பீஹார் சட்டமன்றத் தேர்தல் 2025 ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பரிதாபமான தோல்வியைச் சந்தித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 19 இடங்களைப் பெற்ற கட்சி, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் முன்னேற்றம் எதுவும் இல்லை காரணம் அதன் அகில இந்தியத் தலைமை மல்லிகர்ஜூன கார்கே. தன்னை ஒரு காமராஜர் போலவே நினைக்கும் நிலையில் தனது ஜாதி சார்ந்த நபர்களை மட்டுமே வளர்க்க நினைத்து மாநிலத் தலைவராக மாற்றம் செய்த பின்னர் கழுதை தேய்த்து கட்டெறும்பு ஆகி தற்போது காணவில்லை. இது தற்செயலான தோல்வி அல்ல; கட்சியின் அடிப்படைப் பலவீனங்களின் வெளிப்பாடு. தலைமை இல்லாமை, உத்தி இழப்பு, உள்ளார்ந்த பிளவு, ஜாதி அரசியலில் பின்தங்கிய தன்மை, இவையே காங்கிரஸின் பீஹார் மாநிலத்தில் தோல்விக்கான முக்கியக் காரணங்கள். முதலாவதாக, பீஹாரில் காங்கிரஸுக்கு ஒரு நல்ல தலைவர் முகம் இல்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தேசிய அளவில் பிரசாரம் செய்தாலும், முந்தைய வசீகரமில்லை உள்ளூர் தலைவர்களிடம் செல்வாக்கும் இல்லை. மாநிலத் தலைவர் மாதவ் ஆனந்த் அல்லது ஷகீல் அகமது போன்றோர், யாதவ் அல்லது முஸ்லிம் வாக்காளர்களிடம் கூட ஒரு ஈர்ப்பு இல்லை. 2020 ஆம் ஆண்டில்...
குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் ரூ.9,700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்ட...