இரசிகராக இருந்து அமைச்சரானவர் ந. ஆனந்த் எனும் புஸ்ஸி ஆனந்த். இவர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பொதுச்செயலாளராகவும், தமிழக அமைச்சரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும் தற்போது உள்ளார். ஆரம்ப காலத்தில் பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர், முதலில் அரசியல்வாதியின் உதவியாளராகத் பயணத்தைத் தொடங்கினார். பின்னர், தீவிரமாக நடிகர் விஜய்யின் ரசிகராக மாறி பண்டிச்சேரி மாநில விஜய் ரசிகர் மன்றத்தின் கௌரவத் தலைவரானார். நடிகர் விஜய்யின் தந்தை திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நம்பிக்கையைப் பெற்று, அகில இந்திய விஜய் ரசிகர் மன்றத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலில் புஸ்ஸி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் காரணமாகவே இவர் 'புஸ்ஸி ஆனந்த்' என அழைக்கப்படுகிறார். நடிகராக விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய போது, கட்சியின் பொதுச் செயலாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டார். 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வ...
72-வது தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக மம்மூட்டி மற்றும் கார்த்திக் ஆர்யனும், சிறந்த நடிகையாக யாமி கௌதமும் தேர்வு செய்யப்பட்டனர். 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள நேஷனல் மீடியா சென்டரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதில் மலையாள மொழி நடிகர் மம்மூட்டி மற்றும் ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை யாமி கௌதம் வென்றார். ‘ப்ரமயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டியும், ‘சந்து சாம்பியன்’ படத்துக்காக கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகர்களாகத் தேர்வாகினர். அதே போல ’ஆர்டிகிள் 370’ படத்துக்காக யாமி கவுதம் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டார். 2024-ஆம் ஆண்டில் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களை உள்ளடக்கி இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் அடங்கிய நடுவர் குழு விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்தது. வி...