திமுக அ.ராஜா அனுப்பிய வக்கீல் நோட்டீஸுக்கு மன்னிப்புக் கேட்க யூ-டியூபர் மாரிதாஸ் மறுப்பு.
2 ஜி அலைக்கற்றை வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, தன்னை சந்திக்க திமுக எம்.பிக்கள் அல்லது எம்.எல்.ஏ க்கள் அல்லது திமுக கட்சிக்காரர்கள் யாராவது வந்தார்களா? தலைவர் என்ன துரைமுருகனையாவது அனுப்பி எனக்கு ஆறுதல் சொன்னாரா? நான் கைதாகி இரண்டு மாதங்கள் கழித்துத் தான் கனிமொழி கைது செய்யப்படுகிறார். அதன்பிறகு தான் அமைச்சர்கள் முதல் மூத்த தலைவர்கள் வரை ஒவ்வொருவராக டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். அதுவரை யாருமே வரவில்லை. இந்த 2 மாதம் என் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
அந்தச் சமயத்தில் நான் Burst ஆகியிருந்தால் என்னவாகியிருக்கும்? கலைஞர் டிவிக்கு பணம் சென்றது. என் வீட்டில் ஏதாவது ஒன்றை சிபிஐ எடுத்தார்களா? ஒருநாள் அழகிரி நேரில் வந்து சிறையில் என்னை சந்திக்கிறார். கலைஞர் டிவிக்கு வாங்கிக் கொடுத்தது எல்லாம் ஸ்டாலின் தானாம். நீயும், கனிமொழியும் ஏன் சிறையில் இருக்கிறீர்கள். ஸ்டாலின் தான் எல்லாம் செய்தார் எனக் கூறி அப்ரூவராகி விட்டு வெளியே வர வேண்டியது தானே?
கலைஞருக்குப் பிறகு கட்சி அவரிடம் போகும். ஆனால் என்னை விட்டுப் போகாது. ஆறு மாதமோ, ஒரு வருடமோ அதன்பிறகு காட்சிகள் மாறும். குறிப்பாக தான் வெளியே வந்துவிட்டால் ஹீரோ என்கிறார். புத்தகம் ஒன்று வெளியே வரப் போகிறது. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் வெளியிடப்படும். ஹிந்து என்.ராம் படித்து விட்டு மலைத்துப் போய்விட்டார். என்ன சார், இந்த வெளு வெளுத்துவிட்டீர்கள் என என்னிடமே கேட்கிறார். அதில் பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம் என அனைவரையும் பிச்சு எடுத்திருக்கிறேன்.
அந்தப் புத்தகம் வெளியே வந்ததும் ஒரு ஸ்டாராக மாறும். அது வெளிவரும் வரை அடக்கி வாசிப்பேன். அதன்பிறகு எனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக் கொள்வேன். என்னை யாரும் எஸ்.சியாக பார்ப்பதில்லை. இடைநிலை ஜாதியினர் யாராக இருந்தாலும் எனக்கு மரியாதை அளிக்கின்றனர். போதுமான பணம் இருக்கிறது. மூளை இருக்கிறது. ஸ்டாலினுக்கு பெரிய Brain இருக்கா?!அப்புறம் என்ன வேண்டும்? கலைஞர் போய்விட்டால் ஸ்டாலின் – கனிமொழி பஞ்சாயத்து வரும்.
எங்க டெல்லிக்கு போய் ஆங்கிலத்தில் பேசிவிடுவாரா ஸ்டாலின் எனக் கேட்கிறார். இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்பது தங்கையை ஸ்டாலின் ஒருபோதும் நம்ப மாட்டார். அப்படியெனில் என்னை வெளியே தள்ள முடியாது. தன்னை எம்.ஜி.ஆர் என நினைத்துக் கொண்டிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு பின்னர் தான் இவருக்கு setback வரும். தற்போதைய சூழலில் தலைவரே கைதி மாதிரி இருக்கிறார். ஸ்டாலின் Takeover பண்ணிட்டார். ஸ்டாலின்கிட்ட கட்சி போனாலும் என் பிடி விட்டுப் போகாது. என்னை கட்சியை விட்டு எடுக்க முடியாது; அதுக்கு வேற லாக் வச்சிருக்கேன்".
இது மாரிதாஸ் வெளியிட்ட ஆ.இராசா குரல் பதிவான ஆடியோவில் இருந்து ஆ ராசாவின் குரல் பதிவு திமுக வட்டாரத்துக்குள் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் கூறி இருப்பது எல்லாம் உண்மைதான்! என கே.எஸ். ராதாகிருஷ்ணன் கருத்து இது "அப்போது கலைஞருடன் நெருக்கமாக இருந்தேன்! அந்த நேரத்தில் அவரது உடல்நிலை சீர்குலைந்து இருந்தது! ஏதோன்றையும் நிர்வகிக்க இயலாத நிலையில் அவர் இருந்தார்! அந்த இடைப்பட்ட நேரத்தில் கட்சி ஸ்டாலின் கையில் சென்று விட்டது! பேராசிரியர் அன்பழகன் கூட இதுகுறித்து ஏதும் பேச முடியாதபடி மௌனமாக இருந்தார்.!
கருணாநிதியின் இறுதிகாலத்தில் ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது அதனால் தான் இம்முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை என்கிறார். ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்குதா? டெல்லிக்கு போனால் ஆங்கிலத்தில் கிழித்துவிடுவாரா? கனிமொழியை ஒருநாளும் நம்ப மாட்டார், என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ளமுடியாது எடப்பாடி பழனிசாமி என்கிறார்.
ஸ்டாலின் அவரது அப்பாவை கைதி போல வைத்திருந்தார், சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர்
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களையெல்லாம் ஸ்டாலின் தான் தேர்ந்தெடுத்துப் பட்டியலிட்டார். இறுதியும் செய்தார்! என்னைப் பற்றி கலைஞர் பலவாறாக எடுத்துச் சொல்லியும் கூட அந்தப் பட்டியலில் இணைக்காமல் அதை எல்லாம் அசட்டை செய்தார். அந்த வகையில் கலைஞர் ஸடாலினின் போக்கு குறித்து என்னிடம் குறைபட்டுக் கொண்டதுண்டு. அவருடைய செயலாளர் சண்முகநாதன் கூட இது குறித்து என்னிடம் அங்காலாய்த்துக் கொண்டிருந்தார். இப்போது அவர்கள் இருவரும் இல்லை.!
இதற்கிடையில் 2ஜி அலைக்கற்றை ஊழலில்
ஆ . ராசாவைக் கைது செய்து இரண்டு மாதம் திகார் சிறையில் அடைத்து விட்டார்கள். அவர் சொல்லி இருப்பது போலவே இரண்டு மாதங்களாக யாருமே அவரைச் சென்று பார்க்கவில்லை. சென்று யாராவது பார்த்தாலும் கூட அவர்கள் கண்காணிப்பில் எடுக்கப்படுவார்கள் என்கிற அச்சம் இருந்ததோடு முற்றிலும் ஆ ராசாவே அதுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்கிற நிலையிலும் திமுகவின் தலைமை அலட்சியமாக நடந்து கொண்டது. ஊழலில் மட்டும் பங்கு! வழக்கு என்றால் அவர் தனி நபர் ஆகிவிடுவார்.!
இருந்தாலும் நானும் அன்றைக்கு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரும் அவர் பெயர் சொன்னால் அவருக்கும் ஆபத்தாகிவிடும் இருவரும் சேர்ந்து அவரை பட்டியாலா கோர்ட்டில் போய் பார்த்தோம்.
ஸ்டாலின் ஆங்கிலத்தில் பேச முடியாது என்பதும் உண்மை
இதற்கு அடுத்து நடந்தது என்னவென்றால் கனிமொழி கைது செய்யப்பட்டு அதே திகார் ஜெயிலில் அடைக்கப்பட்ட போது எல்லோரும் குய்யோ முறையோ என ஓடிச் சென்று பார்த்தார்கள். பிறகு தான் அங்கு ராஜாவும் இருக்கிறார் என்கிற முறையில் அவரையும் சந்தித்தார்கள். ஸ்டாலின் கூட மிக தாமதமாகக் கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் கழித்த பிறகு தான் போய்க் கனிமொழியை ஆ ராசாவை சந்தித்தார் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது.
அந்நேரத்தில் கட்சியை ஸ்டாலினும் அவரது மருமகனும் ஏறக்குறையக் கையிலெடுத்து விட்டார்கள்! கலைஞரின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்து எதுவும் பேச இயலாத நிலையில் அவர் மௌனம் ஆக்கப்பட்டு விட்டார்.
எனக்கு அது நன்றாகத் தெரியும். அந்த நேரத்தில் பேச முடியா கலைஞர் வைகோவிடம் எதிர்காலத்தில் ஸ்டாலினை நீங்கள் பாதுகாத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்க எந்தவித ஒரு வாய்ப்பும் இல்லை. இப்போது இது மாதிரியான கதைகளை வைகோ சொல்லி வருகிறார்! கலைஞரின் கடைசி காலத்தில் இத்தகைய நிலைப்பாடுகளை எடுப்பதற்கோ சொல்வதற்கோ யாருடனும் கலந்தாலோசிக்கவோ அவரது உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அவற்றையெல்லாம் மறைத்து வைகோ கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கலைஞரின் இறுதிக் காலத்தில் அடிக்கடிச் சென்று அவரைச்சந்தித்து வந்தவன் என்கிற முறையில் இன்றைக்கு ஆ ராசா சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை என்று என் மனதறிந்து கூறுகிறேன். இந்த உண்மைகளுக்கு எல்லாம் அப்பால் அரசியல் சதுரங்க ஆட்டம் நடக்கின்றது! நீயா நானா என்கிற போட்டி கட்சிக்குள்ளேயே அதிகரித்திருக்கிறது. இப்படித்தான் திமுகவில் நடந்துகொண்டிருக்கிறது! இனி என்ன நடக்க இருக்கிறதோ பார்ப்போம்.
ஆ ராசாவின் இந்தக் குரல் பதிவு வரும் தேர்தல் நேரத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது
அதனால் கட்சிக்குள் ஏற்படும் குழப்பங்களையும் இந்தத் தமிழ்ச் சமூகம் வேடிக்கை பார்க்கத்தான் போகிறது" என பதிவில் தெரிவித்த நிலையில் தற்போது மாரிதாஸுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளர் நாடாளுமன்ற உறுப்பினர் அ. ராஜா ஆனால் அதற்கு மாரிதாஸ் தான் மனனிப்புக் கேட்க முடியாது எனத் தெயிவித்துள்ளர்,























கருத்துகள்