இந்தியாவில் தெரு நாய்கள் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் பற்றிய விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது இந்த நிலையில் தான் தற்போது அம்பத்தூரில் நாய்களுக்கு உணவளிப்பதில் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், காவலர் ஒருவரை விலங்கு நல ஆர்வலர் ஒருவர் (பெண்) மரியாதைக் குறைவாக, கடுமையாக பேசிய காணொளி ஒன்றை காண நேர்ந்தது. தெருவில் திரியும் நாய்களால் பொது மக்களுக்கு ஏற்படும் தொல்லை குறித்த வழக்கில் சமீபத்திய உச்சநீதி மன்ற உத்தரவில், தெரு நாய்களுக்கு சாலைகளில் உணவிடக் கூடாது என்றும், உள்ளாட்சி நிர்வாகங்கள் நாய்களுக்கு உணவிடுவதற்கு தனியாக இடங்களை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. எந்த காரணம் கொண்டும் தெருக்களில் நாய்களுக்கு உணவிடக்கூடாது. அப்படி உணவிடுவது குற்றம் என்றும், எந்த ஆர்வலரும், அமைப்பும் இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரிகளை எதிர்ப்பதோ, அவர்களின் பணியில் இடையூறு செய்வதோ கூடாது என்றும் அப்படி செய்தால் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுக்கும் குற்றத்திற்கு ஆளாவார்கள் என்றும் குறிப்பிட்ட...
கோயம்பத்தூர் கொடிசியாவில் இயற்கை விவசாயிகள் மாநாடு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி (நாளை மறுநாள்) துவங்க உள்ளது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்து, சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்குகிறார். இந்த மாநாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மதியம் ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 1.25 மணிக்கு கோயம்பத்தூர் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு 1.40 மணிக்கு கொடிசியா அரங்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பின்னர், மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு 3.30 மணிக்கு மீண்டும் கோயம்பத்தூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு கோயமுத்தூரில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். டெல்லியில் நடைபெற்ற தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக உரியஜபாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு பலப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ப...