முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

டெண்டர் முறைகேடு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்

டெண்டர் முறைகேடு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்திரன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்,  தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் ஐஏஎஸ்  மீது   அறப்போர் இயக்கம்   கொடுத்த டெண்டர் முறைகேடு புகாரில் அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இது முதற்கட்ட நடவடிக்கை அரசு பணி சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் அனைவரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கையும், கிரிமினல் நடவடிக்கையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அந்த ஊழல் முறைகேடு செய்ய காரணமான ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்.     தாம்பரம் மாநகராட்சியில் (TCMC) டெண்டர் சட்ட விதியை அப்பட்டமாகவை மீறி, டெண்டர் கோரப்படும் முன்பே கூட்டு சதி செய்து பணிகளை முடித்து திறப்பு விழா செய்துள்ள மிகப்பெரிய முறைகேட்டை தகுந்த ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது அறப்போர் இயக்கம், ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவோம் என உறுதியளித்த புதிய தவெக அரசின் கீழ், இது போன்ற டெண்டர் முறைகேடுகள் நடைபெறுவது தற்போது அதிர்ச்சியாகும்,  இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...
சமீபத்திய இடுகைகள்

மேகமலை - மாஞ்சோலை விவகாரம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் நடத்திய அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டம்

மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தேனி மாவட்டம் மேகமலை வசிக்கும் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழில் மக்களுக்கு நீநியும் உரிமையும் கேட்ட அனைத்துக் கட்சிப் போராட்டம் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மேகமலை – மாஞ்சோலை மக்களின் உரிமைக்காக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர், மக்களின் உரிமைக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்,. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தென்னிந்திய பார்வர்டு பிளாக் தலைவர் கே.சி. திருமாறன் ஜி, இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநிலத் தலைவர் ரவி பச்சமுத்து  தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பனருட்டி தி.வேல்முருகன், கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனர் உ.தனியரசு, பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஆர். தனபாலன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, விஸ்வகர்மா ஜெகத்குரு ஸ்ரீ...

உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் கார் பந்தயம் அதன் துவக்கம் தான் லண்டன் போட்டி

 இங்கிலாந்து நாட்டு லண்டன் மாநகரில் நடைபெற்ற புகழ்பெற்ற Le Mans Cup கார் பந்தயத்தை, தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த சர்வதேச பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித்குமாரின் ‘ரேசர் ஏகே’ (Racer AK) அணி 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தது. வரலாற்றுச் சிறப்புமிக்க பிரிட்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற Silverstone Motor Racing Circuit மைதானத்தில் இந்த பந்தயம் நடைபெற்றது.  தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக பிரிட்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய், அஜித்தின் அழைப்பை ஏற்று கார் பந்தய மைதானத்திற்குச் சென்றார். அங்கு அஜித்குமாரை கட்டியணைத்து, முத்தமிட்டு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.  பந்தயம் தொடங்குவதற்கு முன்பாக அஜித் குமாரின் பந்தயக் காரின் மீது அமர்ந்து விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அஜித்குமார் தனது பந்தயக கார் குறித்து முதல்வர் சி. ஜோசப் விஜய்க்கு விரிவாக விளக்கமளித்தார். இந்த மிகக் கடுமையான சர்வதேச 'Michelin Le Mans Cup' பந்தயத்தில், அஜித்குமாரின் பந்தய அணி (Racer AK Racing) 3-வது இடத்தைப் பிடித...

தமிழ்நாடு அரசு லண்டனில் தகுதியான தொழில் நிறுவனங்களுடன் புதிய MOU

தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், லண்டனில் ரூபாய் .11,000 கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக கிரேட் பிரிட்டன் லண்டன் நகர் சென்றுள்ள நிலையில், இன்று இந்த முக்கிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. Samvardhana Motherson International Limited.முதலீட்டுத் தொகை: ரூபாய் .11,000 கோடி. வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி மற்றும் தளவாட வசதி ஆகிய பிரிவுகளில் இந்த முதலீடு செய்யப்படவுள்ளது. இந்தப் புதிய திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் சுமார் 7,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்த ஒப்பந்தத்தில் தமிழ்நாடு வழிகாட்டுதல் துறையின் நிர்வாக இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் சம்வர்தனா நிறுவனத்தின் பிரிவுத் தலைவர் பேரி பெயிண்டர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர். இங்கிலாந்து, இலண்டன் நகரில் இன்று (14.09.2026), சம்வர்தனா  Motherson International Ltd., நிறுவனம் அதன் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து,  வழிகாட்டி நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் சுமார் ரூபாய் .11,000 கோடி முதலீட்டி...

சித்தர் வழங்கிய ஆப்பிள் நிறுவன முத்திரையாகி வளர்ந்த கதை

சித்தர் கடித்து வழங்கிய ஆப்பிள் நிறுவன முத்திரையாகி வளர்ந்த சுவாரஸ்யக் கதை சிறப்புச் செய்திகள் :                          திருப்பதி ரெங்கநாதன்    லக்ஷ்மி நாராயண் சர்மா எனும் லக்ஷ்மண் தாஸ்  உத்தரப் பிரதேசத்தின் அக்பர்பூர்  கிராமத்தில் ஜமீந்தார் குடும்பத்தில் பிறந்தார். மிக இளமையான வயதிலேயே ஆன்மீகத் தேடலின் வீட்டை விட்டு வெளியேறி, வட இந்தியா முழுவதும் துறவியாகத் திரிந்த பின்னர், தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு, இரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தார். 1958-ஆம் ஆண்ட்டில் முழுமையாக துறவு வாங்கி சந்நியாசம் மேற்கொண்டார். ஹிந்து ஆன்மீக குரு மற்றும் ஹனுமன் பக்தர் சீடர்களால் இவர் அன்போடு "மஹாராஜ்-ஜி" என அழைக்கப்பட்டார் ஒருமுறை பாபா இரயிலின் முதல் வகுப்புப் பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்ததைக் கண்ட ஆங்கிலேய  கிழக்கிந்திய ரயில்வே பரிசோதகர் (TT), 'நீம் கரோலி' என்ற அடுத்த நிறுத்தத்தில் பாபாவை இரயிலிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்கிவிட்டார். பாபா இரயிலை விட்டு இறங்கி அருகில...