முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஆபரேஷன் கிளீன் ஏர்' திட்டத்தின் கீழ் 08.07.2026 அன்று ஒரு சிறப்பு ஆய்வு இயக்கம்

காற்றுத் தர மேலாண்மை ஆணையம் ஆய்வு - தில்லியில் சாலைகள் தரநிலைகளுக்கு இணக்கமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தேசிய தலைநகர் பிராந்தியம் தில்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்றுத் தர மேலாண்மை ஆணையம், 'ஆபரேஷன் கிளீன் ஏர்' திட்டத்தின் கீழ் 08.07.2026 அன்று ஒரு சிறப்பு ஆய்வு இயக்கத்தை நடத்தியது. இந்த ஆய்வின் போது, தில்லி மாநகராட்சியின் (MCD) அதிகார வரம்பிற்குட்பட்ட 79 சாலைப் பகுதிகளில் 78 சாலைகளில், ஒரு முனை முதல் மறு முனை வரை தார் போடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது, ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப உள்ளது. 07.01.2025 அன்று ஆணையத்தால் வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்ட, தில்லி பகுதியில் நகர்ப்புற சாலைகளை அமைத்தல், பசுமையாக்குவது ஆகியவற்றுக்கான தரநிலைக் கட்டமைப்புக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட சாலை மறுசீரமைப்புப் பணிகளின் நிலையை மதிப்பிடுவதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுப் பணிக்காக, தில்லி மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குட்பட்ட சாலைப் பகுதிகளை ஆய்வு செய்ய, ஆணையத்தின் 10 பறக்கும் படைகள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த ஆய்வானது, தில்லியின் பல்வேறு பகுதிகளில் சுமா...
சமீபத்திய இடுகைகள்

680 கிலோமீட்டர் தூரப் பாதையில் கவச் 4.0 பாதுகாப்பு முறையைச் செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல்

வடக்கு ரயில்வே மண்டலத்தில் 680 கிலோமீட்டர் தூரத்திற்கு 206 கோடி ரூபாய் மதிப்பில் கவச் பாதுகாப்பு முறையை செயல்படுத்த ரயில்வே ஒப்புதல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், வடக்கு ரயில்வேயின் தில்லி கோட்டத்திற்குட்பட்ட ரேவாரி-தில்லி, சாகுர்பஸ்தி-பத்திண்டா ஆகிய வழித்தடங்களின் கிளைப் பாதைகள் உள்ளிட்ட 680 கிலோமீட்டர் தூரப் பாதையில் கவச் 4.0 பாதுகாப்பு முறையைச் செயல்படுத்துவதற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு 206 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்துகளைத் தடுத்தல், சிக்னல்களைத் தாண்டிச் செல்வதால் ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதன் மூலம் ரயில் பாதுகாப்பை மேம்படுத்த இந்த கவச் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம் ரயில்களின் இயக்கத்தைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், அவசரக் காலங்களில் தானாகவே பிரேக்குகளைப் பயன்படுத்தும் வசதி கொண்டது. அடர்ந்த பனிமூட்டம் போன்ற மோசமான வானிலையிலும் ரயில்கள் அனுமதிக்கப்பட்ட வேகத்தில் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் இயங்குவதற்கு இது பெரிதும் உதவும...

ஊழலுக்கு குடை பிடித்த திமுகவின் அமைச்சர்கள்

கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக திமுக ஆட்சியில் ஆர். காந்தி  பதவி வகித்தார். இவர் தி.மு.க சார்பில் இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்  இவர் கடந்த திமுக ஆட்சியில் தமிழக கைத்தறித் துறையில் இலவச வேட்டி-சேலைத் திட்டத்தில் அமைச்சராக இருந்த ஆர். காந்தி மற்றும் அவர் மகன் வினோத் காந்தி ஆகியோர்  தமிழக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்வதற்குப் பதிலாக, ராஜஸ்தானிலிருந்து தரம் குறைந்த துணிகளை இறக்குமதி செய்து, அவற்றை ரகசியமாகச் சலவை செய்து கொல்கத்தாவில் விற்பனை செய்யும் 'ஸ்கேம்' நடைபெறுவதாகக் கூறும் புகார்கள் அதிர்ச்சியூட்டுவதாகும், அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் துணிகளை மக்களுக்கு விநியோகிக்காமல், அவற்றை ரகசியமாகச் சலவை செய்து கொல்கத்தாவில் விற்பனை செய்யும் சம்பவமும் நடைபெற்றள்ளதாம். இலவச வேட்டி-சேலை திட்டத்தில் ரூபாய் .60 கோடி மோசடி நடந்துள்ளதாகப் புகார்கள் நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலியைச் சுரண்டி, இடைத்தரகர்கள் கோடிகளில் புரளும் இந்த அவலத்தை அரசு கண்டும் காணாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட துணிகள...

பிரிக்ஸ் பெண் அமைச்சர்கள் கூட்டத்தில் மகளிரின் ஊரகத் தொழில் முனைவு குறித்த கண்காட்சி

ஊரக வளர்ச்சி அமைச்சகம் பிரிக்ஸ் பெண் அமைச்சர்கள் கூட்டத்தில் மகளிரின் ஊரகத் தொழில் முனைவு குறித்த கண்காட்சிக்கு ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் கீழ், கேரள மாநிலம் கொச்சியில், 2026 ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் பெண் அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே நடைபெறவுள்ள கண்காட்சியில் ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பங்கேற்றுள்ளது. நாடு முழுவதும் மகளிரால் நடத்தப்படும் ஊரக தொழில்துறை முயற்சிகள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இக்கண்காட்சியை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, இணையமைச்சர் திரு சாவித்ரி தாக்கூர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மகளிரால் நடத்தப்படும் சுயஉதவிக் குழுக்களின் தொழில் முனைவு குறித்து அமைச்சர்களுக்கு விளக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து. எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேஷியா ஆகிய நாடுகளின் அமைச்சர்களும், உயர் பிரதிநிதிகளும் அரங்குகளைப் பார்வையிட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஊரக தொழில்துறை குறித்...

கரூர் அரசு விழா கலந்து கொண்ட முதல்வர் மக்கள் திரண்டு வரவேற்றனர்

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் கலந்துகொண்ட கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் தேர்தல் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று 10. ஜூலை. 2026  வெள்ளிக்கிழமை, கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், காதப்பாறை பகுதியில் மதியம் 12.00 மணி அளவில் நடைபெற்றது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி நிகழ்ச்சி முழுக்க முழுக்க, அனுமதி பெற்றவர்களுக்கான நிகழ்ச்சியாக கட்சி மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது. விரைவுக் குறியீட்டுடன் (QR CODE)  கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்ட 5000 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். வேறு யாருக்கும்  அனுமதி கிடையாது. விரைவு குறியீடு அனுமதிச் சீட்டானது, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள் - சிறுமியர், பள்ளி மாணவ - மாணவியர், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், உடல்நலம் குன்றியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான விரைவு  குறியீடு அனுமதிச் சீட்டு வழங்கப்படவில்லை. என...

ரூபாய் .2,000 ஐ தற்போது மாற்றிக் கொள்ள கால அவகாசம் நீடித்த ஆர்பிஐ

ரூபாய் .2,000 ஐ தற்போது மாற்றிக் கொள்ளலாம் ஆர்பிஐ தகவல்.  பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் .2,000 நோட்டுகளை தற்போது எவ்விதமான சிரமமுமின்றி மாற்றிக் கொள்ளலாம் என இந்திய ரிசர்வ் வங்கி  அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் பணமாகவே அதாவது Legal Tender நீடிக்கின்றன. இருப்பினும்,     Commercial Bank எனும் வணிக வங்கிக் கிளைகளில்  இவற்றை மாற்றும் வசதி அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி , 2023-டன் முடிவடைந்து விட்டதால், தற்போது நோட்டுகளை மாற்ற பின்வரும் இரண்டு வழிமுறைகள் உண்டு: முதலாவது . நேரில் சென்று நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகங்களுக்கு  நேரடியாகச் சென்று ரூபாய் .2,000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் அல்லது உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்.  ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ரூபாய் .20,000 வரை நேரடியாக மாற்றிக் கொள்ள அனுமதி உண்டு. மற்றும் தபால் மூலம் அனுப்புதல் இந்திய அஞ்சல் துறை சார்ந்தும் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்கு நேரடியாக வர முடியாதவர்கள், இந்தியாவில் உள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலிருந்தும் இந்த...

மேலூர் இளைஞர் சாவில் மர்மம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை மாவட்டம், மேலூர் அருகே சீமைராஜா என்ற நபரின் மரணத்தில் சந்தேகம் எனக் கூறி, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம்  காவல்துறையின் தரப்பு தகவல் படி, ஜூலை மாதம் 6 ஆம் தேதி அதிகாலை மேலூர்-காரைக்குடி பைபாஸ் சாலையிலுள்ள கூத்தப்பன்பட்டி அருகே சீமைராஜா மற்றும் அவரது நண்பர் சூர்யா ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதியதில் சீமைராஜா உயிரிழந்தார் எனவும் அவரது உறவினர்களின் தரப்பு தகவல் திருட்டு வழக்கு தொடர்பாக ஜூலை மாதம் 4-ஆம் தேதி மேலூர் காவல் நிலைய ஆய்வாளர் சீமைராஜாவைத் தேடி வீட்டிற்கு வந்துள்ளார். இதனால், காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர். இந்த நிலையில் சீமைராஜாவின் உடலில் காயங்கள் ஏதும் இல்லாததாலும், காயமடைந்த அவரது நண்பர் சூர்யாவைச் சந்திக்க போலீஸார் முதலில் அனுமதிக்காததாலும், ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மதுரை அரசு இராஜாஜி பொது மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், சூர்யாவைச் சந்திக்க அனுமதித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த...