முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழக முதல்வரைச் சந்தித்த தொழிலதிபர்கள்

தமிழ்நாடு முதலமைச்சரை இன்று இன்று தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் (தமிழ்நாடு) தலைவர் ஆர். வரதராஜன்,  ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர்  ராஜ்ஸ்ரீ பதி,  சக்தி சுகர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் எம். மாணிக்கம், EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர்  முத்தையா முருகப்பன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அர்ஜுன் கோத்தாரி,  பொன்னி சுகர்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என். ராமநாதன், கோத்தாரி சுகர்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் எம். சில்வெஸ்டர்,  EID Parry இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அலுவலர் ஜே.ஏ.எச். ஆஷிக், ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின்  Chief Strategy Officer  ஆதித்ய பதி, ராஜ்ஸ்ரீ சுகர்ஸ் நிறுவனத்தின் பிரசிடெண்ட் ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
சமீபத்திய இடுகைகள்

ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம்

ஏழைகளுக்கு அதிகாரமளித்த ல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், ஏழைகளுக்கு அதிகாரமளித்தல்: அனைவரையும் உள்ளடக்கிய மாற்றத்தின் ஒரு தசாப்தம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் அத்தியாவசியச் சேவைகளுக்கான அணுகல் விரிவுபடுத்தப்பட்டு நலிவடைந்த குடும்பங்கள் எதிர்கொண்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. விரிவுபடுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள், சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் கிட்டத்தட்ட 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். கிராமப்புறங்களில் குழாய் நீர் இணைப்பு வசதி பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 3.23 கோடியில் இருந்து, 2026 மே மாதத்தில் 15.84 கோடியாக உயர்ந்துள்ளது. 2014-ல் 39 சதவீத பகுதிகள் மட்டுமே சுகாதார வசதிகள் பெற்றிருந்த நிலையில், 12.11 கோடிக்கும் அதிகமான வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு அனைத்து கிராமங்களும் 100 சதவீதம் சுகாதார கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் மூலம் 10.57 கோடிக்கும் அதிகமான இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு பெண்களின்...

பிரதமரின் மகப்பேறு பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் 10 ஆண்டுக் கொண்டாட்டம்

பிரதமரின் மகப்பேறு பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் 10 ஆண்டுகாலத்தைக் குறிக்கும் கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது மகப்பேறு பெண்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையிலான நாட்டின் முன்னோடி முன்முயற்சிகளில் ஒன்றான பிரதமரின் மகப்பேறு பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 10 ஆண்டு காலம் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் நாளை மத்திய சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமை தாங்குகிறார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டத்தின் கீழ் உள்ள ஒன்பது உறுதியளிக்கப்பட்ட இலவச சேவைகள் குறித்தும், மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்தும், மகப்பேறு பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அறிந்துகொள்ளும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விழிப்புணர்வு, மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் இத்திட்டத்தின் 10 ஆண்டுகால பங்களிப்பை போற்றும் வகையில் மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு...

லக்னோவில் புதிய பிராந்திய வானிலை மையத்தை மத்திய அமைச்சருடன் முதல்வர் திரந்து வைத்தார்

லக்னோவில் புதிய பிராந்திய வானிலை மையத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இணைந்து தொடங்கி வைத்தனர். லக்னோவில் புதிய மண்டல வானிலை மையத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வானிலை ஆய்வு உட்கட்டமைப்பு பெருமளவில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இது நாடு முழுவதும் துல்லியமான, வானிலை முன்னறிவிப்பு சேவைகளை அளிப்பதாக தெரிவித்தார். கடந்த பத்தாண்டுகளில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மக்கள், பேரிடர் மேலாண்மை முகமைகள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள், விமானப் போக்குவரத்துத் துறையினர் ஆகியோருக்கு வானிலை சேவைகள் வழங்கப்படும் உரையையே மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டில் இந்தியாவில் 17 டாப்ளர் வானிலை ரேடார்கள் மட்டுமே இருந்ததாகவும், ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேற...

தர்மேந்திரப் பிரதானுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா டில்லியில் போராட்டம்

காக்ரோச் ஜனதா பார்ட்டி  இந்தியாவின் தற்போதைய அரசியல், வேலையின்மை மற்றும் ஊழல் போன்றவற்றை எதிர்த்து இளைஞர்களால் இணையத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி  அரசியல் இயக்கம். மே 2026-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கொன்றில் விமர்சகர்களையும் வேலையில்லாத இளைஞர்களையும் 'காக்ரோச்'  அதாவது கரப்பான் பூச்சி மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என விமர்சித்தார்.இந்த வார்த்தையை சாதகமாக எடுத்துக்கொண்ட அரசியல் தகவல் தொடர்பு வியூகவாதியான அபிஜித் தீப்கே  நையாண்டி கட்சியை டிஜிட்டல் தளத்தில் தொடங்கினார். 'கரப்பான் பூச்சி' என்பது அதிகாரத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்படும் சாதாரண மக்களின் சகிப்புத்தன்மையின் அடையாளமாக மாற்றப்பட்டது. ஜூன் 2026-ல் டெல்லி ஜந்தர் மந்தரில் இக்கட்சி சார்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்  கடந்த சில ஆண்டுகளாகவே ஊழல் நிறைந்த நபராக உள்ள தர்மேந்திரப் பிரதான் பதவி விலகல் தான் தீர்வு சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவ...

ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி பாமக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: பாமக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!  தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், ஜாதிவாரியான சமூகநீதியை உறுதிப்படுத்தவும், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  ஜூன் மாதம் 5 ஆம் தேதி, சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் ஜாதிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  கூட்டத்திற்கு அதிரடியாக அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்தில்  பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கடசி தென்னிந்திய பார்வேடு பிளாக், நாம்தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமானது, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் மிகவும் அவசியமானது எனப் பார்த்தால்  1931ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தய கம்ப...

மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊராட்சிகளில் கள ஆய்வு குறித்து சுற்றறிக்கை

தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையில் மாநகராட்சி ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் கள ஆய்வில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் உத்தரவின் பேரில்  காலை திடீர் ஆய்வு, கழிவு மேலாண்மை, தெரு நாய் கட்டுப்பாடு, பள்ளிகளின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட 16 புள்ளிகள் அடங்கிய உத்தரவு  செயல்படுத்தத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் . ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்., 03.06.2026 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களுக்கு வெளிப்படையான, சீரான சேவைகளை வழங்கிடவே இந்த 16 அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் அறிவுறுத்தல் செயல்படுத்த வேண்டிய முறை, முதலாவது காலை ஆய்வு ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்களை தினமும் பார்க்க வேண்டும். அடுத்ததாக பணி வருகை பயோமெட்ரிக்  முறை மூலம் உண்மையான வருகையைக் கண்காணிக்க வேண்டும். மூன்றாவதாக கழிவ...