முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கண்ணகி நகர் திமுக பெண் நிர்வாகி கஞ்சா விற்பனையில் கைது

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் அருகில் வசித்த திமுக பெண் நிர்வாகி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதால் கைது, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட  பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த கஞ்சாவை காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாகச் செய்தி. ஏற்கனவே அவர் மீது 15 வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு கண்ணகி நகர் காவல் நிலையத்தின் எல்லையில் அப்பெண் மீண்டும் மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபடக் காரணமாக கண்காணிப்பு இல்லாத காரணம் என அமைந்தது. தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சருடன், கஞ்சா விற்றதாகக் கைது செய்யப்பட்ட பெண் எடுத்த புகைப்படத்தோடு, அவர் திமுகவின் நிர்வாகி எனப் பரவும் தகவல் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட பெண்ணிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு அதன் பின்னணியில் உள்ளவர்களையும் கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்வோரை ஒடுக்க வேண்டும் என காவல்துறையையும், தமிழ்நாடு அரசையும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.கஞ்சா விற்பனையில் ஈடு...
சமீபத்திய இடுகைகள்

விசாரணை நீதிமன்றத்தில் இ பைலிங் சுற்றறிக்கை உடனடி அமல்! வழக்கறிஞர்களின் போராட்டம் தற்காலிக தீர்வா? இல்லை நிரந்தரமா

தமிழ்நாட்டில்  அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் ஆன்லைன் இ-பைலிங் முறையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணை நீதிமன்றங்களில் ஆன்லைன் இ-பைலிங் எனும் மின்னணு முறையில் மனு தாக்கல் செய்யும் நடைமுறையை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் அறிவிப்பாணையை வெளியிட்டதை எதிர்த்து வழக்கறிஞர்களின் பாதுகாப்பு சங்கங்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் ஆன்லைன் இ-பைலிங் முறை கட்டாயத்தை எதிர்த்து அறிவிப்பாணையை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் வழக்கறிஞர்களின் பல சங்கங்களின் சார்பில் அதன் செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமாரும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு. அது தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்த போது. மனுதாரர் மற்றும் சங்கங்கள் சார்பில் மூத்த வழக்கறிஞரும் பார் கௌன்சில் நபருமான எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகின...

சீட்டுப் பேரத்தால் நடக்கும் நோட்டுப் பேரம் சிக்கலில் கூட்டணிகள்

சீட்டுப் பேரத்தால் சிக்கலில் கூட்டணிக் கட்சிகள் ‘டெல்லியில் சிபிஐ அனுப்பிய முதல்  சாட்சி சம்மன் என்பதால், தவெக தலைவர் நடிகர் விஜய் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் எனக் கட்டாயமில்லை. இன்னும் இரண்டு சம்மன்கள் வரையில் அவர் தேவைப்பட்டால் அவகாசமும் கேட்கலாம். ஆனால், மூன்றாவது சம்மனுக்கு கட்டாயம் நேரில் ஆஜராகித்தான் தீர வேண்டும். அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புதுக்கோட்டை பொதுக்கூட்டம் தவிர திருச்சிராப்பள்ளி அரசியல் பயணம் தோல்வியில் முடிந்ததையும், அவருக்கு அ.தி.மு.க தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி எதிர் அரசியல் மூலம் தண்ணீர் காட்டியதையும் மக்கள் கண்ட நிலையில் அதற்குள்ளாக டெல்லியிலிருந்து சந்திப்புக்கு அரசியல் சம்மன் எடப்பாடி கே. பழனிசாமிக்கு வந்து சேர்ந்தது. அதே போல கரூர் விஜயின் மக்கள் சந்திப்பில் சிலர் கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவம் குறித்து விசாரிக்க, த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்க்கு சம்மன் அனுப்பியது டெல்லி சி.பி.ஐ. இப்படி, ஒரே நேரத்தில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கும் அரசியல் மற்றும் சட்டம் என வெவ்வேற...