புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி , மற்றும் கேபினட் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காஷ்மீரின் திரைப்பட சிறப்புத் திரையிடலை பிராவிடன்ஸ் மாலில் உள்ள சினிமா ஹாலில் கண்டார்
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அது குறித்து தனது பதிவில் எங்களுடன் சேருங்கள், இப்போது பார்க்கிறேன். கனத்த இதயத்துடன் காஷ்மீர் கோப்புகளைப் பார்த்தோம் - என பதிவிட்டு நிலையில் பண்டிட்டுகள் தங்கள் சொந்த நிலத்தில் படும் உண்மையான துன்பங்கள்.
கடினமான உண்மைகளின் அடிப்படையில் உண்மையை வெளிப்படுத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட படம்.
திரைப்படத்தை உருவாக்கிய விவேக் அக்னிஹோத்ரி குழுவினருக்கு பாராட்டுக்கள், தேசபக்தர்களின் வரலாற்றுக் காப்பகத்தை வெளிப்படுத்தியது.
உண்மை வெளிப்பட்டதென்று பலர் தெரிவித்த நிலையில். மாறாக காஷ்மீர் பைல்ஸ் பலரது பார்வையில் அரைகுறை உண்மைகளும், ஒரு சார்பு கண்ணோட்டமும் மிக ஆபத்தானது இந்தப் படம் என சிலர் கூறினாலும் இன்றைக்கு இந்தியாவில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் இந்து-முஸ்லீம் இணக்கத்தையும் அடியோடு கெடுகாக்கப் பார்க்கிறது எனக் கூறுவோரும் உண்டு.
இந்தப் படம் பார்க்கின்ற - உண்மையான வரலாறு தெரியாத எந்த ஒரு மனிதனுக்குமே இஸ்லமியர் மீது ஆழ்ந்த வெறுப்பு மேலோங்கும் என்பதில் சந்தேகமில்லை என சிலர் கூறினாலும் அதனால் தான் இந்த படத்திற்கு பாஜக ஆளும் மாநிலங்கள் வரிவிலக்கு கொடுத்துள்ளனவா என்ற வினா எழாமல் இல்லை.
பிரதமர் தொடங்கி அனைத்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களும் படத்தை ஆஹா வென்று புகழ்கின்றனர். மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் அரசு ஒருபடி மேலே சென்று இந்தப் படத்தை குடும்பத்தோடு சென்று பார்க்க விரும்பும் காவல்துறையினர் குடும்பங்களுக்கு ஒரு நாள் விடுமுறையாக அறிவித்துள்ளது.
எந்த ஒரு கலைப் படைப்பின் வெற்றியும் அது அன்பையும், மனவிசாலத்தையும், அரவணைத்து வாழும் பண்பையும் உருவாக்குவதில் தான் உள்ளது. இந்தப்படமோ இதற்கு நேர் எதிராக உள்ளது. என்று விமர்சனம் வந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றி என்பது, இந்திய சமூகத்தின் அமைதிக்கான தோல்வியாக வாய்ப்புள்ளது என்பதை ஆழ்ந்த வேதனையுடன் பதிவு செய்த பலரைக் காணும் நிலை.
காஷ்மீர் மண்ணில் இந்து பண்டிட்களின் கண்ணீரும், ரத்தமும் மட்டுமா உறைந்திருக்கிறது! அதே அளவுக்கு இஸ்லாமியர்களின் இழப்புகளும் உண்டே! இந்த இருதரப்புக்குமான இணக்கத்தை சீர்குலைத்து விடும் என்று கடுமையாக விமர்சனம் வந்த போதும் இந்தப் படத்தையும் எடுத்த அரைகுறை உண்மைகளை பேசுவதாக பல்வேறு இடங்களில் கூறிய நிலையில்
அரைகுறை உண்மைகளையும் , ஆதாரமற்ற புனைவுகளையும் ஒருதலைபட்சமான காட்சி படிமங்களாக்கி ’முஸ்லீம் வெறுப்பு’ என்ற நோக்கத்திற்காக நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் காஷ்மீர் பைல்ஸ்! அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கலைத் திறமையும், நவீன சினிமா தொழில் நுட்பங்களும் கைகோர்த்து இந்துத்துவ நோக்கத்தை நிறைவு செய்கின்றன என்று விமர்சனம் வரவே நாம் பார்த்த பிறகு முழுமையாக விமர்சனம் முன் வைக்கலாம்.
காஷ்மீர் பண்டிட் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு வேண்டும். அந்த ஈனச் செயல்களில் ஈடுபட்டோரை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும். புலம் பெயர்ந்த பண்டிட் சமூக மக்களை மீண்டும் அவர்களது வாழ்விடங்களில் குடியமர்த்த வேண்டும். யுகம் யகமாக ஒன்றாக பின்னிப்பிணைந்து வாழ்ந்த காஷ்மீர் முஸ்லீம்களும், காஷ்மீர் பண்டிட்களும் ‘காஷ்மீரியத்’ என்று போற்றப்படும் காஷ்மீரத்துக்கே உரித்தான மத நல்லிணக்கத்தை மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பது நாமனைவரின் விருப்பமாகும் ! ஆனால், இந்தப் படம் இந்த நோக்கத்திற்கு எதிரானதா ஆதரவானதா என்பது அவரவர் பார்வையில் பப்ளிக் ஜஸ்டிஸ்
ஆர்.எஸ்.எஸின் வீரியமான கலை வடிவமே காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் மேலும் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஆளுநர் சுற்றுப்பயணம் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்திற்கு வருகை தந்த தெலுங்கானா ஆளுநரும், பாண்டிச்சேரி துணைநிலை ஆளுநருமான மேதகு தமிழிசை சவுந்தராஜனுடன் சிவகங்கை மாவட்டஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் த.செந்தில் குமார் வருகை புரிந்தனர். ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் காரைக்குடி கம்பன் விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த காரணமாக குன்றக்குடி திருவண்ணாமலை ஆதின மடத்திற்கு விஜயம் செய்தார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை கழகத்திற்கு வருகை தந்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி , மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். அருகில் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் உடனிருந்தனர்.
கருத்துகள்