முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கபினியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறப்பு நாளை மறுநாள் மேட்டூர் வந்தடையும்

கபினி அணையிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு வினாடிக்கு 15,675 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  கபினி அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு இன்று ஆகஸ்.1 ல் 10,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட காட்சி! இன்னும் 2 அல்லது 3 நாட்களில் இந்தத் தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடையும்!  "இயற்கை யாருக்கும் சொந்தமானதல்ல.." கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன, இந்த நேரத்தில் அதிக நீரைத் தேக்கினால் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவோம்..! ''தமிழ்நாட்டிற்கு எதிரான கடையடைப்பு அறிவிப்பை திரும்ப பெறுக..''  என கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் தகவல் "கபினி அணை நிரம்பி வருகிறது. அணை நிரம்பியதும் நீரை வெளியேற்ற வேண்டும்; அதைத் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, நீரை வெளியேற்றக் கூடாது என்று போராடும் முடிவைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்," என கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் . வேண்டுகோள்.   "கபினி அணையின் நீர் இருப்பு குறித்த தகவல்களை நீர்வளத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு மணி நேரமும் வழங்கி வருகின்றனர்.  அணைக்கு வரும் நீரின் அளவு (வரத்து)...
சமீபத்திய இடுகைகள்

தேர்வு வினாத்தாள் இனி வெளியாகி மோசடி நடந்தால் கடுமையான தண்டனை புதிய சட்டம் அமலானது

இனித் தேர்வு வினாத்தாள் வெளியாகி மோசடி நடந்தால் கடுமையான தண்டனை: 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை , ரூபாய் 10 கோடி அபராதம் பொதுத்தேர்வுகளில் வினாத்தாள் வெளியாகி மோசடி , ஆள்மாறாட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தேர்வு முறைகேடுகளைத் தடுக்கக் கொண்டு வரப்பட்ட "பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுக்கும்) திருத்தச் சட்டம், 2026" நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் தற்போது சட்டமாகியுள்ளது. வினாத்தாள் மோசடியாக வெளியாகுதல் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு:  5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் ரூபாய் 50 லட்சம் வரை அபராதமும் விதிக்க . ஒழுங்கமைக்கப்பட்ட  வினாத்தாள் வெளியிடும் கும்பல்கள் மற்றும் பெரிய அளவிலான தேர்வு மோசடிகளுக்கு:  குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் ரூபாய் 10 கோடி அபராதம். தேர்வு நடத்தும் சேவை நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் ரூபாய் 5 கோடி வரை அபராதம் மற்றும் 8 ஆண்டுகள் வரை தேர்வு பணிகளில் இருந்து தடை. விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு விசாரணைக் குழுக்க...

மின் இணைப்பு வழங்க 7,000 லஞ்சம் உதவி மின் பொறியாளர் கைது

சேலம் மாவட்டம் தாரமங்கலம் வட்டம் கே.ஆர்.தோப்பூர் மின் பகிர்மான நிலைய உதவி மின் பொறியாளர் கவிதா, (வயது 43). பால் பண்ணையை சேர்ந்தவர். மின்சார அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்த கயிறு திரிக்கும் தொழிலாளி, அவரது கூடத்துக்கு புதிம மின் இணைப்புக் கோரினார். அதற்கு கவிதா, 7,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டார். லஞ்சம் தர விரும்பாத தொழிலாளி, சேலம் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையில் நேரில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் திட்டமிட்டு பொறி வைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், புகார்தாரரிடம் அரசு சாட்சிகள் முன்னிலையில்  லஞ்சப் பணத்தை உதவி மின் பொறியாளர் கவிதா பெற்றுக்கொண்டபோது, மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதுடன், சம்பந்தப்பட்ட ஆவணங்களும் ஊழல் தடுப்புத் துறையினரால் களால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மின் அலுவலகத்தில் வைத்து தொழிலாளி பணம் வழங்கிய போது , கவிதா பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த,...

மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ‘இராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

உலகம் முழுவதும் வாழும் இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இராமாயணா’ திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று  முன்தினம் ஜூலை.மாதம்  30 ஆம் தேதி) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாகி உள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள இராமாயணா: பகுதி 1 திரைப்படம் 2026 தீபாவளி அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படத்தின் பிரம்மாண்டமான  ட்ரெய்லர் ஜூலை 30, 2026 அன்று வெளியாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னர் டிரெய்லர் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தேதி தள்ளி வைக்கப்பட்டு தற்பொழுது வெளியாகியது. ரமேஷ் திவாரி இயக்கத்தில், இராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, மற்றும் இராவணனாக யஷ் நடித்துள்ள இதிகாசப் படம் இராமாயணா. ஹனுமன் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த இதிகாசத் திரைப்படத்தின் முதல் பாகம், 2026 தீபாவளி பண்டிகையை...

இளையான்குடி பகுதியில் இரகசியமாகச் செயல்பட்ட போதைப்பொருள் தொழிற்சாலை 9 நபர்கள் கைது

இளையான்குடி பகுதியில் இரகசியமாகச் செயல்பட்ட போதைப்பொருள் தொழிற்சாலையில், ரூபாய் . 1.50 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.போதைப்பொருள்  மெத்தம்பெட்டமைன் தயாரிப்பு மொத்தமாக சுமாராக 1.4 கிலோ போதைப்பொருள் மற்றும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், ஆய்வக உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இளையான்குடியைச் சேர்ந்த ஜாஹிர் உசேன் என்பவரது இரும்புக் கடைசல் லேத் பட்டறையில் ரகசியமாக இந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்பு ஆய்வகம் இயங்கி வந்துள்ளது. சென்னையில் தோல் தொழில் செய்து வந்த ஷாகுல் ஹமீது என்ற நபர் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களைக் கொள்முதல் செய்து இளையான்குடிக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது,

பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி காலமானார்

தமிழ்த் திரையுலகில் பிரபல பின்னணிப் பாடகி ஜமுனா ராணி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று 30-07-2026) காலமானார்.  அவருக்கு வயது 88. கல்லஹள்ளியில் அவரது இறுதிசடங்குகள் இன்று நடந்தன. ஆந்திரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜமுனா ராணி. வரதராஜுலு  திரௌபதி தம்பதிக்கு மகளாக 1938-ஆம் ஆண்டு மே மாதம் 17-ஆம் தேதி பிறந்தார். அவர் குடும்பமே இசைக்குடும்பம். அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களை மட்டுமே கொண்ட ஒரு வாத்தியக்குழுவை அக் காலத்திலேயே நடத்தி வந்துள்ளார். ஏழு வயதில் பாட வந்த ஜமுனா ராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் 'தியாகய்யா' என்ற தெலுங்குப் படத்தில் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் 'கல்யாணி' படத்தில் 'சக்ஸஸ் சக்ஸஸ்', 'ஒன் டூ த்ரீ' ஆகிய இரண்டு பாடல்களைப் பாடினார். தொடர்ந்து டி. எம். சௌந்தர்ராஜனுடன் இணைந்து 'வளையாபதி' என்ற படத்தில் இடம் பெற்ற 'குலுங்கிடும் பூவில் எல்லாம்' என்ற பாடலை, முதல் டூயட் பாடலாக பாடினார். எஸ்.தட்சிணாமூர்த்தியின் இசையில் இடம் பெற்ற அந்த பாடலை பாடும்போது ஜமுனாராணியின் வயது 1...

தில்லைக்கும், திருவரங்கத்திற்கும் பொன் வேய்ந்த பெருமாள்

தில்லைக்கும், திருவரங்கத்திற்கும் பொன் வேய்ந்த பெருமாள் பாண்டியன் மன்னர் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் " கண்டவர் மனமும் கண்ணும் களிப்ப வெண்டிரை மகர வேலை கொடுபண்டியன் ஆயிரம் பணைபணத் தனந்தன் மீமிசைப் பாயல் கொள்ளும் பரம யோகத்து ஒரு பெருங்கடவுளும் வந்தினிதுறையும் பெருங்காவிரியிடை நிலத் திலங்கு திருவரங்கம் பெருஞ்செல்வம் சிறப்பப் பன்முறை யணிதுலாபாரமேறிப்பொன்மாலையன்ன பொலிந்து தோன்றவும் பொன் வேய்ந்தருளிய செம்பொற் கோயிலுள் வளந்திகழ் மாஅல் உதய வெற்பெயவர்மன் திருவளர் குலமணிச் சிங்காசனமிசை மரகத மலையென மகிழ்ந்தின தேறிந்தரபாண்டியன்" பாண்டிய மன்னர் முதலாம் ஜடையவர்மன் சுந்தரபாண்டியன் பொது ஆண்டு 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னர் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடினான். மஹாராஜாதி இராஜ ஸ்ரீபரமேஷ்வரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன், எல்லாம் தலையானான் பெருமாள், கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பட்டப்பெயர்களினைஉடையவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்தவனான மன்னன் பிற்காலப் பாண்...