இடுகைகள்

Featured Post

சீட்டுப் பேரத்தால் நடக்கும் நோட்டுப் பேரம் சிக்கலில் கூட்டணிகள்

சீட்டுப் பேரத்தால் சிக்கலில் கூட்டணிக் கட்சிகள் ‘டெல்லியில் சிபிஐ அனுப்பிய முதல்  சாட்சி சம்மன் என்பதால், தவெக தலைவர் நடிகர் விஜய் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் எனக் கட்டாயமில்லை. இன்னும் இரண்டு சம்மன்கள் வரையில் அவர் தேவைப்பட்டால் அவகாசமும் கேட்கலாம். ஆனால், மூன்றாவது சம்மனுக்கு கட்டாயம் நேரில் ஆஜராகித்தான் தீர வேண்டும். அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுக்கோட்டை பொதுக்கூட்டம் தவிர திருச்சிராப்பள்ளி அரசியல் பயணம் தோல்வியில் முடிந்ததையும், அவருக்கு அ.தி.மு.க தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எதிர் அரசியல் மூலம் தண்ணீர் காட்டியதையும் மக்கள் கண்ட நிலையில் அதற்குள்ளாக டெல்லியிலிருந்து சந்திப்புக்கு அரசியல் சம்மன் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வந்து சேர்ந்தது. அதே போல கரூர் விஜயின் மக்கள் சந்திப்பில் சிலர் கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்க்கு சம்மன் அனுப்பியது டெல்லி சி.பி.ஐ. இப்படி, ஒரே நேரத்தில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் அரசியல் மற்றும் சட்டம் என வெவ்வேற...
சமீபத்திய இடுகைகள்