திமுகவின் தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்திக்கு மூன்றேகால் ஆண்டுகள் சிறை தண்டனை
திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதித்த எழும்பூர் நீதிமன்றம்
2023-ஆம் ஆண்டு ஆளுநர்-நடிகை குஷ்பூ பற்றி ஆபாசமாக, அவதூறாகப் பேசிய பேச்சுக்கு விசாரணை முடிவில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது .
பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு செய்வதென்றால் ஒரு மாத கால அவகாசம் என தீர்ப்பில் நீதிமன்றம் கூறியுள்ளது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மாநில ஆளுநர் குறித்து அவதூறான கருத்துத் தெரிவித்தல் உள்ளிட்ட புகாரில், திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகளும் 3 மாதமும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை கொடுங்கையூரில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைமைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி , தமிழ்நாடு ஆளுநர், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ்நாடு பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து ஆபாச வார்த்தைகளால் விமர்சித்த நிலையில்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கள் பங்கேற்ற மேடை நிகழ்ச்சியில் பேசிய சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசியதாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில்,
அது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜுவாலிடம் ஆளுநர் மாளிகை ராஜ் பவன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஆளுநரின் துணைச் செயலாளர் எஸ். பிரசன்ன ராமசாமி புகாரளித்தார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு அடங்கிய வீடியோவை இணைத்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ''ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக அவதூறாகவும், இழிவாகவும், மிரட்டக்கூடிய வகையிலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார். அவரது இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகிறது. இது சட்டப்பிரிவு 124-ன் கீழ் நடவடிக்கை எடுக்கக்கூடிய (குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோருக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான பிரிவு) குற்றம். இந்தப் பிரிவின் கீழும் பொருந்தக்கூடிய மற்ற பிரிவுகளின் கீழும் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டது,
அதேபோல், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு டிஜிபிக்கு பாஜக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தரப்பும் புகார் மனு அளித்திருந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார். திமுக கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இந்த நீக்கம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் தலைமை கழக பேச்சாளராவார் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு அதில் ஆபாசமாகப் பேசுவது, கலகத்தைத் துாண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர். பொய்வழக்கு என அவர் தரப்பு முறையீடு
இந்த வழக்கு, சென்னை 10 ஆவது பெருநகரக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் பி.ரேவதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், உயர் அலுவலர்களின் அழுத்தத்தின் பேரில் பொய் வழக்குப் போடப்பட்டுள்ளது. கலவரத்தை துாண்டும் வகையில் பேசியதாக, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகார் கொடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதை ஏற்கவில்லை, ஆகவேதிமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூன்று ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20,000 ரூபாய் அபராதம் பிடித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தண்டனை தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் எழும்பூர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.






















கருத்துகள்