1956ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறுகள் சட்டத்தின் பிரிவு 6A ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்திய அரசு சூன் 1, 2018 அன்று காவிரி நீர் தொடர்புடைய மாநில அரசுகளுடன் இணைந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை நிறுவியது. தற்போது மேகதாது அணை குறித்து ஒருசார்பாக விவாதித்து முடிவெடுக்கப்படும் ஆபத்துள்ளதால் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவது குறித்து விவாதிப்பதற்கான காவிரி மேலாண்மை ஆணையத்தின் 50-ஆவது கூட்டம் டெல்லியில் இன்று ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் அங்கம் வகிக்கும் 4 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இந்தக் கூட்டத்தை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ...
சத்ரு சம்ஹார யாகம் செய்து சாமி தரிசனம் செய்தார் தவெக தலைவர் நடிகர் விஜய் சத்ரு சம்ஹார ஹோமத்தை ஜென்ம நட்சத்திர திதிகளில் செய்வது சிறப்பு. முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்களில் செய்வது சிறப்பான பலன், மேலும் முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாகத் தர வல்லதாகும். யாக வேள்வி குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களைத் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களைத் தருகிறது. ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும். சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாகத் தரப்படுவதை பூஜையறையில் வைத்து தினமும் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் தோஷங்களைப் போக்குகிறது. சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நேரடி மற்றும்...