பழனி ஸ்ரீ தண்டாயுதபணி சுவாமி ஆலயத்தின் டிரஸ்ட் சொத்து ரூபாய் 100 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 1.40 ஏக்கர் நிலம், முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட குற்றம் நடந்த நிலையில், அந்த பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி, பழனி கோயில் நிர்வாகம் சார்பில், பத்திரப்பதிவு துறைக்கு மனு அனுப்பப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் பதிவுத்துறை விசாரணை மேற்கொண்ட போது வழக்கின் முக்கியத்துவம் மற்றும் கோயில் சொத்து பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை கருத்தில் கொண்டு, வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவு பிறப்பித்த நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அ...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை மாதம் 20 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 13 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் முக்கிய மசோதாக்களின் பட்டியலில் புதிய மசோதாக்கள் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள மசோதாக்கள் என மொத்தம் 7 முக்கிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளது.. மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டு, விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய மசோதாக்களின் விவரம் முதலாவது :-வருமான வரி (திருத்த) மசோதா, 2026 (Income-tax Amendment Bill, 2026): முந்தைய அவசரச் சட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்படும் இந்த மசோதா, இந்தியச் சந்தையை வலுப்படுத்தவும், உலகளாவிய நிலையான மூலதன முதலீடுகளை ஈர்க்கவும், சந்தை பணப்புழக்கத்தை அதிகரிக்கவும் வழிவகை செய்கிறது. இரண்டாவது :-உச்ச நீதிமன்ற (நீதிபதிகள் எண்ணிக்கை) திருத்த மசோதா, 2026: இதற்கு முந்தைய அவசரச் சட்டத்திற்குப் பதிலாகக் கொண்டுவரப்படும் இந்த மசோதா, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையை (தலைமை நீதிபதி தவிர்த்து) தற்போதைய 33-லிருந்து 37 ஆக உய...