பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பயிற்று மொழி குறிந்து கருத்து, அதில் "கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப...
கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். குறு விவசாயிகளுக்கு ரூபாய் .50,000 வரை பயிர்க்கடன்கள் -முழு தள்ளுபடி. சிறு விவசாயிகள் - 50 சதவீதம் கடன் தள்ளுபடி 20,000 தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கை. “5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி...” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார்கள்,இன்று ரூபாய் 50,000 வரை மட்டும்”என அறிவிப்பு அதிலும் மே 2025-பிப்ரவரி 2026 என்று கால அளவீடு செய்தது தான் இது ஏமாற்றம் இல்லையா? 50 சதவீதம் தள்ளுபடி இல்லை ரூபாய் 50,000 மட்டுமே கால அளவு கட்டுப்பாடு வேறு உள்ள நிலையில் பயனடையும் உண்மை விவசாயிகள் யார் என்பது இனி மேல் தான் தெரியும். சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வி...