முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது அவமதிப்பு வழக்கில் நீதிபதி கருத்து

நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி வகுத்து விடும்,''


என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை மதுரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து.



மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் ஏழுமலை கிராமம் ராமர.விக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு  மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,  திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் டிசம்பர்  மாதம்., 3 ஆம் தேதியில் கார்த்திகைதா தீபத்தை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய செய்வது காவல்துறையினர் கடமை என உத்தரவிட்ட நிலையில் அதை நிறைவேற்றாததால் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல்துறை ஆணையர்  லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்  யக்ஞ நாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ராம ரவிக்குமார் மனு தாக்கல் செய்தார்.




அதை  விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிற மனுதாரர்கள் உட்பட 10 பேரை மனுதார் அழைத்துச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றவும், அதற்கு சிஐஎஸ்எப் வீரர்களை அனுப்பவும் உத்தரவிட்டதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.



இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் ஆஜராக வேண்டுமென உத்தரவு பிறப்பித்திருந்தார்.


அதன்படி இன்று தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோர் காணொலிக் காட்சியில் ஆஜராகினர். மதுரை  காவல்துறை துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் ஆஜராகினர்.

மாவட்ட ஆட்சியர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவிந்திரன், கூடுதல் அரசு  குற்றவியல் வழக்கறிஞர் மாதவன் ஆகியோரும், காவல்துறை ஆணையர் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீர கதிரவன், கூடுதல் அரசு பொது பிளீடர் ரவி ஆகியோரும், கோயில் செயல் அலுவலர் சார்பில் வழக்கறிஞர் ஜோதியும் ஆஜராகினர்.



அப்போது நீதிபதி கூறியதாவது:

"நான் சோர்வடைந்து விட்டேன். நீதிமன்ற அவமதிப்புக்காக எத்தனை வழக்குகளில் அதிகாரிகளைக் கடிந்து கொள்வது? இன்று கூட, 'நீதிமன்றம் மீது மிகுந்த மதிப்பு வைத்திருப்பதாகவும், அதன் உத்தரவை அமல் செய்யும் போது சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாகவும்' தலைமை செயலாளர் அறிக்கை வாசிக்கிறார். இது மன்னிக்க முடியாதது. ஒரு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, அதைக்காட்டிலும் உயர்ந்த நீதி அமைப்பு தடை விதித்தாலோ அல்லது ரத்து செய்தாலோ தவிர, மற்ற அனைத்து சூழல்களிலும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.





சில வழக்குகளில் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முடியாத சூழல் இருக்கும் என்பதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த சூழலை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அது மன்னிக்க முடியாதது. அப்படியெனில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாககவே கருதப்படும். அரசியல் சட்ட இயந்திரம் முடங்குவதற்கு வழிவகுத்து விடும். வழக்கு 2026 ஆம் ஆணடு ஜனவரி மாதம்.,9 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், தலைமை செயலாளர் பொறுப்பான நிலை எடுப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும். இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார் இந்த நிலையில் மேலீமுறையீட்டு வழக்கில்  நீதிபதிகள் கண்டிப்பு "தனி நீதிபதியின் உத்தரவில் சட்டப்பூர்வமாக என்ன தவறு உள்ளது  என்பது குறித்து மட்டுமே வாதிட வேண்டும்" 

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது தர்ஹா தரப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கண்டிப்பு. வழக்கில் தடை விதிக்க முடியாது 

தலைமைச் செயலர், ஏடிஜிபி ஆகியோர் நாளை ஆஜராவதற் விலக்கு அளிக்க அரசு சார்பில் கோரிக்கை வைத்தனர் அதை 

தனி நீதிபதியிடமே கேட்டுப் பெற்று கொள்ளுங்கள், நாங்கள் உத்தரவிட முடியாது  என நீதிபதிகள் தெரிவித்தனர்.இந்த நிலையில் மேலீமுறையீட்டு வழக்கில் நீதிபதிகள் கண்டிப்பு

"தனி நீதிபதியின் உத்தரவில் சட்டப்பூர்வமாக என்ன தவறு உள்ளது  என்பது குறித்து வாதிட வேண்டும்" 

திருப்பரங்குன்றம் தூணில் தீபமேற்றும் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின்போது தர்ஹா தரப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கண்டிப்பு.இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நடந்த நிகழ்வுகள் நீதியை  யரும் மிரட்ட முடியாது

உண்மையையயும் யரும் மறைக்க முடியாது!திருப்பரங்குன்றம் மலைக்கே நீதிபதி நேரில் சென்று ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு என்று நீதிமன்றம் தெளிவாகச் சொன்னது அதே நேரத்தில், “ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்கத் தடை”என்று பரப்பப்பட்ட பொய் செய்திகளுக்கு உயர்நீதிமன்றம்  கருத்து சரியனது.

திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை! தடங்கலும் இல்லை!அதிகாரத்தில் இருப்பதால் நீதியைக் கட்டுப்படுத்த நினைத்தால் அது அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் 

“விசாரணை வேண்டாம் அமைதியாகவே வழக்கை மூடிடலாம்” என நினைத்தவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த பதில்

‘சட்டம் உங்கள் அனுமதியைக் கேட்காது!’இ து மத விவகாரமல்ல திருப்பரங்குன்றம் ஓட்டுக்கான மேடை இல்லை, ஒப்பந்தத்துக்கான இடமில்லை, சமாதானத்தால் அடைக்கக் கூடிய விஷயமும் இல்லை!

நீதிபதி விசாரிப்பார்! உண்மை வெளியே வரும்! திருப்பரங்குன்றம் அரசியலின் கைப்பாவை அல்ல என்பதே

நீதியின் கண்காணிப்பில் இருக்கும் கண்ணியம் மிக்க ஆன்மீகம் உள்ள ஸ்தலம்.வழக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றத்தின் டிவிசன் பெஞ்சில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், இராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று அதே நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஆதரவாக தாக்கல் செய்த இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் தெலுங்கானாவின் முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ். ஸ்ரீராம் ஆஜராகி வாதாடினார்.           உத்தரவை நிறைவேற்றும் பட்சத்தில் பொது அமைதி பாதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல்துறை கமிஷனர் தரப்பில் தெரிவிக்கப்படுவது தனி நீதிபதி உத்தரவை அவமதிப்பதாகும். மேலும் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவு காரணமாக எந்த பொது அமைதியும் சீர்குலையவில்லை. அரசு கூறுவது ஏற்புடையதல்ல. மேலும் இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றுவது அரசின் கடமை.

எனவே இந்த உத்தரவை மனசாட்சியுடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு அங்கமாக விளங்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு நிறைவேற்றவில்லை என்பதன் மூலம் அதிகாரிகள் தங்களின் அடிப்படைக் கடமையை மீறி உள்ளனர். மாநில அரசு தனது கடமையை நிறைவேற்றுவதில் தவறி விட்டது மனுதாரரால் பொது அமைதி குலைந்தது என்பது ஒரு சாக்குப்போக்குக் காரணம். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றும் முன்னரே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் நீதிபதி தீர்ப்பை நிறைவேற்றக்கூடாது என்பதற்காக சம்பவத்தன்று திருப்பரங்குன்றம் பகுதியில் காவல்துறை யினர் குவிக்கப்பட்டனர்  என வாதாடினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பொது அமைதி கெடும் என்று அரசு தரப்பு கூறுவதும், அதற்கு மனுதாரர் தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதும் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று கருத்து தெரிவித்தனர். அதன் பின்பு மூத்த வக்கீல் ஸ்ரீராம் தனது வாதத்தை  முன் வைத்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...