மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி தென்பாண்டி நாட்டின் கீழ்திசை தன்னாட்சிக் கள்ளர் நாடுகளான வெள்ளளூர், மற்றும் மேலவளவு மற்றும் முத்தரையர் என அழைக்கப்படும் வலையர் சமூக மக்கள் நிறைந்த கொடடாம்பட்டி யூனியனில் அதிகம் வசிக்கும் சட்டசபை தொகுதியாகும் இங்கு மட்டும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் இன்று மேலூர் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். வேலூரைச் சேர்ந்த முன்னாள் காஞ்சிபுரம் நடாளுமன்ற உறப்பினரான விஸ்வநாதன் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். பி. விஸ்வநாதன், தற்போது காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செயலாளராகவும் தெலுங்கானா மாநிலப் பொறுப்பாளராகவும் உள்ளார். தேர்தலில் போட்டியிட தனக்கு பொதுத் தொகுதி வேண்டுமென விஸ்வநாதன் அண்மையில் கேட்டிருந்தார் அவர் மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் விஸ்வநாதன் அளித்த பேட்டியில், “மேலூர் தொகுதி என்பது எனக்கு புதிதல்ல, கடந்த 2001ஆம் ஆண்டிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜமாணிக்கத்துடன் இணைந்து தொகுதியின் அனைத்து...
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை விசிகவின் தலைவர் திருமா மறுபரிசீலனை செய்வதாக ஏற்கனவே தகவல் வெளியானது. சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானவர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அவருக்கு திமுக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், மாநில அரசியலுக்கு திருமா வருவதை திமுக விரும்பவில்லை என எதிர்க்கட்சிகள் அப்போது விமர்சித்தன. ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், ஒரு வேளை வெற்றி பெற்றால் திருமாவுக்கு அமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் பதவி கொடுக்க நேரிடுமாம். வி சி கட்சித் தலைவர் திருமா போட்டியிடாததால், அவருக்குப் பதிலாக விசிகவில் முன்னாள் காங்கிரஸ் தலைவரான க. இளையபெருமாள் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 தொகுதிகளில் விசிகட்சி போட்டியிடுகின்றது. இதற்கான வேட்பாளர் பட்டியல் சில நாள்களுக்கு முன் அவர் வெளியிட்டார். அந்தப் பட்டியலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமா போட்டியிடுவதாகக் அறிவிப்பு வெளியாகிய நிலையில் ஏற்கனவே 2024 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் வெற்றிப...