அமெரிக்கை நாராயணன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முக்கிய நிர்வாகி,
மற்றும் ஊடக விவாதங்களில் பங்கேற்பவர். 37 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரசில் இருந்தவர், இப்போது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவர் தனது துணிச்சலான கருத்துக்களுக்காகவும், கொள்கை முடிவுகளுக்காகவும் அறியப்படுகிறார் அமெரிக்கை நாராயணன் வெளியிட்ட அறிக்கையில் :
"பொதுச்சேவை என்பது நோக்கமும் செயலும் ஒன்றுபட்டு இருக்கும்போது மட்டுமே அர்த்தம் பெறுகிறது. நீண்ட கால சிந்தனைக்குப் பிறகு, மக்களுடன் நேரடியாகவும் தன்னிச்சையாகவும் செயல்படும் என் முயற்சி, கட்சியின் தற்போதைய செயல்முறையுடன் இனி பொருந்தவில்லை என்று நான் உணர்ந்துள்ளேன்.ஒரு அரசியல் கட்சியின் மூலம் பொதுச்சேவையில் ஈடுபடுபவர்கள், அந்தக் கட்சியின் மூலம் நாட்டிற்கு நான் என்ன செய்தேன்?' என்று தங்களைத் தாங்களே கேட்க வேண்டும். அதே நேரத்தில், 'அந்தக் கட்சி நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்கிறதா?
சமூகத்திற்கு உண்மையாக பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு அது அர்த்தமுள்ள வாய்ப்புகளை அளிக்கிறதா? என்பதையும் கேட்க வேண்டும்கட்சி என்பது பொதுமக்களுக்கு சேவை செய்யும் ஒரு ஆயுதம். அந்த ஆயுதம் காலத்திற்கு ஏற்ப மாற்றமடையவில்லை என்றால், அதை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
ஏவுகணை காலத்தில், கையில் கத்தியுடன் களத்தில் நிற்பது முட்டாள்தனமே" எனக்கூறி காங்கிரஸ் கட்சிக்கு 'குட்பை' கூறியுள்ளார்.
அதேவேளையில் தொடர்ந்து பொதுச்சேவையில் ஈடுபட்டு மக்களுடன் சேர்ந்து செயல்படுவேன் என்று கூறியுள்ளார். காங்கிரஸில் இருந்து விலகி உள்ள அமெரிக்கை நாராயணன் 1988 ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்செல்வப்பெருந்தகை தேர்தல் நேரமாக இருப்பதால் நீக்கப்படவில்லை முடிந்த பின் நீக்கிவிடுவார்கள் என்பதால் அவரே முந்திக்கொண்டு விடுவிக்கம்படி கேடடதாக பொது வெளியில் தெரிவித்தார் ஆனால் அது உண்மை இல்லை அவர் தூக்கப்படுகிறாரா?
செல்வம் என்ற செல்வப்பெருந்தகையின் ராஜினாமா அறிவிப்புக்கு பின்னால் இருக்கும் டெல்லி மேலிடத்தின் அதிரடி உத்தரவும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பப்பட்ட ரகசியத் தகவலுமே காரணம் தமிழ்நாடு அரசியலில் பதவி பறிக்கப்படும் சூழலில் அவர் எடுத்திருக்கும் இந்த அடுத்தகட்ட முடிவு, தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரத்தில் ஒரு பெரிய அரசியல் உள்ளேயே சுழன்றடிக்கும் பூகம்பத்தையே கிளப்பியுள்ளது. குறித்த பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்தது.
"தேர்தல் முடிந்ததும் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன்" என ராகுல் காந்தியிடம் தெரிவித்து விட்டதாக செல்வம் என்ற செல்வப் பெருந்தகை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து ராகுல்காந்திக்கு நெருக்கமான தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் பேசிய போது, "செல்வப்பெருந்தகை சொல்வது பொய். காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகளைக் கேட்டு பெறுவதிலும், தொகுதிகளை வாங்கியதிலும், வேட்பாளர்களை சிபாரிசு செய்ததிலும் மிக பெரிய அளவில் கூட்டாக ஊழல் நடந்திருக்கிறது. அதில் புழங்கிய பண விளையாட்டுகள் ராகுல் காந்தியிடம் தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி, அதனை கே.சி.வேணுகோபாலிடம் சொல்லி விசாரிக்கும் படி கூறிய போது தான் தொகுதிகள் பெறப்பட்டதிலிருந்தே ஊழல் நடந்திருக்கிறது என்பதும், சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதும் உறுதி செய்யப்பட்டது.
உடனே கே.சி.வேணுகோபால். அது தொடர்பான அறிக்கையை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த அறிக்கையைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்த ராகுல் காந்தி ," அவரிடம் ( செல்வம் என்ற செல்வப் பெருந்தகையிடம்) ராஜினாமாக் கடிதம் எழுதி வாங்குங்க. உடனே அவரை பதவியிலிருந்தும் நீக்குங்கள்" என கே.சி.வேணுகோபாலிடம் அப்போதே ராகுல் காந்தி உததரவாகச் சொல்ல
அதற்கு வேணுகோபால், " தேர்தல் வேண்டாம். இப்போது நீக்கினால் தேவையற்ற விமர்சனங்கள் வரும். நீக்குவதற்கு அவரது ஜாதி ஆதரவாளரான மல்லிகார்ஜன கார்கேவே கூட இதை எதிர்ப்பார். அதனால் தேர்தல் முடியட்டும்" என்றாராம். இதற்குப் பிறகே அமைதியாகியிருக்கிறார் ராகுல்காந்தி என்கிறனர் விபரம் அறிந்த காங்கிரஸ்காரர்கள்.
இதன்பின் செல்வம் என்ற செல்வப் பெருந்தகையை வரவழைத்து தனது ஒட்டுமொத்த கோபத்தையும் அவர் மீது காட்டிய கே.சி.வேணுகோபால், ராஜினாமா கடிதத்தையம் அவரிடம் எழுதி வாங்கியிருக்கிறார்.
ராஜினாமா கடிதம் கொடுத்துட்டு வந்த செல்வம் என்ற செல்வப் பெருந்தகை, இதைப்பற்றி மல்லிகார்ஜூன காக்கேவிடம் சொல்லி வருத்தப்படவே எனினும், அனைத்தையும் மறைத்து விட்டு, தேர்தல் முடிந்ததும் தான் பதவி விலகுவதாக கூறி நாடகம் போடுகிறார். எப்படியும் தேர்தல் ரிசல்ட் வந்ததும் அவர் நீக்கப்படுவது உறுதி " எனத் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, தொகுதி விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் ப.மாணிக்கம் தாகூர், செ.ஜோதிமணி, கார்த்தி ப.சிதம்பரம், விஷ்ணு பிரசாத் உள்ளிட்ட பலர், தங்களிடமிருக்கும் ஆதார தகவல்களை புகாராக ராகுலுக்கு அனுப்பி வைத்துள்ளனராம்.
இது மட்டுமல்லாமல், திமுகவுடன் பேச்சுவார்த்தை இழுபறியாக இருந்தபோது, பெங்களுர் சென்று மல்லிகர்ஜுன கார்கேவை ரகசியமாகச் சந்தித்தார் செல்லம் என்ற செல்வப்பெருந்தகை. அப்போது, நடந்துள்ள சில பேரங்கள் தொடர்பான 200 சி உள்ளிட்ட தகவல்களும் நாடாளமன்ற உறுப்பினர்களால் தற்போது ராகுல் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேர்தல் முடிவு வெளி ஆனதும், வெற்றியோ தோல்வியோ செலவம் ன்ற செல்வப் பெருந்தகைக்கு எதிராக அகில இந்திய காங்கிரஸ் தலைமை எடுக்கும் முடிவைப் பொறுத்து, அவர் இப்போது அவர் இருக்கும் ஜந்தாவது கட்சியான காங்கிரஸில் இருந்து வேறு முக்கியக் கட்சியில் இணைவதற்கு திட்டமிட்டுள்ளாராம் அந்த செல்லம் என்ற செல்வப்பெருந்தகை. குறிப்பாக, திமுக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் அக்கட்சியில் சேரும் யோசனையில் இருக்கிறாராம். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ தேர்தல் உணர்த்தும்.இந்த நிலையில் "மத்திய தேர்தல் குழு என்பது காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த முடிவு எடுக்கும் அமைப்பாகும். பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு, விரிவான விவாதத்தில் பங்கேற்க உறுப்பினர்கள் கருத்துகளை கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ji அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சித் தலைவர் Rahul Gandhi ji அவர்களின் முன்னிலையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கடினமாக உழைத்த பல காங்கிரஸ் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுக்கு, நமக்கு வெறும் 28 இடங்கள் மட்டுமே உள்ளதால் வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் தலைமை தேர்வு செய்த வேட்பாளர்களை நாம் அன்போடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அறிவிக்கப்பட்ட 27 வேட்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழ்நாட்டை பின்வாசல் வழியாக Fort St. George கோட்டைக்குள் நுழைய முயலும் கோட்சேவின் வாரிசுகளிடம் இருந்து காக்க வேண்டிய போராட்டம் இது". என்கிறார் மணிக்கம் தாகூர் இதில் இரட்டை அர்த்தம் உள்ளதாகவே பர்க்கலாம், காரணம் காந்தி கட்சியில் நுழைந்த கோட்ஷேக்களைத்தான் அவர் அப்படிக் கூறியள்ளார் என பலரும் பேசும் நிலை.









கருத்துகள்