தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் வாதிட 83 அரசு வழக்கறிஞர்களை சட்ட அதிகாரிகளாக நியமித்தது. தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்திற்கும் அதன் மதுரை கிளைக்கும் மாநில அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 83 சட்ட அதிகாரிகளை நியமித்துள்ளது. மேலும் இவர்களுடன் 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்களையும் பொதுத்துறை நியமனம் செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை அமர்வு மற்றும் மதுரை கிளைக்கு 8 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் உட்பட மொத்தம் 91 வழக்கறிஞர்களை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், பி.வி. பாலசுப்பிரமணியம், டி. கௌதமன், பி. சரவணன், ஏ. அப்துல் ஹமீது, ஜே. பரதன், எஸ். அர்ஜுன் சுரேஷ், எஸ். குமரேசன் மற்றும் கவிதா நித்யானந்தன் ஆகிய 8 பேர் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பாலசுப்பிரமணியம் மற்றும் கௌதமன் ஆகியோர் ஏற்கனவே தற்காலிக ஏற்பாடாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர், கூடுத...
தமிழ்நாட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தை மேலும் திறம்படவும், விரைவாகவும் செயல்படுத்தும் நோக்கில், புதிய மண்டலங்கள் பிரித்து தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு. ஹிந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக சீரமைப்பு நடவடிக்கையாக புதிதாக சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலங்கள் உருவாக்கம்; வடக்கு மண்டலத்திற்கு சென்னை, தெற்கு மண்டலத்திற்கு திருச்சிராப்பள்ளியை தலைமையிடமாகக் கொண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலையில் கூடுதல் ஆணையர் பணியிடங்கள் உருவாக்கம், கோயில் நிர்வாகம், ஹிந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கோயில் சொத்துகள் பாதுகாப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, வரவு மற்றும் செலவு ஒப்புதல், தணிக்கை, குத்தகை மற்றும் ஏல அனுமதி, திருப்பணிகள், கும்பாபிஷேகம், ஆக்கிரமிப்புகள் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரங்கள் கூடுதல் ஆணையர்களுக்கு பகிர்ந்தளிப்பு, தமிழ்நாடு ஹிந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டம், 1959-ன் பிரிவுகள் 13 மற்றும் 13-A கீழ் நிர்வாக அதிகார வரம்புகள் நிர்ணயம் தமிழ்நாடு அரசு அரசிதழில் அறிவிப்பு வெளியீடு, அரசாணை. மாநிலம் முழுவதும் சென்னை (வட மண்டலம்) மற்றும் திருச்சிராப்பள்ளி (தென் மண்...