நீதிபதிக்கு எதிராக புத்தகம் வெளியீடு பாஜக கண்டனம். இது உண்மையெனில், அராஜகத்தின் உச்ச கட்டம். இந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும். இதன் பதிப்பகத்தாரை, எழுத்தாளரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். முதலமைச்சர் துவங்கி வைக்கும் இந்த புத்தக கண்காட்சியில் நீதிபதியை அவதூறு செய்யும் நடவடிக்கையை முதல்வர் கண்டிக்க வேண்டும். கீழைக்காற்று பதிப்பகத்தை தடை செய்ய வேண்டும். எனவும் நடைபெறவிருக்கும் சென்னை புத்தகக கண்காட்சியில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஸ்வாமிநாதன் அவர்களை விமர்சித்து ஒரு புத்தகத்தை வெளியிடப்போவதாக 'கீழைக்காற்று' என்ற பெயரில் கடை எண்களை குறிப்பிட்டு, அந்த பதிப்பகத்தின் அலைபேசி எண்ணையும் (892564××××) குறிப்பிட்டு ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. நீதிபதிகளை தரக்குறைவாக விமர்சிக்கும் அந்தப் பதிப்பகத்தை தடை செய்வதோடு, அந்த விளம்பரத்தை வெளியிட்ட ரௌடிக்கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். மேலும், இந்த புத்தக கண்காட்சியை முதலமைச்சர் துவங்கி வைப்பதாக சொல்லப்படுவதால், அரசியலமைப்பு சட்டத்தின் வழி நடந்து அந்த கருங்காலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வே...
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும், நீதிபதி சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பு செல்லும்”. உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என நமிழநாாடு அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென மதுரை மாவட்ட ஆட்சியர், மாநக ரக்காவல்துறை ஆணையர் சார்பிலும் மேல் முறையீட்டு மனுக்கள் மதுரை கிளையில் தாக்கல் செய் யப்பட்டது. இது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தீபம் ஏற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். நேரில் முன்னிலையாவதிலிருந்து விலக்களிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டதனிடையே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே. - கே. ராமகிருஷ்ணன் அமர்வில் ஒரு வாரம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணைகள் நடை பெற்ற போத...