நடிகர் விஜய் நடித்த சிவகாசி
திரைபபடப் பாடலுக்கு கட்சி மேடையில் நடனமாடிய கிருஷ்ணவேனி (வயது 58) தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
"கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வாரியா...." என்ற பாடலுக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மகளிர் தின விழா மேடையில் நடனம் ஆடிய அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வரியா என்ற விஜய் பட பாடலுக்கு ஒரத்தநாட்டில் நடந்த த.வெ.க. மகளிர் தின விழா மேடையில் நடனம் ஆடிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளை மீறியது மற்றும் பணித்தன்மைக்கு பங்கம் விளைவித்தது ஆகிய காரணங்களுக்காக ஆசிரியை கிருஷ்ணவேணியைப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து மாவட்ட கல்வி அலுவலர் மதியழகன் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஒரு அரசியல் கட்சி விழாவில் பங்கேற்ற தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் விஜய் கட்சி அடித்தள மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதைக் காட்டுவதாக அக்கட்சியினர். ஆட்சி மாற்றம் நடந்தால் அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் ரத்தாகலாம்,அரசு பணி செய்வோர் பொது ஊழியர்கள், கட்சி சார்ந்த விழா, மற்றும் கூட்டங்கள் உள்ளிட்ட பிற நிகழ்வு களில் பங்கேற்கக் கூடாது. அதை மீறினால் அரசு ஊழியர் நடத்தை விதி (Conduct Rules) படி குற்றமாகும். இந்தகுற்றத்தில் ஈடு படுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்ப டும். அதிகபட்சமாக பணியிடை நீக்கம் பின் தவறு உறுதியானால் பணி நீக்கம் வரை செய்யலாம். அந்த வகையில் தற்போது தலைமையாசிரியை கிருஷ்வேணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இந்திய அரசியலமைப்பில் Article 19(1)(a) of the Constitution of India படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை வெளிப்படுத்தும் உரிமை உண்டு . நடனமென்பது கலை; அது சுதந்திரத்தின் வெளிப்பாடு.ஆனால், இந்த உரிமை முழுமையானதல்ல. Article 19(2) of the Constitution of India படி, இந்த சுதந்திரத்திற்கு நியாயமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம். குறிப்பாக ஒருவர் அரசு ஊழியரானால், அவரது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் பொதுப் பொறுப்பு (Public Responsibility) ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டிய சூழல் உருவாகிறது. அதனால், சுதந்திரம் இருக்கிறதென்றாலும், அது முழுமையாக கட்டுப்பாடுகளின்றி பயன்படுத்தப்பட முடியாது. அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள் குறித்து தெளிவான வழிமுறைகள் Tamil Nadu Government Servants' Conduct Rules மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் அரசு ஊழியர்கள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், பொதுமக்கள் முன் அவர்களின் நடத்தை மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றன.இந்திய நீதிமன்றங்கள் தெளிவான ஒரு அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன. O.K.A. Nair /vs/ Union of India வழக்கில், அரசு ஊழியர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளை முழுமையாகக் கோர முடியாதன்கிறது உச்ச நீதிமன்றம். அதேபோல் Kameshwar Prasad /vs/ State of Bihar வழக்கில், அரசு ஊழியர்களுக்கும் உரிமைகள் உள்ளன, ஆனால் அவை கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை என வலியுறுத்தப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடத்தக்கது.




கருத்துகள்