72-வது தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர்களாக மம்மூட்டி மற்றும் கார்த்திக் ஆர்யனும், சிறந்த நடிகையாக யாமி கௌதமும் தேர்வு செய்யப்பட்டனர். 72-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள நேஷனல் மீடியா சென்டரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதில் மலையாள மொழி நடிகர் மம்மூட்டி மற்றும் ஹிந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை யாமி கௌதம் வென்றார். ‘ப்ரமயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டியும், ‘சந்து சாம்பியன்’ படத்துக்காக கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகர்களாகத் தேர்வாகினர். அதே போல ’ஆர்டிகிள் 370’ படத்துக்காக யாமி கவுதம் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டார். 2024-ஆம் ஆண்டில் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களை உள்ளடக்கி இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் அடங்கிய நடுவர் குழு விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்தது. வி...
இந்திய வரலாற்றில் தனியார் ராக்கெட் விக்ரம்-1 வெற்றிகரமாக மண்ணிலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள விண்ணெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து மட்டும் 80 பேர் வரை தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 20 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இங்கு திட்ட இயக்குனர் விக்டர் ஜோசப் அவரது பணியை ராஜினாமா செய்துள்ளார் சமீபத்தில் இந்தியாவில் விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. எனவே அது சார்ந்த ஸ்டார்ட் ஆப் நிறுவனங்கள் அதிக அளவில் தொடங்கப்படுகிறது. இந்தத் தனியார் நிறுவனங்கள் அதிக அளவில் சம்பளம் கொடுக்க முன்வருவதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் இயக்குநர்கள் இஸ்ரோவிலிருந்து விலகி தனியார் நிறுவனங்களில் சேரத் துவங்கியுள்ளனர். இதனால் இஸ்ரோ செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களை முன்னெடுத்துச்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் விருப்ப ஓய்வு பெறுதல் மற்றும் பணியிலிருந்து விலகுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிலிருந்து 100 விஞ்ஞானிகள...