முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சர்க்கரை விலை உயர்வைத் தடுக்க நடவடிக்கை

சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும், பண்டிகைக் காலங்களில் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை சர்க்கரையின் விலை, 20 ஜூலை 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 48.18 ஆக இருந்த நிலையில், 20 ஆகஸ்ட் 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 55.70 ஆக உயர்ந்துள்ளது. அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நுகர்வோருக்குப் போதுமான சர்க்கரை கிடைப்பதையும் நிலையான விலையையும் உறுதி செய்வதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்திய சர்க்கரை விலை உயர்வுக்கு, எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை திசை திருப்பப்படுவதைக் காரணம் காட்டுவது தவறானது. உண்மையில், எத்தனால் தயாரிப்பிற்காகத் திருப்பிவிடப்படும் சர்க்கரையின் பங்கு, 2022-23-ல் சுமார் 12% ஆக இருந்ததிலிருந்து, 2025-26-ல் சுமார் 9% ஆகக் குறைந்துள்ளது. மேலும், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இப்போது தானியங்களிலிருந்தே, குறிப்பாக மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்பார்த்ததை விடக் குறைவான உள்நாட்டு உற்பத்தி, பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அதிகரித்த தேவை, கரும்புப் பயிரில் வானில...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்காலம் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமாரின் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதியின்படி, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 2026 முதல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி , 2027 ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து தலைமைச் செயலாளராகப் பதவியில் இருப்பார். பதவி நீட்டிப்பு பதவிக் காலம் 6 மாதங்கள் கால வரம்பாக 01.09.2026 முதல் 28.02.2027 வரைஅதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) அனுமதியை வழங்கியுள்ளது.தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அகில இந்திய பணி விதிகளின் கீழ் (AIS Rules, 1958) ன் படி இந்த சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம்,

 இளம், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு, அதிக அளவிலான வாய்ப்புகள், வலுவான சர்வதேசத் தொடர்புகள் உருவாக்கப்பட வேண்டும்: மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கான வழிகாட்டுதல் குழுவின் முதல் கூட்டம், 2026 ஆகஸ்ட் 21 அன்று புதுதில்லியில் உள்ள கடமை மாளிகை-2-ல் நடைபெற்றது. மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்தத் திரைப்பட விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், உலகத்தரம் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவாக, வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2026 நவம்பர் 20 முதல் 28 வரை, கோவாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் உரையாற்றிய டாக்டர் எல் முருகன், இளம் மாணவர்கள், வளர்ந்து வரும் திரைப்படத் தயாரிப்பாளர்கள், இந்தியத் திரைப்படத் துறையின் அதிகம் அறியப்படாத சாதனையாளர்களுக்கு, அதிக வாய்ப்புகள் வழங்கபட வேண்டும் என்று வலியுறுத்தினார். இளம் திறமையாளர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படு...

புனேவில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டம்

புனேவில் நடைபெற்ற 12-வது பிரிக்ஸ் தொலைத்தொடர்பு அமைச்சர்கள் கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார் 12-வது பிரிக்ஸ் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று (21.08.2026) மகாராஷ்டிராவின் புனேவில், இந்தியாவின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா தலைமை வகித்தார். இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள், பிரதிநிதிக்குழுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெறும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பிரிவின் கருப்பொருளான “மீள்திறன் கொண்ட எதிர்காலத்திற்காகப் புதுமை, ஒத்துழைப்பு, மாற்றங்கள்” என்பதை எடுத்துரைத்தார். அதன் நான்கு தூண்களான மீள்திறன் கொண்ட டிஜிட்டல் தொழில்நுட்பச் சூழலமைப்புகள், இணையப் பாதுகாப்பு, டிஜிட்டல் திறன் மேம்பாடு, புத்தாக்கம் ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இன்று, உலகம் ஒரு ஆழமான தொழில்நுட்ப மாற்றத்...

வனச்சரகரை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத் துறை

தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் யானைக்கு தடுப்பு அகழி அமைக்கும் பணியின் ஒப்பந்ததாரரிடம் ரூபாய் 1 லட்சம் லஞ்சம் வாங்கிய சிவகிரி வனச்சரகர் கதிரவன் (வயது 51), ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  சிவகிரி மற்றும் புளியங்குடி மலைப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்க 8 கி.மீ. தொலைவிற்கு யானை தடுப்பு அகழி (Elephant Proof Trench) அமைக்கும் பணி நடந்து வருகிறது.  இப் பணிக்கான ஒப்பந்ததாரர் சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் எடுத்துச் செய்து வருகிறார். இதுவரை செய்யப்பட்ட ரூபாய் .18.45 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு தரவேண்டிய பில் தொகையில் கமிஷனாக ரூபாய் .3.69 லட்சம் தர வேண்டும் என வனச்சரகர் கதிரவன் வற்புறுத்தியுள்ளார். இதன் முதல் தவணையாக ரூபாய் . 1 லட்சத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அவர் கட்டாயப்படுத்தியுள்ளார், லஞ்சம் கொடுக்க விரும்பாத ஒப்பந்ததாரர் சுரேஷ்குமார், இதுகுறித்து தென்காசி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் (DVAC) புகார் அளித்தார்....

தையூரில் கூலிப்படையை ஏவி ஒரே ஜாதியில் நடந்தது ஆணவக் கொலையா? விசாரணை தீவிரம்

தையூரில் கூலிப்படையை ஏவி ஒரே ஜாதியில் நடந்தது ஆணவக் கொலையா? போராட்டம் பின் விசாரணை,       மகளின் காதலனைக் கொன்றதாக தவெக நிர்வாகியுடன் சிலர் கைது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா தையூரில்  பிரவீன்குமார் (வயது 23) என்ற அட்டவணை பட்டியல் சமூக இளைஞர் அதே சமூக நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தகவல்  மேற்கண்ட சம்பவத்தின் பின்னணி      தையூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரவீன்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.  பெற்றோர் எதிர்ப்பு: இதற்கு பெண்ணின் வீட்டார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு, பெண்ணின் உறவினர்கள் மற்றும்  கூட்டாளிகள் பிரவீன்குமாரைக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய நிலையில்  படுகாயமடைந்த பிரவீன்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 21 ஆம் தேதியில் உயிரிழந்தார்...

மேகமலை மக்களுக்கு அரசு தீர்வு காண வலியுறுத்த அணைத்துக் கட்சிகளை அழைக்கும் கே.சி.திருமாறன் ஜி,

மாஞ்சோலை மற்றும் மேகமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு ‘தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்புவோம். தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை!  என  மாஞ்சோலை, மேகமலை அதை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வை நியமித்து அவர் ஆஜராகி, மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம்பஞ்சு மரம் பயிரிடப்பட்டுள்ளது.அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்களில் சில குடும்பங்கள் பல ...