வால்பாறை தனித் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சுதாகரின் ஜாதிச் சான்றிதழைச் சரிபார்க்கக் கோரிய வழக்கில், இந்தியத் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அளவிலான ஜாதிச் சான்றிதழ் சரிபார்ப்புக் குழு ஆகியவை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வால்பாறை தனித் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுதாகரை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஸ்ரீதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கைத் தொடர்ந்தார். அதில் சட்டமன்ற உறுப்பினர் ஆன சுதாகர் தனது வேட்புமனுவில், தான் ஹிந்து மதத்தைச் சேர்ந்த பட்டியல் இனத்தவர் (SC) எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் தீவிரமாக கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகிறார் என்றும், சிஎஸ்ஐ தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி ஞானஸ்தானம் மற்றும் திருமணம் செய்துகொண்ட அவரது தந்தை ஆரோக்கியத்தின் உடல் கிறிஸ்தவ முறைப்படி கல்லறைத் தோட்ட்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. சட்ட வாதத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஹிந்து, சீக்கியர் அல்லது பௌத்த மதங்களைத் தவிர வேறு மதங்களைப் பின்பற்றுபவ...
டெண்டர் முறைகேடு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ் மீது அறப்போர் இயக்கம் கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரில் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இது முதற்கட்ட நடவடிக்கை அரசு பணி சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அந்த ஊழல் முறைகேடு செய்ய காரணமான ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும். தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாகவை மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டு சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது அறப்போர் இயக்கம், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்த புதிய தவெக அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது தற்போது அதிர்ச்சியாகும், இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...