ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் உயர் அலுவலர்கள் பணி இடமாற்றம் அதில் , 3 காவல்துறை உதவி இயக்குனர்கள் , 7 காவல்துறை தலைவர் கள், 3 காவல்துறை துணைத் தலைவர்கள், 15 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 2 கூடுதல் கண்காணிப்பாளர்கள்உள்ளிட்ட 30 பேருக்கு தமிழ்நாடு அரசு பணியில் உயர்வு வழங்கி உத்தரவிட்டது. அதனடிப்படையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் செயலாளராக இருந்த ஐஏஎஸ் சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையர் பழனிசாமி கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராகவும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை ஆணையர் கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராகவும், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கிரண் குராலா, போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்புத்துறை ஆணையராகவும், அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் தேவ் ராஜ் தேவ், தமிழ்நாடு உப்பு நிறுவன முதன்மைச் செயலாளராகவும், வ...
திருத்தணி ரயிலில் 'ரீல்ஸ்' இளைஞர்கள் மற்றொரு இளைஞனை வெ..ட்டிய கொடூரம். தமிழ்நாடு எல்லாவற்றிலும் முன்னேறிய மாநிலம். அதில் மாற்றுக் கருத்து யாருக்குமில்லை அண்மை காலமாக நடக்கும் சம்பவங்களை ஒரே நேர்கோட்டில் வைத்துப் பார்த்தால் எல்லாவற்றிற்கும் முடிவு விரைவில் வந்து விடும் போலிருக்கிறது.. குற்றம் செய்து பிடிபடும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், காவல்துறையினரையும் நீதித் துறையையும் இளக்காரமாக நினைக்கிறார்கள், கேலியாகப் பேசுகிறார்கள். அவர்களிடம் எதைப் பற்றியுமே பயமில்லை. "அடிக்கப் போறியா எவ்வளவு வேணாலும் அடிச்சுக்கோ. நீ அடிச்சு நான் செத்து போயிட்டா எனக்கு ஒன்னுமில்ல. நீ தான் பின்னாடி மாட்டிகிட்டு சாவே" என்று சாதாரண மாகக் சொல்கிறார்கள்.. "இந்தக் குற்றத்தைச் செய்தால், இங்கே சரணடைய வேண்டும். இத்தனை நாளில் ஜாமீன் கிடைத்துவிடும், சட்டம் நம்மைத் தண்டிக்காது சாட்சிகள் சொல்ல யாரும் வரமாட்டார்கள் இந்த அளவுக்குத் தான் தண்டிக்க முடியும், அதுக்கே கூட ஏகப்பட்ட வருஷங்களாகும்" போன்றவை தெள்ளத்தெளிவாக அடித்தளத்தில் வாழும் இளைய தலைமுறையினர் மண்டையில் கடந்த பத்து ஆண்டுகளில் தவறான போத...