இனி அட்டவணை பட்டியலினக் கிருஸ்தவர்கள் என இந்தியாவில் யாருமில்லை, மதம் மாறினால் SC/ST அட்டவணை பட்டியலில் நீடிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. கிருஸ்தவ மதத்திற்கு மாறிய பின் பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் எனும் சட்டப் பாதுகாப்பு செல்லாது; ஆந்திரப்பிரதேச கிருஸ்தவ மத போதகர் அளித்த புகாரை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மேல்முறையீட்டில் அதை உச்சநீதிமனறம் உறுதிப்படுத்தியது,, ஆந்திரப் பிரதேச ஹரிஜன அட்டவணைப் பட்டியல் இனத்தைச் சேர்ந்து முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவரின் ஜாதிச் சான்றிதழை அதிகார அமைப்புகள் இரத்து செய்யாத காரணத்தால் அதை அவர் தவறாகப் பயன்படுத்தி சலுகை உரிமை பெற்றால் அது மட்டுமே அவருக்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பை அளித்து விட முடியாது. அவர் தற்போது கிருஸ்தவராக இருப்பதால், அவர் பட்டியல் ஜாதி இல்லை எனவே அவர் அந்த அந்தஸ்தைக் கோரும் தனது உரிமையை மாறிய போதே இழந்துவிட்டார், என்றும், அதனால் அட்டவணை பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெகவைத் தவிர்த்து நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி தேர்தல் விவாத நிகழ்ச்சியில், தி.மு.க. ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் அதன் செய்தியாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனியார் தமிழ் தொலைக்காட்சி 'தேர்தல் பயணம்' என்ற பெயரில் நேரடி விவாத நிகழ்ச்சியை நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்று மார்ச் 23 ஆம் தேதி மாலை காரைக்குடி மகர்நோன்புத் திடலில் நடைபெற்றதில் தி.மு.க, சார்பில் மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி மன்றத் தலைவருமான கட்சியின் பிரமுகர் சேங்கை மாறன் மற்றும் அ.தி.மு.க சார்பில் திருப்புத்தூர்ஜமுன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே. கே. உமாதேவன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேதாரண்யம் தொகுதி வேட்பாளரான மாநில ஒருங்கிணைப்பாளர் இடுப்பாவனம் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இடும்பாவனம் கார்த்திக் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த தி.மு.க.வினர் திடீரென மேடையை நோக்கி நாற்காலிகளை வீசித் தாக்குதலில் ஈ...