முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொது வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் வெளியீடு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பொது வைப்பு நிதி கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் வெளியீடு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த குடிமைப் பணி (அகில இந்திய சேவை) அதிகாரிகள், தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள், தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய, நகராட்சி தொடக்க பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், சென்னை மற்றும் மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகியோருக்கான 2025-2026-ம் ஆண்டுக்கான பொது வைப்பு நிதி மற்றும் ஆசிரியர் வைப்பு நிதி ஆகியவற்றுக்கான ஆண்டு கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் இன்று (2026 மே 25) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தின் https://cag.gov.in/ae/tamil-nadu/en என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சந்தாதாரர்கள்/அதிகாரிகள் தங்களது கணக்கு விவரப் பக்கத்தில் ஆண்டு கணக்கு அறிக்கையினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதளத்தில் தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்துள்ள அதிகாரிகள் மற்றும் சந்தாதாரர்களுக்கு இது குறி...
சமீபத்திய இடுகைகள்

பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார்

பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் குடியரசுத்தலைவர் பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (மே 25, 2026)  நடைபெற்ற பத்ம விருது வழங்கும் முதற்கட்ட விழாவில் 2026-ம் ஆண்டிற்கான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேருக்கு 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார் புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (25.05.2026) நடைபெற்ற  விருது வழங்கும் விழாவில், 2026-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு  வழங்கினார்.  பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை வழங்கிய தமிழ்நாட்டைச் சேரந்த ஏழு பேருக்கு பத்மவிருதுகள் வழங்கப்பட்டன. மருத்துவத் துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, புகழ்பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் கல்லிப்பட்டி ராமசாமி பழனிசாமி பத்ம பூஷன்  விருது பெற்றார். நாற்பது ஆண்டுக...

பெங்களூரில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கிஷண் ரெட்டி அறிவுரை

நிலுவையில் உள்ள சுரங்கம் மற்றும் ஆய்வுத் திட்டங்களை விரைந்து நிறைவுசெய்யுமாறு மத்திய அமைச்சர்  கிஷண் ரெட்டி அனைத்து முகமைகளுக்கும் அறிவுறுத்தல் நாட்டின் கனிமப் பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த வளர்ச்சி நோக்கங்களை வலுப்படுத்தும் வகையில், நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து நிறைவு செய்யுமாறு அனைத்து சுரங்கம் மற்றும் ஆய்வு முகமைகளுக்கு மத்திய நிலக்கரி மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் திரு கிஷண் ரெட்டி  அறிவுறுத்தியுள்ளார். இந்தியப் புவியியல் ஆய்வு மையம், தேசிய பாறை இயக்கவியல் நிறுவனம், இந்தியச் சுரங்கப் பணியகம் மற்றும் தொலை உணர்வு மற்றும் வான்வழி ஆய்வுப் பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் பெங்களூரில் நடைபெற்ற தொடர் உயர்மட்ட ஆய்வுக் கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார். தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் ஆகியவை ஒவ்வொரு நிறுவனச் செயல்முறையின் அடித்தளமாக அமைவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இத்துறையில் செயல்படும் ஒவ்வொரு முகமையிடமிருந்தும், மக்களும் மத்திய அரசும் விரைவு, பொறுப்புடைமை உண்மையான விளைவுகள் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றனர் என்று கூறினார். வளர்ச்...

கனிமச் சுரங்கங்கள் ஏலம் மற்றும் செயல்பாட்டு நிலவரம் குறித்து சுரங்கத்துறைச் செயலாளர் ஆய்வு

கனிமச் சுரங்கங்கள் ஏலம் மற்றும் செயல்பாட்டு நிலவரம் குறித்து சுரங்கத்துறைச் செயலாளர் ஆய்வு மத்திய சுரங்கத்துறை செயலாளர் திரு பியூஷ் கோயல் இன்று அமைச்சகத்தின் உயரதிகாரிகள் மற்றும் ஏ- வகை கனிம வளம் நிறைந்த மாநிலங்களின் அதிகாரிகளுடன் இணைந்து, 9-வது மாதாந்திர ஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். நாடு முழுவதும் கனிமச் சுரங்கங்கள் ஏலம் விடுதல் மற்றும் அவற்றைச் செயல்பாட்டிற்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சுரங்கத்துறையில் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துதல், உள்நாட்டு கனிமவள உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் ஏலம் விடப்பட்ட கனிம சுரங்கங்களை உரிய நேரத்தில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதை உறுதி செய்தல் ஆகியவை குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. 2015-ம் ஆண்டில் ஏல முறை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, 2015-16 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 108 கனிமச் சுரங்கங்கள் வெற்றிகரமாக ஏலம் விடப்பட்டது குறித்து இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதன்பிறகு ஏலங்களின் வேகம் கணிசமாக அதிகரித்தது. 2021-22 நிதியாண்டு ம...

நீட் மறுதேர்வை சுமூகமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த மத்திய அமைச்சர் கடிதம்

 நீட் மறுதேர்வை சுமூகமா கவும் பாதுகாப்பாகவும் நடத்த மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சர்  தர்மேந்திர பிரதான் வரும் ஜூன் 21, 2026 அன்று நடைபெறவுள்ள இளநிலை நீட் மறுதேர்வை சுமூகமாகவும், நேர்மையாகவும், வெற்றிகரமாகவும் நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுக்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார். தற்போது நிலவி வரும் கடுமையான வெயில் மற்றும் வெப்ப அலையைக் கருத்தில் கொண்டு, தேர்வெழுதும் மாணவர்களின் வசதிக்காகவும் நலனுக்காகவும் தேர்வு மையங்களில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உறுதி செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அமைச்சர் தமது கடிதத்தில், தேர்வு மையங்களாகச் செயல்படும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பான குடிநீர், போதிய இருக்கை வசதிகள், மின்விசிறிகள்/கூலர்கள், தூய்மையான கழிவறைகள், நிழற்கூரையுடன் கூடிய காத்திருப்புப் பகுதிகள், தடையற்ற மின்சாரம் ஆகிய அத்தியாவசிய வசதிகள் இருப்பதை உறுதி செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு உரிய ...

மூன்று சட்டமன்ற அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமாவும்,நடப்பு அரசியல் களமும்

அதிமுக போட்டி அணி சட்ட மன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயகுமார் ஆகிய மூவர் ராஜினாமா. செய்தனர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர், பெரும்பான்மைக்காக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் உள்ள தவெக அதிமுக வை உடைத்தது  21-நாட்களில் ராஜினாமா.செய்தனர் சட்டமன்ற உறுப்பினர் பதவி கட்சி கொறாட முடிவாகாத நிலையில் உத்தரவை மீறியதாகக்  கூற முடியாவிட்டாலும் வாக்களித்த அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியுள்ளனர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர். இந்த மனு சபாநாயகர் பரிசீலனையில் உள்ள நிலையில் 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுள்ளார் . வரும் காலங்களில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர் கோரிக்கை சபாநாயகரால் ஏற்கப்பட்டால் இராஜினாமா செய்த மூவரும் 10 ஆம் அட்டவணைப்படி சட்டமன்ற உறுப்பினராக தகுதி இழப்பார்களா ? தகுதி இழப்பை தவிர்க்கவேமுன் கூட்டியே இந்த இராஜினாமாவா?  என்பது தெரியவில்லை. தவெக கட்சி ,விசிக வை முழுமையாக நம்பவில்லை! இன்னும்...