முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அதிமுக கரைகிறது, தவெக வளர்கிறது காரணம் தலைவரின் தனித்த செல்வாக்கு ஒன்றே

தமிழ்நாட்டின் அரசியல்  ஏநோ ஒரு திருப்புமுனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளிலிருந்து இரண்டாம் நிலை தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 ல் 107 இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையை உருவாக்கியது, அதன் பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் தவெகவில் இணைந்த சம்பவங்கள் இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன. இது திராவிடக் கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை ஆழமாக அலசினால், தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பு மாறிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. திராவிட இயக்கம் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சமூக நீதி, சுயமரியாதை, எதிர்ப்பு அரசியலின் வெளிப்பாடாக வளர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 1967-ல் ஆட்சியைப் பிடித்தபோது அது ஒரு புரட்சியாகக் கருதப்பட்டது. பின்னர் அதிலிருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழ...
சமீபத்திய இடுகைகள்

போதைப் பொருள் கடத்தல் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரூபாய் .258 கோடி பணமோசடி வழக்கில், ஜான் பிரிட்டோ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனைகளை நடத்தியது.வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பதிவு செய்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இந்தக்கும்பல் கடல் வழியாகவும், ரயில்கள் மூலமாகவும் இலங்கைக்கு ரூபாய் .150 கோடி மதிப்புடைய மெத்தபெட்டமைன் மற்றும் ரூபாய் .108 கோடி மதிப்புடைய ஹாஷிஷ் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியது கண்டறியப்பட்ட சோதனைகளின் போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான விவரங்கள் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது இந்த நிலையில்ஜே.எம்.ஜே. (IJK) நிறுவனரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களின் அண்ணன் தான் இந்த ஜான் பிரிட்டோ. அவர் மீதான முக்கிய விவரங்கள்:அமலாக்கத்துறை (ED) வழக்கு: ஜான் பிரிட்டோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவும், அந்நி...

தமிழ்நாடு 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் DVAC சோதனை

60 சார்பதிவாளர் அலுவலகங்களில் DVAC சோதனை – 320 பணியாளர்கள்  ஒரே நேரத்தில் நுழைந்து கணக்கில் வராத பணம், முறைகேடுகள் குறித்து சோதனை! நேற்று ஜூன் மாதம் 4, 2026: தமிழ்நாடு முழுவதும் உள்ள 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் பிற்பகல் 2.30 மணியளவில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிரடிச் சோதனை நடத்தியது. சுமார் 320 காவல்துறை பணியாளர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நுழைந்து, கணக்கில் வராத பணம் மற்றும் பிற முறைகேடுகளைச் சோதனை செய்தனர் ஜூன் 4 ஆம் தேதி ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான மிகச் சிறந்த நாள்  என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையிலான பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் பெருங்கூட்டத்தைப் பயன்படுத்தி, DVAC அதிகாரிகள் திட்டமிட்டு இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 சார்பதிவாளர் அலுவலகங்கள். பிற்பகல் 2.30 மணியளவில், போலீஸார் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்து, வெளியேறும் வழிகளை முற்றுகையிட்டனர்  பணியாளர்கள்: சுமார் 320 காவல் பணியாளர...

தநா மின் வாரிய ஹாட்டிஸ்க்கள் களவு கோவிநாத் கைது செய்யப்பட்டு, பெங்களூருவில் விசாரணை

 தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமையகத்திலிருந்து திருடப்பட்ட முக்கியமான தரவுகளுடன் கூடிய 34 ஹார்ட் டிஸ்க்குகள் மீட்பு மீதி தேடுதல் இது டெண்டர்கள், கொள்முதல் மற்றும் விசாரணைகள் பற்றிய இரகசிய விவரங்களைக் கொண்டது.  நாசவேலை செயலில், குறைந்தபட்சம் 18 ஹார்ட் டிஸ்க்குகளில் இரகசியத் தரவுகள் உள்ளன, குறிப்பாக டெண்டர்கள், கொள்முதல் மற்றும் நடப்பு தொடர்பான பதிவுகள்  அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின்  தலைமையகத்தில் இருந்து  திருடப்பட்டுள்ளன கடின நகல்கள் இருக்கும் நிலையில், அனைத்து முக்கிய சாப்ட் காப்பிகளும் மாயமாகிவிட்டன. சர்வரில் இருந்தால் இது களவு போகாது ஆனால் ஹாட் டிஸ்க் என்பதால் ஊழல் திருட்டு நடந்துள்ளது, வார இறுதியில் மே மாதம் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் சில பணியாளர்கள் இருந்தபோது திருட்டு நடந்துள்ளது. புதிய மின்வாரிய அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் ஆர்.நிர்மல்குமார் துறைக்கு வந்து, தவறு செய்பவர்கள் யாரையும் தப்பிக்க விட மாட்டோம் என எச்சரித்ததையடுத்து, மே மாதம் 30 ஆம் தேதியன்று பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஊழியர்கள், கம்ப்யூட்டர் சிஸ்டம், ப்ராஜெக்ட் ஃபிக்குகள...

ஒரே நாடு ஒரே தேர்தலை நோக்கி புதிய இயக்கம் அண்ணாமலையின் தனி வழி

ஒரே நாடு .ஒரே தேர்தல் நோக்கி புதிய இயக்கம்  அண்ணாமலையின்  தனி வழி. இன்று மதியம் 12 மணிக்கு , சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். என  பாஜகவிலிருந்து முறையாக விலகிய கே.அண்ணாமலை https://www.instagram.com/annamalai_kuppusamy https://www.facebook.com/share/18bJfU31t4/ https://youtube.com/@annamalai.k https://x.com/annamalai_k ஆகிய லிங்க் மூலம் சமூக வலைத்தளங்களில் பேசினார் அதில் "எனக்கு முதல் வாய்ப்பு தமிழ்நாட்டை விட்டு வெளியே வந்து லக்னோவில் படித்ததற்கும், பின்னர் டெல்லியில் இருப்பதற்கும், ஹைதராபாத்தில் இரண்டு ஆண்டுகள் டிரெயினிங், அதன் பிறகு கர்நாடகாவில் 8 லிருந்து 9 ஆண்டுகள் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 10, 15 ஆண்டுகள் சுற்றினேன். அதனால் தான் நான் எப்போதும் சொல்வேன் – “நான் ஒரு பெருமை மிகுந்த இந்தியன், அதே நேரத்தில் பாரம்பரியத் தமிழன்” என்ற அடையாளத்தோடு எல்லோரிடமும் பேசுவேன். இன்றைய தமிழ்நாட்டு அரசியலில், ஒரு பெரு...