கொண்டு இது 12 கிலோ எடை கொண்டது. இரட்டைத் தங்கத் தகடுகளால் இணைக்கப் இதில் உள்ள தங்கம் மட்டும் பெற்றது. 1500 பவுன்கள் ஆகும். அன்றைய (பவுன் 13 ரூபாய்) விலைப்படியே இதன் மதிப்பு அப்போது 30,000 ரூபாய்.
வைர நெற்றிப் பட்டங்கள் சில உள்ளன. சிலவற்றில் கற்கள் இழைக்கப் பெற்றுள்ளன. சிலவற்றில் விபூதிப் பட்டையும், திலகமும் இணைக்கப்பட்டுள்ளது.
சோமாஸ்கந்தருக்கு
வைர சாத்தப் பெறும் ஹஸ்தமும் (அபய அஸ்தம்) அதன் கீழ் டாலரும் உள்ளது. மூலவருக்குச் சாத்தப் பெறும் விபூதிப் பட்டத்தின் நடுவில் உள்ள ஒரு வைரக்கல் அன்றைய மதிப்பு ஐம்பதாயிரம் ஆகும்.
அம்மனுக்குச் சாத்தப்பெறும் தங்கத்தாலான வேணுகோபால் பாலர் பசுக்கள், அரவுக்கள் போன்ற சிற்ப வேலைப்பாடுடன் கூடியது; முத்தும், மணியும் தாலான ஜடாநாகம் ஒன்று இழைக்கப் பெற்றுள்ளது.
செம்பில் பதக்கமாலைகள் பல உள்ளன. மகரி மாலைகள், மகரி செண்டிமாலை. மாங்காய்மாலை எனப் பல மாலைகளும், சமீப உள்ளன. காலத்திய டாலர் செயின் வடங்களும் சில
இவையில்லாமல் வைாமுடிகள் சில உள் ளன. இவற்றில் சோமாஸ்கந்தர்,சந்திர சேகரர், அம்மன் வைரமுடிகள் நேர்த்தி யாகச் செய்யப் பெற்றுள்ளன. தூய தங்கத் நில் வைரம், பச்சை, கெம்பு, நீலம் போன்ற மணிகளையும், முத்தையும் இழைத்து சந்திரன் கங்கை, அரவு ஆகியவற்றை ஐடா மகுடத்தில் வைத்துள்ள நேர்த்தியும் பார்த்துப் பார்த்து மகிழத்தக்கன. அண்ணாமலையார். உண்ணாமுலையம்மன் கிரீடங்களும் தங்கத்தால் ஆக்கப்பெற்று வைரம் இழைக்கப் பெற்றுள்ளன. சில நகைகளில் உபயதாரர் (நன்கொடையாளர்) பெயரும் ஆண்டும் செதுக்கப்பெற்ற பல நகைகளில் அப்படிப்பட்ட குறிப்புகள் இல்லை.




முத்துவடங்கள் சிலவும், இவையில்லாமல் வழக்கமாக உள்ள தங்கமுடிகள் எல்லா மூர்த்திகளுக்கும் உள்ளன. உருத்திராக்ஷ மாலைகள், மணி மாலைகள் என ஆரங்களும் உள்ளன. சில்லறை அணிகளான குழைகள், புல்லாக்கு, மூக்குத்தி, வாகுவளையம், பாதங் கள் போன்ற அணிகளும் உள்ளன. பிரபைகள் சிலவும் தங்கத்தகடு போர்த்தப் பெற்றுள்ளன.
பல இவையல்லாமல் பூசைப் பொருள்களில்  வெள்ளியால் செய்யப் பட்டுள்ளன. வெள்ளிக் குடங்கள், வெள்ளி அடுக்கு, அலங்கார தீபங்கள், தட்டு தீபங்கள். நந்தி, மயில், நாகம், யானை. நரதீபங்கள், உபசாரப் பொருள்களான விசிறி, குடை, கொடி, சாமரம் ஆகியனவும் கும்ப விளக்கும். இன்னும் பல்வகைப் பொருள்களும் வெள்ளி நிலைக்குந்து விளக்குகள், பல நிலை அடுக்கு யால் செய்யப்பட்டுள்ளன. மடப் பள்ளியிலும், பூசை அறைகளிலும் உள்ள செப்பு, பித்தள விளக்குகள், சாமான்கள். குத்துவிளக்குகள், விளக்குகள் என பல பொருள்கள் உள்ளன.
இவை யாவும் பகோடா' தோலா முறை யில் எடையிட்டு, மணிமுத்துகளை எண்ணிப் பதிவு செய்து பாதுகாத்து வருகின்றனர். இந்த ஆபரணங்களில் மதிப்பு ஏறத்தாழ 75 ஆண்டு களுக்கு முன் ரூபாய். 11.78,709-70 என்று குறித்துள்ளனர். இன்றைய விலையில் மதிப்பிட்டாக முப்பது கோடியையும் தாண்டிவிடும்.ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலிலிருந்து இந்தக் அடிக் கோவிலுக்குச் சுரங்கப்பாதை இருப்பதாகச் சொல்லுவார்கள்.
பழமையான இக்கோயிலை இந்த இருபதாம் நூற்றாண்டில் முழுதம் பிரித்துப் புணரமைத்த சிறப்பு பெருமை நகரத்தார்களைச் சேரும் புதிய பாணியில் கட்டி உள்ளனர். கோயிலின் இன்றைய தோற்றமும் இப்போதுள்ள இறை உருவங்களின் பட்டியலும் அமைப்புப் படமும் தரப் பெற்றுள.
நகரத்தார் திருப்பணிகள் விவரம்:
1. கோட்டையூர் திரு. அ. க. அ. மெ. வகை யார்களும் திரு.ராம. பெ. அவர்களும் சேர்ந்து பழைய கோயிலை முழுதும் பிரித் துப் புதியதாக, சுவாமி அம்மன்கோவில் உள்பட கருப்பக்கிரகம் அந்திராலம் மகா மண்டபம் முதலியவையும் அமைத்து, பரிவாரங்களுக்கும் கட்டிடம் கட்டி, சுவாமி அம்பாளையும் வலம் செய்யும்படி யாக உள் பிரகாரத்தில் மண்டபம் முழு தும் சுட்டி, கோபுரமும் கட்டி,திரு மதிலும் உண்டாக்கி அக்கிரகாரம் விடுதி கட்டி, திருப்பணி செய்த வகையில்

மேற்படி கும்பாபிஷேகம் பிங்கள வருஷம் தை மாதம்  ஞாயிற்றுக்கிழமை 27-1-1918 ஆம் தேதியில் நடைபெற்றது.
2. மீண்டும் திரு. அ. க. அ. சித.அழ சிதம்பரம் செட்டியார் அவர்கள் பெரும் உபயம் 
சஞ்சீவிராயர் கோயில்

ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலுக்குக் கிழக்கே இரண்டு பர்லாங்கு தொலைவில் (ஐயன் குளம் இப்போது வழங்கப்பெறும்) இந்திர தீர்த்தம் உள்ளது. இதன் மேற்குக் சுரையில் அண்ணாமலையார் கோவிலின் உட் கோயிலான மிகப் பழமையான சஞ்சீவி ராயர் கோயில் இருக்கிறது.
பணம் செலவிட்டுக் கோவிலைப் பழுது யார்ந்து,வண்ணம் வைத்து, பிலவங்க வைகாசி மாதம்  19-5-1967 வெள்ளிக் கிழமை கும்பாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.
3. திரு. அ. க. அ. மெ.வகையார் அணி அண்ணாமலை சுவாமி மற்றும் அம்பாளுக்கு நாகாபரணமும் வெள்ளிக் கலசங்களும் பரிவாரங்களுக்கு வெள்ளிக் கவசங் களும் செய்து வைத்திருக்கின்றனர்.
4. திரு. அ. க. அ. மெ. வகையார் டி கோயிலுக்கு இரண்டு காலப் பூஜைக்குக் கட்டளை வைத்து அபிஷேகம் நைவேத் தியம் வகைகளும், சிப்பந்திகளும், பிரசா தப் பட்டுவாடாக்களும் செய்து வரு வதுடன், நந்தனவனமும் வைத்துப் மலர் கொடுத்து வர பூஜைக்கு ஏற்பாடு செய்து வேலைக்காரர்களையும் நியமித்துள்ளனர்.

5. ஷெ அறங்கள் என்றென்றும் நடந்து வரும் பொருட்டு ரூ.50,000-க்கு அணி அண்ணாமலையில் நிலம் வாங்கிவைத்தும் அபிஷேகத்திற்குக் காலம் 1-க்கு 2 படி பால் கொடுத்தும் நடத்தி வருகிறார்கள்.
6. அணி அண்ணாமலையில் திருப்பணிக்கு விடுதி கட்டியும் 10 வீடு அக்கிரகாரம் கட்டியும் வேலைக்காரர்கள், குடியிருக்க வீடுகள் கட்டியும் உள்ளனர்.

இரண்டு காலப் பூசை நடைபெறுகிறது. இங்கு பூசை செய்யும் உரிமை ஸ்மார்த்த பிராமணர்களுக்கு உரியது.

சஞ்சீவராயருக்கு மூலவர், உற்சவர் ஆகிய இரு திருமேனிகள் இங்கு உள்ளன.ஸ்ரீ அண்ணாமலையார் கோவில் சொத்துக்களும்,
கட்டளைகளும் அதிகம்
முன்னால்( 100 ஆண்டு )
தி. ந. பரமசிவம், பி.ஏ.- நிர்வாக அலுவலராக இருந்த போது 
சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை வாரிய சட்டம் மூலம் படிவம் 27 மற்றும் 28,29 ஆகியவை குறித்து அறியலாம்,  அதில் நகைகள், நிலங்களில் 
நன்செய், புஞ்சை என பல ஆயிரம் ஏக்கர் அடங்கும் 
தோடு 
கடைகள் விவரம் அறியலாம்.
அதில் 
தேர்முட்டித் தெரு,
. அண்ணாமலையார் நிலையம்
வினாயகர் நிலையம்
16 கால்மண்டபம் திருவண்ணாமலை
தரகுமண்டி வர்த்தக சங்கம்
போளூர்
உண்ணமுலையம்மன் நிலையம்
செங்கம்
பெரியகடைத்தெரு
திருக்கோயிலூர்
சேடத் தெரு வீடு
விழுப்புரம்
சந்நிதி தலம்: காலி மனைகள்
செஞ்சி
சந்நிதி தலம்
தேரடித் தெரு அடங்கும்
திருவண்ணாமலையில் 100 ஆண்டு முன் இருந்த
தங்குவோர் விடுதிகளின் விவரம்
1. உண்ணாமுலையம்மன் வழிபடுவோர் விடுதி
2. சி. வி. சிடி.வி. டிரஸ்ட்
3. பி.வி.ஆர்எம். குழந்தையன் செட்டியார்
4. எம்.சிடி. எம். டிரஸ்ட், சென்னை
5. திருக்கோவில் விடுதி
6. அப்பர் இல்லம்
7. திருக்கோயில் பழைய விடுதி

சென்னையிலுள்ள சொத்துக்கள்
விவரம்
1. சென்னை, அடையாறு- ஊரூர் கிராமம் 2. சென்னை, மீர்சாகிப் பேட்டை
3. சென்னை, தண்டையார்ப் பேட்டை தனபால்நகர்
1. தீபக் கட்டளை
2. பரணி தீப கட்டளை
கட்டளைகள் சார்ந்த

30 ஏ. 18 செ. (வீட்டு மனைகள்)
7 ஏ. (வீட்டு மனைகள்) 23 கிரவுண்டுகள் (வீட்டு மனைகள்)
எம். இராஜகோபால ஐயர் எம். அனந்தராம ஐயர்
ஸ்பெஷல் டிரஸ்டி, பரணி தீப கட்டளை
3. அர்த்தஜாம சுட்டளை 4.
கே.வி.எஸ். ஏஎல். சிடி. அழகப்ப செட்டியார்.
5. உச்சிக்காலக் கட்டளை
காலசந்திக் கட்டளை
ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
( சண்முகவேல்
லேட்) ராஜபாண்டிய நாடார், ஆர்.ஏ.ஆர்.
6. தூங்காவிளக்கு நெய்தீபக் கட்டளை
பாலசுப்ரமண்யர் ரெலிஜியஸ் டிரஸ்ட், சென்னை
7 தூங்காவிளக்கு நித்திய
குமார் பிரதர்ஸ், சென்னை
விளக்குக் கட்டளை 8. தேசாந்திரி கட்டளை
தினரக்ஷக நிதி,காஞ்சிபுரம்
9. தீபக்கட்டளை
அண்ணாமலைக் கவுண்டர்
10. தாண்டா விளக்குக் கட்டகள
11. கோ சம்ரக்ஷணை & கட்டளை
12. எலக்டிரிக் விளக்குகள் எரிவதற்கு 
டி.பி. சூரியநாராயண செட்டியார் அத தேவார பாடசாலை, திருவண்ணுமலை (ஆண்டுதோறும்
கான கட்டணத்திற்காகக் உபயம)
13 தேசாந்திரிபிரசாதக் கட்டளை 14. காலசந்திக் கட்டளை
பாலசுப்ரமணியர் ரெலிஜியஸ் சாகிட்டீஸ், சென்னை இந்திரபோக முதலியார், சென்னை ரூபாய் முன்னூறு) + (100 வருடம் முன் )
எஸ்பி. சுப்ரமணிய செட்டியார், தென்னூர், திருச்சி ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தி தம்பிரான சுவாமிகள்சில முக்கிய ஆபரணங்கள் செய்த
நன்கொடையாளும் 
ஆபரணங்களும்

அரிமளம், செ. சித.சிதம்பரம்  செட்டியார்.

கானாடுகாத்தான்,( திருப்பராய்த்துறை தேவஸ்தானம் அறங்காவலர்) வெ.வீர.நா.வெ.அரு. நாகப்ப செட் டியார், முதல் நடாளுமன்ற உறுப்பினர் வகையினர்.

கோட்டையூர், அ.க.அ.மெ.வெ. குடும்பத்தினர்.

கொத்தமங்கலம், ராம.அரு.வெ. பெத்தாச்சி செட்டியார்

கோட்டையூர், பெ.சு.அ.சித. வீரப்ப செட்டியார்.

கானாடுகாத்தான், சா.அ. அண்ணாமலை செட்டியார்.

கோட்டையூர், அ.க.ராம, மெ. சித. சிதம்பரம் செட்டியார்.

கொத்தமங்கலம், சி.அ.சி.ராம.ராமன் செட்டியார்.

தேவகோட்டை, எ.பெரி.கரு.சித.சிதம்பரம் செட்டியார்

இரத்தினக்கிரீடம்.

தனி அம்மன் இரத்தினக் கிரீடம்.

தங்க நாகாபரணம்.

வைர நெற்றிப்பட்டம் இரண்டு.

சோமாஸ்கந்த மூர்த்திக்கு வைர அபயஹஸ்தம்,

மூலஸ்தான அம்மனுக்குத் தங்கக் கவசம்.

அண்ணாமலையார் மூலவருக்கு வைர நெற்றிப்பட்டம்.

உத்சவ விநாயகர்க்குத் தங்கக் கவசம்.

சும்பத்திளையனார்க்குத் தங்கக் கவசம்.

சில முக்கிய வாகனங்கள் செய்த 
நன்கொடையாளர்கள் மற்றும் வாகனங்கள்
வெள்ளி ரதமும் கட்டிடமும்,
சுவாமி தேர்.
பெரிய வெள்ளி ரிஷபமும், சுட்டிடமும்.
வெள்ளி பெரிய இந்திரவிமானம்.
வெள்ளி சின்ன இந்திரவிமானம்
வெள்ளி கற்பக விருக்ஷம் வெள்ளி காமதேனு, கட்டிடம்.
அம்மன் தேர்.
கடியாபட்டி 
இராமச்சந்திரபுரம், தீ.சொ..தீ.நா.. தீ.அ. குடும்பத்தினர்
கோட்டையூர், வீரப்ப செட்டியார் பெ.க.அ.சித. வீரப்ப செட்டியார் மற்றும் நகரத்தார்களும்.
கோட்டையூர், அ.சு.அ. மெ. குடும்பத்தினர்.
கோட்டையூர், பெ.க.அ.சித. வீரப்ப செட்டியார்
காரைக்குடி, முத்து அகு. குடும்பத்தினர்.
கானாடுகாத்தான் சா.ராம.மு.ராம. ராமசாமி செட்டியார்      இது கொஞ்சம் இன்னும் வரும் ஆதாரங்கள் அணிவகுப்பு நாம் தரும் சிறப்புத் தொகுப்பு                       ... "ஆறுமுகமான பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே",

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...