தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு. மாநில தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் இடமாற்ற உத்தரவுகளை வெளியிட்டார்.மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் : ஜெ.ராதாகிருஷ்ணன்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவராக இருந்தவர், தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். வி.அருண் ராய்: தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்தவர், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.தீரஜ் குமார்: உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளராக இருந்தவர், தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக இடமாற்றப்பட்டுள்ளார். காகர்லா உஷா: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைச் செயலாளராகப் பொறுப்பக்குச் செல்கிறார்.பிரதீப் யாதவ்: தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார். அதுல் ஆன...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை ஜூலை மாதம் 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகில் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரக் காவல்துறை வழக்கை விசாரித்து, ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கவே இந்தக் கொலை நடந்ததாக தெரிவித்தது. இந்த வழக்கில் அஸ்வத்தாமன், பொன்னா பாலு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல்துறை சார்பில் 7,000 பக்கங்களுக்கும் மேல் வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முறையான விசாரணைக்காக சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, முந்தைய திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடையும் பெற்றது. இந்த நிலையில் முக்கியத் திருப்பமாக ஜூலை 2026 நிலவரப்படி தமிழ்நாடு அரசியல் சூழல் மாற்றங்கள...