சர்க்கரை விலை உயர்வைத் தடுக்கவும், பண்டிகைக் காலங்களில் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை சர்க்கரையின் விலை, 20 ஜூலை 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 48.18 ஆக இருந்த நிலையில், 20 ஆகஸ்ட் 2026 அன்று ஒரு கிலோவுக்கு ரூ. 55.70 ஆக உயர்ந்துள்ளது. அரசு நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், நுகர்வோருக்குப் போதுமான சர்க்கரை கிடைப்பதையும் நிலையான விலையையும் உறுதி செய்வதற்காகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சமீபத்திய சர்க்கரை விலை உயர்வுக்கு, எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை திசை திருப்பப்படுவதைக் காரணம் காட்டுவது தவறானது. உண்மையில், எத்தனால் தயாரிப்பிற்காகத் திருப்பிவிடப்படும் சர்க்கரையின் பங்கு, 2022-23-ல் சுமார் 12% ஆக இருந்ததிலிருந்து, 2025-26-ல் சுமார் 9% ஆகக் குறைந்துள்ளது. மேலும், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலில் கிட்டத்தட்ட முக்கால் பங்கு இப்போது தானியங்களிலிருந்தே, குறிப்பாக மக்காச்சோளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர்பார்த்ததை விடக் குறைவான உள்நாட்டு உற்பத்தி, பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக அதிகரித்த தேவை, கரும்புப் பயிரில் வானில...
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் எம்.சாய்குமாரின் பணிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அளித்துள்ள இந்த அனுமதியின்படி, செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி 2026 முதல் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி , 2027 ஆம் ஆண்டு வரை அவர் தொடர்ந்து தலைமைச் செயலாளராகப் பதவியில் இருப்பார். பதவி நீட்டிப்பு பதவிக் காலம் 6 மாதங்கள் கால வரம்பாக 01.09.2026 முதல் 28.02.2027 வரைஅதிகாரப்பூர்வ உத்தரவை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) அனுமதியை வழங்கியுள்ளது.தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, அகில இந்திய பணி விதிகளின் கீழ் (AIS Rules, 1958) ன் படி இந்த சேவை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.