முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திமுக மாணவர் அணி ராஜீவ்காந்தி பதவியைப் பறித்து பெண் நிர்வாகிக்கு வழங்கி நடவடிக்கை

திமுக மாணவர் அணி ராஜீவ்காந்தி பதவியைப் பறித்த. காரணம் என்ன ? திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து ராஜிவ் காந்தியை நீக்கி, கட்சியின் பொதுச்செயலாளர் க.துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக மாணவரணிச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜிவ் காந்தி, கொள்கை பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜிவ் காந்தி பதவி நீக்கம் குறித்து  திமுக பொதுச்செயலாளர் க.துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர் அணிச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தியை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து. கழக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” எனவும் மற்றொரு அறிக்கையில், “திமுக மாணவர் அணி துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வரும் ஜெ. வீரமணி என்பவர் திமுக மாணவர் அணிச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்” என அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில், திமுகவின் முக்கிய பிரிவான மாணவரணியின் செயலாளர் மாற்றப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தி.மு.க வின் மாணவர் அணிச் செயலாளராகச் செயல்பட்ட ராஜீவ் காந்தியை தீடிரென அந்தப் பதவியிலிருந்து நீக்கிய தி.மு.க தலைமை. அவரு...
சமீபத்திய இடுகைகள்

சென்னை மாநகராட்சி ஊழல் முறைகேடு உயர் நீதிமன்றம் ஊழல் தடுப்பு விசாரணை நடத்த உத்தரவு

சென்னை மாநகராட்சி ஊழல் முறைகேடு சென்னை உயர் நீதிமன்றம் ஊழல் தடுப்பு விசாரணை நடத்த உத்தரவு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஒரு வழக்கில் தோல்வியுற்றனர்.  அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 1421 நாட்கள் சுமார் 4 ஆண்டுகள் காலதாமதமானது. அதாவது தாமதம் செய்தனர் காரணம் கேட்டால் அவர்கள் கூறிய பதில் "கோப்புகள் தொலைந்து விட்டது!" என்பதே  தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீ வத்ஷவா மற்றும் நீதிபதி G.அருள்முருகன் இணை அமர்வு அதை கடுமையாக கண்டித்தது:  "போதுமான காரணமே இல்லை மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது"  "இது ஒட்டு மொத்த அலட்சியமாகவே இருக்கலாம், அல்லது எதிர் தரப்புடன் கூட்டுச் சதியாகக் கூட இருக்கலாம்!" அல்லது லஞ்சம் வாங்க பேரம் பேசுகின்ற முறையாகக் கூட இருக்கலாம்  "அரசு என்பதால் தாமதம் மன்னிக்கப்படும் என்று நினைக்கக் கூடாது" இந்த வழக்கை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும் இது அலட்சியமா, திட்டமிட்ட சதியா எனக் கண்டறிய வேண்டும் இந்தத் தீர்ப்பின் நகல் தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் உச்ச நீதிம...

வி.கே.சசிகலாவுக்கு கட்சியை விற்பனை செய்த மதரை சக்கரவர்த்தி

பாஜகவால் பழி வாங்கப்பட்டவர் பத்து ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் அதிமுக பொதுச் செயலாளர் பதவி வரும் எனக் காத்திருந்த ஜெ உடன் பிறவா சகோதரி  வி.கே.சசிகலா நடராஜன் புதிதாக கட்சியைத் தொடங்கவில்லை! ஆனால் விலைக்கு வங்கி அதில் இணைந்துள்ளார் .மதுரையைச் சேர்ந்த சக்கரவர்த்தி.  இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2016 ஆம் ஆண்டு 'அகில இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் கட்சியை பதிவு செய்தார். அதைத்தான் தனது கட்சிப் பெயராக விலைக்கு வாங்கி வி.கே.சசிகலா நடராஜன் அறிவித்தார். அதாவது அஇபுதமமுக கட்சியை வாங்கி இணைந்துள்ளார்.     அதுவே தேர்தல் ஆணையத்தின் பதிவு. கூறும் உண்மை.      இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தேசியக் கட்சிகளாகவும், மாநிலக் கட்சிகளாகவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர, வேறு சில கட்சிகள் தங்களை அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. அவை இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் தேதி நிலவரப்படி 2,064 கட்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) 2019 ஆம் ஆண்டு ...

ரூபாய் .5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திடக்கோடடை வி.ஏ.ஓ., கைது

ரூபாய் .5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய திடக்கோடடை வி.ஏ.ஓ., கைது தேவகோட்டை தாலுகா வாரிசு சான்றிதழுக்காக ரூபாய் .5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 46). இவர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா திடக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். திடக்கோட்டையைச் சேர்ந்த ராஜா (வயது 42), இவரது தந்தை இறந்துவிட்டதால் தேவகோட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கேட்டு ஆன்லைன் மூலம் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதியில் உரிய சான்றுகளுடன் சமர்ப்பித்தார். தனக்கு ரூபாய் .5000 கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் பெற வட்டாச்சியருக்குப் பரிந்துரை செய்வதாக கிராம நிர்வாக அலுவலர் சுதாகர் கூறினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜா சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம்  புகாரளித்தார். அவர்கள் ஆலோசனைப்படி அவரிடம் அவர் கொண்டு வந்த பணத்தை அரசு சாட்சி முன்னிலையில் பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய ரூபாயை திரும்பக் கொடுத்து அரசு சாட்சி உடன் அனுப்பினர்.அன்று மதியம் 12:00 மணிக்கு தேவக...