சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கேரளம் உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா 2026 மார்ச் மாதம் 5 ஆம் தேதி பணி ஓய்வு பெறுவதால் உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரளம் உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டவரை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி 1966 ஆம் ஆண்டு ராய்பூரில் பிறந்தவர். சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். 1992 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒய்.எஸ். தர்மாதிகாரிக்கு ஜூனியராக பணியாற்றினார். 2000 முதல் 2015 வரை அரசின் நிலை ஆலோசகராக, வருமான வரித் துறை, இந்திய ரிச...
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் மதுரை பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மாலை 4 மணியளவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தரிசனத்திற்காக வருகை தந்தார் . அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது சாமி தரிசனம் செய்தார். பின் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தமிழ்நாட்டில் பெண்கள் பெரும் பிரச்சனையில் சிக்கி இருக்கின்றனர். குற்றங்கள் அதிகரித்துள்ளன மதுவால் தங்கள் குடும்பம் அழிந்து கொண்டிருப்பதைக் கண்டு பெண்கள் கலங்குகிறார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் தாய் ,சகோதரிகள், மகள்களுக்கு பாதுகாப்புக்கு நான் உறுதியளிக்கிறேன் . நம் ஆட்சி அமைந்ததும் போதைப்பொருள் மாஃபியாக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்,தமிழ்நாட்டிலேயே சிலர் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விடலாம் என கனவு காண்கிறார்கள். அவர்களின் கனவுகள் கற்பனை கோட்டையாக கானல் நீராக மாறிவிடும். திமுக வெளியேற வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் அதை உங்கள் கண்களில் பார்க்கிறேன் என்று கூறினார். திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகைத் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உயிரை விட்ட பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு பி...