ரூபாய் .38.79 லட்சம் விபத்து இழப்பீட்டுத் தொகை மோசடி நீதிமன்ற ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை ! கள்ளக்குறிச்சியில் விபத்து இழப்பீட்டுத் தொகையான ரூபாய் .38.79 லட்சத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற பெண் ஊழியர் அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்ட அவரது மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இந்தத் தண்டனைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது. மோசடித் தொகை ரூபாய் .38.79 லட்சம்! நீதிமன்ற ஊழியர் அறிவுச்செல்விக்கு 37 ஆண்டுகள் சிறை! மகன் மற்றும் உறவினருக்கு தலா 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை! விதித்து தீர்ப்புகள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தொகையை (MCOP வழக்குகளில் ) போலி ஆவணங்கள் மற்றும் நீதிபதியின் போலிக் கையெழுத்து மூலம் மோசடி செய்த முன்னாள் நீதிமன்றப் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கள்ளக்குறிச்சி தலைமை நீதித்துறை நடுவர் நீதிம...
மேற்கு வங்காள மாநிலம் பிர்பூம் மாவட்டம் தாராபீத் நகரில் 17 ஆகஸ்ட் 2026 அன்று அதிகாலை ஒரு தனியார் ஹோட்டலில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். தாராபீத் காளி கோயில் அருகே உள்ள நான்கு மாடி ஹோட்டலின் தரைத்தளத்தில் அதிகாலை 4:30 முதல் 5:00 மணியளவில் திடீரென தீப் பிடித்தது. முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதிகாலை நேரத்தில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்ததால், நச்சுப் புகை வேகமாக பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் கோயிலுக்கு வந்திருந்த பக்தர்களாவர். தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து ஏணிகள் மூலம் கட்டிடத்தில் சிக்கியிருந்த 22 பேரை பத்திரமாக மீட்டனர் காயமடைந்தவர்கள் உடனடியாக ராம்பூர்ஹத் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹோட்டல் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, முறையான தீயணைப்பு பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்...