முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை என்.சி.எஃப்-எஸ்.இ யால் வெளியிடப்பட்டது

பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை புதுதில்லியில் மத்தியக் கல்வியமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார் மத்தியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) இன்று (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் அமைச்சர் இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், இந்தியா மீது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார். உலகளாவிய பொறுப்புகளை நிறைவேற்ற, தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி முறையை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஒரு முழுமையான, தற்காலத்துக்கேற்ற  மற்றும் இந்தியப் பாரம்பரியத்துடன் கூடியக் கல்வியை வடிவமைப்பதில் இந்தக் கட்டமைப்பின் பங்கை அவர் எடுத்துரைத்தார். பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை வெளியிடுவது தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய ஊக்கச்சக்தியாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார...

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான 1.698 கிலோ கோகைன் பறிமுதல்

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.16.98 கோடி மதிப்பிலான 1.698 கிலோ கோகைனை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் மற்றொரு நடவடிக்கையில், நைரோபியில் இருந்து நேற்று வந்த கென்யா பயணியை புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்தது. அப்பயணியை விசாரித்தபோது, எந்த தடை செய்யப்பட்ட பொருளையும் எடுத்துச் செல்லவில்லை என்று மறுத்தார். எனினும், வருவாய்ப் புலனாய்வு இயக்குநகரக அதிகாரிகளால் சந்தேக நபரின் உடமைகளை பரிசோதித்ததில், சர்வதேச சந்தையில் சுமார் ரூ .17 கோடி மதிப்புள்ள சுமார் 1,698 கிராம் கோகைன் மீட்கப்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு மும்பை புறப்படவிருந்த விமானத்திற்கான விமான டிக்கெட்டை அவர் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதன் மூலம் தடைசெய்யப்பட்ட பொருட்களை மும்பையில் விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ச்சியான விசாரணை மற்றும் கண்காணிப்பைத் தொடர்ந்து, வருவாய்ப் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளின் துல்லியமான திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் விளைவாக தடை...

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது  'சந்திரனில் இந்தியா கால் பதித்திருப்பது' குறித்து அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புகழாரம் "நிலவில் இந்தியா வாழ்க! இஸ்ரோ வாழ்க!". இது மத்திய  அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்,  தென் துருவப் பகுதியில் நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் 3 வெற்றிகரமாக மென்மையாக தரையிறங்கியதைத் தொடர்ந்து கூறிய தொடக்க வாக்கியம் ஆகும். அவர் விண்வெளித் துறைக்கு பொறுப்பு வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், சந்திரயான் -3 தரையிறங்கிய துல்லியமான தருணத்துடன் சரியாக ஒத்துப்போகும் ஒரு ட்வீட்டில், டாக்டர் ஜிதேந்திர சிங், "மற்றவர்கள் சந்திரனைக் கற்பனை செய்யும் போது, நாம் சந்திரனை உணர்ந்துள்ளோம். மற்றவர்கள் கனவுகளின் பரப்பில் சிக்கிக் கொண்ட நிலையில், சந்திரயான் 3 கனவை நனவாக்கியுள்ளது. 'வானம் எல்லை அல்ல' என்று பிரதமர் மோடி கூறியபடி, இந்தியாவின் உறுதிப்ப...

துறைமுகப் பாதுகாப்பு பணியகம் விரைவில் அமைக்கப்படுமென அமைச்சர் தகவல்

துறைமுகப் பாதுகாப்பு பணியகம் விரைவில் அமைக்கப்படும்: சர்பானந்தா சோனோவால் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் , இந்தியாவின் கடல்சார் துறைக்கான தொலைநோக்கு பார்வையை வெளியிட்டார், குஜராத்தின் கெவாடியாவில் இன்று நடைபெற்ற 19 வது கடல்சார் மாநிலங்களின் மேம்பாட்டு கவுன்சில் கூட்டத்தில் உருமாற்ற தாக்கத்துக்கு  உறுதியளிக்கும் முக்கிய முன்முயற்சிகளை விளக்கினார். நாட்டில் உள்ள அனைத்து துறைமுகங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக துறைமுக பாதுகாப்பு பணியகத்தை அரசாங்கம் விரைவில் ஒன்றிணைக்கும் என்று திரு சோனோவால் கூறினார்.  நிலையான வளர்ச்சியில் அரசின் கவனத்தை எடுத்துரைத்த அவர், மத்திய அரசு மற்றும் மாநில அரசு துறைமுகங்களில் ஹைட்ரஜன் மையங்களை உருவாக்குவதற்கான அமைச்சகத்தின் லட்சியத் திட்டம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு துறைமுகங்களும் ஹைட்ரஜன் மையங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் என்று அவர் கூறினார். இதற்காக ரூ.1.68 லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தீனதயாள் துறைம...

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பசுமை ஹைட்ரஜன் வரையறையை அறிவித்தது

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பசுமை ஹைட்ரஜன் வரையறையை அறிவித்தது இந்தியா தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் முன்னேற்றத்திற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இந்தியாவுக்கான பசுமை ஹைட்ரஜன் தரநிலையை மத்திய அரசு  அறிவித்துள்ளது. இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (எம்.என்.ஆர்.இ) வெளியிட்டுள்ள தரநிலை, உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை 'பசுமை' என்று வகைப்படுத்துவதற்கு, அதாவது புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து பூர்த்தி செய்ய வேண்டிய உமிழ்வு வரம்புகளை கோடிட்டுக் காட்டுகிறது. வரையறையின் நோக்கம் மின்னாற்பகுப்பு அடிப்படையிலான மற்றும் உயிரி அடிப்படையிலான ஹைட்ரஜன் உற்பத்தி முறைகள் இரண்டையும் உள்ளடக்கியது. இந்த விஷயத்தில் தொடர்புடைய பல தரப்பினருடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் பசுமை ஹைட்ரஜன் குறித்து வரையறுக்க முடிவு செய்துள்ளது. பசுமை ஹைட்ரஜனை அளவிடுதல், அறிக்கையிடுதல், கண்காணித்தல், தள சரிபார்ப்பு மற்றும் சான்றிதழ் ஆகியவற்றிற்கான விரிவான முறை புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச...

அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழு 21 முதல் ஆகஸ்ட் 24, 2023 வரை நார்வேக்கு பயணம்

 மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையிலான உயர்மட்டக் குழு, மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனுடன், ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24, 2023 வரை நார்வேக்கு பயணம் மேற்கொள்கிறது மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தலைமையிலான உயர்மட்டக் குழு,  மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகனுடன், ஆகஸ்ட் 21 முதல் ஆகஸ்ட் 24, 2023 வரை நார்வேக்கு பயணம் மேற்கொள்கிறது. இந்தக் குழுவில் இணைச் செயலாளர் (கடல் மீன்வளம்) மற்றும் மீன் வளத்துறையைச் சேர்ந்த மற்ற உயர் அதிகாரிகளும் அடங்குவர். மார்ச், 2010 இல் இரு நாடுகளும் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு துறையில் இந்தியா மற்றும் நார்வே இடையே இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும். 2023 ஆகஸ்ட் 22 முதல் 24 வரை நார்வேயின் ட்ரொன்ட்ஹெய்மில் நடைபெறும் அக்வா நார் 2023 கண்காட்சி மற்றும் வர்த்தக கண...

மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒற்றை ரயிலாக இணைப்பு

மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒற்றை ரயிலாக இணைப்பு மதுரை-குருவாயூர் இடையே புதிய சேவை இயங்கும் தற்போது, தினசரி இயக்கப்பட்டு வரும் குருவாயூர் –புனலூர் - குருவாயூர்  எக்ஸ்பிரஸ் , மதுரை - செங்கோட்டை -மதுரை  எக்ஸ்பிரஸ் ,செங்கோட்டை - கொல்லம்- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, மதுரை - குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே ரயிலாக, மதுரைக்கும், குருவாயூருக்கும் இடையே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்தப் புதிய ரயில் மதுரையிலிருந்து வரும் 27ந்தேதி அன்றும், குருவாயூரிலிருந்து 28-ந்தேதியன்றும் தனது சேவையைத் தொடங்கும். ரயில் எண். 16327 மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ், மதுரையில் இருந்து 27ந்தேதி பகல் 11.20 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை அடையும். மறுமார்க்கத்தில், ரயில் எண். 16328 குருவாயூர் - மதுரை எக்ஸ்பிரஸ் , குருவாயூரிலிருந்து 28ந்தேதி காலை 5.50க்கு புறப்பட்டு, அன்று இரவு 7.50க்கு மதுரை சென்றடையும். இந்த ரயில், மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், கோட்டயம், திருச்சூர் உள்ள...