முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கடந்த திமுக ஆட்சியில் குறைந்த விலை முட்டை கொள்முதல் செய்து கூடுதல் விவைக்கு அரசுக்கு விற்பனை ஊழல்

கடந்த கால திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டத்தில் பல முறை அழுகிய முட்டைகளை வழங்கப்பட்டதைக் பாஜகவின் சார்பில் கடுமையாகக் கண்டித்திருந்ததாக முன்னால் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார், மேலும் தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமலிருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை மட்டுமே அல்ல. முட்டைகளின் சேமிப்புக் காலம், மற்றும் தரப் பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழ்நாடு அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்:-, "தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ரூபாய் 5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ரூபாய் 3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதனக் கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது, குற...
சமீபத்திய இடுகைகள்

எல்லையோர சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க உள்துறை அமைச்சர் உத்தரவு

இந்திய நாட்டின் எல்லையிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களுக்கு எதிராக ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மைக்’ கொள்கையை கண்டிப்பாக அமல்படுத்தவும், பல ஆண்டுகளாக உருவாகி வரும் இது போன்ற அனைத்துக் கட்டிடங்களையும் இடிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அனைத்து வங்கிகளும் எல்லைப் பகுதிகளில் வங்கிப் பரிவர்த்தனைகளை சட்டப்பூர்வமாகவும், நிதி ரீதியாகவும் கடைப்பிடிப்பதை உறுதி செய்தல், பெரிய வணிக நிறுவனங்களைச் சரிபார்த்தல், அவற்றின் நிதி ஆதாரங்களை ஆய்வு செய்தல், சில போலி கணக்குகள் மற்றும் தவறான நிறுவனங்களைக் கண்காணித்தல், போலி ஆதார் அட்டைகளைக் கண்டறிதல், எல்லை தாண்டிய கடத்தலைக் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளை நிறைவேற்ற மாவட்ட நீதிபதிகளுக்கு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. செவ்வாயன்று பிகானேரில் நடந்த பாதுகாப்பு மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலுள்ள ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்கள் தொடர்பான பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை மதிப்பீடு செய்தார். ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா, மூத்த மாநில அதி...

கர்நாடக முதல்வரை மாற்ற காங்கிரஸ் தலைமை தீவிரம், சிவக்குமாருக்கு வரப்போகும் வாய்ப்பு

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகாவில் முதல்வர் பதவியை விட்டு சித்தராமையா செல்ல வேண்டும் என்று விரும்புகிறது இந்த மாற்றம் சுமூகமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், முதல்வர் இந்த யோசனையை பரிசீலிக்க கால அவகாசம் காங்கிரஸ் கட்சியின் தலைமை சார்பாக வழங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கர்நாடகாவில் தலைமைத்துவத்திற்கான அனைத்துப் போட்டிகளுக்கும் மத்தியில், மாநிலத்தில் மாற்றம் ஏற்படுவதையும், கட்சி அமைப்பு மற்றும் அரசாங்கத்தை மறுசீரமைப்பதாக, காங்கிரஸ் மேலிடம் செவ்வாய்க்கிழமை முதல்வர் சித்தராமையாவிடம் தெரிவித்ததாக அறியப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால், முதல்வர் பதவியிலிருந்து விலகி, புதிய தலைவராக சிவக்குமாரை அமர்த்த வழி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. மாற்றம் சுமூகமாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், இந்த யோசனையை பரிசீலிக்க முதலமைச்சருக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும்  அவரை மூத்த அரசியல் வாதி என்பதை மதித்து, காலக்கெடுவை நிர்ணயம் செய்யவில்லை எனவும் கூறப்படுவதால், இதில் அதிர்ச்சியடைந்த முதல்வர் சித்தராமையா, பெங்களூ...

மும்மொழிக் கொள்கையை மத்தியரசு 2029 ஆம் ஆண்டு வரை தள்ளி வைக்க முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை யோசனை

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை பயிற்று மொழி குறிந்து கருத்து, அதில் "கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன். குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப...

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் அறிவிப்பு

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சி.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். குறு விவசாயிகளுக்கு ரூபாய் .50,000 வரை பயிர்க்கடன்கள் -முழு தள்ளுபடி. சிறு விவசாயிகள் - 50 சதவீதம் கடன் தள்ளுபடி 20,000 தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிடத்தக்க நிவாரண நடவடிக்கை. “5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி, 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் கடன் தள்ளுபடி...” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி கொடுத்தார்கள்,இன்று  ரூபாய் 50,000 வரை மட்டும்”என அறிவிப்பு அதிலும் மே 2025-பிப்ரவரி 2026 என்று கால அளவீடு செய்தது தான் இது ஏமாற்றம் இல்லையா?  50 சதவீதம் தள்ளுபடி இல்லை ரூபாய் 50,000 மட்டுமே கால அளவு   கட்டுப்பாடு வேறு உள்ள நிலையில் பயனடையும் உண்மை விவசாயிகள் யார் என்பது இனி மேல் தான் தெரியும்.              சிறு, குறு உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வி...

ஆனைமங்கலம் கோவிலின் தற்போதய நிலை, பரிதாபங்கள்

ஆனைமங்கலம் செப்பேடுகள் நெதர்லாந்து நாட்டிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி மீட்டு வந்தார்கள். அந்த செப்பேடுகளை தமிழ்நாடு கொண்டு வரவேண்டும் என பேசுகிறவர்களுக்கு அந்த ஊரின் திருக்கோவிலை நாம் எந்த லட்சணத்தில் வைத்துள்ளோம் எனத் தெரிய வேண்டாமா? இந்த பொக்கிஷங்கள் போல பல ஆயிரம் ஆவணங்கள், கட்டிடங்கள், கோபுரங்கள் தமிழகத்தில் பராமரிப்பு எவ்வாறு உள்ளது என்பதை எவரும் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. பாதுகாப்பாக எங்கு இருக்கவேண்டுமோ அங்கு இருக்கட்டும். இந்த ஊராட்சியில் ஆனைமகானம், மஞ்சவாடி, ஒர்குடி, பூலாங்குடி, ஆனைமங்கலம், என தேவூர் அருகில் உள்ள பழமையான கிராமம் கி.பி. 985 ஆம் ஆண்டில் மாமன்னன் முதலாம் இராஜராஜ சோழன் ஆட்சியில் . இன்றைய இந்தோனேசியப் பகுதியான 'ஸ்ரீவிஜய' நாட்டின் சைலேந்திரகுல மன்னரான மாற விஜயதுங்க வர்மன், தந்தையின் நினைவாக நாகப்பட்டினத்தில் 'சூடாமணி விகாரம்' என்ற பிரம்மாண்ட பௌத்த வழிபாட்டுத் தலத்தைக் கட்டுகிறார். இராஜராஜ சோழன், அந்த பௌத்த விகாரையின் பராமரிப்புச் செலவுகளுக்காக 'ஆனைமங்கலம்' கிராமத்தின் மொத்த நில வருவாயையும் தானமாக வழங்க வாய்மொழியாக ஆணையிடுகிறார். தந்...

காவல்துறையில் சமீப பணி மாற்றங்கள்

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு இன்று மே மாதம் 25 ஆம் தேதி மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு . சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி பணியை கவனித்த மகேஸ்வர் தயாள் காவல் நிர்வாக ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டார். சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் அருண் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஏடிஜிபி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர் முக்கிய பொறுப்பை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.  திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் கரூர் வி.செந்தில் பாலாஜி,    திரச்சிராப்பள்ளி கே.என் நேரு,    திருச்செந்தூர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்,    விழுப்புரம் டாக்டர்.கே.பொன்முடி,  திருவணணாமலை டாக்டர் எ.வ.வேலு,   காட்பாடி டி.துரைமுருகன்,       கோயமுத்தூர் எஸ்.பி.வேலுமணி,       திருவாரூர் ஆர்.காமராஜ்,    விராலிமலை டாக்டர்.சி.விஜயபாஸ்கர்,      வேலூர் கே.சி.வீரமணி,   கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,    பாலக்கோடு கே.பி.அன்பழகன்,   ஆகிய...