சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகில் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை மரண வழக்கில், சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட மானாமதுரை துணைக் கண்காணிப்பாளர், திருப்புவனம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட நால்வரை சிறையில் அடைக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. மடப்புரம் அஜித்குமார் படுகொலை மரண வழக்கை கொலை வழக்காக மாற்றிய நீதிமன்றம் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 4காவல்துறை அலுவலர்களைச் சிறையிலடைக்க உத்தரவு, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற இந்துசமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், தமிழ்நாடு காவல்துறையின் அதிகார வரம்புகளைக் கேள்விக்குள்ளாக்கும் சில காவல்துறை பணியாளர்கள் மீதான நீதித்துறையின் நடவடிக்கை தற்போது எட்டியுள்ளது. ஆரம்பத்தில் ‘தடயங்களை மறைத்தல்’ என்ற சாதாரணப் பிரிவின் கீழ் மூடி மறைக்க முயன்ற இந்த வழக்கினை, மதுரை மாவட்ட நீதிமன்றம் தற்போது ‘கொலை வழக்காக’ மாற்றியுள்ளது. இது லாக்-அப் மரணங்களை வெறும் விபத்தாகவோ அல்லது தற்கொலையாகவோ சித்தரிக்க முயலும் பணி ச...
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களாக மதுராந்தகம் (தனி) தொகுதிதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கனிதா சம்பத் மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிக்கு பானுமதி ஆகியோர் இந்த இரு தொகுதிகளின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வான மரகதம் குமரவேல் மற்றும் பி. சத்யபாமா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததால் அறிவிக்கப்பட்ட தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகளான பாஜக அமமுக, புதிய நீதிக் கட்சி மற்றும் பாமக தவிர பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது. திமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் ஏற்கனவே தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுகவின் இந்த அறிவிப்புடன் புதிய லேட்பாளர்கள் மற்ற கட்சிகள் அறிவித்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது