முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஹரியும் சிவனும் ஒன்றே என்பது போல தமிழும் இணைந்து சமஸ்கிருதமும் ஒன்றே

பேரரசர் இராஜ இராஜ சோழர் என்பதற்கும் இராசராசசோழன் என்பதற்கும் உச்சரிப்பு வித்தியாசம் உண்டுன்னு சில புதுமை மண்டுகள் அறியவில்லை, சமஸ்கிருதப் பெயர் தான் அவர் விரும்பி கல்வெட்டுகளில் சூட்டிக் கொண்ட பெயர். கல்வெட்டுகள் பலவும் இன்னும் சமஸ்கிருத மொழியில் தான் இருக்கின்றன. அவர் காலம் மட்டுமல்ல அவரது மகன் இராஜேந்திர சோழன் காலமும் தமிழ் கலந்த சமஸ்கிருத மொழிக்கு சிறந்த காலமாகவே இருந்தது, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலைதான் இருந்தது, ஜாதி என்பது 1980 ஆம் ஆண்டு வரை தமிழ் தான் அதன்பின் தான் பலர் அதை உச்சரிப்பு பிழையாக சாதி என்றனர்,  அது அவர்கள் அறிந்த அறிவு,  நாம் கடைசிவரை தமிழ் எழுத்தாகவே  ஜா, ஸ்ரீ, ஸ்,ஷ், ஹா,எனத்தான் படிப்போம் லக்ஷ்மி என்று தான் எழுதுவோம் இதுவே காலகாலமாக நாம் நமது வழிவழி மூதாதையர் கற்றது அதுவே உண்மையான,  மக்களுக்கு நீதியும் நிதியும் வழங்கிய ஊழல் லஞ்ச லாவண்யங்கள் இல்லாத மன்னர்கள் காலம் தொட்டு வரும் ஆட்சி முறை தொன்மையான தமிழ் மொழி, திருக்குறள் கூறுவதும் சமஸ்கிரதம் கலந்த தமிழ் தானே, பிரம்மி மற்றும்  கிரந்த எழுத்தில், வட்டெழுத்தில் சமஸ்கிருத மொழியில்...
சமீபத்திய இடுகைகள்

திரைப்பட விருதுகள் சாதனைக்கா இல்லை சார்ந்தவர்களுக்கா என இயக்குனர் சேரன்,,நடிகை மோனிகா விமர்சனம்

திரைப்பட இயக்குநர், நடிகர் சேரன் வெளிப்படையான கருத்து 'திருமணம்' படம் தேர்வுக குழுவால் புறக்கணிக்கப்பட்டது குறித்து அவரது கேள்விகள், கவனத்தை ஈர்க்க்கிறது.தமிழ்நாடு அரசின் சார்பில் 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான  திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான தொலைக்காட்சித் தொடர் விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் வழங்க உள்ள நிலையில் இந்த விருது பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் மட்டுமே சிறந்த திரைப்படங்களாக அறிவிக்கப்ப...

மதுரை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர்

மதுரை நாயக்க மன்னர்களின் தலைநகரான திருச்சிராப்பள்ளியை மாற்றி முதன் முதலில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பெருமைக்குரிய மன்னர் திருமலை நாயக்கர். மதுரை நகரை கலையின் வடிவமாக மாற்றினார். மதுரையில் பிரம்மாண்டமான மற்றும் பழைய பாண்டியர் அரண்மனையின் மூன்றில் ஒரு பகுதியில் ஒரு புதிய அரண்மனையை 200 தூண்களுடன் கட்டுவித்தார். அதற்காக மண் எடுக்கத் தோண்டிய பெரிய பள்ளத்தைக் கூட கலைநயத்துடன் கூடிய தெப்பக்குளமாக மாற்றினார். பின்னாட்களில் அமைச்சர் பெருமக்களும், அரச சபையினரும்  திருமலை நாயக்கரின் பிறந்த நாளான தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று (அக் காலத்தில் கிரிக்கோரியன் காலண்டர் கிடையாது. எனவே சரியான தேதிப்படி நடக்காது ஹிந்து மத திதிப்படிதான் நடக்கும் ஆகவே பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம்) அதே தெப்ப குளத்தில் திருமலை நாயக்கரின் ஆயுள் விருத்திக்கும் அவர் புகழினை போற்றவும் தெப்பம் விடும் திருவிழாவை துவக்கினர். பின்னர் அந்த கலாச்சாரம் திருமலை நாயக்கர் ஆட்சி செய்யும் அனைத்து பகுதிகளிலும் பரவி பல இடங்களில் நாயக்க மன்னரின் புகழினை போற்றும் விதமாக தெப்...

வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' ஐ முன் நிறுத்தும் மத்திய நிதிநிலை அறிக்கை

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை  இந்தியாவை முன்னிறுத்துகிற, 'வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' என்ற இலக்கை அடைய, இந்தியாவின் மக்கள்தொகையில் 'இளைஞர் சக்தி'யை  மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள், போட்டித்தன்மைக்கு ஈடுகொடுத்து நம் நாட்டின் உற்பத்தித்திறனை விரைவுபடுத்தி, நிலைத்திருக்க செய்யும் நிதிநிலை அறிக்கை தான்  இன்றைய பட்ஜெட். நாட்டின் முன்னேற்றத்தில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் திறன்பயிற்சி, வேலைவாய்ப்பு, சேவைத்துறை வளர்ச்சி என அனைத்து தேவைகளையும் உணர்ந்து பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மூலதன செலவினங்களை அதிகரித்துள்ளது மத்திய அரசின் இன்றைய பட்ஜெட். இந்தியாவின் வளர்ச்சி பாதையில், பொருளாதார முன்னேற்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாஜக அரசின் கொள்கையின் படி, ஏழைகள், பின்தங்கியோர், பாதிக்கப்பட்டோர் என கடைநிலை மக்களை கடைத்தேற்றும்  நிதிநிலை அறிக்கை. எந்த வித புதிய வரிகளையும் மக்கள் மீது திணிக்காமல், மூலதன செலவினங்களை ரூபாய் 12.2 லட்சம் கோடியாக உயர்த்தியதோடு, மொத்த செலவினங்கள் ரூபாய்...