சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் காவல்துறை வனத்துறை உயர் அதிகாரிகள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் 29.6.2026 பிற்பகல் நடைபெற்றதில் முதலமைச்சர் பேசுகையில், “வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில் தான் மக்கள் நமது அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில், நிரபராதிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்த...
தமிழ்நாட்டின் பள்ளிப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றியமைக்க விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 நபர் உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவை மாற்றி, இந்த புதிய குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை: 17 பேர் கொண்ட குழு. மாணவர்களின் எதிர்காலத் திறன் வளர்ச்சிக்கு ஏற்பவும், நவீன காலத்திற்கு ஏற்பவும் பள்ளி பாடத்திட்டங்களை முழுமையாக மறுசீரமைத்தல். இக்குழுவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நிபுணர் குழு மாற்றியமைப்பு தமிழ்நாட்டில் பள்ளி பாடத்திட்டங்களுக்கு முழுமையாக கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவை மாற்றி, இந்த புதிய குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.முக்கிய அம்சங்கள் இக்குழுவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் கல்விச்...