குடிப்பகத்துப் பணியாளரை உயர்த்தி, படிப்பகத்துப் பணியாளரை வீழ்த்துகிறதா! அரசின் சம்பள அறிவிப்பு !?, -அலசல் ஆய்வுக் கட்டுரை,. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டிற்கான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை (Demand No. 37) மீதான விவாதமும் கொள்கை விளக்கக் குறிப்புத் தாக்கல் செய்த ஆகஸ்ட் 31, 2026 அன்று இத்துறைக்கான புதிய அறிவிப்புகள் மற்றும் கொள்கை முடிவுகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே. விக்னேஷ் சட்டப்பேரவையில் வெளியிட்டதில். கள்ளச்சாராய ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் கள்ளச்சாராய உற்பத்தியை முழுமையாக ஒழிப்பதற்காகவும், போலி மதுபானப் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் பல்வேறு உத்திகள் அறிவிக்கப்பட்டுள்ளன, கள்ளச்சாராயத் தொழிலை கைவிட்டு, திருந்தி வாழும் முன்னாள் குற்றவாளிகளின் பொருளாதார மறுவாழ்விற்கான தனிநபர் நிதியுதவித் தொகை இந்த ஆண்டு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கள்ளச்சாராய நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் தடுக்கவும் காவல் மற்றும் ஆயத்தீர்வை துறைகளில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் வாகனங்கள் மேம்படுத்தவும். டாஸ...
நேபாள்கஞ்ச் சாலை - நான்பாரா - பஹ்ரைச், அகல ரயில் பாதைத் திட்டம் : மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார் உத்தரப் பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர், நேபாள்கஞ்ச் சாலை-நான்பாரா-பஹ்ரைச் அகல ரயில் பாதை, மின்மயமாக்கல் ஆகியவற்றைத் தொடங்கி வைத்தனர். 56.15 கி.மீ நீளமுள்ள இந்தப் பாதை சுமார் ரூ.730 கோடி செலவில், அகலப் பாதையாக மாற்றப்பட்டு மின்மயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நான்கு ரயில் சேவைகளும் நேபாள்கஞ்ச் சாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு இதற்கான நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அண்டை நாடான நேபாளத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்த மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவும் நேபாளமும் வலுவான கலாச்சார உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்தடையும் பயணிகளுக்காக, ரயில்வே ஏற்பாடுகளைச் செய்து ...