பிரதமர் ஜனவரி 17, 18 தேதிகளில் அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார் ஜனவரி 17-ம் தேதி போடோ சமூகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வான பகுரும்பா த்வோ 2026-ல் பிரதமர் பங்கேற்கிறார் ₹6,950 கோடி மதிப்பிலான காசிரங்கா உயர் வழித்தடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஜனவரி 17 18 ஆகிய தேதிகளில் அசாமுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 17-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், குவஹாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் நடைபெறும் பாரம்பரிய போடோ கலாச்சார நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். ஜனவரி 18-ம் தேதி காலை 11 மணியளவில், பிரதமர் ₹6,950 கோடிக்கு மேல் மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நாகோன் மாவட்டத்தில் உள்ள கலியாபூரில் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பார். குவஹாத்தியில் பிரதமர் குவஹாத்தியில் உள்ள சாருசஜாய் மைதானத்தில் போடோ சமூகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் ...
காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் திமுக இரண்டாம் சாய்ஸ் தவெக ஆகவே தேமுதிக இலவம்பஞ்சு மரத்து கிளி நிலையில் காத்திருக்கக் காரணம் அதுவே. தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியது: "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 41 பேர் நேற்று கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது கருத்துக்களைத் தலைமைக்குத் தெரிவிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி 30 நிமிஷம் தமிழ்நாடு தலைவர்களுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்குத் தேர்தல் முடிவுகள் எடுக்க ஏதுவாகக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைய விவாதங்களே எதிர்கால முடிவுகளுக்கான வழிகாட்டுதலாக அமையும்." என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ந...