முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2025 டிஜிட்டல் சூழல் அமைப்பின் பாதுகாப்பு

தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2025-ல் செய்யப்பட்டுள்ள திருத்தம் டிஜிட்டல் சூழல் அமைப்பின் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு விதிகள் 2025-ல் தொலைத்தொடர்புத் துறை சில திருத்தங்களை 22.10.2025 அன்று மேற்கொண்டது. இந்தத் திருத்தம் வங்கித்துறை, மின் வணிகம், மின் நிர்வாகம் போன்றவற்றில் டிஜிட்டல் சேவைகளை வழங்குவதற்குத் தேவையானதாகும். திருத்தப்பட்ட விதிகள் தற்போதுள்ள ஒழுங்குமுறை விதிகளில் உள்ள இடைவெளிகளை சரி செய்து சைபர் மீள்தன்மையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத் திருத்தங்கள் 22.10.2025 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வெளியீட்டிலிருந்த சிறு குறைபாடுகளைச் சரி செய்ய மீண்டும் 25.11.2025 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது
சமீபத்திய இடுகைகள்

ஜவுளித் துறையில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த ‘டெக்ஸ்-ராம்ப்ஸ்’ திட்டம்

ஜவுளித் துறையில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த ‘டெக்ஸ்-ராம்ப்ஸ்’ திட்டத்தை அரசு அங்கீகரித்துள்ளது. ஜவுளித் துறையில் ஆராய்ச்சி, புதுமை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த ஜவுளி சார்ந்த ஆராய்ச்சி, மதிப்பீடு, கண்காணிப்பு, திட்டமிடல் மற்றும் தொடக்கநிலை (டெக்ஸ்-ராம்ப்ஸ்) திட்டத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. 2025-26 நிதியாண்டு முதல் 2030-31 நிதியாண்டு வரை மொத்தம் ரூ 305 கோடி செலவில் இந்தத் திட்டம், வரவிருக்கும் நிதி ஆணைய சுழற்சியுடன் இணைந்து முடிவடைகிறது. மத்திய துறை திட்டமாக செயல்படுத்தப்படும் இது, ஜவுளி அமைச்சகத்தால் முழுமையாக நிதியளிக்கப்படும். இந்தத் திட்டத்தை அறிவித்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், இந்தியாவின் ஜவுளித் துறையை மேம்படுத்தவும், நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் போட்டித்தன்மையில் நாட்டை உலகளாவிய தலைவராக நிலைநிறுத்தவும் டெக்ஸ்-ராம்ப்ஸ் திட்டம் ஆராய்ச்சி, தரவு மற்றும் புதுமைகளை ஒன்றிணைக்கும் என்று கூறினார். இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை சூழல் அமைப்பை எதிர்காலத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட டெக்ஸ்-ராம்ப்ஸ், ஆராய்ச்...

எஸ்ஐஆர் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமில்லை என தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அலுவலர் தகவல்

தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்காக கொடுக்கப்பட்டிருக்கும் எஸ்ஐஆர் படிவத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமில்லை என தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அலுவலர் அா்ச்சனா பட்நாயக் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதேவேளையில், டிசம்பர் மாதம் 4 ஆம் தேதிக்குள் கணக்கெடுப்புப் படிவத்தை சமர்ப்பிக்காவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாதென்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு தலைமை தோ்தல் அலுவலர் அா்ச்சனா பட்நாயக், கணக்கெடுப்புப் படிவத்தின் முதல் பகுதி மட்டுமே நிரப்பப்பட்ட படிவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதாவது, முதல் பகுதி மட்டுமே நிரப்பப்பட்ட படிவங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நிராகரிக்கப்படாது என்றும் உறுதி அளித்தார். "2002 மற்றும் 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரையோ அல்லது உறவினர் பெயரையோ வாக்காளர்கள் கண்டுபிடிக்க முடியாவிட்டால், டிசம்பர் 4, 2025 ஆம் தேதிக்கு முன் வாக்காளர் கையொப்பமிட்ட கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (பிஎல்ஓ...

தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணத்தை வைத்து இயக்குனரைச் சிக்க வைத்த இருவர் கைது

தீயணைப்புத்துறை அலுவலகத்தில் பணத்தை வைத்து இயக்குனரைச் சிக்க வைத்த இருவரை கைது செய்த உள்ளூர் காவல்துறை திருநெல்வேலி தீயணைப்புத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நள்ளிரவில் லட்சக்கணக்கில் பணத்தை வைத்து அலுவலரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிக்க வைக்க முயன்ற நபர்களில் இருவர் கைது,  உயர் அலுவலர்கள் வரையிலான நெட்ஒர்க் குறித்து அலுவல் சார்ந்த கள் விசாரணை நடத்துகின்றனர். திருநெல்வேலி மண்டல தீயணைப்புத் துறையின் துணை இயக்குனராக சரவண பாபு பணியாற்றுகிறார். அவரது பணி அலுவலகத்தில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அவரது இருக்கைக்கு எதிரில் உள்ள அலமாரியில் இருந்து ரூபாய்.2 லட்சத்திற்கும் மேலான ரொக்கப் பணத்தை 6 கவர்களிலிருந்து எடுத்துச் சென்றனர். கணக்கில் காட்டப்படாத  பணம் என ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதா துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவத்துக்கு முன்தினம் 17 ஆம் தேதி, தீயணைப்புத் துணை இயக்குனர் அலுவலகத்திற்கு எதிரிலுள்ள வீட்டின் முன் அமைத்துள்ள கேமராவில் பத...

அரசியல் சாசன தினத்தை முன்னிட்டுக் குடிமக்களுக்குப் பிரதமர் கடிதம்

அரசியல் சாசன தினத்தை முன்னிட்டுக் குடிமக்களுக்குப் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா முன்னேறும் நிலையில் குடிமக்கள் தங்கள் மனதில் கடமைகளை முதன்மையாக வைக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார் அரசியல் சாசன தினமான நவம்பர் 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 1949-ம் ஆண்டு அரசியல் சாசனம் வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அதில் நினைவுகூர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதில் அதன் நீடித்த பங்களிப்பை சுட்டிக்காட்டியுள்ளார். புனிதமான இந்த ஆவணத்தை மதிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தினமாக அரசு அறிவித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசியல் சாசனத்தை செழுமைப்படுத்திய டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பல புகழ்பெற்ற பெண் உறுப்பினர்களைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150-வது பிறந்தந...

கால்நடைகளைப் பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடைசி வாய்ப்பு

கால்நடைகளைப் பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடைசி வாய்ப்பு        அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் கால்நடைகளை பலியிடத் தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பளித்து சென்னை உயர் நீதிமன்றமா மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. இஸ்லாமிய பக்ரீத் பண்டிகையை ஒட்டி, பசுக்கள், எருமைகள், காளைகள் ஒட்டகங்கள் மற்றும் ஆடுகள் திறந்த வெளியில் சட்ட விரோதமாக ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதைத் தடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எங்கும் கால்நடைகளை பலியிடத் தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என மனுவில் ரங்கராஜன் கூறியிருந்தார். மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மாவட்ட வாரியாக வதைக்கூட விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள...

கோயமுத்தூர் செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது தங்க மோசடி வழக்குப் பதிவு

கோயமுத்தூர் செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது தங்க மோசடி  வழக்குப் பதிவு. ரூபாய்.1 கோடி தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு கோயமுத்தூர் கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூபாய்.1கோடி மதிப்புள்ள தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல்துறை ஆய்வாளர்  மீது குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்துகின்றனர். கோயமுத்தூர் சிவானந்தாகாலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58), கட்டுமானத் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வீட்டிலிருந்த போது அப்போது பணியில் இருந்த செல்வபுரம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் வந்தவர்கள் சோமசுந்தரத்திடம், நீங்கள் நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ரூபாய் 1 கோடி மதிப்பில் தங்கம் வாங்கி மோசடி செய்துள்ளீர்கள். எனவே உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களை விசாரிக்கவேண்டும் எனக்கூறி அவரை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு கூட்டிச்சென்று  அங்கு  மிரட்டி நகையை வாங்கினர்  பின்னர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமைய...