முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இந்திய ‘மரங்களின் தாய்' பத்ம ஸ்ரீ சாலுமரத திம்மக்கா 114வது வயதில் காலமானார்.

இந்திய ‘மரங்களின் தாய்' என அன்புடன் அழைக்கப்பட்ட பத்ம ஸ்ரீ சாலுமரத திம்மக்கா  114வது வயதில் காலமானார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து சாதனைகள் செய்தவர், தனது வாழ்வின் பெரும்பகுதியை, மரங்களை வளர்க்கும் மாபெரும் சேவைக்காக அர்ப்பணித்தார். தனது கணவருடன் இணைந்து, பல லட்சக்க்கணக்கான மரங்களை {ஆலமரம் உள்ளிட்ட) நட்டு, அவை செழித்து வளரும் வரை குழந்தைகளைப் போல் பராமரித்தார். அவரது சூழலியல் பணி அவரை உலகம் முழுவதும் அறியச் செய்தது. வளர்ந்து வரும் காலநிலை மாற்றத்தின் தீங்குகளுக்கிடையில், அவரளித்த பங்களிப்பு ஒப்பிட முடியாதது. ஒரு தனி மனிதரால், சரியான கருவிகள் இல்லாமல், எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு காலஞ்சென்ற திம்மக்கா ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இயற்கைப் பணி, அவர் நட்டு வளர்த்த மரங்களைப் போலவும், தலைமுறைகள் தாண்டியும் மௌரியப் பேரரசர் சாம்ராட் அசோகர் புகழ் போல நிலைத்து நிற்கும். இயற்கையின் மீதான அவரது காதல் மற்றும் மனித குலத்திற்கான அவரது தன்னலமற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். மரங்களின் தாய், சாலுமரத திம்மக்கா அவர்களுக்கு நமது பப்ளிக் ...
சமீபத்திய இடுகைகள்

குற்றப்பத்திரிகை ஆன்லைன் முறையில் (இ-பைலிங்) இன்று முதல் நீதிமன்றங்களில் தாக்கல் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு விபரம்

குற்றப்பத்திரிகை ஆன்லைன் முறையில் (இ-பைலிங்)  இன்று முதல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிழையில்லாத இறுதி குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்வது அதிகரிப்பு: குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம்  மதுரை கிளை பரிந்துரை  குற்ற வழக்குகளில்  குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் சம் பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உயர்நீதிமன்றம் மதுரை  பரிந்துரைத்துள்ளது. குற்ற இறுதி அறிக்கை தாக்கல் குறித்து தூத்துக்குடி மாவட்டம் மச்சராஜா, எனபவர் தன் மீது சூரங்குடி காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்த குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி, செஅனை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு.Crl.O.P. (MD) 2025 தாக்கல் செய்த ' மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர் டி.செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிக்கப்பட்டு விளாத்திகுளம்...

திரைப்பட இயக்குனர் வி சேகர் காலமானார்,

திரைப்பட இயக்குனர் வி சேகர், 72, வயதில்  காலமானார். உடல்நலக் குறைவால் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக சென்னை,போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நவம்பர், 14 ஆம் தேதி மாலை காலமானார். திருவண்ணாமலை, மாவட்டம் நெய்வாநத்தம் கிராமத்தில் எஸ்.வெங்கடேசனுக்கும்- பட்டம்மாளுக்கும் 1953 ஆம்ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி பிறந்த வி.சேகரின் உறவினர் கண்ணப்பன் உதவியால் ஏவி.எம்.ஸ்டுடியோவில் கருப்பு வெள்ளை 16 எம்.எம். லேப்பில் உதவியாளராக 19 வயதில் வேலைக்குச் சேர்ந்த பின்னர் மாநகராட்சி சுகாதாரத் துறையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர் அப்படியே மாலை நேரக் கல்லூரியில் படித்து எம்.ஏ. படிப்பை முடித்தார். பின் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜின் உதவியாளர் கோவிந்தராஜ் இயக்கிய 'கண்ணைத் தொறக்கனும்சாமி' படத்தில் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர், பிறகு கே.பாக்யராஜின் உதவியாளராக இரண்டு ஆண்டுகள் கதை இலாக்காவில் பணியாற்றினார். இவர் இயக்கிய முதல் படம் 'நீங்களும் ஹீரோதான்'. தொடர்ந்து 'நான் புடிச்ச மாப்பிள்ளை' படம் அவருக்கு வெற்றியைத் தந்தது. மேலு...

பீஹாரில் முதல்வராக பத்தாவது முறையாக பதவி ஏற்கும் நிதீஷ்குமார்

1995 ஆம் ஆண்டுக்குப் பின் ஒரு முறை கூட சட்டசபை தேர்தலில் போட்டியிடாத நிதிஷ் குமார். இந்த முறையும் மேலவை உறுப்பினராக இருந்து10 ஆவது முறையாக  முதலமைச்சராகப் பதவி ஏற்கிறார். பீஹார் சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள், நவம்பர் மாதம் 14, 2025 ல் வெளியாகி, இந்திய அரசியலின் அலைமோதல்களைப் புரிந்துகொள்ள ஒரு சுவாரஸ்யமான கண்ணாடியாகத் திகழ்கின்றன. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்  தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), 243 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்டவற்றில் வெற்றி பெற்று, மிகப்பெரிய அளவிலான வெற்றியைத் தனதாக்கியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி  95 தொகுதிகளில் வாகை சூடியது, ஜேடியூ 84-ஐ, பெற்ற நிலையில் அதன் கூட்டணியின் மற்ற கட்சிகள் 20-க்கும் மேல் வென்றுள்ளன. இதற்கு மாறாக, லாலு பிரஷாத்  யாதவ் மகனான தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைமையிலான மஹாத்பந்தன் கூட்டணி, வெறும் 40-க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிந்தது. இந்த முடிவுகள், பீஹாரின் சமூக-அளவிலான சிக்கல்களைத் தாண்டி, தேசிய அளவிலான அரசியல் போக்குகளை வெளிப்படுத்துவதாக அமைகின்றன.  பீஹார் தேர்தலின் வெற்றிக்கு ...