வெற்றி ராகுலுக்கா? கார்கேவுக்கா? சிதம்பர ரகசியம் என்ன?நீண்ட ஆலோசனை; காங்கிரஸ் தலைவர் கார்கே மனதை சரி செய்த சிதம்பரம்' - திமுக, காங்கிரஸ் கூடடணியயின் பின்னணி "நீண்ட இழுபறி , விமர்சனங்கள், தவெக வை காரணம் காட்டி பேரம் பேச்சுவார்த்தைகள் என பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி பேச்சவார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளது மாலை நான்கு மணிக்கு திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் இரண்டு கட்சிகளுக்கும் சீட் ஒதுக்கீட்டு ஒப்பந்ததில் கையெழுத்திட்டார்கள் இரு கட்சிக்கும் நெருக்கமான சிலர். காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை முப்பது இடங்களுக்கு மேல் எப்படியும் பெற்றுவிடவேண்டும் என்று தவெகவை முன் வைத்துப்போராடியது. நேற்றிரவு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வம் மகளின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்ற திமுக தலைவரான முதல்வர் மற்றும் ப.சிதம்பரம் இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு டெல்லியில் உள்ள சோனியா மற்றும் ராகுலை தனிதனியாகத் தொடர்பு கொண்டு முதலில் பேசியிருநத ப.சிதம்பரம். அதன்பிறகு தலைவரான கார்க்கேவிடம் பேசிய ப.சிதம்பரம், தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணியிலுள்ள சிக்கலைப் ...
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி கொலை சம்பவத்தில் 7 நபர்கள் கைது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் நேற்றிரவு இருவர் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நேற்றிரவே தென்மண்டல ஐஜி மற்றும் திருநெல்வேலி சரக டிஐ ஜி நேரில் சென்று விசாரணை நடத்தினர் தற்போது தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் முன்னிலையில் பல்வேறு ஆலோசனை நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது இந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக 7 பேர் கைது செய்யப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. நாங்குநேரி அருகே ஒரு கும்பல் ஒன்பது நபர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் அரிவாளால் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்ததோடு, ஆறு பேர் படுகாயம் அடைந்த நிலை 'நாளொரு கொலையும், பொழுதொரு வன்முறையுமாக' தமிழ்நாட்டில் கடந்த ஐந்து வருடங்களில் சீரழித்து விட்டது ஆட்சி முடிவில் திமுக அரசு. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் வெட்டலாம், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்ற சூழ்நிலை உருவானதற்கு காரணம் தம...