தேசத்தின் உயிர்நாடி விவசாயம் அடுத்தபடியாக நெசவு மானம் காக்கும் மாண்பு கொண்ட கைத்தறித் தொழிலையும், நெசவாளர் பெருமக்களின் உழைப்பையும் போற்றும் வகையில். 1905 ஆம் ஆண்டு துவங்கிய சுதேசி இயக்கத்தின் தொடர்ச்சியாக, 2015 ஆம் ஆண்டு முதல் தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது 12 ஆவது தேசிய கைத்தறி தினம் இன்று "தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும் நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு"...... இதன் .விளக்கம்: "தேய்ந்த மிதிக்கு தெரிந்திருக்கும்" – நெசவு செய்யும்போது தறியின் மிதிக்கட்டையை அதாவது பெடலை கால்களால் மாறி மாறி மிதித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு நெசவாளர் தன் வாழ்நாள் முழுவதும் அந்தத் தறியிலேயே அமர்ந்து கால்களால் மிதித்து மிதித்து, அந்த மரக்கட்டையே தேய்ந்து போயிருக்கும். காஞ்சிபுரம் சென்றால் கால் ஆட்டிக் கொண்டு சாப்பிடலாம் என்பதன் அர்த்தமும் இதுதான், "நெய்தவன் சேய்கள் வளர்ந்த செழிப்பு" – அந்த மிதிக்கட்டை சும்மா தேயவில்லை; தன் பிள்ளைகளை அல்லது சேய்களை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும், அவர்கள் பசி இல்லாமல், செழிப்பாக வளர வேண்டும் என்பதற்காக அந...
தவெகவின் செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமனம் இவர் 3 ஆண்டுகள் இந்தப் பதவி வகிப்பார். சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பதவி ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் சமூகங்களின் பிரச்னைகளை நேரடியாக அரசுக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாலம்.சிறுபான்மையினர் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அமைப்பே தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம். சிறுபான்மையினர் மீதான புகார்களை விசாரித்தல், அவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை உறுதி செய்தல், சமூக நீதி தொடர்பான கொள்கைகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் மேற்கொள்கிறது. பெலிக்ஸ் ஜெரால்டு தமிழ்நாட்டில் ஊடகவியலாளர் மற்றும் யூடியூபர் Red Pix 24x7 யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் சன் டிவி, என்டிடிவி மற்றும் சத்யம் டிவி யில் பணியாற்றியுள்ளார்.'ரெட் பிக்சு' (RedPix) செய்திச் சேனலின் நிர்வாக ஆசிரியராகச் செயல்பட்டார். 2024 ஆம் ஆண்டில் பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சவுக்கு சங்கருடன் கைது செய்யப்ப...