மஹாராஷ்டிராவின் மிகப்பணம் படைத்த பாஜக எம்.எல்.ஏ மற்றும் தொழிலதிபரான பராக் ஷா, செப்டம்பர் 2026-ல் அவரது ஆடம்பர வாழ்க்கையை விடுத்து, மும்பை வீதிகளில் ஒரு நாள் பிச்சைக்காரர் வேடமிட்டு யாசகம் பெற்ற நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகப் பேசப்படுகிறது. இந்த சுவாரசியமான சம்பவம் பிச்சைக்காரனாக மாறியதற்கான காரணம் பராக் ஷா ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மற்றும் மும்பை காட்கோபர் (கிழக்கு) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் 2024 மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலின் போது தனக்கு ரூபாய் .3,383 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் இருப்பதாக வேட்புமனுவில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அவர் குஜராத்தி ஜைனம் எனும் சமண மதத்தைச் சேர்ந்தவர். ஜைன மதப் புனித மாதத்தையொட்டி, மனிதர்களுக்குள் இருக்கும் அகந்தை, பணத் திமிர் மற்றும் அதிகார போதையை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அவரது ஆன்மீகக் குருவான நம்ரமுனி மகாராஜின் அறிவுரையின்படி இந்த வித்தியாசமான முயற்சியை அவர் மேற்கொண்டார். அடையாளம் தெரியாத தோற்றமாக மாறிய வேடம்: தனது பாதுகாவலர்கள், சொகுசு கார்கள் மற்றும் விலைமதிப்பற்ற உடமைகளைத் தவிர்த்துவிட்டு, அழுக்கான ஆடைகள்...
விருப்பாச்சி கோபால நாயக்கர் வரலாறு - வேலுநாச்சியாரை பாதுகாத்த மாவீரர்* திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே உள்ள விருப்பாச்சி பாளையத்தின் 19-வது பாளையக்காரர். மதுரை நாயக்கர்கள் காலத்தில் தமிழகம் 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது. அதில் ஒன்றுதான் விருப்பாச்சி. இயற்பெயர் *திருமலை குப்பள சின்னய்ய நாயக்கர்*. 1725-ல் வீரய்யா நாயக்கர் - காமாட்சி அம்மாள் தம்பதிக்கு பிறந்தார். இவர்தான் பிற்காலத்தில் கோபால நாயக்கர் என்று அழைக்கப்பட்டார். 1772 ஜூன் 25 காளையார் கோவில் போரில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயர் - ஆற்காடு நவாப் கூட்டுப்படையால் கொல்லப்பட்டார். கணவரையும், நாட்டையும் இழந்த ராணி வேலுநாச்சியார் தனது கைக்குழந்தை வெள்ளச்சி, அமைச்சர் தளவாய் பிரதானி தாண்டவராய பிள்ளை, தளபதிகள் மருது பாண்டியர் சகோதரர்களுடன் தப்பினார். பிரதானி தாண்டவராயன் பிள்ளை தான் விருப்பாச்சியை தேர்வு செய்தார். காரணம், அப்போது விருப்பாச்சி மைசூர் மன்னர் ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயரால் எளிதில் நுழைய முடியாத பாதுகாப்பான இடம். இராணி வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்த *திண்டுக்க...