காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் முதல்வர் பதவியை விட்டு சித்தராமையா செல்ல வேண்டும் என்று விரும்புகிறது இந்த மாற்றம் சுமூகமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முதல்வர் இந்த யோசனையை பரிசீலிக்க கால அவகாசம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பாக வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் தலைமைத்துவத்திற்கான அனைத்துப் போட்டிகளுக்கும் மத்தியில், மாநிலத்தில் மாற்றம் ஏற்படுவதையும், கட்சி அமைப்பு மற்றும் அரசாங்கத்தை மறுசீரமைப்பதாக, காங்கிரஸ் மேலிடம் செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், முதல்வர் பதவியிலிருந்து விலகி, புதிய தலைவராக சிவக்குமாரை அமர்த்த வழி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. மாற்றம் சுமூகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இந்த யோசனையை பரிசீலிக்க முதலமைச்சருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மூத்த அரசியல் வாதி என்பதை மதித்து, காலக்கெடுவை நிர்ணயம் செய்யவில்லை எனவும் கூறப்படுவதால், இதில் அதிர்ச்சியடைந்த முதல்வர் சித்தராமையா, பெங்களூ...
மும்மொழிக் கொள்கையை மத்தியரசு 2029 ஆம் ஆண்டு வரை தள்ளி வைக்க முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை யோசனை
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பயிற்று மொழி குறிந்து கருத்து, அதில் "கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப...