சிறப்பு செய்திகள் :ரெங்கநாதன் திருப்பதி- " பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே"....... சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம்.. பித்தன் எம்பெருமான் ஈசன் பிறையான சந்திரனை சூடியதால் சந்திர தரிசனம் முக்கிய வழிபாடு சந்திர தரிசனம் கண்டால் தீராத நோய்கள் நீங்கும். வளர்பிறை சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறுகள் நீங்கும். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும் ஏனெனில் சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நகர வாழ்வில் வீட்டில் மாடியில் நின்று மாலையில் வளர்பிறை சந்திரனை மறக்காம மாலை தரிசனம் பண்ணுவது எளிது சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். கோவிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் பார்க்கலாம். ...
தமிழ்நாடு இன்று 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளரான ககன் தீப் சிங் பேடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சத்ய பிரதா சாகு, நீர்வளத் துறை செயலாளராகவும், போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித்துறை செயலாளராகவும், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் முதன்மைச் செயலாளர்/மேலாண்மை இயக்குனர் அனில் மேஸ்ராம் எரிசக்தித் துறை செயலாளராகவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் வள்ளலார் போக்குவரத்துத் துறைச் செயலாளராகவும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த கேஎஸ் பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயலாளராக இருந்த தக்ஷிணாமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர்...