முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சவுக்கு இணையயதள சங்கரை ஜாமீனில் விடுவித்த பலமான தீர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 12 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது, தமிழ்நாட்டின் ஜனநாயக அமைப்பில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. சங்கர், அரசியல் ஊழல்களை வெளிப்படுத்தும் தனது விமர்சனங்களுக்காக புகழ்பெற்றவர், ஆனால் அவர் தொடர்ந்து காவல் துறையின் இலக்காக மாறியுள்ளார். நீதிமன்றம், சங்கரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த ஜாமீனை வழங்கியது, ஆனால் அதோடு நிற்காமல், காவல் துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தது. "விமர்சனம் என்பது ஜனநாயக உரிமை" என்று கூறிய நீதிமன்றம், சங்கரை தொடர்ச்சியாக கைது செய்வது அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாகக் கண்டித்தது. இது, தமிழ்நாட்டு அரசின் DMK ஆட்சியின் கீழ், விமர்சகர்களை அடக்கும் போக்கை வெளிப்படுத்துகிறது. சவுக்கு சங்கரின் பின்னணியைப் பார்க்கும்போது, அவர் ஒரு பணி நீக்கம் செய்யப்பட்ட  அரசு ஊழியர், பின்னர் ஊடகவியலாளராக மாறியவர். அவரது யூடியூப் சேனல் மூலம், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல்களை அம்பலப்படுத்தியுள்ளார். உதாரணமாக, போக்குவரத்து துறை ஊழல்கள், அரசு ஒப்பந்தங்களில் முறைகேடுகள...
சமீபத்திய இடுகைகள்

தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பியளிக்கப்பட்டது

தேசிய நுகர்வோர் உதவி எண் மூலமான புகார்களின் அடிப்படையில், 8 மாதங்களில் 45 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டது மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறையின் முதன்மை முயற்சியான தேசிய நுகர்வோர் உதவி எண், நாடு முழுவதும் நுகர்வோர் குறைகளை திறம்பட, சரியான நேரத்தில் தீர்வு காண்பதில் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது. 2025 ஏப்ரல் 25 முதல் டிசம்பர் 26 வரையிலான எட்டு மாத காலத்தில், இந்த உதவி எண், மூலம் 31 துறைகளில் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான 67,265 நுகர்வோர் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 45 கோடி ரூபாய் பணம் திரும்ப வழங்கப்பட்டுள்ளது . நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படுவதற்கு முந்தைய கட்டத்தில் செயல்படும் இந்த உதவி எண்ணில் புகார் அளிக்கும்போது, சிக்கல்களை விரைவாகவும், இணக்கமாகவும் தீர்க்க முடிகிறது. நுகர்வோர் ஆணையங்களின் சுமையையும் குறைக்கிறது. கடந்த 8 மாதங்களில் மின் வணிகத் துறையில் அதிகபட்சமாக 39,965 குறைகள் பதிவு செய்யப்பட்டு, அதன் மூலம் 32 கோடி ரூபாய் நுகர்வோருக்கு திரும்ப வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பயணம், சுற்றுலாத் துறையில் 4,050 குறைகள் பதிவு செய்ய...

சுங்க அனுமதிக் குழுக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது

சுங்க அனுமதிக் குழுக் கூட்டம் டில்லியில் நடைபெற்றது டில்லி சுங்க மண்டலத்தின் தலைமை சுங்க ஆணையரின் தலைமையில், தில்லி சுங்கத்துறையால், ஐஜிஐ விமான நிலையத்தில் உள்ள கல்பனா சாவ்லா மாநாட்டு அரங்கில் சுங்க அனுமதி வசதிக்குழு  கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்,  தாவரத் தனிமைப்படுத்தல் மற்றும் மருந்து கட்டுப்பாட்டாளர் போன்ற அரசு முகமைகளும், சுங்க முகவர் சங்கம், அசோசெம் போன்ற வர்த்தக சங்கங்களும் கலந்துகொண்டன. காப்பாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால்  அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய கொள்கை மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.  குறிப்பாக தில்லி சுங்க மண்டலத்திற்குள் அவற்றின் செயலாக்கக் கட்டமைப்புக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. பங்குதாரர்கள் முக்கிய செயல்பாட்டுச் சிக்கல்களை எழுப்பினர், அவை ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட்டன, இது வசதிகளை வலுப்படுத்தும் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைக்குரிய விளைவுகளுக்கு வழிவகுத்தது. கூட்டத்தின் வெள...

சிறுவன் ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருதை வழங்கிய குடியரசுத் தலைவர்

வீரம், கலை, கலாசாரம், சமூக சேவை, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்குப் பிரதமரின் தேசிய சிறார் விருது ஆண்டுதோறும் வழங்கிக் கௌரவிக்கப்படுகிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்துதவிய 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங்குக்கு பால புரஸ்கார் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், மே மாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்திய போது, நாள்தோறும் ராணுவ வீரர்களுக்கு சேர்ந்த ஷ்ரவன் சிங் (வயது 10) உணவுப் பொருள்கள் கொடுத்து உதவினார்.இன்று ஷ்ரவனுக்கு பால புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். விருதைப் பெற்ற ஷ்ரவன் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூரின்போது எங்கள் ஊர் எல்லை அருகே ராணுவ வீரர்கள் வந்தனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால், அவர்களுக்காக நாள்தோறும் பால், தேநீர், மோர், லஸ்ஸி கொடுத்தேன். இந்த விருது பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதனைக் கனவில் கூட நான் நினைத்துப் பார்த்ததில்லை" எனத் தெரிவித்தார். கலை மற்றும் கலாசாரம்,...

58-வது வயதில் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர்

58-வது வயதில் ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கை மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கிறார் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் என்ற  பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை, ஓய்வூதியக் கொள்கையில் பல முற்போக்கான நடவடிக்கைகளையும், ஓய்வூதியம் தொடர்பான செயல்முறைகளின் டிஜிட்டல்மயமாக்கலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பணியாளர், பொதுக் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறையால் ஏற்பாடு செய்யப்படும் 58-வது ஓய்வுக்கு முந்தைய ஆலோசனைப் பயிலரங்கைத் தொடங்கி வைக்கிறார். இந்தப் பயிலரங்கு மகாராஷ்டிராவின் புனேவில் டிசம்பர் 29 அன்று நடைபெற உள்ளது. ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சுமூகமான மாற்றத்தை எளிதாக்கும் வகையில், பல்வேறு தலைப்புகளில் அமர்வுகள் நடத்தப்படும். மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் தற்போது பணிபுரிந்து, அடுத்த 12 மாதங்களில் ஓய்வுபெற உள்ள 350 பேர், இந்த ஓய...

தமிழ்நாட்டில் தவெக தலைமையில் அமமுக, பாமக, தேமுதிக, மக்கள் பாதை, என் ஆர் காங்கிரஸ் இணையும் வாய்ப்புக் கூடியது

தமிழ்நாட்டில்  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், 'பிரிந்து சென்றவர்களை இணைக்க வேண்டும் மற்றும் பாஜகவின் தலைமையில் ஆன தே ஜ கூட்டணியை அமைக்க வேண்டும்' என்பதை எடப்பாடி கே பழனிசாமியிடம் வலியுறுத்தியிருந்தார் முன்னாள் அமைச்சர் தங்கமணி. அதை எடப்பாடி பழனிச்சாமி செய்ய மறுத்ததால், அவர் மீது கடுமையான அதிருப்தியில் இருந்தார் தங்கமணி. பதிலுக்கு எடப்பாடி பழனிசாமியும் தங்கமணியை ஓரம்கட்டத் தொடங்கினார். பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிசாமி டெல்லிக்குச் சென்றபோதிலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னைக்கு வந்தபோதும் கூட அந்த நிகழ்வுகளுக்கு தங்கமணியை அழைக்க வில்லை. இந்த நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி -தங்கமணி இடையே சமரசம் வருகிறது. அதன் எதிரொலியாக, பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முதலாக சென்னை வந்தபோது, அவரை வரவேற்கும் நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமியுடன் கலந்துகொண்டார் தங்கமணி !பா.ஜ.க தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் தலைமையிலான முதல் மாநில மையக்குழுக் கூட்டம் சென்னை கமலாலயத்தில் நடந்தத...