இந்திய விமானப்படையின் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் அறக்கட்டளையான ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா முதல் தலைமைச் செயல் அதிகாரி CEO வாக 2026 செப்டம்பர் 2 ஆம் தேதி இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ராமர் கோயிலில் ஏற்பட்ட உண்டியல் காணிக்கை முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளாரர இப்பதவிக்காக வந்த 5,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை முன்னாள் நீதிபதி பிரமோத் கோலி தலைமையிலான குழு பரிசீலித்து இவரைத் தேர்வு செய்தது. ராமர் கோயில் வளாகத்தின் நிதி மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகச் செயல்பாடுகளை இவர் கவனிப்பார். இந்திய விமானப்படையின் மிக முக்கிய பிரிவான மேற்கு விமானப்படைப் பிரிவின் தளபதியாக (AOC-in-C, Western Air Command) பணியாற்றினார். எல்லையில் வான்வழி மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation Sindoor) நடவடிக்கையை முன்னின்று வழிநடத்தியவர். 1986-ல் போர் விமானியாக (Fighter Pilot) இணைந்து, சுமார் 38 ஆண்டுகள் நாட்டுக்குச் சேவையாற்றி 2026 ஆம் ஆ...
சிங்கை ஜி.இராமச்சந்திரன் என்பவர் கோவிந்தராசு மகன் இவர் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போது தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 11, 2026 ஆம் தேதி அன்று தவெகவில் இணைந்தவருக்கு, மூன்றே வாரங்களில் முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக (TANSIM Chairman) பொறுப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.ஜூலை 2026 ல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தவர், ஆகஸ்ட் மாதம் தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மார்ச் 2016 ல் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதாவால் அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (IT Wing) செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் அக்கட்சியின் மாணவர் அணிச் செயலாளராகவும் பணியாற்றினார். 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி கண்டார் டிசம்பர் 11, 1987 அம் தேதி கோயம்புத்தூரில் பிறந்த...