முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

எஸ்ஐஆர்-க்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைத் தொடரலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவு.   வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணிக் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை தாக்கல் செய்த மனுக்களுக்கு  தேர்தல் ஆணையம் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனுக்களைத் தாக்கல் செய்யும் வகையில் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கள் உத்தரவிட்டனர். இந்த விவகாரத்தில் தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் நீதிபதிகள் சூப்ப காந்த் ஜாாயல் பாச்சி அடங்கிய அமர்வு முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நவம்பர்.11 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பு மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், தமிழ் சுத்தில் அதிக மழை பொழியும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித் துள்ளது. இத்தகைய சூழலில் எஸ்ஐ ஆர் நடவடிக்கை மேற்கொள்வது சரியல்ல. டிசம்பரில் கிறிஸ்துமஸ், ஜனவரியில் பொங்கல் திருவிழா கொண்டடாட்ட மாதங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த...
சமீபத்திய இடுகைகள்

பாக்கிஸ்தானில் கார் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி, 20 பேர் படுகாயம்

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியில் நேற்று நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில்  12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் படுகாயமடைந்தனர். பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மாவட்ட  நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயில் அருகில் நேற்று காரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தியா வில் டெல்லியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த 15 மணி நேரத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது, இந்தப்பகுதி, வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வரும் தனிநபர்கள் ஒன்று கூடும் பரபரப்பான பகுதி. குண்டுவெடிப்பு குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில் மற்ற விபரங்களை உறுதிப்படுத்தவில்லை. காவல்துறை அலுவலர்கள் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்துள்ளனர், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  மார்ச் மாதம் 2014 ஆம் ஆண்டில்  இதே போன்ற தாக்குதல் அதே நீதிமன்ற வளாகத்தில் நடந்தது, இந்தச் சம்பவத்தில் ஒரு நீதிபதி உள்ளிட்ட 12 பேர் பலியானார்கள். நேற்று  மதியம் 12;39 மணியளவில், நுழைவாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இந்தக் குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பின் சப்தம் 6 கிலோ...

வாங்கிய லஞ்சம் நைட்டியில் மறைத்த கிராம நிர்வாக அலுவலர் கைது

பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்: ரூபாய்.20 ஆயிரம் லஞ்சம் வாங்கியதும் நைட்டிக்குள் மறைத்த போது பிடிபட்ட பெண் கிராம நிர்வாக அலுவலர். சிக்காமல் இருக்க ரூபாய்.20 ஆயிரம் பணத்தை திடீரென தான் அணிந்திருந்த நைட்டிற்குள் வைத்து மறைக்க முயன்றார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம்புதூர்  கிராம நிர்வாக அலுவலகத்தில் அவ்வூரைச் சேர்ந்த கிருஷ்ணன் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய உரிய சான்றிதழ்கள் இணைத்து விண்ணப்பித்தார். அப்போது விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமி பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய்.20 ஆயிரம் செலவாகும் என லஞ்சம் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கிருஷ்ணன்,  கிராம நிர்வாக அலுவலர் முத்துலட்சுமியிடம் பணம் தருகிறேன் எனக் கூறிவிட்டு, நேராக திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துரையில் புகார் தெரிவித்ததையடுத்து முத்துலட்சிமியை பணம் பெற்ற கையுடன் பொறி வைத்துப் பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்புத் துறை கிருஷ்ணனிடம் அவய் கொண்டு வந்த பணத்தை பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய ரூபாய்.20 ஆயிரமாக அரசு சாட்சிகள் முன்னில...

தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு ரூபாய்.16,79,482 விடுவிப்பு

தமிழ்நாடு பல்லுயிர் பெருக்க வாரியத்திற்கு ரூபாய்.16,79,482 விடுவிக்கப்பட்டுள்ளது தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் மாநிலங்களுக்கு ரூ.43.22 லட்சம் மதிப்பிலான காப்புரிமையுடன் கூடிய அணுகல் மற்றும் பயன் பகிர்வு நிதியை விடுவித்துள்ளது. இந்திய உயிரியல் வளங்களை பயன்படுத்தி காப்புரிமைகளை பெறுவதற்கும், புதுமை கண்டுபிடிப்புகளை வர்த்தக மயமாக்குவதற்கும், அறிவுசார் சொத்துரிமை பயன்பாடுகளிலிருந்து இந்த நிதி உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 16 மாநிலங்களின் பல்லுயிர் பெருக்க வாரியங்களுக்கு இந்த நிதி வழங்கப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டிற்கு ரூ.16,79,482 வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திற்கு ரூ.20,66,553-ம், ஒடிசாவிற்கு ரூ.2,09,965-ம், உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.91,500-ம், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.79,547-ம் விடுவிக்கப்பட்டுள்ளது.  இத்தொகை பல்லுயிர் மேலாண்மை குழுக்களுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டவுடன் பல்லுயிர் ப...

டெல்லி செங்கோட்டை அருகில் நகர்ந்த குண்டாய் காரில் குண்டு வெடித்து. காயம் 24, உயிரிழப்பு 10 தீவிரவாதிகளின் சதி விசாரணை தீவிரம்

தேசியத் தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகில் நகர்ந்த குண்டாய் காரில் குண்டு வெடித்து. காயம் 24, உயிரிழப்பு 10. காயமும், உயிரிழப்பும், எண்ணிக்கையில் இன்னும் கூடலாம் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.  வெடித்துச் சிதறிய காரின் பாகங்கள் போலவே, மனித உடல்களும் தூரத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது சோகம். வெடித்த காரால் அருகிருந்த 14 கார்களும், சிதறி நாலாபுறமும்  கிடப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிலையம் சுற்றுலா பாய்ன்ட்டும் உள்ள அதிமுக்கிய இடத்தில்தான் இது நடந்துள்ளது. பீஹாரில் நாளை இரண்டாம்கட்டத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இப்படியான சம்பவம் நடந்துள்ளதால் கார்வெடிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது, அதேபோல் உத்திரப்பிரதேசம் .முழுவதும் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்தக் குண்டுவெடிப்பு தீவிரவாதிகள் சதிச்செயல் என்பது தெரிந்தாலும் NIA விசாரணைக்குப் பின்னரே அனைத்தும் தெரியவரும். வதந்திகள், போலியான தகவலை சுமந்து வரும்  ஏ.ஐ. வீடியோக்களை தவிர்ப்பதும்  உருவாக்கி உலவ விடாமல் இருப்பதும்; காவல்துறை விசாரணைக்கு பொதுமக்கள் செய்யக் கூடிய பேருதவியாய் இருக்கும். இப்ப...

ஐஎன்எஸ் சஹ்யாத்ரி போர்க்கப்பல் மலபார் போர் பயிற்சிக்காக குவாமுக்குச் சென்றது

மலபார் போர் பயிற்சிக்காக குவாமுக்குச் சென்றது ஐஎன்எஸ் சஹ்யாத்ரி போர்க்கப்பல் இந்திய கடற்படைக் கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி, வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள குவாமில் நடைபெறும் பலதரப்பு போர்ப் பயிற்சியான மலபார் பயிற்சி -2025-ல் பங்கேற்கிறது. இப்பயிற்சியில் ஐஎன்எஸ் சஹ்யாத்ரி பங்கேற்பது, நீடித்த ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட ஐஎன்எஸ் சஹ்யாத்ரி ஏவுகணைகளை ஏந்திச் செல்லும் போர்க்கப்பலாகும். இந்தக் கப்பல் 'தற்சார்பு இந்தியா' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இக்கப்பல் பல்வேறு இருதரப்பு பயற்சிகளிலும் பலதரப்பு பயிற்சிகளிலும் பங்கேற்றுள்ளது. மலபார்-2025 பயிற்சியின் துறைமுக கட்டத்தில் செயல்பாட்டு தயார் நிலைப் பயிற்சிகள், பங்கேற்கும் நாடுகளுக்கு இடையேயான விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்டவை இடம்பெறும். துறைமுக கட்டத்தைத் தொடர்ந்து, கடல் சார் கட்டம் நடைபெறும். இதில் கப்பல்களும் விமானங்களும் கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்கும். கூட்டு கடற்படை நடவடிக்கைகள்...

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு

மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாடு போபாலில் நடைபெற்றது மத்திய உள்துறை அமைச்சகமும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறைக் கழகமும்  இணைந்து 2025 நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை போபாலில் நடத்தின. இந்த மாநாட்டில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்தும் 120 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.  மாநாட்டில் உரையாற்றிய மத்திய உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு பாதுகாப்பான, வெளிப்படையான, ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட குற்றவியல் நீதி முறையை உருவாக்கி வருவதாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலின் கீழ், நாடு விரைவான நீதிக்கான புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். புதிய குற்றவியல் சட்டங்கள் இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பை காலனித்துவத்திலிருந்து விடுவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டதாகவும், தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டதாகவும் இந்தச் சட்டங்கள் உள்ளன எ...