பிரஷாந்த் கிஷோர் நடத்தும் IPAC நிறுவனத்தில் கொல்கத்தாவில் அமலாக்கத்துறை திடீர் சோதனை. மேற்குவங்காள மாநிலத்தில் IPAC நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் பிரதீக் ஜெயின் ஆகியோருக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை. IPAC நிறுவனம் தான் மேற்கு வங்காளத்தில் ஆளும் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தொடர்பாக IPAC நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சோதனையின் போது அமலாக்கத்துறை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்பான பல்வேறு ரகசிய மற்றும் முக்கியத் ஆவணங்களையும், டேட்டாக்களையும், தேர்தல் வியூகங்களையும் அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றிருப்பதாக முதல்வர் மமதா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். சோதனையைத் தொடர்ந்து அவசரம் அவசரமாக பதறி அடித்துக் கொண்டு முதல்வர் மமதா பானர்ஜியை IPAC அலுவலகத்திற்கு நேரில் சென்று அமலாக்க துறையின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். IPAC நிறுவனம் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோ...
புதுதில்லியில் நடைபெற்ற அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மறுவடிவம் தரும் அனைவருக்கும் கல்வி 3.0 கூட்டத்திற்குத் திரு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார் புது தில்லியில் இன்று நடைபெற்ற அனைவருக்கும் கல்வி 3.0 குறித்த ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். அனைவருக்கும் கல்வி 3.0-க்கான உத்திகள், ஆலோசனை மற்றும் செயல்திட்டத்தை உருவாக்குவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் துறைசார் பங்குதாரர்களுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு விவாதங்கள் மூலம் இது சாத்தியமாகும். திட்டத்தின் அடுத்த கட்டத்தில் நிர்வாகம், உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் உரிமைகளை வலுப்படுத்த தேவைப்படும் சிறந்த நடைமுறைகள் மற்றும் முன்னுரிமை தலையீடுகள் குறித்து இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின. பிரதமர் திரு நரேந்திர மோடி 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையைத் தந்துள்ளார் என்றும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறும்போதும், நாடு பன்னிரெண்டாம் வகுப்பு வரை 100 சதவீத...