ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி திருக்கோயில் " கடல் கிழக்கு தெற்கு கரைபெரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் - வடதிசையில் ஏனாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோனாட்டிற் கெல்லையெனச் சொல் என்றும் வெள்ளா றதுவடக்காம் மேற்குப் பெருவெளியாய் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் - உள்ளார ஆண்ட கடல் கிழக்காம் ஐப்பத் தறுகாதம் பாண்டிநாட்டெல்லைப் பதி" என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் இராமாயணத்தில் குறிப்பிடும் ஸ்தலம். இங்கு மார்கழித் திருவாதிரைப் பெருவிழாவில் எட்டாம் நாள் மார்கழி 16 ஆம் நாள் 31டிசம்பர் 2025 அன்று புதன்கிழமை மாலை வெள்ளிக் குதிரை வாகனத்தில் மதுரை பெருநன் மாநகர் தன்னில் குதிரை சேவகன் காட்சியு,ம் ஒன்பதாம் நாள் திருவிழா இன்று மார்கழி மாதம் 17 ஆங்கிலப் புதுவருடம் 01ஜனவரி 2026 வியாழக்கிழமை காலை மாணிக்கவாசகப் பெருமான் திருத்தேரில் பவனி காலை மணி 5.00க்கு மேல் 5.57 மணிக்குள் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் காலை 10.00 மணிக்கு தேர் வடம்பிடித்தல். இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள பெரிய தேர்கள் சிலவற்றில் ஒன்றாகும்....
RNI:TNTAM/2013/50347