மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத துணைக்காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்துக்கு எதிராகப் பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம், அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு . சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுகா மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தனிப்படைக் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தது தொடர்பாக தனிப்படைக் காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், இராமச்சந்திரன் ஆகியோரை CBI கைது செய்த வழக்கில் நீதிமன்றத்தில் CBI தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் காவல் மரணம் நிகழ்ந்தபோது, மானாமதுரை துணைக் கண்காணிப்பாளராக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்ட வழக்கில் சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனு இரண்டு முறை தள்ளுபடியானது. தனிப்படைக் காவலர்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு ...
ஆபாசமான படக்காட்சிகளை ஒளிபரப்பியதாகத் தெரிவித்து , 5 OTT தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது. உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய ஐந்து தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது. குறிப்பாக, சந்தாதாரர்களைக் கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான பல காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தளங்கள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளையும் உடனடியாக முடக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் கண்காணிக்கிறது. ஏற்கனவே 'உல்லு' மற்றும் 'ஆல்ட் பால...