திரைப்படங்களில் தயாரிப்பாளர்கள் தான் அதன் உரிமையாளர் தங்களிடம் இளையராஜா இசையமைத்த 134 படங்களின் பாடல்கள் தொடர்பான ஒப்பந்தங்கள் உள்ளன என மனுவில் கூறியுள்ள சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம், வாங்கிய நிலையில் '2026 பிப்ரவரி மாதம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ் மற்றும் ஜியோ சாவ்ன் ஆகிய தளங்களுக்கு பாடல் உரிமையை இளையராஜா சட்ட விரோதமாக வழங்கியுள்ளார்' என்கிறது.'1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின்படி திரைபடத்துக்காக உருவாக்கப்படும் இசைக்கு அதன் திரைப்படத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர்' என சரிகம இந்தியா லிமிடெட் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த வகையில், பதிப்புரிமை பெற்ற படைப்புகளை மாற்றியமைக்கவும் மீண்டும் உருவாக்கவும் பொதுவில் அதனைப் பயன்படுத்தவும் தங்களுக்கே பிரத்யேக உரிமை உள்ளதாகவும் மனுவில் அந்த நிறுவனம் கூறியது. பதிப்புரிமை பெற்றுள்ள பாடல்களின் மீது சட்ட மீறல்களில் இசைஞானி இளையராஜா தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறி அதுதொடர்பான சில ஸ்க்ரீன் ஷாட்டுகளை சரிகம இந்தியா லிமிடெட் நிறுவனம் இணைத்துள்ளது. அதில், 'கவிக்குயில்' படத்தில் இடம்பெற்ற 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...
தேசிய முற்போக்குத் திராவிட கழகத்தை ஆரம்பித்த நடிகர் விஜயகாந்த், தனித்து களம் கண்டு பின் அ.தி.மு.கவுடன் முதல் கூட்டணி அமைத்தார். பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016 ஆம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க தி.மு.க-வுடன் நடிகர் விஜயகாந்த் உயிருடன் இருந்தவரை சேரவில்லை. இந்தச் சூழலில் வரும் தேர்தலில் பத்துக்கும் மேல் தொகுதிகளை என் டி ஏ கூட்டணியில் கேட்ட பிரேமலதா பாமக கேட்ட தொகுதியைக் கேடடார் ஆகவே கூட்டணி அமையவில்லை ஆனால் பா.ஜ.க தரப்பு எப்படியும் தே.மு.தி.க-வை என்டிஏ அணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்த நிலையில், நேற்று காலை திமுக தலைமை அலுவலகம் அறிவாலயத்தில் திமுக தலைவர் மற்றும் மாநில முதல்வரைச் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளார் தே.மு. தி.க தரப்பில் கேட்டபோது, “இரண்டு தரப்பிலும் ஒரு ராஜ்ய சபா சீட் தர முன் வந்தனர். ஆனால் அ.தி.மு.க தரப்பில் அடுத்த ஆண்டு தான் நாடாளுமன்ற இராஜ்ய சபா இடத்தை ஒதுக்க முடியும் எனக் கூறியதால், அங்கிருந்து பின்வாங்கலாம் என முடிவெடுத்து. தே.மு.தி.க தரப்பில் வரும் மார்ச்...