பாவாடை சாமியைக் காக்க என் எல் சி க்கு எதிராகப் போராடும் படையாட்சிகள், ஆதரவுத் தலைவர்களின் கண்டனக் குரல். . என்.எல்.சி நிலக்கரி சுரங்க மூன்றாவது விரிவாக்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா? பாமக மற்றும் தவாக கட்சிகள் கண்டனம் .பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குபபம்,தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்நி இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. தெற்கு மேலூரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் பாவாடைராயன் கோயில் அப்பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக திகழ்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு அப்பால் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வக்கோயிலாகத...
PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல் முறைகேடு? உரிய அலுவலர்கள் உள்பட 12 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு! தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் பழங்கோட்டை ஊராட்சியில், மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புற) PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்ப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடவடிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தகுதியற்ற நபர்களைப் பயனாளிகளாகத் தேர்வு செய்தல், அரசு நிதியை விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்குதல், ஆவணங்களில் தவறான தகவல்களை பதிவு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரச...