மதப் பிரசங்கி பால் தினகரன் பித்தலாட்டம் மும்பையில் வழக்கு பதிவு. மதபோதகர் பால் தினகரன் குடும்பம் மீது மும்பையில் மூட நம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு .மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மீரா ரோடு பகுதியில் கோயமுத்தூரைச் சேர்ந்த ‘இயேசு அழைக்கிறார்' அமைப்பு சார்பில் மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை மகாரஷ்டிரா மாநில பிரார்த்தனைத் திருவிழா என்ற பெயரில் நடைபெற்றது, தினமும் 50 ஆயிரம் பேர் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்து திரட்டப்படடனர். இதில், இயேசு அழைக்கிறார் அமைப்பின் தலைவர் பால் தினகரன், அவரது மகன் சாமுவேல் தினகரன் அவரது மனைவி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை என்று மதப் பிரசங்கம் செய்தனர். இந்தக் கூட்டத்தின் போது, முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள், பிசாசுகள், பேய்கள் விலகி ஓடுகிறது எனவும் நோய்களை குணமாக்குவதாகக் கூறி அமானுஷ்ய மற்றும் பேய், பிசாசு மற்றும் மந்திரச்சடங்குகள் நடைபெற்றதாக ஏமாற்றிய சம்பவம் பலரை அதில் நடிக்க வைத்து அரங்கேறிதாக ஆதாரங்களுடன் மும்பை சமூக ஆர்வலர்கள் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, பால் தினகரன் அவ...
நான்கு நாட்கள் விடுமுறை: தேர்தல் ஆணையத்தின் வேட்புமனு பற்றிய முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு சடடமன்றத் தேர்தல் 2026 ல் வேட்புமனு தாக்கல் செய்ய நான்கு நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்படுமென ECI தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் மாதம் 30 ஆம் தேதி முதல் - ஏப்ரல் மாதம் .6 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறுகிறது. இதில், மார்ச் மாதம் 31 ஆம் தேதி (செவ்வாய் கிழமை ), ஏப்ரல் மாதம் .1 ஆம் தேதி (புதன்கிழமை ), ஏப்ரல் மாதம் .3 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை ), ஏப்ரல் மாதம் .5 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை ) விடுமுறை தினம் என்றும், மற்ற நான்கு நாள்களில் (மார்ச் மாதம் 30 , ஏப்ரல் மாதம் . 2, மற்றும் 4, மற்றும் 6 ஆம் தேதிகளில் ) வேட்புமனு தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக 3 நாள் மட்டுமே விடுமுறை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது புது அறிவிப்பு ஆகும்.