உயர் மதிப்பில் ஏலத்தில் வாங்கிய இந்திய ஓவியம். புதிய சாதனை படைத்த இராஜா ரவி வர்மா கலை வண்ணம்
இராஜா ரவி வர்மாவின் யசோதா மற்றும் குழந்தைக் கண்ணன் பசுவுடன் வரைந்த ஆயில் பெயிண்டிங் ரூபாய் .167.2 கோடிக்கு விற்பனையாகி, அதிக மதிப்பில் வாங்கிய இந்திய ஓவியம் எனும் சாதனையை படைத்தது. மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நேற்று Saffronart நிறுவனத்தின் ஏலம் நடைபெற்றதில் ராஜா ரவி வர்மா வரைந்திருந்த 'யசோதா மற்றும் கிருஷ்ணா' புகைப்பட ஓவியம் ரூபாய் .167.2 கோடிக்கு விற்பனையாகி, அதிக தொகைக்கு விற்கப்பட்ட இந்திய ஓவியம் எனும் சாதனையை படைத்தது. எம்.எப். ஹுசைனின் 'கிராம் யாத்ரா' ஓவியம் ரூபாய் .118 கோடிக்கு விற்பனை மட்டுமே முந்தைய சாதனையாக இருந்தது. அந்த ஓவியத்தை டெல்லியைச் சேர்ந்த பிரபல கலைப்பொருள் சேகரிப்பாளர் கிரண் வாங்கினார்.
தொழிலதிபரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் பூனாவாலா இந்த ஓவியத்தை வாங்கினார்.
1980-களில் ராஜா ரவி வர்மா உச்சத்தில் இருந்த போது வரைந்த ஓவியமிது. யசோதா பசுவிடம் பால்கறக்கும்போது, கிருஷ்ணன் அவரது பின் இருந்து பாலை எடுக்க முயற்சிக்கும் காட்சி தான் இந்த அழகிய ஓவியம்.
இந்திய யதார்த்தவாதக் கலை பாணியில் அமைந்த இந்த ஓவியம், இந்தியக் கலைத்துறையின் "மோனலிசா" என்று கலை விமர்சகர்களால் போற்றப்படுகிறது.
ராஜா ரவி வர்மாவின் படைப்புகள் "தேசிய பொக்கிஷங்களாக" வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இவற்றை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்ல அனுமதி இல்லை. இந்த ஓவியங்களை இந்தியாவிற்குள் மட்டுமே விற்கவோ அல்லது மாற்றவோ முடியும்.
நவீன இந்திய ஓவியக் கலையின் தந்தை என அழைக்கப்படுபவர் ராஜா ரவி வர்மா. கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், இந்தியக் கலை வரலாற்றில் ஒரு ஓவியப் புரட்சியை ஏற்படுத்தியவர்.
ஐரோப்பிய ஓவிய நுணுக்கங்களையும், எதார்த்தவாதத்தையும் இந்தியத் தொன்மவியல் காதைகளுடன் (இராமாயணம், மஹாபாரதம்) இணைத்து ஓவியங்களை வரைந்தவர்.
சாமானிய மக்களும் கலைப்படைப்புகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தனது ஓவியங்களை அச்சுப் பிரதிகளாக வெளியிட்டு, அவற்றை கிராமப்புறங்களில்கொண்டு சேர்த்தார்.
இன்று நாம் பார்க்கும் பல ஹிந்து வழிபடும் தெய்வங்களின் உருவங்களுக்கு (லக்ஷ்மி, சரஸ்வதி) வடிவம் கொடுத்தவர் இவராகும்.இதன் மூலம் இந்தியக் கலைப் பொருள் விற்பனைக்கு உரிய சந்தையின் வளர்ச்சியை மட்டுமில்லாமல் , பாரம்பரிய கலைப்பொருட்களின் முதலீட்டுப் பொருளாகவும், கலாச்சார அடையாளமாகவும் அதிக மதிப்பைப் பெறுகின்றன என்பதை வெளிப்படுத்துகிறது. மேலும், இந்தியக் கலைஞர்களின் படைப்புகள் உலகளவில் புதிய உயரங்களை எட்டக்கூடிய காலமிது என்பதற்கான உறுதியான சான்றாகவும் இந்த ஏலம் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.ஸ்பிரிங் லைவ் ஏலத்தில், இந்த ஒப்பற்ற தலைசிறந்த படைப்பு ஏழு நிமிட ஏலப் போட்டியைத் தொடர்ந்து, குறிப்பிடத்தக்க ரூபாய் .167.20 கோடிகளை ($17.97 மில்லியன்) எட்டியது. இதன் விளைவாக இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட தெற்காசியக் கலையின் அதிக மதிப்புள்ள படைப்புக்கான புதிய உலகளாவிய சாதனையை நிறுவியுள்ளது.
இந்த ஆரம்ப ஓவியம் வசந்த கால ஏலத்தின் முக்கிய அம்சமாக வெளிப்பட்டது, ஐரோப்பிய கல்வியியல் யதார்த்தவாதம் மற்றும் இந்திய புராணக் கதைகளின் சிறந்த தொகுப்பு மூலம் இந்திய கலையின் நியதிக்குள் கலைஞரின் நீடித்த முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.





கருத்துகள்