முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீதிபதிக்கு எதிராக புத்தகம் வெளியீடு பாஜக கண்டனம்

நீதிபதிக்கு எதிராக புத்தகம் வெளியீடு பாஜக கண்டனம். இது உண்மையெனில், அராஜகத்தின் உச்ச கட்டம்.


இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும். இதன் பதிப்பகத்தாரை, எழுத்தாளரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். முதலமைச்சர் துவங்கி வைக்கும் இந்த புத்தக கண்காட்சியில் நீதிபதியை அவதூறு செய்யும் நடவடிக்கையை முதல்வர் கண்டிக்க வேண்டும். கீழைக்காற்று பதிப்பகத்தை தடை செய்ய வேண்டும்.

எனவும் நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக கண்காட்சியில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்வாமிநாதன் அவர்களை விமர்சித்து ஒரு புத்தகத்தை வெளியிடப்போவதாக 'கீழைக்காற்று' என்ற பெயரில் கடை எண்களை குறிப்பிட்டு, அந்த பதிப்பகத்தின் அலைபேசி எண்ணையும் (892564××××) குறிப்பிட்டு  ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதிகளை தரக்குறைவாக விமர்சிக்கும் அந்தப் பதிப்பகத்தை தடை செய்வதோடு, அந்த விளம்பரத்தை வெளியிட்ட ரௌடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் துவங்கி வைப்பதாக சொல்லப்படுவதால், அரசியலமைப்பு சட்டத்தின் வழி நடந்து அந்த கருங்காலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும். என பாஜகவின் செய்தித் தொடர்பாளரும் மாநில துணைத்தலைவருமான நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். இந்தப் புத்தகம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும், நீதித்துறையின் நேர்மையைக் கேலி செய்து அவமதிப்பதாகவும், நீதி நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவும் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து, சென்னை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், மாநில உள்துறைச் செயலருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய மேற்கண்ட பதிப்பகம்பபாசி கேட்டுக்கொண்டதற்கு இணங்க சர்ச்சைக்குரிய அந்தப்புத்தகத்தைப் புத்தகக் காட்சியில் விற்பனைக்கு வைப்பதைக் கைவிடுவதாக கீழைக்காற்று பதிப்பகம் தெரிவித்துள்ளது.





அதுகுறித்த பதிவில் :-

“ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதியா? ஆர்.எஸ். எஸ். ரவுடியா?" என்ற தலைப்பில் திருப்பரங்குன்றம் பிரச்னை தொடர்பான ஒரு வெளியீடு கொண்டு வருவதாக சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்து இருந்தோம். அந்நூலின் முகப்பையும் எமது முகநூல் பக்கத்தில் விளம்பரப்படுத்தி இருந்தோம்.

அரசின் பல்வேறு துறைகளிலும் காவி பாசிஸ்டுகள் ஊடுருவி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இத்தகைய வெளியீடு வெளிவருவது குறித்து பலரும் ஆர்வம் காட்டினீர்கள். எப்பொழுது கிடைக்கும் இந்தப் புத்தகம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சிக்கும் வகையில் இருப்பதாகவும், நீதித்துறை நேர்மையைக் கேலி செய்து அவமதிப்பதாகவும், நீதி நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை சிதைப்பதாகவும் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து, சென்னை காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக உள்துறை செயலருக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.என்றும் விசாரித்துள்ளீர்கள்.

அதே நேரம், பாஜக சார்பில் எமது வெளியீடு குறித்து போலீசில் புகார் தந்துள்ளதாக தினசரி நாளேடு ஒன்று தனது பத்திரிக்கையிலும் இணைய பக்கத்திலும் எழுதியுள்ளது. நாராயணன் திருப்பதி உள்ளிட்ட சங்கி கும்பல் பதிப்பகத்தாரை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் என்றும் விஷத்தை கக்கி வருகின்றனர்.

இதன் மூலம் புத்தகத்தின் தலைப்பும், அதன் முகப்பும் சங்கிகளை கதற வைத்துள்ளது என்ற வகையில் எமக்கு மகிழ்ச்சியே. அதே நேரம் காவி பாசிஸ்ட்டுகள் கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு மட்டும் பழக்கப்பட்டவர்கள் அல்ல. இந்த வெளியீட்டை நடக்கவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்க விடக்கூடாது என்ற வகையில் கண்காட்சியை நடத்தும் பபாசி நிறுவனத்திற்கு அழுத்தம் தந்துள்ளனர்.பபாசி நிர்வாகமும் சூழலை புரிந்து கொண்டு ஒரு வெளியீட்டிற்காக ஒட்டுமொத்த புத்தகக் கண்காட்சியை சிக்கலுக்கு உள்ளாகி விடக்கூடாது. நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் பங்குபெறும் இந்த புத்தக கண்காட்சி தடைபட்டால் அது அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும் என்ற நோக்கத்தில் எமது பதிப்பகத்திடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் குறித்த புதிய வெளியீட்டை தற்போது தொடங்க உள்ள புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. முற்போக்காளர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும், இடதுசாரி அமைப்புகளுக்கும் பாசிசத்தின் அச்சுறுத்தல்கள் புதியன அல்ல. அதேநேரம் மாற்றுக் கருத்து இருப்பினும், ஒரு தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய கடமை அதன் உறுப்பினர்களுக்கு உண்டு. பபாசி உறுப்பினர் என்ற முறையில் நாங்கள் பபாசி நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று இந்த புத்தக கண்காட்சியில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்த எமது வெளியீட்டை விற்பனைக்கு வைப்பதை கைவிடுகிறோம்.

வாசகர்கள் விற்பனைக்கு வரும் நூல்களில் எதை தேர்ந்தெடுத்து வாங்கி படிப்பது என்பது அவர்களின் சுதந்திரம். இதைத்தான் பதிப்பகங்கள் விற்க வேண்டும் என்றோ, இதைத்தான் வாசகர்கள் வாங்கி வாசிக்க வேண்டும் என்றோ காவி பாசிசம் உத்தரவிடுகிறது. இப்படி எமது கருத்து சுதந்திரத்தை பறிப்பது தவறு என்பதை வாசகர்கள் முன்னும் வைக்கிறோம்.

கார்ப்பரேட் காவி பாசிசத்தின் இத்தகைய அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்களை உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் எதிர் கொள்ள உள்ளோம். தொடர்ந்து முற்போக்கு நூல்களுக்கான முகவரியாக கார்ப்பரேட் காவி பாசிச எதிர்ப்பில் களமாட உறுதியளிக்கிறோம்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...