முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஏவிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை தயாரிப்பாளர் ஏ.வி. எம் சரவணன் காலமானார்

ஏவிஎம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை தயாரிப்பாளர் ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பின் காரணமாக 86. வயதில் காலமானார்.


உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஏவிஎம் சரவணன்  இன்று காலமானார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடக்க முடியாமலிருந்த ஏ.வி.எம் சரவணன், ஒரு மாதத்திற்கு முன்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதங்களாக இருந்தார். இந்த நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு காலமானார்.




1958 ஆம் ஆண்டில் இருந்து ஏவிஎம் நிறுவனத்தின் திரைப்படம் தயாரிப்பில் ஈடுபட்டவர் ஏவி.எம் செட்டியாரின் மூன்றாவது மகன். ஏவிஎம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப பங்காற்றியவர் ஏவிஎம் சரவணன்.பூத உடல் இன்று மாலை 4 மணி வரை ஏவிஎம் ஸ்டுடியோ மூன்றாவது தளத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

மாலை 4 மணிக்கு ஏவிஎம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. நேற்றுத் தான் அவருடைய பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கதுஇயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ்  உள்ளடக்கிய சினிமா. மூலம் சமூகத்தில் நிலவி வந்த அறியாமையை, கதாபாத்திரங்களின் வசனங்களாலும், பாடல்களாலும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலுவாக இடம் பெறச் செய்து, பல மொழிகளில் ஏராளமான படங்களை தயாரித்து, தமிழனின் பெருமையை வட இந்தியா வரை கொண்டு சென்று வெற்றி கண்ட தயாரிப்பாளர்களில் முதன்மையானவர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார். அவரது மகன்களில் ஒருவரான தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், தந்தை வழி நகரத்தார் எனற போதிலும் தாய் வழி சௌராஷ்ட்ரா

எதிலும் துல்லியம் உலகமெல்லாம் பரவியுள்ள தமிழ் மக்கள் அனைவரும் AVM என்ற மூன்றெழுத்தை இசையுடன் பார்த்ததும் இவரது தந்தை ஏவிஎம்மும், அவர் எடுத்த படங்களும் நினைவுக்கு வரும். அவரால் பொருளையும் புகழையும் கொடுத்த  வாழ்வு பலரும் பின்பற்றத்தக்கது.

எதுவாக இருந்தாலும் துல்லியமாக இருக்க வேண்டும் என எண்ணுபவர். எந்த விஷயத்திற்காகவும் சமரசம் ஆகாதவர். எந்தப் படமாக இருந்தாலும் திருப்தி இல்லாமல் வெளியில் போக கூடாது. மக்களுக்கு பிடிக்குதோ, இல்லையோ நமக்கு திருப்தியாக இருக்க வேண்டும் என்பவர் என 


அவரது தந்தை பற்றி கூறும் போது உதாரணத்திற்கு களத்தூர் கண்ணம்மா படமான சமயத்தில், அதே கதையை வேறு ஒருவர் படமாகவே எடுத்தனர். நடிகர்கள் மட்டும் தான் வேறு, வேறு. ஆரம்பத்தில்  இது தெரியவில்லை. நாளாக நாளாகத்தான் தெரிந்தது. படத்தை வேகமாக முடித்து ரிலீஸ் செய்யலாம் என எண்ணி படத்தை போட்டு பார்த்தால். நிறைய காட்சிகளை மாற்ற ச்சொல்லிவிட்டதனால் அந்தப்படம் முன்னமே வந்துவிடும், இந்தப் படம் நான்கு வாரம் தள்ளிப்போகும் என்றதனால் என்ன? மகாபாரதம், இராமாயணம் திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள். இருந்தாலும் படம் பார்க்க மக்கள் எதற்காகப் போகிறார்கள். அந்தப்படத்தை பற்றி கவலைப்படாதீர்கள், நம்ம படம் நன்றாக வரணும் மட்டும் எண்ணுங்கள் எனக் கூறவே. அதுபோல நடந்த நிகழ்வு பகிர்ந்த சரவணன் எப்போதும் மரியாதை மிக்க நபர் அதேப்போன்று ‘கடவுளின் குழந்தை’ என்ற அந்தப்படம் முன்பே வெளியானது. ஆனாலும் அந்தப் படத்தைப் பற்றித் தான் இப்போதும் பேசுகிறார்கள். அப்போது தான் தெரிந்து கொண்டதாக , சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ, எதுவாக இருந்தாலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும்.

அதேப்போன்று நேரம் தவறாமை என்பது அவர் உடன் பிறந்தது. எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று அவரது தந்தை திட்டமிடுவார் எனவும் சொன்ன நேரத்தில் சொன்ன தேதியில் இதை முடிக்கணும் என எதிர்பார்ப்பார் எனவும். புரியவில்லை என்றாலும் மீண்டும் சொல்லிக் கொடுப்பார். ஆபிஸ் பையன் கூட ஒரு தகவல் சொன்னால் அதை கூட ஏற்றுக் கொள்வார். எல்லோரின் கருத்துக்களையும் உள்வாங்கி கொள்வார்.எனும் சரவணன் அவரது மூன்றாவது மகன் அவரும் அப்படியே. ஒரு முறை சென்னை மாநகர் ஷெரீப் ஆகவம் இருந்தார்1960-களின் துவக்கத்தில் நிறுவப்பட்ட இந்த AVM உலக உருண்டை பல திரைப்படங்களில் காட்டப்பட்டது. "இதைப் பார்க்கும்போது தமிழ் சினிமாவையே மொத்தமாகப் பார்த்தமாதிரிதான்" என்கிறார் ஒரு உதவி இயக்குநராகப் பணிபுரியும் நண்பர். வடபழனியில் வந்து ஆயிரம் சினிமா கனவுகளோடு இறங்கும் லட்சக் கணக்கானோருக்கு கண்டவுடன் உற்சாகம் தருவது இந்த AVM உலக உருண்டை என்பது உண்மை. "சினிமா உலகமே இந்த உலக உருண்டை மாதிரி தான் நிற்காம சுத்திக்கிட்டிருக்கும். அதுவே ஒரு அடையாளம்" அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு சினிமா என்றாலே ஏவி.எம் தான், ஏவி.எம் என்றாலே இந்த உலக உருண்டைதான். ’நீங்கள் எத்தன வருஷமா இங்கே தங்கியிருக்கீங்க, எத்தன வருஷமா இந்த உலக உருண்டையப் பார்க்குறீங்க’ என வடபழனி பகுதிவாசி ஒருவரிடம் கேட்டபோது, "நாங்க மூணு தலைமுறையா இங்கே தான் இருக்கோம். எனக்கு 40 வயசாகுது. நான் பொறந்ததுல இருந்தே இதைப் பார்த்துட்டுதான் இருக்கேன்.அப்போதெல்லாம் இந்த உலக உருண்டை ஸ்டூடியோவுக்கு உள்ளே இருந்த வாசல் கிட்ட இருக்கும். அதுக்குப் பிறகு ரெண்டு தடவ இடம் மாத்திட்டாங்க. ஸ்கூல் விட்டு வரும்போது நாங்க அங்கே தான் விளையாடுவோம். அது நிக்காம எப்படி சுத்திக்கிட்டே இருக்குன்னு யோசிச்சு அந்தத் தூணைச் சுற்றி வந்திருக்கோம். நாங்க நிறைய தேடித் தேடிப்பார்த்தும் அது எப்படி சுத்துதுன்னே கடைசி வரக் கண்டுபுடிக்க முடியல" என்கிறார். நாமும் பலமுறை அங்கு பலரைச் சந்திக்கச் செனற நாட்கள் உண்டுஅவரது உடல், அஞ்சலிக்காக ஏ.வி.எம் ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைப்படத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவு தமிழ் திரையுலகில் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...