முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பொதுமக்கள் காவல்துறை புகார்களைத் தெரிவிக்க, மாவட்டம், மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள்

தமிழ்நாடு காவல்துறையின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகர காவல் ஆணையரகங்களிலும் Internal Vigilance Cells அமைக்கப்பட்டது  காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு எதிரான லஞ்சம் ஊழல், முறைகேடு, அதிகாரத் துஷ்பிரயோகம் மற்றும் பிற ஒழுங்கீனச் செயல்கள் தொடர்பான புகார்களைத் தடுப்பது, கண்காணிப்பது மற்றும் விசாரிப்பது தான் முக்கிய நோக்கம். பொதுமக்கள் புகார்களை எளிதில் தெரிவிக்க, மாவட்டம் மற்றும் மாநகரம் வாரியாக தனி Mobile Phone WhatsApp எண்கள் வழங்கப்பட்டன.  புகார்தாரர்கள் மற்றும் சாட்சிகளின் அடையாளம் இரகசியமாக பாதுகாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன்  புகார் அளித்ததற்காக எந்தவிதமான துன்புறுத்தல், அச்சுறுத்தல் அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. பெறப்படும் அனைத்து புகார்களும் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் உரிய காலக்கெடுவுக்குள் விசாரிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். Internal Vigilance Cell-ன் செயல்பாடுகள் உயர் காவல்துறை அதிகார அலுவலர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.  எனவே, பொதுமக்கள் எந்த அச்சமும் இன்றி ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாட்டில் மூடப்பட்ட 717 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகளின் பட்டியல் வெளியீடு

தமிழ்நாட்டில் தவெக அரசு அமைந்த பிறகு மூடப்பட்ட 717 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகளின் பட்டியல் வெளியீடு  தமிழ்நாடு தவெக அரசு அமைந்த பிறகு, பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் ஸ்தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்களின் அருகிலிருந்த 717 டாஸ்மாக் மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்படவில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் கே. விக்னேஷ் முழுமையான முகவரிகள் அடங்கிய 38 பக்கங்கள் கொண்ட அதிகாரப்பூர்வமான பட்டியலை வெளியிட்டார்  அதில் .மண்டலம் வாரியாக மூடப்பட்ட கடைகளின் விவரங்கள்       மதுரை மண்டலம்: 270-க்கும் மேற்பட்ட கடைகள் (அதிகபட்சம்) கோயம்பத்தூர் மண்டலம்: 179 கடைகள்  திருச்சிராப்பள்ளி மண்டலம்: 84 கடைகள் சென்னை மற்றும் சேலம் மண்டலம்:  தலா 82 கடைகள்   முக்கியமாக வழிபாட்டுத் தலங்கள் அருகில் உள்ள 276 கடைகள் மூடப்பட்டன.   கல்வி நிலையங்கள் அருகில் உள்ள 186 கடைகள் மூடப்பட்டன. பேருந்து நிலையங்கள் அருகில் உள்ள 255 கடைகள் மூடப்பட்டன. அரசின் இந்த நடவடிக்கை மூலம் பொதுமக்களின் நலன் கருத...

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் உரை

தமிழ்நாடு முதலமைச்சர் C. ஜோசப் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களின் உரிமைகளைப் பேசியவர் ஆற்றிய உரையில்   " தென் மாநிலங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 30 சதவீதத்திற்க்கும் அதிகமாகப் பங்களிக்கின்றன. எனவே, அவற்றுக்கு முன்னுரிமைச் சலுகை தேவையில்லை; மாறாக நிதி தன்னாட்சியை மதிக்கும் சமமான மற்றும் நியாயமான பகிர்வை மட்டுமே மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறோம், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, சிறந்த நிதி ஒழுக்கத்துடன் செயல்படும் மாநிலங்கள், வரவிருக்கும் நிதிக்குழுப் பகிர்வுகளில் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தினார். தொகுதி மறுவரையறை மக்கள் தொகையைக் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது. நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மற்றும் எம்பிக்களின் எண்ணிக்கை குறையாத வண்ணம் மத்திய அரசு சட்டப்பூர்வமான உத்தரவாதத்தை வழங்க வேண்டும், நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள் . தமிழகத்தின் நிரூபிக்கப்பட்ட கல்வி முறையின்படி, MBBS, BD...

இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் குழுமத்தின் 97-வது ஆண்டு பொதுக்கூட்டம்

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க வேளாண்மை வளர்ச்சி அவசியம்-மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் 97-வது ஆண்டு பொதுக்கூட்டம் மத்திய வேளாண், விவசாயிகள் நலன், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் செளகான் தலைமையில் புதுதில்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், வேளாண் வளர்ச்சியின்றி, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாகாது என்று தெரிவித்தார். நாடு வெறும் உற்பத்தியை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, வேளாண் நிலம் முதல் உலகளாவிய சந்தை வரை வலுவான அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விவசாயிகளுக்கு நேரடிப் பயன்களை அளிக்கக்கூடிய ஆராய்ச்சி சூழல் தேவை என்றும் அவர் கூறினார். வேளாண் மாற்றத்தின் அடுத்தக் கட்டமாக விவசாயிகளின் வருவாயை உயர்த்துவதிலும் குறு, சிறு விவசாயிகளின் எதிர்கொள்ளும் சக்தியை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இத்தகைய சூழலில் ஒருங்கிணைந்த பண்ணை முறைகள், தரமான விதைகள், நடவுப் பொருள்களை உரிய நேரத்தில் பெறுதல், சமச்சீ...

நாளை சென்னை கோவளத்தில் 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், 31-ஆவது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு மாமல்லபுரம் அருகில் கோவளம் பகுதியில் 2026 ஆகஸ்ட் 20, ஆம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. மாநாட்டிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் துணைத் தலைவராக  செயல்படுகிறார். மாநாடு காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை  சுமார் 4 மணி நேரம் நடைபெறும், மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகஸ்ட் 19 இன்று புதன்கிழமை இரவு சென்னை வந்து சேர்ந்தார் சென்னைக்கு தெற்கில் சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள மாமல்லபுரம் அருகில் கோவளம் பகுதியில் அமைந்துள்ள  தனியார் நட்சத்திர விடுதியில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, துணைத் தலைவர்: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், உறுப்பினர்கள்: தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பாணடிச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சர் மற்றும் துணைநிலை ஆளுநர். மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள்  உள்துறைச் செயலாளர்கள் மற்றும் மத்திய அரசின் முக்கிய அதிகாரிகள். கலந்து க...

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் பதவிக்காலம் வரை பயன்படுத்த கார் முதலமைச்சர் அறிவிப்பு

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் பதவிக்காலம் வரை பயன்படுத்த கார்  முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவிப்பு  காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப்பினர் இ எல் ஜோதிமணி கோரிக்கையை ஏற்றார் முதல்வர்.  அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் அவர்கள் விரும்பும் நபர் ஒரு உதவியாளராக நியமனம் எனவும்  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வாகனப்படி மாதம் ரூபாய் 25, 000 லிருந்து உயர்த்தி ரூபாய் .75,000 ஆக வழங்கப்படும் எனவும்  சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் உதவியாளர் படி ரூபாய் .25,000  கூடுதலாக வழங்க நடவடிக்கை தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன்  பேசும் போது, “நான் கல்லூரி படிக்கும் போது காதல் தோல்வி வேலையில்ல்லை காருமில்லை.. இன்னைக்கு வேலையும் கொடுத்திருக்கிறார் தலைவர்.. காரும் கொடுத்திருக்கிறார்.. ரொம்ப ரொம்ப நன்றி.. ஏன்னா நான் டிரெயினில்தான் வருகிறேன். இங்கே உள்ளே ஆட்டோவில வருகிறேன்.. உள்ளே வரும் போது எல்லாம் பணியில் இருக்கிற காவலர்கள், அடையாளம் தெரியாமல் "நீங்க யார்? என கேட்பார்கள் ”, நான் எம்.எல்.ஏ.எனச் சொல்வேன்.. ...

களவு போன திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருந்து மீட்பு

இந்தியாவில் நீண்ட ஆன்மீகக் கலாச்சாரப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், லண்டனிலிருந்து மீட்கப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருமங்கையாழ்வார் சிலை கும்பகோணத்தை வந்தடைந்தது! பின்னர் முதல்வர் சி. ஜோசப் விஜய் பார்வையிட்டார் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் Ashmolean Museum மூலம் மீட்கப்பட்டு, ஆகஸ்ட் 16, 2026 ஆம் தேதியன்று வெற்றிகரமாகத் தமிழ்நாடு கொண்டுவரப்பட்டது.  கும்பகோணம் பகுதி கத்திரிநத்தம் சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில். 16-ஆம் நூற்றாண்டு வெண்கலச் சிலை (சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்டது இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள Ashmolean Museum.நூலகத்தில் இருந்து கண்டறிந்து மீட்பு தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு CID காவல்துறையினரின் தீவிர விசாரணை மற்றும் அறிவியல் பூர்வமான ஆவணங்கள் மூலம் சிலை அடையாளம் காணப...