தமிழ்நாட்டில்150 வட்டாரப் போக்குவரத்து அலுவலக யூனிட் அலுவலகங்கள் இயங்குகின்றன. இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள் தினமும், 8,000 வரை புதிதாக பதிவு செய்யப்படுகின்றன இவற்றில், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமே, 3,000 முதல் 4,000 வரை பதிவு செய்யப்படடுகின்றன. புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அந்த வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இதுவரை இருக்கிறது. அதனால், அந்த வாகனத்தின் உரிமையாளரோ அல்லது விற்பனைப் பிரதிநிதியோ, ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயமுள்ளது. தற்போது, மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின்படி, 'சொந்தப் பயன்பாட்டு வாகனங்கள் பதிவின்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படாமலேயே இருந்தது. இது தொடர்பாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், 'மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி, சொந்த பயன்பாட்டுக்கான புதிய வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வருவதில் விலக்கு...
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பிள்ளையார்பட்டி சாலையில் விவேனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே, காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற TN 39 N 0198 அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற TN 63 N 1776 அரசுப் பேருந்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளானதில், பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், தற்போது வரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 34 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனை, மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், நாச்சியாபுரம் திருப்பத்தூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ...