தையூரில் கூலிப்படையை ஏவி ஒரே ஜாதியில் நடந்தது ஆணவக் கொலையா? போராட்டம் பின் விசாரணை, மகளின் காதலனைக் கொன்றதாக தவெக நிர்வாகியுடன் சிலர் கைது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா தையூரில் பிரவீன்குமார் (வயது 23) என்ற அட்டவணை பட்டியல் சமூக இளைஞர் அதே சமூக நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியதாகத் தகவல் மேற்கண்ட சம்பவத்தின் பின்னணி தையூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரவீன்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது. பெற்றோர் எதிர்ப்பு: இதற்கு பெண்ணின் வீட்டார் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 16-ஆம் தேதி இரவு, பெண்ணின் உறவினர்கள் மற்றும் கூட்டாளிகள் பிரவீன்குமாரைக் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிய நிலையில் படுகாயமடைந்த பிரவீன்குமார் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு ஐந்து நாட்கள் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 21 ஆம் தேதியில் உயிரிழந்தார்...
மாஞ்சோலை மற்றும் மேகமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவு ‘தமிழ்நாட்டிற்கு ராணுவத்தை அனுப்புவோம். தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை! என மாஞ்சோலை, மேகமலை அதை சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய மனு மற்றும் மாஞ்சோலையில் வசித்து வரும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யக்கோரி ஜான் கென்னடி என்பவர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு அரசின் சமூக நீதி அமைச்சகம் தரப்பு வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வை நியமித்து அவர் ஆஜராகி, மேகமலை புலிகள் சரணாலய வனப்பகுதியில் 4600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும், அங்கு பல ஏக்கர் நிலங்களில் இலவம்பஞ்சு மரம் பயிரிடப்பட்டுள்ளது.அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவர்களில் சில குடும்பங்கள் பல ...