புதுக்கோட்டையில் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு பட்டியல் மாணவிகள் தங்கிப் பயிலும் சமூக நீதி விடுதியில்
மாணவிகளுக்கு 3 வேளையும் பழைய சாதமும் ஊறுகாயும் தான் உணவாக வழங்கப்படுவதாகவும் . சாம்பார், ரசம், காரக் குழம்பு என எதுவுமே வழங்காமல் வெறும் ஊறுகாயை, சாதத்தில் பிசைந்து சாப்பிடும் நிலை ஏற்பட்டதைக் கண்டித்து தங்களுக்கு தட்டில் வழங்கப்பட்ட உணவுடன் மாணவிகள் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்குச் சென்றனர். அது போல் ஆதிதிராவிடர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் பிரவீனா மேரியும் நேரில் வந்தார்.
மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து விடுதி வார்டன் சுபேதாவிடம், வட்டாட்சியர் பிரவீனா மேரி கேட்ட போது சமைப்பதற்கு மளிகைப் பொருட்கள் வரவில்லை. அதனால் தேவையான உணவை அவர்களுக்கு வழங்க முடியவில்லை என்றதையடுத்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த பிரவீனா மேரி, விடுதி வார்டனைக் கடிந்து கொண்டார். "மளிகை பொருட்கள் வரவில்லை என்றால் சொல்ல மாட்டீர்களா, உங்கள் பிள்ளைகளாக இருந்தால் இப்படித்தான் ரோட்டில் உட்கார வைப்பீர்களா" என சரமாரியாக கேள்விகளை எழுப்பினார். ஆனால் அவர் பலமுறை தெரிவித்தும் வரவில்லை என்பதை மாணவிகள் தரப்பு கூறும் நிலை உள்ளதுபுதுக்கோட்டையில் பட்டியலின மாணவிகளுக்கு பழைய சோறுக்கு சொந்த செலவில் பச்சை மிளகாய் ஊறுகாய் வாங்கும் அவலம்! என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
இதுகுறித்து அறிக்கையில் கூறியதாவது: புதுக்கோட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டியல் சமூக நீதி விடுதிகளில் தங்கிப் படித்து வரும் மாணவிகளுக்கு கடந்த இரு மாதங்களாக மூன்று வேளையும் பழைய சோறும், ஊறுகாயும் மட்டுமே உணவாக வழங்கப்படுவதாகவும், தங்களுக்கு குறைந்தபட்சம் உண்ணத் தகுந்த உணவு வழங்க வேண்டுமெனக் கோரி தங்கியுள்ள மாணவிகள் கடந்த சில நாள்களாகப் போராட்டம் நடத்தி வருவதாகவும் வெளிவரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாகவும் பட்டியலின மாணவிகளுக்கு உணவு வழங்குவதற்குக் கூட துப்பில்லாத நிலையில் திமுக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பிறகு நிதி வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் அரிசி, எரிவாயு சிலிண்டர் ஆகியவை மட்டுமே இருப்பதால் அதைக் கொண்டு, கடந்த இரு மாதங்களாக வெறும் சோறு வடித்து தங்களது சொந்த செலவில் ஊறுகாய் அல்லது சிப்ஸ் வாங்கி மாணவர்களுக்கு வழங்குவதாகவும் விடுதிப் பணியாளர்கள் வார்டன் குற்றஞ்சாட்டியுள்ளனர். திமுக ஆட்சியில் அரசு நிர்வாகம் எந்த அளவுக்கு மோசமாக செயல்படுகிறது என்பதற்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இல்லை.
விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புரதச் சத்து, காய்கறிகள் என சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி மாதத்தில் நான்கு நாட்கள் அசைவ உணவு வழங்கப்பட வேண்டும். ஆனால், திமுக ஆட்சியில் இவை அனைத்தும் ஏட்டளவில் தான் உள்ளன. காய்கறிகள் வாங்கி பருப்புக் குழம்பு வைத்து மாணவ, மாணவியருக்கு பரிமாறுவதற்கு கூட நிதி ஒதுக்கப்படுவதில்லை. அதனால் தான் பட்டியலின மாணவிகளுக்கு வெறும் சோறு மட்டுமே வழங்கப்படும் இந்த அவலம் நிலவுகிறது.
புதுக்கோட்டை பட்டியல் சமூகநீதி விடுதியில் மட்டும் தான் இந்த நிலை என்றில்லை. ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் 1331 மாணவ, மாணவியர் விடுதிகளிலும் இதே நிலை தான் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்லூரி மாணவ, மாணவியருக்கு ஒரு மாதத்திற்கு உணவு வழங்குவதற்காக ரூபாய்.1500, அதாவது தினமும் ரூபாய்.50 மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதிலும் ஒரு குறிப்பிட்ட தொகை அதிகாரத்தில் இருப்பவர்களால் லஞ்சம் மூலம் சுரண்டப்படுகிறது. இந்தத் தொகை சுமாரான உணவு வழங்குவதற்கே போதுமானதல்ல எனக் கூறப்படும் நிலையில், அது கூட வழங்கப்படாவிட்டால் பட்டியலின மாணவ, மாணவியருக்கு எவ்வாறு உணவு வழங்க முடியும்? என்பதை விடியா அரசு தான் விளக்க வேண்டும். அதேபோல மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு நான்கு மாதங்களுக்கும் மேலாக உணவுப்படி வழங்கப்படவில்லை. அதனால், அதன் வார்டனாகப் பணியாற்றி வந்த இடைநிலை ஆசிரியர் மகேந்திரன் என்பவர் சொந்தக் காசை செலவழித்து மாணவர்களுக்கு உணவு வழங்கி வந்தார். நிலுவையில் உள்ள உணவுப்படியை வழங்கும்படி உரிய அலுவலர்களுக்கு கடிதம் எழுதியும் அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்யாததாலும், தம்மை வார்டன் பணியில் இருந்து மீண்டும் ஆசிரியர் பணிக்கே மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் கடந்த டிசம்பர் மாதம் அவர் தற்கொலை செய்து கொண்டார். ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் பணியாற்றும் பலரும் தங்களின் சொந்தப் பணத்தை செலவழித்து விட்டு, அது மீண்டும் கிடைக்குமா? என்ற மன உளைச்சலில் தான் உள்ளனர்.அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகள் சகிக்க முடியாதவையாக உள்ளன. "ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்" என்பதைப் போலத் தான் திமுக ஆட்சியும் உள்ளது. அவலத்தின் அடையாளமாகத் திகழும் இந்த ஆட்சியை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள். இவ்வாறு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ மாணவிகள் விடுதிகளுக்கு எல்லாம் சமூகநீதி விடுதி என பெயர் மாற்றியது. பேரு வச்சியே சோறு வச்சியா என்பது போலத் தான் உள்ளது ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதி.
புதுக்கோட்டை நகரில் ஆதிதிராவிட நலத்துறை சார்பில் இயங்கும் பெண்கள் சமூகநீதி விடுதியில் டிசம்பர் மாதத்திலிருந்து மூன்று வேளையும் சோறும் ரசமும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. மாணவர்கள் சொந்தக் காசில் ஊறுகாய் சிப்ஸ் பாக்கெட் வாங்கி உண்டு வந்துள்ளனர். உணவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி டிசம்பர் மாதத்தோடு காலியாகிவிட்டதாக விடுதிப் பணியாளர்கள் கூறுகிறார்கள்.
என்னதான் பெயர் சமூகநீதி விடுதி என்றிருந்தாலும் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்க்கு நிதி ஆதிதிராவிட நலத்துறையில் இருந்துதான் ஒதுக்கப்படும். 2023ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பப்படும் ஆதிதிராவிட பழங்குடி நல நிதிகள் குறித்த செய்திகள் வந்த வண்ணமுள்ளன. பயன்படுத்த ஆயிரம் தேவைகள் இங்குள்ள நிலையில் திருப்பி அனுப்பிக்கொண்டிருப்பது உண்மையில் ஆதிதிராவிட பழங்குடியினத் துறைகள் சரியாக செயல்படுகிறதா என பலருக்கு ஐயம் எழுகிறுது.
தொடர்ந்து ஒரே உணவைக் கொடுத்து வந்ததை கண்டித்து சில மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி அட்டவணைப்படி உணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
சமூகநீதி பெயர் மாற்றிய பின்பு புதுக்கோட்டை நகரில் ஆதிதிராவிட நலத்துறை ஆண்கள் விடுதியில் துணை முதல்வர் உணவு உண்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் தட்டிலிருந்த உணவுகள் எல்லாம் விடுதி வார அட்டவணையில் கூட உள்ளதா என்பதே சந்தேகம்தான் ஆனால் பழைய சாதம் ஊறுகாய் என்பது படிக்கும் மாணவ மாணவிகளை பாதிக்கும் அதை பட்டியல் சமூகத் தலைவர்கள் கண்டும் காணாமல் உள்ள நிலையில் மாணவர்கள் போராட்டம் குறித்து பாமக தலைவர் வினா எழுப்பியுள்ளது இங்கு குறிபிடத்தக்கது. "அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்
ஏதோ நானும் இருக்கிறேன், உருப்படியா படிக்கிறேன்.
யாருமில்ல நமக்கு நீ எப்படி இருப்பன்னு நினைக்கிறேன்
விடுதி சோறு புழுவுன்னு வீதியில கொட்டுறாங்க
நான் மட்டும் தம்பிக்கு ஊட்டுற நெனைப்பில் அழுதுகிட்டே தின்னுக்கிறேன்
அன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்......". சின்னப்பொன்னு பாடிய நாட்டுப்புறப் பாடலில் சில உண்மை உண்டு.








கருத்துகள்