முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

2,926 வேட்பாளர்கள் களத்தில் உள்ள மேற்கு வங்காளத் தேர்தல்

மேற்கு வங்காள சட்டப் பேரவைத் தேர்தலில் மொத்தம் 2,926 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் இந்திய தேர்தல் ஆணையம் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் அட்டவணையை மார்ச் 15, 2026 அன்று வெளியிட்டது. 2026 ஏப்ரல் 29 அன்று நடைபெறவிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தின் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2026 ஏப்ரல் 9 ஆகவும், மேற்கு வங்க இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனைக்கான தேதி 2026 ஏப்ரல் 10 ஆகவும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 2026 ஏப்ரல் 13 அன்று பிற்பகல் 3:00 மணி எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது . வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதிக்குப் பிறகு, மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலுக்கான மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை: மேற்கு வங்கத்தில் முதற்கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி 152 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.  இதில் மொத்தம் 1,478 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 28-ம் தேதி 142 தொகுதிகளுக...
சமீபத்திய இடுகைகள்

சவுக்கு சங்கர் தாயாரும் சசிகாந்த் செந்தில் மாமியாருமான கமலா காலமானார்

நிபந்தனை ஜாமீன் விதிமுளைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூப் நடத்திய சவுக்கு சங்கரை ஆந்திராவில் சென்னை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பரில் மோசடி வழக்குகளில் கைதாகி, பின்னர் உடல்நலக் குறைவால் 12 வார கால இடைக்கால ஜாமீனில் வெளிவந்தவர், நீதிமன்ற உத்தரவுப்படி மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆஜராகத் தவறியதனால் அவர் தலைமறைவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தனிப்படைகாவல்துறை தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி அவரை ஆந்திராவிலுள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து கைது செய்தனர். தற்போது சென்னை புழல் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது தமிழ்நாடு காவல்துறை ‘குண்டர் தடுப்பு சட்டத்தின்’ (Goondas Act) கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆணை சிறையிலேயே அவரிடம் வழங்கப்பட்டது. தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர், அவர் மகன் துணை முதல்வர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இந்த சட்ட நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது. ஆட்சி மாற்றம் நடந்நால் அரசு அவரை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கும் என்பது தற்போது தேர்தல் பிரச்சாரம் செய்த எடப்பாடி கே. பழனிசாமி தெரி...

அப்பல்லோவில் ஜி.கே. மணியை விரட்டி விளாசிய மருத்துவர் ராமதாஸின் 3 வது மகள் கவிதா

ஜி.கே. மணியை விரட்டி விளாசிய மருத்துவர் ராமதாஸ் மூன்றாவது மகள் கவிதா ஜெய்கணேஷ் மருத்துவமனையில் நடந்தது இது? "எங்கள் குடும்பத்தைப் பிரித்த ஜிகே மணிக்கு மருத்துவமனையில் என்ன வேலை என கவிதா கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது." சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இச் சூழலில், அவரை நலம் விசாரிக்க வந்த அக்கட்சியின் ஜி.கே. மணியை, மருத்துவர் ராமதாஸின் மூன்றாவது மகள் கவிதா ஜெயகணேஷ் கடுமையாகச் சாடியதுடன் திட்டி திருப்பி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. காலங்கடந்து நடந்த போதும் சரியாக  நடந்துள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு லேசான மயக்கம் மற்றும் உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உயர் மேல் சிகிச்சைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர் மருத்த...

திருவள்ளூர் முதல் குமரி வரை மீனவர்கள் தொகுதிகளை வளைத்த நடிகர் விஜயின் தவெக

தூத்துக்குடி, திருநெல்வேலி, காரைக்குடி, பரப்புரை முடித்து கன்னியாகுமரியில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். மகாதானபுரம் சந்திப்பில் சைக்கிளில் வலம் வந்து தொண்டர்களை உற்சாகமிகச் சந்தித்தார். பின்னர் கன்னியாகுமரி சீரோ பாயிண்ட். வரை சாலை வழி சந்திப்பை நிகழ்த்தினார். மகாதானபுரம் மற்றும் ஜீரோ பாயிண்ட் பகுதிகளில் நடிகர் விஜய் பேசுகையில், "இந்தக் கோடை கால வெப்பத்தில் எனக்காக நீங்க வந்திருக்கீங்க. உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள். இங்கு சில விஷயங்களை நான் அறிவிக்கலாம் என இருக்கிறேன். இலஞ்சமில்லாமல் ஒவ்வொருவருக்கும் அரசின் நலத்திட்டம் போய் சேரும். அதற்கெனத் தனியாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆதார் கார்டைப் போல தமிழ்நாடு சிட்டிசன் பிரிவிலேஜ் கார்டு வழங்கப்படும். மீன்பிடித் தடைக்கால நிதி  ரூபாய் .8,000 லிருந்து  ரூபாய் .20,000 மாக  உயர்த்தப்படும் இலங்கைக் கடற்படையிடம் பிடிபட்ட படகுகளை தூதரகத்தில் பேசி மீட்கும் வரை படகு உரிமையாளருக்கு ரூபாய்.5 லட்சம் நிதி வழங்கப்படும்  மீனவர்கள் படகு டீசல் மானியம் 1,500 லிட்டரில் இருந்து 3,500 லிட்டராக உயர்த்தப்படும் கடல்தா...