தமிழ்நாடு முழுவதும் 35 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில், 82 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற ஊழல் பணம் சிக்கியது. சோதனை மூலம் சிக்கிய ரூபாய் .82.10 லட்சத்தில், G-PAY மூலமாக மட்டுமே ரூபாய் .68.32 லட்சம் லஞ்சமாக வாங்கியது தெரியவந்தது தமிழ்நாடு முழுவதும் உள்ள 35 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத மொத்தம் ரூபாய் 82.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பொதுமக்கள் அளித்த தொடர் லஞ்சப் புகார்களின் அடிப்படையில், நேற்று மதிய உணவு இடை வேளைக்குப் பிறகு இந்த திடீர் சோதனைகள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன. சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த தொகை: ரூபாய் 82,10,832. ரொக்கப் பணம் மற்றும் கணக்கில் காட்டப்படாத ரொக்கமாக ரூபாய் 13,78,250 கைப்பற்றப்பட்டது. டிஜிட்டல் பரிவர்த்தனை (GPay) பணமும் சந்தேகத்திற்குரிய ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகள் மூலம் லஞ்சமாகப் பெறப்பட்ட ரூபாய் 68,32,582 கண்டறியப்பட்டத...
சமூகநலத்துறை அரசுத் திட்ட பயனாளியிடம் லஞ்சம் வாங்கிய வட்டார விரிவாக்க அலுவலர் கைது! சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலுகா பகுதியில், அரசு திட்ட பயனாளியிடம் ரூபாய் .1,000 லஞ்சம் பெற்றதாக வட்டார விரிவாக்க அலுவலர் (Extension) ஜெயராணியை சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) கைது செய்தனர். அரசுத் திட்டத்தின் கீழ் கிடைக்க வேண்டிய நலன்களை வழங்குவதற்காக, சம்பந்தப்பட்ட பயனாளியிடம் சட்டவிரோதமாக ரூபாய் .1,000 லஞ்சம் கேட்டதாக புகார், இதையடுத்து, பாதிக்கப்பட்ட நபர் சிவகங்கை மாவட்ட ஊழல் தடுப்புக்கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகாரின் அடிப்படையில் அவர்கள் பொறிவைக்கும் திட்டத்தின்படி, பினாப்தலீன் இரசாயனப் பொடி தடவிய பணத்தை அரசு சாட்சிகள் முன்னிலையில் புகார்தாரர் கொடுத்த போது, வட்டார விரிவாக்க அலுவலர் ஜெயராணி அந்த லஞ்சப் பணத்தை பெற்ற போது மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர்அவரை பணம் பெற்ற கையுடன் பிடித்துக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயராணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்...