முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் தவெக தலைமையில் அமமுக, பாமக, தேமுதிக, மக்கள் பாதை, என் ஆர் காங்கிரஸ் இணையும் வாய்ப்புக் கூடியது

தமிழ்நாட்டில்  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 'பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும்


மற்றும் பாஜகவின் தலைமையில் ஆன தே ஜ கூட்டணியை அமைக்க வேண்டும்' என்பதை எடப்பாடி கே பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்தார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. அதை எடப்பாடி பழனிச்சாமி செய்ய மறுத்ததால், அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார் தங்கமணி. பதிலுக்கு எடப்பாடி பழனிசாமியும் தங்கமணியை ஓரம்கட்டத் தொடங்கினார். பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றபோதிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோதும் கூட அந்த நிகழ்வுகளுக்கு தங்கமணியை அழைக்க வில்லை.



இந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி -தங்கமணி இடையே சமரசம் வருகிறது. அதன் எதிரொலியாக, பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதலாக சென்னை வந்தபோது, அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியுடன் கலந்துகொண்டார் தங்கமணி !பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தலைமையிலான முதல் மாநில மையக்குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும், அவர் வரவில்லை. 'அடல் பிஹாரி வாஜ்பாயின் நூற்றாண்டு விழா, நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆந்திராவில் அவருடைய சிலையைத் திறந்துவைத்துப் பேச ஏற்கெனவே நேரம் கொடுத்துவிட்டார் அண்ணாமலை. அதனால்தான் அவர் மையக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை'









என அண்ணாமலை தரப்பு விளக்கமளித்தது. அதேசமயம், 'ஆந்திராவில் சிலையைத் திறந்தது டிசம்பர் மாதம். 22-ஆம் தேதி. பியூஷ் கோயல் சென்னைக்கு வந்ததோ டிசம்பர் மாதம்.23-ஆம் தேதி அண்ணாமலை நினைத்திருந்தால் ஆந்திராவிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்திருக்க முடியும். தனக்குப் பதவி வழங்கப்படாத நிலையில் தான், அவர் மையக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல நடந்துகொள்கிறார் என கமலாலய தலைகள் பேசும் நிலையில் இனி மேல் தான் கூட்டணி குறித்து தகவல் வரும் நிலை. அதேபோல் பா.ம.க-வில், தந்தை மருத்துவர் அணியில் இருந்த ஜி. கே. மணி நீக்கத்திற்கு பின்னர் மகன் மருத்துவருக்கு இடையேயான மோதல் நாளுக்கு நாள் மோசமாகி, 'இனி இணைப்பு சாத்தியமே இல்லை' என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. அதைப் பயன்படுத்தி, மருத்துவர் ராமதாஸுடன் மிக நெருக்கமாகிவிட்ட தி.மு.க தரப்பு.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு, தி.மு.க கூட்டணிக்குள் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க அணியைக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடக்கிறதாம். முதற்கட்டமாக, மருத்துவர் ராம தாஸின் அதிதீவிர ஆதரவாளர்களான நீக்கப்பட்ட ஜி. கே. மணி. மற்றும் சேலம் இரா. அருள் உள்ளிட்ட ஐந்து நபருக்கு தொகுநி வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதாம்.அதேபோல, மருத்துவர் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, மருத்துவர் ராமதாஸை நேரடியாகத் தேர்தல் பிரசாரம் செய்யவைக்கவும் ஆயத்தமாகி வருகிறதாம் தி.மு.க தரப்பு. இந்தத் தகவலறிந்து, மருத்துவ ர் அன்புமணி கடுமையாக கோபமாகியிருப்பதாகவே தகவல் வருகிறது. எடப்பாடி பழனிசாமியால் புறக்கணிக்கப்பட்டவர்களும், எதிர்ப்பாளர்களும் விஜய்யோடு கைகோர்க்கிற பொழுது ஒரு புதிய அதிமுகவாக தவெக உருவெடுக்கும்,






எடப்பாடி தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும்  ஜெ. ஜெயலலிதா வின் அதிமுக என்பதில் இருந்து மாறி (எதிமுக) எடப்பாடி திமுகவாக பரிணமித்து  திமுகவின் "B Team" ஆக மாறும். எனபது பலரும் பேசும் நிலை,

எப்படி 1989இல் புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பிறகு "ஜா & ஜெ" என்று அணிகள் பிளவு பட்டு அன்றைய "ஜா" அணி எப்படி திமுகவுக்கு B Team ஆக செயல்பட்டதோ அதுபோல எடப்பாடி அணியும், அன்றைய "ஜெ" அணியை போல புதிய அதிமுகவாக தவெகவும் உருவெடுக்கும்.திருச்சி மாநகர் மாவட்ட அஇஅதிமுக. எம்ஜிஆர் மன்ற அவைத்தலைவர் அருள் ஜோதி , மாவட்ட அம்மா பேரவை தலைவர் எனர்ஜி அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.. 

அதிமுகவில் கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக பதவி வகித்து வந்த இருவர் அக்கட்சியிலிருந்து விலகி த.வெ.க இணைந்ததால் அதிமுக வில் உள்ள மற்ற நிர்வாகிகள் அதிர்ச்சி....! அமமுக பாமக மற்றும் தேமுதிக ஆகிய 3 கட்சிகளை தங்களுடன் இணைத்து கூட்டணியை பலப்படுத்தப் போவது தவெக என பலரும் கூறும் நிலையில் அதை உறுதிப்படுத்தம் நிலை தான் தொடர்கிறது,தேமுதிக-விற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற வதந்தியை பரப்பியது அதிமுக அல்லது பாஜக யாராக இருந்தாலும், அழிவுப் பாதைக்கு செல்வது உறுதி என பிரேமலதா ஆவேசமாக தெரிவித்த நிலையில்அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற அமமுகவின் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோரிடம் பாஜகவே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தலாம் ஆனால் மீண்டும் அவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என எடப்பாடி கே.பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும்

இந்த நிலையில் ஒ.பன்னீர்செல்வம் தனது நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைப் படு பாதாளத்திலே தள்ளி வைத்து இன்றைக்கு அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் வெம்பி வதங்கி என்ன செய்வது என்றே தெரியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை உருவாக்கிய எடப்பாடி பழனிசாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும் என்பது தான் இன்றைய வரலாறு. 

பல கூட்டங்களில் நாம் பல்வேறு பிரச்சனைகளைப் பேசி முடித்துவிட்டோம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து விடலாம் என்ற ஓபன்னீர் செல்வத்தின் எண்ணம் நிறைவேறாத நிலையில் அவர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ஒரு படிவம் கொடுக்கப்பட்டதில், அடுத்தகட்டமாக திமுக கூட்டணியை நாடுவது அல்லது தவெக கூட்டணியை நாடுவது குறித்து கருத்துத் தெரிவிக்கும் வகையில் அந்த படிவம் இருந்துள்ளது. மொத்தமாக கலந்துகொண்ட 80 மாவட்டச் செயலாளர்களில் 72 பேர் தவெக கூட்டணிக்குச் செல்லலாம் என தகவல்.

கலந்துகொண்ட மாநில நிர்வாகிகள் 60 பேரில் 55 பேர் தவெக கூட்டணிக்குச் செல்லலாம் எனும் நிலைப்பாட்டை எடுத்தனர். சிலர் அதிமுக அடையாளத்தை இழக்காமல் தவெக கூட்டணிக்கு செல்லலாம் என கருத்துத் தெரிவித்துள்ளனர். சில நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் வந்திருந்த நிர்வாகிகளில் 90 சதவிகிதம் பேர் தவெக கூட்டணியை தேர்வு செய்துள்ளனர். இதனால் 38 வருவாய் மாவட்டங்களை கணக்கில் கொண்டு 38 சீட்டுகளை தவெக கூட்டணியில் பெறலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் எப்படியும் பத்து சீட் உறுதி எனவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தவெக உடன் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...