நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அசோக் சரவணன் சிவில் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரி, தனக்கு நிச்சயம் செய்த பெண்ணுக்காக சந்திரமண்டலமான நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக ஒரு வைரல் செய்தி தற்போது பேசப்படுகிறது. மதுரை ராதிகா வர்ஷிணியுடன் இவருக்குத் திருமணம் நிச்சயமாகியுள்ளது. தனது நிச்சயம் ஆன எதிர்கால மனைவிக்கு வித்தியாசமான ஒரு பரிசு அசோக், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் மூலமாக நிலவில் ஒரு ஏக்கர் சந்திரப்பரப்பை 23,000 செலுத்தி வாங்கியுள்ளதாகவும், அதற்கான உரிமைச் சான்றிதழையும் அவர் பெற்றுள்ளதாகவும் இந்த விவகாரம் குறித்து அறிவியல் அறிஞர்கள் மற்றும் வின்வெளி மையங்கள் பின்வரும் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளனர், சர்வதேச விண்வெளி ஒப்பந்தம் (Outer Space Treaty - 1967) ஐநா சபையின் 1967 விண்வெளி ஒப்பந்தத்தின்படி, பிரபஞ்சத்தில் உள்ள பொது வெளி நிலா அல்லது எந்தவொரு கோள்களும் ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொதுவானதில் எந்தவொரு நாடோ, உலக அரசாங்க அமைப்போ அல்லது தனிநபரோ சொந்தமாக உரிமை கொண்டாட எந்த விதமான சட்டப்பூர்வமாக அனுமதியில்லை. இந்தியா உட்பட 100-க்கும் ...
நேபாளத்தில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கைகளில் இதுவரை 149 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் பட்டியல் வெளியான நிலையில் நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளப் பேரிடரில் சிக்கி இந்தியர்கள் உயிரிழந்ததை அந்நாட்டு ஜனாதிபதி ராம் சந்திர பௌதெல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 26, 2026 அன்று நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட இந்த கோர வெள்ளத்தில், இதுவரை 626-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மாயமாகியுள்ளனர். நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌதெல் தனது சமூக வலைத்தளப் பதிவில், பேரிடரில் இந்தியர்களின் உயிர் பறிபோனதற்கு இந்திய அரசுக்கும், மக்களுக்கும் நேபாளத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டான இந்தச் சூழலில் இந்தியா உடனடியாக இந்திய விமானப்படை மூலம் 57 டன்னுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் மற்றும் 11 பேர் கொண்ட மருத்துவ மற்றும் சுரங்க மீட்புக் குழுவினரை அனுப்பி உதவியதற்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி ம...