முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

AI தொடர்பாகக் கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்த முக்கியக் கருத்து

AI தொடர்பாகக் கூகுள் CEO திரு. சுந்தர் பிச்சை தெரிவித்த முக்கியக் கருத்து. "AI ல் இருக்கும் முக்கியப் பிரச்சினை என்பது குறித்து விளக்கிய திரு சுந்தர் பிச்சை, இதனால் இரவு முழுக்க தன்னால் தூங்கவே முடியவில்லை எனத் தெரிவித்தார். அதாவது ஏஐ காரணமாக நமக்குப் பல நன்மைகள் ஏற்படும் அதேநேரம் பல போலியான டீப்ஃபேக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் தன்னை இரவில் தூங்க விடாமல் செய்வதாக அவர் குறிப்பிட்டார். AI தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு திரு.சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், "AI எந்தளவுக்கு வலிமையானது என்பதையும் இனி வரும் காலங்களில் புதிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை எனப் பல்வேறு காரணங்களுக்காக AI உதவும், அதன் அதிவேக வளர்ச்சி காரணமாகச் சில அபாயங்களும் இருப்பதாகவே எச்சரித்தார். அவர் மேலும் "எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் இரண்டு வகையான பயன்கள் இருக்கவே செய்யும். சில தீய சக்திகள் AI ஐப் பயன்படுத்தி உண்மையில் இருந்து வேறுபடுத்த முடியாத போலிப் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. இது நிஜமாகவே கவலையளிக்க...
சமீபத்திய இடுகைகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைககு வருகிறது

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரது முன் நடந்த வாதத்தில், 'இந்நீதிமன்ற உத்தரவை அரசு தரப்பு நிறைவேற்றவில்லை. தீபம் ஏற்றச் சென்றவர்களை காவல் துணை ஆணையர் தடுத்தார். ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இவ்வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றனர். அதையடுத்து நீதிபதி, 'இவ்வழக்கில் கோரிய நிவாரணத்திற்கு அப்பால் மேலும் விரிவாக செல்ல வேண்டாம்,' என்றார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ''அவமதிப்பு வழக்கில் இந்த நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு எதிராக தாக்கலான மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. ''இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, ரிட் மனுவில் உத்தரவிட்டதை எதிர்த்து, அரசு தரப்பில் உயர் நீதிமன்றக் கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறை...

தமிழ்நாடு டிஜிபி க்கு அமலாக்கத்துறை மேலும் ஒரு கடிதம்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஒப்பந்ததாரரிடமிருந்து 'கட்சி நிதியாக' லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும்  டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. டெண்டர் மோசடிகள் மூலம் குறைந்தது ரூபாய்.1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை மேற்கோள் காட்டியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66 (2) ன் கீழ், ஊழல் குறித்து விசாரிக்க காவல்துறை முதல் தகவல் அறிக்கை. பதிவு செய்யக்கோரி, டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி மாநில தலைமைச் செயலாளர், காவல் படைத் தலைவர்  மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம்  ஆகியவற்றிற்கு அமலாக்கத்துறை 258 பக்க ஆவணத்தை அனுப்பியதில்.  ஆளும் தி.மு.க. அரசின் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் நடந்த ஒரு பெரிய ஊழலைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசுக்கு இது அமலாக்கத்துறை எ...

கம்யூனிஸ்ட் கட்சி (மா) சாரந்த த. மு.எ.க.ச வின் மதிப்புறு தலைவராக நடிகை ரோஹிணி மொல்லேட்டி தேர்வு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா) சாரந்த த. மு.எ.க.ச  இயக்கத்தின் மதிப்புறு  தலைவராக நடிகை ரோஹிணி மொல்லேட்டி தேர்வு.   தமுஎகச 1975 ஆம் ஆண்டு  கொள்கை, சட்டவிதிகள் என அமைப்பு ரீதியாக உறுவானது. அதன் தலைவராக முத்தையாவும் பேராசிரியர் இரா. கதிரேசன் பொதுச்செயலாளராகவும் தேர்வாகினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு வரை 15 மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தபட்டன.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 16 ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஞாயிறன்று நடந்து முடிந்தது.  புதிய நிர்வாகிகளாக மதிப்புறு தலைவர் நடிகை ரோகிணி,தலைவர் மதுக்கூர் இராமலிங்கம்,பொதுச் செயலாளர் களப்பிரன், பொருளாளர் சைதை ஜெ, துணைத் தலைவர்கள் மதரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, புதுக்கோடடை கவிஞர் நா.முத்துநிலவன், க.உதயசங்கர், ஆர்.நீலா, பிரளயன், துணைப் பொதுச்செயலாளர்களாக கே.வேலாயுதம், அ.லட்சுமிகாந்தன் வெண்புறா, உமா, அ.கரீம், கி.அன்பரசன், துணைச் செயலாளர்களாக மருதுபாரதி, மணிமாறன், அ.உமர் பரூக், மேட்டூர் வசந்தி, கரிசல் கருணாநிதி, ஹேமாவ...

பொதுச் சொத்து சேதமான வழக்கு விவசாய சங்கத் தலைவர் பிஆர். பாண்டியனுககு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் 2015 ஆம் ஆண்டில் ONGC நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் பிஆர் பாண்டியன். இவர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவராக செயல்படுகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சார்பு அரசியல் சார்ந்த ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.குறிப்பிட்டுக் கூறினால் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை எதிர்ப்பு, நெல் கொள்முதல் நிலையங்கள் மேம்பாடு உள்பட பல விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து  போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிற நிலையில்  2015 ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் ONGC நிறுவனம் சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கண...

அணைத்து விமான நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய சிவில் ஏவியேஷன் நடவடிக்கை

 விமானங்களின் பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை இண்டிகோ நிறுவன நெருக்கடியால் தற்போது விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின்போது சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விமானக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பவாத கட்டண நிர்ணயத்திலிருந்தும் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சந்தையில் கட்டண நிர்ணய ஒழுக்கத்தைப் கடைப்பிடித்தல், நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள பயணிகளிடமிருந்து  அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தல், மூத்த குடிமக்கள்,...

குடியரசுத் துணைத் தலைவர் சர்தார் வல்லபாய் படேலுக்கு மரியாதை

குஜராத்தின் ஏக்தா நகரில் தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று (6.12.2025) குஜராத்தின் ஏக்தா நகரில் உள்ள ஒற்றுமை சிலையில் சர்தார் @150 ஒற்றுமை அணிவகுப்பு - தேசிய பாதயாத்திரையின் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த வரலாற்று சிறப்புமிக்க தேசிய பாதயாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில்  பங்கேற்பது மிகுந்த கவுரமானது என்று கூறினார். நவம்பர் 26-ம் தேதி அரசியல் சாசன தினத்தன்று தொடங்கிய  பாதயாத்திரையின் முக்கியத்துவத்தை அவர் விளக்கினார்.  1,300- க்கும் மேற்பட்ட பாதயாத்திரைகளில் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்பது சர்தார் வல்லபாய் படேல் ஏற்றிய நீடித்த ஒற்றுமையின் சுடரை நிரூபித்தது என்று அவர் குறிப்பிட்டார். 560-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைப்பதில் சர்தார் படேலின் வரலாற்று  சாதனையை அவர் நினைவுகூர்ந்தார். "அகண்ட பாரதத்தின் வலுவான அடித்தளத்தை ஒன்றிணைத்து அமைத்ததற்காக இந்தியாவின் இரும்பு மனிதருக்கு...