நிலத் தகராறுகளை விசாரிக்கும் வருவாய் துறையினருக்கு கட்டாய சட்டக் கல்வி கோரிய மனுவின் மீது பதிலளிக்க உத்தரவு நிலத் தகராறுகளைக் கையாளும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு முறையான சட்டக் கல்வி மற்றும் பயிற்சிகள் வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. நம் நாட்டில் நிலுவையில் உள்ள மொத்த சிவில் வழக்குகளில் 66 சதவீதம் அலுவலர்கள் நடத்திய ஊழல் காரணமான நிலத் தகராறுகள் தொடர்பானவை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைச் சட்டக் கல்வி பயிலாத வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரிப்பது முறையாக இருக்காது. 'எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முறையான சட்டப் பயிற்சி வழங்க வேண்டும். இதை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்' எனக்கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஸி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா முன்வைத்த வாதத...
ஒப்பந்தப் பணிக்கான மொத்த தொகையில், 10 சதவீதத்தை கமிஷனாக தரக் கேட்ட 'தாட்கோ' அலுவர்கள் மீது புகார் அது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒப்பந்ததாரர், ஊழல் தடுப்புக் கண்காணிப்பாளர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்துள்ளார்'தாட்கோ' என்பது , தமிழ்நாடு அட்டவணைப் பட்டியல் ஜாதி மற்றும் மலைவாழ் மக்கள் இனம் சார்ந்த வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில்,படடியல் ஜாதி மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில், வீடுகள் கட்டுவது, சாலைவசதி, மின்சாரம், தண்ணீர் தொட்டி, அறிவுசார் மையங்கள், சமுதாயக் கூடங்களை அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்கின்றன. இந்தப்பணிகளுக்கான ஒப்பந்தத்தை, எஸ்.சி., - எஸ்.டி. பட்டியல் ஜாதியை சேர்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என, அரசாணை உள்ளதாகவும். ஆனால், தாட்கோ அலுவலர்கள், அதைக் கண்டு கொள்ளாமல், அவர்களுக்கு வேண்டிய தனிப்பட்ட நபர்களுக்கு, 'டெண்டரில்' முன்னுரிமை அளிப்பதாகக் குற்றச்சாட்டு உள்ள நிலையில், ஒப்பந்தப் பணிகளை 'எடுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் அந்த அலுவலர்கள் லஞ்சத்தை கடடாயக் கமிஷனாகக் கேட்பதாகப், புகார் எழுந்துள்ளது. ஒப்பந்தத் தொகைய...