பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியலின் மிக முக்கியமான முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும், தற்போதைய தீவிர அரசியல்வாதியும் மற்றும் ஜன் சூராஜ் கட்சியின் நிறுவனர் பேச்சுவழக்கில் 'பிகே' PK என அழைக்கப்படுபவர், ஆகஸ்ட் 2026-ல் நடைபெற்ற பிகார் மாநில பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 1995 ஆம் ஆண்டு முதல் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட பாங்கிபூர் தொகுதியில், ஜன் சூராஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோர், 64,151 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் நீரஜ் குமாரை விட 19,324 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இது ஜன் சூராஜ் கட்சியின் முதல் வெற்றி: கடந்த 2025 ஆம் ஆண்டு பிஹார் மாநில சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாத ஜன் சூராஜ் கட்சிக்கு, பிரசாந்த் கிஷோரின் இந்த வெற்றி ஒரு திருப்புமுனையாகவும் அக்கட்சியின் முதல் தேர்தல் வெற்றியாகவும் அமைந்தது. பிஹார் முழுவதும் சுமார் 3,000 கி.மீ தூரம் "ஜன் சூராஜ் பாதயாத்திரை" ...
அவதூறாகப் பேசிய புகாரில் திமுக சார்ந்த எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காகத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார், உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் நகர் கிழக்கு காவல் துறையினர் எப்ஐஆர் பதிவு குற்ற எண். 287/2026-ல், பிஎன்எஸ் பிரிவு 196, 192, 352, 79, 296(பி), 61 மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். BNS 352: பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் அல்லது குற்றம் செய்ய தூண்டும் நோக்கத்துடன் திட்டமிட்டே ஒருவரை அவமதிப்பது BNS 79: கண்ணியத்துக்கும் மானத்துக்கும் பங்கம் விளைக்கும் வகையில் வார்த்தைகள், சைகைகள் அல்லது செயல்களில் ஈடுபடுதல் BNS 196: சமூக அமைதியையும் நல்லிணக்கத்தையும் குலைக்கும் செயல் BNS 192: பொது அமைதியைக் குலைக்கும் வகையில், கலவரத்தை உண்டாக்கும் நோக்கத்தில் ஆத்திரமூட்டுவதுBNS 296(b): பொது இடங்களில் ஆபாசமான பாடல்களைப் பாடுதல் அல்லது ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் BNS 61: குற்றத்தைச் செய்வதற்காக 2 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இணைந்து ஈடுபடும் குற்றவியல் சதி BNS 351(2): குற்ற நோக்கத்துடன் ...