முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மாணிக்க வாசகப் பெருமான் ஆனித் திருமஞ்சனத் தேரோட்டம் நடராஜர் உற்சவம்

ஸ்ரீ  ஆத்மலிங்க வடிவில் இறைவன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை " பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம் பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம் பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது பரம ரகசியம் என்று கொள்ளே "    - என மாணிக்கவாசகர் விலாசம் எனும்  நூல் புகழ்கிறது.பாணடிய நட்டின் மந்திரி பிரதானி குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் எழுப்பி திருவாசகம் பாடிய திருப்பெருந்துறை, தான் ஆவுடையார் கோவில், திருவிளையாடல் புராண ஸ்தலம் ஆவுடையார் கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி கோயிலின் திருத்தேர், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தேர்களில் ஒன்று. இங்கு ஆனித் திருமஞ்சன விழாவின் போது, அவர் அவதரித்த தினமான இன்று மாணிக்கவாசகப் பெருமானுக்காக இந்தத் தேர் வீதி உலா ஆண்டு தோரும் நடந்து வருகிறதன் அந்தப் பிரம்மாண்டமான தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு 90 அங்குலமும், அகலம் 36 அங்குலமும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் - பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலில்   ஆனி திருமஞ்சனம் தேரோட்டத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றதில் பல்லாய...
சமீபத்திய இடுகைகள்

தவெக அரசின் சடடப்படியான முதல் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை அறநிலையத்துறையில் துவங்கியது

ஆளுநர் உரையின் போது, ​​கோயில் நிதி கோயில் தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தவெகவின் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் ஆன அரசு தெளிவாகக் கூறியிருந்தது. அந்த உறுதிமொழியை அப்படியே கடைப்பிடித்து, திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு கோயில் நிதியைப் பயன்படுத்துவதற்கு முந்தைய திமுக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை அரசு தற்போது ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஹிந்து சமய அறநிலையத்துறை (HR & CE)  அதன் உண்மையான நோக்கத்திற்கு ஏற்ப செயல்படுவதாகத் தோன்றுகிறது. கோயில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும் கோயில் நிதி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், முந்தைய நிர்வாகத்தின் கீழ், இந்த நிதி, நமது பார்வையில், கோவில் வளர்ச்சிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்பட்டது. அதற்கு பல ஆதாரங்கள் உள்ளது  அபரிமிதமான செல்வாக்கை அனுபவித்தவர்கள் மற்றும் அரசாங்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக அடிக்கடி காணப்பட்ட பி. கே....

மேகேதாது விவகாரம் சட்டமன்றப் பேரவையில் முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானம் எதிர்ப்பின்றி நிறைவேறியது

மேகேதாதுவில் தடுப்பணைக் கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் சி. ஜோசப் விஜய் சட்டமன்றப் பேரவையில் கொண்டுவந்த தனித் தீர்மானத்திற்கு காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஐ (எம்) பாஜக,  மமக, கொமதேக,  தேமுதிக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரித்துப் பேசினர். தமிழ்நாடு அனைத்துக் கட்சிகளும் சட்டசபையில் மேகதாது தடுப்பு அணை விவகாரத்தில் ஒருமித்த நிலையில் பேசியிருப்பது சிறப்பு !  தற்போது சட்டசபை நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்புகளாகக் காட்டப்பட்டு பெருவாரியான மக்களால் பார்க்கப்படுவதால், உணர்ச்சிகரமாகவே பேசுகிறார்கள்! எப்படியானாலும் நல்ல கருத்துக்கள் மக்களிடையே சென்றடைவது நல்லது, காவிரி, முல்லைப் பேரியாறு , பாலாற்றுப் பிரச்சனைகளில் அண்டை மாநிலங்களுடனான நமது நீண்ட நெடிய முடிவில்லாத போராட்டங்கள், தீர்வை எட்ட முடியாத முட்டுக்கட்டை நிலை ஆகியவற்றுக்கு இரண்டு அம்சங்களே காரணமாகும், மாநிலக் கட்சிகள் தங்களை அந்த மண்ணின் மக்களுக்கான ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக மட்டுமே ஆறுகள் சார்ந்த நீர் பிரச்சினையை அணுகுவது. தேசியக் கண்ணோட்டத்துடன்  ...

தமிழ்நாடு ஓய்வூதிய TAPS விதிகள் முறையாக அறிவிக்கும் வரை தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிவாரணம் வழங்க அரசாணை

தமிழ்நாடு ஓய்வூதிய TAPS விதிகள் முறையாக அறிவிக்கப்படும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிவாரண அரசாணை  (தமிழாக்கம்) - G.O.(Ms) No.111, நிதி (TAPS) துறை, நாள்: 16.06.2026 சுருக்கம்: ஓய்வூதியம் – தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) – விதிகள் மற்றும் நடைமுறைகளை உருவாக்குதல் – 01.01.2026 முதல் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு TAPS விதிகள் அறிவிக்கப்படும் வரையிலான இடைக்கால காலத்திற்கு வாழ்வாதார ஆதரவு – இடைக்கால தொகை வழங்குதல் – ஆணைகள் வெளியிடப்படுகின்றன. அரசாணை (நிலை) எண்.111 நாள்: 16.06.2026  திருவள்ளுவர் ஆண்டு: 2057. பார்வை: அரசாணை (நிலை) எண்.7, நிதி (PGC) துறை, நாள்: 09.01.2026. ஆணை: 1.மேற்கண்ட அரசாணையில், தகுதியுள்ள அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கத்துடன் ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS)’ என்ற புதிய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. TAPS-க்கான விரிவான விதிகள், செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்படுத்தும் நடைமுறை தனியாக அறிவிக்கப்படும் எனவும், TAPS 01.01.2026 முதல் அமலுக்கு வரும் எனவ...

மணல் கொள்ளையில் 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் பணமோசடி விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை (பொதுப்பணித்துறை) உயர் அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை ஏற்கனவே நடத்தியது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக ஆற்று மணல் விற்பனை செய்யப்படுவதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கில் காட்டப்படாமல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்  செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.சோதனைக்கு உள்ளான  நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா மற்றும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய மணல்  ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்றது. அதோடு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை முதன்மை அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். இந்த அத...

தோழர் சி.மகேந்திரன் தவெகவில் இணைந்தார்

1971ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருக்கும் தோழர் சி.மகேந்திரன், பல பொறுப்புகளை வகித்தார்.  அரசியல்வாதியாக மட்டுமேயல்லாமல், கட்டுரையாளர், பேச்சாளர் போராளி என பன்முகத்தன்மை கொண்டவர். தற்போதுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியனுக்கு முன்னிருந்த முத்தரசனை எதிர்த்துப்  போட்டியிட்ட தோழர் சி.மகேந்திரன், தேர்ந்தெடுக்கபடாத நிலையில், கட்சியின் தீவிர செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார்.  எந்த அரசுப்பணிக்கும் செல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர்! 3 ஆண்டுகளாக அவர் கட்சியில் செயல்பட வில்லை தற்போது த.வெ.கவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சி.மகேந்திரன் பேட்டி  சி.மகேந்திரனை கம்யூனிஸ்ட் என அழைப்பதை விட தமிழ்த் தேசியவாதி எனலாம் கட்சிக்குள் பலருக்கு உதவியாக இருந்தவரால் தா. பாண்டியன் மறைவுக்கு பின் அக் கட்சியில் அவரால் மேலே வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் கூறலாம். பல தமிழ்த்தேசியவாதிகளைப் தோழர் சி.மகேந்திரன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) நிறுவனத்துடன் நீண்ட காலத் தொடர்பு கொண்டிருந்தார், இ...