பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை புதுதில்லியில் மத்தியக் கல்வியமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் வெளியிட்டார் மத்தியக் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை (என்.சி.எஃப்-எஸ்.இ) இன்று (23.08.2023) வெளியிட்டார். தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை மேற்பார்வைக் குழு மற்றும் கற்றல், கற்பித்தல் தொடர்பான பாடத்திட்டக் குழுவின் முதலாவது கூட்டுப் பயிலரங்கில் அமைச்சர் இன்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், இந்தியா மீது உலக நாடுகளின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று கூறினார். உலகளாவிய பொறுப்புகளை நிறைவேற்ற, தொழில்நுட்ப அடிப்படையிலான கல்வி முறையை நாம் உருவாக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஒரு முழுமையான, தற்காலத்துக்கேற்ற மற்றும் இந்தியப் பாரம்பரியத்துடன் கூடியக் கல்வியை வடிவமைப்பதில் இந்தக் கட்டமைப்பின் பங்கை அவர் எடுத்துரைத்தார். பள்ளிக் கல்விக்கான தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பை வெளியிடுவது தேசியக் கல்விக் கொள்கையை செயல்படுத்துவதில் ஒரு முக்கிய ஊக்கச்சக்தியாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார...
RNI:TNTAM/2013/50347