பழனி, சமயபுரம் உள்ளிட்ட பரம்பரை அல்லாத 214 கோயில்களுக்கு அறங்காவலர் குழு நியமனத்திற்கான அறிவிப்பு வெளியீடு கோயில்களின் விவரம், இணையத்தில் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறங்காவலர் நியமன அறிவிப்பு அறங்காவலர் நியமனம் செய்யப்படவுள்ள திருக்கோயில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை (www.hrce.tn.gov.in) என்ற துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் (Non-hereditary Trustees) விண்ணப்பங்கள் மூலம் முறையாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தகுதிகள், நியமன முறைகள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிகள் கீழே சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.1. அறங்காவலர்கள் தகுதிகள்இந்து மதம்: விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும்.பின்னணி: ஒழுக்கமானவராகவும், இறை நம்பிக்கை உடையவரா...
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு செனனை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி ஆட்சியமைத்தது. தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கான புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் அட்வகேட், கூடுதல் அரசு வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 204 பணிகள் அடங்கிய நியமனம் குறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அளிக்கப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதில் அரசு அரசியல் தலையீடுகள் உள்ளது. தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியில் ...