17 ஆண்டுகளுக்குப் பின் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் 2026 செப்டம்பர் 17 ஆம் தேதியன்று நடைபெறுகிறது புதன்கிழமை காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெறும் பாண்டியர் குலப் பேரரசி, கயல்விழி, அங்கையற்கன்னி மதுரை ஆளும் மங்கையர்கரசி அன்னை ஸ்ரீ மீனாட்சி தடாதகை பிராட்டியார் மற்றும் சோமசுந்தரரேஷ்வர் தமிழ் சங்கம் கண்ட எந்தை ஈசன் சொக்கநாதப்பெருமான் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. "பூமகள் போற்றப் புவிமகள் துதிக்க, நாமகள் நாவில் நயம்பட விளங்க, திசையனைத்தும் வென்ற சீர்த்திப் பிரதாபி, மலையத்துவசன் பெற்ற மாபெரும் செல்வி, பாண்டியர் குலவிளக்கு, பராசக்தி வடிவம், தடாதகைப் பிராட்டியார் தண்பதி ஆள, நவரத்தின மணிமகுடம் நன்முடி சூடி, நவமணிச் செங்கோல் நயம்பட ஏந்தி, அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சி மதுரை மாநகர அரசியாக வீற்றிருந்தாள் வாழ்க"! "ஸ்வஸ்திஸ்ரீ! சமஸ்த புவனாச்ரய, ஸ்ரீப்ருத்வீ வல்லப, மஹாராஜாதிராஜ, பரமேஸ்வர, பரமபட்டாரக, சகல குணரத்ன ரத்னாகர,பாண்டிய குல திலக, ம...
பப்ளிக் ஜஸ்டிஸ்
RNI:TNTAM/2013/50347