தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் பணமோசடி விவகாரம் தொடர்பாக, நீர்வளத்துறை (பொதுப்பணித்துறை) உயர் அதிகாரிகள் மற்றும் மணல் குவாரி ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை ஏற்கனவே நடத்தியது. தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக ஆற்று மணல் விற்பனை செய்யப்படுவதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், கணக்கில் காட்டப்படாமல் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் செய்யப்படுவதாகவும் அமலாக்கத்துறைக்கு புகார்கள் வந்ததன் அடிப்படையில் அமலாக்கத்துறை (ED) வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.சோதனைக்கு உள்ளான நீர்வளத்துறையின் முதன்மைப் பொறியாளர் முத்தையா மற்றும் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. முக்கிய மணல் ஒப்பந்ததாரர்களான புதுக்கோட்டை எஸ்.ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனைகள் நடைபெற்றது. அதோடு சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை முதன்மை அலுவலகத்திலும் சோதனை மேற்கொண்டனர். இந்த அத...
1971ஆம் ஆண்டு முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருக்கும் தோழர் சி.மகேந்திரன், பல பொறுப்புகளை வகித்தார். அரசியல்வாதியாக மட்டுமேயல்லாமல், கட்டுரையாளர், பேச்சாளர் போராளி என பன்முகத்தன்மை கொண்டவர். தற்போதுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான மு.வீரபாண்டியனுக்கு முன்னிருந்த முத்தரசனை எதிர்த்துப் போட்டியிட்ட தோழர் சி.மகேந்திரன், தேர்ந்தெடுக்கபடாத நிலையில், கட்சியின் தீவிர செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார். எந்த அரசுப்பணிக்கும் செல்லாமல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றியவர்! 3 ஆண்டுகளாக அவர் கட்சியில் செயல்பட வில்லை தற்போது த.வெ.கவில் இணைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் சி.மகேந்திரன் பேட்டி சி.மகேந்திரனை கம்யூனிஸ்ட் என அழைப்பதை விட தமிழ்த் தேசியவாதி எனலாம் கட்சிக்குள் பலருக்கு உதவியாக இருந்தவரால் தா. பாண்டியன் மறைவுக்கு பின் அக் கட்சியில் அவரால் மேலே வர முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் கூறலாம். பல தமிழ்த்தேசியவாதிகளைப் போல் இயற்கை விவசாயம், நம்மாழ்வார் வழியில் சிவப்புத் துண்டுடன் பசுமை பாதையில் பயணித்தார். இயற்கை வ...