முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். இன்று (ஜூன் 15) 56 ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஐஜி உமா, சென்னை காவல்துறை தலைமையக டிஐஜியாகவும் சென்னை காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையர் பால கிருஷ்ணன், சென்னை காவல்துறை சைபர் குற்றப்ப்பிரிவு துணை ஆணையராகவும், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III, டிசிபி ஆரோக்கியம், சென்னை சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஐஜி ஆகவும்,  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் வனிதா, ஆவடி காவல் ஆணையரகத்தின் டிசிபி ஆகவும்  சென்னை காவல்துறை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் குமார், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன கண்காணிப்பாளர் ஆகவும், புளியந்தோப்பு துணை ஆணையர் முத்துக்குமார், சென்னை காவல் வடக்கு போக்குவரத்து துணை ஆணையராகவும்,  காத்திருப்போர் பட்டியலில் இருந்த கண்காணிப்பாளர் கோபி, சென்னை பூக்கடை துணை ஆணையராகவும்  காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஸ்டீபன் ஜசுபாதம்,  சென்னை மத்தியக் குற்றப்பிரிவு III துணை ஆணையராகவும் பணியிட மாற்றம்...
சமீபத்திய இடுகைகள்

முதல்வர் அறிவித்த அரசு மது விற்பனைக் கடைகள் 717 மூடிய பட்டியல் வெளியானது

 வழிபாட்டு ஸதலங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகாமையில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த 717 அரசு மது விற்பனைக் கடைகளை மூடுவதற்கு முதல்வர்  உத்தரவிட்டிருந்ததன்படி, தற்போது மூடப்பட்ட அந்த 717 கடைகளின் அதிகாரப்பூர்வ விவரப் பட்டியலைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் 717 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டதாக உள்ள விவரம் :-  சென்னை வடக்கு மாவட்டத்தில் 13 கடைகள், சென்னை மத்தியில் -9 , சென்னை தெற்கில்-9, காஞ்சிபுரம் வடக்கு-10, காஞ்சிபுரம் தெற்கு-8, திருவள்ளூர் கிழக்கு-27, திருவள்ளூர் மேற்கு-6 என சென்னை மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல், கோயம்பத்தூர் வடக்கு-48, கோயம்பத்தூர் தெற்கு-23, கரூர்-8, ஈரோடு-42, திருப்பூர்-31, நீலகிரி-27 என கோயம்பத்தூர் மண்டலத்தில் மொத்தம் 179 அரசு மது விற்பனைக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அரக்கோணம்-7, தர்மபுரி-7, கிருஷ்ணகிரி-7, நாமக்கல்-14, சேலம்-22, திருவண்ணாமலை-19, வேலூர்-6 என சேலம் மண்டலத்தில் மொத்தம் 82 அரசு மதுக் கடைகள் மூடப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் 21 கடைகள், நாகப்...

வடமாநிலக் குடியிருப்பில் மூன்று வயதுக் குழந்தை பாலியல் வன்கொடுமைக் கொலை பீகார் மாநில குற்றவாளி கைது

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகில் , 3 வயது பெண் குழந்தை பாலியல் தாக்குதலுக்குள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கொடிய குற்றத்தில் தொடர்புடைய வடமாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல, காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில், பத்து வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றங்களில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்பு இருப்பது அதிகரித்துள்ளது.  இந்த ஜூன் மாதத்திலேயே, சென்னையில் மூதாட்டியிடம் சங்கிலி பறிக்க முயன்ற ஒரு வடமாநில இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கடந்த மாதம், தாம்பரம் அருகே இளம்பெண்ணிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கு, திருவள்ளூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய வழக்கு, சென்னை வேளச்சேரி பேருந்து நிலையம் அருகே 61 வயது பெண், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு, சென்னை வேளச்சேரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், 15 வயது சிறுவன் உட்பட மூன்று வடமாநில தொழிலாளர்கள் கைது, சென்ன...

ஈமுக்கோழி பண்ணை மோசடி வழக்கில் இருவருக்கு பத்தாண்டுகள் சிறை மற்றும் அபராதம்

கோயமுத்தூரில் ஈமு கோழி ப் பண்ணை நடத்தி ரூபாய் .2.37 கோடியை மோசடி செய்த வழக்கில் இரு​வருக்கு தலா பத்தாண்டுகள் சிறைத் தண்​டனை விதித்து உத்​தர​வு. நாமக்​கல் மாவட்​டம் திருச்​செங்​கோட்​டில் உள்ள பெரியமணலி பகு​தி​யில் கடந்த 2012-ஆம் ஆண்டு ஈமுக்​கோழிப் பண்​ணையை சந்​திரசேகரன்​ (வயது 48), சோமசுந்​தரம்​ (வயது 55) ஆகியோர் நடத்தி வந்​த நிலையில் வாடிக்​கை​யாளர்​களை  ஏமாற்ற இவர்​கள் அறி​வித்த கவர்ச்சித் திட்​டங்​களை நம்​பி, நூற்​றுக்​கணக்​கான மக்​கள் லட்​சக்​கணக்​கில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், அறி​வித்​த​படி முதலீட்​டாளர்​களுக்கு லாபத் தொகையை பங்கிட்டுக் கொடுக்​க​வில்​லை.   அதற்கு அரசு மற்றும் செபி மற்றும் ரிசர்வ் வங்கி அனுமதிகளைப் பெறவில்லை முதலீடு செய்த பணத்​தை​யும் திரும்பத் தரவில்​லை. இதனால் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் நாமக்கல் மாவட்டப் பொருளா​தார குற்​றப்​பிரிவினரிடம் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், மொத்​தம் 115 பேரிடம் ரூபாய் .2 கோடியே 37 லட்​சத்து 98 ஆயிரம் வசூலித்து இவர்கள் மோசடி செய்​தது தெரிய​வந்​ததையடுத்​து, பண்ணை உரிமை​யாளர்​கள் சந்​திரசேகரன், சோமசுந்​தரம், காசாளர் அம...

பாவாடை சாமியைக் காக்க என் எல் சி க்கு எதிராகப் போராடும் படையாட்சிகள்

பாவாடை சாமியைக் காக்க என் எல் சி க்கு எதிராகப் போராடும் படையாட்சிகள், ஆதரவுத் தலைவர்களின் கண்டனக் குரல். .  என்.எல்.சி நிலக்கரி சுரங்க மூன்றாவது விரிவாக்கத்திற்காக 30 கிராம மக்களின் குலதெய்வக் கோயிலை இடிப்பதா?  பாமக மற்றும் தவாக கட்சிகள் கண்டனம் .பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த மந்தாரக்குபபம்,தெற்கு மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை, நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக கையகப்படுத்நி இடிக்க என்.என்.சி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் இறை நம்பிக்கையாகத் திகழும் அங்காளம்மன் பாவாடைராயன் கோயிலை இடிக்க என்.எல்.சி நிர்வாகம் துடிப்பது கண்டிக்கத்தக்கது. தெற்கு மேலூரில் அமைந்திருக்கும் அங்காளம்மன் பாவாடைராயன் கோயில் அப்பகுதியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்களின் குலதெய்வக் கோயிலாக திகழ்ந்து வருகிறது. கடலூர் மாவட்டத்திற்கு அப்பால் அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் குல தெய்வக்கோயிலாகத...

PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல் முறைகேடு? உரிய அலுவலர்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு

 PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் ஊழல் முறைகேடு? உரிய அலுவலர்கள் உள்பட 12 பேர் மீது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு! தென்காசி மாவட்டம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் பழங்கோட்டை ஊராட்சியில், மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா (கிராமப்புற)  PMAY(G) வீடு வழங்கும் திட்டத்தில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்புக் கண்காணிப்ப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை நடவடிக்கை அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சி பணியாளர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் என மொத்தம் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தகுதியற்ற நபர்களைப் பயனாளிகளாகத் தேர்வு செய்தல், அரசு நிதியை விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்குதல், ஆவணங்களில் தவறான தகவல்களை பதிவு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. ஏழை மற்றும் வீடற்ற மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மத்திய அரச...