முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

வியட்நாம் படகு விபத்து பாரதப் பிரதமர், தமிழ்நாடு முதல்வர் இரங்கல்

வியட்நாமின் ஃபூ குவோக் தீவு அருகில் இந்தியச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்த விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்ததாக வியட்நாமிலுள்ள இந்தியத் தூதரகம் நேற்று தெரிவித்தது. இந்த விபத்துக்கு பிரதமர் நரேந்திர மோதி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்து நபர்கள் பலியானதாகவும், கேரளத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் பலியானதாகவும் இந்தியத் தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது அதிகாரிகள் தரப்பு முதல்கட்ட தகவல்களின்படி, 32 சுற்றுலாப் பயணிகள், சில பணியாளர்களை ஏற்றிச் சென்ற அந்த அதிவேகப் படகு கவிழ்ந்தது. அதில் 23 பேர் கரைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏஜி 26751 என்ற பதிவு எண் கொண்ட இந்த அதிவேகப் படகு, 'மின் ஹுய் ஃபூ குவோக் டிரேடிங் அண்ட் டூரிசம் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திற்குச் சொந்தமானது. வியட்னாமில் நடந்த படகு விபத்தில் திருச்சிராப்பள்ளி, பழநி, தர்மபுரி, சேலம், வேலூரை சேர்ந்த 7 பேர் பலியாகினர். திருச்சிராப்பள்ளி கிராப்பட்டி அருணாசலம் நகர்...
சமீபத்திய இடுகைகள்

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டம்

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா டிசம்பர் மாதம் நாடு திரும்பி நீதிமன்றத்தில் சரணடையத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார், 1971- ஆம் ஆண்டு வங்காள தேச விடுதலைப் போரில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உயர் நீதிமன்றம் மீண்டும் கொண்டு வந்தது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந்த சூழலில், தகுதி அடிப்படையிலேயே அரசு வேலைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறி பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி, பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சுமார் 1,400-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரும்புக்கரத்துடன் ஆட்சியிலிருந்த பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை, சில வாரங்களில் மாணவர்கள் நடத்திய போராட்டம்  வீழ்த்தியது. பிரதமர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சி செய்ததால், தனி விமானத்தில் பயணித்து இந்தியாவில் தஞ்சமடைந்தார் ஷேக் ஹசீனா.மாணவர் போராட்டங்களின் போது, அவர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதாகக் கூறி, ...

வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதத்துக்கு முன்பாகவே பாடப்பட வேண்டும் உள்துறை அமைச்சகம் உத்தரவு.

மத்திய மற்றும் மாநில அரசு நிகழ்ச்சிகளில் முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடல் பாடப்பட வேண்டும். அதன்பிறகு தான் தேசியக்கீதம் பாட வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவு.  அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டுதல் நெறிமுறைகள்  ‘வந்தே மாதரம்’ பாடலை தேசிய கீதத்துக்கு முன்பாகவே பாடப்பட வேண்டும் என உள்துறை அமைச்சகம்  உத்தரவு. தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நடத்திவைத்த முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் அமைச்சரவை பதவியேற்பு விழா மற்றும் சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலில் 'வந்தே மாதரம்' தேசியப் பாடலும், அதன்பிறகு தேசிய கீதமும், பிறகு தமிழ் தாய் வாழ்த்தும் முறையாகப் பாடல்கள் இசைக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தான்  மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவில் அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்', தேசிய கீதம் மற்றும் மாநில மொழிப்பாடல்கள் பாடுவது தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் நெறிமுறையை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் ஆளுநர் அலுவலங்...

5 தொகுதி நீதிமன்றம் விதித்த தடை காரணமாக மீதமுள்ள இரண்டு தொகுதி தேர்தல் பரிட்சை நடக்கும் நிலை

தேர்தல் மனுக்கள் நிலுவையில் உள்ளதால், ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை திருச்சிராப்பள்ளி (கிழக்கு), பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தாலும், அவர்களது வெற்றியை எதிர்த்து தேர்தல் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது ஒரு தொகுதிக்கு இரண்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படும் அபாயத்தைத் தவிர்க்கவும், வரிகள் செலுத்துவோரின் பணத்தை வீணாக்காமல் இருக்கவும் இந்தத் தடை அவசியமென நீதிமன்றம் கருத்து. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அறிவிப்பதிலிருந்து, சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தது. திருச்சிராப்பள்ளி கிழக்கு, பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை மற்றும் கரூர் ஆகிய தொகுதிகளில், வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்தாலும், அவர்களது வெற்றியை எதிர்த்து தேர்தல் மனுக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற...

HR & CE சட்டம் பிரிவு 8(2) 1(a) படி 1.4.1960 ற்கு முன் 60 ஆண்டு காலம் அதை அனுபவிப்பவர்கள் நிபந்தனையின்றி பட்டா பெறலாம்.

தமிழ்நாடு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டுத் ஸ்தலங்கள் மட்டுமல்ல, அவை தமிழர்களின் கலை, பண்பாடு, வாழ்வியல் மற்றும் கலாச்சாரம் கலந்த பொருளாதாரத்தின் உன்னத அடையாளங்களாகும். இத்தகைய போற்றுதலுக்குரிய திருக்கோவில்களின் வருமானத்தில் இருந்து, ஹிந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாகச் செலவுகளுக்காக ஆண்டுதோறும் பன்னிரண்டு சதவீதத்தை நிர்வாகக் கட்டணமாக வசூலிக்கிறது. இந்தத்தொகை, 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையச் சட்டத்தின் பிரிவு 96-ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'ஹிந்து சமய மற்றும் அறக்கட்டளைகளின் நிர்வாக நிதி' என்ற கணக்கில் சேர்க்கப்படும். நிதியை ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையரே முழுமையாக நிர்வகிக்கிறார்.  HR & CE சட்டம் வகுத்துள்ள விதிகளின்படி, இந்த நிதியைக் கொண்டு துறையின் அன்றாடச் செலவுகள், அலுவலர்கள் மற்றும் பணி ஊழியர்களின் ஊதியங்கள், இதர சலுகைகள் போன்ற நிர்வாக ரீதியான செலவினங்களை மட்டுமே மேற்கொள்ள முடியும்; வேறு எந்தவொரு காரியத்திற்கும் இதைப் பயன்படுத்த சட்டத்தில் இடமில்லை. ஆனால், கடந்த காலங்களில் இந்த நிர்வாக நிதி அதன் உண்மையான நோக்கத்தை மீறி, சட்டத்...