தென்னிந்தியத் திரைப்பட பழமையான நடிகை சௌகார் ஜானகி 94 வயதில் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார். அவரது வயது முதிர்வு மற்றும் சுவாசக் கோளாறு காரணமாகச் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பெற்ற சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் காலமானார், 1950-ஆம் ஆண்டு எல்.வி.பிரசாத் இயக்கத்தில் வெளியான ‘ஷாவுகாரு’ எனும் தெலுங்கு மொழித் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் வெற்றியால் 'சௌகார்' ஜானகி என அழைக்கப்பட்டார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம, ஹிந்தி மொழிகளில் 387-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் புதிய பறவை, நீர்க்குமிழி, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு உள்ளிட்ட படங்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்தன. இவரது கடைசித் தமிழ் திரைப்படம் 2020- ஆம் ஆண்டில் வெளியான 'பிஸ்கோத்' ஆகும் இவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது 2022 ஆம் ஆண்டு மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார், இவரது மறைவுக்குத் ...
வீ த லீடர்ஸ் இயக்கம் முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையால் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டில் அடித்தள மக்கள் தொடர்பு மற்றும் சமூக இயக்கம். இதன் பணி சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை மற்றும் கடற்கரை தூய்மைப் பணிகளை பல பகுதிகளில் நடத்துவது. எனினும், காரைக்குடியில் இந்த அமைப்பு சார்பில் தூய்மைப் பணி சிறப்பாக நடந்தது, திருச்செந்தூர், கடலூர், கடற்கரைப்பகுதி மதுரை வைகை ஆற்றுப் பகுதிகளிகளில் ஏற்கனவே தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இயக்கத்தின் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல் மற்றும் குப்பைகளை உரிய இடத்தில் அகற்றுதல். இளைஞர்களைக் கொண்டு மரக்கன்றுகள் நடுதல் மற்றும் துப்புரவுப் பணிகள்.அடிமட்ட விழிப்புணர்வு மூலம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் தூய்மை குறித்த உறுதிமொழிகள் மற்றும் பிரச்சாரங்களை காரைக்குடி மற்றும் சிவகங்கை நகரின் முக்கிய அடையாளங்களாக விளங்கும் அரண்மனை வாசல் போன்ற பொது இடங்கள், நீர்நிலைகளின் ஓரங்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பைகளை அகற்றும் பணிகளைத் தன்னார்வலர்கள் மேற்கொண்டன...