முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தேசிய12 வது கைத்தறி தினம்

தேசத்தின் உயிர்நாடி விவசாயம்  அடுத்தபடியாக நெசவு மானம் காக்கும் மாண்பு கொண்ட  கைத்தறித் தொழிலையும், நெசவாளர் பெருமக்களின் உழைப்பையும் போற்றும் வகையில்.  1905 ஆம் ஆண்டு துவங்கிய சுதேசி இயக்கத்தின் தொடர்ச்சியாக,  2015 ஆம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 12 ஆவது தேசிய கைத்தறி தினம் இன்று   "தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும் நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு"...... இதன் .விளக்கம்: "தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும்" – நெசவு செய்யும்போது தறியின் மிதிக்கட்டையை அதாவது பெடலை கால்களால் மாறி மாறி மிதித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நெசவாளர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தத் தறியிலேயே அமர்ந்து கால்களால் மிதித்து மிதித்து, அந்த மரக்கட்டையே தேய்ந்து போயிருக்கும். காஞ்சிபுரம் சென்றால் கால் ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்பதன் அர்த்தமும் இதுதான், "நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு" – அந்த மிதிக்கட்டை சும்மா தேயவில்லை; தன் பிள்ளைகளை அல்லது சேய்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும், அவர்கள் பசி இல்லாமல், செழிப்பாக வளர வேண்டும் என்பதற்காக அந...
சமீபத்திய இடுகைகள்

யூடியூப்பர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம்

தவெகவின் செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம்  இவர் 3 ஆண்டுகள் இந்தப் பதவி வகிப்பார். சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் சமூகங்களின் பிரச்னைகளை நேரடியாக அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலம்.சிறுபான்மையினர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பே தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம். சிறுபான்மையினர் மீதான புகார்களை விசாரித்தல், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்தல், சமூக நீதி தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மேற்கொள்கிறது. பெலிக்ஸ் ஜெரால்டு தமிழ்நாட்டில்  ஊடகவியலாளர் மற்றும் யூடியூபர் Red Pix 24x7  யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.  இவர் சன் டிவி, என்டிடிவி மற்றும் சத்யம் டிவி யில் பணியாற்றியுள்ளார்.'ரெட் பிக்சு' (RedPix) செய்திச் சேனலின் நிர்வாக ஆசிரியராகச் செயல்பட்டார்.  2024 ஆம் ஆண்டில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கருடன் கைது செய்யப்ப...

ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசிடம் அறிக்கை

வாடகை ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சக் கட்டணம் உயர வாய்ப்பு! ரூபாய் 25 ல் இருந்து 50 ஆகவும் உயர்த்த  தமிழ்நாடு ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்பு. குறைந்தபட்ச கட்டணத்தை ரூபாய் 25-லிருந்து ரூபாய் 50 ஆகவும், கிலோமீட்டரு.க்கு ரூபாய் 12-லிருந்து ரூபாய் 22-ரூபாய் 25 ஆகவும் உயர்த்த பரிந்துரை. புதிய கட்டண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என போக்குவரத்து துறை அலுவலர்கள் தகவல். தமிழ்நாட்டில் இயங்கும் 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு 13 ஆண்டுகளாக கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை. நடைமுறையில், மீட்டர் கட்டணத்தை விட கூடுதல் தொகை தற்போது வசூலிக்கப்படுவதாக பயணிகள் நீண்டகாலமாக புகார் தெரிவித்துவருகின்றனர்.அதோடு மாநகராட்சியாக உயர்த்தப்பட்டுள்ள நகரங்களில் பங்கு ஆட்டோக்கள் எனும் ஷேர் ஆட்டோக்களை இயக்கவும் உரிய நடவடிக்கை தேவை,போக்குவரத்துத் துறை ஆணையர் இது குறித்து நடவடிக்கை தேவை என மக்கள் எதிர்பார்ப்புகள் உள்ளது.காரைக்குடியில் தற்போது மாநகராட்சி என்பதால் அதற்கு முன் ஷேர் ஆட்டோக்கள் இயக்க அனுமதி கோரிய வழக்கில், 5 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகрகளில் ஷேர் ஆட்டோ அனுமதி...

இராமேஸ்வரம்- காரைக்குடி வழியாக–சென்னைக்கு விரைவில் வந்தே பாரத் ரயில்

இராமேஸ்வரம்-      காரைக்குடி வழியாக–சென்னைக்கு வந்தே பாரத் ரயில்  உத்தேச கால அட்டவணை வெளியீடு இராமேஸ்வரம்–சென்னை இடையே காரைக்குடி வழியாக இயக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான உத்தேச நேர அட்டவணை வெளியாகியுள்ளது. இராமேஸ்வரத்திலிருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில், இராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், தாம்பரம் வழியாகச் சென்று இரவு 10.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என உத்தேச கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுத்த நேரங்கள்: இராமநாதபுரம் – 3.15 PM, சிவகங்கை – 4.10 PM, காரைக்குடி – 4.40 PM, புதுக்கோட்டை – 5.10 PM, திருச்சிராப்பள்ளி– 6.10 PM, விழுப்புரம் – 8.15 PM, தாம்பரம் – 9.40 PM, சென்னை எழும்பூர்–10.20 PM இந்த ரயில் திங்கட்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்குடி வழியாக வந்தே பாரத் சேவை தொடங்கினால், சிவகங்கை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சென்னை பயணம் எளிதாகும் என்பதால் பொதுமக்களிடையே நல்ல எதிர்பார...

இறக்குமதி தடை 364 மெட்ரிக் டன் பாகிஸ்தான் உலர் பேரிச்சம் பழங்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல்

இறக்குமதி செய்யப்பட்ட தடை விதிக்கப்பட்ட 364 மெட்ரிக் டன் பாகிஸ்தான் உலர் பேரிச்சம் பழங்களை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது பாகிஸ்தானில் உற்பத்தியான பொருட்கள் மூன்றாம் நாடுகளின் வழியாக ரகசியமாக வழிமாற்றப்பட்டு தவறான தகவல்களுடன் இறக்குமதி செய்வது குறித்த தகவல் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்திற்கு கிடைத்தது. இதையடுத்து கண்ட்லா துறைமுகத்தில் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட தடை விதிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 364 மெட்ரிக் டன் உலர் பேரிச்சம் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவை, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும் உண்மையில் பாகிஸ்தானில் உற்பத்தியானது என்பது தெரிய வந்தது. இந்த பேரிச்சம் பழங்களை கொண்ட கொள்கலன்கள் முதலில் பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு அனுப்பப்பட்டு பின்னர் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காக மற்றொரு கொள்கலன்களில் மாற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது.

பாரதப் பிரதமர் வீடியோ நீக்க விவகாரம் மெட்டா நிறுவனம் மன்னிப்புக் கோரியது

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில், இந்திய அரசிடம் மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளது தேர்வுத் தாள் வெளியானதற்கு எதிரான கடுமையான நடவடிக்கை குறித்து, கடந்த ஜூலை மாதம் 23 ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட வீடியோ செய்தி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து தவறுதலாக நீக்கப்பட்டது.    நாடாளுமன்ற நிலைக்குழு கெடு விதித்த நிலையில்  பேஸ்புக்கில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூகர்பெர்க் 3 நாளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடா ளுமன்ற நிலைக்குழு நேற்று கெடு விதித்திருந்தது. 3 நாளில் ஜூகர்பெர்க் மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு வழங்கப்படும் சட்ட பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட லாம் என மக்களவை செயலகத்தின் இயக்குநர் ஜோதிர்மயி, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தார்.  அரசு நடவடிக்கை: நாட்டின் பிரதமரின் வீடியோ நீக்கப்பட்டதற்கு...

புகழ்பெற்ற வில்லன் நடிகர் பிரதீப் ராவத் காலமானார்

 கஜினி’, ‘வீரம்’ போன்ற திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற வில்லன் நடிகர் பிரதீப் ராவத், ரத்தப் (வயது 74) புற்றுநோய் காரணமாகக் காலமானார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் ராவத், தொடர் சிகிச்சைக்குப் பின் மீண்டு வந்தார். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக மும்பையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி மாலை அவர் உயிரிழந்ததாக அவரது மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். அவரது இறுதிச்சடங்குகள் நேற்று புதன்கிழமை நடைபெற்றது தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் ராவத்தின் மறைவு குறித்து பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் 1952-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் தேதி பிறந்த பிரதீப் ராவத், பி.ஆர்.சோப்ராவின் 'மகாபாரதம்' தொடரில் அஸ்வத்தாமனாக நடித்து திரைப் பயணத்தைத் தொடங்கினார். 'லகான்' படத்தில் தேவா சிங் சோதி என்ற கதாபாத்திரத்திலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி...