விநாயகர் சதுர்த்தி மற்றும் திருமணங்கள் வார இறுதி தொடர் விடுமுறையை ஒட்டி, தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி பேருந்துகழின் கட்டணங்கள் 2 முதல் 3 மடங்கு வரை விமானம் போல கிடுகிடுவென விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் வெளியூர்களில் தங்கி வேலை செய்பவர்களும், மாணவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.ஆன்லைன் முன்பதிவு ரெட்பஸ் உள்ளிட்ட தளங்களின்படி பல்வேறு முக்கிய நகரங்களுக்கான தற்போதைய கட்டண விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:முக்கிய வழித்தடங்களின் பேருந்து கட்டண விவரம்சென்னை - கோயம்பத்தூர் ரூபாய் 6,154 வரை உயர்வு (வழக்கமான கட்டணத்தை விட மிக அதிகம்). பெங்களூரிலிருந்து கோயம்பத்தூர் செல்ல ரூபாய் 650 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூபாய் 3,200 ஆக மாறியுள்ளது.சென்னை - மதுரை: ரூபாய் 4,000 வரை வசூலிக்கப்படுகிறது.சென்னை - திருச்சிராப்பள்ளி: ரூபாய் 3,999 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை - திருநெல்வேலி: வழக்கமாக ரூபாய் 750 - ரூபாய் 1,000 ஆக இருந்த டிக்கெட், தற்போது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை விற்கப்படுகிறது.சென்னை - கும்பகோணம்: ர...
அமைச்சர் CTR நிர்மல் குமார் குறித்து எம்பி ஆ. ராஜா செய்த அவதூறுக்கு எதிர்ப்பு மற்றும் மிசா குறித்த உணமை கூறும் அறிக்கை நிலையும்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலின் கைது செய்யபடவில்லை என்பது குறித்து அமைச்சர் CTR நிர்மல்குமார் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, செப்டம்பர் 12-ஆம் தேதி பல்வேறு வருவாய் மாவட்டங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் மாநில அமைச்சர் ம.சுப்பிரமணியன், நாடாளுமன்ற மக்ஙளவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது ஆ.ராசா பேசிய கருத்துகள் அரசியல் கட்சிகள் மற்றும் சமுதாய அமைப்புகள் மத்தியில் கடுமையான சர்ச்சையை உறுவாக்கியதுடன், மாற்றுக் கட்சியினர் மற்றும் அவர்கள் தனிப்பட்ட குடும்பத்தினரைத் தரக்குறைவாக சாடியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மற்றும் திமுக நாடாளுமன்ற கட்சித்தலைவர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்டவர்கள் மற்றும் தோழமைக்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர், அதற்கு ஆ.ராசா சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்து அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “தி...