முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

குடியரசுத் தலைவர் நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 20-ம் தேதி, சத்தீஸ்கர் அரசு அம்பிகாபூரில் ஏற்பாடு செய்துள்ள பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி, செக்கந்தராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் நடைபெறும் பாரதிய கலா மஹோத்சவ் 2025 விழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவின் இரண்டாவது பதிப்பில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா, தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளமான கலாச்சாரம், உணவு மரபுகள் மற்றும் கலை பாரம்பரியங்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட உள்ளன. நவம்பர் 22 ஆம் தேதி, புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நடைபெறும் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குட...
சமீபத்திய இடுகைகள்

பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறாறார்

 குடியரசுத் தலைவர் நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 20-ம் தேதி, சத்தீஸ்கர் அரசு அம்பிகாபூரில் ஏற்பாடு செய்துள்ள பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி, செக்கந்தராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் நடைபெறும் பாரதிய கலா மஹோத்சவ் 2025 விழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவின் இரண்டாவது பதிப்பில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா, தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளமான கலாச்சாரம், உணவு மரபுகள் மற்றும் கலை பாரம்பரியங்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட உள்ளன. நவம்பர் 22 ஆம் தேதி, புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நடைபெறும் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில...

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரை

கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் தொடங்கி வைத்து உரையாற்றினார் 9 கோடி விவசாயிகளுக்கு பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை பிரதமர் விடுவித்தார் இயற்கை விவசாயத்தில் உலகளாவிய மையமாக மாறும் பாதையில் இந்தியா பயணிக்கிறது: பிரதமர் ‘ஒரு ஏக்கர், ஒரு பருவம்’-ஒரு பருவ காலத்திற்கு ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் இயற்கை வேளாண்மை செய்வோம்: பிரதமர் இயற்கை விவசாயத்தை முழுவதும் அறிவியலின் அடிப்படையிலான இயக்கமாக மாற்றுவது நமது இலக்காக இருக்க வேண்டும்: பிரதமர் கோயம்புத்தூரில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு 2025-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.11.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கோயம்புத்தூரை கலாச்சாரம், கனிவு மற்றும் படைப்பாற்றலின் நகரம் என்று குறிப்பிட்டு, தென்னிந்தியாவின் தொழில்முனைவோரின் ஆற்றல் சக்தியாக விளங்குகிறது என்று கூறினார். இந்த நகரத்தின் ஜவுளித்துறை, தேசிய பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். கோயம்புத்தூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.பி. ராதாகி...

இந்தியாவின் முதல் உள்நாட்டு "கிரிஸ்பர்" (CRISPR) மரபணு சிகிச்சையை மத்திய இணையமைச்சர் தொடங்கி வைத்தார்.

 இந்தியாவின் முதல் உள்நாட்டு மரபணு சிகிச்சை அறிமுகம்: அறிவாள் செல் ரத்தசோகை நோய்க்கு எதிரான போரில் வரலாற்று மைல்கல்! இந்தியாவின் மருத்துவத் துறை வரலாற்றில் இன்று ஒரு மிக முக்கியமான மைல்கல் எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பழங்குடியின மக்களைப் பெருமளவில் பாதித்து வரும் சிஅறிவாள் செல்' (Sickle Cell) எனப்படும் ரத்த சோகை நோயைக் குணப்படுத்தும் வகையிலான, இந்தியாவின் முதல் உள்நாட்டு "கிரிஸ்பர்" (CRISPR) மரபணு சிகிச்சையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார். சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியின மக்களின் இக்கட்டான சூழலில் ஒளிவிளக்காகத் திகழ்ந்தவருமான பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தச் சிகிச்சைக்கு "பிர்சா 101" (BIRSA 101) என்று பெயரிடப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானதாகும். இந்தச் சிகிச்சையை அறிமுகப்படுத்திப் பேசிய அமைச்சர், "இந்தியா, அறிவாள் செல் இரத்த சோகை நோய் இல்லாத தேசமாக மாறுவதற்கான தனது தீர்க்கமான பயணத்...

ரோட்டோமேக் குளோபல் (பி) லிட் வழக்கில் ரூபாய் 177 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது

M/s.Rotomac Global Pvt லிட் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாக்கப்பட்ட கடனாளிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ உரிமைகோருபவர்களின் நலனுக்காக கலைப்பு நடவடிக்கையைத் தொடர, அமலாக்க இயக்குனரகம், டெல்லி மண்டல அலுவலகம், ரூ.380 கோடி (தோராயமாக) மதிப்புள்ள சொத்துக்களை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளது. லிமிடெட். இந்த மறுசீரமைப்பு, குற்றத்தின் வருமானத்தை உரிமை கோருபவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திருப்பித் தர ED இன் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.ரோட்டோமேக் குளோபல் பிரைவேட் லிமிடெட் வழக்கு என்பது, அந்நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, பல வங்கிகளிடமிருந்து பெற்ற சுமார் ₹3,695 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக மத்திய புலனாய்வுத் துறை (CBI) தொடர்ந்த வழக்கு ஆகும். இந்த வழக்கில், சிபிஐ சோதனைகள் நடத்தியது, விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன், மகளை விசாரித்தது, மற்றும் அமலாக்கத்துறை (ED) ரூபாய் 177 கோடி சொத்துக்களைப் பறிமுதல் செய்துள்ளது.  முக்கிய அம்சங்கள்: குற்றச்சாட்டுகள்: ரோட்டோமேக் குளோபல் நிறுவனம் பல வங்கிகளிடம் இருந்து பெற்ற ₹3,695 கோடி கடன...

ரூபாய் 2 லட்சம் லஞ்சம் வாங்கிய தாம்பரம் சார் - பதிவாளர் கைது.

வீட்டுமனையிடம் பதிவு செய்ய, ரூபாய் 2 லட்சம்  லஞ்சம் வாங்கிய தாம்பரம்  சார் - பதிவாளர் கைது. தாம்பரம் சார் பதிவு வட்டம்  பிரவின்குமார். நெடுங்குன்றத்தில் உள்ள, 2,400 சதுர அடி நிலத்தை பதிவு செய்ய, தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருநத நிலையில். விண்ணப்பத்தைப் பரிசீலித்து பதிவு செய்ய, சார் - பதிவாளர் ரேவதி, தனக்கு 10 லட்சம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். பத்திரப்பதிவின் போது, 2 லட்சம் ரூபாய் தருவதாகவும், மீதியுள்ள லஞ்சப்பணம் ரூபாய் 8 லட்சத்தை பத்திரம் திரும்ப வாங்கும் போது, தருவதாகவும் கூறியுள்ளார். பின் இலஞ்சம் கொடுக்க விரும்பாத பிரவின்குமார், சென்னை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்ததையடுத்து ஊழல் சார்பதிவாளரை பணம் பெற்ற கையுடன் பொறி வைத்துப் பிடிப்பதற்காக புகார் தாரர் கொண்டு வந்த பணத்தை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆலோசனைப் படி பினாப்தலீன் ரசாயனப் பொடி தடவிய மனுதாரர் கொண்டு வந்த ரூபாய் நோட்டுகளை அவரிடமே கொடுத்து அதனை லஞ்சமாக அரசு சாட்சி முன்னிவையில் சார்பதிவ...

பிள்ளையார்பட்டி கோவில் அறங்காவலர் நியமிக்கத் தடை

பிள்ளையார்பட்டி கோவில் பி.க.நக.டிரஸ்ட் அறங்காவலர் நியமனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்காலத் தடை திருவள்ளூர் மாவட்டத்தில்  தற்காலம் வசிக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன், சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த உரிமையியல் ரிட் மனுவில் கூறியிருந்ததாவது:- சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்றது. 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவில் கடந்த 600 ஆண்டுகளாக செட்டிநாட்டுப் பகுதியில் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை சமஸ்தானம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் நாட்டுக்கோட்டை நகரத்தார் ஜாதியைச் சேர்ந்த 20 குடும்பத்தினரால் ஆண்டுக்கு இருவர் சுழற்சி பாரம்பரியப் பரம்பரை முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 1978-ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அங்கீகரித்த ஸ்கீம் திட்டத்தின் படி, மேற்கண்ட 20 குடும்பத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 2 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலின் வருடாந்திர சுழற்சி அறங்காவலர்களாக விநாயகர் சதுர்த்தி முடிவில் மாறுதலாக நியமிக்கப்படுதல் வேண்டும். எங்கள் குடும்பத்தில் ஏற்க...