திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது DVAC முறைப்படி வழக்குப்பதிவு செய்துள்ளது. அமலாக்கத்துறை (ED) வழங்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்தத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.: கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது, நகராட்சி ஒப்பந்ததாரர்களிடம் மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது இந்த டெண்டர் முறேகடு மற்றும் கட்சி நிதி என்ற பெயரில் சுமார் ரூபாய் 1,020 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது கே.என்.நேருவின் சகோதரர் இரவிச்சந்திரன் லஞ்சப் பணம் கைமாறுவதைக் கண்காணித்ததாகவும், மற்றொரு சகோதரர் மணிவண்ணன் அந்தப் பணத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை வகித்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்படுவதற்கு முன்னதாக, திருச்சிராப்பள்ளி மற்றும் சென்னையில் உள்ள கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடிச் சோதனை நடத்தியது. ...
இந்தியத் தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 1 நாடாளுமன்றத் தொகுதி என மொத்தம் 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதன்படி, 6 அக்டோபர் 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில், நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத மதுராந்தகம் தனி மற்றும் தாராபுரம் தனி ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய தேர்தல் (அட்டவணை): தேர்தல் அறிவிப்பாணை மற்றும் வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம் செப்டம்பர் 9, 2026 வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் செப்டம்பர் 17, 2026 வேட்புமனுக்கள் பரிசீலனை செப்டம்பர் 18, 2026 வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 19, 2026 வாக்குப்பதிவு நடைபெறும் நாள் அக்டோபர் 6, 2026 வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 9, 2026 இடைத்தேர்தல் நடக்கும் பிற தொகுதிகள்: பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி மற்றும் மேற்கு வங்கம்: ரெஜினா Block மற்றும் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதிகள் அஸ்ஸ...