முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிந்து பக்தர்கள் vs அரசியல் கடவுள் மறுப்பாளர்கள் பரங்குன்றத்தில் பராக்கிரமம்

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம்




சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் மாதம்.25-இம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் மாதம்.4-ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.தினமும் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் காலை, மாலையில் ஊர்வவம் புறப்பாடு நடைபெற்றது. காலையில் தங்க சப்பரம், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் 9 நாட்களும் எழுந்தருளினர். அதனையொட்டி எட்டாம் நாளான நேற்று பட்டாபிஷேகம் நடைபெற்றது. முக்கிய விழாவான தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலையில் சிறிய வைரத் தேரோட்டம் நடைபெற்றது. மலை உச்சியில் தீபம் ஏற்ற, CISF வீரர்களை கூட்டிச் செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு





மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம்  ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகைத் தீபத் திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று டிசம்பர் மாதம்.3 ஆம் தேதி மலையில் உச்சிப்பிள்ளையார் கோவில் முன்புள்ள தீபத்தூணில் கடந்த வருடம் போல மாலை 6.05 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் பக்தர்கள் திரண்டு காவல்துறை ஏற்படுத்தி வைத்திருந்த தற்காலிகத் தடைகளை உடைத்து கோவில் நோக்கிப் புறப்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது.









திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றும் உயர் நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாத நிலையில், சிஐஎஸ்எப் காவல் பாதுகாப்புடன் மனுதாரர்களும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.






அதனையொட்டி நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குரிய நெய், காடாத்துணி போன்றவற்றை பிற்பகல் 3.30 மணியளவில் கோவில் அறநிலையத்துறை பணியாளர்கள் கொண்டு சென்றனர். இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன் தலைமையில் அக்கட்சியினர் திரண்டு மாலை 5 மணியளவில் 16 கால் மண்டபம் முன்பு அமர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காவல்துறை பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மாலையில் 6 மணியளவில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பாலதீபம் ஏற்றப்பட்டது. அதன் பின்பு உச்சிப்பிள்ளையார் கோவில் முன்புள்ள தீபத்தூணில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை. இதனால், ஹிந்து முன்னணியினர், பாரதிய ஜனதா கட்சியினர் திரண்டு கவ தடைகளை உடைத்து 16 காவல்துறை அமைத்திருந்த தற்காலிக தடையை உடைத்து மண்டபம் வரை முன்னேறினர். அங்கு 16 கால் மண்டபம் முன்பு காவலர்களுக்கும் ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் தடைகளை மீறி வீரவேல், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என கோஷங்கள் எழுப்பியவாறு கோவிலை நோக்கிச் சென்றனர். இதனால் சுமார் அரைமணிநேரம் பரபரப்பு கணப்பட்டது.

மாலை 6.30 மணியளவில் மாநகரக் காவல்துறை ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் கோவில் அலுவலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மலை உச்சியிலுள்ள கடந்த ஆண்டுகளில் ஏற்றிய வேறு தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சி எடுக்கப்பட்டது. நீதிமன்றம் சொன்ன இடத்தில் தீபம் ஏற்றாததால் ஆத்திரம்..! கோவிலின் கதவை உடைத்துக்கொண்டு ஆவேசமாக உள்ளே ஓடிச்சென்ற இந்து முன்னணியினர்.. பேரிகார்டு போட்டு தயாராகக் காத்திருந்த காவலருடன் கடும் வாக்குவாதம் செய்த பின் பேரிகார்டுகளை தூக்கி தூரமாகபா போட்டு திருப்பரங்குன்றம் மலைமீது ஏறிச்சென்றதால் பரபரப்பு நிலவியது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற, CISF வீரர்களை கூட்டிக் கொண்டு செல்ல மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவுதிருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில்.., 



நீதியரசர் G.R.சுவாமிநாதன் அவர்கள் வழங்கிய தீர்ப்பின் மீது HR&CE தொடர்ந்த மேல் முறையீடு மனுவினை நீதியரசர் G.ஜெயச்சந்திரன் அவர்கள் அமர்வு தள்ளுபடி செய்தது.

திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் அனுமதியளித்ததை தொடர்ந்து தீபம் ஏற்றுவதற்கான கொப்பரை மலை மீது எடுத்துச்செல்லப்பட்ட‌து.250 லிட்டர் நெய்,150 மீட்டர் காடா துணி பயன்படுத்தி தாமிர கொப்பரையில்  மகா தீபம் ஏற்றப்படும் என இது 12.00 hrs,03 December,2025 நிலவரம். ஆனால் நடந்த நிகழ்வு வேறு.  தற்போது 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த நிலையில் மக்கள் தீபம் எப்போது பழைய இடத்தில் நிகழும் எனக் காத்திருக்கும் நிலை 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...