பாஜகவின் மூத்த தலைவர் H.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர் H.ராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சென்னையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ”Tamil Nadu Summit” நிகழ்ச்சியை ஜனவரி 30-ஆம் தேதி நடத்தியதில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பேசும் போது, அரங்கில் அமர்ந்திருந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கை தட்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது அனைவர் கவனத்தைப் பெற்றது, திமுகவின் சேலம் பகுதி நிர்வாகி பரணீதரனுக்கும் எச்.ராஜாவுக்கும் கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்த போதே திடீரென எச்.ராஜா மயக்கமடைந்து கீழே சரிந்தார். அதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அதே நிகழ்வில் அரங்கிலிருந்த பாஜக முன்னால் தலைவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜாவின் உடல்நிலையைப் பரிசோதனை செய்து, “அதிக இரத்த அழுத்தத்தால்” மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறினார். அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.பின்னர் அங்கிருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எச். ராஜாவுக்கு “Stroke” ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அவருக்கு ”மூளையில் பாதிப்பு” ஏற்பட்டுள்ளதா? என்றும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகின்றனர்


கருத்துகள்