தீ பற்றி 25 பேர் உயிரிழந்த கோவா யூனியன் பிரதேச விடுதியின் உரிமையாளர்கள் தப்பியோட்டம்: இண்டர்போல் உதவியை நாடியது காவல்துறை கோவாவில் நடந்த தீவிபத்தில் 25 பேர் உயிரிழந்த விடுதியின் உரிமையாளர்கள் இரண்டு பேர் தாய்லாந்துக்கு தப்பியோடியுள்ளனர். விபத்து நடந்த மறுநாள் அவர்கள் இருவரும் தப்பிச்சென்றதாகத் தெரிகிறது. கோவாவின் வடக்குப் பகுதியிலுள்ள பாஹா கடற்கரைப் பகுதியில் 'பிர்ச் பை ரோமியோ' லேன்' என்ற இரவு நேர விடுதி செயல்படுகிறது. பாகா மற்றும் வகேட்டர் கடற்கரை பகுதிகளில் பிரபலமான இந்த ஹோட்டல் அரசு நிலத்தை ஆக்கிரமித்ததற்காக நீதிமன்ற உத்தரவின் பேரில் இடிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போதைய நிலையில் 'Romeo Lane The Boutique Resort' என்ற பெயரில் அசாகாவில் புதிய சொகுசு விடுதியாக உள்ளது. முன்பு இரவு விடுதி, உணவகம் (இத்தாலியன், இந்தியன்). மாடலாகும் இது கோவாவில் சட்ட சிக்கல்களுக்கு உள்ளான ஒரு புகழ்பெற்ற கடற்கரை ஹோட்டல் ஓராண்டுக்கு முன்னர் துவக்கப்பட்ட இந்த இரவு நேர விடுதியில் வார இறுதி நாட்கள் என்பதால், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட ஏரளமானோர் கடந்த மூன்று தினம் ம...
மதுரை மாவட்ட கிராம உதவியாளரிடம் ரூபாய்.67.25 கோடி சொத்து வருமானத்திற்கு மீறியது என ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு மதுரை மாவட்டம் கிராம உதவியாளர் (தலையாரி) பணி தனது வருமானத்தை மீறி ரூபாய்.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர். மதுரை மாவட்டம் செக் கானுாரணியைச் சேர்ந்தவர் பாண்டி வயது 58. திருமங்கலம் தாலுகா கே.புளியங்குளததில் கிராம உதவியாளராகப் பணியில் உள்ளார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு புகார் வந்தது.குறித்து விசாரித்த குழுவினர், ஆவணங்களின் அடிப்படையில் ரூபாய்.67.25 கோடிக்கு சொத்து சேர்த்ததை உறுதி செய்த நிலையில் வழக்குப்பதிவு செய்தனர். அதில், 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா ஏ.கொக்குளத்தில் பாண்டி, கிராம உதவியாளராகப் பணிபுரிந்தார். மாதச்சம்பளத்தை தாண்டி அவரது பெயரிலும், அவர் மனைவி ராணி, மற்றும் மகன்கள் பெயர்களிலும...