காந்தி நகரில் நடந்த பிரிக்ஸ் கூட்டத்தில் வர்த்தகத்துறை வர்த்தகச் செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விளக்கினார் குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தொடர்பான தொடர்புக் குழுவின் 2வது கூட்டத்தில் வர்த்தகத்துறை செயலாளர் திரு. ராஜேஷ் அகர்வால் சிறப்புரையாற்றினார். மார்ச் 2026-ல் மெய்நிகர் வடிவில் நடைபெற்ற முதல் கூட்டத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டம் நடைபெற்றது. பிரிக்ஸ் தொடர்ந்து வலிமையடைந்து, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களின் விருப்பங்கள் மற்றும் முன்னுரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு செல்வாக்கு மிக்க குரலாக உருவெடுத்துள்ளது என்று திரு. அகர்வால் கூறினார். அதிகரித்து வரும் புவியியல் அரசியல் பதற்றங்கள், விநியோகச் சங்கிலித் தடைகள், பணவீக்க அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுக்கு மத்தியிலும் இது நிகழ்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ல் 84 பில்லியன் டாலராக இருந்த பிரிக்ஸ் உள்நாட்டுப் பொருட்களின் வர்த்தகம், 2024-ல் 1.17 டிரில்லியன் ட...
குவாண்டம் மற்றும் செய ற்கை நுண்ணறிவு, உள்நாட்டுச் சூழல் அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை வளர்ச்சியை வரையறுக்கும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, உள்நாட்டுச் சூழல் அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் அடுத்த தலைமுறை வளர்ச்சியை வரையறுக்கும் என்று அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். நவீன தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சி, ஒருங்கிணைந்த அணுகுமுறையைச் சார்ந்தே இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில், அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படுத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மூலம், வளர்ச்சியின் ஒரு புதிய கட்டத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது என்று எடுத்துரைத்தார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்தியா...