திருபபரங்குன்றம் பாரம்பரிய கார்த்திகைத் தீபம் ஏறற்றுவது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்று 09.12.2025 மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் வாதிடுகையில், “தீபம் ஏற்றும் 4 நாட்கள் நிறைவடைந்துவிட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “இது தீபம் ஏற்றும் வழக்கு மட்டுமல்ல. ஆலயச் சொத்துரிமை சார்ந்ததும் கூட ஆகும்” எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு வழக்கை ஒத்திவைத்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “டிசம்பர் 17ஆம் தேதி தலைமைச் செயலாளர், மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும். மேலும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள மதுரை காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் இநதிய கூட்டணி கட்சிகள் சார்பாக நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 107 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கப்...
இலங்கையின் முன்னாள் பிரதேச அபிவிருத்தி, ஹிந்து கலாச்சார அமைச்சரும், மட்டக்களப்புக்கான நாடாளுமன்ற உருப்பினருமான கலாநிதி செல்லையா இராஜதுரை கடந்த 7.12.2025 அன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்தார். இலங்கைத் தமிழர்களின் குரலாக ஒலித்த கலாநிதி செல்லையா ராஜதுரையின் மறைவு இலங்கைவாழ் தமிழ் மக்களின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மட்டக்களப்பு தொகுதியின் எம்.பியாக இருந்தவர். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக, தொடர்ந்து 33 வருடங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். சொல்லின் செல்வர், ஆன்மிக சேவையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். தலயடுத்து, அவருக்கு ஹிந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டும் பணியாற்றினார் ஓய்வில் இந்தியா வந்து வசித்து வந்த நிலையில் காலமானார் அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெற்றது.