தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகில் பழங்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் புதிய வீட்டு மின் இணைப்பு வழங்க ரூபாய் . 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கருப்பசாமி (வயது 53) ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை 24 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் குருவிக்குளம் அருகில் உள்ள கொக்குகுளம் கிராமத்தைச் சேர்ந்த நபர் காளிராஜ் (வயது 32).காரணம்: அவரது தந்தையின் பழைய வீட்டைப் புதுப்பித்து, அதற்குப் புதிய மின் இணைப்பு பெறுவதற்காக இணைய வழியில் விண்ணப்பித்து, பதிவு செய்து ரூபாய் . 5,575 கட்டணத்தையும் செலுத்தியுள்ளார் மின் இணைப்பு வழங்குவதற்கு முன்னதாக இடத்தை நேரில் பார்வையிட்டு அறிக்கை (Site Inspection Report) அனுப்ப வேண்டும் எனக் கூறி, அதற்கு வணிக ஆய்வாளர் கருப்பசாமி ரூபாய் . 2,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ், தென்காசி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, பினாப்தலீன் ரசாயனப் பொடி த...
மேற்கு வங்காள மாநில சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் காலமானார். நேற்று ஆகஸ்ட் 16, 2026 ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது. பிர்பூம் மாவட்டத்தின் ராம்பூர்ஹாத் தொகுதியில் இருந்து 5 முறை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மம்தா பானர்ஜி அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை, விவசாயத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2026 தற்போது நடந்த மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், "அரசியலுக்கு வந்தது ஒரு தவறு" என்றும், தன் வாழ்நாளில் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.