சென்னையில் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்றுப் பேசினார் அதில் :- நீதித்துறையில் ஏ.ஐ.யின் தாக்கம் தொடங்கியுள்ளது. சில நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்புகளில் ஏ.ஐ. வழங்கிய மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளன. அந்த மேற்கோள்கள் எந்த நீதிமன்றமும் பிறப்பிக்காத உத்தரவுகளைத் தெரிவிக்கின்றன. இது அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் பிரச்சினையில்லை. ஏனென்றால் நான் ஏ.ஐ. உதவியை நாடியதே இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் எனக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்காக கணினியில் ஏ.ஐ. உள்பட நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையுமுள்ளது. தற்போதைய காலத்தில் மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது இயலாத காரியமாகிறது. ஒரு விஷயத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தினா ல்தான் வெற்றி பெற இயலும். பல ஆண்டுகளாக வக்கீலாகப் பணியாற்றியுள்ளேன். சில ஆண்டுகளாக நீதிபதியாகவும் பணியாற்றுகிறேன். ஏராளமான வழக்குகளை கையாண்டுள்ளேன். ஆனால் கணவன்-மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்குகள் அதிகரி...
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நில அளவைக்கு லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறையினர் நடவடிக்கை.. திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் நில அளவை பிரிவில் நில அளவை செய்ய 14000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர். புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் லஞ்ச ஒழிப்பு துறையினக்கு ஏற்கனவே பலமுறை ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளனர். திருமயம் வட்டம் மலுக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் ஊனையூர் அருகே உள்ள வளையன்வயல் பகுதியில் அவரது தாயார் பெயரில் இரண்டு மனையிடம் வாங்கிய நிலையில் அந்த இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார் கிராம நிர்வாக அலுவலர் நில அளவையர் செல்வராஜ் என்பவரை சந்தித்து கவனிக்குமாறு அவரிடம் தெரிவித்துள்ளார். நில அளவையரை சந்தித்த பாலமுருகன் தனது இடத்தை உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய அளவை செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நி...