முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடியாக சேர்த்த ரூபாய்.18.10 கோடி சொத்துக்களை ED முடக்கம்.

அரசு நிலத்தை அரசுக்கே விற்று மோசடியாக சேர்த்த ரூபாய்.18.10 கோடி சொத்துக்கள் முடக்கம். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும், 'சிப்காட்' விரிவாக்கத்திற்கு, அரசு நிலத்தை கையகப்படுத்திய போது அதை தனிநபர்கள் அரசுக்கே விற்று இழப்பீடு பெற்றதில் நடந்த மோசடி மற்றும் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் - தொடர்பாக, 15 இடங் களில் சோதனை நடத்தி, 18.10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை            அமலாக்கத்துறை அலுவலர்கள் முடக்கி உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத் தில், சென்னை பெங் களூரு தேசிய நெடுஞ் சாலை விரிவாக்கத்திற்கு, பீமந்தாங்கல் கிராமத்தில், அரசு அனாதீன நிலங் களுக்கு முறைகேடாக பட்டா பெற்று, அவற்றை அரசுக்கே விற்று, 33 கோடி ரூபாய் இழப்பீடு பெறப்பட்டு உள்ளது. நெமிலி கிராமத்தில், அதேபோல் 2.24 லட்சம் சதுரடி உடைய ஓ.எஸ். ஆர்., எனப்படும், அரசு நிலங்களுக்கு, பத்திரம் பதிவு செய்து வடகால் கிராமங்களில், 'சிப்காட்' தொழிற்சாலை பகுதியில் உள்ள, ஓ.எஸ்.ஆர். நிலங்களுக்கு, பத்திரம் தயாரித்தும், 21 கோடி ரூபாய் மோசடியாக போலியான ஆவணங்கள் மூலம் பெறப்பட் இழப்பீடு டுள்ளது. வி ஜி பி ஹவுசிங் டெவலப...
சமீபத்திய இடுகைகள்

ஜி எஸ் டி (நுன்னறிவு) புலனாய்வு அலுவலர்கள் அமைச்சர் ஐ. பெரியசாமி உறவினர் வீடு நிறுவனங்களில் சோதனை

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஐ. பெரியசாமியின் இல்லம், அவரது மகனும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் வீடு, மகள் இந்திரா வீடு மற்றும் 3 வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்திய நிலையில், தற்போது அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திரா வசித்து வரும் இல்லத்திலும்  துப்பாக்கி ஏந்திய  காவல்துறை பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் 5 பேர் சோதனையில் ஈடுபட்டனர்.  மேலும் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகனும், திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் இல்லத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.  வத்தலகுண்டு அருகே, தமிழ்நாடு உள்ளாட்சி ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் பின்னலாடை நிறுவனத்தில் ஜி.எஸ்.டி., நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை நடத்தினர். மகள் வீட்டிலும் சோதனை நடந்தது.அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகன் துவாரகநாதன் என்பவருக்கு சொந்தமான ஜவுளி பின்னலாடை நிறுவனம் வத்தலகுண்டு அடுத்த, கே.சிங்காரக்கோட்டை அருகே, ஒட்டு...

பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமன வழக்கு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதிக்கு தடை விதிக்காமல் தள்ளி வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர் நியமன சட்டமன்ற மசோதா  தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை நீக்க வேண்டும் என  தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிடப்பட்டது.  தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமனம் செய்ய மாநில வேந்தரான ஆளுநருக்குப் பதில், மாநில அரசே முதல்வரே நியமிக்கும் மசோதா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் தரப்பில் ஒப்புதல் வழங்கபடாமல் இருந்தது. இதனையடுத்து இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்து உத்தரவிட்டது. மேலும் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. இதனிடையே, துணைவேந்தர் நியமனம் தொடர்பான சட்டத்தை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டது. இது பல்கலைக்கழக மானியக் குழுவின் UGC விதிகளுக்கு எதிராக இருப்பதாக வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ...

தமிழ்நாடு அரசு வழக்கில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது- உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இயற்றிய மசோதக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், மற்றும் ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்த உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் மீது 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 111 பக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா,  ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு  ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டதில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் அதேபோல் மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.  ஆனால் உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை கேள்வி கேட்கும் வகையில் மே மா...

பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்.

குடியரசுத் தலைவர் நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 20-ம் தேதி, சத்தீஸ்கர் அரசு அம்பிகாபூரில் ஏற்பாடு செய்துள்ள பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி, ஷெகந்திராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் நடைபெறும் பாரதிய கலா மஹோத்சவ் 2025 விழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவின் இரண்டாவது பதிப்பில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா, தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளமான கலாச்சாரம், உணவு மரபுகள் மற்றும் கலை பாரம்பரியங்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட உள்ளன. நவம்பர் 22 ஆம் தேதி, புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நடைபெறும் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடி...