தேனி மாவட்டம், மேகமலை மற்றும் வருசநாடு மலைக் கிராமங்களில் வசித்து வரும் 5,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களை காலி செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக, 7 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி அன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு மிகப்பெரிய முற்றுகைப் போராட்டத்தை நடத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்புக்காடு காப்பகம் (Reserve forest) காரணம் காட்டி அப்பகுதியில் வசிக்கும் மக்களை சட்டப்படி வெளியேற்ற உத்தரவிடப்பட்டது .வருஷநாடு மற்றும் மேகமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 98 மலைக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 4,011 குடும்பங்களுக்கு வெளியேற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பூர்வீகக் குடிகளை அவர்களின் வாழ்விடத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். மக்களின் கோரிக்கையில் மத்திய அரசின் மக்களை வெளியேற்றும் ஆணையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். எனவும் வன உரிமைச் சட்டம் (Forest Rights Act, 2006)-ன் கீழ் மலைவாழ் மக்களுக்குக் கிடைக்கும் சட்டப்பூர்வ உரிமைகளை உச்ச நீதிமன்றத்தில் தமி...
பழனி மடத்தின் சொத்து மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை சிறையில் மரணம் மற்றொரு நபர் ஐசியுவில்
பழனி மடத்தின் சொத்து மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை சிறையில் மரணம் . பழனி துறவி பெயரில் உள்ள மடத்தின் நில மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர் அன்வர்தீன் உயிரிழப்பு 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சிகாலத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழநி நிதிமன்றத்தில் அரசு குற்றவியல் வழக்கறிஞராக் பணியில் இருந்தவராவார், தற்போது பழனியில் ரூபாய் .100 கோடி மதிப்புள்ள மடத்தின் சொத்தில் நடந்த மோசடி வழக்கில் கைதான வழக்கறிஞர் அன்வர்தீன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 3 நாட்கள் விசாரணைக்கு எடுத்த காவல் முடிந்து சிறைக்கு திரும்பிய சில மணிநேரங்களில் மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த மரணம் நிகழ்ந்து அவரைச் சார்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி அறக்கட்டளை மடத்திற்குச் சொந்தமான ரூபாய் .100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் எஸ். அன்வர்தீன் (வயது 65), மதுரை மத்திய சிறையில் நேற்று ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி ...