முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் உரை

குஜராத்தின் தெடியாபாடாவில் தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார் ரூ.9,700 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  குஜராத்தின் தெடியாபாடாவில் இன்று நடைபெற்ற தர்த்தி ஆபா பகவான் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வில், ரூ 9,700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை அவர் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு  அடிக்கல் நாட்டினார். நர்மதாவின் புனித பூமி இன்று மற்றொரு வரலாற்று நிகழ்வைக் காண்கிறது என்று கூறிய திரு மோடி, அக்டோபர் 31 -ம் தேதி, சர்தார் படேலின் 150-வது பிறந்தநாளில் இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையைக் கொண்டாடும் வகையில் அதே இடத்தில் கொண்டாடப்பட்ட பாரத் விழா தொடங்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். இன்று பகவான் பிர்சா முண்ட...
சமீபத்திய இடுகைகள்

சாவ் பாலோவில் நடைபெற்ற சர்வதேச ஆயுர்வேத மாநாடு

எஸ்விசிசி, கோனயூர் அமைப்புகள் இணைந்து நடத்திய சர்வதேச ஆயுர்வேத மாநாடு சாவ் பாலோவில் நடைபெற்றது பாரம்பரிய மருத்துவத்தில் இந்தியா - பிரேசில் இடையேயான ஒத்துழைப்பை எடுத்துக்காட்டியது மூன்றாவது சர்வதேச ஆயுர்வேத மாநாடு பிரேசிலின் சாவ் பாலோ நகரில் நடைபெற்றது. அங்குள்ள சுவாமி விவேகானந்தா கலாச்சார மையமும் (எஸ்விசிசி), பிரேசிலில் உள்ள ஆயுர்வேத அமைப்பான கோனயூர் அமைப்பும் இணைந்து 2025 நவம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் இந்த மாநாட்டை நடத்தின. இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த இரண்டு நாள் நிகழ்வு, பிரேசிலில் ஆயுர்வேத மருத்துவம் பின்பற்றப்படுவதன் 40 ஆண்டுகள் நிறைவை நினைவுகூர்வதாக அமைந்தது. இதில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்தும் இந்தியாவிலிருந்தும் ஆயுர்வேத நிபுணர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள், மாணவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதில் "ஆயுர்வேதத்தில் பன்முகத்தன்மையும் உள்ளடக்கமும்: அனைத்து உயிரினங்களுக்குமான மருத்துவ சேவை" என்ற கருப்பொருளில் விவாதங்கள் நடைபெற்றன. இந்த மாநாட்டை பிரேசிலுக்கான இந்திய தூதர் திரு தினேஷ் பாட்டியா தொடங்கி வைத்துப் பேசினார். பாரம்பரிய மருத்துவ மு...

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பயணம்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் பயணம் 1952 முதல், இந்திய சர்வதேச திரைப்பட விழா (ஐஎப்எப்ஐ),  சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு  அங்கீகாரம் பெற்ற தெற்காசியாவின் ஒரே விழாவாக இருந்து வருகிறது. இது உலகளாவிய சினிமா  அந்தஸ்தைக் குறிக்கிறது. உலகின் சிறந்த திரைப்படங்களை இந்திய பார்வையாளர்களுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சியாகத் தொடங்கிய இது, பல தசாப்தங்களாக, கண்டங்கள் முழுவதிலுமிருந்து திரைப்படத் தயாரிப்பாளர்கள், சினிமா ஆர்வலர்கள் மற்றும் படைப்பாற்றல் நிபுணர்களுக்கான துடிப்பான சந்திப்புக் களமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு, நவம்பர் 20 முதல் 28 வரை விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இது கோவாவில் மற்றொரு துடிப்பான பதிப்பை உயிர்ப்பிக்கிறது. ஐஎப்எப்ஐ 2025- புதுமை, உள்ளடக்கம் மற்றும் ஒரு உலகளாவிய சினிமா காட்சி: இந்த ஆண்டு, நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் 56-வது சர்வதேச திரைப்பட விழா, ஐஎப்எப்ஐ-யின் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்தைப் பிரதிபலிக்கும் ஒரு விரிவான விழாவாக அமையும்.  இந்தப் பதிப்பு,  ஜப்பானுடனான விழாவின் சர்வதேச கூட்டாண்மைகளை ஆழப்படுத்...

தியாகராயநகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீவிபத்து காரணம் குறித்து விசாரணை

சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையூடாக அமைந்துள்ள இராமச்சந்திரா தெருவிலுஉள்ள மங்கள வில்லா எனும் அடுக்குமாடிக் குடியிருப்பின் 2-வது தளத்தில் வசிக்கும் கிரிதர் வீட்டின் பூஜை அறையில் நேற்று மாலை திடீரென தீப்பிடித்தவுடன் அவரது குடும்பத்தினர் அலறியடித்து வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர். தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. அனல்காற்றுடன் கரும்புகை சூழ்ந்ததனால் 3-வது தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், பதற்றத்துடன் மொட்டை மாடிக்குச் சென்று தஞ்சமடைந்தனர். தகவலறிந்ததும் தியாகராயநகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட தீயணைப்பு நிலையங்களிலிருந்து 7 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டனர். மொட்டை மாடியிலிருந்த 6 பேர் 'ஸ்கை லிப்ட்' வாகனம் மூலம் மீட்கப்பட்டனர். இந்த தீ விபத்தின் போது 3-வது தளத்தின் பின்புறம் உள்ள வீட்டில் வசிக்கும் டாக்டர் வரதராஜன் (வயது 72) மற்றும் அவரது மனைவி மலர் ஆகியோர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். அவர்களையும் தீயணைப்பு வீரர்கள் இரும்ப...

இந்திய ‘மரங்களின் தாய்' பத்ம ஸ்ரீ சாலுமரத திம்மக்கா 114வது வயதில் காலமானார்.

இந்திய ‘மரங்களின் தாய்' என அன்புடன் அழைக்கப்பட்ட பத்ம ஸ்ரீ சாலுமரத திம்மக்கா  114வது வயதில் காலமானார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து சாதனைகள் செய்தவர், தனது வாழ்வின் பெரும்பகுதியை, மரங்களை வளர்க்கும் மாபெரும் சேவைக்காக அர்ப்பணித்தார். தனது கணவருடன் இணைந்து, பல லட்சக்க்கணக்கான மரங்களை {ஆலமரம் உள்ளிட்ட) நட்டு, அவை செழித்து வளரும் வரை குழந்தைகளைப் போல் பராமரித்தார். அவரது சூழலியல் பணி அவரை உலகம் முழுவதும் அறியச் செய்தது. வளர்ந்து வரும் காலநிலை மாற்றத்தின் தீங்குகளுக்கிடையில், அவரளித்த பங்களிப்பு ஒப்பிட முடியாதது. ஒரு தனி மனிதரால், சரியான கருவிகள் இல்லாமல், எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு காலஞ்சென்ற திம்மக்கா ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இயற்கைப் பணி, அவர் நட்டு வளர்த்த மரங்களைப் போலவும், தலைமுறைகள் தாண்டியும் மௌரியப் பேரரசர் சாம்ராட் அசோகர் புகழ் போல நிலைத்து நிற்கும். இயற்கையின் மீதான அவரது காதல் மற்றும் மனித குலத்திற்கான அவரது தன்னலமற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். மரங்களின் தாய், சாலுமரத திம்மக்கா அவர்களுக்கு நமது பப்ளிக் ...

குற்றப்பத்திரிகை ஆன்லைன் முறையில் (இ-பைலிங்) இன்று முதல் நீதிமன்றங்களில் தாக்கல் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு விபரம்

குற்றப்பத்திரிகை ஆன்லைன் முறையில் (இ-பைலிங்)  இன்று முதல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிழையில்லாத இறுதி குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்வது அதிகரிப்பு: குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம்  மதுரை கிளை பரிந்துரை  குற்ற வழக்குகளில்  குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் சம் பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உயர்நீதிமன்றம் மதுரை  பரிந்துரைத்துள்ளது. குற்ற இறுதி அறிக்கை தாக்கல் குறித்து தூத்துக்குடி மாவட்டம் மச்சராஜா, எனபவர் தன் மீது சூரங்குடி காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்த குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி, செஅனை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு.Crl.O.P. (MD) 2025 தாக்கல் செய்த ' மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர் டி.செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிக்கப்பட்டு விளாத்திகுளம்...