நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் லஞ்சம் வாங்கிய காவல் சார்பு ஆய்வாளர் கைது. தனிநபர் மீதான குற்ற வழக்கை அவருக்கு சாதகமாக முடித்து வைக்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நாமக்கல் மாவட்டம் நல்லூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கெங்காதரன், (வயது 47), ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அருகில் நல்லுார் பக்கம் நடந்தை சாலப்பாளையத்தைச் சேர்ந்த சௌமியாராஜ், வயது 30; விவசாயம் செய்து வருகிறார். அவரது நிலத்தின் பக்கத்து நிலத்துக்காரர் முத்துசாமியுடன், நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அடிதடி வாய்த் தகறாறு ஏற்பட்ட காரணமாக, நான்கு மாதங்களுக்கு முன், நல்லூர் காவல் நிலையத்தில் புகார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்பாக, சில தினங்களுக்கு முன், சௌமியாராஜை அழைத்த காவல்துறை சார்பு ஆய்வாளர் கெங்காதரன், வழக்கை சாதகமாக முடித்து வைக்க, 30,000 ரூபாய் லஞ்சமாகத் தரும்படி கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத சௌமியாராஜ், நாமக்கல் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் செய்தார். அவர்கள் அறிவுரையின் படி, நேற்...
தமிழ்நாடு சினிமா ரசிகர்கள் மூலம் கேப்டன் என வர்ணிக்கப்பட்டு, பார்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியை உடைத்த அதிமுகவின் ஜெ ஜெயலலிதா தற்போது அதே பாணியைக் கையில் எடுத்த தவெக முதல்வர் சி. ஜோசப் விஜய் 2011 சட்டமன்ற தேர்தலில் வென்று எதிர்க்கட்சி தலைவரான விஜயகாந்த் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை பகைத்துக் கொண்டார். இதனால் தேமுதிகவே இரண்டானது. குறிப்பாக கட்சியை விட்டு விலகிய 11 எம்.எல்.ஏ.க்கள் விஜயகாந்தை சட்டமன்றத்திலேயே எதிர்த்துப் பேசி அவமதித்தனர். தற்போது அதே பாணியைக் கையில் எடுத்துள்ள தவெக தலைவர் முதல்வர் சி. ஜோசப் விஜய், அதிமுகவில் தற்போது அதிருப்தியில் உள்ள எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் டீமை இபிஎஸுக்கு எதிராக பேச தயார் படுத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதன் மூலம் கட்சியிலும், மக்களிடமும் எடப்பாடி கே பழனிசாமி மீது அதிருப்தி அதிகரிக்கும் என்றும், அவரைத் தனிமைப்படுத்தவும் தவெக டீம் திட்டமிட்டுள்ளதாகப் தகவல் பரவலாக பேசப்படுதிறது, .தவெக பொதுச் செயலாளரும் உள்ளாட்சி மற்றும் ஊரகவளர்சித்துறை அமைச்சருமான புஸ்ஃஸி என். ஆனந்த் முன்னிலையில் தவெகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகளின் பட...