முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மாநிலத் தேர்தல் ஆணையத்தின் SIR திருத்தப் பணி குறித்த தகவல்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரை நடைபெறும் எனவும், ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27.12.2025 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 28.12.2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 03.01.2026 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 04.01.2026 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய குடிமக்கள் படிவம்-6 ஐ உறுதிமொழிப் படிவத்துடன் (Declaration Form) சமர்ப்பித்து தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், ஒரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள எந்தவொ...
சமீபத்திய இடுகைகள்

பிரபல எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

பிரபல எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் புகழ்பெற்ற எழுத்தாளரும் ஞானபீட விருது பெற்றவருமான வினோத் குமார் சுக்லாவின் மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி குறிப்பிட்டார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது: "ஞானபீட விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் வினோத் குமார் சுக்லாவின் மறைவை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இந்தி இலக்கிய உலகிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். இந்தத் துயரமான நேரத்தில், அன்னாரது குடும்பத்தினருக்கும்,  ரசிகர்களுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி

கிருஸ்தவ அமைப்புக்களின் ஆதரவைப் பெற்ற தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிருஸ்தவ இளைஞா் இயக்கம் சாா்பில் 28 வது அருமனை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. முன்னதாக அழைப்பிதழில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், த.வெ.க நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பிரின்ஸ், தாரகை காட்பட், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததநிலையில்  விழாவில் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மற்றொரு புறம் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில காங்கிரஸ் கட்சி இணைய பல்வேறு வியூகங்கள் பேசப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்திருந்தது. எனவே த.வெ.க நிர்வாகிகள் பங்கேற்ற கிறிஸ்மஸ் விழாவை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர் . இந்த நிலையில் சென்னையில் த.வெக தவைவர் நடிகர் விஜய் த...

தேசிய நுகர்வோர் தினநிகழ்ச்சி – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்பு

தேசிய நுகர்வோர் தினநிகழ்ச்சி – மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பங்கேற்பு தேசிய நுகர்வோர் தினம் இன்று கொண்டாடுப்படுவதையொட்டி  புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு பிரஹலாத் ஜோஷி பங்கேற்றார். டிஜிட்டல் முறையிலான நுகர்வோர் விழிப்புணர்வு பிரச்சார இயக்கங்களை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர், இந்த ஆண்டுக் கருப்பொருள், டிஜிட்டல் முறையில் நுகர்வோருக்கு விரைவான நீதி வழங்குதல் என்பதாகும் என குறிப்பிட்டார். இந்த ஆண்டில் இதுவரை 1,40,000 நுகர்வோர் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 90,000 விசாரணைகள் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய நுகர்வோர் விவகாரங்கள்துறை இணையமைச்சர்  திரு பி எல் வர்மா, நாட்டின் பொருளாதாரத்தில் நுகர்வோர் முக்கியப் பங்காற்றுவதாகக் கூறினார். டிஜிட்டல் இந்தியா போன்ற முன்முயற்சிகள் நுகர்வோரிடையே விழிப்புணர்வை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

விளையாட்டுகள் ஒழுக்கத்தை வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன– குடியரசு துணைத்தலைவர்

விளையாட்டுகள் ஒழுக்கத்தை வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன– குடியரசு துணைத்தலைவர்  விளையாட்டுகள் ஒழுக்கத்தையும் நற்பண்புகளையும் வளர்ப்பதுடன் தேசத்தை வலிமையாக்குகின்றன என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஆக்ராவில் நடைபெற்ற நாடாளுமன்ற தொகுதி அளவிலான விளையாட்டு விழாவில் தலைமை விருந்தினராக இன்று (24.12.2025) அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது பழங்கால தத்துவங்கள், நல்லிணக்கத்தையும் உடல் நலத்தையும் முக்கியமாக போதிப்பதாக அவர் கூறினார். விளையாட்டுகளில் ஈடுபடுவதன் மூலம் நல்லிணக்கம் அதிகரிப்பதுடன் உடல்நலமும் மேம்படும் என்று அவர் குறிப்பிட்டார். விளையாட்டுகள் போட்டித்தன்மை உள்ளவை மட்டுமல்ல என்றும் அவை குழுமனப்பான்மை, நற்பண்புகள் போன்றவற்றை வளர்ப்பதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற தொகுதி அளவிலான விளையாட:டுப் போட்டிகள், அடித்தள நிலையில் உள்ள வீரர்களின் திறன்களைக் கண்டறிந்து அதை மேம்படுத்த உதவுவதாகத் தெரிவித்தார். உடல் திறன் இந்தியா, கேலோ இந்தியா போன்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் முன்முயற்சியால் இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வம் அதிகரித்துள்ளதாக...