முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தவெகவில் பலரை இணைந்து நடத்தும் 60 வயது இளைஞர் அமைச்சர் ஆனந்த் பிறந்தநாள்

இரசிகராக இருந்து அமைச்சரானவர் ந. ஆனந்த் எனும் புஸ்ஸி ஆனந்த். இவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் தற்போது உள்ளார்.  ஆரம்ப காலத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், முதலில் அரசியல்வாதியின் உதவியாளராகத்  பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தீவிரமாக நடிகர் விஜய்யின் ரசிகராக மாறி பண்டிச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவரானார். நடிகர் விஜய்யின் தந்தை திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நம்பிக்கையைப் பெற்று, அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாகவே இவர் 'புஸ்ஸி ஆனந்த்' என அழைக்கப்படுகிறார். நடிகராக விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய போது, கட்சியின் பொதுச் செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு  வ...
சமீபத்திய இடுகைகள்

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

72-வது தேசிய திரைப்பட விருதுகள்  திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக மம்மூட்டி மற்றும் கார்த்திக் ஆர்யனும், சிறந்த நடிகையாக யாமி கௌதமும் தேர்வு செய்யப்பட்டனர். 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள நேஷனல் மீடியா சென்டரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அதிகாரபூர்வமாக  அறிவிக்கப்பட்டதில் மலையாள மொழி நடிகர் மம்மூட்டி மற்றும் ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை யாமி கௌதம் வென்றார். ‘ப்ரமயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டியும், ‘சந்து சாம்பியன்’ படத்துக்காக கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகர்களாகத் தேர்வாகினர். அதே போல ’ஆர்டிகிள் 370’ படத்துக்காக யாமி கவுதம் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டார்.     2024-ஆம் ஆண்டில் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களை உள்ளடக்கி இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் அடங்கிய நடுவர் குழு விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்தது.  வி...

இந்திய வரலாற்றில் வெற்றிகரமாக மண்ணிலிருந்து விண்ணில் ஏவப்பட்ட தனியார் ராக்கெட் விக்ரம்-1

இந்திய வரலாற்றில் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக மண்ணிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள விண்ணெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து மட்டும் 80 பேர் வரை தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல்  விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 20 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இங்கு திட்ட இயக்குனர் விக்டர் ஜோசப் அவரது பணியை ராஜினாமா செய்துள்ளார் சமீபத்தில் இந்தியாவில் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. எனவே அது சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்படுகிறது. இந்தத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சம்பளம் கொடுக்க முன்வருவதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இயக்குநர்கள் இஸ்ரோவிலிருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேரத் துவங்கியுள்ளனர். இதனால் இஸ்ரோ செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு பெறுதல் மற்றும் பணியிலிருந்து விலகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிலிருந்து 100 விஞ்ஞானிகள...

டெல்லி காவல்துறை ஆணையராக அனுராக் குமார். ஐபிஎஸ் நியமனம்

 டெல்லி காவல்துறை கமிஷனராக  அனுராக் குமார். ஐபிஎஸ்  நியமனம் சதீஷ் கோல்சாவுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பிடத்தக்க உயர்மட்ட அதிகாரிகள் மறுசீரமைப்பில், 1994-ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி அனுராக் குமாரை டெல்லி காவல்துறையின் புதிய ஆணையராக மத்திய அரசு நியமித்துள்ளது. ஆகஸ்ட் 2025 முதல் டெல்லி நகர் காவல்துறையை வழிநடத்தி வந்த 1992-பேட்ச் அதிகாரியான சதீஷ் கோல்சாவுக்குப் பிறகு அவர் தற்போது பதவியேற்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான கேபினட் அமைச்சரவையின் நியமனக் குழுவின் அதிகாரப்பூர்வ அனுமதியைத் தொடர்ந்து இந்த மாற்றம். AGMUT கேடரின் அதிகாரியான அனுராக்குமார், முக்கிய காவல் மற்றும் உயர் மட்ட புலனாய்வுப் பணி ஆகிய இரண்டிலும் விரிவான பின்னணியைக் கொண்டவர். இந்த முக்கிய நியமனத்திற்கு முன், அவர் உளவுத்துறை பணியகத்தில் (IB) சிறப்பு இயக்குநராகப் பணியாற்றினார். டில்லி காவல்துறையில் அவரது முந்தைய அனுபவம் பல்வேறு மாவட்டங்களில் துணைக் காவல் ஆணையராக (டிசிபி) முக்கியமான பணிகளில் பணி செய்த அனுபவம் அடங்கும், அங்கு அவர் சிக்கலான சட்டம்-ஒழுங்கு சூழ்நிலைகளை வெற்றிகரமாக சமாளித்து நி...

35 தாசில்தார் அலுவலகங்களில் லஞ்ச, ஊழல் தடுப்புச் சோதனையில் ரூபாய் 82,10,000 சிக்கியது விசாரணை தீலிரம்

தமிழ்நாடு முழுவதும் 35 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், 82 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஊழல் பணம் சிக்கியது. சோதனை மூலம் சிக்கிய ரூபாய் .82.10 லட்சத்தில், G-PAY மூலமாக மட்டுமே ரூபாய் .68.32 லட்சம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 வருவாய் வட்டாட்சியர்  அலுவலகங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத மொத்தம் ரூபாய் 82.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் அளித்த தொடர் லஞ்சப் புகார்களின் அடிப்படையில், நேற்று மதிய உணவு இடை வேளைக்குப் பிறகு இந்த திடீர் சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.  சோதனையில்    பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை: ரூபாய் 82,10,832.   ரொக்கப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூபாய் 13,78,250 கைப்பற்றப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை (GPay) பணமும் சந்தேகத்திற்குரிய ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மூலம் லஞ்சமாகப் பெறப்பட்ட ரூபாய் 68,32,582 கண்டறியப்பட்டத...

சமூகநலத்துறை அரசுத் திட்டப் பயனாளியிடம் லஞ்சம் வட்டார விரிவாக்க அலுவலர் கைது

சமூகநலத்துறை அரசுத் திட்ட பயனாளியிடம் லஞ்சம் வாங்கிய வட்டார விரிவாக்க அலுவலர் கைது!    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பகுதியில், அரசு திட்ட பயனாளியிடம் ரூபாய் .1,000 லஞ்சம் பெற்றதாக வட்டார விரிவாக்க அலுவலர் (Extension) ஜெயராணியை சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC)  கைது செய்தனர். அரசுத் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய நலன்களை வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பயனாளியிடம் சட்டவிரோதமாக ரூபாய் .1,000 லஞ்சம் கேட்டதாக புகார், இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக்கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் பொறிவைக்கும் திட்டத்தின்படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை அரசு சாட்சிகள் முன்னிலையில் புகார்தாரர் கொடுத்த போது, வட்டார விரிவாக்க அலுவலர் ஜெயராணி அந்த லஞ்சப் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்...

பழனி நில மோசடி சார் பதிவாளருக்கு நிபந்தனை ஜாமீன் சிபிசிஐடி விசாரணை துவக்கம்

பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி ஆலயத்தின் டிரஸ்ட் சொத்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட குற்றம் நடந்த நிலையில், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோயில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பதிவுத்துறை விசாரணை மேற்கொண்ட போது வழக்கின் முக்கியத்துவம் மற்றும் கோயில் சொத்து பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்த நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அ...