திருத்தணி ரயிலில் 'ரீல்ஸ்' இளைஞர்கள் மற்றொரு இளைஞனை வெ..ட்டிய கொடூரம்.
தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிய மாநிலம். அதில் மாற்றுக் கருத்து யாருக்குமில்லை
அண்மை காலமாக நடக்கும் சம்பவங்களை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் முடிவு விரைவில் வந்து விடும் போலிருக்கிறது..நினைத்தாலை பலரும் அதிர்ச்சியாகும் நிலை தான் உள்ளது.
20 க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்கள் மற்றும் தலையை பிளந்தது மற்றும் நெடு நேரம் கழித்து மருத்துவ உதவி கிடைத்தது இதையெல்லாம் வைத்துப் பார்க்கையில், இத்தனை வெட்டுப்பட்ட ஒரு இளைஞன் உயிரோடிருப்பது அபூர்வமே,
அந்த நபரை தரமான சிகிச்சையளித்துக் காப்பாற்றிய அரசு மருத்துவர்கள் தான்
ஆனால், மிகவும் மோசமான உடல் நிலை கொண்டவருக்கு இன்னும் சில நாட்கள் சிகிச்சையும், தொடர் மருத்துவக் கண்காணிப்பும் தேவைப்படும் நிலையில் அவசரமாக ஏன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்? என்பதே
19 வயது இளைஞருக்கு தமிழ்நாட்டில் குடும்பமோ, உறவுகளோ இல்லாத சூழலில் எப்படி வெளியே அனுப்பப்பட்டார் என்பதும் புரியாத புதிராகும்.. அவரது குடும்பத்திற்கு தகவல் தரப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படாமல், நடக்கத் திரானியற்ற வெளி மாநிலத்தவரான அவரால் என்ன செய்ய முடியும்? அவர் ஏன் விரைந்து அவர் ஊருக்கு அனுப்பட்டார். என்ற கேள்வியை இங்கு எந்த எதிர்கட்சிகளும் கேட்கவில்லை.
இந்த விவகாரத்தில் திமுக அரசு இன்று ஆளம் கடசியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் ஆளும் தரப்பினரை எதிர்த்து கேள்விகளைக் கேட்டுத் திணறடித்திருக்கும். எதிர்கட்சி அரசியலில் திமுகவை விஞ்சவதற்கு அகில இந்திய அளவில் இன்னொரு கட்சி கிடையாது. ஆனால், ஆளும் கட்சியாக இருந்தால் எதிர்மறையாகச் செயல்படுவார்கள்.
இந்தச் சம்பவத்தை பொறுத்த வரை நாம் விலாவாரியாக விசாரித்து அறிந்த போது , இது வரை வெளியான செய்திகளில் பல உண்மைக்கு புறம்பானவை என அறியும் நிலை தான் வந்தது.
கேட்கவும் நாதியற்ற எளிய குடும்ப இளைஞன் சுராஜ் 48 மணி நேரத்திற்குள் அவசரகதியில் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதன் பின்னணியிலுள்ள அரசின் மனிதாபிமானமற்ற போக்கும், ஜாதி அரசியல் அழுத்தமும் மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது, இந்த நிலையில்தமிழ்நாடு காவல் துறை சார்பாக
ஐடி(எ) சட்டம் 2008 ன் உட்பிரிவு 79(3)(பி) & தகவல் தொழில்நுட்பத்தின் விதி 3(1) (ஈ) (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021) ன் படி எக்ஸ் கார்ப் நிறுவனத்திற்கு பாதுகாப்பு - சட்டக் கொள்கையை வலியுறுத்தி 865 FM 1209 Bldg. 2 பாஸ்ட்ராப், TX 78602 grievance-officer-in@twitter.com
சி.எண்.2064-1/SP/CCD-I/CB/2025, தேதி: 29.12.2025.ன்படி இந்தியா தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு - ட்விட்டரைத் தடுப்பது பதிவுகள் கோரப்பட்டது - குறித்து.
1.CCW/SP/CCD-I/T.NO-1847-CB/தேதி: 29.12.2025
2.திருவள்ளூர்/CCPS/Cr.no.609/2025
இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டின் நலன் தொடர்பாக தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தச் சட்டத்தின் கீழும் தடைசெய்யப்பட்ட சட்டவிரோதச் செயலைச் செய்யப் பயன்படுத்தப்படும் தகவல்களின் கணினி ஆதாரத்தில் உள்ள ஒரு இடைத்தரகருக்கு அறிவிப்பை வெளியிடும் நோக்கத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட நோடல் அலுவலரான காவல் துறை சார்பாக மாநிலத்தின் பாதுகாப்பு; வெளிநாட்டு நாடுகளுடன் நட்புறவு; பொது ஒழுங்கு; ஒழுக்கம் அல்லது ஒழுக்கம்; நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக; அவதூறு; மேற்கூறியவை தொடர்பான குற்றத்திற்கான தூண்டுதல் அல்லது தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் தடைசெய்யப்பட்ட எந்த தகவலும், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79(3)(b) பிரிவின் கீழ் உண்மையான இந்த தகவல் பெற்றவுடன் பெற்ற முப்பத்தாறு மணி நேரத்திற்குள் அத்தகைய தகவல்களை அணுகுவதை நீக்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய விசாரணை அலுவலரிடமிருந்து கீழே பட்டியலிடப்பட்டுள்ள ட்விட்டர் கணக்கு குறித்து கோரிக்கை பெறப்பட்டுள்ளது. இந்தக் கணக்கில் ரவுடித்தனத்தை ஊக்குவிக்கும், வன்முறைக் கலாச்சாரத்தை வளர்க்கும், தீங்கான சித்தாந்தங்களைக் கொண்ட இளைஞர்களைத் தவறாக வழிநடத்தும் மிகவும் மோசமான மற்றும் வன்முறை உள்ளடக்கம் பதிவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கணக்கு வைத்திருப்பவர் ரயில் பயணத்தின் போது அவர் கத்தியை வைத்துக்கொண்டு பொதுமக்களைத் தாக்கும் வீடியோவை பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது, அது பின்னர் ஆன்லைனில் பரப்பப்பட்டது. இத்தகைய வீடியோக்களின் பரவல், வன்முறை நடத்தையில் ஈடுபடுவதற்கு இளைய தலைமுறையினரை எதிர்மறையாக பாதிக்கலாம் மற்றும் பொது ஒற்றுமைக்கு வழிவகுக்கும். இந்த வகையான உள்ளடக்கம் அமைதி, பொது ஒழுங்கு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, மேலும் இது சட்டம் மற்றும் ஒழுங்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பிஎன்எஸ் சட்டத்தின் படி Cr.NO.609/2025 U/s 126(2), 296(b), 109, 351(3) ஆகிய எண்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 இன் விதி 3(1)(d) இன் படி, கீழ்கண்ட URL ஆனது, கண்ணியம் அல்லது ஒழுக்கம் மற்றும் பொது ஒழுங்கு மற்றும் மேற்கூறிய பிரிவுகள் தொடர்பான குற்றத்தைத் தூண்டும் வகையில் சட்டவிரோதச் செயலைச் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, மேலும் குற்றங்களைத் தடுக்க கீழே உள்ள ட்விட்டர் URL கள் தடுக்கப்படலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ட்விட்டர் பதிவுகளின் URL: (திருவள்ளூர் மாவட்டம் - வன்முறை)
1.https://x.com/i/status/2005543070566388210
2.https://x.com/i/status/2005553732143169574
3.https://x.com/i/status/2005614562226376893
4.https://x.com/i/status/2005587227775291592
5.https://x.com/i/status/2005522319037628736
6.https://x.com/i/status/2005592544336613396
7.https://x.com/i/status/2005567614349963536 7.
8.https://x.com/i/status/2005565851156762701
9.https://x.com/i/status/2005510284270789060
10.https://x.com/i/status/2005524676827926857
11.https://x.com/i/status/2005517156193271809
12.https://x.com/i/status/2005150797437567277
13.https://x.com/i/status/2005568221261464018
14.https://x.com/i/status/2005574414759342266
15.https://x.com/i/status/2005533055201759249
16.https://x.com/i/status/2005549032077414857
17.https://x.com/i/status/2005607252259221830
18.https://x.com/i/status/2005582377528308215
19.https://x.com/i/status/2005261018147225768
20.https://x.com/polimernews/status/2005261018147225768
21.https://x.com/zoo_bear/status/2005533055201759249
22.https://x.com/Lalithprashant/status/2005150797437567277 ஆகியவை இந்தியா வின் சட்டப் பிரிவுகளை மீறப்பட்டது: சட்டம் BNS ன் 126(2), 296(b), 109, 351(3) ஆகிய பிரிவுகள் குறிப்பிடப்பட்ட ட்விட்டர் கைப்பிடி இந்த இந்திய அரசு சட்டத்தை மீறுவதால், இடுகையைத் தடுக்கத் தவறினால், தகவல் தொழில்நுட்பத்தின் விதி 7 (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 மற்றும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவின்படி X Corp மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இதை அவசரமான கடிதம் எனக் கருதுங்கள்.என கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல், சைபர் கிரைம் பிரிவு, உள்ளடக்கத் தடுப்புக்கான நோடல் அலுவலர். தமிழ்நாடு என தெரிவித்து கடிதம் x கார்ஃப்க்கு எழுதப்பட்டது.
குற்றம் செய்து பிடிபடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், காவல்துறையினரையும் நீதித் துறையையும் இளக்காரமாக நினைக்கிறார்கள், கேலியாகப் பேசுகிறார்கள்.
அவர்களிடம் எதைப் பற்றியுமே பயமில்லை.
"அடிக்கப் போறியா எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ. நீ அடிச்சு நான் செத்து போயிட்டா எனக்கு ஒன்னுமில்ல. நீ தான் பின்னாடி மாட்டிகிட்டு சாவே" என்று சாதாரண மாகக் சொல்கிறார்கள்..
"இந்தக் குற்றத்தைச் செய்தால், இங்கே சரணடைய வேண்டும். இத்தனை நாளில் ஜாமீன் கிடைத்துவிடும், சட்டம் நம்மைத் தண்டிக்காது சாட்சிகள் சொல்ல யாரும் வரமாட்டார்கள் இந்த அளவுக்குத் தான் தண்டிக்க முடியும், அதுக்கே கூட ஏகப்பட்ட வருஷங்களாகும்" போன்றவை தெள்ளத்தெளிவாக அடித்தளத்தில் வாழும் இளைய தலைமுறையினர் மண்டையில் கடந்த பத்து ஆண்டுகளில் தவறான போதனை ஏறி இருக்கிறது .
நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலையில் தாறுமாறாக இரண்டு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு வந்த ஐந்து இளைஞர்களை அங்கே தேனீர் குடிக்க வந்த இரண்டு பேர் தட்டி கேட்டிருக்கிறார்கள்.
உடனே அந்த இளைஞர்கள் இரண்டு பேரையும் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்கள். நம்மை யார் என்ன செய்து விடப் போகிறார்கள் என்று ஒரு ஆணவமான மனநிலை தானே இது..
இதே மனநிலை தான் பள்ளியில் படிக்கும் சில வீட்டிற்கு அடங்காத மாணவர்களுக்கும தலை தூக்கி வருகிறது.
பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து பயந்து நடுங்க வேண்டிய நிலை. எதை தட்டிக் கேட்கப் போனாலும் மடை மாற்றப்பட்டு ஆசிரியர்கள் மீது பழி வந்து சேர்கிறது.
ஒரு குற்றத்தைச் செய்தால் அதற்குண்டான பின் விளைவுகள் என்னென்ன? நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்? சமூகத்தில் உங்கள் குடும்பம் எப்படிப்பட்ட அவமானங்களைச் சந்திக்கும் என்பதையெல்லாம் பாடத்திட்டங்களையும் தாண்டி மாணவ மாணவியருக்கு தனியாய் நடைமுறை பாடமாகவே நடத்தியாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். கூட்டுக்குடும்ப வாழ்வியல் இருந்தவரை இதபோனற தவறுகள் நடக்கவில்லை, புத்தி சொல்ல பெரிய மனிதர்கள் இருந்தனர் இந்த நிலை மாறிய பின் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் நிலை,
எல்லாவற்றிற்கும் காரணம் போதை மற்றும் கஞ்சா பழக்கம். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.
மதுக்கடைகள் விற்பனை மட்டுமே அரசின் இலக்கு
ஒரு சாவுக்கு போனா குடிச்சிட்டு ஆடுறவன் பத்து பேருன்னா கஞ்சா அடிச்சுட்டு ஆடுறவன் ஆறு பேரு இருக்கான். அவர்களைத் தட்டி கேட்டால் அங்கேயே இன்னொரு பிணம் விழும் போல.
கஞ்சா இளைஞர்கள் எதிர்ப்பட்டால் ஆண்களே அஞ்சி ஒதுங்குகிறார்கள் என்றால் பெண்கள் மற்றும் சிறுமிகள் நிலை என்ன என்று யோசித்துப் பாருங்கள்
காவல்துறை நினைத்தால் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க முடியும். ஆனால் அதில் உள்ள சிலர் கேவலம் மாமுலுக்காக கஞ்சா பார்ட்டிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கஞ்சா புழக்கம் பற்றி புகார் சொல்லப்போனால், புகார் சொல்பவர்களையே ஆபத்தில் சிக்க வைத்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை.
இந்த கஞ்சா போதை கும்பலிடம் சிக்கியுள்ள பொறுக்கிகள் மத்தியில் தான் தங்களுடைய பிள்ளைகளும் வளர்கிறார்கள் என்பதை, மாமுல் வாங்கும் காவல்துறையினர் மறந்து விடுகிறார்கள்.
மாமூல் வாங்கி வளர்த்து விடும் அதே கஞ்சா கும்பலால் என்றைக்காவது ஒரு நாள் தங்கள் வீட்டு பெண்களுக்கும் ஆபத்து வரலாம் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.
'மாமுல்' காவல்துறையினர் தான் அப்படி என்றால், தமிழ்நாடு அரசாங்கம் என்ன செய்கிறது? என்பது ஆரோக்கிய சிந்தனை கொண்ட மக்கள் மத்தியில் வினா எழுகிறது,
கஞ்சா விஷயத்தில் காவலர்கள் தவறு செய்தால் அவர்களை இடமாற்றம் செய்கிறார்கள், பணி மாற்றம் செய்கிறார்கள், இல்லை என்றால் காத்திருப்பு பட்டியலில் வைக்கிறார்கள் அவ்வளவுதான்.
இதையே இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்க போகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
மாநில அளவில் சோதனை நடத்தக்கூடிய அதிகாரமிக்க சிறப்புப் படைகளை உருவாக்கி, திடீர் திடீரென சோதனை நடத்தி எங்கெல்லாம் கஞ்சா பிடிபடுகிறதோ அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய காவலரிடம் உயர்மட்ட அளவிலான அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்த வேண்டும்.
கஞ்சா புழக்கத்துக்கு உடந்தையாக இருக்கும் அத்தனை பேர் மீதும் வழக்குப் பதிவு, கைது என குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கினால் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு காண முடியும்.
ஒரே வரியில் சொன்னால் இளைய சமுதாயம் மோசமான பாதையில் பயணிப்பதை எல்லோரும் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வேடிக்கை பார்ப்பதில் மாநில அரசாங்கம் முன்னணியில் இருக்கிறது என்பதை ஊடகங்கள் கூற மறுக்கிறது காரணம் விளம்பர வருவாய் மட்டுமே.
இதை சொன்னால் ஏதோ திட்டமிட்டு ஆட்சிக்கு எதிராய் பேசுவதாக ஒரு தரப்பினர் அரசியல் செய்யலாம்.
எதிர்கால ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற உங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் உங்கள் குடும்பத்து பெண்களுக்கும் சேர்த்து தான் பேசிக் கொண்டிருக்கிறது இதழ்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
இரும்பு கரம் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை சொல்லி ஆயிற்று."அந்த ரீல்ஸ் சிறுவர்கள் போதையில் இல்லை.. விரோதம் இருந்தால் பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்ததாய் கூறுகிறார்கள்" அதிகார விஞ்ஞானிகள் ..
நாம் புரிந்து கொள்வது இங்கு கடினம்.
ஆம்,போதையில் இருந்து குத்தினால் தான் ரத்தம் வரும். மற்றபடி வீட்டிலிருந்து எடுத்து வந்து கத்தியால் எந்த ஆபத்தும் இல்லை..
நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட்ட அவர்களுக்கு சர்வதேச அளவில் எக்கச்சக்கமான அச்சுறுத்தல்..
நம்ம காதுகள் பாவமில்லையா..
இன்னொரு பக்கம் பப்ளிக் முன்னாடி கோவில்களிலேயே ஒருவன் தலைமைக் காவலருக்கு எதிராவே கத்தியைக் காட்டுகிறான்.
இது பத்தி யாரும் கேட்டா, "ஆப்பிள் வெச்சிருந்தாங்க அதை வெட்டி தர்றதுக்காக கத்தி இதோ இருக்குன்னு காட்டினாரு" அப்படின்னு சொல்லுவார்கள் போல..
அங்கங்க அவனவன் பப்ளிக் மத்தியில் கத்தியைத் தூக்குற அளவுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்ததுங்ற கேள்விக்கு மட்டும் பதிலே இப்போது வராது.பசங்கள்ல நாசமான வகை உருவாவறதுக்கு..
நம்அறிவுக்குத் தெரிஞ்சு எத்தனையோ காரணங்கள்..
முதல்ல ஒத்த புள்ளைய பெத்துட்டு அதுக்கு ஏகப்பட்ட செல்லம் குடுக்குறது..
கேட்டதை வாங்கி குடுக்கலைன்னா பையன் எதனா பண்ணிப்பானோ? எங்கேயாவது போயிடுவானோ?
எல்லா நாச வேலைகளுக்கும் காம்ப்ரமைஸ் செய்வது
பள்ளி பசங்க மேல கை வைக்க முடியாத அளவுக்கு வாத்தியாருங்களுக்கு ஏகப்பட்ட கிடுக்குப்படி.. இதுல ஜாதி சங்கங்க வேற குறுக்குல பூந்து தலை விரிச்சாடும்.
"பாடம் நடத்துறோம் படிச்சா படிங்க, புத்திமதி சொல்றோம் கேட்டா கேளுங்க, இல்ல எக்கேடு கெட்டாவது போங்க" - டீச்சர்ஸ் இந்த முடிவுக்கு வந்து பல வருஷமாகுது.
அப்புறம் இருக்கவே இருக்க மாஸ் ஹீரோக்கள் சினிமா..
ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிர்வினை என்னவென்றே தெரியாத முட்டாள்கள். ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கலைன்னா நீ செத்துப் போயிடுவே.. உனக்கெல்லாம் வாழவே தகுதி இல்லைன்ற லெவலுக்கு கொண்டு வந்துட்ட பொறம் போக்குங்க சில உண்டு..
எதுக்கெடுத்தாலும் இப்போ ஒரு புரியாத வார்த்தை கெத்து.. நம்மையெல்லாம் யாராலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு தலைமீது ஏற்றி வைக்கப்பட்ட திமிரு..
இதுக்கு மேல மூளை கெட்ட பொண்ணுங்க. பெரும்பாலான அரைவேக்காடுகளுக்கு நல்ல பசங்கள பிடிக்கவே பிடிக்காது. அவன் தயிர் சோறு, சாம்பார் சாதம், காலி சிலிண்டர்..
தூங்கி எழுந்து வெளியே போய் ராத்திரி வீட்டுக்கு வந்து படுக்குற வரைக்கும் ஊரு முழுக்க காரி துப்புறவனைத்தான் பிடிக்கும்..
இதெல்லாம் சிறு உதாரணம் தான். முக்கிய விபரங்கள் இன்னும் நிறைய இருக்கு. அது பேசும் களம் இதுவல்ல
அப்புறம் முக்கிய விஷயம்.
இந்த பதிவையே சில வீடுகளில் இருக்கும் சின்னஞசிறு நபர்கள் புறக்கணித்து விடலாம்
தாராளமா சொல்லுங்க.."அரசாங்க கடனுக்கும் மக்களுக்கும் சம்பந்தமே இல்லை..எனப் பேசும் ."
நாட்டில பொருளாதார புலிகள் பல உண்டு ன் தொல்லை தாங்க முடியவில்லை அதற்கு அடுத்த தேர்தல் வர இன்னும் 100 நாட்கள் கூட இல்லை என்பதே பதில்.













கருத்துகள்