கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடியில் பட்டா பெயர் திருத்தம் செய்ய 10 000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது .
கரூர் மாவட்டம் குளித்தலை வடடம் பாப்பையம்பாடி கிராம விவசாயி சின்னத்துரை தனது விவசாய நிலத்தின் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக இணையவழி விண்ணப்பம் செய்திருந்தார். அவரிடம் அரவக்குறிச்சி பகுதி வடுவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார் பட்டா பெயர் திருத்தம் செய்வதற்காக 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி சின்னத்துரை கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தலின் பேரில், பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை அரசு சாட்சி முனனிலையில் சிவக்குமாரிடம் வழங்கிய போது
மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான குழுவினர் கிராம நிர்வாக அலுவலர் சிவகுமாரை பணம் பெற்ற கையுடன் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் .இந்த நிலையில் ஒரு கிராம நிர்வாக அலுவலரான அரசு பணியாளர் “ கடமையைச் செய்யாவிட்டால் அவருக்கு அபராதம்!” என உயர்நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு உள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு எண்: W.P.No.33528 of 2023 தீர்ப்பு நாள்: 30.11.2023 நீதியரசர் : P. வேல்முருகன் வழங்கியது
ஒரு நிலம் தொடர்பாக மனுதாரர் பட்டா திருத்தம் கோரி மனு அளித்தார். விற்பனைப் பத்திரத்தில் உள்ள விவரங்களுக்கும் பட்டாவில் உள்ள விவரங்களுக்கும் வேறுபாடு இருந்தது. 27.01.2022 அன்று முதலில் மனு கொடுக்கப்பட்டது. அதன்படி உட்பிரிவு நில அளவை கூட நடத்தப்பட்டது.
ஆனால்பட்டாவில் உள்ள பிழையை சரியாகத் திருத்தப்படவில்லை. மீண்டும் 18.04.2023 அன்று மனு கொடுக்கப்பட்டது. அதன்பின் தாசில்தார், 20.05.2023 அன்று கிராம நிர்வாக அலுவலருக்கு: விசாரணை நடத்தவும் தேவையான ஆவணங்களுடன் அறிக்கை தரவும் என உத்தரவிட்டார். ஆனால் கிராம நிர்வாக அலுவலர் அந்த உத்தரவைச் செயல்படுத்தவில்லை.
இந்த நிலையில் மனுதாரர், இந்திய அரசியலமைப்புச் சட்டம் Article 226 ன்படி உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதை விசாரணை செய்த நீதிமன்றம்
விற்பனைப் பத்திரமும் பட்டாவும் பொருந்தவில்லை.
தாசில்தார் உத்தரவு இருந்தும் கிராம நிர்வாக அலுவலர் விசாரணை நடத்தவில்லை. இது நிர்வாக அலட்சியம்.
அரசு அலுவலர் மற்றும் அதிகாரி அவரது மேல் அலுவலர் அல்லது மேலதிகாரி உத்தரவை பின்பற்றுவது கட்டாயமான கடமை. அதைச் செய்யாமல் இருப்பது சட்டபூர்வமான தவறு.
நீதிமன்ற உத்தரவு 20.05.2023 அன்று போடப்பட்டதை ஒரு வாரத்திற்குள் செயல்படுத்த வேண்டும் எனவும், மனுதாரருக்கு ரூபாய் 25,000 செலவுத்தொகையாக வழங்க வேண்டும்.
அந்தத் தொகை கிராம நிர்வாக அலுவலர் வாங்கும் தனிப்பட்ட சம்பளத்திலிருந்து வழங்கப்பட வேண்டும். என்று கூறுகிறது.
அரசு அலுவலர் அல்லது அதிகாரி அலட்சியம் செய்தால், அவருக்கு தனிப்பட்ட அபராதம் விதிக்கலாம்.
பொதுமக்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி தங்களது உரிமையைக் கேட்கலாம்.
Mandamus Writ மூலம் அலுவலர் அல்லது அதிகாரிகளை கடமையை செய்யும்படி மக்கள் கட்டாயப்படுத்தலாம்.
பொதுமக்கள் அரசு அலுவலகத்தில் மனு கொடுத்து நீண்ட நாட்களாக பதில் வரவில்லையா? கவலை வேண்டாம்
நீங்கள் மௌனம் காக்க வேண்டிய அவசியமில்லை. நீதிமன்றத்தை அணுகும் உரிமை உங்களுக்கு உள்ளது.
இந்தத் தீர்ப்பு ஒரு தெளிவான செய்தியைக் கூறும்
“அரசு அலுவலர் அல்லது அதிகாரி கடமையைச் செய்யாவிட்டால், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். என்பதே அதுவாகும். இதனால் ஊழல் ஒழியும்





கருத்துகள்