முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தவெக மேடையில் நடனமாடி பணியிடை நீக்கமான தலைமை ஆசிரியை

நடிகர் விஜய் நடித்த சிவகாசி  திரைபபடப் பாடலுக்கு கட்சி மேடையில் நடனமாடிய கிருஷ்ணவேனி (வயது 58) தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்  "கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வாரியா...." என்ற பாடலுக்கு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்த தமிழக வெற்றிக் கழகம் நடத்திய மகளிர் தின விழா மேடையில் நடனம் ஆடிய அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கோடம்பாக்கம் ஏரியா ஓட்டுக்கேட்டு வரியா என்ற விஜய் பட பாடலுக்கு ஒரத்தநாட்டில் நடந்த த.வெ.க. மகளிர் தின விழா மேடையில் நடனம் ஆடிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவர் சங்கரநாதர்குடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகவும், வெள்ளத்தேவன் விடுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தது குறிப்பிடதக்கது.ஒரத்தநாடு பகுதி  தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டதில் ஆசிரியை கிருஷ்ணவேணி கலந்து கொண்டார். அப்போது மேடையில் சினிமா பாடல்கள் ஒலிக்கப்பட்ட நிலையில், உற்சாக...
சமீபத்திய இடுகைகள்

மதப் பிரசங்கி பால் தினகரன் பித்தலாட்டம் மும்பையில் வழக்குப் பதிவு

மதப் பிரசங்கி பால் தினகரன் பித்தலாட்டம் மும்பையில் வழக்கு பதிவு.   மதபோதகர் பால் தினகரன் குடும்பம் மீது மும்பையில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு .மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மீரா ரோடு பகுதியில் கோயமுத்தூரைச் சேர்ந்த ‘இயேசு அழைக்கிறார்' அமைப்பு சார்பில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மகாரஷ்டிரா மாநில பிரார்த்தனைத் திருவிழா என்ற பெயரில் நடைபெற்றது, தினமும் 50 ஆயிரம் பேர் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்து திரட்டப்படடனர். இதில், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரன், அவரது மகன் சாமுவேல் தினகரன் அவரது மனைவி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை என்று மதப் பிரசங்கம் செய்தனர். இந்தக் கூட்டத்தின் போது, முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், பிசாசுகள், பேய்கள் விலகி ஓடுகிறது எனவும் நோய்களை குணமாக்குவதாகக் கூறி அமானுஷ்ய மற்றும் பேய், பிசாசு மற்றும் மந்திரச்சடங்குகள் நடைபெற்றதாக ஏமாற்றிய சம்பவம் பலரை அதில் நடிக்க வைத்து அரங்கேறிதாக ஆதாரங்களுடன் மும்பை  சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, பால் தினகரன் அவ...

வேட்புமனு தாக்கல் நான்கு தினம் மட்டுமே நடைபெறும் என தேர்தல் ஆணையம் தகவல்

நான்கு நாட்கள் விடுமுறை: தேர்தல் ஆணையத்தின் வேட்புமனு பற்றிய முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு சடடமன்றத் தேர்தல் 2026 ல் வேட்புமனு தாக்கல் செய்ய நான்கு நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படுமென ECI தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் - ஏப்ரல் மாதம் .6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில், மார்ச் மாதம் 31 ஆம் தேதி (செவ்வாய் கிழமை ), ஏப்ரல் மாதம் .1 ஆம் தேதி (புதன்கிழமை ), ஏப்ரல் மாதம் .3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை ), ஏப்ரல் மாதம் .5 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை ) விடுமுறை தினம் என்றும், மற்ற நான்கு நாள்களில் (மார்ச் மாதம் 30 , ஏப்ரல் மாதம் . 2, மற்றும் 4, மற்றும் 6 ஆம் தேதிகளில் ) வேட்புமனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக 3 நாள் மட்டுமே விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது புது அறிவிப்பு ஆகும்.

14 அமைச்சர்கள் தொகுதிகளை கூட்டணிக் கட்சிக்கு ஒதுங்கிய அதிமுக

அஇஅதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளைத் தவிர்த்து,   தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) - 5,  ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி- 2, ,  ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் -2,   பச்சமுத்து உடையார் எனும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி - 2,  கே.சி.திருமாறன் ஜியின் தேசிய பார்வடு பிளாக் -1, மற்றும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் -1, என  மேலும் சில சிறிய கட்சிகளையும் சேர்த்து மொத்தம் 37 முதல் 40 தொகுதிகளில் தாமரையில் களம் இறங்குகின்றனர்  இன்று அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு முதற்கட்டமாக 23 வேட்பாளர்களை முதலில் அறிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி, எடப்பாடியில்:-  எடப்பாடி K. பழனிசாமி,    வேப்பனஹள்ளியில்:  கே.பி.முனுசாமி, திண்டுக்கல்:-  திண்டுக்கல் C. சீனிவாசன்,      நத்தம் :-  நத்தம் இரா. விசுவநாதன்,      தொண்டாமுத்தூர்:-   S.P. வேலுமணி,    குமாரபாளையம்:-  பி.தங்கமணி,    இராயபுரம்:-  D. ஜெயக...

வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள், எண்ணெய் வள பூமியைப் பிளந்தன

சிறப்புச் செய்திகள் : ரெங்கநாதன் திருப்பதி                                                           " பாலைவனத்து வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள்,    எண்ணெய் வளமான பூமியைப் பிளந்தன! கரிய புகைக்குள், கத்தார் அழுகை மறைந்தது!  நிழல் தேடிய மரங்கள் கூட, நெருப்பாய் எரிந்தன! நிம்மதி தேடிய மனிதர்கள் குழந்தைகள்,அனாதையாய் நின்றனர்! வளைகுடா மண் வரலாற்றில் கறை படிந்தது! போரின் முடிவில், பூமிக்கு மிஞ்சியது எரியும் தழும்புகள்,  அதில்                                விளிம்பில் சமையலுக்கு காத்திருக்கும் எரிவாயு அடுப்புகள் உலகம் முழுவதும்.  பூமி உருண்டையைப் பொரி உருண்டை யாக்கி உடைத்துத் திண்ணும் பசியில் வல்லாதிக்க நடவடிக்கை" .              "அமெரிக்கா (USA) இல்லை யெனில், நேட்டோ (NATO) காகிதப் புலிதான். அணு ஆயுதம் க...