முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தாசில்தாரைக் கடித்த நாயால் மக்களுக்கு ஏற்பட்ட நல்ல தீர்வு

இந்தியாவில் தெரு நாய்கள் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் பற்றிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது இந்த நிலையில் தான் தற்போது அம்பத்தூரில் நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், காவலர் ஒருவரை விலங்கு நல ஆர்வலர் ஒருவர் (பெண்) மரியாதைக் குறைவாக, கடுமையாக பேசிய காணொளி ஒன்றை காண நேர்ந்தது. தெருவில் திரியும் நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும் தொல்லை குறித்த வழக்கில்  சமீபத்திய உச்சநீதி மன்ற உத்தரவில், தெரு நாய்களுக்கு சாலைகளில் உணவிடக் கூடாது என்றும், உள்ளாட்சி நிர்வாகங்கள் நாய்களுக்கு உணவிடுவதற்கு தனியாக இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் தெருக்களில் நாய்களுக்கு உணவிடக்கூடாது. அப்படி உணவிடுவது குற்றம் என்றும், எந்த ஆர்வலரும், அமைப்பும் இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகளை எதிர்ப்பதோ, அவர்களின் பணியில் இடையூறு செய்வதோ கூடாது என்றும் அப்படி செய்தால் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுக்கும் குற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிட்ட...
சமீபத்திய இடுகைகள்

பிரதமர் கோயம்பத்தூர் வருகை எதிரொலி பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரக் கண்காணிப்பு ஏற்பாடு

கோயம்பத்தூர் கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி (நாளை மறுநாள்) துவங்க உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்து, சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்குகிறார்.  இந்த மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மதியம் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோயம்பத்தூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு மீண்டும் கோயம்பத்தூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயமுத்தூரில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக உரியஜபாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ப...

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அரு.வெள்ளையன் செட்டியார் காலமானார்

முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் செட்டியார், நவம்பர் 17, 2025 இன்று 72வது வயதில் காலமானார். அவர் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத் தலைவராகப் பணியாற்றியுள்ளார், மேலும் அவரது தலைமையில் குழுமம் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. அவரது தலைமைப் பதவியில் இருந்து விலகிய பிறகு, குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பொறுப்பைத் தனது உறவினர் எம்.எம். முருகப்பனுக்குக் கொடுத்தார்.  முக்கிய பொறுப்புகள்: முருகப்பா குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத் தலைவர். பதவி விலகல்: 2018 பிப்ரவரியில் தலைவர் பதவியில் இருந்து விலகி, எம்.எம். முருகப்பனிடம் பொறுப்பை ஒப்படைத்தார். சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரை பூர்வீகமாகக்  கொண்ட வருக்கு லலிதா  என்ற மனைவியும், அருண்  மற்றும் நாராயணன்  என்ற இரண்டு மகன்களும், பேரக்குழந்தைகளும் உள்ளனர். அருணாசலம் வெள்ளையன் பிறப்பு 9 ஜனவரி 1953 ஆம் ஆண்டு ஒரு இந்தியத் தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் சென்னையில் உள்ள முருகப்பா குழுமத்தின் துணைத் தலைவராவார். பிப்ரவரி 2018 ஆம் ஆண்டு, அவர் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகினார், அந்த இடத்தை தனது சகோதரர் ...

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு விதிகள், 2025 அறிவிக்கப்பட்டுள்ளன டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு  விதிகள், 2025-ஐ 2025, நவம்பர் 14 அன்று மத்திய அரசு அறிவித்தது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம், 2023 முழுமையாக செயல்படுத்தப்படுவதை இது குறிக்கிறது. இந்தச் சட்டமும் விதிகளும் சேர்ந்து, டிஜிட்டல் தனிப்பட்ட தரவைப் பொறுப்புடன் பயன்படுத்துவதற்கான தெளிவான, குடிமக்களை மையமாகக் கொண்ட கட்டமைப்பை உருவாக்குகின்றன. அவை தனிப்பட்ட உரிமைகள் மற்றும் சட்டபூர்வமான தரவு செயலாக்கத்தில் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றன. வரைவு விதிகளை இறுதி செய்வதற்கு முன், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொதுமக்களின் கருத்துகளை வரவேற்றது. தில்லி, மும்பை, குவஹாத்தி, கொல்கத்தா, ஐதராபாத், பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் ஆலோசனைகள் நடத்தப்பட்டன. இந்த விவாதங்களில் பல்வேறு பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். புத்தொழில் நிறுவனங்கள், எம்எஸ்எம்இ-கள், தொழில்துறை அமைப்புகள், சிவில் சமூகக் குழுக்கள், அரசுத் துறைகள் என அனைத்தும் விரிவான பரிந்துரைகளை வழங்கின. குடிமக்களும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்...