தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு
2023 ஆம் ஆண்டில் ஆவடி காவல்துறை ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று, காவலர் பயிற்சிப் பள்ளி இயக்குநராக நியமனமானார்.
சந்தீப் ராய் ரத்தோரை DGP யாக்க பெரு முயற்சி நடந்த நிலையில் அதற்கு முன் DGP ஷங்கர் ஜிவால். அதற்காக பதவி நீடிப்பு கேட்டார், அவருக்கு பதவி நீடிப்பு செய்தால் சந்தீப்பும் சீமா அகர்வாலும் லிஸ்ட்டில் வருவார்கள். என்ற நிலையில் வெங்கட்ராமனை பொறுப்பு டிஜிபியாக நியமனம் செய்தது தமிழ்நாடு அரசு இந்த நிலையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை மாற்றிய தேர்தல் ஆணையம். புதிய டி.ஜி.பி.யாக சந்தீப் ராய் ரத்தோரை நியமனம் செய்தது,
தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. சட்டம் ஒழுங்கு டிஜிபி யாக நியமனம் ஆன
சந்தீப் ராய் ரத்தோர் 1992-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி ஆவார், இவர் தமிழ்நாட்டின் முக்கிய காவல்துறை பதவிகளை வகித்துள்ளார். ஜூன் 2023-ல் சென்னை பெருநகர காவல் துறையின் 109-வது ஆணையராகப் பொறுப்பேற்றார். முன்னதாக, இவர் தமிழ்நாடு காவல்துறை பயிற்சிப் பிரிவு டிஜிபியாக பணியாற்றியுள்ளார்.
109-வது சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் (ஜூன் 30, 2023 முதல் சங்கர் ஜிவாலுக்குப் பிறகு சென்னை ஆணையராகப் பொறுப்பேற்றார், காவலர் பயிற்சி கல்லூரி டிஜிபி, தமிழ்நாடு.
பேட்ச்: 1992 தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ். இவர் காவல்துறை நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர் மற்றும் முக்கிய டிஜிபி பதவிகளில் பணியாற்றியுள்ளார். தறதேர்தல் ஆணையமே தலையிட்டுத் தான் நியமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.2026 தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தாம்பரம் மாநகர் காவல்துறை ஆணையர் அமல்ராஜ் மாற்றம். புதிய ஆணையராக சஞ்சய்குமார் நியமனம்.
மதுரை காவல்துறை ஆணையர் லோகநாதன் மாற்றம், புதிய ஆணையராக அபிஷேக் தீக்சித் நியமனம்.
மேற்கு மண்டல IG யாக இரம்யாபாரதி நியமனம். தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். தூத்துக்குடி ஆட்சியராக விசு மகாஜனும், சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய, ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் உயர் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தூத்துக்குடி: இளம்பகவத் மாற்றப்பட்டு, புதிய கலெக்டராக விசு மகாஜன் நியமனம்.
சேலம்: பிருந்தா தேவி மாற்றப்பட்டு, அருண் தம்புராஜ் நியமனம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகவும், தேர்தல் பணிகளில் அரசியல் தலையீட்டைத் தவிர்க்கவும் இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அதிகாரிகள் தேர்தல் முடியும் வரை எந்தவொரு தேர்தல் பொறுப்புகளிலும் நியமிக்கப்பட மாட்டார்கள்








கருத்துகள்