சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலுள்ள 21 வளாகங்களில் அமலாக்கத்துறையினர் சென்னை மண்டல அலுவலகம், 29.06.2026 அன்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர் ஆட்சேர்ப்புத் தேர்வில் OMR விடைத்தாள்களில் குளறுபடியான வழக்கு தொடர்பாக நடத்திய சோதனையில், பல்வேறு குற்றச் சாட்டு ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், சொத்து தொடர்பான ஆவணங்கள், ரூபாய் 13.18 லட்சம் ரொக்கம் ஆகியவை மீட்டு பறிமுதல் செய்யப்பட்டன. கூடுதலாக, 56 வங்கி கணக்குகள் மற்றும்ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக, ஜூன் மாதம் தமிழ்நாடு சென்னை, கோயம்பத்தூர் திருச்சிராப்பள்ளி, மதுரை உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட நகரங்களில் சில இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகளின் திடீர் சோதனையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது கடந்த 2017-ஆம் ஆண்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட TRB தேர்வில் முறைகேடு நடந்தது.அதில் OMR தாள்கள் மாற்றம், தேர்வு முடிந்த பிறகு, ஸ்கே...
சென்னை தலைமைச் செயலக நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை மாளிகையில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் காவல்துறை வனத்துறை உயர் அதிகாரிகள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் 29.6.2026 பிற்பகல் நடைபெற்றதில் முதலமைச்சர் பேசுகையில், “வெளிப்படையான, நேர்மையான, லஞ்சம்-ஊழலற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உறுதியான முடிவின் அடிப்படையில் தான் மக்கள் நமது அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். எனவே, ரேஷன், கல்வி, குடிநீர், சுகாதாரம், மின்சாரம், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, சட்டத்தின் அடிப்படையில் காவல்துறை சுதந்திரமாக முடிவெடுக்கலாம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களாக இருந்தாலும், பாரபட்சமின்றி சட்டப்படி உடனடியாகவும் துரிதமாகவும் நடவடிக்கை எடுத்து, உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும். அதே நேரத்தில், நிரபராதிகள் யாரும் பாதிக்கப்படக் கூடாது. மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தை நடத்த...