சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தவெகவைத் தவிர்த்து நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி தேர்தல் விவாத நிகழ்ச்சியில், தி.மு.க. ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் அதன் செய்தியாளர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் படுகாயமடைந்த சம்பவம் நடந்தது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனியார் தமிழ் தொலைக்காட்சி 'தேர்தல் பயணம்' என்ற பெயரில் நேரடி விவாத நிகழ்ச்சியை நடத்துகிறது. இதன் ஒருபகுதியாக, நேற்று மார்ச் 23 ஆம் தேதி மாலை காரைக்குடி மகர்நோன்புத் திடலில் நடைபெற்றதில் தி.மு.க, சார்பில் மாவட்ட துணைச் செயலாளரும் திருப்புவனம் பேரூராட்சி மன்றத் தலைவருமான கட்சியின் பிரமுகர் சேங்கை மாறன் மற்றும் அ.தி.மு.க சார்பில் திருப்புத்தூர்ஜமுன்னால் சட்டமன்ற உறுப்பினர் கே. கே. உமாதேவன் மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேதாரண்யம் தொகுதி வேட்பாளரான மாநில ஒருங்கிணைப்பாளர் இடுப்பாவனம் கார்த்திக் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் இடும்பாவனம் கார்த்திக் தனிப்பட்ட விவகாரம் குறித்து பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு கூடியிருந்த தி.மு.க.வினர் திடீரென மேடையை நோக்கி நாற்காலிகளை வீசித் தாக்குதலில் ஈ...
சாத்தான்குளம் வழக்கின் நியாயத் தீர்ப்பு நீதி வென்றது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சி.பி.சி.ஐ.டி-காவல்துறைக்குபாராட்டு என வழக்கறிஞர் ஹென்றி திபேன் கருத்து, இந்த வழக்கில் தண்டனை விபரம் மார்ச 30-இம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவிப்பு, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த கிருஸ்தவ நாடார் வணிகர்களான தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் இருவரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், விசாரணையின்போது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் இருவரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். காவல்துறையினர் தாக்கியதாலேயே இருவரும் பலியானதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தந்தை மகன் படுகொலையானது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ் தொடரடப்பட்ட வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து வ...