முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமாவாசை நாளில் அஸ்தமித்த பூர்ணச்சந்திரன் மறு விஷ்வாமித்ரன்

பிரம்மரிஷியான விஸ்வாமித்திர மகரிஷி, தனது உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபமேற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை கொடுத்தவர் 


அதேபோல பூர்ணசந்திரன் மதுரை திருப்பரங்குன்ற தீபம் ஏறறும் விவகாரத்தில் தன் உயிருடலை திரியாக மாற்றி தீப்பற்றவைத்து திரியாக ஒளிர்நது மறைந்தார் ஆளும் திமுக அரசைக் கண்டித்து, ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துரதிஷ்ட வசமானது.

மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபமேற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், திமுக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, மதுரை நரிமேட்டைச் சேர்ந்த சாமானிய முருக பக்தர் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிராயுதம் பூண்டார்


சூரபத்மனை வதம் செய்த கார்த்திகேயன் தீபத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்.பூர்ணசந்திரனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஹிந்து அமைப்புகள் மற்றும் முருக பக்தர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை கூறுகையில் "சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபமேற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, முருக பக்தர் பூர்ணசந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.



வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, பூர்ணசந்திரன் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது.

ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இதுபோன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.




பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாரதிய ஜனதா கடசித் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.






உயிரிழந்த பூர்ணசந்திரனுக்கு மகன், மகள், மனைவி என உள்ள நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றாததால் மனம் உடைந்த மதுரையை சேர்ந்த பூரணச்சந்திரன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்ததைச் சுட்டிக்காட்டி, இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்  வெளியிட்டுள்ள அறிக்கை:-.

"திருப்பரங்குன்றம் தீப உரிமைக்காக திரு பூர்ணசந்திரன் தனது உயிரை இழந்திருப்பது மிகவும் வேதனைக்குரியது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அதே சமயம் உயிரை மாய்த்துக் கொள்வது பிரச்னைக்குத் தீர்வாகாது.கோவில் சம்பிரதாயங்களைக் காக்க அரசு இனியாவது செவிசாய்க்க வேண்டும். அதேசமயம், தயவுசெய்து யாரும் இனி இதுபோன்று விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் எனக் கைகூப்பிக் கேட்டுக்கொள்கிறேன்.



உங்கள் உயிர் விலைமதிப்பற்றது.இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட முடியவில்லை என்ற விரக்தியில், தன்னைத் தானே தீ வைத்து அழித்துக் கொள்ளும் நிலை தமிழகத்தில் இருப்பதாக"வும் அதில் கூறப்பட்டுள்ளது.






மேலும், பூர்ணச் சந்திரனின் உயிரிழப்புக்கு தார்மீக பொறுப்பேற்று, முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றக்கோரி தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் பூர்ணச் சந்திரன் குடும்பத்துக்கு பாரதய ஜனதா கடசி மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் ரூபாய்.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு ரூபாய்.1 கோடி இழப்பீடும், உயிரிழந்தவர் மனைவிக்கு அரசு பணியும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.



மதுரை மாவட்டம் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பூர்ணச் சந்திரன்.  எம்.பிஏ, பட்டதாரி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வேண்டும் என வாட்ஸ்-அப்பில் குரல் பதிவு அனுப்பி விட்டு தல்லாகுளம் பகுதி பெரியார் சிலை அருகில் உடல் முழுவதும் டீசலை ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலை உடற்கூராய்வு செய்யப்பட்டது.




கயத்திரியாக்கி தீபம் ஏற்றிய பூர்ண சந்திரன் உடலுக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநிலச் செயலாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மதுரை மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.






பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன் : "திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாமல் அவமதிப்பு செய்தது. இதனால் மன உளைச்சல், வேதனை அடைந்து என் மறைவுக்கு பிறகாவது திருப்பரங்குன்றத்தில் திமுக அரசு தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன் உடலை தீபமாக, தீப்பந்தமாக எரித்து உயிரிழந்துள்ளார் பூர்ணசந்திரன்.



                                 -
விளம்பரம்-                               
                            -
விளம்பரம்
அவரது இறப்புக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும். இனிமேலாவது திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பூர்ணசந்திரன் மனைவிக்கு அரசு வேலையும், குடும்பத்துக்கு ரூபாய்.1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும். இதில் அரசியல் பாகுபாடு பார்க்கக்கூடாது என தமிழ்நாடு முதல்வரை அனைத்து மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

பூர்ணசந்திரன் குடும்பத்துக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் ரூபாய்.10 லட்சம் இழப்பீடு வழங்கப் பட்டுள்ளது. தொடர்ந்து அவர் குடும்பத்துக்கு பல்வேறு அமைப்புகள் உதவி செய்யவுள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை மாலை பூர்ணசந்திரன் படத்துக்கு மரியாதை செலுத்தி கோயில்களில் மோட்ச தீபம் ஏற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.           "ஓம் விஸ்வாமித்ராய வித்மஹே பிரம்ம ரிஷியாய தீமஹி தன்னோ சத்திய மித்திர ப்ரசோதயாத்"

- உயிராயுதமாக முதலில் பூர்ணசந்திரன் பற்றவைத்த தீபம் சுடர் இந்தியா முழுவதும் முருக பக்தர்கள் உறுவாக வழிவகுக்கும் ராமனும், முருகனும், இல்லாத கிராமம் ஏது, பக்தி இல்லாத இலக்கியங்கள் ஏது பாமரனை கடவுள் மறுப்பாளர்கள் குழப்பமடைய வைப்பது வாக்கு வங்கி அரசியல் தான், மதம் சாராத



மனிதன் இந்தியாவில் இல்லை. பூரணசந்திரன் ஆத்மா ஈசன் நிழலில் இளைபாறட்டும் ஓம் சாந்தி.                           "
ஓம் பூர்புவ: ஸ்வ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோதேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோதயாத் !!"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...