முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

புதிய வீட்டு மின் இணைப்பு வழங்க ரூபாய் 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகில் பழங்கோட்டை மின்சார வாரிய அலுவலகம் புதிய வீட்டு மின் இணைப்பு வழங்க ரூபாய் . 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கருப்பசாமி (வயது 53) ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பணம் பெற்ற கையுடன் கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கை 24 ஆகஸ்ட் 2026 ஆம் தேதி பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் குருவிக்குளம் அருகில் உள்ள கொக்குகுளம் கிராமத்தைச் சேர்ந்த நபர் காளிராஜ் (வயது 32).காரணம்: அவரது தந்தையின் பழைய வீட்டைப் புதுப்பித்து, அதற்குப் புதிய மின் இணைப்பு பெறுவதற்காக இணைய வழியில் விண்ணப்பித்து, பதிவு செய்து ரூபாய் . 5,575 கட்டணத்தையும் செலுத்தியுள்ளார் மின் இணைப்பு வழங்குவதற்கு முன்னதாக இடத்தை நேரில் பார்வையிட்டு அறிக்கை (Site Inspection Report) அனுப்ப வேண்டும் எனக் கூறி, அதற்கு வணிக ஆய்வாளர் கருப்பசாமி ரூபாய் . 2,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜ், தென்காசி மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின்படி, பினாப்தலீன் ரசாயனப் பொடி த...
சமீபத்திய இடுகைகள்

மேற்கு வங்காள மாநில சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகர் காலமானார்

மேற்கு வங்காள மாநில சட்டமன்ற முன்னாள் துணை சபாநாயகரும் திரிணாமுல் காங்கிரஸ்  கட்சியின் மூத்த தலைவருமான ஆஷிஷ் பானர்ஜி, பிர்பூம் மாவட்டத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் காலமானார். நேற்று ஆகஸ்ட் 16, 2026 ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.  இது தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது. பிர்பூம் மாவட்டத்தின் ராம்பூர்ஹாத் தொகுதியில் இருந்து 5 முறை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மம்தா பானர்ஜி அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை, விவசாயத்துறை மற்றும் ஆயுஷ் அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2026 தற்போது நடந்த மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.க வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தில், "அரசியலுக்கு வந்தது ஒரு தவறு" என்றும், தன் வாழ்நாளில் எந்த ஊழலிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கே அண்ணாமலை தலைமையில் சென்னையில் பேரணி

சென்னையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே பசுமைப் பகுதியாக உள்ளது.. நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது கவலை தரும் நிலை,த.வெ.க ஆட்சியைக் கவிழ்க்கும் சதி அரசியலை எதிர்க்கட்சிகள் செய்கிறது. சில அமைச்சர்கள் கமிஷன் வாங்கத் தொடங்கியுள்ளனர் என அண்ணாமலை குற்றச்சாட்டு, இயற்கை வளங்களைப் பாதுகாக்க வலியுறுத்தி அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற பேரணி திரளாக பங்கேற்ற வீ தி லீடர்ஸ் அமைப்பினர்..!"          த.வெ.க அரசில் லஞ்சம், ஊழல் மீண்டும் ஆரம்பித்துள்ளது..!        சில அமைச்சர்கள் 2 சதவீதம் , 3 சதவீதம் கமிஷன் கேட்கும் எல்லா ஆடியோவும் என்னிடம் இருக்கு..!  " ஊழல் விவகாரத்தில் நீங்கள் எப்படி இருக்கீங்களோ அதை உங்கள் அமைச்சர் பெருமக்களுக்கும் அறிவுறுத்துங்கள் முதல்வர் விஜய் அவர்களே..! ஓராண்டுக்கு பின் நான் பிரச்சனையைக் கிளப்புவதற்குள் அதனைக் கவனியுங்கள்..! கொஞ்சம் கடிவாளம் போடுங்க.. லூஸ் விட்ராதீங்க..என அண்ணாமலை பேசிய போது வலியுறுத்தினார்  ஒரு பக்கம் த.வெ.க மறுபக்கம் வீ த லீடர்ஸ்.. நம்முடைய காலத்தில் ஊழலை ஒழிப்போம் என்றும...

உயர்நீதிமன்ற காணொலி விசாரணைக்கு விதிகள், 2026

உயர்நீதிமன்ற காணொலி விசாரணைக்கு விதிகள், 2026 Gazette ல்  30 பக்க புதிய விதிகள் அமல் வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் மற்றும் வழக்காடிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல் சென்னை  உயர்நீதிமன்ற Video Conferencing Rules, 2026 தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய விதிகள், நீதிமன்ற நடவடிக்கைகளை Video Conferencing (VC) மற்றும் Hybrid முறையில் மேற்கொள்வதற்கான நடைமுறைகளை ஒழுங்குபடுத்துகின்றன. முன்னதாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் Video Conferencing in Courts Rules, 2020 நடைமுறையில் இருந்தன. அந்த விதிகள் தமிழ்நாடு அரசிதழில் 15.07.2020 அன்று வெளியிடப்பட்டதாக உயர்நீதிமன்ற ஆவணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது தற்போது 2026 விதிகள் மூலம், நீதிமன்ற நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான நடைமுறைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விதிகளின் முக்கிய நோக்கம்  Video Conferencing மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது: நீதிமன்ற நடவடிக்கையின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படுதல்; தரப்பினருக்கு சமமான வாய்ப்பு வழங்குதல்; வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளின் தொலைநிலை ஆஜரை ஒழுங்குபடுத்துதல்; சாட்சிகளை தொல...