முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கொள்கை இழந்த தலைவர்களின் கூட்டணி அதிகாரத்தின் பலியாடுகள்

பாமக நிறுவனர் மருத்துவர் ச.இராமதாஸ் கட்சியும், காலஞ்செனற முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் உயிர் தோழி வி. கே சசிகலா நடராஜன் தலைமையிலான புதிய கட்சியான அஇபுதமமுக கட்சியும் கூட்டணி, அரசியல் மாற்றத்தின் பெயரில்



முன்வைக்கப்பட்டாலும், அதன் மையத்தில் தெளிவாக தெரியும் ஒன்றைப் பார்வை என்பது இது திட்டமிட்ட ஜாதி வாக்குப் பிரிப்பு அரசியல் முயற்சியாகவே பார்க்கலாம். குறிப்பாக வன்னியர்கள் மற்றும் முக்குலத்தோரில் சிலர் வாக்கு வங்கியின் திசையை உடைத்து, அந்த ஒருமைப்பாட்டைச் சிதைக்கின்ற நகர்வாகவே இந்தக் கூட்டணி வெளிப்படுகிறது. பாமக நிறுவனர்

மருத்துவர் ச.ராமதாஸ் 1989 முதல் நீண்ட காலமாக களத்திலிருந்து நேரடியாகவே அரசியல் செய்து வந்த தலைவர், முன்னால் முதல்வர்கள் காலஞ்சென்ற டாக்டர். எம்ஜிஆர், செல்வி ஜெ.ஜெயலலிதா, டாக்டர் மு.கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்களை எதிர்த்தும், ஆதரித்தும் செயல்பட்டவர். அதே நேரத்தில், வி. கே.சசிகலா நடராஜன் செல்வி ஜெ.ஜெயலலிதாவைப் பின்புலப் பொம்மையாக வைத்து நேரடி அரசியல் களத்தில் தன்னை நிரூபிக்காமல் கிச்சன் கேபினட் இன்கேமரா அரசியல் செய்த அரசியல் ஆளுமை; தமிழகத்து நடிகையானாலும் கர்நாடக அந்தணர் குல செல்வி ஜெ.ஜெயலலிதாவை பின்னணியில் இருந்து இயக்கியவர் என்ற மன்னார்குடி ஆதரவுக் குடும்பம், ஆனால் சாமானியன் அறியாத நிழல் அரசியல் அது என்ற அடையாளமே அதிகம். இப்படிப்பட்ட இரு வேறு பாதைகளில் இருந்தவர்கள் இன்று ஒரே தளத்தில் நிற்பது, அரசியல் மாற்றத்தை விட பல புதியவர்களுக்கு நையாண்டி உணர்வைத் தான் உருவாக்குகிறது. காரணம் அது அவர்கள் அறியாமை. கடந்த பத்து வருடம் முன்புள்ள காலத்தில் இவர்கள் எத்தனை பலம் மிக்க அதிகாரமிக்கவர்கள்?




ஆனால் பாஜகவின் பின் புல ஆடிட்டர் ஒருவர் தலையீடு காரணமாக பின்னடைவு அரசியல் காரணமாக இவர்கள் வாழ்க்கையைத் தக்க வைப்பதை விட வாழப் போராடுவது சற்றே இலகு. இந்த நிலையில் திண்டிவனம். பாண்டிச்சேரி சாலையில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடந்த சந்திப்பில் “இப்போதே பலருக்கும் நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்” எனற செய்தியுடன் 






வி. கே.சசிகலா நடராஜன் கட்சியுடன் கூட்டணியை அறிவித்த பிறகு மருத்துவர் ச.ராமதாஸ் கருத்துத் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாடு தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாசுடன் வி.கே.சசிகலா நடராஜன் நேற்று சந்திப்பு, காரணம் இருவருக்கும் பொது எதிரி பாஜக. 

மருத்துவர் ச.ராமதாஸ் தரப்பு பாமகவை தந்தை மகனை திமுக ஆதரவாளரான அரசு தொடக்கபபள்ளி ஆசிரியர் பணியில் இருந்து பாமகவில் பேராசிரியர் தீரன் பின் வந்து தற்போது பலநூறு கோடிகள் குவித்து பாமகவில் சமீபத்திய குழப்பம் நடக்கக் காரணமான ஜி. கே.மணியை வைத்துப் பிரித்ததுடன், கூட்டணி அமைத்த கோபம் காரணமாக மருத்துவர் ச. ராமதாஸ் தற்போது வடமாவட்டங்களில் 40 தொகுதிகளிலும் போட்டி எனவும், முதல்வராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாள் முதல் பாஜகவால் பாதிக்கப்பட்டவள் வி. கே.சசிகலா நடராஜன் தரப்பு தென்மாவட்டங்களில் 30 தொகுதிகளிலும் போட்டியிடத் திட்டம் எனத் தகவலென்பது அரசியல் முட்டுச் சந்தில் போயஸ் தோட்டத்தின் வி. கே. சசிகலா நடராஜனும், திக்குத் தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் தோட்டத்து மருத்துவர் ச. ராமதாஸும் தடுமாறும் நிலைமை. 2026 தேர்தல் கணக்கு!

ஒரு காலத்தில் ஜெ.ஜெயலலிதாவின் நிழலாக வலம் வந்த வி. கே.சசிகலா நடராஜன் தற்போது கிட்டத்தட்ட அரசியல் வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதிமுக கூட்டணி அமைய மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தவர் தற்போது கூட்டணிக்காக தைலாபுரத்தின் கதவுகளை தட்டி இருக்கிறார். அஇபுதமமுகவில் இணைந்திருக்கும் அவர் தற்போது முக்குலத்தோர் அதிகம் வாழும் ஆவடி தொகுதியில் போட்டியிடத் திட்டமிருக்க 











அவரது அரசியல் எதிர்காலம் வெற்றி இல்லை எனில் டெபாசிட் கிடைக்கிறதோ? இல்லையோ? என்ற நிலைமை, அதேபோல்     தனித்துத் தான் போட்டியிடுவேன் என நாம் தமிழர் கட்சி செபஸ்தியான் சைமன் எனும் சீமானும் வேட்பாளர்களை அறிவித்து விட்டார்கள் . ஆளும் கட்சியான திமுக கூட்டணியை பலப்படுத்தி தொகுதி பங்கிட்டு மேற்கொண்டு வருகிறது. பல விமர்சனங்கள் இருந்தாலும் கட்சியை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக நம்பும் தே ஜ கூ வில் உள்ள எடப்பாடி கே.பழனிச்சாமி கூட முதல்வர் வேட்பாளர் இல்லாத பெருமிதம் தெரிவித்து வருகிறார். ஆனால் அதிமுகவின் இராஜமாதாவாக தன்னை அறிவித்துக் கொண்ட வி. கே.சசிகலா நடராஜன் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தைலாபுரத்துக் கதவுகளைத் தட்டியதால் சபாஷ் தற்போது ஜி. கே.மணியும் இரா.அருளும் வேறு இடம் போக வோண்டிய நிலைமை. 

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட சசிகலா நடராஜன் அதன் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இதற்கிடையே கட்சியினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என சசிகலா நடராஜன் அறிவித்த நிலையில் வெறும் 50 மனுக்களே வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழ்நாடு 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் 50 மனுக்கள் தான் வந்திருப்பது வி. கே.சசிகலா நடராஜனை அதிருப்தி அடைய செய்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அதில் பாதி சசிகலா போட்டியிட வேண்டும் என வந்திருப்பது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. இதில் பாதி நபர்கள் ஏழைகள் சிலர் சசிகலா தரப்பு எபபடியும் தரும் பணத்தை நம்பி வந்த சிலர் இந்த நிலையில் ஆவடித் தொகுதியில் சசிகலா போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கேட்டு வருகின்றனர். ஆவடி தொகுதிக்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை என சொல்லும் அரசியல் பார்வையாளர்கள் அங்கு உள்ள 30 சதவீதம் முக்குலத்தோர் வாக்கு வங்கியை கவனிக்க வில்லை , சசிகலா நடராஜன் நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதல்ல அதிமுக தோல்வி அடைய வேண்டும் என்பது தான் திட்டம்

அதிமுக, அமுமுக, பாமக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் சசிகலா நடராஜன் மற்றும் மருத்துவர் ச.ராமதாஸ் தரப்பு ஆதரவு நிர்வாகிகளை நிற்க வைத்து அவர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். இது மறைமுகமாக திமுகவுக்கு உதவும் செயலாகவே பார்க்கப்பட்டாலும், ஒரு காலத்தில் தன்னைப் பார்த்து கும்பிடு போட்டவர்கள் என்று கண்டு கொள்ளாமல் செல்வதால் ஆத்திரத்திலிருக்கும் அவர் பாஜகவின் பேச்சைக் கேட்டு தன்னை ஓரம் கட்டி விட்டார்களே என கொந்தளிப்பில் இருப்பதோடு அவர்களை தோற்கடிக்க வேண்டும் என முடிவெடுத்து இருப்பதாகச் சொல்கின்றனர்.

2026 சட்டமன்றத் தேர்த




ல் ஏற்கனவே இரு துருவ அரசியல் ஈடுபட்டவர்கள் ஒன்று சேர்ந்து விட்டனர். தேமுதிக, ஓ. பன்னீர் செல்வம் திமுகவுடன் ஐக்கியமாகிவிட்ட நிலையில் அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் தவிக்கும் சசிகலா நடராஜனும் மருத்துவர் ச.ராமதாஸும் ஒன்றாகச் சேர்ந்து போட்டியிடும் முடிவுக்கு வந்திருக்கின்றனர். அது 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துமா அல்லது புஸ்வானமா என்பது தான் பலரது தற்போதைய கேள்விலி. கே.சசிகலா நடராஜன் மற்றும் மருத்துவர் ச.ராமதாஸ் ஆகிய இருவருமே தங்கள் சார்ந்த ஜாதி பலத்தை நம்பிக்கை வைத்தே தேர்தலில் இணைந்து களம் காண்கிறார்கள். ஆனால் மருத்துவர் ச.ராமதாஸைப் பொறுத்தவரை 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு MBC யில் வன்னியர் (கவுண்டர், படையாச்சி, நாயக்கர் ) களுக்குத் தேவை என்பது தான் அவருடைய பிரதான நோக்கமும், அது சார்ந்த போராட்டமும்.

ஆனால் முக்குலத்தோருக்கு அதாவது (கள்ளர், மறவர் DNC/MBC , or BC, ) அகமுடையார் BC அந்த 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்பது எதிரானதாக அமையும் எனவே அதைக் கொடுக்கக் கூடாது என்பது முக்குலத்தோரின் சிலர் நிலைப்பாடு. கடந்த தேர்தலில் இந்த எதிரும் புதிருமான நிலைப்பாடுகளே வெற்றி வாய்ப்புகளை பாதித்தது.  

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தேர்தல் களத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலம் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை ஜெயலலிதாவின் உயிர் தோழி வி. கே.சசிகலா நடராஜனும் (அவரால் ஆடசியில் பலனடைந்த சிலரும், பலனடையாத பலரும்) முக்குலத்தோரும் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது மருத்துவர் ச.ராமதாஸ் அந்த 10.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக் கொள்கையை கைவிடப் போகிறாரா?

வி. கே.சசிகலா நடராஜனுக்கு தனது அக்கா வனிதாமணியின் மகன் டி.டி.வி. தினகரன் மீது இருக்கும் சமீபகாலக் கோபத்தையும், மருத்துவர் ச.ராமதாஸுக்கு தனது மருமகள் மருத்துவர் சௌமியா அன்புமணி மீதிருக்கும் குடும்பக் கோபத்தையும் வெளிக்காட்டுவதற்காக மட்டுமே இருவரும் தேர்தலில் தற்போது களம் காண்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.








இதில் ஜி.கே.மணி தைலாபுரம் விருந்தில் கண்ட முகம் காட்டும் கணணாடி என்பது போலவே அமைந்துள்ளது. இதைக் கவனித்த அவரது எதிர் தரப்பு                "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் 
  நிம்மதி கொள்வ தென்பதேது ? அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அரும்பிட முடியாது! அமைதியழிந்தது.,!, புயலும் எழுந்தது.....!!,ஆணவம் இன்றோடொழிந்தது!!!. எனப் பாடும் நிலை தான்.          மருத்துவர் அய்யா வுடன் இருக்கிறோம், தைலாபுரத்தை காக்கிறோம் என 
ம.க. ஸ்டாலின்,
கோ. ஜெகன்,
திருக்கச்சூர் ஆறுமுகம், பு. தா. அருள்மோழி 

போன்றவர்களின் இன்றைய நிலைமை பரிதாபத்திற்குறியது.

சகுனியாக செயல்பட்டதாக கூறப்பட்ட ஜி.கே.மணி, சேலம் அருள் போன்றவர்களின் எண்ணம் நிறைவேறியது. என்கிறனர் எதிர் தரப்பு,இலக்கியத்தில் 'அரசியல் அனாதைகள்' என்பது அதிகார மையங்களால் புறக்கணிக்கப்பட்ட, கொள்கையற்ற அல்லது கொள்கைக்காகத் தனித்துவிடப்பட்ட மனிதர்களைக் குறிக்கிறது. அதிகாரப் போட்டியில் நசுக்கப்படும் சாமானியர்கள், கொள்கை சிதைந்த தலைவர்கள், மற்றும் தார்மீகத் திசையறியாது தவிக்கும் கதாபாத்திரங்கள் இலக்கியங்களில் இத்தகைய அனாதைகளாகச் சித்தரிக்கப்படுகின்றனர். இது அதிகார அரசியல் மற்றும் அறநெறி சார்ந்த விவாதங்களை எழுப்புகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...