2026 குடியரசு தின அணிவகுப்பில், ஸ்வமித்வா அலங்கார ஊர்தி அடித்தள நிலையிலான மக்களுக்கு அதிகாரமளித்தலை எடுத்துக்காட்டுகிறது; மைகவ் வாக்கெடுப்பு மூலம் தங்களுக்குப் பிடித்தமான அலங்கார ஊர்தியை மக்கள் தேர்ந்தெடுக்கலாம் புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் இன்று நடைபெற்ற 77-வது குடியரசு தின அணிவகுப்பில், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 450 பிரதிநிதிகள் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இது அடித்தள ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் மக்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கும் மத்திய அரசு அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. கடமைப் பாதையில் அணிவகுத்த 30 அலங்கார ஊர்திகளில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் "ஸ்வமித்வா திட்டம்: தற்சார்பு பஞ்சாயத்து மூலம் வளமான, தற்சார்பு இந்தியா" என்ற கருப்பொருளின் அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது. கிராமப்புற குடியிருப்புச் சொத்துக்களின் சட்டப்பூர்வ உரிமை, குடிமக்களுக்கு எவ்வாறு அதிகாரமளிக்கிறது, பஞ்சாயத்துக்களை வலுப்படுத்துகிறது என்பதை இது எடுத்துரைத்தது. இன்றுவரை, 1.84 லட்சத்திற்கும் அதி...
மன்னார்குடி ஆன்மிக வரலாறு மற்றும் இயற்கை அழகு நிறைந்த நகரம், தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்தது. தெற்கின் துவாரகை என அழைக்கப்படுகிறது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர்களால் இசை ஊக்குவிக்கப்பட்டதற்கான சான்றுகள் உண்டு. சோழர் காலத்தில் அமைத்த ஒரு பிரம்மாண்டமான வைணவ ஸ்தலமாகும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த ராஜகோபாலசுவாமி திருக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பொது ஆண்டு 1072 முதல்1122 வரை உள்ள காலத்தில் கட்டப்பெற்ற வைணவத் திருக்கோயிலாகும். ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும். இக்கோயில், குலோத்துங்க சோழ விண்ணகரம் என அழைக்கப்படுகிறது இத்திருக்கோயில் 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான திருக்கோயில் 154 அடி உயரமுடைய ராஜகோபுரமும், நுழைவு பகுதியில் 54 அடி உயரமுள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட கருடஸ்தம்பமும் சிறப்புடையதாகும். கோயிலின் உள்ளே 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 24 சன்னதிகள், ஏழு பிரகாரங்களுப், நவதீர்த்தங்களும், இரண்டு மரத்தேர்களைக் ...