அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு செனனை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி ஆட்சியமைத்தது. தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கான புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் கூடுதல் அட்வகேட், கூடுதல் அரசு வழக்கறிஞர், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் என 204 பணிகள் அடங்கிய நியமனம் குறித்து சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் அளிக்கப்பட்ட நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதில் அரசு அரசியல் தலையீடுகள் உள்ளது. தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியில் ...
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமனன்றத்திற்குத் தேர்வானவவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி விஜயதாரணி. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற உறுப்பினர் பதவி முடியும் முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு விஜயதாரணி தோல்வியடைய. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வெற்றி பெற்ற சூழலில் விஜயதாரணி ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைவராக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, ”இரண்டரை ஆண்டுகாலம் பாஜகவில் இருந்தும் மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை இருந்ததாகவும். காரணம் கூறியவர் மேலும் " த.வெ.க-வில் இன்றைக்கு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கி, ஊழலற்ற ஆட்சியை வழங்கவும், போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்கவும் சூளுரைத்து, நம்முடைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்றைக்குத் தமிழகத்தை வழிந...