முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நீதித்துறையில் ஏ.ஐ.யின் தாக்கம் தொடங்கியுள்ளதாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தகவல்

சென்னையில் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜியில் நடந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பங்கேற்றுப் பேசினார் அதில் :- நீதித்துறையில் ஏ.ஐ.யின் தாக்கம் தொடங்கியுள்ளது. சில நீதிபதிகள் வெளியிட்ட தீர்ப்புகளில் ஏ.ஐ. வழங்கிய மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளன. அந்த மேற்கோள்கள் எந்த நீதிமன்றமும் பிறப்பிக்காத உத்தரவுகளைத் தெரிவிக்கின்றன. இது அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னைப் போன்றவர்களுக்கு இந்தப் பிரச்சினையில்லை. ஏனென்றால் நான் ஏ.ஐ. உதவியை நாடியதே இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் எனக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதற்காக கணினியில் ஏ.ஐ. உள்பட நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள வேண்டிய நிலையுமுள்ளது. தற்போதைய காலத்தில் மனதை ஒருநிலைப்படுத்துதல் என்பது இயலாத காரியமாகிறது. ஒரு விஷயத்தில் நமது முழு கவனத்தையும் செலுத்தினா ல்தான் வெற்றி பெற இயலும். பல ஆண்டுகளாக வக்கீலாகப் பணியாற்றியுள்ளேன். சில ஆண்டுகளாக நீதிபதியாகவும் பணியாற்றுகிறேன். ஏராளமான வழக்குகளை கையாண்டுள்ளேன். ஆனால் கணவன்-மனைவிக்கு இடையேயான விவாகரத்து வழக்குகள் அதிகரி...
சமீபத்திய இடுகைகள்

பல ஊழல் பெருச்சாளிகளுக்கு மத்தியில் திருமயத்தில் பிடிபட்ட ஒரு சிறிய ஊழல் எலி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நில அளவைக்கு லஞ்சம் பெற்ற சர்வேயர் கைது, புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புதுறையினர் நடவடிக்கை.. திருமயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் நில அளவை பிரிவில் நில அளவை செய்ய 14000 லஞ்சம் வாங்கிய நில அளவையரை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர். புதுக்கோட்டை மாவட்ட அரசு அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் லஞ்ச ஒழிப்பு துறையினக்கு ஏற்கனவே பலமுறை ரகசியமாக தகவல் தெரிவித்துள்ளனர்.  திருமயம் வட்டம் மலுக்கன்பட்டியைச் சேர்ந்த  பாலமுருகன்  ஊனையூர் அருகே உள்ள வளையன்வயல் பகுதியில் அவரது தாயார் பெயரில் இரண்டு மனையிடம்   வாங்கிய நிலையில் அந்த இடத்திற்கு பட்டா மாறுதல் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார் கிராம நிர்வாக அலுவலர் நில அளவையர்‌ செல்வராஜ் என்பவரை சந்தித்து கவனிக்குமாறு அவரிடம் தெரிவித்துள்ளார்.  நில அளவையரை சந்தித்த  பாலமுருகன் தனது இடத்தை உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய அளவை செய்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு நி...

சிவகங்கை மாவட்ட புதிய ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ்

 சிவகங்கை மாவட்டத்திற்கு புதிய மாவடட ஆட்சியர் நியமனம்; இதுவரை பணி செய்த பொற்கொடி சென்னை சமூக நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார் இந்த நிலையில்  நாகர்கோவில் மாநகராட்சியின் ஆணையராகப் பணியாற்றிய நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ் சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார், தமிழ்நாடு அரசின் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ் மாற்றப்பட்டு சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இதுவரை சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றிய கே. பொற்கொடி, ஐஏஎஸ் மாற்றப்பட்டு சென்னை சமூக நலத்துறையின் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் சி விஜபாஸ்கர் ராஜினாமா ஏற்கப்பட்டதால் ஆறு தொகுதி இடைத்தேர்தலைச் சந்திக்கும் நிலை

அதிமுக முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர் பதவியை ஜூன் மாதம் 16, 2026 ல்  ராஜினாமா செய்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து  ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, விராலிமலை சட்டமன்ற தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மே மாதம் 13 ஆம் தேதியன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுக கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக டாக்டர் சி.விஜயபாஸ்கர் வாக்களித்ததன் காரணமாக அவரது மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் பறிக்கப்பட்டன. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைமை, உண்மையான விமர்சனங்களையும் குறைகளையும் கேட்பதில்லை என்று அவர் குற்றம் சாட்டினார் அதில் "தலைமை என்பது அதிகாரமோ அல்லது ஆணவமோ அல்ல, அது அரவணைப்பது" என்று எடப்பாடி கே.பழனிசாமியைச் சாடினார். மேலும், "இது முடிவல்ல, ஒரு புதிய தொடக்கம்" என்றும் அவர் ஆடியோ செய்தி வெளியிட்டார் அடுத்தகட்ட அரசியல் நகர்வு ஜூன் மாதம் 22-ஆம் ...

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

தமிழ்நாட்டின் நிதிநிலை குறி த்து அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!             தமிழ்நாட்டில் புதிய தமிழக வெற்றிக் கழக  அரசு பொறுப்பேற்ற 30 நாட்களில்  நிதி அமைச்சர் என்.மரிய வில்சன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை மாநிலத்தின் நிதி நிர்வாகத்தில்  திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தேர்தல் பிரச்சாரத்திலும் பதவியேற்பு உரையிலும் வாக்குறுதி அளித்தபடி, கடந்த தி.மு.க.  2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு ஆட்சியில் உள்ள நிதி நிலைமையைப் பகிரங்கமாக ஆவணப்படுத்துதிற அறிக்கை, வெளிப்படைத்தன்மைக்கான உறுதியை வலியுறுத்துகிறது. இது வெறும் கணக்கு அறிக்கை மட்டுமல்ல; எதிர்கால நிதித் திட்டமிடலுக்கு அடித்தளமாகும் ஆவணம். அறிக்கையின்  முக்கியமான தகவல், மாநிலத்தின் நேரடிக் கடன் 2021-ஆம் ஆண்டில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2026-ஆம் ஆண்டில் 10 லட்சம் கோடியைத் தாண்டியது என்பதாகும். off-budget liabilities உள்ளிட்ட உண்மையான பொறுப்புகளைச் சேர்த்தால் மொத்தக் கடன் 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடன்-ஜ...

கீர்த்தி சக்ரா விருது பெற்ற வீரருக்கு முதல்வர் மரியாதை

சென்னை தலைமைச்செயலகத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் சி ஜோசப் விஜய் தூக்கி மகிழ்ந்தார். கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை சென்னை தலைமைச்செயலகம் வரவழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி அரசு சார்பாக ரூபாய் 48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார். தொடர்ந்து, மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய முதல்வர் விஜய் தனது மடியில் அமர வைத்துக்கொண்டார். 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரம் தாக்குதலுக்கு உள்ளானபோதும் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி , அவரது குழுவினரைக் காத்து 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை அவர் சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது ...

தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். இன்று (ஜூன் 15) 56 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக டிஐஜியாகவும் சென்னை காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையர் பால கிருஷ்ணன், சென்னை காவல்துறை சைபர் குற்றப்ப்பிரிவு துணை ஆணையராகவும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III, டிசிபி ஆரோக்கியம், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஐஜி ஆகவும்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் வனிதா, ஆவடி காவல் ஆணையரகத்தின் டிசிபி ஆகவும்  சென்னை காவல்துறை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கண்காணிப்பாளர் ஆகவும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார், சென்னை காவல் வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும்,  காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்காணிப்பாளர் கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும்  காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டீபன் ஜசுபாதம்,  சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III துணை ஆணையராகவும் பணியிட மாற்றம்...