ஜாதி வாரிக் கணக்கெடுப்பு: பாமக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்! தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், ஜாதிவாரியான சமூகநீதியை உறுதிப்படுத்தவும், ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவதன் அவசியம் குறித்து விவாதிக்க, நாடாளுமன்ற உறுப்பினரும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜூன் மாதம் 5 ஆம் தேதி, சென்னையில் அனைத்துக் கட்சி மற்றும் ஜாதிய அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்திற்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கூட்டத்திற்கு அதிரடியாக அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி, தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கடசி தென்னிந்திய பார்வேடு பிளாக், நாம்தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டமானது, ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் கோரிக்கையை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள ஒருமித்த கருத்தை வெளிப்படுத்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் மிகவும் அவசியமானது எனப் பார்த்தால் 1931ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தய கம்ப...
தமிழ்நாடு தலைமைச் செயலாளரின் சுற்றறிக்கையில் மாநகராட்சி ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் கள ஆய்வில் இருக்க வேண்டும்! முதலமைச்சர் உத்தரவின் பேரில் காலை திடீர் ஆய்வு, கழிவு மேலாண்மை, தெரு நாய் கட்டுப்பாடு, பள்ளிகளின் உள் கட்டமைப்பு உள்ளிட்ட 16 புள்ளிகள் அடங்கிய உத்தரவு செயல்படுத்தத் தவறினால் ஒழுங்கு நடவடிக்கை. தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் . ககன்தீப் சிங் பேடி, ஐ.ஏ.எஸ்., 03.06.2026 அன்று அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையர்களுக்கும், பொறியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் முதலமைச்சரின் நேரடி அறிவுறுத்தலின் பேரில், பொதுமக்களுக்கு வெளிப்படையான, சீரான சேவைகளை வழங்கிடவே இந்த 16 அறிவுறுத்தல்கள் கூறப்பட்டுள்ளன. அதில் அறிவுறுத்தல் செயல்படுத்த வேண்டிய முறை, முதலாவது காலை ஆய்வு ஆணையர்கள் காலை 7 மணிக்கு முன் களத்தில் இருக்க வேண்டும். பொதுக் கழிப்பறைகள், பேருந்து நிலையங்களை தினமும் பார்க்க வேண்டும். அடுத்ததாக பணி வருகை பயோமெட்ரிக் முறை மூலம் உண்மையான வருகையைக் கண்காணிக்க வேண்டும். மூன்றாவதாக கழிவ...