முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தர்மேந்திரப் பிரதானுக்கு எதிராக கரப்பான் பூச்சி ஜனதா டில்லியில் போராட்டம்

காக்ரோச் ஜனதா பார்ட்டி  இந்தியாவின் தற்போதைய அரசியல், வேலையின்மை மற்றும் ஊழல் போன்றவற்றை எதிர்த்து இளைஞர்களால் இணையத்தில் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி  அரசியல் இயக்கம். மே 2026-ல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கொன்றில் விமர்சகர்களையும் வேலையில்லாத இளைஞர்களையும் 'காக்ரோச்'  அதாவது கரப்பான் பூச்சி மற்றும் 'ஒட்டுண்ணிகள்' என விமர்சித்தார்.இந்த வார்த்தையை சாதகமாக எடுத்துக்கொண்ட அரசியல் தகவல் தொடர்பு வியூகவாதியான அபிஜித் தீப்கே  நையாண்டி கட்சியை டிஜிட்டல் தளத்தில் தொடங்கினார். 'கரப்பான் பூச்சி' என்பது அதிகாரத்தில் இருப்பவர்களால் ஒதுக்கப்படும் சாதாரண மக்களின் சகிப்புத்தன்மையின் அடையாளமாக மாற்றப்பட்டது. ஜூன் 2026-ல் டெல்லி ஜந்தர் மந்தரில் இக்கட்சி சார்பாக பெரும் போராட்டம் நடைபெற்றது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும்  கடந்த சில ஆண்டுகளாகவே ஊழல் நிறைந்த நபராக உள்ள தர்மேந்திரப் பிரதான் பதவி விலகல் தான் தீர்வு சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் ஆதரவ...
சமீபத்திய இடுகைகள்

ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி பாமக தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: பாமக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்!  தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், ஜாதிவாரியான சமூகநீதியை உறுதிப்படுத்தவும், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  ஜூன் மாதம் 5 ஆம் தேதி, சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் ஜாதிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  கூட்டத்திற்கு அதிரடியாக அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்தில்  பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கடசி தென்னிந்திய பார்வேடு பிளாக், நாம்தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமானது, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் மிகவும் அவசியமானது எனப் பார்த்தால்  1931ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தய கம்ப...

மாநகராட்சி மற்றும் நகராட்சி ஊராட்சிகளில் கள ஆய்வு குறித்து சுற்றறிக்கை

தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையில் மாநகராட்சி ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் கள ஆய்வில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் உத்தரவின் பேரில்  காலை திடீர் ஆய்வு, கழிவு மேலாண்மை, தெரு நாய் கட்டுப்பாடு, பள்ளிகளின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட 16 புள்ளிகள் அடங்கிய உத்தரவு  செயல்படுத்தத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் . ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்., 03.06.2026 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்  முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களுக்கு வெளிப்படையான, சீரான சேவைகளை வழங்கிடவே இந்த 16 அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் அறிவுறுத்தல் செயல்படுத்த வேண்டிய முறை, முதலாவது காலை ஆய்வு ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்களை தினமும் பார்க்க வேண்டும். அடுத்ததாக பணி வருகை பயோமெட்ரிக்  முறை மூலம் உண்மையான வருகையைக் கண்காணிக்க வேண்டும். மூன்றாவதாக கழிவ...

நார்வே செஸ் 2026 ஜாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் முதல்வர் வாழ்த்து

நார்வே செஸ் 2026  ஜாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் எனும் சாதனையைப் படைத்த கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு @pragg_chess பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பாக  வாழ்த்துக்கள். தனது அறிவார்ந்த ஆட்டத்தினாலும், அசாத்தியமான தொடர் வெற்றிகளினாலும் உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் அவர் மாபெரும் பெருமையைத் தேடித் தந்துள்ளார். அவரது இந்தப் பயணத்தில்                    நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026  தொடரில் அறிவார்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி, பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்திட்ட கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா    நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் நார்வே நடைபெற்ற செஸ் போட்டியில்    6 வீரர்கள் கலந்து கொண்ட இந்த தொடரின் 10-வது மற்றும் இறுதி சுற்றில் ஜெர்மனி நாட்டின் வின்சென்ட் கீமரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதன் மூலம் மொத்தம் 18 புள்ளிகளை பெற்று அவர் பட்டம் வென்றார். அமெரிக்காவின் வெஸ்லி 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.   இறுதி சுற்றின் முடிவில் பிரக்ஞா...

ஆசிரியர் கல்வியில் சீர்திருத்தம் என்பது தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தும் நடவடிக்கை

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் (TNTEU)  கடுமையான நெருக்கடியில் உள்ளது. சுமார் 680 தனியார் உள்பட இணைப்புக் கல்வியியல் கல்லூரிகளுடன் இயங்கும் பல்கலைக்கழகம், ஆசிரியர் பயிற்சியின் தரத்தை உறுதி செய்ய வேண்டிய நிறுவனமாக இருந்த நிலையில், பல ஆண்டுகளாக ஊழல் முறைகேடுகள், மற்றும் நிர்வாகத் தவறு காரணமான தோல்விகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு தகவலறியும் உரிமை RTI-Act மனுவுக்கும் பதில் அளிக்க முடியாத நிலைக்கு முந்தைய திமுக அரசு தள்ளியது என்பது இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்துகிறது. சில அமைப்புகள் தொடர்ந்து RTI மூலம் வெளிப்படுத்திய தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. பல தனியார் B.Ed., M.Ed. கல்லூரிகள் போதிய தகுதிவாய்ந்த பேராசிரியர்கள் இல்லாமல், ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பெயரளவில் பட்டியலிடப்பட்டு, இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் வெளியான ‘ghost faculty’ மோசடிக்கு ஒப்பான நிலை TNTEU-விலும் நிலவுவதாகக் கூறுகிறது. சில கல்லூரிகளில் உள்கட்டமைப்பு, நூலகம், ஆய்வக வசதிகள் குறைவாகவே உள்ளன. NCTE விதிமுறைகளை மீறியும், முறையான ஆய்வுகளின்...

அதிமுக கரைகிறது, தவெக வளர்கிறது காரணம் தலைவரின் தனித்த செல்வாக்கு ஒன்றே

தமிழ்நாட்டின் அரசியல்  ஏநோ ஒரு திருப்புமுனையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது, அதிமுக, திமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளிலிருந்து இரண்டாம் நிலை தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்வுகள் அதிகரிக்கின்றன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 108 ல் 107 இடங்களைப் பெற்று கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையை உருவாக்கியது, அதன் பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் தவெகவில் இணைந்த சம்பவங்கள் இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன. இது திராவிடக் கழகங்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தக் கேள்வியை ஆழமாக அலசினால், தமிழ்நாட்டின் அரசியல் நிலப்பரப்பு மாறிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. திராவிட இயக்கம் கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் பெரியார் அவர்களால் தொடங்கப்பட்ட சமூக நீதி, சுயமரியாதை, எதிர்ப்பு அரசியலின் வெளிப்பாடாக வளர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 1967-ல் ஆட்சியைப் பிடித்தபோது அது ஒரு புரட்சியாகக் கருதப்பட்டது. பின்னர் அதிலிருந்து பிரிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழ...