முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்சிராப்பள்ளி ஜி கார்னர் பகுதியில் உயர் மட்ட சுழற்பாலம் ஒப்புதல்

பல உயிர்களை விபத்தால் பலி வாங்கிய G CORNER பகுதியில் உயர்மட்ட சுழற்பாலம் எனும் Elevated Rotary அமையப்போகிறது



திருச்சிராப்பள்ளி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைக்கு தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மூலம் விடை கிடைத்தது! தங்கள் நிலத்தில் உயர்மட்ட சுழற் பாலத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைத்துக் கொள்ள இரயில்வே நிர்வாகம் முழு ஒப்புதல் அளித்து, தடையில்லாச் சான்றிதழை வழங்கியது ,  சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து மக்களின் பயணமும் சீராகவும் பாதுகாப்பாகவும் அமையப்போகிறது! என் மக்கள் பணியில் இந்த உயர்மட்ட G-கார்னர் சுழற்பாலம் ஓர் சாதனையாகவே 


நாடாளுமன்ற உறுப்பினராக  திருச்சிராப்பள்ளி தொகுதி மக்களுக்காக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முயற்சிக்கு கிடைத்த பலனாகும் திருச்சிராப்பள்ளிக்கும் சென்னைக்குமான தேசிய நெடுஞ்சாலையில், திருச்சிராப்பள்ளி மாநகரில் பொன்மலைப் பகுதியில் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் எனும் Elevated Rotary அமைக்கும் திட்டப் பணிக்கு, 13.03.2026 தேதியிட்ட இரயில்வேத் துறையின் தடையில்லாச் சான்று (NOC) தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறைக்கு (NHAI) இரயில்வே நிர்வாகம் (Railway Board) வழங்கியுள்ளது.

திருச்சிராப்பள்ளி மாநகரில் தேசிய நெடுஞ்சாலை–38 ல் அமைந்துள்ள G-கார்னர் சந்திப்பு கடந்த 16 ஆண்டுகளாக கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளுக்குக் காரணமாக இருந்து வருகிறது. இந்த போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்காக கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து முயற்சிகள் நடந்த நிலையில் 

11.01.2025 அன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தில் இந்த பிரச்சினையை முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக எடுத்துரைத்தேன்.

26.01.2025 அன்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் G-கார்னர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு

22.02.2025 அன்று நில அளவீடு செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து 27.02.2025 அன்று NHAI மற்றும் இரயில்வே அலுவர்களுடன் இணைந்து திட்டத்திற்குத் தேவையான நில அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.









இந்த திட்டம் விரைவில் நிறைவேற வேண்டும் என்பதற்காக 06.02.2025, 19.08.2025 மற்றும் 19.12.2025 ஆகிய தேதிகளில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து திட்டத்தின் அவசரத் தேவையை எடுத்துரைத்து விரைந்து செயல்படுத்த  வலியுறுத்தி.

 23.04.2025 அன்று மேம்பாலம் அமைப்பதற்காக தேவையான இரயில்வே நிலத்தை மாற்றித் தருமாறு தெற்கு இரயில்வே பொதுமேலாளரிடம் கோரிக்கை வைத்து. 

14.07.2025 அன்று திருச்சிராப்பள்ளி கோட்ட இரயில்வே அலுவலகத்தில் DRM, NHAI அதிகாரிகள் மற்றும் திட்ட ஆலோசகர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது இந்த போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வாக உயர்மட்ட சுழற் பாலம் அமைக்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதன் பின்னர் 25.08.2025, அன்று புதிதாக பதவியேற்ற தற்போதைய திருச்சிராப்பள்ளி இரயில்வே கோட்ட மேலாளர் பலக் ராம் நேகியை சந்தித்து, ப26.08.2025 அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் மீண்டும் ஒருமுறை சந்தித்து விளக்கி, 26.09.2025 மற்றும் 05.12.2025 ஆகிய தேதிகளில் ரயில்வே நில ஒதுக்கீடு மற்றும் NOC வழங்குவது தொடர்பாக தொடர்ந்து கடிதங்களும் அளித்து நடவடிக்கை எடுத்த. பின் 10.12.2025 அன்று டெல்லியில் மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து இந்த திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.










தொடர்ச்சியாக 29.01.2026 அன்று திருச்சிராப்பள்ளி இரயில்






வே DRM அலுவலகத்தில் NHAI அதிகாரிகள் மற்றும் திட்ட ஆலோசகரை வரவழைத்து ஆலோசனையம் நடைபெற்றது. 

 30.01.2026 அன்று தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திருச்சிராபபள்ளி திட்ட இயக்குநர் மற்றும் திட்ட ஆலோசகரை மதுரை மண்டல தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலரின் அனுமதியுடன் அழைத்து சென்னை தெற்கு இரயில்வே பொதுமேலாளர் அலுவலகத்தில் பொது மேலாளருடன் ஆலோசனை மேற்கொண்ட

பின்னர் 04.02.2026 மற்றும் 13.02.2026 ஆகிய தேதிகளில் மத்திய இரயில்வே அமைச்சரை மீண்டும் சந்தித்து திட்டத்திற்கு விரைவான அனுமதி வழங்கக் கேட்டுக்கொண்ட அடிப்படையில் . 06.02.2026 அன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர். ஹர்ஷ் மல்ஹோத்ராவுக்கு  திட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்த நிலையில் 

நாடாளுமன்ற உறுப்பினர்  22.02.2026 மற்றும் 07.03.2026 ஆகிய தேதிகளில் திருச்சிராப்பள்ளி DRM மைத் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்ட.

 இந்தத் தொடர் முயற்சிகளின் விளைவாக தற்போது திருச்சிராப்பள்ளி மாநகரில் G-கார்னர் சந்திப்பில் உயர்மட்ட சுழற் பாலம் அமைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு இரயில்வே நிர்வாகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC – No Objection Certificate) வழங்கியுள்ளது என்பது மிக முக்கிய முன்னேற்றமாகும்.

இது மத்திய இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இரயில்வே வாரியம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா, திருச்சிராப்பள்ளி கோட்ட இரயில்வே மேலாளர் (DRM), தெற்கு இரயில்வே பொதுமேலாளர் (GM) மற்றும் NHAI திருச்சி திட்ட இயக்குநர் மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பு மூலம் 

இந்த உயர்மட்ட சுழற்பாலம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தவுடன், திருச்சி மாநகரின் நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதோடு, இத்தேசிய நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் அப்பகுதி மக்களின் உயிர்ப் பாதுகாப்பும் உறுதியாகும்.

மேலும், சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குச் திருச்சி வழியாகப் பயணிக்கும் அனைத்து மக்களின் பயணமும் பாதுகாப்பாகவும் சீராகவும் அமையும் என்பதால், இப்பாலம் திருச்சிக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டுக்கே மிக முக்கியமான பாலமாகத் திகழும் எனலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...