முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மன்னார்குடி குடமுழுக்கும் பகுதியின் வரலாறும்

மன்னார்குடி  ஆன்மிக வரலாறு மற்றும் இயற்கை அழகு நிறைந்த நகரம்,  தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்தது. தெற்கின் துவாரகை என அழைக்கப்படுகிறது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர்களால் இசை ஊக்குவிக்கப்பட்டதற்கான சான்றுகள் உண்டு. சோழர் காலத்தில் அமைத்த ஒரு பிரம்மாண்டமான வைணவ ஸ்தலமாகும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி திருக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பொது ஆண்டு 1072 முதல்1122 வரை உள்ள காலத்தில்     கட்டப்பெற்ற வைணவத் திருக்கோயிலாகும். ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும். இக்கோயில், குலோத்துங்க சோழ விண்ணகரம் என அழைக்கப்படுகிறது இத்திருக்கோயில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான திருக்கோயில் 154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாகும். கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்களுப்,                    நவதீர்த்தங்களும், இரண்டு மரத்தேர்களைக் ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாட்டுக்கு உயரிய ஐந்து பத்ம விருதுகள்

இந்தியாவின் உயரிய 5 'பத்ம விருதுகள் தமிழ்நாட்டுக்கு    2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று அறிவித்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை ஆராய்ச்சியாளர் புண்ணியமூர்த்திக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுகிறது 2026 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு: தமிழ்நாட்டில் பத்ம பூஷன் விருது பெற்றவர்கள்:  கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி -மருத்துவம் (கே.பி.ஆர்) எஸ் கே எம் மயிலானந்தன் -சமூகப்பணி தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்:  காயத்ரி பாலசுப்ரமணியன் மற்றும் ரஞ்சனி பாலசுப்ரமணியன் (இரட்டை) -கலை  டாக்டர் எச்.வி.ஹண்டே - மருத்துவம் கே ராமசாமி - அறிவியல் மற்றும் பொறியியல...

மாணவர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் அரசின் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

பள்ளியில் பயிலும் மாணவர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் அரசின் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது,    அது தனியுரிமை மீறல் எனக் கூறுகிறது, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு, அரசு நடத்தும் மாதிரிப் பள்ளிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் சமூகப் பின்னணி தொடர்பான முக்கியமான தனிப்பட்ட தரவுகளைச் சேகரிக்கும் உத்தரவை சமீபத்தில் ரத்து செய்தது. நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தெளிவான நோக்கமின்றி பள்ளி மாணவர்களிடமிருந்து முக்கியமான தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பது அவர்களின் தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாகவும், பாதிக்கப்படக்கூடிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும் தெரிவித்தது. அரசு நடத்தும் மாதிரிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமிருந்து சேகரிக்கப்படும் தரவுகள் மற்றும் ஆவணப்படுத்தப்படும் விதம் முற்றிலும் தனியுரிமையை மீறுவதாகும், இது தெளிவான பாரபட்சம் மற்றும் மாதிரிப் பள்ளி மாணவர்களை மோசமாக நடத்துவதாகும்.  "மோசமான பின்னணியைக் கொண்ட மாணவர்களின் மன உறுதியைக் குலைப்ப...

விசிகவை உலுக்கும் உலங்கு வானூர்தி மாமூல் ஊழல் குற்றச்சாட்டு

விசிகவை உலுக்கும் உலங்கு வானூர்தி மாமூல் ஊழல் குற்றச்சாட்டு, கோவளம் பகுதியில் செயல்படும் ஏரோ டான் சுற்றுலா உலங்கு வானூர்தி நிறுவனத்திடம் மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த திருப்போரூர் விசிகட்சி ச ம உ வைத் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி சபாநாயகர் பி. எஸ் அப்பாவுவிடம் அதன் தலைமை நிர்வாக அலுவலர் நிசா புகார். கோவளம் உலங்கு வானூர்தி சேவையை மீண்டும் தொடங்குவதா? சுற்றுச்சூழலைச் சீரழிக்கும்  சேவையை நிறுத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படுமென  பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளி வந்த நிலையில் மற்றொரு பக்கம் எங்களிடம் லஞ்சம் கேட்டு  வி சி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் பாலாஜி தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறாரென கோவளம் பகுதியில் செயல்படும் உலங்கு வானூர்தி நிறுவனம் சார்பில், சபாநாயகர் பி.எஸ்.அப்பாவுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் கோவளம் கிழக்குக் கடற்கரைச் சாலைச் சந்திப்பு சாலையருகே, ஏரோடான் எனும் தனியார் நிறுவனம் சார்பில், சுற்றுலா உலங்கு வானூர்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி உலங்கு வானூர்தி...