முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு

ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம் அதில் , 3  காவல்துறை உதவி இயக்குனர்கள் , 7 காவல்துறை தலைவர் கள், 3 காவல்துறை துணைத் தலைவர்கள், 15 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்உள்ளிட்ட  30 பேருக்கு தமிழ்நாடு அரசு பணியில்  உயர்வு வழங்கி உத்தரவிட்டது. அதனடிப்படையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையர் பழனிசாமி கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை ஆணையர் கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை ஆணையராகவும், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவன முதன்மைச் செயலாளராகவும், வ...
சமீபத்திய இடுகைகள்

திருத்தணி ரயிலில் 'ரீல்ஸ்' இளைஞர்கள் மற்றொரு இளைஞனை வெட்டிய கொடூரம்

திருத்தணி ரயிலில் 'ரீல்ஸ்' இளைஞர்கள் மற்றொரு இளைஞனை வெ..ட்டிய கொடூரம். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிய மாநிலம். அதில் மாற்றுக் கருத்து யாருக்குமில்லை அண்மை காலமாக நடக்கும் சம்பவங்களை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் முடிவு விரைவில் வந்து விடும் போலிருக்கிறது.. குற்றம் செய்து பிடிபடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், காவல்துறையினரையும் நீதித் துறையையும் இளக்காரமாக நினைக்கிறார்கள், கேலியாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் எதைப் பற்றியுமே பயமில்லை.  "அடிக்கப் போறியா எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ. நீ அடிச்சு நான் செத்து போயிட்டா எனக்கு ஒன்னுமில்ல. நீ தான் பின்னாடி மாட்டிகிட்டு சாவே" என்று சாதாரண மாகக் சொல்கிறார்கள்.. "இந்தக் குற்றத்தைச் செய்தால், இங்கே சரணடைய வேண்டும். இத்தனை நாளில் ஜாமீன் கிடைத்துவிடும், சட்டம் நம்மைத் தண்டிக்காது சாட்சிகள் சொல்ல யாரும் வரமாட்டார்கள் இந்த அளவுக்குத் தான் தண்டிக்க முடியும், அதுக்கே கூட ஏகப்பட்ட வருஷங்களாகும்" போன்றவை  தெள்ளத்தெளிவாக அடித்தளத்தில் வாழும் இளைய தலைமுறையினர் மண்டையில் கடந்த பத்து ஆண்டுகளில் தவறான போத...

ஏசுகிருஸ்துவிற்கு பெயர் சூட்டிய ஜனவரி முதல் நாளே ஆங்கிலப் புது வருடம் தேவாலயங்களில் கொண்டாட்டம்

ஜனவரி மாதம் கிருஸ்தவ மத தூதர் இயேசுநாதரின் பரிசுத்தப் பெயருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இயேசுவின் பெயர் சூட்டப்பட்ட நாள் அவர் பிறந்த 8-ஆம் நாள், யூத மரபின்படி ஜனவரி 1-ஆம் தேதியாக பழைய ரோமன் காலண்டரில் கொண்டாடப்பட்ட. புத்தாண்டு: இந்த நாள், ஆண்டு சுழற்சியின் தொடக்கமாகிறது, மேலும் கிறிஸ்தவர்கள் இந்த நாளை கடவுள் கொடுத்த இன்னொரு வாய்ப்பாகக் கருதி, தங்கள் நாட்களை அவருக்கு அர்ப்பணிக்கிறார்கள். ஜூலியஸ் சீசர் கிமு 45-ல் ஜனவரி மாதம் 1-ஆம் தேதியை புத்தாண்டு தினமாக நிறுவினார். கிறிஸ்தவர்கள் இதை இயேசுவின் வாழ்வின் தொடக்கத்துடன் இணைத்துக்கொண்டனர்.ஜனவரி 1-ந் தேதி, ஆங்கிலப் புத்தாண்டாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது நிலவும் இந்த நிலை, காலம் காலமாக இப்படியே இருந்ததா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. ஜனவரி முதல் தேதியை புத்தாண்டின் முதல் நாளாக பின்பற்றி வருவது சுமார் 500 வருடங் களாகத்தான். அதற்கு முன், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆண்டின் முதல் நாள் மாறியது.ரோமானிய மன்னர் ஜுலியஸ் சீசர்தான், ஜனவரி 1-ந் தேதியை ஆண்டின் முதல் நாளாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். அதை, இயேசு பிறப்பதற்கு 46...

சர்வதேச கடித அஞ்சல் சேவைகளின் பகுத்தறிவு

சர்வதேச கடித அஞ்சல் சேவைகளின் பகுத்தறிவு உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் (UPU) எடுத்த உலகளாவிய சிறந்த நடைமுறைகள் மற்றும் முடிவுகளுக்கு இணங்க, அஞ்சல் துறையானது சர்வதேச கடித அஞ்சல் சேவைகளை நவீனப்படுத்தவும் வலுப்படுத்தவும் ஒரு முன்னோக்கு முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் வாடிக்கையாளர் அனுபவம், சேவை நம்பகத்தன்மை, கண்காணிப்பு, சுங்க இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, அதே நேரத்தில் உலகளாவிய மின்-வணிக தரநிலைகளுடன் அஞ்சல் சலுகைகளை சீரமைக்கும். இந்த சேவை மேம்பாட்டுப் பயிற்சியின் ஒரு பகுதியாக, சில சர்வதேச கடித அஞ்சல் சேவைகளை, குறிப்பாக கண்காணிப்பு அம்சங்கள் இல்லாத அல்லது வரையறுக்கப்பட்ட சேவைகளை பகுத்தறிவுபடுத்தவும், மேலும் திறமையான, பொறுப்புணர்வு மற்றும் வாடிக்கையாளர்-நட்பு மாற்றுகளை மேம்படுத்தவும் அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, 01 ஜனவரி 2026 முதல், பின்வரும் வெளிப்புற சர்வதேச கடித அஞ்சல் சேவைகள் நிறுத்தப்படும்: பதிவுசெய்யப்பட்ட ஸ்மல் பாக்கெட் சேவை, UPU முடிவுகளுக்கு ஏற்ப, பதிவு ஆவணத்திற்கு மட்டுமே கடல், எஸ்ஏஎல் அல்லது ஏர் மூலம் அனுப்பப்ப...

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் குடியரசுத் துணைத் தலைவரின் நிகழ்ச்சிகள

இளைஞர்கள் தங்களது அடிப்படை கடமைகளை நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர் திருவனந்தபுரத்தில் உள்ள மர் இவானியோஸ் கல்லூரியின் 75-ம் ஆண்டு தின கொண்டாட்டத்தில் குடியரசுத் துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய குடியரசுத் துணைத்தலைவர், மர் இவானியோஸ் கல்லூரி போன்ற நிறுவனங்கள் கல்வியின் மாற்றத்தக்க சக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகத் திகழ்கின்றன என்று தெரிவித்தார். கல்வி என்பது அறிவை வழங்குவது மட்டுமின்றி, சமூகத்தை அறியாமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அரசியல் சாசன மாண்புகளையொட்டி, கல்வி மற்றும் ஆன்மீக நிறுவனங்கள் நாட்டின் ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று அவர் கூறினார். உலக நாடுகள் தலைமைத்துவம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகளுக்காக இந்தியாவை உற்றுநோக்கியுள்ள நிலையில், வரலாற்றில் இந்தியா ஒரு திருப்புமுனையான தருணத்தில் உள்ளதாக குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார். இளைஞர்கள் தங்களுடைய அரசியலமைப்பு உரிமைகளுக்காக மட்டுமின்றி, பன்முகத்த...

கார்த்திக் ஜாத்ராவை குடியரசுத் தலைவர் இன்று தொடங்கி வைத்து உரை

நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக பணியாற்ற அனைவரும் உறுதியேற்க வேண்டும்- குடியரசுத் தலைவர் ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார ஒன்றுகூடல் விழா - கார்த்திக் ஜாத்ராவை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஜார்க்கண்டில் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த இடம், செயலாற்றிய இடம் ஆகியவற்றிற்கு செல்வது தமக்கு யாத்திரை செல்வது போன்ற உணர்வை அளிப்பதாக கூறினார். சமூக நீதிக்கும் பழங்குடியினப் பெருமைக்கும் ஒரு சிறந்த அடையாளமாக அவர் நம் அனைவராலும் போற்றப்படுகிறார் என்று அவர் தெரிவித்தார். பங்கராஜ் சாஹேப் கார்த்திக் ஓரன், பகவான் பிர்சா முண்டாவின் குறிக்கோள்களுக்கு ஏற்ப பழங்குடியின உணர்வையும் அடையாளத்தையும் வலுப்படுத்தினார் என்று தெரிவித்தார். கார்த்திக் ஓரன் தமது வாழ்நாளை பழங்குடியின சமூகத்தின் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்தார் என்று அவர் கூறினார். அவர் கல்வியை பரப்புவதிலும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதிலும் பாடுபட்டார் என்று அவர் தெரிவித்தார். அவருடைய குறிக்கோள்களைப் பின்பற்றி, சமூகம் மற்றும் நாட்டி...

இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை குறித்து கவிஞர் வைரமுத்து பார்வையில்

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா உடல் நலம் குறித்து திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பதிவில் கண்டவை "இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலம் தேறிவருகிறார் நோய்த் தொற்றிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கிறார் உடைந்த சொற்களாயினும்ஃஉரக்கப்பேச ஆசைப்படுகிறார்  ஓர் உயிர் துடிக்கும் உடல்மொழியைப் பார்த்தேன்   என் வலக்கரத்தைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டார் அந்தப் ஸ்பரிசத்தில் எத்துணை செய்திகள்! எத்துணை உணர்வுகள்! 45 ஆண்டு காலக் கலைச் சரித்திரம் எங்கள் உள்ளங்கைகளுக்கிடையே நசுங்கியது நான் மட்டுமா? கருவேலங்காட்டுக் கரிச்சான்க ளும் அவர் நலம் கேட்குமே! எங்கள் கிராமத்துச்சூரிய காந்திப் பூக்களும் அவர் சுகம் கேட்குமே! வைகை அலைகள் வா வா சொல்லுமே! மகா கலைஞனே! விரைவில் மீண்டு வா ‘என் இனிய தமிழ் மக்களே’ என்ற உன் கரகரப்பான காட்டுக் குரலுக்காக ‘ஆஸ்பத்திரி’க்கு வெளியே அலைபாய்கிறது காற்று" எனப் பதிவிட்டு அவரது கவலையை வெளிப்படுத்தினார்.