முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கொல்கத்தாவில் 12 வது சர்வதேச யோகா தினத்தில் பிரதமரின் உரை

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 12வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம் மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவிஜி, ஆற்றல் மிக்க முதல்வர் ஸ்ரீ சுவேந்து அதிகாரி ஜி, மத்திய அரசில் எனது சக ஊழியர் ஸ்ரீ பிரதாப்ராவ் ஜாதவ் ஜி, மேடையில் இருந்த அனைத்து முக்கிய பிரமுகர்களும், கொல்கத்தாவில் கூடியிருந்த அனைத்து பங்கேற்பாளர்களும், இந்த யோகா விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும், இந்தியா மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள். ஜூன் 21 ஆம் தேதி, பூமியின் சில பகுதிகளில், பகல் மிக நீண்ட நேரம் ஏற்படும் நாள். சர்வதேச யோகா தினத்தின் காரணமாக, ஜூன் 21 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கூட்டு கொண்டாட்டத்தின் நாளாகவும் மாறியுள்ளது. உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து, யோகாவின் அசாதாரண படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தியாவில், இமயமலை முதல் இந்தியப் பெருங்கடல் வரை, கிழக்கில் வடகிழக்கு மற்றும் வங்காளம் முதல் மேற்கில் சௌராஷ்டிரா வரை, முழு தேசமும் யோகாவின் ஆற்றலாலும் உணர்வாலும் நிரம்பியுள்ளது. முழு நாடும், முழு உலகமும் இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது - அதுதான் யோகாவின் ...
சமீபத்திய இடுகைகள்

60 RTO அலுவலகங்களில் நடந்த ஊழல் தடுப்பு சோதனையில் சிக்கிய ரூபாய் .37,81,168 பறிமுதல் வழக்கு

தமிழ்நாடு முழுவதும் 60 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTO) ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக இடைத்தரகர்கள் மூலம் 114 RTO அலுவலகங்களில் லஞ்சம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் சென்னை நகரில் (வளசரவாக்கம், தாம்பரம், அண்ணா நகர் போன்றவை), காரைக்குடி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ஆலங்குடி, பெருந்துறை, கோயம்பத்தூர் , மதுரை, மற்றும் தென்காசி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை அதில் கணக்கில் வராத சுமார் ரூபாய் .37.81 லட்சம் ரொக்கம் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி நடத்தும் நபர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.பரமக்குடியில் முதுகுளத்துார் சாலையில் ஆர்.டி.ஓ., அலுவலகம் செயல்படும் நிலையில் தணிக்கை செய்ய இடமில்லாததால் ஐ.டி.ஐ., வளாகத்தில் பணிகள் நடக்கிறது. இங்கு வியாழக்கிழமை மதியம் 3:00 மணிக்கு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் இர...

ஆஸ்கர் விருது வென்ற குறும்படங்கள் மும்பை திரைப்பட விழாவில் பார்வையாளர்களை ஈர்த்தன

ஆஸ்கர் விருது வென்ற குறும்படங்கள் மும்பை திரைப்பட விழாவில் பார்வையாளர்களை ஈர்த்தன குறும்படங்கள், ஆவணப்படங்கள், அனிமேஷன் ஆகியவை மூலம் உலகத் தரம் வாய்ந்த கதைசொல்லலின் மாபெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ள 19-வது மும்பை சர்வதேச திரைப்பட விழா- 2026, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விழாவின் மிகவும் பிரபலமான அம்சங்களில் ஒன்றான 'ஆஸ்கார் வெற்றியாளர்கள்' பிரிவில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அகாடமி விருது வென்ற குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறப்புப் பிரிவு, தற்கால உலகளாவிய சினிமாவின் மிகச்சிறந்த சில படைப்புகளை இந்தியப் பார்வையாளர்களுக்குக் கொண்டுவந்து, அதன் சிறப்பான படைப்பாற்றல், புதுமை, உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. மும்பை சர்வதேச திரைப்பட விழாவில், நான்கு தலைசிறந்த ஆஸ்கர் விருது வென்ற படங்கள் திரையிடப்பட்டன. ஐஎம் நாட் எ ரோபோ (பெல்ஜியம், நெதர்லாந்து) இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (ஈரான்) தி கேர்ள் ஹூ க்ரைட் பியர்ள்ஸ் (கனடா) டூ பியூப்பிள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா (பிரான்ஸ், அமெரிக்கா) இந்தத் திரையிடல்கள், மாணவர்கள், வளரும் திரைப்பட இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள் ...

ஊழல் நபரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பெற்ற லஞ்சம் பணியிடை நீக்கம் விசாரணை தீவிரம்

சென்னையில் லஞ்சப் புகாரை விசாரிக்கச் சென்ற ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலா, சம்பந்தப்பட்ட லஞ்ச அலுவலரிடமே லஞ்சம் கேட்டு மிரட்டியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட துணைக் கண்காணிப்பாளர் ஜாய் தயாள் உடனடியாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் விஜிலன்ஸ் வட்டாரத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆட்சியில் முடங்கி இருந்த ஊழல் தடுப்புத்துறை தற்போது கடந்த ஒரு வாரத்தில் வாரிசு சான்றிதழ், வீட்டுமனை அளவீடு, பட்டா மாற்றம், நெல் கொள்முதல் பில், சோலார் பேனர் பரிந்துரை மற்றும் புதிய மின் இணைப்பு போன்ற பணிகளுக்காக பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கிய 7 ஊழல் அரசு பணியானர்களான அலுவலர்கள் கைதாகினர். லஞ்சம் வாங்கிய ஒரே வாரத்தில் 7 பேர் கைது,  அதில் திருப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ஞானசேகர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சர்வேயர் செல்வராஜ், விழுப்புரம் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, திண்டுக்கல் பில் கிளர்க் சுமன்ராஜ், தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் செந்தில்கும...

மாணிக்க வாசகப் பெருமான் ஆனித் திருமஞ்சனத் தேரோட்டம் நடராஜர் உற்சவம்

ஸ்ரீ  ஆத்மலிங்க வடிவில் இறைவன் இப்பெருந்துறையில் எழுந்தருளியுள்ள சிறப்பை - அருவ நிலையை - ஆத்மசொரூபமாக உள்ள நிலையை " பார்த்து நாம் குருவாய் வந்தனுக்கிரம் பதனமாய் வைத்து மனத்துள்ளே - நிதம் பத்திசெய் வேறொன்றுமில்லை யில்லை - இது பரம ரகசியம் என்று கொள்ளே "    - என மாணிக்கவாசகர் விலாசம் எனும்  நூல் புகழ்கிறது.பாணடிய நட்டின் மந்திரி பிரதானி குதிரை வாங்கச் சென்ற மாணிக்கவாசகர் எழுப்பி திருவாசகம் பாடிய திருப்பெருந்துறை, தான் ஆவுடையார் கோவில், திருவிளையாடல் புராண ஸ்தலம் ஆவுடையார் கோவில் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி கோயிலின் திருத்தேர், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தேர்களில் ஒன்று. இங்கு ஆனித் திருமஞ்சன விழாவின் போது, அவர் அவதரித்த தினமான இன்று மாணிக்கவாசகப் பெருமானுக்காக இந்தத் தேர் வீதி உலா ஆண்டு தோரும் நடந்து வருகிறதன் அந்தப் பிரம்மாண்டமான தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு 90 அங்குலமும், அகலம் 36 அங்குலமும் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் - பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஸ்ரீ ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலில்   ஆனி திருமஞ்சனம் தேரோட்டத் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றதில் பல்லாய...

தவெக அரசின் சடடப்படியான முதல் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை அறநிலையத்துறையில் துவங்கியது

ஆளுநர் உரையின் போது, ​​கோயில் நிதி கோயில் தொடர்பான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்று தவெகவின் தமிழ்நாடு முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையில் ஆன அரசு தெளிவாகக் கூறியிருந்தது. அந்த உறுதிமொழியை அப்படியே கடைப்பிடித்து, திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு கோயில் நிதியைப் பயன்படுத்துவதற்கு முந்தைய திமுக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை அரசு தற்போது ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக, ஹிந்து சமய அறநிலையத்துறை (HR & CE)  அதன் உண்மையான நோக்கத்திற்கு ஏற்ப செயல்படுவதாகத் தோன்றுகிறது. கோயில்களின் வளர்ச்சிக்காகவும், அங்கு வரும் பக்தர்களின் வசதிகளை மேம்படுத்தவும் கோயில் நிதி பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், முந்தைய நிர்வாகத்தின் கீழ், இந்த நிதி, நமது பார்வையில், கோவில் வளர்ச்சிக்கு சிறிதும் சம்பந்தமில்லாத நோக்கங்களுக்காகத் திருப்பி விடப்பட்டது. அதற்கு பல ஆதாரங்கள் உள்ளது  அபரிமிதமான செல்வாக்கை அனுபவித்தவர்கள் மற்றும் அரசாங்கத்தின் மிகவும் சக்திவாய்ந்த நபர்களில் ஒருவராக அடிக்கடி காணப்பட்ட பி. கே....