முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

MGNREGA இனி VB-G RAM G ஆகிறது மாநிலப் பங்களிப்புடன் இனி நீர்நிலைகள் வளமாகும்

மஹாத்மா காந்தி வழிபட்ட ஸ்ரீ ராமன் பெயரில்  இனி இந்த மசோதா  Mahatma Gandhi National Rural Employment Guarantee Act 2005Change for the worse: On MGNREGA to VB-G RAM G  என     நிறைவேற்றப்பட்டுச் சட்டமானால், 20 ஆண்டுகள் பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு பதிலாக இது அமலுக்கு வரும். அத்துடன், மகாத்மா காந்தியின் பெயரையும் உள்ளடக்கிய ஒரு திட்டத்தை மத்திய மாநில பங்களிப்பு மூலம் நிறைவேற்ற வழி வகுத்து பழைய சட்டம் திருத்தி நீக்குவதன் மூலம், அரசு மகாத்மா காந்தியை 'அவமதிக்கிறது' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், இது தற்போது உள்ளதை விட சிறந்த திட்டமென்றும், கிராமப்புற மக்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்குமென்றும் மத்திய அரசு கூறுகிறது.  இந்தப் புதிய திட்டத்தில், கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்களின் வயது வந்த உறுப்பினர்கள் விருப்பத்தின் பேரில் திறன் தேவையற்ற வேலைக்கு முன்வந்தால், அவர்களுக்கு ஒரு வருடத்தில் 125 நாட்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுகிறது. தற்போது ஒரு வருடத்தில் 100 நாட்கள் வேலைக்கு உத்தரவாதம் வழங்கப...
சமீபத்திய இடுகைகள்

மலையாளத் திரைப்படத்தின் போக்கை மாற்றியவர் காலஞ்சென்ற ஸ்ரீ நிவாசன் என நடிகர் மோகன்லால் புகழஞ்சலி

மலையாளத் திரைப்படத்தின் போக்கை மாற்றியவர்களில்  இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நடிகர் என காலஞ்சென்ற ஸ்ரீனிவாசனும் ஒருவர் நடிகராகவும், திரைப்பட எழுத்தாளராகவும் மலையாள மக்களின் அன்புக்குரியவராக நீண்ட காலமாகவே இருந்தவர். நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றாலே அந்தப்படத்திற்கு தனி எதிர்பார்ப்புகள் கூடிய காலங்களுமிருந்தன. பன்முகத்திறமையாளராக அறியப்பட்ட ஸ்ரீனிவாசன் நடிகர் மோகன்லாலுடன் அதிகத் திரைப்படங்களில் இணைந்து நடித்தவர். ஸ்ரீனிவாசனின் நெருங்கிய நண்பரும் நடிகர் மோகன்லால் பதிவொன்றை வெளியிட்டதில், “பிரியாவிடை சொல்லாமலே ஸ்ரீனி கிளம்பிவிட்டார். அவருடனான பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்கத் தெரியவில்லை. திரைப்படங்களில் ஒன்றாகப் பணிபுரிந்தோம் என்பதைத் தாண்டி எங்களுக்குள் மிக அதிகமாக நேசமிருந்தது. அவர் உருவாக்கிய ஒவ்வொரு கதாபாத்திரங்களில் தன் முகம் பார்த்த மலையாளியாக இருந்தார். என்னுடைய வலிகளையும் மகிழ்ச்சியையும் குறைகளையும் அவர் மூலம் திரையில் கண்டேன். நடுத்தர வர்கத்தின் நல்ல, கெட்ட கனவுகளை ஸ்ரீனியைப் போல் வேறு யாரால் சொல்ல முடியும்? ஸ்ரீனியின் மந்திர எழுத்தால் நாங்கள் இணைந்து நடித...

செவிலியர்கள் பணியில் அரசு பாரபட்சம் காரணமாக போராடும் பணியாளர்கள் ம்

பணி நிரந்​தரமும், சம வேலைக்கு சம ஊதி​யமும் வழங்கக் கோரி சென்​னை​யில் உண்​ணா​விரதமிருந்த செவிலியர்​கள் கைது செய்​யப்​பட்​டதைத் தொடர்ந்​து, தமிழ்நாடு முழு​வதும் மருத்துவ செவிலியர்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். காலிப்பணியிடங்களே இல்லாத நிலையில் போராடுவது ஜனநாயக உரிமை அல்ல என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்.. திமுக அளித்த தேர்தல் வாக்​குறு​திப்​படி, பணி நிரந்​தரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற உயர் நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழ்நாடு அரசு செய்த மேல்​முறை​யீட்டை வாபஸ் அல்லது கைவிட வேண்​டும் என்பது உள்​ளிட்ட பல கோரிக்​கைகளை வலி​யுறுத்தி  தொகுப்​பூ​திய செவிலியர்​கள் நேற்று முன்​தினம் சென்னையில் உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.     தமிழ்​நாடு செவிலியர்​கள் மேம்​பாட்டுக் கழகம் சார்​பில் நடந்த உண்​ணா​விரதப் போராட்​டத்​தில் 750-க்​கும் மேற்​பட்ட செவிலியர்​கள்               பங்​கேற்​றதைத்​  தொடர்ந்​து, மாலை​யில் செவிலியர்களைக் கைது செய்து வாக​னத்​தில் ஏற்​றிய காவல்துறை கிளாம்​ப...

L't கர்னல் தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் ஆகியோரை இலஞ்ச வழக்கில் சி.பி.ஐ. இரவு கைது செய்தது

டெல்லியில் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தி துறையில் துணை திட்ட உயர் அலுவலராக பதவி வகிக்கும் லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் என்ற தனி நபர் ஆகிய இருவரை இலஞ்ச வழக்கில் சி.பி.ஐ. இரவு கைது செய்தது. லஞ்சம் பெற்ற வழக்கில் லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா மற்றும் வினோத் குமார் என்ற தனி நபர் ஆகியோரை மத்திய புலனாய்வு துறை (CBI) இரவு கைது செய்தது. 19.12.2025 அன்று லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் சர்மா, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஏற்றுமதி துணைத் திட்டமிடல் அலுவலர், பாதுகாப்பு உற்பத்தித் துறை, பாதுகாப்பு அமைச்சகம், சார்ந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அவரது மனைவி கர்னல் காஜல் பாலி, CO, 16 எல்ன்ஃபண்ட்ரி டிவிஷன் ஆர்ட்னன்ஸ் யூனிட் (DOU), ஸ்ரீ கங்காநகர், ராஜஸ்தான் மற்றும் பிற, துபாயைச் சேர்ந்த நிறுவனம் உட்பட குற்றச் சதி மற்றும் லஞ்சம் பெற்றது போன்றவை காரணமாக 18.12.2025. ஸ்ரீ கங்கனேஜர், பெங்களூரு, ஜம்மு மற்றும் பிற இடங்களில் தேடுதலும் நடத்தப்பட்டது. டெல்லியில் உள்ள லெப்டினன்ட் கர்னல் தீபக் குமார் ஷர்மாவின் வீட்டில் ந...

தவெகவின் நாமக்கல் (கிழக்கு) மாவட்ட ச் செயலாளர் பொறுப்பு நீக்கி ஒழுங்கு நடவடிக்கை

இரவில் மகளிரணி நிர்வாகி வீட்டிற்குச் சென்ற நாமக்கல் த.வெ.க., மாவட்டச் செயலாளரின் பொறுப்பு பறிப்பு த.வெ.க., நாமக்கல் (கிழக்கு) மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் , நள்ளிரவில் கட்சியின் மகளிரணி நிர்வாகியின் வீட்டிற்குச் சென்ற காணொளிக் காட்சி பரவியதன் காரணமாக அவரது மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரம், கூட்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிரா பானு. த.வெ.க.,நாமக்கல் கிழக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளராவார். த.வெ.க., நாமக்கல் (கிழக்கு) மாவட்டச் செயலாளராக  இராசிபுரம் செந்தில்நாதன் உள்ளார். டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி நள்ளிரவு, மகளிரணி அமைப்பாளர் முனிரா பானு வீட்டிற்கு செந்தில்நாதன் வந்துள்ளார். அவரது காரைப் பார்த்த முனிராவின் உறவினர்கள், அதிரடியாக அவரது வீட்டிற்குள் சென்று, 'நள்ளிரவில் எதற்காக இங்கு வருகிறீர்கள்' எனச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். அன்று இரவு முதல், மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை, பல்வேறு கட்சி நிர்வாகிகள் வந்து சமரசம் பேசிய பின்னர், செந்தில்நாதனை அவர்கள் விடுவித்துள்ளனர். இதை அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து, சமூக வலைதளங்களில...

தமிழ்நாடடில் நக​ராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் பணி நியமனங்​களுக்கு லஞ்சம் பெற்றதாக

தமிழ்நாடடில் நக​ராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் பணி நியமனங்​களுக்கு லஞ்சம் பெற்றதாக காவல்துறை தலைமை இயக்குனருக்கு அமலாக்​கத்​துறை அனுப்​பி​ய கடிதத்​தின் அடிப்​படை​யில் வழக்குப் பதிவு செய்து விசா​ரிக்க டிஜிபிக்கு உத்​தர​விடக் கோரி உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​ட   மனுவுக்கு தமிழ்நாடு அரசும், அமலாக்​கத்​ துறை​யும் பதிலளிக்க உயர்நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.                    மதுரை மாவட்​டம் கள்​ளிக்​குடி தாலுகா மைத்​தான்​பட்​டியைச் சேர்ந்த மருது சேனைத் தலைவர் கே. ஆ​தி​நா​ராயணன் ,உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​த மனு​வில், “தமிழ்நாட்டில் 2024-25-ஆம் ஆண்​டில் நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில் உதவிப் பொறி​யாளர், இளநிலைப் பொறி​யாளர், சுகா​தார ஆய்​வாளர் உள்​ளிட்ட 2,538 பணி​யிடங்​களும் நிரப்​பப்​பட்​டுள்​ளதில் ஒரு பதவிக்கு ரூபாய்.25 லட்​சம் முதல் 35 லட்​சம் வரை மொத்​தம் ரூபாய்.634 கோடி லஞ்​ச​மாக பெறப்​பட்​டுள்​ள​தாகக் கூறி அதற்​கான ஆதா​ரங்​களு​டன் தமிழ்நாடு டிஜிபிக்கு அ...

ரூபாய் 220 வீட்டு வரி ரசீதுக்கு 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி எழுத்தரான செயலாளர் கைது

ரூபாய் 220வீட்டு வரி ரசீதுக்கு 3,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி எழுத்தரான செயலாளர் கைது புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி நடவடிக்கை.  புதுக்கோட்டை மாவ ட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் தச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாண்டீஸ்வரி (வயது 37). கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளவர், நேற்று முன்தினம் தச்சம்பட்டி ஊராட்சி அலுவலகம் சென்று வீட் டுவரி ரசீது தரும்படி கேட்டுள்ளார். அப் போது அங்கிருந்த ஊராட்சிச் செயலாளர் ஆறுமுகம் (வயது 50), வீட்டு வரி ரசீதுக்கு 220 ரூபாய் வந்துள்ளது. அதற்கு ரூபாய்.3,000 லஞ்சம் கொடுக்க வேண்டுமெனக் கேட் டுள்ளார். இதில் லஞ் சம் கொடுக்க விரும்பாத தாண்டீஸ்வரி, இதுபற்றி புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் தறையில் புகார் கொடுத்தார். பின்னர் காவல்துறை ஆலோசனையின் பேரில், பனாப்தலீன் ரசாயனப் பொடி  தடவிய ரூபாய்.3,000 த்துடன் தாண்டீஸ்வரி நேற்று காலை தச்சம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் சென்று அங்கிருந்த ஆறுமுகத்திடம் லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திரு...