முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மதுரை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கர்

மதுரை நாயக்க மன்னர்களின் தலைநகரான திருச்சிராப்பள்ளியை மாற்றி முதன் முதலில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பெருமைக்குரிய மன்னர் திருமலை நாயக்கர். மதுரை நகரை கலையின் வடிவமாக மாற்றினார். மதுரையில் பிரம்மாண்டமான மற்றும் பழைய பாண்டியர் அரண்மனையின் மூன்றில் ஒரு பகுதியில் ஒரு புதிய அரண்மனையை 200 தூண்களுடன் கட்டுவித்தார். அதற்காக மண் எடுக்க தோண்டிய பெரிய பள்ளத்தை கூட கலைநயத்துடன் கூடிய தெப்பக்குளமாக மாற்றினார். பின்னாட்களில் அமைச்சர் பெருமக்களும் அரச சபையினரும்  திருமலை நாயக்கரின் பிறந்த நாளான தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தன்று ( அக் காலத்தில் கிரிகோரியன் காலண்டர் கிடையாது. எனவே சரியான தேதி தெரியாது ஆகவே பிறந்த மாதத்தில் வரும் பிறந்த நட்சத்திரத்தன்று பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம் ) அதே தெப்ப குளத்தில் திருமலை நாயக்கரின் ஆயுள் விருத்திக்கும் அவர் புகழினை போற்றவும் தெப்பம் விடும் திருவிழாவை துவக்கினர். பின்னர் அந்த கலாச்சாரம் திருமலை நாயக்கர் ஆட்சி செய்யும் அனைத்து பகுதிகளிலும் பரவி பல இடங்களில் நாயக்க மன்னரின் புகழினை போற்றும் விதமாக தெப்பம் விடும் நிகழ்வு தைப்பூசத்தன்று  துவ...
சமீபத்திய இடுகைகள்

வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' ஐ முன் நிறுத்தும் மத்திய நிதிநிலை அறிக்கை

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை  இந்தியாவை முன்னிறுத்துகிற, 'வளர்ச்சி அடைந்த இந்தியா 2047' என்ற இலக்கை அடைய, இந்தியாவின் மக்கள்தொகையில் 'இளைஞர் சக்தி'யை  மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள், போட்டித்தன்மைக்கு ஈடுகொடுத்து நம் நாட்டின் உற்பத்தித்திறனை விரைவுபடுத்தி, நிலைத்திருக்க செய்யும் நிதிநிலை அறிக்கை தான்  இன்றைய பட்ஜெட். நாட்டின் முன்னேற்றத்தில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் திறன்பயிற்சி, வேலைவாய்ப்பு, சேவைத்துறை வளர்ச்சி என அனைத்து தேவைகளையும் உணர்ந்து பல்வேறு கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த மூலதன செலவினங்களை அதிகரித்துள்ளது மத்திய அரசின் இன்றைய பட்ஜெட். இந்தியாவின் வளர்ச்சி பாதையில், பொருளாதார முன்னேற்றத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்ற பாஜக அரசின் கொள்கையின் படி, ஏழைகள், பின்தங்கியோர், பாதிக்கப்பட்டோர் என கடைநிலை மக்களை கடைத்தேற்றும்  நிதிநிலை அறிக்கை. எந்த வித புதிய வரிகளையும் மக்கள் மீது திணிக்காமல், மூலதன செலவினங்களை ரூபாய் 12.2 லட்சம் கோடியாக உயர்த்தியதோடு, மொத்த செலவினங்கள் ரூபாய்...