தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்கள் Government Pleaders மற்றும் Public Prosecutors நியமனம் செய்வதற்கான பணிகள் தற்போது நிறைவடைகின்றன. சட்டத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் ஓய்வு பெற்ற நிலையில், மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி புதிய செயலாளராக சமீபத்தில் நியமனம் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையில் இந்த நியமன செயல்முறைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டன.சிவகங்கை மாவட்டத்தில் 13 அரசு வழக்கறிஞர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர், நியமனங்கள் அனைத்தும் உரிய சட்ட விதிகளின்படியே எவ்வித முறைகேடுகளுமின்றி நேர்மையான முறையில் நடத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 சதவீதம் நேர்மையாக நடக்கவும், இதில் யாராவது பணம் கேட்டாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ உடனடியாக புகார் அளிக்கலாம்" என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெர...
உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவராக நியமனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) என்பது பொதுமக்களுக்குத் தேவையான இன்றியமையாப் பொருட்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்து, சேமித்து, விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ளும் அரசு நிறுவனம். 1972 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பாதுகாப்பு வழங்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது. இக்கழகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் மற்றும் ராகி ஆகியவற்றை அரசு நிர்ணயிக்கும் விலைக்குக் கொள்முதல் செய்கிறது. கொள்முதல் செய்யப்படும் நெல்லைத் தனக்குச் சொந்தமான நவீன அரிசி ஆலைகள் மற்றும் தனியார் முகவர்கள் மூலம் அரிசியாக அரவை செய்கிறது. நியாயவிலைக் கடைகள் (ரேஷன் கடைகள்) மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தரமான அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை விநியோகம் செய்கிறது. மாநிலத்தின் மொத்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கடைகளை இக்கழகமே நேரடியாக நடத்தி வர...