முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

திருபபரங்குன்றத் தீபம் குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மறு தேதிக்கு மாற்றம்

திருபபரங்குன்றம் பாரம்பரிய கார்த்திகைத் தீபம் ஏறற்றுவது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  நேற்று 09.12.2025 மதியம் 2.15 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் வாதிடுகையில், “தீபம் ஏற்றும் 4 நாட்கள் நிறைவடைந்துவிட்டன” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துக் கொண்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “இது தீபம் ஏற்றும் வழக்கு மட்டுமல்ல. ஆலயச் சொத்துரிமை சார்ந்ததும் கூட ஆகும்” எனத் தெரிவித்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு வழக்கை ஒத்திவைத்திருந்தார்.  இந்த நிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “டிசம்பர்  17ஆம் தேதி தலைமைச் செயலாளர், மற்றும் காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் காணொளி வாயிலாக ஆஜராக வேண்டும். மேலும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக உள்ள மதுரை காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்க உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் இநதிய கூட்டணி கட்சிகள் சார்பாக நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் 107 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு வழங்கப்...
சமீபத்திய இடுகைகள்

இலங்கை முன்னால் அமைச்சர் சென்னையில் காலமானார்

இலங்கையின் முன்னாள் பிரதேச அபிவிருத்தி, ஹிந்து கலாச்சார அமைச்சரும், மட்டக்களப்புக்கான நாடாளுமன்ற உருப்பினருமான கலாநிதி செல்லையா இராஜதுரை கடந்த 7.12.2025 அன்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் மரணமடைந்தார். இலங்கைத் தமிழர்களின் குரலாக ஒலித்த  கலாநிதி செல்லையா ராஜதுரையின் மறைவு இலங்கைவாழ் தமிழ் மக்களின் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மட்டக்களப்பு தொகுதியின் எம்.பியாக இருந்தவர். 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக, தொடர்ந்து 33 வருடங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். சொல்லின் செல்வர், ஆன்மிக சேவையிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.1979 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி, ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். தலயடுத்து, அவருக்கு ஹிந்து சமய, பண்பாட்டு, தமிழ் அமுலாக்கல் மற்றும் பிரதேச அபிவிருத்தித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பின்னர், மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டும் பணியாற்றினார் ஓய்வில் இந்தியா வந்து வசித்து வந்த நிலையில் காலமானார் அவரது இறுதிக்கிரியைகள் சென்னையில் நடைபெற்றது.

மின் மயானம் அமைத்தவரிடம் 50 ஆயிரம் லஞ்சம் பெற்ற பேரூராடசிப் பொறியாளர் கைது

ஒப்பந்தப் பணிக்கான தொகையை விடுவிக்க ரூபாய்.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காரியாபட்டி பேரூராட்சியின் இளநிலைப் பொறியாளர் கணேசன் கைது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியின் இளநிலைப் பொறியாளர் கணேசன்,  மதுரை செல்லூர் பகுதியில் வசிக்கும் முதல் நிலை ஒப்பந்ததாரர் பழனிக்குமார் (வயது 42) விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் 3 ஆண்டுகளுக்கு முன் ரூபாய். 1 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் அபைக்க ஒப்பந்தம் எடுத்துப் பணி செய்தார். அதற்கு ரூ. 1 கோடியே 14 லட்சத்து 48 ஆயிரத்து 160 தொகையும் விடுவிக்கப்பட்டது. மீதமுள்ள தொகையை வழங்கக் கேட்டு பேரூராட்சியின் அலுவலகத்திற்கு நடையாய் நடந்தார். ஆனால் மீதித் தொகையைக் கொடுக்காமல் காலதாமதம் செய்தனர். மீதத்தொகையை விடுவிக்க ரூபாய். 3 லட்சத்து 50 ஆயிரம் லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமென இளநிலைப் பொறியாளர் கணேசன் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத பழனிக்குமார் விருதுநகர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் அறிவுரைப்படி ப...

AI தொடர்பாகக் கூகுள் CEO சுந்தர் பிச்சை தெரிவித்த முக்கியக் கருத்து

AI தொடர்பாகக் கூகுள் CEO திரு. சுந்தர் பிச்சை தெரிவித்த முக்கியக் கருத்து. "AI ல் இருக்கும் முக்கியப் பிரச்சினை என்பது குறித்து விளக்கிய திரு சுந்தர் பிச்சை, இதனால் இரவு முழுக்க தன்னால் தூங்கவே முடியவில்லை எனத் தெரிவித்தார். அதாவது ஏஐ காரணமாக நமக்குப் பல நன்மைகள் ஏற்படும் அதேநேரம் பல போலியான டீப்ஃபேக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் தன்னை இரவில் தூங்க விடாமல் செய்வதாக அவர் குறிப்பிட்டார். AI தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு திரு.சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், "AI எந்தளவுக்கு வலிமையானது என்பதையும் இனி வரும் காலங்களில் புதிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை எனப் பல்வேறு காரணங்களுக்காக AI உதவும், அதன் அதிவேக வளர்ச்சி காரணமாகச் சில அபாயங்களும் இருப்பதாகவே எச்சரித்தார். அவர் மேலும் "எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் இரண்டு வகையான பயன்கள் இருக்கவே செய்யும். சில தீய சக்திகள் AI ஐப் பயன்படுத்தி உண்மையில் இருந்து வேறுபடுத்த முடியாத போலிப் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. இது நிஜமாகவே கவலையளிக்க...

உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைககு வருகிறது

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரது முன் நடந்த வாதத்தில், 'இந்நீதிமன்ற உத்தரவை அரசு தரப்பு நிறைவேற்றவில்லை. தீபம் ஏற்றச் சென்றவர்களை காவல் துணை ஆணையர் தடுத்தார். ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இவ்வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றனர். அதையடுத்து நீதிபதி, 'இவ்வழக்கில் கோரிய நிவாரணத்திற்கு அப்பால் மேலும் விரிவாக செல்ல வேண்டாம்,' என்றார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ''அவமதிப்பு வழக்கில் இந்த நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு எதிராக தாக்கலான மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. ''இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, ரிட் மனுவில் உத்தரவிட்டதை எதிர்த்து, அரசு தரப்பில் உயர் நீதிமன்றக் கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறை...

தமிழ்நாடு டிஜிபி க்கு அமலாக்கத்துறை மேலும் ஒரு கடிதம்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை ஒப்பந்ததாரரிடமிருந்து 'கட்சி நிதியாக' லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும்  டெண்டர்களில் முறைகேடுகள் நடந்ததாக அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. டெண்டர் மோசடிகள் மூலம் குறைந்தது ரூபாய்.1,020 கோடி லஞ்சமாகப் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என். நேரு, அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பெறப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களை அமலாக்கத்துறை மேற்கோள் காட்டியுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 66 (2) ன் கீழ், ஊழல் குறித்து விசாரிக்க காவல்துறை முதல் தகவல் அறிக்கை. பதிவு செய்யக்கோரி, டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி மாநில தலைமைச் செயலாளர், காவல் படைத் தலைவர்  மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம்  ஆகியவற்றிற்கு அமலாக்கத்துறை 258 பக்க ஆவணத்தை அனுப்பியதில்.  ஆளும் தி.மு.க. அரசின் அமைச்சர் கே.என். நேரு தலைமையிலான நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையில் நடந்த ஒரு பெரிய ஊழலைக் குறிப்பிட்டு, தமிழ்நாடு அரசுக்கு இது அமலாக்கத்துறை எ...

கம்யூனிஸ்ட் கட்சி (மா) சாரந்த த. மு.எ.க.ச வின் மதிப்புறு தலைவராக நடிகை ரோஹிணி மொல்லேட்டி தேர்வு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா) சாரந்த த. மு.எ.க.ச  இயக்கத்தின் மதிப்புறு  தலைவராக நடிகை ரோஹிணி மொல்லேட்டி தேர்வு.   தமுஎகச 1975 ஆம் ஆண்டு  கொள்கை, சட்டவிதிகள் என அமைப்பு ரீதியாக உறுவானது. அதன் தலைவராக முத்தையாவும் பேராசிரியர் இரா. கதிரேசன் பொதுச்செயலாளராகவும் தேர்வாகினர். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநாடு நடத்தப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு வரை 15 மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தபட்டன.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) 16 ஆவது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஞாயிறன்று நடந்து முடிந்தது.  புதிய நிர்வாகிகளாக மதிப்புறு தலைவர் நடிகை ரோகிணி,தலைவர் மதுக்கூர் இராமலிங்கம்,பொதுச் செயலாளர் களப்பிரன், பொருளாளர் சைதை ஜெ, துணைத் தலைவர்கள் மதரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆதவன் தீட்சண்யா, புதுக்கோடடை கவிஞர் நா.முத்துநிலவன், க.உதயசங்கர், ஆர்.நீலா, பிரளயன், துணைப் பொதுச்செயலாளர்களாக கே.வேலாயுதம், அ.லட்சுமிகாந்தன் வெண்புறா, உமா, அ.கரீம், கி.அன்பரசன், துணைச் செயலாளர்களாக மருதுபாரதி, மணிமாறன், அ.உமர் பரூக், மேட்டூர் வசந்தி, கரிசல் கருணாநிதி, ஹேமாவ...