முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊராட்சிகளில் கள ஆய்வு குறித்து சுற்றறிக்கை

தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையில் மாநகராட்சி ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் கள ஆய்வில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் உத்தரவின் பேரில்  காலை திடீர் ஆய்வு, கழிவு மேலாண்மை, தெரு நாய் கட்டுப்பாடு, பள்ளிகளின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட 16 புள்ளிகள் அடங்கிய உத்தரவு  செயல்படுத்தத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் . ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்., 03.06.2026 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களுக்கு வெளிப்படையான, சீரான சேவைகளை வழங்கிடவே இந்த 16 அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் அறிவுறுத்தல் செயல்படுத்த வேண்டிய முறை, முதலாவது காலை ஆய்வு ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்களை தினமும் பார்க்க வேண்டும். அடுத்ததாக பணி வருகை பயோமெட்ரிக்  முறை மூலம் உண்மையான வருகையைக் கண்காணிக்க வேண்டும். மூன்றாவதாக கழிவ...
சமீபத்திய இடுகைகள்

நார்வே செஸ் 2026 ஜாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் முதல்வர் வாழ்த்து

நார்வே செஸ் 2026  ஜாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு @pragg_chess பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக  வாழ்த்துக்கள். தனது அறிவார்ந்த ஆட்டத்தினாலும், அசாத்தியமான தொடர் வெற்றிகளினாலும் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் அவர் மாபெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தில்                    நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026  தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா    நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே நடைபெற்ற செஸ் போட்டியில்    6 வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கீமரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் மொத்தம் 18 புள்ளிகளை பெற்று அவர் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வெஸ்லி 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.   இறுதி சுற்றின் முடிவில் பிரக்ஞா...

ஆசிரியர் கல்வியில் சீர்திருத்தம் என்பது தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் நடவடிக்கை

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU)  கடுமையான நெருக்கடியில் உள்ளது. சுமார் 680 தனியார் உள்பட இணைப்புக் கல்வியியல் கல்லூரிகளுடன் இயங்கும் பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சியின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய நிறுவனமாக இருந்த நிலையில், பல ஆண்டுகளாக ஊழல் முறைகேடுகள், மற்றும் நிர்வாகத் தவறு காரணமான தோல்விகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலறியும் உரிமை RTI-Act மனுவுக்கும் பதில் அளிக்க முடியாத நிலைக்கு முந்தைய திமுக அரசு தள்ளியது என்பது இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்துகிறது. சில அமைப்புகள் தொடர்ந்து RTI மூலம் வெளிப்படுத்திய தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பல தனியார் B.Ed., M.Ed. கல்லூரிகள் போதிய தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லாமல், ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பெயரளவில் பட்டியலிடப்பட்டு, இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் வெளியான ‘ghost faculty’ மோசடிக்கு ஒப்பான நிலை TNTEU-விலும் நிலவுவதாகக் கூறுகிறது. சில கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, நூலகம், ஆய்வக வசதிகள் குறைவாகவே உள்ளன. NCTE விதிமுறைகளை மீறியும், முறையான ஆய்வுகளின்...

அதிமுக கரைகிறது, தவெக வளர்கிறது காரணம் தலைவரின் தனித்த செல்வாக்கு ஒன்றே

தமிழ்நாட்டின் அரசியல்  ஏநோ ஒரு திருப்புமுனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளிலிருந்து இரண்டாம் நிலை தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 ல் 107 இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையை உருவாக்கியது, அதன் பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் தவெகவில் இணைந்த சம்பவங்கள் இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன. இது திராவிடக் கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை ஆழமாக அலசினால், தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பு மாறிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. திராவிட இயக்கம் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சமூக நீதி, சுயமரியாதை, எதிர்ப்பு அரசியலின் வெளிப்பாடாக வளர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 1967-ல் ஆட்சியைப் பிடித்தபோது அது ஒரு புரட்சியாகக் கருதப்பட்டது. பின்னர் அதிலிருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழ...

போதைப் பொருள் கடத்தல் ஜான் பிரிட்டோ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் ரூபாய் .258 கோடி பணமோசடி வழக்கில், ஜான் பிரிட்டோ மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனைகளை நடத்தியது.வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பதிவு செய்த புகார்களின் அடிப்படையில், தமிழ்நாட்டில் சென்னை, மதுரை மற்றும் இராமநாதபுரம் ஆகிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் இந்தக்கும்பல் கடல் வழியாகவும், ரயில்கள் மூலமாகவும் இலங்கைக்கு ரூபாய் .150 கோடி மதிப்புடைய மெத்தபெட்டமைன் மற்றும் ரூபாய் .108 கோடி மதிப்புடைய ஹாஷிஷ் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்தியது கண்டறியப்பட்ட சோதனைகளின் போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் சொத்து தொடர்பான விவரங்கள் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டது இந்த நிலையில்ஜே.எம்.ஜே. (IJK) நிறுவனரும், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாரான லீமா ரோஸ் மார்ட்டின் அவர்களின் அண்ணன் தான் இந்த ஜான் பிரிட்டோ. அவர் மீதான முக்கிய விவரங்கள்:அமலாக்கத்துறை (ED) வழக்கு: ஜான் பிரிட்டோ மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாகவும், அந்நி...

தமிழ்நாடு 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் DVAC சோதனை

60 சார்பதிவாளர் அலுவலகங்களில் DVAC சோதனை – 320 பணியாளர்கள்  ஒரே நேரத்தில் நுழைந்து கணக்கில் வராத பணம், முறைகேடுகள் குறித்து சோதனை! நேற்று ஜூன் மாதம் 4, 2026: தமிழ்நாடு முழுவதும் உள்ள 60 சார்பதிவாளர் அலுவலகங்களில் பிற்பகல் 2.30 மணியளவில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிரடிச் சோதனை நடத்தியது. சுமார் 320 காவல்துறை பணியாளர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் ஒரே நேரத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நுழைந்து, கணக்கில் வராத பணம் மற்றும் பிற முறைகேடுகளைச் சோதனை செய்தனர் ஜூன் 4 ஆம் தேதி ஆவணங்களைப் பதிவு செய்வதற்கான மிகச் சிறந்த நாள்  என்பதால், மாநிலம் முழுவதும் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிக எண்ணிக்கையிலான பதிவு டோக்கன்கள் வழங்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் பெருங்கூட்டத்தைப் பயன்படுத்தி, DVAC அதிகாரிகள் திட்டமிட்டு இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மாநிலம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 சார்பதிவாளர் அலுவலகங்கள். பிற்பகல் 2.30 மணியளவில், போலீஸார் ஒரே நேரத்தில் உள்ளே நுழைந்து, வெளியேறும் வழிகளை முற்றுகையிட்டனர்  பணியாளர்கள்: சுமார் 320 காவல் பணியாளர...