புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான 'மால்வன்' ஜூலை 22 அன்று கடற்படையில் இணைகிறது இந்திய கடற்படை தமது புதிய நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பலான மால்வனை ஜூலை 22 அன்று படையில் இணைக்கிறது. இவ்விழாவில் விமானப்படை தலைமை தளபதி ஏர்சீஃப் மார்ஷல் தலைமை தாங்குகிறார். மேற்குக் கடற்படைத் தளத்தின் தலைமை தளபதி துணை அட்மிரல் சஞ்சய் வத்சயன் முன்னிலை வகிக்க உள்ளார். கடற்படை உயர் அதிகாரிகள், கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனப் பிரதிநிதிகள், முன்னாள் படை வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். கொச்சியில் உள்ள கொச்சின் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட மால்வன் கப்பல் நாட்டின் தற்சார்பு தொலைநோக்குப் பார்வைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கப்பலின் 80 சதவீதம் உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் போர்க்கப்பல் வடிவமைப்பு, கட்டுமானம், ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் வளர்ந்து வரும் கப்பல் கட்டுமானத்துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்தியா தலைமையில் உயிரித் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தொழிற்புரட்சிக்கு நாடு தயாராக உள்ளது: மத்திய அமைச்சர் தகவல்
இந்தியா தலைமையில் உயிரித் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட அடுத்த தொழிற்புரட்சிக்கு நாடு தயாராக உள்ளது: மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உயிரி-மருத்துவ ஆராய்ச்சி பணித் திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்திட்டத்தை மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ 1,500 கோடியாகும். இதில் உயிரித் தொழில்நுட்பத் துறையின் பங்களிப்பாக ரூ 1,000 கோடியும், லண்டனைச் சேர்ந்த 'வெல்கம் டிரஸ்ட்' அமைப்பின் பங்களிப்பாக ரூ 500 கோடியும் ஆகும். இத்திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சி, அறிவியல் முன்னேற்றம், உலகளவிலான போட்டித்தன்மை ஆகியவற்றில் உயிரித் தொழில்நுட்பம் ஒரு முக்கிய சக்தியாக அமையவுள்ளது என்று குறிப்பிட்டார். உயிரித் தொழில்நுட்பப் புரட்சியில், இந்தியா பங்கேற்பாளராக மட்டுமின்றி, வளர்ந்து வரும் முன்னணி நாடாகவும் திகழ்கிறது என்றும் அவர் வலியுறுத்தினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இத்துறையில் ஏற்பட்டுள்ள விரைவான மாற்றத்தை ச...