சிறப்புச் செய்திகள் : ரெங்கநாதன் திருப்பதி " பாலைவனத்து வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள், எண்ணெய் வளமான பூமியைப் பிளந்தன! கரிய புகைக்குள், கத்தார் அழுகை மறைந்தது! நிழல் தேடிய மரங்கள் கூட, நெருப்பாய் எரிந்தன! நிம்மதி தேடிய மனிதர்கள் குழந்தைகள்,அனாதையாய் நின்றனர்! வளைகுடா மண் வரலாற்றில் கறை படிந்தது! போரின் முடிவில், பூமிக்கு மிஞ்சியது எரியும் தழும்புகள், அதில் விளிம்பில் சமையலுக்கு காத்திருக்கும் எரிவாயு அடுப்புகள் உலகம் முழுவதும். பூமி உருண்டையைப் பொரி உருண்டை யாக்கி உடைத்துத் திண்ணும் பசியில் வல்லாதிக்க நடவடிக்கை" . "அமெரிக்கா (USA) இல்லை யெனில், நேட்டோ (NATO) காகிதப் புலிதான். அணு ஆயுதம் க...
கமலின் மையத்தை சிறை வைத்து பிரேமலதா கட்சிக்கு பிறை சூடடிய இந்தியா கூட்டணி இதுகுறித்து கமலஹாசன் செய்யாளர்களிடம் "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதல்வரும், துணை முதல்வரும், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும். இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை, அவர்களது தரப்...