தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டது காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான லஞ்சம் ஊழல், முறைகேடு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது தான் முக்கிய நோக்கம். பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள் வழங்கப்பட்டன. புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகார அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும். எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி ...
தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்த பிறகு மூடப்பட்ட 717 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகளின் பட்டியல் வெளியீடு தமிழ்நாடு தவெக அரசு அமைந்த பிறகு, பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் ஸ்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகிலிருந்த 717 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே. விக்னேஷ் முழுமையான முகவரிகள் அடங்கிய 38 பக்கங்கள் கொண்ட அதிகாரப்பூர்வமான பட்டியலை வெளியிட்டார் அதில் .மண்டலம் வாரியாக மூடப்பட்ட கடைகளின் விவரங்கள் மதுரை மண்டலம்: 270-க்கும் மேற்பட்ட கடைகள் (அதிகபட்சம்) கோயம்பத்தூர் மண்டலம்: 179 கடைகள் திருச்சிராப்பள்ளி மண்டலம்: 84 கடைகள் சென்னை மற்றும் சேலம் மண்டலம்: தலா 82 கடைகள் முக்கியமாக வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள் மூடப்பட்டன. கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 186 கடைகள் மூடப்பட்டன. பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 255 கடைகள் மூடப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களின் நலன் கருத...