மதுரை மாவட்டம் மேலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலும் குறைந்தது சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிகச் சாமானிய மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசாடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் ஏஜென்ட்கள் கட்டையம்பட்டி ரஞ்சித் மற்றும் அருண் எனத் தகவல் வருகிறது, மேலூரில் FQL,VG எனும் பிட்காயின் மோசடி நிறுவனங்களில் 53 ஆயிரம் போட்டால் 45 நாட்களில் லட்சம் ரூபாய் திரும்ப பெறலாம் என்று ரஞ்சித், அருண் ஆகியவர்கள் பல குடும்பம் மூலமாக தனது பகுதியில் அதிகம் வசிக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மக்களிடம் இருந்து ஆரம்பித்து அவர்கள் மட்டும் 30 ஆயிரம் பேரிடம் மோசடி, மேலும் பல உப ஏஜென்ட்கள் உணடாம் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த FQL (மற்றும் VG) ஆன்லைன் செயலி பண மோசடியில் ஒட்டுமொத்தமாக சுமார் 60,000 முதல் 68,000-க்கும் மேற்பட்ட மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையின் அதிகாரப்பூர்வப் பதிவுகள் மற்றும் கள நிலவரங்களின்படி இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நத்தம் மற்றும் அதன் சுற்றுவட...
ஒலிம்பஸ் கிரானைட் குவாரி கீழவளவு பகுதியில் செயல்பட்ட கிரானைட் சுரங்கமாகும். 2012 ஆம் ஆண்டில் மதுரையில் வெளிச்சத்திற்கு வந்த ரூபாய் . 13,000 கோடிக்கும் அதிப்படியான பிரம்மாண்ட கிரானைட் முறைகேடு வழக்குகளில் இந்த நிறுவனமும் முக்கியப் பங்கு வகித்தது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, கீழவளவு கிராமத்தில் சுமார் 1.21 ஹெக்டேர் பரப்பளவில் இந்த குவாரி அமைந்திருந்தது, கடந்த 2008 ஆம் ஆண்டில், அங்கிருந்த நிலங்களில் 20 ஆண்டுகள் குத்தகைக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுக்க இந்த நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி இந்த ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்தார். 2011-12 ஆம் ஆண்டு காலகட்டங்களில், இந்த நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கனிம வளங்களைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. 2012 ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உ.சகாயம் ஐ.ஏ.எஸ், கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக வந்த மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்...