முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொழிலாளர்களுக்கான நிதியை எவரும் முறைகேடு செய்ய முடியாது: மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் உறுதி

வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் சட்டம் தற்சார்பு கிராமங்களுக்கு அடித்தளம் அமைக்கிறது: ஈரோட்டில் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுடனான கலந்துரையாடலில் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பேச்சு


தொழிலாளர்களுக்கான நிதியை எவரும் முறைகேடு செய்ய முடியாது: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் உறுதி

ஈரோட்டில் மஞ்சள் தரப்பரிசோதனை ஆய்வகம் அமைக்க இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICAR) உத்தரவு

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், ஈரோட்டில் விவசாயத் தொழிலாளர்களிடம் பேசுகையில், ‘விக்சித் பாரத் – ஜி ராம் ஜி’ (Viksit Bharat – G Ram G) சட்டம் தற்சார்பு கிராமங்களை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் என்று தெரிவித்தார். இந்த லட்சியத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களையும் அமைச்சர் விளக்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்தவும், அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தவும், கிராமங்களில் தற்சார்பு நிலையை ஊக்குவிக்கவும் இச்சட்டம் ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாகும் என்று அவர் கூறினார். பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே வளர்ச்சியடைந்த மற்றும் வளமான கிராமங்கள் என்ற இலக்கை அடைய முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.


முந்தைய திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) 100 நாட்கள் வேலை உத்தரவாதத்தை வழங்கியது, ஆனால் பல இடங்களில் வேலை சரியான நேரத்தில் கிடைக்கவில்லை அல்லது ஊதியம் உடனுக்குடன் வழங்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் கூறினார். இது ஒரு கவலைக்குரிய விஷயம் என்று தெரிவித்த அவர், இத்தகைய குறைபாடுகளைக் களையவும், ஊழலை ஒழிக்கவும், அரசு புதிய 'விக்சித் பாரத் – ஜி ராம் ஜி' சட்டத்தின் மூலம் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது என்றார்.

புதிய சட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புக்கான உறுதி 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வேலை வழங்கப்படாவிட்டால், தொழிலாளர்கள் வேலையின்மை உதவித்தொகை பெற தகுதியுடையவர்கள் ஆவர். அதேபோல், ஊதியம் வழங்குவதில் 15 நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், அதற்கு வட்டியும் வழங்கப்படும். களப்பணியாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்யவும், அமைப்பு முறையை மேம்படுத்த நிர்வாகச் செலவுகள் 6 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக திரு சவுகான் கூறினார்.


புதிய சட்டத்தின் கீழ் கிராம சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், தங்கள் கிராமங்களில் என்னென்ன வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை கிராம சபைகளே இனி தீர்மானிக்கும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். வளர்ச்சி தொடர்பான முடிவுகள் இனி சென்னையில் அல்லது டெல்லியில் எடுக்கப்படாது, அந்தந்த கிராமங்களிலேயே எடுக்கப்படும் என்பதை திரு சவுகான் தெளிவுபடுத்தினார்.

இத்திட்டம் குறித்து சிலர் திட்டமிட்டு தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகக் குறிப்பிட்ட அவர், தொழிலாளர்களுக்கான ஊதியம் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், ஊழலுக்கு இடமில்லாமல் செய்யவும் பிரதமர் திரு நரேந்திர மோடி இத்திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார் என்றார்.

அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஈரோட்டில் உள்ள புகழ்பெற்ற மஞ்சள் சந்தையைப் பார்வையிட்டு, மஞ்சள் உற்பத்தி செய்யும் விவசாயிகள் மற்றும் வணிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது 'மஞ்சள் மாநகரம்' என்று அழைக்கப்படும் ஈரோட்டில் மஞ்சள் தரப்பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு, இது தொடர்பாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ICAR) தேவையான உத்தரவுகளையும் பிறப்பித்தார். இந்த வசதி தரப்பரிசோதனை, சான்றளிப்பு மற்றும் மஞ்சளைச் சிறப்பாக சந்தைப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஈரோட்டில் மஞ்சள் வாரியத்தின் (Turmeric Board) மண்டல அலுவலகத்தை நிறுவவும் மத்திய அமைச்சர் உறுதி அளித்தார். இது வர்த்தக அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டாலும், வேளாண் அமைச்சர் என்ற முறையில் இதற்கான முன்னெடுப்புகளை தனிப்பட்ட முறையில் மேற்கொள்வதாக அவர் கூறினார். இதன் மூலம் மஞ்சள் விவசாயிகளுக்கு கொள்கை ரீதியான ஆதரவு, மேம்பட்ட சந்தை அணுகல் மற்றும் புதிய ஏற்றுமதி வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் மேலும் கூறினார்.

ஈரோடு பகுதியில் குளிர்சாதனக் கிடங்கு வசதிகளின் அவசியம் மிகவும் முக்கியமானது என்று திரு சவுகான் குறிப்பிட்டார். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் குளிர்சாதனக் கிடங்குகளை நிறுவ முடியும் என்றும், இதற்கு ராஷ்டிரிய கிருஷி விகாஸ் திட்டத்தின் (RKVY) நிதியைப் பயன்படுத்துமாறு தமிழக அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மஞ்சள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண தில்லியில் கூட்டம் நடத்தப்படும் என்றார். தரமான விதைகளே விவசாயத்தின் அடிப்படை என்பதை வலியுறுத்திய அவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மூலம் விதை மேம்பாட்டின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

வேளாண் துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் ஆய்வு செய்தார். விவசாயப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகளைப் பார்வையிட்ட அவர், பொருட்களின் தரம் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருடன் உரையாடினார். திரு. சவுகான் 1,000-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகளுடன் கலந்துரையாடியதுடன், பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகளையும் சந்தித்தார். மேலும், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...