நீதிமன்ற உத்தரவில்லாமல் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் அமலாக்கத்துறையின் அதிகாரம் தவறானதென உச்சநீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இந்த மனுவிற்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. கர்நாடகா சட்டமன்ற உறுப்பினர் வீரேந்திராவின் சொத்துக்களை அமலாக்கத்துறை சட்டவிரோதமாக முடக்கி உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அது தொடர்பான வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமான அதிகாரம் அதனை முறைகேடாக பயன்படுத்துவதற்கு வழிவகுப்பதாக குற்றம் சாட்டினார் சட்டமன்ற உறுப்பினர் சித்ரதுர்கா இயங்க முடியாத நிலையில், அவரது வங்கிக் கணக்குகள், ஆபரணங்கள், வாகனங்கள் என அனைத்தையும் அமலாக்கத்துறை முடக்கி வைத்திருப்பதாகவும் முகுல் ரோத்தகி வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் பணப்பரிமாற்றச் சட்டத்தில் சில தவறுகள் இருப்பதாகக் கூறினர். சொத்துக்கள் மீதும், அரசியல் அமைப்பு பாதுகாப்புகள் மீதும் நீதித்துறை சாராத நபர்கள் எப்படி முடிவு எடுக்க முடியும்? எனக் கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து மத்திய அரசு மற்றும்...
மஹாராஷ்ட்ரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவராஜ் பாட்டீல் (வயது 90). காலமானார் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தார், முன்னால் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி தலைமையிலான அரசுகளில் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், மேலும், 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராகவும், 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும் செயல்பட்டுள்ளார். மராட்டியத்தின் லட்டூரில் உள்ள வீட்டில் சிவராஜ் பாட்டீல் காலமானார். அவரது மறைவிற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சிவராஜ் பாட்டீல் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், மூத்த அரசியல் தலைவர் சிவராஜ் பாட்டீலை நாம் இழந்துவிட்டோம். சிவராஜ் தனது நீண்ட பொதுவாழ்வில் மக்களவை சபாநாயகர், மத்திய மந்திரி, கவர்னர் என பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிர...