சமீபத்தில் நடிகை கௌதமி தடிமல்வா அதிமுகவில் இருந்து விலகினார் 1990-ஆம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட சினிமாக்களில் கதாநாயகியாக வலம் வந்தவர். 13 ஆண்டு காலம் கமலஹாசன் உடனிருந்த பின் பிரிந்து பாஜகவில் இருந்த காலத்தில் இவர் தான் சென்சார் வாரிய பதவி பெற்றார், சினிமாவில் நடித்து சேர்த்த பணத்தில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பல்வேறு சொத்துகளை வாங்கி வைத்திருந்தார். 2004-ஆம் ஆண்டு நடிகை கௌதமிக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டபோது அவரது சொத்துகளை பராமரிப்பதற்காக பொது அதிகார முகவராக சினிமா படத் தயாரிப்பாளரும், பாஜக நிர்வாகியுமான சி.அழகப்பனை நியமித்திருந்தார். அதன்படி 2004-ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொத்தை விற்று செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை அழகப்பன் வாங்கியுள்ளார். அந்த இடத்தை நடிகை கௌதமி பெயரிலும் அவரது மனைவி நாச்சம்மை பெயரிலும் பதிவு செய்திருந்தார். இதுகுறித்து நடிகை கவுதமி அளித்த புகாரில், கோட்டையூர் அழகப்பன், நாச்சம்மை, மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் கே.எம்.பாஸ்கர், ஓட்டுநர் ஜி.சதீஷ்குமார் ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு ...
பாதுகாப்பு அமைச்சகம் இந்தியாவும், தாய்லாந்தும் உற்பத்தி, ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புதல் தாய்லாந்து – இந்தியா இடையேயான 10-வது பாதுகாப்பு தொடர்பான உரையாடல் 2026 ஜூன் 16 அன்று பாங்காங்கில் நடைபெற்றது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முழு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்களில் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்த உரையாடலுக்கு தாய்லாந்தின் பாதுகாப்புத்துறைக்கான துணை நிரந்தர செயலாளர் அட்மிரல் நட்டபோல் டியூவானிச்சும், இந்திய பாதுகாப்புத்துறை இணைச் செயலாளர் திரு சத்யஜித் மொகந்தியும் இணைந்து தலைமை தாங்கினார்கள். இந்த உரையாடலில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் எழுந்துள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து இருதரப்பும் விவாதித்து பிராந்திய வளர்ச்சியில் உள்ள கண்ணோட்டங்கள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் உறுதிபூண்டனர். முந்தைய உர...