தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையில் மாநகராட்சி ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் கள ஆய்வில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் உத்தரவின் பேரில் காலை திடீர் ஆய்வு, கழிவு மேலாண்மை, தெரு நாய் கட்டுப்பாடு, பள்ளிகளின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட 16 புள்ளிகள் அடங்கிய உத்தரவு செயல்படுத்தத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் . ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்., 03.06.2026 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களுக்கு வெளிப்படையான, சீரான சேவைகளை வழங்கிடவே இந்த 16 அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் அறிவுறுத்தல் செயல்படுத்த வேண்டிய முறை, முதலாவது காலை ஆய்வு ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்களை தினமும் பார்க்க வேண்டும். அடுத்ததாக பணி வருகை பயோமெட்ரிக் முறை மூலம் உண்மையான வருகையைக் கண்காணிக்க வேண்டும். மூன்றாவதாக கழிவ...
நார்வே செஸ் 2026 ஜாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு @pragg_chess பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக வாழ்த்துக்கள். தனது அறிவார்ந்த ஆட்டத்தினாலும், அசாத்தியமான தொடர் வெற்றிகளினாலும் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் அவர் மாபெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே நடைபெற்ற செஸ் போட்டியில் 6 வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கீமரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் மொத்தம் 18 புள்ளிகளை பெற்று அவர் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வெஸ்லி 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். இறுதி சுற்றின் முடிவில் பிரக்ஞா...