முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

மதுரை நாயக்க மன்னர்கள் கால ஒற்றர் படையான பூம்பூம் மாட்டுக்காரர்களும், ஆடை நாகரீகம் அறிந்த சௌராஷ்ட்ரார்களும் குறித்த வரலாறு

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்களில் மாமன்னர் திருமலை நாயக்கர் (பொஆ1623 முதல் 1659 வரை) உள்ள ஆட்சி செய்த காலத்தில், நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்காக மிகவும் வலுவான ஒற்றாடல் முறை அதாவது உளவுத் தகவல் பரிமாற்றம் நடைமுறையில் இருந்தது. எதிரி நாடுகளின் ராணுவ நகர்வுகள் மற்றும் உள்நாட்டு சதித் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிய இந்த ஒற்றர்கள் படை பயன்படுத்தப்பட்டனர்மன்னர் திருமலை நாயக்கர் காலத்து ஒற்றர் முறையின்  தலைமை மற்றும் கட்டுப்பாடு ஸ்தானாபதி  ஒற்றர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் அனைவரும் 'ஸ்தானாபதி' (அரசின் தூதுவர் அல்லது உயர் அதிகாரி) என்பவரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டனர், ஒரு ஒற்றர் வழங்கும் தகவல் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்த, அவருக்குத் தெரியாமல் மற்றொரு ஒற்றர் நியமிக்கப்பட்டார்,  ஒரு ஒற்றர் தவறான தகவலை அளித்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டாரே தவிர, அவருக்கு மரண தண்டனையோ கடுமையான சித்திரவதையோ எதுவும் வழங்கப்படவில்லை. அண்டை அரசர்கள் ஆட்சி செய்த மைசூர், தஞ்சாவூர் மற்றும் பிஜப்பூர் சுல்தானகங்களின் ரகசியங்களை அறிய வேண்டி இருந்ததால், ஒற்றர்கள் பல ம...
சமீபத்திய இடுகைகள்

தமிழநாடு முதலவர் குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட நபர் டெல்லி விமான நிலயத்தில் கைதாகி புழல் சிறையில் அடைப்பு

தமிழநாடு முதலமைச்சரை ஆள்மாறாட்டம் செய்து அல்-உருவாக்கப்பட்ட போலி மோசடி வீடியோ காட்சிகள் பரவியது தொடர்பாக சிபிசிஐடி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் உருவத்தை ஆள்மாறாட்டம் செய்து AI உருவாக்கிய ஆழமான போலி மோசடி வீடியோவுக்கு எதிராக CBCID காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சைபர் ரோந்து பணியின் போது, ​​சிபிசிஐடி சைபர் கிரைம் குழு பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் பரவும் போலி வீடியோக்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த வீடியோக்கள் பொய்யாக நிதி உதவி வழங்குவதாகவும், வாட்ஸ்அப் எண்களை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.  01.09.2026 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விவரங்களைப் பெறவும் போலியான உள்ளடக்கத்தை அகற்றவும் மெட்டாவைத் தொடர்புகொண்டனர். இதுபோன்ற வீடியோக்கள், தொலைபேசி எண்கள் அல்லது வாட்ஸ்அப் குழுக்களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தமிழ்நாடு காவல்துறை பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு முதல்வர் குறித்து பதிவட்ட நபர்தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து செயற்கை நுண்ணறிவு (AI Deepfake) தொழில்நுட்பம் மூலம் போலி வீடியோக்களை தயாரித்து, சமூக வலைத்தளங...

தமிழ்நாடு கிராம ஊராட்சிகளுக்கான திறன் மேம்பாட்டிற்கு கௌரவ ஆலோசகர் நியமனம்

தமிழ்நாடு கிராம ஊராட்சிகளுக்கான திறன் மேம்பாட்டிற்கு கௌரவ ஆலோசகர் நியமனம் !   தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை G.O.(1D) No.399 / 02.09.2026 ன்படி மறைமலைநகர் மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சியியல் நிறுவனம் (SIRD) சார்பில், கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாட்டிற்காக முன்னாள் பேராசிரியர் டாக்டர் ஜி. பழனித்துரை கௌரவ ஆலோசகராக தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருககு மாதம் ரூபாய் 1 லட்சம் கௌரவ ஊதியம் வழங்கப்படும். SIRD-ன் Training Corpus Fund மூலம் கௌரவ ஊதியம் வழங்கப்படும். கிராம ஊராட்சிகளின் திறன் மேம்பாடு தொடர்பான பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்குவார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் மற்றும் தொடர்புடைய செயல்பாடுகளில் தொழில்முறை ஆலோசனை வழங்குவார். கிராம ஊராட்சிகளின் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பேராசிரியர் டாக்டர் ஜி. பழனித்துரை  இந்தியாவின் பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிர்வாகத் துறைகளில் மிகச்சிறந்த வல்லுநராகவும், கல்வியாளராகவும் அறியப்படுபவர் ஆவார். திண்டுக்கல் காந்திகிரா...

இஸ்ரோ 9 முக்கிய ஊழியர் சங்கங்கள் தலைவர் வி. நாராயணனுக்கு அதிகாரப்பூர்வக் கடிதம்

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) ஒன்பது முக்கிய ஊழியர் சங்கங்கள், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிப்பது தொடர்பான அரசின் கொள்கைகள் மற்றும் தங்களின் எதிர்காலப் பணிப் பாதுகாப்பு குறித்து இஸ்ரோ தலைவர் வி. நாராயணனுக்கு அதிகாரப்பூர்வக் கடிதம்  விவகாரத்தின் பின்னணி, இஸ்ரோவின் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு செயல்பாடுகளை தனியார்மயமாக்குதல்/பரிமாற்றம் செய்தல், இஸ்ரோவின் எதிர்கால பங்கு மற்றும் பணியாளர்கள் மற்றும் வருங்கால சந்ததியினருக்கு சேவை செய்வதில் ஏற்படும் தாக்கம் தொடர்பான அரசின் கொள்கைகள் குறித்து இஸ்ரோ ஊழியர்கள் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை கோருகின்றனர். ஊழியர்களின் கவலைகள் மற்றும் அதற்கு இஸ்ரோ அளித்துள்ள விளக்கம் விண்வெளித் துறையின் தாராளமயமாக்கல் மற்றும் வணிகமயமாக்கலை மேற்பார்வையிடும் அமைப்பான IN-SPACe இன் தலைவர் பவன் கோயங்கா,  ஆகஸ்ட் 21 அன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில், "எதிர்காலத்தில் இஸ்ரோ எந்தவொரு ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களையும் தயாரிக்காது; அந்தப் பணிகள் அனைத்தும் தனியார் துறை அல்லது பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படும்...

திருவரங்கன் அறக்கட்டளை சொத்து திருட்டிலிருந்து தடை வழங்கிக் காப்பாற்றிய உயர்நீதிமனறம்

பூலோக வைகுண்டம் எனப் போற்றும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைணவத் திருத்தலங்களில் தொன்மையானதும், முதன்மையானதும், பழைமையான வரலாற்றைக் கொண்டதாகும். அங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் இலக்கியங்களில் "மெய்க்கீர்த்தி" போல ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.  ஸ்ரீரங்கத்தின் மூலவரான ஸ்ரீரங்கநாதர், திருப்பாற்கடலில் இருந்து பிரம்மதேவனால் வழிபடப்பட்டு, பின்னர் சூரிய வம்சத்து மன்னர்களான இக்ஷ்வாகு, தசரதன் மற்றும் ஸ்ரீராமபிரானால் வழிபடப்பட்டவர் எனும் ஆன்மீக வரலாறும் உண்டு.  ஸ்ரீராமர் இந்த ரங்க விமானத்தை விபீஷணனுக்குப் பரிசளிக்க, இலங்கை செல்லும் வழியில் காவிரி ஆற்றின் நடுவிலுள்ள தீவுப்பகுதியில் இதை நிறுவினார். காலப்போக்கில் மணலில் புதைந்த இந்த ஆலயத்தை, கிளிச்சோழன் (தர்மவர்ம சோழனின் வம்சாவளி) ஒரு கிளியின் சுலோகத்தைக் கேட்டு கண்டறிந்து மீண்டும் புதுப்பித்ததாகக் வரலாறு கூறுகிறது. ஸ்ரீரங்கம் கோயிலில் 800-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் சோழர்கள் , பாண்டியர்கள் , ஹொய்சளர் மற்றும் விஜயநகரப் பேரரசர்களின் வரலாற்றையும், மன்னர்களின் தானதர்மக் கொடைகளையும் மெய்க்கீர்த்திகளாகப் பறைசாற்றுகின்றன. பொது ஆண...