முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

SIR உள்பட பிற தேர்தல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இன்டி கூட்டணி கடிதம்

வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் உள்பட பிற தேர்தல் சார்ந்த நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க கோரி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு 'இந்தி' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கடிதம் எழுதினர்.            SIR குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தி கூட்டணி எழுதிய கடிதத்தில்  திமுகவும் கையெழுத்து  SIR குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இந்தி கூட்டணிக் கட்சிகள் 23 மற்றும் ஒரு சுயேச்சை இணைந்து கடிதம். ஜூன்  8 ஆம் தேதி நடந்த இந்தி கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத திமுக. இந்தி கூட்டணி கட்சிகள் சார்பில் எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது1 INC, 2 TMC, 3 SP, 4 AAP, 5 DMK, 6 RJD, 7 Shivsena UBT, 8 NCP SP, 9 CPI M, 10 CPI, 11 JMM, 12 JKNC  13 PDP, 14 IUML, 15  CPI ML, 16 AIFB, 17 RSP, 18 DK, 19 MDMK, 20  KMDK, 21 VCK, 22 AJP,  23 KCM, 24 KAPIL SIBAL, ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு ‘INDI’ கூட்டணிக் கட்சிகள் எழுதியுள்ள கடிததம், இருந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணைய...
சமீபத்திய இடுகைகள்

அமைச்சர் ராஜ்நாத்சிங் நாடாளுமன்றத்தில் சிறப்பான உரையை எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக  இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து லோக்சபாவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் ஆற்றிய உரையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக இது அமைந்தது. "இந்தியப் பெண்களின் சிந்தூர் எனும் திலகம் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே" இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக  விவரித்தார்.  இந்திய ஆயுதப்படைகள் 22 நிமிடங்களில் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்து, எல்லைக்குள் நுழைந்து 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்தொழித்ததாகத் தெரிவித்தார்.  இது குறித்து எதிர்க்கட்சிகள்  ஆபரேஷன் சிந்தூரில் எந்த இந்திய வீரரும் உயிரிழக்கவில்லை என்று லோக்சபாவில் ராஜ்நாத் சிங் கூறியதாகக் கூறி, மத்திய அரசு நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமைச்சர் கூறிய கருத்துக்கள் தவறான தகவல்களை மறுப்பதற்காகவே தவிர, வீரர்களின் தியாகத்தை மறைக்கும் நோக்கம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம்...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு அமலாக்கத்துறை சோதனை

சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள 21 வளாகங்களில்  அமலாக்கத்துறையினர் சென்னை மண்டல அலுவலகம், 29.06.2026 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் ஆட்சேர்ப்புத் தேர்வில் OMR விடைத்தாள்களில் குளறுபடியான வழக்கு தொடர்பாக நடத்திய சோதனையில், பல்வேறு குற்றச் சாட்டு ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள், ரூபாய் 13.18 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதலாக, 56 வங்கி கணக்குகள் மற்றும்ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக, ஜூன் மாதம் தமிழ்நாடு சென்னை, கோயம்பத்தூர் திருச்சிராப்பள்ளி, மதுரை உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் சில இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகளின் திடீர் சோதனையில்  பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட TRB தேர்வில் முறைகேடு நடந்தது.அதில் OMR தாள்கள் மாற்றம், தேர்வு முடிந்த பிறகு, ஸ்கே...

தனிநபர் தலையீடு இல்லாத ஊழலற்ற நிர்வாகம் முதல்வர் உறுதி

சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் காவல்துறை வனத்துறை உயர் அதிகாரிகள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில்  29.6.2026 பிற்பகல் நடைபெற்றதில் முதலமைச்சர்  பேசுகையில், “வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில் தான் மக்கள் நமது அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில், நிரபராதிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்த...

பள்ளிப் பாடத்திட்ட நிபுணர் குழு விஞ்ஞானி தலைமையில் மாற்றியமைத்து உத்தரவு

தமிழ்நாட்டின் பள்ளிப் பாடத்திட்டங்களை முழுமையாக மாற்றியமைக்க விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் 17 நபர் உறுப்பினர்களைக் கொண்ட புதிய நிபுணர் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவை மாற்றி, இந்த புதிய குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. பிரபல விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் உறுப்பினர்கள் எண்ணிக்கை: 17 பேர் கொண்ட குழு. மாணவர்களின் எதிர்காலத் திறன் வளர்ச்சிக்கு ஏற்பவும், நவீன காலத்திற்கு ஏற்பவும் பள்ளி பாடத்திட்டங்களை முழுமையாக மறுசீரமைத்தல். இக்குழுவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நிபுணர் குழு மாற்றியமைப்பு தமிழ்நாட்டில் பள்ளி பாடத்திட்டங்களுக்கு முழுமையாக கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்டிருந்த நிபுணர் குழுவை மாற்றி, இந்த புதிய குழுவை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.முக்கிய அம்சங்கள் இக்குழுவின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் மற்றும் கல்விச்...

ஊழல் தடுப்பு ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை விபச்சாரத் தடுப்புப் பிரிவு ஆய்வாளராகப் பணிபுரிந்த ராஜலட்சுமிக்கு எதிராக எழுந்த ஊழல் லஞ்ச ஒழிப்பு மற்றும் சொத்துக் குவித்த புகாரை விசாரித்து, ஆய்வாளர் விமலா அறிக்கை சமர்ப்பித்திருந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளித்த ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை , ஜனவரி மாதம் 6 ஆம் தேதி  ஒரு குறிப்பாணையை வெளியிட்டதில், ஆய்வாளர் ராஜலட்சுமிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை (FIR) தயார் செய்யுமாறு ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.     ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுறுத்தலின் பேரிலேயே மனுதாரர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். முதல் தகவல் அறிக்கையைத் தயார் செய்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரின் ஒப்புதலுக்கு மனுதாரர் அனுப்பியுள்ளார்.  பிப்ரவரி 12 ஆம் தேதி அன்று, ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் அறிக்கையை ஆய்வு செய்து, சில திருத்தங்களை மேற்கொண்ட பின்னரே முறைப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ​இந்தச் சூழ்நிலையில், வழக்கு பதிவு செய்த காரணத்திற்காக மனுதாரரான விமலாவை பணியிடை நீக்கம் செய்து...

கடவுச்சீடடுக் கட்டணம் உயர்வு கிராமங்களின் மக்களை பாதிக்கும்

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடவுச்சீட்டு எனும் பாஸ்போர்ட் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தியுது. இந்தப் புதிய கட்டண உயர்வு ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. பெரியவர்களுக்கான புதிய கட்டண விபரம்:36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 1,500-லிருந்து ரூபாய் . 2,500 ஆக உயர்வு, 36 பக்கங்கள் தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 3,500-லிருந்து ரூபாய் . 5,000 ஆக உயர்வு  60 பக்க ஜம்போ சாதாரண பாஸ்போர்ட்: ரூபாய் . 2,000-லிருந்து ரூபாய் . 3,500 ஆக உயர்வு   60 பக்க ஜம்போ தட்கல் பாஸ்போர்ட்: ரூபாய் . 4,000-லிருந்து ரூபாய் . 6,000 ஆக உயர்வு  குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான விபரம் 18 வயதுக்குட்பட்டோர் (சாதாரண 36 பக்கங்கள்): ரூபாய் . 1,000-லிருந்து ரூபாய்  1,750 ஆக உயர்வு 18 வயதுக்குட்பட்டோர் (தட்கல் 36 பக்கங்கள்): ரூபாய் . 4,250 மூத்த குடிமக்கள் மற்றும் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்களில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தொலைந்து போன அல்லது சேதமடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டு, சாதாரண சேவைக்கு ரூபாய்...