முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு தலைமைச் செயலகம் 100 வருடங்கள் கடந்து வந்த பாதையும் சில தடைகளும்

தமிழ்நாடு தலைமைச் செயலகம் கடந்து வந்த பாதைகள்  செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ்,                            - மாதிரி அமைப்பு - 'புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்' என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்தார். தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் 21.76 ஏக்கர் நிலத்தை  செப்டம்பர் மாதம் 8-ஆம் தேதி G.O.(Ms) No.564 அரசாணையை வெளியிட்டு ஒதுகீடு செய்து நடவடிக்கையை அரசு தொடங்கியது. இந்த நடவடிக்கைக்கு எதிராக பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் மற்றும் பெரும்பாலான தவெகவின் எதிர் அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்கின்றன.  புதிய தலைமைச் செயலகம் தேவை என்ற விவாதம் இப்போது தொடங்கியதல்ல. சென்னையின் பறந்து விரிந்த கடற்கரையில் கல்கத்தா தலைமையிடமான ஆங்கில பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக மையத்தை பொதுஆண்டு 1639-ல் இப்பகுதியை நிர்வகித்து வந்த தாமர்ல வெங்கடப்ப நாயக்கரிடமிருந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அதிகாரி பிரான்சிஸ் டே வர்த்தக மையம் அமைப்பதற்கான நிலத்தைப் பெற்றார். அவரது ...
சமீபத்திய இடுகைகள்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் அவதூறு செய்த அலுவலர் மீதான நடவடிக்கை தீவிரம்

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த நபரை செருப்பாலடிக்கப் பாய்ந்து, அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டுக்கு உள்ளான அலுவலர் கலைமண்ணன் மண்டபம் முகாமின் சிறப்பு துணை ஆட்சியர பொறுப்பில் இருந்தவர்.  மண்டபம் முகாமில் வசித்து வரும் ஜெகநாதன் (வயது 53) என்ற இலங்கைத் தமிழர், தனக்கு ஏற்பட்டுள்ள குடலிறக்கம் நோய்க்கான சிகிச்சைப் பெற சென்னை செல்வதற்காக சார் ஆட்சியரிடம் முகாமில் முறைப்படி அனுமதி விடுப்பு கோரியுள்ளார்.  ஏற்கனவே விண்ணப்பித்திருந்த விடுப்பு குறித்து அவர் மீண்டும் கேட்கச் சென்றபோது, சார் ஆட்சியர் கலைமண்ணன் அவரிடம் மிகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி, தனது காலணியைக் கழற்றி அடிக்க முயன்றுள்ளார். இது வைரால் காணொளியில் "பிச்சுப்புடுவேன் பிச்சு... செருப்பைக் கழட்டி அடிச்சிடுவேன் நாயே..." என்று அலுவலர் மிரட்டும்  காட்சிகள் வெளியாகி பொதுமக்களிடையே கடுமையான கண்டனங்களை எழுப்பியது. தற்போது இந்த விவகாரம் தொடர்பாக உரிய துறை ரீதியான விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, ஆத்திரமடை...

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் பொறுப்பு கூடுதலாக என். சுப்பையன், ஐ.ஏ.எஸ் நியமனம்

தமிழ்நாடு அரசின் சமூக நீதி மற்றும் ஊர்திப் பணிகள் துறைச் செயலாளராக இருக்கும். என். சுப்பையன், ஐ.ஏ.எஸ் , தற்போது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைச் செயலாளர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் டாக்டர் ம. சாய்குமார், ஐ.ஏ.எஸ் இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை செப்டம்பர் 11, 2026 அன்று பிறப்பித்துள்ளார், இதற்குமுன் வேளாண்மை துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த சங்கர், ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டு, தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.  வேளாண்மை துறைச் செயலாளர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சமூக நீதித் துறைச் செயலாளராக உள்ள சுப்பையன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் இப்பொறுப்பு முழு கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது

2026 ஆம் ஆண்டுக்கான 18 வது பிரிக்ஸ் உச்சிமாநாடு தலைவர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டுக்கான 18 வது பிரிக்ஸ் உச்சிமாநாடு புது தில்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது.   நாடுகளின்  முக்கியத் தலைவர்கள் மாநாடு பங்கேற்பாளர்கள் ரஷ்யா: அதிபர் விளாடிமிர் புதின்சீனா: அதிபர் ஷி ஜின்பிங்ஈரான்: அதிபர் மசூத் பெசஷ்கியன்தென் ஆப்பிரிக்கா: அதிபர் சிரில் ரமபோசாஇந்தோனேசியா: அதிபர் பிரபோவோ சுபியான்டோஎகிப்து: அதிபர் அப்துல் ஃபத்தாஹ் எல்-சிசிமலேசியா: பிரதமர் அன்வர் இப்ராஹிம்ஐக்கிய அரபு அமீரகம்: அபுதாபி இளவரசர் ஷேக் கலீத் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான்எத்தியோப்பியா: பிரதமர் அбий அகமது அலிவியட்நாம்: பிரதமர் லெ மின் ஹுங்கஜகஸ்தான்: அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ்பிலிப்பைன்ஸ்: அதிபர் பெர்டினاند ஆர். மார்கோஸ் ஜூனியர்புருண்டி: அதிபர் எவாரிஸ்டெ 3-ஆம் இடத்து நியாயம்கேள் (எவாரிஸ்டெ நதிஷிமியே) மேலும் பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியீரா, மற்றும் ஐநா பொதுச்செயலாளர் அந்தோனி குக்ரெஸ், உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அபெனோம் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர் புது தில்...

கன்னியாகுமாரி மாவட்ட காவல்துறைக்கு புதிய கண்காணிப்பாளர் நியமனம்

கன்னியாகுமரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (டாக்டர் ஆர். ஸ்டாலின் ராஜா ஐ.பி.எஸ் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தமிழ்நாடு அரசு இன்று செப்டம்பர் 11, 2026 ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவின் படி, அவர் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, புதிய பணி நியமனமின்றி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணைக் காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த அன்ஷுல் நாகர் IPS கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல்துறைக் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றில் எஸ்பி ஸ்டாலின் ராஜா குறித்து கடுமையான பெண்கள் குற்றச்சாட்டு கலந்த விமர்சனங்களை முன்வைத்திருந்ததைத் தொடர்ந்து கன்னியா குமரி மாவட்டத்தில் அந்த சமூக ஊடக நபர் மீது 4 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் ஏதோ சில தகவல்கள் உளவுத்துறை சேகரித்து அதன்படி இந்த அரசியல் மற்றும் சமூக ஊடக விவாதப் பின்னணியில் இந்த திடீர் இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பெண...