குண்டர் தடுப்புச் சட்டம் தொடர்பான ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு தமிழ்நாட்டில் தடுப்புக் காவல் நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை வாரியம் புதிய உறுப்பினர்களுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.3 ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் . இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் 25.08.2026 அன்று G.O.(Ms.) No.53 அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டம், 1982-ன் பிரிவு 9-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ளஅரசாணையில், சென்னையில் உள்ள Advisory Board உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பின்வரும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு மறுசீரமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஆலோசனை வாரியத்தின் தலைவர்: நீதியரசர் திரு. V. பாரதிதாசன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம். உறுப்பினர்கள்: நீதியரசர் திரு. P. கலையரசன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம். நீதியரசர் திரு. V. பார்த்திபன் ஓய்வுபெற்ற நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம். இதேபோல, மதுரை அறிவுரைக் கழக தலைவராக ஓய்வுபெற்ற...
பழங்குடியினர் மொழிகள், அருங்காட்சியகங்கள் குறித்த தேசிய மாநாடு மைசூருவில் நடைபெற்றது கர்நாடக மாநிலம் மைசூருவில் பழங்குடியினர் மொழிகள், அருங்காட்சியகங்கள் குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இம்மாநாட்டில், வரலாற்று ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள், பழங்குடியின சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பழங்குடியினரின் மொழிகள், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது, மேம்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவுகூரும் வகையிலான அருங்காட்சியகங்களை அமைப்பது, வரலாற்று உண்மைத்தன்மை மாறாமல் காட்சிப்படுத்துவது, உள்ளூர் மக்களின் நேரடிப் பங்களிப்புடன் பாரம்பரியக் கதைகளை எடுத்துரைப்பது ஆகியவைக் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அருங்காட்சியகங்களை வெறும் கண்காட்சிக் கூடங்களாக மட்டுமல்லாமல், பழங்குடியின மக்களின் தனித்துவமான அடையாளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் மையங்களாக உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். பார்வையாளர்களை ஈர்க்கும் வ...