இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாயமில்லை என்பதால் முன்கூட்டியே பின்வாங்கல் நடவடிக்கை என்பதே உண்மை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக தவெகவின் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுவதில், பங்கேற்க தவெக ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சூழலில் தான், நாளைய தவெக கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார் தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்திற்கு நாங்கள் போகப்போவதில்லை என- சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கூறியுள்ளார், தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து அதே கருத்து பாலகிருஷ்ணன் கூறிய நிலையில் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி விலகல் என்றே கருதலாம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவைப் பற்றி பேசும் போது திடீரென, “இன்றைக்கு கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயளாளர் சண்முகம், முதல்வரின் பதிவை தவறான பார்வையில் புரிந்து கொண்டுள்ளார். அதற்க...
கள்ளக்குறிச்சி விஷச்சாராயச் சாவு 67 அலட்சியம் குறித்து கோகுல்தாஸ் விசாரணை ஆணையம் அறிக்கை !, "மெத்தனால் கசிவைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளே இந்த சராய சாவுக்கு காரணம்" - 12 பேர் மீது துறை ரீதியான விசாரணைக்கு பரிந்துரை; கல்வராயன் மலையில் தனி மதுவிலக்கு படை அமைக்கவும் பரிந்துரை! சென்னை, 2024-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கருணாபுரத்தில் நிகழ்ந்த கொடூர கள்ளச்சாராய சம்பவத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பி. கோகுல்தாஸ் தலைமையில் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை இன்று செப்டம்பர் .8 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காவல்துறை, மதுவிலக்கு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளின் அலட்சியமும், கடமை தவறிய போக்குமே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என அந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது 2024-ஆம் ஆண்டு ஜூன் 19 மற்றும் 20-ஆம் தேதிகளில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷ நச்சுச் சாராயத்தை அருந்தியதில் 67 பேர் உயிரிழந்தனர். மேலும் 161 பேர் பாதிக்கப்பட்டனர். இந்தச்சம்பவம...