முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருத்தணி ரயிலில் 'ரீல்ஸ்' இளைஞர்கள் மற்றொரு இளைஞனை வெட்டிய கொடூரம்

திருத்தணி ரயிலில் 'ரீல்ஸ்' இளைஞர்கள் மற்றொரு இளைஞனை வெ..ட்டிய கொடூரம்.


தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிய மாநிலம். அதில் மாற்றுக் கருத்து யாருக்குமில்லை

அண்மை காலமாக நடக்கும் சம்பவங்களை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் முடிவு விரைவில் வந்து விடும் போலிருக்கிறது..

குற்றம் செய்து பிடிபடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், காவல்துறையினரையும் நீதித் துறையையும் இளக்காரமாக நினைக்கிறார்கள், கேலியாகப் பேசுகிறார்கள்.

அவர்களிடம் எதைப் பற்றியுமே பயமில்லை. 

"அடிக்கப் போறியா எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ. நீ அடிச்சு நான் செத்து போயிட்டா எனக்கு ஒன்னுமில்ல. நீ தான் பின்னாடி மாட்டிகிட்டு சாவே" என்று சாதாரண மாகக் சொல்கிறார்கள்..

"இந்தக் குற்றத்தைச் செய்தால், இங்கே சரணடைய வேண்டும். இத்தனை நாளில் ஜாமீன் கிடைத்துவிடும், சட்டம் நம்மைத் தண்டிக்காது சாட்சிகள் சொல்ல யாரும் வரமாட்டார்கள் இந்த அளவுக்குத் தான் தண்டிக்க முடியும், அதுக்கே கூட ஏகப்பட்ட வருஷங்களாகும்" போன்றவை  தெள்ளத்தெளிவாக அடித்தளத்தில் வாழும் இளைய தலைமுறையினர் மண்டையில் கடந்த பத்து ஆண்டுகளில் தவறான போதனை ஏறி இருக்கிறது . 

நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலையில் தாறுமாறாக இரண்டு சக்கர வாகனம் ஓட்டிக் கொண்டு வந்த ஐந்து இளைஞர்களை அங்கே தேனீர் குடிக்க வந்த இரண்டு பேர்  தட்டி கேட்டிருக்கிறார்கள்.

உடனே அந்த இளைஞர்கள் இரண்டு பேரையும் தாக்கிவிட்டு அவர்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்கள். நம்மை யார் என்ன செய்து விடப் போகிறார்கள் என்று ஒரு ஆணவமான மனநிலை தானே இது..

இதே மனநிலை தான் பள்ளியில் படிக்கும் சில வீட்டிற்கு அடங்காத மாணவர்களுக்கும தலை தூக்கி வருகிறது.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்து பயந்து நடுங்க வேண்டிய நிலை. எதை தட்டிக் கேட்கப் போனாலும் மடை மாற்றப்பட்டு ஆசிரியர்கள் மீது பழி வந்து சேர்கிறது.  

ஒரு குற்றத்தைச் செய்தால் அதற்குண்டான பின் விளைவுகள் என்னென்ன? நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பமும் எப்படியெல்லாம் பாதிக்கப்படும்? சமூகத்தில் உங்கள் குடும்பம் எப்படிப்பட்ட அவமானங்களைச் சந்திக்கும் என்பதையெல்லாம் பாடத்திட்டங்களையும் தாண்டி  மாணவ மாணவியருக்கு தனியாய் நடைமுறை  பாடமாகவே நடத்தியாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.  கூட்டுக்குடும்ப வாழ்வியல் இருந்தவரை இதபோனற தவறுகள் நடக்கவில்லை, புத்தி சொல்ல பெரிய மனிதர்கள் இருந்தனர் இந்த நிலை மாறிய பின் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் நிலை, 

எல்லாவற்றிற்கும் காரணம் போதை மற்றும் கஞ்சா பழக்கம். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் அவ்வளவு அதிகமாக இருக்கிறது என்று பலரும் வெளிப்படையாகவே பேசுகின்றனர்.

மதுக்கடைகள் விற்பனை மட்டுமே அரசின் இலக்கு 

ஒரு சாவுக்கு போனா குடிச்சிட்டு ஆடுறவன் பத்து பேருன்னா கஞ்சா அடிச்சுட்டு ஆடுறவன் ஆறு பேரு இருக்கான். அவர்களைத் தட்டி கேட்டால் அங்கேயே இன்னொரு பிணம் விழும் போல. 

கஞ்சா இளைஞர்கள் எதிர்ப்பட்டால் ஆண்களே அஞ்சி ஒதுங்குகிறார்கள் என்றால் பெண்கள் மற்றும் சிறுமிகள் நிலை என்ன என்று யோசித்துப் பாருங்கள் 

காவல்துறை நினைத்தால் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க முடியும். ஆனால் அதில் உள்ள சிலர் கேவலம்  மாமுலுக்காக கஞ்சா பார்ட்டிகளை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 

கஞ்சா புழக்கம் பற்றி புகார் சொல்லப்போனால், புகார் சொல்பவர்களையே ஆபத்தில் சிக்க வைத்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை.

இந்த கஞ்சா போதை கும்பலிடம் சிக்கியுள்ள பொறுக்கிகள்  மத்தியில் தான் தங்களுடைய பிள்ளைகளும் வளர்கிறார்கள் என்பதை, மாமுல் வாங்கும் காவல்துறையினர் மறந்து விடுகிறார்கள். 

மாமூல் வாங்கி வளர்த்து விடும் அதே கஞ்சா கும்பலால் என்றைக்காவது ஒரு நாள் தங்கள் வீட்டு பெண்களுக்கும் ஆபத்து வரலாம் என்பதையும் அவர்கள் உணர்வதில்லை.

'மாமுல்' காவல்துறையினர் தான் அப்படி என்றால், தமிழ்நாடு  அரசாங்கம் என்ன செய்கிறது? என்பது ஆரோக்கிய சிந்தனை கொண்ட மக்கள் மத்தியில் வினா எழுகிறது, 

கஞ்சா விஷயத்தில் காவலர்கள் தவறு செய்தால் அவர்களை இடமாற்றம் செய்கிறார்கள், பணி மாற்றம் செய்கிறார்கள், இல்லை என்றால் காத்திருப்பு பட்டியலில் வைக்கிறார்கள் அவ்வளவுதான்.

இதையே இன்னும் எவ்வளவு காலத்துக்கு தான் ஆட்சியாளர்கள் செய்து கொண்டிருக்க போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. 

மாநில அளவில் சோதனை நடத்தக்கூடிய அதிகாரமிக்க சிறப்புப் படைகளை உருவாக்கி, திடீர் திடீரென சோதனை நடத்தி  எங்கெல்லாம் கஞ்சா பிடிபடுகிறதோ அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய  காவலரிடம் உயர்மட்ட அளவிலான அலுவலர்கள் நேரில் விசாரணை நடத்த வேண்டும்.

கஞ்சா புழக்கத்துக்கு உடந்தையாக இருக்கும் அத்தனை பேர் மீதும் வழக்குப் பதிவு, கைது என குற்றவியல் நடவடிக்கைக்கு உள்ளாக்கினால் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வு காண முடியும். 

ஒரே வரியில் சொன்னால் இளைய சமுதாயம் மோசமான பாதையில் பயணிப்பதை எல்லோரும் சேர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். வேடிக்கை பார்ப்பதில் மாநில  அரசாங்கம் முன்னணியில் இருக்கிறது என்பதை ஊடகங்கள் கூற மறுக்கிறது காரணம் விளம்பர வருவாய் மட்டுமே.

இதை சொன்னால் ஏதோ திட்டமிட்டு ஆட்சிக்கு எதிராய் பேசுவதாக ஒரு தரப்பினர் அரசியல் செய்யலாம்.

எதிர்கால ஆபத்துகளில் இருந்து காப்பாற்ற உங்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்கும் உங்கள் குடும்பத்து பெண்களுக்கும் சேர்த்து தான் பேசிக் கொண்டிருக்கிறது இதழ்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் 

இரும்பு கரம் கரம் கொண்டு ஒடுக்குவோம் என்று சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை சொல்லி ஆயிற்று."அந்த ரீல்ஸ் சிறுவர்கள் போதையில் இல்லை.. விரோதம் இருந்தால் பாதுகாப்புக்காக கத்தி வைத்திருந்ததாய் கூறுகிறார்கள்" அதிகார விஞ்ஞானிகள் ..


நாம் புரிந்து கொள்வது இங்கு கடினம்.

ஆம்,போதையில் இருந்து குத்தினால் தான் ரத்தம் வரும். மற்றபடி வீட்டிலிருந்து எடுத்து வந்து கத்தியால் எந்த ஆபத்தும் இல்லை..

நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட்ட அவர்களுக்கு சர்வதேச அளவில் எக்கச்சக்கமான அச்சுறுத்தல்..

நம்ம காதுகள் பாவமில்லையா..

இன்னொரு பக்கம் பப்ளிக் முன்னாடி கோவில்களிலேயே ஒருவன் தலைமைக் காவலருக்கு எதிராவே கத்தியைக் காட்டுகிறான்.

இது பத்தி யாரும் கேட்டா, "ஆப்பிள் வெச்சிருந்தாங்க அதை வெட்டி தர்றதுக்காக கத்தி இதோ இருக்குன்னு காட்டினாரு" அப்படின்னு சொல்லுவார்கள் போல..

அங்கங்க அவனவன் பப்ளிக் மத்தியில் கத்தியைத் தூக்குற அளவுக்கு எங்கிருந்து இந்த தைரியம் வந்ததுங்ற கேள்விக்கு மட்டும் பதிலே இப்போது வராது.பசங்கள்ல நாசமான வகை உருவாவறதுக்கு..

நம்அறிவுக்குத்  தெரிஞ்சு எத்தனையோ காரணங்கள்..

முதல்ல ஒத்த புள்ளைய பெத்துட்டு அதுக்கு ஏகப்பட்ட செல்லம் குடுக்குறது.. 

கேட்டதை வாங்கி குடுக்கலைன்னா பையன் எதனா பண்ணிப்பானோ? எங்கேயாவது போயிடுவானோ?

எல்லா நாச வேலைகளுக்கும் காம்ப்ரமைஸ் செய்வது

பள்ளி பசங்க மேல கை வைக்க முடியாத அளவுக்கு வாத்தியாருங்களுக்கு ஏகப்பட்ட கிடுக்குப்படி.. இதுல ஜாதி சங்கங்க வேற குறுக்குல பூந்து தலை விரிச்சாடும்.

"பாடம் நடத்துறோம் படிச்சா படிங்க, புத்திமதி சொல்றோம் கேட்டா கேளுங்க, இல்ல எக்கேடு கெட்டாவது போங்க" - டீச்சர்ஸ் இந்த முடிவுக்கு வந்து பல வருஷமாகுது.

அப்புறம் இருக்கவே இருக்க மாஸ் ஹீரோக்கள் சினிமா..  

ஒவ்வொரு விஷயத்திற்கும் எதிர்வினை என்னவென்றே தெரியாத முட்டாள்கள். ஃபர்ஸ்ட் ஃபர்ஸ்ட் ஷோ பார்க்கலைன்னா  நீ செத்துப் போயிடுவே.. உனக்கெல்லாம் வாழவே தகுதி இல்லைன்ற லெவலுக்கு கொண்டு வந்துட்ட பொறம் போக்குங்க சில உண்டு.. 


எதுக்கெடுத்தாலும் இப்போ ஒரு புரியாத வார்த்தை கெத்து.. நம்மையெல்லாம் யாராலும் ஒன்னும் பண்ண முடியாதுன்னு தலைமீது ஏற்றி வைக்கப்பட்ட திமிரு..

இதுக்கு மேல மூளை கெட்ட பொண்ணுங்க. பெரும்பாலான  அரைவேக்காடுகளுக்கு நல்ல பசங்கள பிடிக்கவே பிடிக்காது. அவன் தயிர் சோறு, சாம்பார் சாதம், காலி சிலிண்டர்..

தூங்கி எழுந்து வெளியே போய் ராத்திரி வீட்டுக்கு வந்து படுக்குற வரைக்கும் ஊரு முழுக்க காரி துப்புறவனைத்தான் பிடிக்கும்..

இதெல்லாம் சிறு உதாரணம் தான். முக்கிய விபரங்கள் இன்னும் நிறைய இருக்கு. அது பேசும் களம் இதுவல்ல 

அப்புறம் முக்கிய விஷயம். 

இந்த பதிவையே சில வீடுகளில் இருக்கும் சின்னஞசிறு நபர்கள் புறக்கணித்து விடலாம்

 தாராளமா சொல்லுங்க.."அரசாங்க கடனுக்கும் மக்களுக்கும் சம்பந்தமே இல்லை..எனப் பேசும் ."

நாட்டில பொருளாதார புலிகள் பல உண்டு ன் தொல்லை தாங்க முடியவில்லை அதற்கு அடுத்த தேர்தல் வர இன்னும் 100 நாட்கள் கூட இல்லை என்பதே பதில்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...