மறுமலர்ச்சி திமுகவின் அவசர உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னை எழும்பூர் தலைமை நிலையமான தாயகத்தில் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமையில் நடைபெற்றது,
பொதுச் செயலாளர் வைகோ எனும் வையாபுரி கோபால்சாமி சிறப்புரையாற்றினார், பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளரும் திருச்சிராப்பள்ளி நாடாளுமனற மக்களவை உறுப்பினர் துரை வைகோ, எனும் துரை வையாபரி, துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா முருகன், தி.மு. ராஜேந்திரன், டாக்டர் ரோஹையா உள்ளிட்ட உயர்நிலைக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் எந்த முடிவுக்கு வந்தாலும் வைகோ திமுகவுடன், அவரது மதிமுகவை இணைத்து விடலாம். திமுக சின்னத்தில் போட்டியிடுவதற்கு பதில் அதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும். மு. க.ஸ்டாலினை எதிர்த்து கட்சி தொடங்கியவர், இறுதியில் மு. க.ஸ்டாலினிடமே சரணடைந்துவிட்டார்.தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களில் இதுவரை மதிமுக போட்டியிட்ட இடங்களின் எண்ணிக்கை1996 ஆம் ஆண்டு 177தனி அணியாக
2001 -ஆம் ஆண்டு 211 தனி அணியாக,
2006 ஆம் ஆண்டு 35 அதிமுக கூட்டணி,
2011 ஆம் ஆண்டு தேர்தல் புறக்கணிப்பு
2016 -ஆம் ஆண்டு 28 மக்கள் நலக்கூட்டணி,
2021 ஆம் ஆண்டு 6 திமுக கூட்டணி,
2026 ஆம் ஆண்டு 4 ல் மூன்று திமுக ஒன்று மதிமுக திமுக கூட்டணி, ம தி மு க முதன்முறையாக 1996 ஆம் ஆண்டில் சட்டமன்றத்திற்கும் நடாளுமன்றத்திற்கும் மதிமுக சிபிஎம் ஜனதா கட்சி கூட்டணியாக நின்று போட்டியிட்டது. சட்டமன்றத்தில் 177 தொகுதியில் போட்டியிட்டு நான்கு இடத்தில் தான் டெபாசிட் வாங்கியது. ஒன்று விளாத்திகுளத்தில் வைகோவும் கோவில்பட்டியில் வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் சங்கரன்கோவிலில் முன்னால் அமைச்சர் தங்கவேலு, திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் பாலசுப்பிரமணியம் (முன்னாள் சட்டமன்றத் துணைச் சபாநாயகர்). உள்ளிட்ட மொத்தம் 178 தொகுதியில் போட்டியிடட
பிறகு 2001 ஆம் ஆண்டில் திமுக கூட்டணியுடன் சட்டமன்ற தேர்தலில் மதிமுகவிற்கு 21 சீட்டுக்கள் உறுதியான நிலையில் அதுவும் கலைஞர் மு. கருணாநிதி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வைகோவும் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட நிலையில் திடீரென்று வைகோ அந்த கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். இதை பெரிய மனசாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என கலைஞர் கருணாநிதி கூறிய பிறகும் தான் வெற்றி வேண்டும் என்ற நிலை இல்லாமல் திமுக தோற்க வேண்டும் என்ற நோக்கத்தில் 211 தொகுதியில் தனியாக நின்று ஒற்றைப்படை இரட்டைப்படை ஓட்டுகளைத் தான் மதிமுக வாங்கியது. பிறகு மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி செல்வி ஜெ.ஜெயலலிதாவிடம் விசுவாசத்தை காட்டி திமுகவின் ஓட்டைப் பிரித்து அதிமுகவை வெற்றி பெறச் செய்தார்.
தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கெல்லாம் அவரின் அரசியல் தலைமைக்கு என உழைத்தவர்களுக்கெல்லாம் பொருட்டாக நினைக்காமல் அவர்களைத் தெருவில் விட்டார்
இப்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுக கூட்டணியில் ஒரு சீட்டு ( கிடைக்கும் )உங்களின் சின்னம் , மூன்று சீட்டு திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் தான் நிற்க வேண்டும் என்று கூட்டணியில் ஒப்பந்தமாகி உள்ளது . இந்த நிலைமை வைகோவினால் தானே வந்தது.! மிகச்சிறந்த பார்லிமென்டேரியன் மிகச் சிறந்த பேச்சாளர் மிகச்சிறந்த தலைமை தாங்கும் பண்புள்ளவர் எங்கே சறுக்கினார்?
அன்றைய நாளில் வைகோவிற்கு என்ன விதமான குண மாறுபாடுகள் ஏற்பட்டது என்று அவரோடு பழகியவர்களால் கூட சொல்லத் தெரியவில்லை. என்றாலும் அறிவார்ந்த பலரை அவர் நிராகரித்ததனுடைய விளைவைத்தான் இப்போது அவர் சந்திக்கிறார். அவருக்கு உழைத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் சுயமரியாதை என்று ஒன்று இருக்கிறது அல்லவா? ஆகவேதான் நடப்பதை வேடிக்கை பார்க்கும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டனர். வைகோ இன்று முற்றிலும் வீணாகி ஏதோ ஒரு நிலையில் நிற்கின்றார். யோசித்துப் பார்த்தோமேயானால் அவருக்கு பிறகு வந்த நடிகர் விஜயகாந்த் மிகச்சிறப்பான முறையில் எதிர்க்கட்சித் தலைவராகவே சட்டமன்றத்தில் அமர்ந்தார். இன்றைக்கு அவர்களுக்கு கூட ஒரு நாடாளுமன்ற ராஜ்யசபா சீட் கூட்டணியில் உறுதியாகி இருக்கிறது. வரலாறு எப்படித் திரும்புகிறது என்று பார்த்தால் இன்றைக்கு நடிகர் சீமான் நடிகர் விஜய் போன்றவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து விட்டார்கள். 2001 ஆம் ஆண்டில் வைகோ தன்னுடைய கேரியரில் நான் வாதாடிய படி மிகச்சிறந்த ஒரு அரசியல் முடிவை எடுத்திருந்தால் அவருக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?
எத்தனை பெரிய ஆதரவு! எத்தனை பெரிய கூட்டம்! வைகோ திமுகவை விட்டு வெளியே வந்த போது மிகப்பெரிய மாற்று அரசியல் உருவாகப் போகிறது என்று தமிழ்நாடு முழுக்க எதிர்பார்த்த ஒன்றை வைகோ எப்படி சீர்குலைத்தார். எப்படித் தன் தலையில் யானை போல மண்ணள்ளிப் போட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் அரசியலில் நேர்மையானவர் , தூய்மையானவர் வைகோ என்ற பிம்பம் உருவானது. அனைத்து அரசியல் கட்சிகளோடும் உடன்பாடு, கூட்டணி என்று வசதிக்கேற்ப வைத்துக் கொண்டு கட்சியைக் கடலில் பெருங்காயம் போலக் கரைத்து விட்டார்.
தி.மு.க.,வாரிசு அரசியல் செய்கிறது என்று குற்றம் சாட்டி வெளியேறியவர் தன் மகனையே வாரிசாக அடையாளப்படுத்தி டில்லிக் கோட்டைக்கும் அனுப்பி வைத்ததன் பின்னர் இவரிடம் அரசியல் நேர்மையை எப்படி எதிர்பார்க்க முடியும்? வெற்று ஆரவாரமும் அடுத்தவர்களுக்குப் பல்லக்குத் தூக்கிக் கொண்டு அலைவதை விட கட்சியைக் கலைத்து விடுவது வைகோ அவர்களுக்கு நல்லது. வைகோ வெளியேற்றப்பட்டபோது தீக்குளித்த தமிழர்களுக்கு இச் செய்தி சமர்பணம்.
ஆக தற்போது மூன்று தொகுதி திமுக வேட்பாளர்கள் மதிமுகவின் நபர்கள் இது கட்சி மாறி திமுக உறுப்பினர் அட்டை வாங்கினால் தான் படிவம் ஏ மற்றும் பி வழங்க முடியும் ஆக ஒரு சீட்டு இவர்கள் கட்சி வேட்பாளர் இனி இவர்கள் கட்சியை உடைத்து புதிய நபர் கட்சி மல்லை சத்யாவுக்கும் சீட்டை ஒதுக்கினால் இவர் நிலை கண்களை விற்று சித்திரம் வாஙகியவர் நிலைதான்.





கருத்துகள்