முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஃபூகெட் விமான நிலையத்தில் டயர் வெடித்து விபத்து

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் IX938 தரையிறங்கிய சம்பவத்தைத் தொடர்ந்து ஃபூகெட் விமான நிலைய ஓடுபாதை மூடப்பட்டது. முன்பக்க கியர் சேதமடைந்தது, ஓடுபாதை 11:00 வரை மூடப்பட்டது UTCHARD தரையிறங்கும் மைதானம் ஃபூகெட் விமான நிலையம் & ஓடுபாதை மூடுகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'நோஸ் வீல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளது' - அறிக்கைகள்ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது திடீரென விபத்தில் சிக்கியது. ஹைதராபாத்தில் இருந்து ஃபூகெட்டுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் தரையிறங்கும் போது முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியபோது இந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தின் முன்புற சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, அது விபத்தில் சிக்கியுள்ளது ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 (VT-BWQ) விமானம், புக்கெட்டில் தரையிறங்கியபோது தான் இந்த சம்பவம் நடந்தது. இதன் காரணமாக விமானத்தின் முன்புற சக்கரம் கழன்றுவிட்டதாகக் கூறப்படுகிறத...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றிய காலம் என் வாழ்வின் பொற்காலம் -ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்.

தமிழ்நாடு ஆளுநராகப் பணியாற்றிய காலம் என் வாழ்வின் பொற்காலமென ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள மாநில ஆளுநராக பெரிய மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், தமிழ்நாடு மக்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அன்புச் சகோதர சகோதரிகளே, தமிழகச் சொந்தங்களே! உங்கள் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றி. கடந்த 54 மாதங்கள், உங்களோடு கலந்து பழகி, உங்கள் அன்பில் திளைத்து, தமிழின் பெருமையிலும் தமிழ் மக்களின் பெருமிதத்திலும் மகிழ்ந்திருந்தேன். வாழ்க்கையின் ஓட்டத்தில், இப்போது உங்களைவிட்டுப் பிரிகிற சூழல் வந்தாலும், உங்களோடு செலவிட்ட இந்த நாட்கள், என் வாழ்வின் பொற்கால நாட்கள் என்பதில் சந்தேகமில்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், மரபிலும் நவீனத்திலும் சிறந்த மாநிலமான தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்று வந்த போது, கரோனா பெருந்தொற்றின் பாதிப்புகள் முழுமையாகத் தீரவில்லை. இருப்பினும், நீங்கள் காட்டிய அன்பும் ஆதரவும் என்னைப் பெரிதும் கவர்ந்தன. உங்களிடம் என்னைக் கவர்ந்த மிகப் பெரும் சிறப்பு– உங்களின் அயராத உழ...

தனியார் கல்வி நிறுவனம் செய்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மூன்று மாதம் கெடு விதித்த நீதிமன்றம்

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரைக்குச் சொந்தமான நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க நீதிமன்றம் ஆணை. அதிமுகவின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் மு.தம்பிதுரைக்குச் சொந்தமான செயின்ட் பீட்டர்ஸ் கல்வி நிறுவனம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகில் கோனம்பேடு கிராமத்திலூள்ள இந்தக் கல்வி நிறுவனம் அரசு நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து விடுதிகள், துணை மின் நிலையம், தனியார் பாதைகள் அமைத்துள்ளதாக கிராம பொதுநல சங்கம் சார்பில் 2021 செப்டம்பரில் வழக்கு தொடரப்பட்டது. அதேபோலவே காடடாங்குளத்தூர் ஏரியை எஸ் ஆர் எம் கல்வி நிறுவனம் பாரி வேந்தரான பச்சைமுத்து உடையாரும், ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி போரூர் ஏரியிலும் ஆக்கிரமித்த  ராமசாமி உடையாரருப் போலவே தற்போது தம்பிதுரை ஆக்கிரமிப்பும் உள்ளது,  வழக்கில், கோனம்பேடு கிராமத்திற்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதால், மீட்கப்படும் நிலங்களை அந்தப் பள்ளிக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக...

ரூபாய் 300 கோடி போதைப்பொருள் கடத்தலில் சிக்கிய இருவர் கைது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூபாய் .300  கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் ராமநாதபுரம் மாவட்டம் காரிக்கூட்டத்தில் இருவர் கைது  இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக  சரக்கு சிற்றூர்தியில் பதுக்கி வைக்கப்பட்டி ருந்த, 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு காவல்துறை , இருவரைக் கைது செய்தனர்.  இராமநாதபுரம் மாவட் டம், மண்டபம் தெற்கு கடற் பகுதி வழியாக இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக இராமநாதபுரம் கியூ பிரிவு காவல்துறையினருக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் தகவல் கிடைத்ததாகவும்  அதனடிப்படையில் அவர்களுடன், போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினரும் இணைந்து, மதுரை- தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள காரிக்கூட்டம் பேரூந்து நிலையம் அருகில் சோதனை செய்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது, மெத் ஆம்பெட்டமைன், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட பல போதைப் பொருட்களிருந்தன. விசாரணையில் மண்டபம் சிங்காரத்தோப்பைச் சேர்ந்த இப்ராஹிம் பாதுஷா, (வயது 29), அம்பலகாரத் தெரு முகைதீன் பயாஸ், (வயது 27), ஆகிய...

உணவகங்களில் நாடு முழுவதும் வருமான வரித்துறையின் சரிபார்ப்பு நடவடிக்கை

 உணவகங்கள் வரிக்காக வருமானத்தைக் குறைத்துக் காட்டுகின்றனவா? என நாடு முழுதும் வருமான வரித்துறை சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறித்த அறிக்கை. உணவு மற்றும் பதப்படுத்துதல் துறையில் வரி ஏய்ப்பு குறித்து வருமான வரித்துறை 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் விசாரணை மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பல உணவகங்கள் அவர்களது கணக்கியல் மென்பொருளில் விற்பனைத் தகவல்களை நீக்குவது உள்ளிட்ட பல மாற்றங்களைச் செய்து உண்மையான விற்பனை அளவைக் குறைத்துக் காட்டியிருப்பது கண்டறியப்பட்டது. சுமார் 1.77 லட்சம் உணவகங்களின் பரிவர்த்தனைத் தரவுகளை ஏ.ஐ.  அடிப்படையிலான பகுப்பாய்வு மென்பொருட்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்ட  தரவுகள் அவர்கள் தாக்கல் செய்த வருமான வரி அறிக்கைகளில் (Income Tax Returns) காட்டிய வருமானத்துடன் ஒப்பிடப்பட்டதில் பெருமளவில் வருமானம் குறைவாகக் காட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. சில சந்தர்ப்பங்களில், பதிவு செய்யப்பட்ட விற்பனைகள் முழுமையாக கணக்குகளில் அல்லது வரி தாக்கல்களில் முழுமையாக பிரதிபலிக்கவில்லை; மேலும் சில பரிவர்த்தனைகள் அறிக்கைகளிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந...

கிருஷ்ணாபுரம் விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

மானாமதுரை விசாரணைக் கைதி மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவு. இரண்டு அட்டவணை பட்டியல் சமூகத்திற்கு இடையில் நடந்த சம்பவம் இதில் மற்றவர்கள் தலையீடு இல்லை    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம்  கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ராஜேஷ் கண்ணன்   மகன் ஆகாஷ் டெலிஷன் வயது 26 எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகம் சார்ந்த நபர் நேற்று முன் தினம் மானாமதுரை காவல் நிலைய, காவலர் மற்றும் அலுவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணையில் அடித்துத் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என முதலில் தகவல் வந்த நிலையில். அதை காவல்துறையினர் தரப்பு மறுத்து செய்தியளித்தது, தமிழ்நாட்டில் இது போன்று மனித உரிமை மீறல் தொடர் காவல் கைதி மரணங்கள் சில இடங்களில் நடந்தேறி வருகிறது. இதில் குறிப்பாக, அட்டவணைப் பட்டியலின , மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞர்கள் மீது விசாரணை என்ற பெயரில் 70 சதவீதம் உண்மை ஆராயாமல் பொய் வழக்குகள் புனைவதும் அதை நீதிமன்றம் மூலம் குற்றப்பத்த்திரிக்கை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தராமல் கை, கால்களை உடைத்து பின் வழுக்கி விழுந்ததாகக் கூறுவதும் க...