ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையத்தில் இதுவரை ஆறு பணியாளர்கள் காணவில்லை என காவல் துறை நீதிமன்றத்தில் தகவல். சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தென்காசி மாவட்டம் குலசேகரபட்டி விவசாயி திருமலை, காணாமல் போன தன்னுடைய சகோதரரை மீட்டு தரக் கோரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளதில், ‘என் சகோதரர் கணேசன் என்ற சுவாமி பவதத்தா என்பவர் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் 2007-ஆம் ஆண்டு முதல் தன்னார்வலராகய் பணியாற்றிய நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் தேதி, ஈஷா யோகா மையத்திலிருந்து என்னைத் தொலைப்பேசியில் அழைத்து, கணேசன் சொந்த ஊருக்கு வந்துள்ளாரா?’ எனக் கேட்டனர். மேலும், 3 நாட்களாக ஈஷா யோகா மைத்துக்கும் அவர் வரவில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர். அது தொடர்பாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ஆம் தேதி ஈஷா யோகா மையத்தின் பொறுப்பாளர் தினேஷ் ராஜா, கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்த ஆலந்துறை காவல் நிலையத்தில் ஓராண்டு காலமாகியும் அந்த வழக்கில் மந்தமான விசாரணை நடத்துகிறது. எனவே, காவல் துறை விசாரணையைத் துரித
தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி கவலைக்கிடம்
தற்கொலைக்கு முயன்று மருத்துவ சிகிச்சையில் உள்ள ஈரோடு மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் உடல்நிலை மோசமாகியுள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்துக்குப் பின்னர் தான் உடல்நிலை பற்றி எதுவும் கூற முடியுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த தகவல் வெளியானது. வைகோவின் மதிமுகவைச் சேர்ந்தவர் கணேச மூர்த்தி. மூன்றாவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். குறிப்பாக மதிமுக சார்பில் ஈரோட்டில் இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். ஈரோடு தொகுதியில் 2009 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2014 தேர்தலில் ஈரோடு தொகுதியில் தோல்வியடைந்தார்.இருப்பினும் 2019 தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டார். மீண்டும் மதிமுக வேட்பாளராக களமிறங்கிய கணேசமூர்த்தி வெற்றி பெற்றார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள அவரது வயது 77.இந்நிலையில் தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர் தயாரானார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்படுமென நினைத்தார். ஆனால் திமுக கூட்டணியில் ஈரோடுக்குப் பதில் திருச்சி