மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர்.
மலேசியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமரின் தலைமைக்கும், இந்தியா-மலேசியா உறவை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கும் அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர்.
மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கும் இந்திய வம்சாவளித் தலைவர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர், இதில் (i) மலேசியாவில் தூதரகத்தைத் திறக்க இந்தியா எடுத்த முடிவு; (ii) மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் மைய அறிவிப்பு; (iii) திருவள்ளுவர் உதவித்தொகை வழங்கும் நிறுவனம்; (iv) மலேசியாவில் வசிக்கும் ஆறாவது தலைமுறை இந்திய வம்சாவளி மக்களுக்கு ஓசிஐ அட்டை நீட்டிப்பு (v) 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பில், மலேசிய இந்திய மாணவர்களின் நலனுக்கான இந்திய உதவித்தொகை அறக்கட்டளை நிதியம் ஆகிய முடிவுகள் அடங்கும்.
இந்திய தேசிய ராணுவத்தின் பாலக் சேனாவின் மூத்த வீரர் டத்தோ ஜெயராஜ் ராஜா ராவ், நேதாஜி நல அறக்கட்டளையின் தலைவர் திரு ராதாகிருஷ்ணன் ஆகியோரையும் பிரதமர் சந்தித்தார். வலுவான, நவீன இந்தியாவை உருவாக்குவதற்கான நேதாஜியின் தொலைநோக்குப் பார்வைக்கு இந்திய அரசின் உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.மலேசியாவில் தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
மலேசியாவைச் சேர்ந்த நான்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) கலந்துரையாடினார். பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டான் தெங்கு முகமது தௌஃபிக், பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுனவத்தின் நிறுவனர் டான் டத்தோ வின்சென்ட் டான் சீ யியோன், கசானா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமிருல் ஃபைசல் வான் ஜாஹிர், ஃபிசன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் டத்தோ புவா கெய்ன் செங் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் வணிகத் தொடர்புகளையும், இந்திய வளர்ச்சியில் மலேசிய நிறுவனங்களின் வலுவான ஆர்வத்தையும் பிரதமர் பாராட்டினார். வணிகத்தை எளிதாக்குவதை ஊக்குவிப்பதற்கும் நிலையான, வணிகச் சூழலை உருவாக்குவதற்கும் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை அவர் குறிப்பிட்டார். இந்தியா வழங்கும் வாய்ப்புகளை, குறிப்பாக உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம், குறைக்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகளை மலேசிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக். கொண்டார்.
இந்திய அரசு மேற்கொண்ட சீர்திருத்தங்களை மலேசிய தொழில்துறை தலைவர்கள் பாராட்டினர். மேலும் இந்தியாவின் வளர்ச்சியில் வலுவான நம்பிக்கையை அவர்கள் வெளிப்படுத்தினர். தங்கள் முதலீடுகளை விரிவுபடுத்துவதன் மூலமும், கூட்டு முயற்சிகளை ஆராய்வதன் மூலமும் இந்தியாவில் தங்கள் வணிகத்தை அதிகரிப்பதில் அவர்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.











கருத்துகள்