முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரம் குறித்த வழக்கு மற்ற வழக்குளுடன் இணைப்பு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

நீதிமன்ற உத்தரவில்லாமல் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானதென உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்த மனுவிற்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.  கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் வீரேந்திராவின் சொத்துக்களை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக முடக்கி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அது தொடர்பான வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமான அதிகாரம் அதனை முறைகேடாக பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதாக குற்றம் சாட்டினார்  சட்டமன்ற உறுப்பினர் சித்ரதுர்கா இயங்க முடியாத நிலையில், அவரது வங்கிக் கணக்குகள், ஆபரணங்கள், வாகனங்கள் என அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கி வைத்திருப்பதாகவும் முகுல் ரோத்தகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பணப்பரிமாற்றச் சட்டத்தில் சில தவறுகள் இருப்பதாகக் கூறினர். சொத்துக்கள் மீதும், அரசியல் அமைப்பு பாதுகாப்புகள் மீதும் நீதித்துறை சாராத நபர்கள் எப்படி முடிவு எடுக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து மத்திய அரசு மற்றும்...
சமீபத்திய இடுகைகள்

மஹாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

மஹாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). காலமானார் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில்  மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார், முன்னால் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுகளில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், மேலும், 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகவும், 2010 ஆம் ஆண்டு முதல் 2015  ஆம் ஆண்டு வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார். மராட்டியத்தின் லட்டூரில் உள்ள வீட்டில் சிவராஜ் பாட்டீல் காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், மூத்த அரசியல் தலைவர் சிவராஜ் பாட்டீலை நாம் இழந்துவிட்டோம். சிவராஜ் தனது நீண்ட பொதுவாழ்வில் மக்களவை சபாநாயகர், மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிர...

2001 நாடாளுமன்றத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அஞ்சலி

2001 நாடாளுமன்றத் தாக்குதலின் போது வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார் மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை  அமைச்சருமான திரு அமித் ஷா, நாடாளுமன்றத் தாக்குதலின் போது, பயங்கரவாதிகளுக்குப் பதிலடி கொடுத்து உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்கு அஞ்சலி செலுத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது:  "2001-ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் கோவிலான நமது நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை முறியடித்த நமது பாதுகாப்புப் படையினரின் அசாத்தியமான துணிச்சலையும் வீரத்தையும் மீண்டும் நினைவுகூரும் நாள் இன்று. பயங்கரவாதிகளுக்குத் தகுந்த பதிலடியான இந்த தீரமிக்க வீரர்களின்  தியாகத்திற்கு இந்த நாடு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்."

தலைமைத் தகவல் ஆணையர் நியமனம்

நாட்டின் தலைமைத் தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களைத் தேர்வு செய்யும் குழுவில் பிரதமர், மூத்த அமைச்சர் ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி ஆகியோர் இந்தக் குழுவில் உள்ளனர். மத்திய அரசின் புதிய தலைமைத் தகவல் ஆணையர் பதவி காலியாக இருந்தது. எனவே புதிய தகவல் ஆணையரை நியமிப்பது தொடர்பாக நேற்று முன் தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆலோசனைக்கு பிறகு ராஜ் குமார் கோயல் புதிய தகவல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் மத்திய சட்டத்துறை செயலாரான ராஜ்குமார் கோயல், 1990 ஆம் ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் பேட்ச் அதிகாரியாவார். உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மைத் துறையின் செயலாளராகவும் இவர் பதவி வகித்துள்ளார் . ஜனாதிபதி திரவுபதி முர்மு முன்னிலையில் ராஜ் குமார் கோயல் பதவியேற்க உள்ளார். இவருடன், மேலும் 8 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட உள்ளனர்,

கேரளா மாநில பஞ்சாயத்துத் தேர்தல் முடிவுகள்

கேரளா மாநில பஞ்சாயத்துத் தேர்தலில்  மொத்தமுள்ள 941 பஞ்சாயத்துகளில் 500க்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளிலும், மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4 பேரூராட்சிகளிலும் UDF வெற்றி பெற்றது. கேரளாவல் இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று யாரும் நினைத்ததில்லை.  கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எண்ணிக்கை முடிவடையும் தருவாயில், INC தலைமையிலான UDF மாநிலம் முழுவதும் முன்னணியில் உள்ளது, LDF மற்றும் NDA வின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பிராந்தியங்கள் முழுவதும் அதன் தடத்தை விரிவுபடுத்துகிறது.  மத்திய கேரளாவின் முக்கிய மாவட்டங்களில் INC மீண்டும் கட்டுப்பாட்டை பெற்றுள்ளது  கேரளா பஞ்சாயத்து தேர்தல் - காங்கிரஸ் தலைமையிலான UDF எழுச்சி ... BJP நிறைய லாபம் ... திருவனந்தபுரம் மாநகராட்சியில் முதல் முறையாக BJP பெரும்பான்மை பெறும் ... இடது முன்னணிக்கு பெரும் தோல்வி கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பினராயிக்கு எதிரான போக்கை பிரதிபலிக்கின்றன... UDF க்கு தெளிவான ஆணையும், பாஜகவும் மாநிலத்தில் வலிமையான அரசியல் சக்தியாக மாறி வருகிறது. இடதுசாரிகளுக்கு எதிரான வாக்குகள் பிரிந்ததால் எல்.டி.எஃப் அடுத்த ஆட்ச...

திரைப்படம் தயாரித்த ஆயிஷா சாதிக் புகாரில் யூடியூப் நடத்தும் சவுக்கு சங்கர் கைது

அரசியல் சர்ச்சைக்குரிய யூடியூபர் சவுக்கு சங்கர், இன்று அதிகாலை சென்னை ஆதம்பாக்கம் காவல்துறையால்  கைது செய்யப்பட்டார். ஒரு சினிமா காட்சி போல நடந்த இந்தக் கைது நடவடிக்கை, தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாகியுள்ளது  அதன் பின்னணி விபரம்: சிக்க வைத்த சினிமா சம்பவம்:- அவரது கைதின் பின்னணியில் சினிமா தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆயிஷா சாதிக் என்பவர் அளித்த  புகார் குறித்த விரிவான விவரங்களைக் கண்போம் : ஆயிஷா சாதிக் என்பவர் தயாரித்து இயக்கிய 'ரெட் அண்ட் பாலோ' (Red and Follow) எனும் திரைப்படம் விரைவில் வெளியாகத் தயாராக இருந்த நிலையில், சவுக்கு சங்கர் அவரது யூடியூப் பக்கத்தில் அந்தத் திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குறிப்பாக, அந்தத் திரைப்படம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை மூலம் ஈட்டப்பட்ட பணத்தில் (Drug Money) தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார். மேலும், போதைப்பொருள் வழக்கில் கைதான அஜய் வாண்டையார் என்பவர் இப்படத்தில் நடித்திருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் காணொளியும் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கர் தன்னை அவதூறாகப் பேசியதா...

நீதிபதி நிஷா பானு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து பணியிடம் மற்றம் செய்யப்பட்டு நீண்ட நாட்களாக விடுப்பிலிருக்கும் நீதிபதி நிஷா பானு டிசம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நிஷா பானுவை பணியிட மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி அளித்த பரிந்துரையின் அடிப்படையில் மத்திய சட்ட அமைச்சகம் பணியிட மாற்றத்திற்கு ஒப்புதல் அளித்து உத்தரவிட்டதையடுத்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி கேரளா மாநில உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி நிஷா பானு பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கேரளா உயர்நீதிமன்றத்தில் இதுவரை நிஷா பானு பணி பதவி ஏற்காமல் கடந்த அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து நீதித்துறை சார்ந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் விடுப்பிலிருப்பதாக தகவல் வெளியான நிலையில், கொலீஜியத்துடன் ஆலோசனை நடத்திய பின் குடியரசுத்தலைவர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிசம்பர் மாதம் 20ஆம் தேதிக்குள் கேரளா மாநில உயர்நீதிமன்றத்தில் பணியில் சேர நீதிபதி நிஷா பானுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்ப...