முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு

தமிழ்நாடு அரசு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு. மாநில தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் இடமாற்ற உத்தரவுகளை வெளியிட்டார்.மாற்றம் செய்யப்பட்டவர்களின் விவரம் : ஜெ.ராதாகிருஷ்ணன்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) தலைவராக இருந்தவர், தற்போது அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார். வி.அருண் ராய்: தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திலிருந்தவர், தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.தீரஜ் குமார்: உயர்கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்ரியா சாஹு: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைச் செயலாளராக இருந்தவர், தற்போது தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் ஆணையராக இடமாற்றப்பட்டுள்ளார். காகர்லா உஷா: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைச் செயலாளராகப் பொறுப்பக்குச் செல்கிறார்.பிரதீப் யாதவ்: தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக மாற்றப்பட்டார். அதுல் ஆன...
சமீபத்திய இடுகைகள்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்தத் தடை இல்லை

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் 2024 ஆம் ஆண்டு ஜூலை ஜூலை மாதம் 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகில் ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சென்னை மாநகரக் காவல்துறை  வழக்கை விசாரித்து, ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிவாங்கவே இந்தக் கொலை நடந்ததாக தெரிவித்தது. இந்த வழக்கில் அஸ்வத்தாமன், பொன்னா பாலு உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காவல்துறை சார்பில் 7,000 பக்கங்களுக்கும் மேல் வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் விசாரணையில் திருப்தியில்லை எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் முறையான விசாரணைக்காக சிபிஐ க்கு மாற்றி உத்தரவிட்டது.  சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, முந்தைய  திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடையும் பெற்றது. இந்த நிலையில் முக்கியத் திருப்பமாக ஜூலை 2026 நிலவரப்படி தமிழ்நாடு அரசியல் சூழல் மாற்றங்கள...

கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவு கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சியின் போது ஆண், பெண் கலைஞர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆண் கலைஞர்கள் பைஜாம அல்லது வேட்டி, சட்டை அணிந்திருந்த வேண்டும், பெண் கலைஞர்கள் சேலை, தாவணி, அல்லது மேலாடையுடன் கூடிய சுடிதார் அணிந்திருக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார். கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுவருகிறது. இந்த மனுக்களை விசாரணை செய்து உரிய நிபந்தனைகளுடன் நீதிபதிகள் அனுமதி வழங்கிவருகிறனர். இந்த நிலையில் தஞ்சை வளப்பக்குடி கிராமத்தை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வளப்பக்குடி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேரடி கருப்பசாமி கோயில் குடமுழுக்கு விழா 24-ம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி ...

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யை ஒரு தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்த வேண்டும்.தேசியவாதிகளின் கோரிக்கை

இந்திய அரசு 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி'யை (Cockroach Janata Party) ஒரு தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்த வேண்டும். தேசியவாதிகளின் கோரிக்கை சீன தூதரகத்திற்குச் சென்றதாகக் கூறப்படும் எஸ்.எஃப்.ஐ (SFI) தலைவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில்  (CJP)  கரப்பான் பூச்சி அமைப்புடன் இணைந்து போராட்டம் நடத்தி வரும் மார்க்சிஸ்ட் எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பின் அகில இந்தியத் தலைவர்களான ஆதர்ஷ் எம். சஜி மற்றும் ஆய்ஷே கோஷ் ஆகிய இருவரும், சமீபத்தில் சீனத் தூதரகத்திற்குச் சென்றதாகவும், அங்கிருந்து சில 'பரிசுகளைப்' பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படும் தகவல் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நாட்டின் முக்கியமான மாணவர் இயக்கத் தலைவர்கள் வெளிநாட்டுத் தூதரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளதாக எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டு, பல்வேறு தரப்பினரிடையே கடுமையான கவலையையும் விவாதங்களையும் உருவாக்கியுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற்ற வேளாண்மைத்துறை உயர்நிலை ஆய்வுக் கூட்டம்

கொல்கத்தாவில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டம்: மத்திய அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான் தலைமை தாங்கினார் மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌகான், மேற்கு வங்க மாநில முதல்வர் திரு சுவேந்து அதிகாரி, மாநில அமைச்சர்களுடன் கொல்கத்தாவில் இன்று உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக 82,000 கோடி ரூபாய் மதிப்பிலான 19 முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் போன்ற நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. மாநிலத்தில் கிராமங்களின் வளர்ச்சியை வலுப்படுத்த 8,508 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீடுகளுக்கு இடைக்கால ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதுடன், பயனாளிகள் கணக்கெடுப்புக்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு 295 கோ...

சென்னை உயர்நீதிமன்றத்தின் Public Prosecutor ஆக மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன் நியமனம்!

2026 மே மாதத்தில் தமிழ்நாடு அரசு குற்றவியல் வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் Public Prosecutor ஆக  மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன்  நியமனம்! சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் குற்றவியல் வழக்குகளை கவனிப்பதற்காக கடந்த மே மாதம் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் Public Prosecutor (அரசு குற்றவியல் வழக்கறிஞர்) ஆக சட்டப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். 15.05.2026 அன்று வெளியிடப்பட்ட G.O.(D) No.660 அரசாணையின் மூலம், மூத்த வழக்கறிஞர் ஆர். ஜான் சத்யன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் குற்றவியல் வழக்குகளை கவனிப்பதற்கான Counsel for Government of Tamil Nadu (Criminal Side) ஆக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் 07.07.2026 அன்று அனுப்பிய கடிதத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு தற்போது புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 09.07.2026 தேதியிட்ட G.O.(Ms) No.225 அரசாணையின் மூலம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BN...

சிபிஎஸ்இ யின் மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதிய மொழி கற்பது வீணாகாது சிபிஎஸ்இ யின் மும்மொழிக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு சிபிஎஸ்இ (CBSE) 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழி தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தேசிய கல்விக் கொள்கை (NEP 2020)-ன் அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி மூன்றாம் மொழி கட்டாயம்: 9-ஆம் வகுப்பு பயிலும் ஒவ்வொரு மாணவரும் மூன்று மொழிகளைப் படித்தாக வேண்டும். இதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். உள் மதிப்பீடு மட்டுமே: 10-ஆம் வகுப்பில் மூன்றாம் மொழிக்கு பொதுத்தேர்வு கிடையாது.  அதற்குப் பதிலாக, பள்ளி அளவில் நடத்தப்படும் உள் மதிப்பீட்டுத் தேர்வுகளில் (Internal Assessment) கண்டிப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும். மூன்றாம் மொழி உள் மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ் (Secondary School Examination Pass Certificate) வழங்கப்படும்.  இந்த விதிமுறைகள் வரும் 2026-27 ஆம் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கும், 2027-28 கல்வியாண்ட...