முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இடதுசாரி கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் நல்லகண்ணு காலமானார்,

இடதுசாரி கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் இரா.நல்லகண்ணு காலமானார்,      இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, பழைய திருநெல்வேலி மாவட்டம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இராமசாமி-கருப்பாயி தம்பதியினருக்கு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று, 10 குழந்தைகள்  உள்ள விவசாயக் குடும்பத்தில்  4 சகோதரர்கள், 5 சகோதரிகள் கொண்ட பெரிய விவசாயக் குடும்பம், இவர் 3-வது குழந்தையாகப் பிறந்தார். 1958- ஆம் ஆண்டில் ரஞ்சிதம் மனைவியானார் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு, மனைவி ஆசிரியர் பணியின் மூலம் குடும்பத்தைக் கவனிக்க   திருநெல்வேலி மாவட்ட கமிட்டி உறுப்பினர் அன்னாசாமியின் மகள்தான் இவர் மனைவி   ஆர். நல்லகண்ணு முழு நேர கட்சிப் பணிகளில் ஈடுபட்டதால், மனைவி ரஞ்சிதம் தனது ஆசிரியர் பணி வருமானத்தில் குடும்பம் பார்க்க  1948-ல் கம்யூனிஸட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போது சிறை சென்றார், தனது வாழ்நாள் முழுவதையும் மக்களின் போராட்டங்களுக்காக அர்ப்பணித்த அந்த சிகப்பு சூரியன் தற்போது அஸாதமனமானது, 101 வயதில்...
சமீபத்திய இடுகைகள்

போலி ஆருடம் கூறும் காலி காமுகனுக்கு பாலியல் வழக்கில் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

போலி ஆருடம் கூறும் காலி காமுகனுக்கு பாலியல் வழக்கில் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் ஆருடம் பரிகாரம் என்ற பெயரில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ வழக்கில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது  இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்நில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு மூலம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிக்கு, இப்போது விசாரணை முடிவில் தண்டனை உத்தரவு விரைவு நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்த  போலி ஆருடம் பார்த்த ராமகிருஷ்ணன் எனும் குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை சிவகங்கை நீதிமன்றம்  தீர்ப்பு  சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போலி ஆருடம் ப...

சென்னையில் டைம்ஸ் மாரத்தான் 2026 ஓட்டப் போட்டிகள்

சென்னையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் ஸ்பான்சர்ஸ் இணைந்து நடந்திய ஓடடம் ஓடத் தயாராகுங்கள்! டைம்ஸ் மராத்தான் 2026  - உங்கள் உடற்தகுதி ஓட்டம் என மாரத்தான் போட்டிகள் சிறப்பாக நடந்தது அதில்  CPCL மற்றும் சுகாதாரப் பங்குதாரர் டாக்டர். காமாக்ஷி மெமோரியல் மருத்துவமனைகள். சார்பில் இணைந்து நடத்தியதில்  21K, 10K, 5K, 1K உள்ளடக்கிய ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை, 22 பிப்ரவரி 2026, காலை 5 மணிக்கு ஓமந்தூரார் அரசினர் தோட்டம் அருகில் சிவானந்தாசாலையிலிருந்து ஓமந்தூரார் மைதானம் வரை ஒரு நகரம். ஒரு ரன். ஒரு நோக்கம்! எனற நோக்கில் டைம்ஸ் மாரத்தான் 2026 சென்னையின் காலைப் பொழுதை உடற்பயிற்சி மற்றும் ஒற்றுமையின் சக்திவாய்ந்த கொண்டாட்டமாகவே மாற்றியது. 21K ஓடடச் சவாலில் இருந்து ஊக்கமளிக்கும் 1K உள்ளடக்கிய ஓட்டம் வரை, ஒவ்வொரு அடியும் உறுதியையும் சமூக வலிமையையும் எதிரொலித்தது. ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் வலுவான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக மக்களை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் CPCL இணைந்து நடத்தி பெருமை சேர்த்தது  நல்ல உடல் நலன்  சுவாசிக்கவும், டைம்ஸின் ஆற்றலை உணரவும் இது வாய்ப்பு வழங...