முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் திமுக இரண்டாம் சாய்ஸ் தவெக ஆகவே தேமுதிக இலவமரத்துக் கிளி

காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் திமுக இரண்டாம் சாய்ஸ் தவெக ஆகவே தேமுதிக இலவம்பஞ்சு மரத்து கிளி நிலையில் காத்திருக்கக் காரணம் அதுவே.         





 தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியது:





"தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  41 பேர் நேற்று கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது கருத்துக்களைத் தலைமைக்குத் தெரிவிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி 30 நிமிஷம் தமிழ்நாடு தலைவர்களுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்குத் தேர்தல் முடிவுகள் எடுக்க ஏதுவாகக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைய விவாதங்களே எதிர்கால முடிவுகளுக்கான வழிகாட்டுதலாக அமையும்." என



காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்தார் 17 ஜனவரி 2026 ல் டெல்லி இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனை க் கூட்டத்தில் பங்கேற்ற போது சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றே மாதங்கள் தான். "தி.மு.கவே கதி" என மல்லிகார்ஜுன கார்கே, ப.சிதம்பரம், செல்வம் பெருந்தகை ஒரு பக்கமும்... "ஏன் த.வெ.க வுடன் கைகோக்கக் கூடாது?" எனக் கே.சி. வேணுகோபால், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தரப்பு கருதினாலும் அந்த அரங்கில் இரகசிய வாக்கெடுப்புக்கு நடத்தப்படவில்லை, கூட்டணியை முடிவு செய்து விட்டுத்தான் கூடடமே நடக்கிறதோ என எணணும் படி தான நிகழ்வுகள் இருந்ததாகப பேசப்பட இந்தக் குழப்பங்களுக்கு நடுவே அமைக்கப்பட்ட ஐவர் குழு, "70 தொகுதிகள். ஆட்சியில் பங்கு!" என தவெகவைக் காடடி திமுகவின் முதல்வர் ஸ்டாலினிடம் தூதுவிட்டது. இதையடுத்துத்தான் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்பதற்கு அகில இந்திய தலைமை முடிவு செய்தது. அதன்படி நேற்று மாலை டெல்லி இந்திரா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், எம்.பி, எம்.எல்.ஏ-க்கள், துணை அமைப்பின் தலைவர்கள் கலந்து கொணடார்கள். அவர்கள் தரும் பதிலையடுத்து ராகுல் கூட்டணி குறித்த இறுதி முடிவை எடுப்பார். இதற்கிடையில் த.வெ.க வுடன் செல்லும் முடிவை அகில இந்திய தலைமை எடுத்தால் தனது பதவியை மாநில தலைவர் செல்வம் பெருந்தகை ராஜினாமா செய்யக்கூடும்" என்று எதிர்பார்ப்புகள் இருத்தாலும் தேர்தல் செலவுக்கு  பணமும், அதிக சீட்டுககளும்  பெறும் தந்திரம் தான்  நேற்று நடந்த நிகழ்வு,






இப்படியான நிலையில் காங்கிரஸ் கட்சிக் கூடாரம், பரபரப்புடனே காணப்படுகிறது. இநத நிலையில்  தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டணியைப் பற்றிய விவாதத்தை பொதுவெளியில் பேசக் கூடாது. சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிட கூடாது. தலைமை எடுக்கும் முடிவுகளை மாநில காங்கிரஸ் கமிட்டி கட்டுப்பட வேண்டும்.கட்சி கொள்கையும், தமிழ்நாட்டின் மக்களின் நலனும் முன் வைத்துப், அனைத்து தலைவர்களுக்கும் ஒழுங்கு கடைபிடித்து, சமூக ஊடகங்களில் மற்றும் பொதுவெளியில் கற்பனைகள், கருத்து பரப்பல்களை தவிர்க்க வேண்டுமென்பதன் மீது கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.புதுச்சேரி தொடர்பான தேர்தல் விவகாரங்களையும் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்தனர். புதுச்சேரி PCC தலைவர்கள், 21ஆம் தேதி முதல் முழு புதுச்சேரி முழுவதும் பெரிய பேரணி (பயணப்பயணம்) தொடங்கவுள்ளதாக தெரிவித்தனர். அதில் தலைமைக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...