தமிழ்நாடு முதலமைச்ச ர் தனிசெயலர்களின் துறைகள் ஒதுக்கீடு..முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் தனிச் செயலாளர்கள் ஆட்சிப்பணி நிர்வாகத்தில் செந்தில்குமார், லட்சுமி பிரியா, அண்ணாதுரை, விஷ்ணு ஆகியோருக்கு இதில் துறை ரீதியான சந்திப்பு, திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து கவனம் செலுத்தும் விதமாக தனிச் செயலாளர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செந்தில்குமாருக்கு நிதித்துறை, மதுவிலக்கு, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, விஜிலன்ஸ் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன லட்சுமி பிரியாவுக்கு சுற்றுச்சூழல், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறை, வனத்துறை, வீட்டு வசதித்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாதுரைக்கு இயற்கை வளங்கள், நீர்வளத்துறை, வேளாண்மை, கால்நடைப பராமரிப்பு , போக்குவரத்துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விஷ்ணுவுக்கு வணிக வரித்துறை, சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், விளையாட்டு மேம்பாட்டு துறை உள்ளிட்டவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அரசு துறைகளிலிருந்து, முதல்வர் அலுவலகத்திற்கு வரும் கோப்புகளை, துறைகளில் செயல்படுத்தப்படும் பணிகள் விபரங்களை, முதல...
மனித உயிர்களின் பாதுகாப்பைக் கருதி, வெறிநாய்க்கடி பாதித்த மற்றும் ஆபத்தான தெருநாய்களைக் கருணைக்கொலை செய்ய உச்ச நீதிமன்றம் முதல்முறையாக அனுமதி அளித்துள்ளனர் பதிவு செய்யப்பட்ட வெறிநாய்கடி அதாவது ராபிஸ் மரணங்களுக்கு ஈடாக குடித்து விட்டு போதையில் நிகழ்த்தும் வாகன விபத்து மரணங்கள் அதிக எண்ணிக்கை உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்.? குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை தண்டிக்க வேண்டும். ஆண்டிற்கு சராசரியாக 5000 ராபீஸ் மரணங்கள் பதிவாகின்றன. பதிவு செய்யப்படாத மரணங்களும் உள்ளது. அதையும் சேர்த்தால் 10,000 என்ற அளவில் கூட இருக்கலாம். ஒவ்வொரு உயிரும் நாட்டிற்கும் அதைவிட சார்ந்த குடும்பத்திற்கும் மிகவும் முக்கியமானது. ஒரு உயிரிழப்பு என்பது அந்த குடும்பத்தை முற்றிலும் சிதைத்து விட கூடும். ராபீஸ் மரணங்களுக்கு தீர்வு அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடன் கருணைக்கொலை செய்வதும் அந்த இனத்தை அழிப்பதும் தீர்வு அல்ல. அது அயல் நாட்டு நாய்கள் வளர்க்க உதவுமே தவிர நம் நாட்டு இன நாய்கள் அழிகப்பட்டுவிடும் அபாயம் உள்ளதை இங்கு கவனிக்க வேண்டும். ராபீஸ் மரணங்களுக்கு யாரெல்லாம் காரணம்? இதற்கு காரணம் முறையாக நாய...