பாரதிய ஜனதா கட்சியின் புதிய அகில இந்திய நிர்வாகிகள் பட்டியலை தேசியத் தலைவர் நிதின் நபின் வெளியிட்டுள்ளார். தேசியத் தலைவராக நிதின் நபின் ஜனவரி மாதம் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தற்போது தேசிய அளவில் 65 நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள புதிய நியமனங்களின் முக்கியப் பதவிகள் மற்றும் நிர்வாகிகள் தேசியத் தலைவர்: நிதின் நபின் தேசியப் பொருளாளர்: பியூஷ் கோயல் (மத்திய அமைச்சர்) தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர்: பி.எல். சந்தோஷ் இவர் பதவக நீடிக்கிறார் சமூக ஊடகப் பொறுப்பாளர் தீபக் மஸ்கே இவர் அமித் மால்வியாவுக்குப் பதிலாக நியமனம் ஊடகப் பொறுப்பாளர் அனில் பலூனி மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 8 பேர் தேசியப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.ஸ்மிருதி இரானி, வினோத் தாவ்டேசுனில் பன்சால்பிப்லாப் குமார் தேவ்அருண் சிங் உள்ளிட்டோர ஆவர் தேசியத் துணைத் தலைவர்கள் 13 நபர்கள் அதில் முன்னாள் மாநில முதலமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் உள்ளடக்கிய 13 பேர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்....
சென்னை எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உரையாற்றினார் செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள் போன்றவை எதிர்காலத்தை வடிவமைக்கும்: குடியரசு துணைத்தலைவர் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய பயணத்தில் இளைஞர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு: குடியரசு துணைத்தலைவர் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன், சென்னைக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் அறிவியல், தொழில்நுட்ப நிறுவனத்தின் 22-வது பட்டமளிப்பு விழாவில் இன்று (16.08.2026) கலந்துகொண்டார். அப்போது, 'தேசமே முதன்மையானது - தேசமே முக்கியமானது' என்ற கொள்கையின் அடிப்படையில், தங்கள் அறிவு, திறன்கள், புதுமைச் சிந்தனைகள் ஆகியவற்றைத் நாட்டைக் கட்டமைக்கப் பயன்படுத்துமாறு பட்டம் பெறும் மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், பட்டமளிப்பு விழா என்பது வெறும் பட்டங்களைப் பெறும் நிகழ்வு மட்டுமல்ல என்றார். இது பல ஆண்டுகால விடாமுயற்சி, ஒழுக்கம், கற்றல் ஆகியவற்றைக் கொண்டாடுவ...