மே மாதம் 4 ஆம் தேதி ,2026 அன்று 17 வது தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான முடிவுகளை ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் வழங்கி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 மே மாதம் 5, 2026 முதல் அமலுக்கு வரும் வகையில் 16வது தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவையை ஆளுநர் கலைத்துள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவையை வரவழைப்பதன் மூலம் அடுத்த அரசியலமைப்புச் சட்டச் செயல்முறை இப்போது தொடங்கும். எம்.எல்.ஏ.க்கள். உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்த பிறகு, சட்டசபை அதன் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்கும். இதைத் தொடர்ந்து, சபையில் பெரும்பான்மை ஆதரவைக் கோரும் கட்சியோ அல்லது கூட்டணியோ, தேவைப்பட்டால், நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். பெரும்பான்மையை நிறுவியதும், புதிய அரசாங்கம் முறையாக பதவியில் தொடரும். இந்த நடைமுறைகள் முடியும் வரை, நிர்வாகத்தில் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள அரசாங்கம் பொதுவாக ஒரு கவனிப்புத் திறனில் செயல்படுகிறது.ஆட்சி அமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிமுக தலைவர்களில் ஒருவரான சி.வி.சண்முகம் தலைமையில் ...
தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் நாளை தான் தமிழ்நாடு வருகை தருகிறார். தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் 108 வென்ற தவெக தலைவர் விஜய் முதல்வர் பதவியேற்பு விழாவை மே மாதம் 7ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு பொறுப்பு ஆளுநருக்கு தவெக தலைவர் விஜய் புதிய கடிதம் எழுதியுள்ளார். நேற்றிரவு, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு தவைவர் விஜய் ஏற்கனவே மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஆளுநர், விரிவான தகவல்களைச் சமர்ப்பிக்குமாறு கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து, தேவையான அனைத்து விவரங்களையும் அளித்து, இன்று மாலை 7.30 மணிக்கு மின்னஞ்சல் மூலம் விரிவான பதிலை அனுப்பியுள்ளார் தவெக தலைவர் விஜய். இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மூன்று மாநிலம் மற்றும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைத் தேர்தல் இறுதி முடிவுகளை அறிவித்தது. மாநில ஆளுனர் மற்றும் துணைநிலை ஆளுநரிடம் முடிவுகளை ஒப்படைக்கும் நிலையில் ஆளுநர் தகுதியுள்ள கட்சியை ஆட்சியமைக்க அழைக்க உள்ளார். அதில் மேற்கு வங்காளம்: மொத்தம் 293 தொகுதிகள் அதை பாரதிய ஜனதா கட்சி வெற்றி : 207, இடங்களில் வெ...