முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள், எண்ணெய் வள பூமியைப் பிளந்தன

சிறப்புச் செய்திகள் : ரெங்கநாதன் திருப்பதி                                                           " பாலைவனத்து வளைகுடா நாட்டு வானில் மின்னிய ஏவுகணைகள்,    எண்ணெய் வளமான பூமியைப் பிளந்தன! கரிய புகைக்குள், கத்தார் அழுகை மறைந்தது!  நிழல் தேடிய மரங்கள் கூட, நெருப்பாய் எரிந்தன! நிம்மதி தேடிய மனிதர்கள் குழந்தைகள்,அனாதையாய் நின்றனர்! வளைகுடா மண் வரலாற்றில் கறை படிந்தது! போரின் முடிவில், பூமிக்கு மிஞ்சியது எரியும் தழும்புகள்,  அதில்                                விளிம்பில் சமையலுக்கு காத்திருக்கும் எரிவாயு அடுப்புகள் உலகம் முழுவதும்.  பூமி உருண்டையைப் பொரி உருண்டை யாக்கி உடைத்துத் திண்ணும் பசியில் வல்லாதிக்க நடவடிக்கை" .              "அமெரிக்கா (USA) இல்லை யெனில், நேட்டோ (NATO) காகிதப் புலிதான். அணு ஆயுதம் க...
சமீபத்திய இடுகைகள்

கமலின் மையத்துக்கு வீட்டுச் சிறை, பிரேமலதா கட்சிக்கு ஜொலிக்கும் பிறை

கமலின் மையத்தை  சிறை வைத்து பிரேமலதா கட்சிக்கு பிறை சூடடிய இந்தியா கூட்டணி இதுகுறித்து கமலஹாசன் செய்யாளர்களிடம் "கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், தேச நன்மைக்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இணைந்தோம். கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம். அதன் விளைவாக, மக்கள் நீதி மய்யத்தின் குரல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஒலித்தது. அன்று முதல் இன்று வரை நம்முடைய தனித்துவத்தை விட்டுக்கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை பேணி வருகிறோம்.2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை இரண்டு கட்டமாக நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தையின் போது முதல்வரும், துணை முதல்வரும், திமுக பேச்சுவார்த்தை குழு உறுப்பினர்களும் அன்போடும் மரியாதையோடும் நட்புணர்வோடும் நடந்துகொண்டார்கள் என்பதை பதிவு செய்யத்தான் வேண்டும். இன்றிருக்கும் இக்கட்டான அரசியல் சூழலில், நமக்குத் தருவதாகச் சொல்லியிருக்கும் தொகுதி எண்ணிக்கையும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற பரிந்துரையும், மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்களுக்கும் எனக்கும் ஏற்புடையதாக இல்லை, அவர்களது தரப்...

இனி அட்டவணை பட்டியலினக் கிருஸ்தவர்கள் என இந்தியாவில் யாருமில்லை -உச்சநீதிமன்றம்

இனி அட்டவணை பட்டியலினக் கிருஸ்தவர்கள் என இந்தியாவில் யாருமில்லை,  மதம் மாறினால் SC/ST அட்டவணை பட்டியலில் நீடிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.  கிருஸ்தவ மதத்திற்கு மாறிய பின் பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினர் எனும் சட்டப் பாதுகாப்பு செல்லாது;  ஆந்திரப்பிரதேச கிருஸ்தவ மத போதகர் அளித்த புகாரை ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் மேல்முறையீட்டில் அதை உச்சநீதிமனறம் உறுதிப்படுத்தியது,, ஆந்திரப் பிரதேச ஹரிஜன அட்டவணைப் பட்டியல் இனத்தைச் சேர்ந்து  முன்பு  கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவரின் ஜாதிச் சான்றிதழை அதிகார அமைப்புகள் இரத்து செய்யாத காரணத்தால் அதை அவர் தவறாகப் பயன்படுத்தி சலுகை உரிமை பெற்றால் அது மட்டுமே அவருக்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாதுகாப்பை அளித்து விட முடியாது. அவர் தற்போது கிருஸ்தவராக இருப்பதால், அவர் பட்டியல் ஜாதி இல்லை எனவே அவர் அந்த அந்தஸ்தைக் கோரும் தனது உரிமையை மாறிய போதே இழந்துவிட்டார், என்றும், அதனால் அட்டவணை பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்...