சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெகவைத் தவிர்த்து நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி தேர்தல் விவாத நிகழ்ச்சியில், தி.மு.க. ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் அதன் செய்தியாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனியார் தமிழ் தொலைக்காட்சி 'தேர்தல் பயணம்' என்ற பெயரில் நேரடி விவாத நிகழ்ச்சியை நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்று மார்ச் 23 ஆம் தேதி மாலை காரைக்குடி மகர்நோன்புத் திடலில் நடைபெற்றதில் தி.மு.க, சார்பில் மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி மன்றத் தலைவருமான கட்சியின் பிரமுகர் சேங்கை மாறன் மற்றும் அ.தி.மு.க சார்பில் திருப்புத்தூர்ஜமுன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே. கே. உமாதேவன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேதாரண்யம் தொகுதி வேட்பாளரான மாநில ஒருங்கிணைப்பாளர் இடுப்பாவனம் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இடும்பாவனம் கார்த்திக் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த தி.மு.க.வினர் திடீரென மேடையை நோக்கி நாற்காலிகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு முன் அதே கட்சிசார்ந்த சாட்டை துரைமுருகன் திருப்புவனம் பகுதியில் சேங்கை மாறன் குறித்து அலதூறகப் பேசிய தகவல் வந்த நிலையில் அதே கருத்தை வேறு விதமாக கார்த்திக் பேசிய காரணமாக அதை மறுத்துக் கருத்து மூலம் எதிர்கொள்ள முடியாமல் இந்த அராஜக நடவடிக்கையில் சிலர் இறங்கியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த மோதலில் செய்தி சேகரிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கலவரமானதால்
நிலைகுலைந்தனர். மோதல் ஏற்பட்டதில் இருக்கைகள் தூக்கி வீசப்பட்டதில் நிகழ்ச்சித் தொகுப்பாளா் உள்பட 2 போ் காயமடைந்தனா். நடத்திய செய்தி ஒருங்கிணைப்பாளரார ராஜேஷ் வன்முறையாளர்கள் வீசிய நாற்காலி தாக்கியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டிய நிலை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தலையில் தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சதாம் உசேன் செய்தியாளர் காரைக்குடி இவருக்கும் இந்தத் தாக்குதலில் காயம் ஏற்பட்டுள்ளது. இளங்கோவன் (NTK)- நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இவரும் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து காயமடைந்த அனைவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டவா்களை கைது செய்யக் கோரி சீமான் கட்சியினா் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். அங்கு வந்த காரைக்குடி உதவி காவல்துறை கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியா தலைமையிலான காவலர்கள் மறியலில் ஈடுபட்ட சீமான் கட்சியினருடன் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் இதற்கு கண்டனம்
தெரிவித்த நிலையில்
செய்தியாளர்கள் மீதான இந்தத் தாக்குதலை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அடாவடியில் ஈடுபட்டு செய்தியாளர்களுக்கு காயம் ஏற்படுத்திய தி.மு.க.வினரின் அராஜக நடவடிக்கையை ஏற்க முடியாது. வன்முறையில் ஈடுபட்ட அனைவரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கைது செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், அவர்கள் மீது கட்சி ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க.வினர் வன்முறையைக் கையில் எடுத்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்கிறார்கள் என்று அவர் விமர்சித்துள்ளார்.தேர்தல் நேரத்தில் செய்தியாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்." என்கிறார், இந்த நிலையில் இதில் கலந்து கொண்டு பேசிய மூவரும் ஒரே சமூகம் சார்ந்தவர்கள், திருப்புவனம் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் தான் இந்த கலவரம் நடக்க தூவம் போட்டதாக பலரும் பேசும் நிலை. பொது வெளியில் இதுபோன்ற நிகழ்ச்சி நடத்த அனுமதித்த தேர்தல் ஆணையமும் இதில் தவறு செய்துள்ளது








கருத்துகள்