முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்த FSSAI உத்தரவு

உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கையாளுதலின் போது துருப்பிடிக்காத பிளேடுகள்,கத்திகள் உள்ளிட்ட உபகரணங்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI அறிவுறுத்தல், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மேம்பாடு என்பது உணவு உற்பத்தியில் தூய்மையைக் கடைப்பிடிப்பது, ஆபத்துகளைக் குறைப்பது மற்றும் நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்வதாகும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை பரிந்துரைத்துள்ள முக்கிய வழிகாட்டுதல்களில் முக்கிய முறைகள் மற்றும் தரநிலைகள் நல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP/GHP): உணவு தயாரிப்பு மற்றும் கையாளுதலின் போது தூய்மையான உபகரணங்களைப் பயன்படுத்துதல், கையுறைகளை அணிதல் மற்றும் சுகாதாரமான சூழலைப் பராமரித்தல், (ஆபத்து பகுப்பாய்வு மற்றும் முக்கியமான கட்டுப்பாட்டுப் புள்ளிகள்): உணவு தயாரிப்பில் நிகழக்கூடிய இயற்பியல், வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அபாயங்களைக் கண்டறிந்து அவற்றை ஆரம்பத்திலேயே தடுக்கும் முறை.முறையான பொட்டலமிடுதல், உணவின் காலாவதி தேதி, மூலப்...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஆளுநர் உரையுடன் துவங்கியது,

தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்  இன்று (18.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 17-வது  சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் வெளியிட்ட x தளப் பதிவின் தமிழாக்கம் :-“தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய சகாப்தம் உதயமாகிறது என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.  மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஆளுநர் உரை எந்த இடையூறும் இன்றி இன்று சட்டசபையில் வாசிக்கப்பட்டது மனதுக்கு அளவற்ற திருப்தியைத் தருகிறது.  மேலும், மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை முதன்முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடிய வரலாற்று நிகழ்வு ஜனநாயகத்தின் மாண்பிற்குச் சான்றாக விளங்குகிறது - இது மிகையாகாது. ஜனநாயகத்தில், ஆளும் ஒரு அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைக்கப்பட்ட, இணக்கமான உறவை ஏற்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றி, நிலையான, முன்மாதிரியான நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். அந்...

நடிகை கௌதமி சொத்து மோசடி நபர்களுக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சமீபத்தில் நடிகை கௌதமி தடிமல்வா அதிமுகவில் இருந்து விலகினார் 1990-ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தவர். 13 ஆண்டு காலம் கமலஹாசன் உடனிருந்த பின் பிரிந்து பாஜகவில் இருந்த காலத்தில் இவர் தான் சென்சார் வாரிய பதவி பெற்றார், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பல்வேறு சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். 2004-ஆம் ஆண்டு நடிகை கௌதமிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பொது அதிகார முகவராக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார். அதன்படி 2004-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை நடிகை கௌதமி பெயரிலும் அவரது மனைவி நாச்சம்மை பெயரிலும் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து நடிகை கவுதமி அளித்த புகாரில், கோட்டையூர் அழகப்பன், நாச்சம்மை, மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு ...

தாய்லாந்து – இந்தியா இடையேயான 10-வது பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை

பாதுகாப்பு அமைச்சகம் இந்தியாவும், தாய்லாந்தும் உற்பத்தி, ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புதல் தாய்லாந்து – இந்தியா இடையேயான 10-வது பாதுகாப்பு தொடர்பான உரையாடல் 2026 ஜூன் 16 அன்று பாங்காங்கில் நடைபெற்றது.  இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முழு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்களில் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்த உரையாடலுக்கு தாய்லாந்தின் பாதுகாப்புத்துறைக்கான துணை நிரந்தர செயலாளர் அட்மிரல் நட்டபோல் டியூவானிச்சும், இந்திய பாதுகாப்புத்துறை இணைச் செயலாளர் திரு சத்யஜித் மொகந்தியும் இணைந்து தலைமை தாங்கினார்கள். இந்த உரையாடலில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் எழுந்துள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து இருதரப்பும் விவாதித்து பிராந்திய வளர்ச்சியில் உள்ள கண்ணோட்டங்கள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் உறுதிபூண்டனர். முந்தைய உர...

நடிகை சுகன்யா வழக்கில் 30 ஆண்டுகள் கடந்து வந்த தீர்ப்பு மேல்முறையீட்டு முடிவில் தீர்வாகும்

நடிகை சுகன்யா குறித்து நீண்ட கால சந்தனக் கடத்தல் கொள்ளையன் வீரப்பன் அளித்த ஒரு  அவதூறு பேட்டியை ஒளிபரப்பியதற்காக, சன் டிவி நிறுவனத்திற்கு ரூபாய் .10 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.                                       ( வழக்கு தாகல் செய்த காலத்தில்)  தற்போது அந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது வழக்கின் துவக்கம் :- 1996-ஆம் ஆண்டு, சந்தனக் கடத்தல் கொள்ளையன் வீரப்பனை பேட்டி கண்டு அதனை சன் டிவி ஒளிபரப்பிய. பேட்டியில் கொள்ளையன் வீரப்பன் நடிகை சுகன்யா குறித்து தெரிவித்த அவதூறு கருத்துக்களுக்கு எதிராக நடிகை சுகன்யா தொடர்ந்த. வழக்கை விசாரித்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் 2015- ஆம் ஆண்டில் சன் டிவி ரூபாய் .10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து சன் டிவி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தற்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உறுதி செய்தது. மேற்கண்ட ஒளிபரப்புக்கு முன் அநாவசிய...