முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

வாரிசு சான்றிதழ் பரிந்துரை செய்ய 18,000 லஞ்சம் கிராம நிர்வாகப் பணியாளர் கைது

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் விராதனூர் கிராமத்தில் கணேசனுடைய மனைவி முருகேசுவரி. கணேசன்  2019-ஆம் ஆண்டு காலமானார். அவரது பெயரிலுள்ள சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய இறப்புச் சான்றிதழ் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் கேட்டு முருகேசுவரி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சென்ற விண்ணப்பத்தை பரிந்துரை செய்யாமல் லஞ்சம் கொடுக்காத காரணமாக அப்போது நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது அதனால் இரண்டாம்  முறையாக முருகேசுவரி வாரிசு சான்றிதழ் கேட்டு, விராதனூர் கிராம நிர்வாக அலுவலர் இந்திரா (வயது 46) ஐ அணுகியுள்ளாராம். அப்போது கிராம நிர்வாக அலுவலர் இந்திரா, வாரிசுச்சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய வேண்டுமென்றால் ரூபாய்.18 ஆயிரம் எல்லோரும் கொடுப்பது போல் லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமெனக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத முருகேசுவரி, தன்னிடம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினார். அதுதொடர்பாக மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், துணைக் கண்கா...
சமீபத்திய இடுகைகள்

கோடீஸ்வரி வாங்கிய ரூபாய் 75,000 லஞ்சம்

திருவள்ளூர் மாவட்டம், வீரகநல்லுார், பெரியார் சமத்துவபுரத்தில் வசிக்கும்  25 பேர், பட்டா இல்லாததால், கடனுதவி மற்றும் அரசு சார்பில் வீடுகள் பழுது பார்க்க முடியாத நிலையில் , பட்டா வழங்கக்கோரி, திருத்தணி தாலுகா வீரகநல்லுார் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் கோட்டீஸ்வரி, (வயது 47),யை அணுகி உள்ளனர்.  அவர் அவர்களை அலைய வைத்து கேலி பேசியததாகக் கூறப்படுகிறது. சமத்துவபுரம் பகுதி வசிக்கும் பலதரப்பட்ட வாசிகள் தரப்பில், வீரகநல்லுார் தி.மு.க., பிரமுகர் மதுசூதனன், (வயது 57), என்பவர், கோட்டீஸ்வரியிடம் பட்டா வழங்கக் கோரிக்கை வைத்தார். அதற்கு, ஒவ்வொரு பயனாளியும், தலா 3,000 ரூபாய் தந்தால் தான், கணினி பட்டா நகல் தருவதாகக் கூறியுள்ளார். அது குறித்து, மதுசூதனன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் புகார் அளித்தார். நேற்று மதியம் துணைக் கண்காணிப்பாளர் கணேசன், ஆய்வாளர் தமிழரசி மற்றும் குழுவினர், வீரகநல்லுார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாறு வேடத்தில் வந்தனர். அவர்களின் கண்காணிப்பில், மதுசூதனன் கொண்டுவந்து அலுவலகத்தில் பின...

நியோமேக்ஸ் வழக்கு விசாரணை அலுவலர் மணிஷா‌ பணியிட மாற்றம்

மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவில் நியோமேக்ஸ் வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக கையாளும் விதமாக மாற்றுப்பணியாக சென்னையிலிருந்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிஷா நியமிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘நியோமேக்ஸ் ’ வழக்குகளை விசாரிக்க சிறப்பு அறைகள் ஒதுக்கி, சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என, பணியாற்றினர். இதுவரையிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியோமேக்ஸ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் ரூபாய்.223 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இச்சூழலில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிஷா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு நபர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் இறுதிகட்டத்தில் திடீரென மாற்றியது ஏன் என்ற கேள்வி மற்றும் சர்ச்சை எழுந்தது. வழக்கில் சிக்கிய முக்கிய நபர்களின் அழுத்தம் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட நபர்கள் க...

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் இடமாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் இடமாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தபடி, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் நால்வரை மற்ற உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கு மத்திய அரசு கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், கே நடராஜன், ஹேமந்த் சந்தன்கவுடர் மற்றும் சஞ்சய் கவுடா ஆகியோரை பணி மாற்றம் செய்ய பரிந்துரைத்தது . இருப்பினும், பெங்களூரு வழக்கறிஞர்கள் சங்கம் (AAB) இந்தப் பரிந்துரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது. கர்நாடக மாநில பார் கவுன்சிலும் (KSBC) உச்ச நீதிமன்றக் கொலீஜியத்திடம் அதன் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இருப்பினும், இந்த நீதிபதிகளை இடமாற்றம் செய்வதற்கான அறிவிப்புகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது. நீதிபதி தீட்சித் ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி நடராஜன் கேரளா உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி சந்தன்கவுடர் சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், நீதிபதி கவுடா குஜராத் உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின்படி, நீ...

மதுரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் நீதிபதிகளின் இருவேறு தீர்ப்பு

மதுரை கிரானைட் முறைகேடுகள் தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு மதுரை மாவட்டக் கனிம வளத்துறை அலுவலர்கள் தனியார் உடன் சேர்ந்து நடத்திய கிரானைட்  ஊழல் மோசடி தொடர்பான அமலாக்கத் துறை வழக்கில் சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பு. மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்த கனிம வளத்துறை யின் கிரானைட் கற்கள் மோசடி தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவத்தின் இயக்குனர்களான நாகராஜன், துரை தயாநிதி (முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன்) ஆகியோர் மீது கீழவளவு காவல்நிலையத்தில் கிரானைட் மோசடி குறித்து பதிவு செய்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்தது. இந்த மோசடி தொடர்பாக அதில் நடந்த பண முறைகேடுகள் குறித்து PMLA சட்ட விதிகளின் படி அமலாக்கத்துறையும் தனி வழக்காகப் பதிவு செய்து மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனத்தின் பங்குதாரரான மதுரையைச் சேர்ந்த நாகராஜன், உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவ...