முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

3 ஆண்டுகள் ஒப்பந்தப் பணிக்கு அரசு வழக்கறிஞர் நியமனம் அறிவிக்கை

அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான வழக்கில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய தமிழ் நாடு அரசுக்கு செனனை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த நிலையில்  தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெக கூட்டணி ஆட்சியமைத்தது. தொடர்ந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கான புதிய அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் உச்ச நீதி​மன்றம், சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்றம் மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் கூடு​தல் அட்​வகேட், கூடு​தல் அரசு வழக்​கறிஞர், சிறப்பு அரசு வழக்​கறிஞர்​கள், அரசு வழக்​கறிஞர்​கள் என 204 பணிகள் அடங்கிய நியமனம் குறித்து சட்​டத்​துறை அமைச்​சர் நிர்மல்குமாருக்கு காங்​கிரஸ் கட்சி சார்​பில் கடிதம் அளிக்​கப்​பட்​ட நிலையில் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழ் நாட்டில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் அரசு சார்பாக வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு வருவதில் அரசு அரசியல் தலையீடுகள் உள்ளது.  தற்போதைய ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சியில் ...
சமீபத்திய இடுகைகள்

கடந்த இளவேனிற் காலத்தை மறந்து தவெக நோக்கிப் பயணிக்கும் வசந்தகால அரசியல் பறவைகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சார்பில் போட்டியிட்டு மூன்று முறை சட்டமனன்றத்திற்குத் தேர்வானவவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பேத்தி விஜயதாரணி. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற உறுப்பினர் பதவி முடியும் முன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிட்டு விஜயதாரணி தோல்வியடைய. காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் வெற்றி பெற்ற சூழலில் விஜயதாரணி ஜூன் மாதம் 13 ஆம் தேதி முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைவராக உள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் இணைந்தார். செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி,  ”இரண்டரை ஆண்டுகாலம் பாஜகவில் இருந்தும் மக்கள் பணியாற்றுவதற்கு வாய்ப்பில்லாத சூழ்நிலை இருந்ததாகவும்.  காரணம் கூறியவர் மேலும்  " த.வெ.க-வில் இன்றைக்கு தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கி, ஊழலற்ற ஆட்சியை வழங்கவும், போதை கலாச்சாரத்தை ஒழிக்கவும், பெண்களுக்குப் பாதுகாப்பை வழங்கவும் சூளுரைத்து, நம்முடைய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்  இன்றைக்குத் தமிழகத்தை வழிந...

நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன் ஆலோசனை

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்  நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள் மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன் ஆலோசனை நீட் மறுதேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து மத்திய அமைச்சரவைச் செயலாளர் டாக்டர் டி வி சோமநாதன், தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குநருடன் இன்று ஆலோசனை நடத்தினார். வரும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ள இந்த மறுதேர்வை எவ்விதப் பிரச்சனையும் இன்றி, வெளிப்படையான முறையில் பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான ஒருங்கிணைப்புப் பணிகள் குறித்து அவர் விரிவாக விவாதித்தார். மறுதேர்வைச் சீராக நடத்த மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாக டாக்டர் டி வி சோமநாதன் குறிப்பிட்டார். தேர்வை சீர் குலைக்கவோ, முறைகேடுகளில் ஈடுபடவோ முயற்சிக்கும் நபர்கள் மீது சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். முன்னதாக, ஜூன் 1 அன்று மத்திய அரசுச் செயலாளர்களுடனும், ஜூன் 4 அன்று மாநிலத் தலைமைச் செயலாளர்களுடனும் தேர்வுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விரிவான ஆய்வுக் கூட்டங்களை அவர் நடத்தினார். நீட் மறுதேர்வுச் செயல்முறையின் நம்பகத்தன்மையையும் நேர்மைய...

வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற நிதி ஆயோக் கலந்துரையாடல் கூட்டம்

 நித்தி ஆயோக்  வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் நடைபெற்ற நிதி ஆயோக் கலந்துரையாடல் கூட்டம் நிதி ஆயோக் துணைத் தலைவர் திரு அசோக் லஹிரி தலைமையில் வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (2026 ஜூன் 12) நடைபெற்றது. இதில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா ஆகிய எட்டு மாநிலங்களின் முதலமைச்சர்கள், தலைமைச் செயலாளர்கள் பங்கேற்று வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர். அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பெமா காண்டு பேசுகையில், தங்களது மாநிலத்தின் நீர்மின் ஆற்றல் திறனை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வ சர்மா, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைத் குறைக்க உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்றார். மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் கே சங்மா, பொருளாதார வளர்ச்சி மனித மேம்பாடாக மாற வேண்டும் எனக் குறிப்பிட்டு, ‘மாற்றத்திற்கான பயணம் 2032’ என்ற தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்துகொண்டார். மிசோரம் முதலமைச்சர் திரு லால்டுஹோமா, சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுற...

அந்தியோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்த மத்திய அரசு

அந்தியோதயா: நலிவடைந் த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு நாட்டின் நலிவடைந்த சமூகங்களின் முன்னேற்றத்திற்காக கடந்த 12 ஆண்டுகளில் மத்திய அரசு அந்த்யோதயா கொள்கையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. உள்ளடக்கிய, தரமான கல்வி, திறன் மேம்பாடு,அந்த்யோதயா: நலிவடைந்த மக்களின் கண்ணியம், வளர்ச்சியை உறுதி செய்துள்ள மத்திய அரசு வாழ்வாதார முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் விளிம்புநிலை மக்கள் முன்னேறி வருகின்றனர். மத்திய அரசு பழங்குடியின மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பழங்குடியின மக்களுக்கான வீட்டுவசதி, சாலை இணைப்பு, குடிநீர், மின்சாரம், கல்வி போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற 24,104 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பிரதமரின் ஜன்மன் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் தொடங்கப்பட்ட பழங்குடியினர் மேம்பாட்டு மையங்கள் மூலம் பழங்குடியின மக்கள் வனம் சார்ந்த பொருட்களைச் சேகரித்து, பதப்படுத்தி விற்பனை செய்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில்  பழங்குடியினப் பெண்கள் ஆயுர்வேத ம...