சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு 683 பக்கம் தீர்ப்பு காவல்துறைக் குற்றவாளிகளுக்கான சவுக்கடி.
குற்றவாளிகள் காவல் துறை ஆய்வாளர் ஶ்ரீதர் உள்ளிட்ட ஒன்பது காவல்துறை பணியாளருக்குமே தூக்கு தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
செல்போன் விற்பனைக் கடை நடத்திய ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை ஆறாண்டுகளுக்கு முன் காவல் நிலையத்தில் காவலில் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டனர் 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19-ஆம் தேதி கொரோனா பரவல் காலத்தில் காவல்துறை பணியில் இருந்த காவலர் சிலரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாகத் தாக்கப்பட்டு
21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்படவர்கள். ஜூன் மாதம் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் பெரிய அளவில் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியது. வழக்கை சூமோட்டோவாக எடுத்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் , அறிக்கை தாக்கல் செய்யம்படி மாவட்டக் காவல்துறைக்கு உத்தரவிட்டதற்குப் பின் வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம்சடடப்பட்ட பத்து நபர்கள் இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை சிபிஐ தாக்கல் செய்தது.
மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் விசாரணை அணைத்தும் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் மாதம் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.
இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனையை அறிவிக்கும் முன்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். அதில்
"இருவரையும் கொல்லும் நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் எதுபோன்ற தண்டனை அளிக்கலாம் எனக் கேட்டபோது, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென மத்திய அரசு கூறியது. அதேபோல, தமிழ்நாடு அரசும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கூறியது.'' என நீதிபதி தெரிவித்தார்
இது முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது என்றார் நீதிபதி.
''இதனை நீதிமன்றம் சாதாரணமாக கடந்துசொல்ல முடியாது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும் திருந்தவில்லை. கொரோனா காலகட்டத்தில் கடையைத் திறந்து வைத்தார்கள் என்பதற்காக இப்படித் தாக்கியிருக்கிறார்கள்.
இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக விசாரித்திருக்காவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.''
''நிராயுதபாணியாக நின்றவர்களை இவர்கள் தாக்கியுள்ளனர். இவர்களை மன்னிக்க வேண்டியதில்லை. வயது, குடும்ப சூழலை காரணம் காட்டி இவர்களுக்கு குறைந்த தண்டனை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள் நல்ல மன நிலையில் இதனைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை அவர்களைத் தாக்கியுள்ளது.'' என நீதிபதி கூறினார்
இந்தச் செயலைப் பார்க்கும்போது மனம் வெந்து போகிறது என கூறியவர், ''பென்னிக்சின் தாயாரின் துக்கத்தை யாரும் தீர்க்க முடியாது. ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பிடுங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது.'' என்றார்
இது அரிதினும் அரிதான வழக்கு எனக் கூறிய நீதிபதி
''இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, 14 வருடங்களில் வெளியில் வந்துவிடலாம் என எதிரிகள் சுலபமாக நினைக்கலாம். ஆனால், அப்படி விட்டுவிட நீதிமன்றம் தயாராக இல்லை" எனத் தெரிவித்த நீதிபதி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை விவரங்களை அறிவித்தார்.அதன்படி முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனையும் தவிர, பல சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறையுமா, 3 ஏழாண்டு சிறை, மூன்றாண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 24,10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளி, பாலகிருஷ்ணனுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழே ஒராண்டும், ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை மரண தண்டனையும் 16,80,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
மூன்றாவது குற்றவாளி ரவி கணேஷுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை தூக்கு தண்டனையும் 5,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நான்காவது குற்றவாளியான தலைமைக் காவலர் முருகனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 10,10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது ஐந்தாவது குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 5,60,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆறாவது குற்றவாளி முத்துராஜாவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை தண்டனை, மூன்று ஏழாண்டு சிறை தண்டனை, ஒரு மூன்றாண்டு சிறை தண்டனை, இரட்டை மரண தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 3,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஏழாவது குற்றவாளி செல்லதுரைக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 14,40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எட்டாவது குற்றவாளி தாமஸ் பிரான்சிஸிற்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஒன்பதாவது குற்றவாளி வெயில் முத்துவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
தீர்ப்பு கடந்து வந்த பாதை நிலவரம்:-
மார்ச் மாதம் 23ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்ட 9 காவல்துறையினரும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 342 (தவறான சிறைவைப்பு), 195 (பொய்யான ஆதாரம்), 211 (தவறான குற்றச்சாட்டு), 218 (பொது அலுவலர் தவறான பதிவுகள்) மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ், 109 (தூண்டுதல்), 34 (சேர்ந்த நோக்கம்) உடன் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
பின்னர், குற்றவாளிகளின் தற்போதய சொத்துக்கள் , மற்றும் வாங்கிய சம்பளம் மற்றும் குற்றத்தின் தீவிரம் தொடர்பான முழுமையாக அறிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி அறிக்கைகள் அணைத்தம் முறையே தாக்கல் செய்யப்பட்டன. அதன்பின் நடைபெற்ற வாதங்களில், சிபிஐ தரப்பு குற்றவாளிகள் அணைவருக்கும் தூக்கு தண்டனை கோரிய நிலையில், பாதுகாப்புத் தரப்பு தளர்வு கோரியது. இறுதியில், நீதிமன்றம் அதிகபட்ச தண்டனை விதித்து உத்தரவிட்டது.
வழக்கில் குறறச் சம்பவம் குறித்த பார்வை:-
2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் தேதி, கோவிட்-19 ஊரடங்கு விதிகளை மீறி செல்போன் விற்பனைக் கடையை இரவு 9 மணிக்குப் பிறகு திறந்திருந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி )பிரிவுகள் 188, 269, 294(பி), 353 மற்றும் 506(2) ஆகியன பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் காவலர்கள் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டவர்களில், பென்னிக்ஸ் ஜூன் 22ஆம் தேதியும், ஜெயராஜ் ஜூன் 23ஆம் தேதியும் உயிரிழந்தனர்.
விசாரணையும் மற்றும் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளும் :-
குற்றச் சமபவ வழக்கில் 10 காவல்துறையினருக்கு எதிராக வழக்குபா பதிவு செய்யப்பட்டது. மதராஸ் உயர்நீதிமன்றம் (மதுரை கிளை) தானாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டு, இது முதற்கட்டத்தில் கொலை மற்றும் ஆதாரங்கள் அழித்தல் எனக் குறிப்பிட்டது.
முதலில் சிபி-சிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில், மாநில காவல்துறை தலைமை இயக்குனர் கோரிக்கையின் பேரில் வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பு க்கு மாற்றப்பட்டது.
காவல் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பி. ரகு கணேஷ், கே. பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் எஸ். முருகன், ஏ. சாமிதுரை மற்றும் கான்ஸ்டபிள்ஸ் எம். முத்துராஜ், எஸ். செல்லதுரை, எக்ஸ். தாமஸ் பிரான்சிஸ், எஸ். வேலுமுத்து ஆகியோர் மீது IPC 302, 342, 201, 182, 193, 211, 218, 120பி மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே கோவிட்-19 ல் பாதித்து உயிரிழந்தார்.
நீதிமன்றத்தின் ஆய்வுக் கண்டுபிடிப்பு:-
பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவர்களின் காயங்கள் இயற்கைக்கு மாறானவை என்றும், மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக ஏற்பட்டவை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. சுய காயப்படுத்தல் என்ற வாதத்தையை பொய் என நீதிமன்றம் நிராகரித்தது.
ஜெயராஜ் உடல் நலக்குறைவு இருந்தபோதிலும், காவல் துறையினரின் தாக்குதலே இருவரின் உயிரிழப்புக்கும் நேரடிக் காரணம் என நீதிமன்றம் உறுதி செய்து, இதை கொலை வழக்காக வகைப்படுத்தியது.பலவிதமான நியாய சட்டப் படிநிலைகளைக் கடந்து வந்த நல்ல தீர்ப்பு.
ஜூன்,மாதம் 2020- முதல் ஏப்ரல் மாதம 2026.வரை காலம் விசாரணை முடியக் காத்திருப்பு
வழக்கை சிறப்பாக நடத்திக் கையாண்ட மத்திய புலனாய்வுத்துறை (CBI) காவல்துறையின் புலனாய்வுக்
காவலர்களின் பணிக்கு வெற்றி பாராட்டுக்கள்... மற்றும் எதிராக சாட்சியம் அளித்த காவலர் ரேவதியின் நேர்மை மனச்சாட்சி.
குற்றவாளிகளுக்கு பிணை வழங்காமல் ஆறு ஆண்டுகளாக சிறையிலேயே வைத்த நீதிமன்றம்.
தொடக்கPRC வழக்கின் விசாரணையை நேர்த்தியாய்க் கையாண்ட கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன்.
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனையை தீர்ப்பாக அளித்த மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன்.
இதே போல கடந்த ஏப்ரல் மாதம், 1995- ஆம் ஆண்டு ஆட்டோ சங்கருக்கு நிறைவேற்றப்பட்ட தூக்குத் தண்டனை தான், தமிழ்நாட்டில் இறுதியான மரண தண்டனையாக உள்ளது.
மேல்முறையீடு போன்ற விஷயங்கள் பின்னால் தான் தெரியவரும். மேலும் இதற்கு முன் வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் மூவரை இலக்கியம்பட்டியில் உயிருடன் எரித்துக் கொன்ற குற்றவாளிகளுக்கு விதிக்கபபட்ட தீர்ப்பு இறுதி கருணையை எதிர்நோக்கி இன்றுவரை காத்திருக்கும் நிலை மேல்முறையீடு விசாரணை தாமதமானால் இந்தக் கொடும் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மீதான பயமும் மரியாதையும் வரவில்லை ஆகவே அந்த விசாரணை நடந்தால் அதில் விரைந்து தண்டணை கிடைத்தால் மக்கள் நீதி வென்றதாக பாராட்டலாம்.. மேல்முறையீடு இனி உயர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை உறுதிப்படுத்தும் என்றே சட்ட வல்லுநர்கள் கருத்தாக அமைகிறது. இதில் பொதுநீதியாக :- "தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்றதோ . அதைக் கேள்வி கேக்க ஆளில்லாமல்... பார்த்து நிப்பதோ. வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள்... மனித ஜாதி... பிறர் வயிறெரியச் சிரிப்பவர்கள். மிருக ஜாதி. மனிதன் என்ற போர்வையில். மிருகம் வாழும் நாட்டிலே .நீதி என்றும் நேர்மை என்றும். எழுதி வைப்பார் ஏட்டிலே!" இதில் பொது நீதி தோடடக் காவல் வேலி போலத் தான் நாட்டுக் காவல் பணியாளர்கள், வேலி பயிரைத் திங்காது, காவலர்கள் மனித வாழ்வியலில் பாதுகாவலர்கள், சாமானியன் வாழ்வை அழிக்க அவர்கள் யார்? நீதிமன்றம் வழங்கிய சம்மட்டி அடி தான் இந்த முதல்படி தீர்ப்பு.


































கருத்துகள்