சென்னை தலைமைச்செயலகத்தில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை முதல்வர் சி ஜோசப் விஜய் தூக்கி மகிழ்ந்தார். கீர்த்தி சக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்தை சென்னை தலைமைச்செயலகம் வரவழைத்து முதல்வர் விஜய் பாராட்டினார். அப்போது மீனாட்சி சுந்தரத்தின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி அரசு சார்பாக ரூபாய் 48 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் சி. ஜோசப் விஜய் வழங்கினார். தொடர்ந்து, மீனாட்சி சுந்தரத்தின் குழந்தையை தூக்கிக் கொஞ்சிய முதல்வர் விஜய் தனது மடியில் அமர வைத்துக்கொண்டார். 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 19-ஆம் தேதி தெற்கு காஷ்மீர், குல்காம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை சுற்றி வளைத்ததில் நடைபெற்ற போரில் மீனாட்சி சுந்தரம் தாக்குதலுக்கு உள்ளானபோதும் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தி , அவரது குழுவினரைக் காத்து 5 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார். இதில், மீனாட்சி சுந்தரம் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்த நிலையில் இரு தீவிரவாதிகளை அவர் சுட்டுக் கொன்றாா். தொடா்ந்து, ராணுவத்தில் வீரதீரச் செயலுக்காக வழங்கும் நாட்டின் உயரிய கீா்த்தி சக்ரா விருது ...
தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். இன்று (ஜூன் 15) 56 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக டிஐஜியாகவும் சென்னை காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையர் பால கிருஷ்ணன், சென்னை காவல்துறை சைபர் குற்றப்ப்பிரிவு துணை ஆணையராகவும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III, டிசிபி ஆரோக்கியம், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஐஜி ஆகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் வனிதா, ஆவடி காவல் ஆணையரகத்தின் டிசிபி ஆகவும் சென்னை காவல்துறை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கண்காணிப்பாளர் ஆகவும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார், சென்னை காவல் வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்காணிப்பாளர் கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டீபன் ஜசுபாதம், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III துணை ஆணையராகவும் பணியிட மாற்றம்...