முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத டி எஸ் பிக்கு நீதிமன்றம் பிடி வாரண்ட்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத துணைக்காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரத்துக்கு எதிராகப் பிடிவாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம், அவரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு . சிவகங்கை மாவட்டம், திருபுவனம் தாலுகா மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் மீதான நகை திருட்டு புகார்  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, தனிப்படைக் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தது தொடர்பாக தனிப்படைக் காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், இராமச்சந்திரன் ஆகியோரை CBI கைது செய்த வழக்கில் நீதிமன்றத்தில் CBI தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகையில் காவல் மரணம் நிகழ்ந்தபோது, மானாமதுரை துணைக் கண்காணிப்பாளராக இருந்த சண்முகசுந்தரம், திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், உதவி ஆய்வாளர் சிவக்குமார், தலைமைக் காவலர் இளையராஜா ஆகியோர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்ட வழக்கில் சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனு இரண்டு முறை தள்ளுபடியானது. தனிப்படைக் காவலர்கள் ஜாமீன் மனு விசாரணைக்கு ...
சமீபத்திய இடுகைகள்

5-OTT தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை

ஆபாசமான படக்காட்சிகளை ஒளிபரப்பியதாகத் தெரிவித்து , 5  OTT தளங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தடை விதித்தது. உள்ளடக்க ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி MoodXVIP, Koyal Playpro, Digi Movieplex, Feel மற்றும் Jugnu ஆகிய ஐந்து தளங்களை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிகளுக்கு எதிராக இந்தத் தளங்கள் செயல்பட்டதாகக் கண்டறியப்பட்டது. குறிப்பாக, சந்தாதாரர்களைக் கவர்வதற்காக அநாகரீகமான மற்றும் வக்கிரமான பல காட்சிகளைத் தொடர்ந்து ஒளிபரப்பி வந்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தளங்கள் மட்டுமல்லாது, அவற்றுடன் தொடர்புடைய இணையதளங்கள் மற்றும் மொபைல் செயலிகளையும் உடனடியாக முடக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன் கீழ், ஆபாசமான தகவல்களை மின்னணு முறையில் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும். கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசு இத்தகைய சிறிய அளவிலான ஓடிடி தளங்களைக் கண்காணிக்கிறது. ஏற்கனவே 'உல்லு' மற்றும் 'ஆல்ட் பால...

இடதுசாரி கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் நல்லகண்ணு காலமானார்,

இடதுசாரி கம்யூனிஸ சித்தாந்தம் சிவப்பாகவே எரிகிறது, மூட்டிய தோழர் இரா.நல்லகண்ணு காலமானார்,      இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, பழைய திருநெல்வேலி மாவட்டம் தற்போது தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இராமசாமி-கருப்பாயி தம்பதியினருக்கு 1925 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி அன்று, 10 குழந்தைகள்  உள்ள விவசாயக் குடும்பத்தில்  4 சகோதரர்கள், 5 சகோதரிகள் கொண்ட பெரிய விவசாயக் குடும்பம், இவர் 3-வது குழந்தையாகப் பிறந்தார். 1958- ஆம் ஆண்டில் ரஞ்சிதம் மனைவியானார் இரண்டு பெண் குழந்தைகள் உண்டு, மனைவி ஆசிரியர் பணியின் மூலம் குடும்பத்தைக் கவனிக்க   திருநெல்வேலி மாவட்ட கமிட்டி உறுப்பினர் அன்னாசாமியின் மகள்தான் இவர் மனைவி   ஆர். நல்லகண்ணு முழு நேர கட்சிப் பணிகளில் ஈடுபட்டதால், மனைவி ரஞ்சிதம் தனது ஆசிரியர் பணி வருமானத்தில் குடும்பம் பார்க்க  1948-ல் கம்யூனிஸட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த போது சிறை சென்றார், தனது வாழ்நாள் முழுவதையும் மக்களின் போராட்டங்களுக்காக அர்ப்பணித்த அந்த சிகப்பு சூரியன் தற்போது அஸாதமனமானது, 101 வயதில்...

போலி ஆருடம் கூறும் காலி காமுகனுக்கு பாலியல் வழக்கில் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை

போலி ஆருடம் கூறும் காலி காமுகனுக்கு பாலியல் வழக்கில் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் ஆருடம் பரிகாரம் என்ற பெயரில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ராமகிருஷ்ணனுக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து போக்சோ வழக்கில் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது  இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு போக்ஸோ (POCSO) சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்நில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு மூலம் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிக்கு, இப்போது விசாரணை முடிவில் தண்டனை உத்தரவு விரைவு நீதிமன்றம் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்த  போலி ஆருடம் பார்த்த ராமகிருஷ்ணன் எனும் குற்றவாளிக்கு 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை சிவகங்கை நீதிமன்றம்  தீர்ப்பு  சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், போலி ஆருடம் ப...