மத்தியப் புலனாய்வுப் பிரிவான சிபிஐ-யில் இணை இயக்குனராகப் பணியாற்றிய மூத்த ஐபிஎஸ் அதிகாரி வித்யா ஜெயந்த் குல்கர்ணி (IPS:1998:TN), மே 25, 2026 அன்று மத்திய அமைச்சரவை நியமனக் குழுவின் ஒப்புதலுடன் முன்கூட்டியே சொந்த மாநிலமான தமிழ்நாடு பணிக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். அதிகாரப்பூர்வ காரணம் 'தனிப்பட்ட காரணங்கள்' (personal grounds) என்று கூறப்பட்டாலும், புதிதாக பதவியேற்றுள்ள முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, தனது நிர்வாகத்தை வலுப்படுத்தும் ஒரு மூலோபாய நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தற்போது DVAC இயக்குநரான சி. மகேஸ்வரிக்கு பதிலாக, இவரை டி.வி.ஏ.சி இயக்குநராக நியமிக்க அரசு திட்டமிடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரியான வித்யா ஜெயந்த் குல்கர்ணி, 2026-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசில் கூடுதல் இயக்குநர் பதவிக்கு தகுதி பெற்றவர். சிபிஐ-யில் இணை இயக்குனராகப் பணியாற்றிய காலத்தில், பஞ்சாயத்து ஒதுக்கீடு மற்றும் நிரவ் மோடி வழக்கு உள்ளிட்ட உயர்மட்ட ஊழல் வழக்குகளை விசாரித்த குழுவில் இருந்தவர். மேலும், 2024-ஆம் ஆண்டு கு...
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் நடத்தி, மாநிலம் முழுவதுமுள்ள நூற்றுக்கணக்கான பள்ளி நிர்வாகிகளிடம் மாவட்ட சங்கம் அமைத்து அரசு அங்கீகாரம் மற்றும் தடையின்மைச் சான்றுகள் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து ஏமாற்றிய குற்றச்சாட்டில், அதன் தலைவர் பி.டி. குமார் என்ற அரசகுமாரை சமீபத்தில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக் காவல்துறையினராரால் கைது செய்யப்பட்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது இந்த நிலையில், சென்னை காவல்துறையின் தீவிர விசாரணையில் வெளிவந்துள்ள புதிய தகவல்கள படி தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. கைது செய்யப்பட்ட பி.டி. அரசகுமாரிடம் மத்திய குற்றப்பிரிவு சிறப்புப் படை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையின் போது, அவர் வாங்கிய லஞ்சப் பணம் எங்கு சென்றது, யாருக்கெல்லாம் கைமாறியது என்பது குறித்த பல திடுக்கிடும் தகவல் மற்றும் ஆவணங்களும் கணக்கு விவரங்களும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தர உயர்வு, மற்றும் DTCP/CMDA சான்றிதழ்கள் போன்ற சட்டப்பூர்வ அனும...