முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் S.R.G.ராஜண்ணா உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு முதல்வர் இரங்கல்

மிகவும் புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் S.R.G.ராஜண்ணா  உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், '70 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் தனிப்புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள் ஆதீனங்கள் என முக்கிய ஆன்மிக நிலையங்களில் ஆஸ்தான வித்வானாக பணியாற்றிய சிறப்புக்குரியவர். கலைமாமணி உள்ளிட்ட பல உயரிய விருதுகளுக்கு பெருமை சேர்த்தவர்' என கூறியுள்ளார். செம்பனார்கோயில் சகோதரர்களில் இளையவரான இவர், இசையுலகில் அசாத்தியமான பல சாதனைகளைப் புரிந்துள்ளார். சுமார் 70 வருடங்களுக்கும் மேலாக இசையுலகில் தனக்கென தனிப் புகழுடன் வலம் வந்தவர் ராஜண்ணா. செம்பனார்கோயிலைச் சேர்ந்த கோவிந்தசாமி பிள்ளையின் இளைய மகனான ராஜண்ணா, தனது மூத்த சகோதரரான எஸ்.ஆர்.ஜி.சம்பந்தம் அவர்களுடன் இணைந்து, பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறம்பட செயலாற்றியுள்ளார். நாதஸ்வர இசை மரபில் பல தலைமுறைகளைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜண்ணா. ரக்தி மேளம் உள்பட செம்பனார்கோயில் பாணியைச் சேர்ந்த பிரதான கலைஞர்களாக விளங்கிய இந்த சகோதரர்கள், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும்...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது

தமிழ்நாட்டில், மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர். அனைத்து மாவட்டங்களிலும் குறிப்பிட்ட அளவில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அதற்காக பல காரணங்கள் சொல்லப்பட்டது.  சரியான முகவரியில் இருந்தவர்களைத் தவிர, உயிரிழந்தவர்கள், முகவரி மாற்றியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்கள், ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?நீக்கப்பட்டதா? என்பதை எப்படிச் சரிபார்ப்பது என்பதைப் பார்க்கலாம்.  முதலில் voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும். பிறகு உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிடலாம்.3. இதன் பின்னர் 'தேடல்' பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களைக் காணலாம். இதில் உங்கள் பெயர் இருந்தால், வரைவு வாக்க...

அமாவாசை நாளில் அஸ்தமித்த பூர்ணச்சந்திரன் மறு விஷ்வாமித்ரன்

பிரம்மரிஷியான விஸ்வாமித்திர மகரிஷி, தனது உடலாகிய காயத்தை திரியாக மாற்றி அதிலே தீபமேற்றி பிரம்மமாகிய இறைவனைக் கண்டு உலகில் சகல பாவங்களையும் நீக்கும் காயத்திரி மந்திரத்தை கொடுத்தவர்  அதேபோல பூர்ணசந்திரன் மதுரை திருப்பரங்குன்ற தீபம் ஏறறும் விவகாரத்தில் தன் உயிருடலை திரியாக மாற்றி தீப்பற்றவைத்து திரியாக ஒளிர்நது மறைந்தார் ஆளும் திமுக அரசைக் கண்டித்து, ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் துரதிஷ்ட வசமானது. மதுரை திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபமேற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், திமுக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து, மதுரை நரிமேட்டைச் சேர்ந்த சாமானிய முருக பக்தர் பூர்ணசந்திரன் தீக்குளித்து உயிராயுதம் பூண்டார் சூரபத்மனை வதம் செய்த கார்த்திகேயன் தீபத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்.பூர்ணசந்திரனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த ஹிந்து அமைப்புகள் மற்றும் முருக பக்தர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை கூறுகையில் "சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபமேற்றுவதைத் தடை செய்த திமுக அ...