முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பிரபல நடிகர் அஜீதகுமார் தாயார் காலமானார் சிந்தி முறைப்படி இறுதிச்சடங்கு

தலை என ரசிகர்கள் பார்க்கும் பிரபல நடிகர் S.அஜித் குமாரின்   தாயார் மோகினி (வயது 89) காலமானார் அது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் அறிக்கை இறுதிச்சடங்குகள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும். பெற்றோர் அல்லது அன்பிற்குரிய மூத்தவரை இழந்த வலியை உணர்ந்த அனைவரும், எங்கள் அமைதியான துக்கத்தை மதித்து, அவர் வாழ்நாள் முழுவதும் எங்களுக்குக் கற்றுத்தந்த சமநிலை, கண்ணியம் மற்றும் மென்மையான மனவலிமையுடன் அவரது நினைவைப் போற்றுவார்கள் என்று நம்புகிறோம்.    S.அனுப்குமார்,  S.அஜித்குமார், S.அனில்குமார், My deepest condolences to you and your family.She has raised great human beings!  இந்த நிலையில் சென்னை  வால்மீகி நகர், 4வது சீவர்டு ரோடு , திருவான்மியூர்,   அஜீத்குமார் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெறும்  என்ற நிலையில் அவரது வாழ்க்கைக் குறிப்பு, அஜித் குமார், ஆந்திரப்பிரதேசம் செகந்திராபாத்திலா ஒரு சிந்தி தாய்க்கும் கேரளம் பாலக்காட்டு பி. எஸ்.மணி என்ற சுப்பிரமணிக்கும் இரண்டாவது மகனாவார் இவரது தா...
சமீபத்திய இடுகைகள்

ஒரே குற்றம் இரு வேறு வழக்கு காரணமாக குண்டர் சட்டம் ரத்தான சந்தோஷ் ஷர்மா

தேமுதிகவின் தற்போதய பொதுச்செயலாளரான பிரேமலதாவின் தம்பியான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் எல்.கே.சுதீஷ்  மனைவி பூர்ணஜோதி  அளித்த புகாரின் அடிப்படையில் தான் சந்தோஷ் சர்மா மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது .சந்தோஷ் சர்மா குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மகள் வர்ஷா சர்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் HCP ஆட்கொணர்வு  Habeas Corpus மனுவை தாக்கல் செய்திருந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சந்தோஷ் சர்மா மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.பண மோசடி செய்ததாக தொழிலதிபர் சந்தோஷ் ஷர்மா மீது சென்னை காவல்துறை முன்னாள் ஆணையரும் தற்போது ஊழல் தடுப்பு கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அருணால்  முன்னர் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் அவருக்கு கடுமையான முறையில் விமர்சனம் செய்து கண்டித்தது . சென்னை கொளத்தூர் பகுதி இராமதாஸ் நகரில் தேமுதிக தற்போதய பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தம்பி எல்.கே.சுதீஷ் எம்.பி, மனைவி பூர்ணஜோதிக்குச் சொந்தமான 2 ஏக்கர் 10 சென்...

முதல்வர் சித்தராமையா ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார் புதிய முதல்வராக சிவக்குமார் தேர்வாவார்

கர்நாடக மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக சித்தராமையா அறிவித்து கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்று தாம் இம்முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார். டெல்லியில் மீண்டும் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க சித்தராமையா முன்வந்தார். சித்தராமையா முதல்வர் பதவியில் இருந்து விலக முன்வந்த தகவல் உறுதியானதும் சிவகுமாரின் ஆதரவாளர்கள் அவரது இல்லத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த கட்டமாக, கர்நாடக மாநிலச் சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக டி.கே. சிவகுமார் தேர்வு செய்யப்படுவார்.  அதன் பின்னர், அவர் அதிகாரபூர்வமாக முதல்வர் பொறுப்பை ஏற்பார். முன்னதாக, வியாழக்கிழமை (மே 28) தனது அமைச்சரவை சகாக்களுக்கு காலை விருந்து அளித்தார் முதல்வர் சித்தராமையா. பெங்களூரில் உள்ள அவரது வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விருந்தில் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். அப்போது பதவி விலகும் முடிவை அமைச்சர்களிடம் சித்தராமையா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. புதிய முதல்வராகும் டி.கே. சிவகுமார், பதவி விலகிய சித்தராமையாவின் காலில் ...