அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடியாக சேர்த்த ரூபாய்.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும், 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு, அரசு நிலத்தை கையகப்படுத்திய போது அதை தனிநபர்கள் அரசுக்கே விற்று இழப்பீடு பெற்றதில் நடந்த மோசடி மற்றும் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் - தொடர்பாக, 15 இடங் களில் சோதனை நடத்தி, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அலுவலர்கள் முடக்கி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத் தில், சென்னை பெங் களூரு தேசிய நெடுஞ் சாலை விரிவாக்கத்திற்கு, பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு அனாதீன நிலங் களுக்கு முறைகேடாக பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்டு உள்ளது. நெமிலி கிராமத்தில், அதேபோல் 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ். ஆர்., எனப்படும், அரசு நிலங்களுக்கு, பத்திரம் பதிவு செய்து வடகால் கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள, ஓ.எஸ்.ஆர். நிலங்களுக்கு, பத்திரம் தயாரித்தும், 21 கோடி ரூபாய் மோசடியாக போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட் இழப்பீடு டுள்ளது. வி ஜி பி ஹவுசிங் டெவலப...
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் வீடு, மகள் இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வரும் இல்லத்திலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகனும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர். வத்தலகுண்டு அருகே, தமிழ்நாடு உள்ளாட்சி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் பின்னலாடை நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை நடத்தினர். மகள் வீட்டிலும் சோதனை நடந்தது.அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரகநாதன் என்பவருக்கு சொந்தமான ஜவுளி பின்னலாடை நிறுவனம் வத்தலகுண்டு அடுத்த, கே.சிங்காரக்கோட்டை அருகே, ஒட்டு...