முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பிட்காயின் மோசடிக் குற்றவாளிகள் வலை விரித்து வீழ்த்திய குக்கிராம மக்கள்

மதுரை மாவட்டம் மேலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலும் குறைந்தது சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிகச் சாமானிய மக்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசாடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் ஏஜென்ட்கள் கட்டையம்பட்டி ரஞ்சித் மற்றும் அருண் எனத் தகவல் வருகிறது, மேலூரில் FQL,VG எனும் பிட்காயின் மோசடி நிறுவனங்களில் 53 ஆயிரம் போட்டால் 45 நாட்களில் லட்சம் ரூபாய் திரும்ப பெறலாம் என்று ரஞ்சித், அருண் ஆகியவர்கள் பல குடும்பம் மூலமாக  தனது பகுதியில் அதிகம் வசிக்கும் சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை மக்களிடம் இருந்து ஆரம்பித்து  அவர்கள் மட்டும் 30 ஆயிரம் பேரிடம் மோசடி, மேலும் பல உப ஏஜென்ட்கள் உணடாம் மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த FQL (மற்றும் VG) ஆன்லைன் செயலி பண மோசடியில் ஒட்டுமொத்தமாக சுமார் 60,000 முதல் 68,000-க்கும் மேற்பட்ட மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையின் அதிகாரப்பூர்வப் பதிவுகள் மற்றும் கள நிலவரங்களின்படி இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை நத்தம் மற்றும் அதன் சுற்றுவட...
சமீபத்திய இடுகைகள்

துரை தயாநிதி அழகிரிக்கு மத்திய அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து உண்மை அறிய நீதிமன்றம் உத்தரவு

ஒலிம்பஸ் கிரானைட் குவாரி  கீழவளவு பகுதியில் செயல்பட்ட கிரானைட் சுரங்கமாகும். 2012 ஆம் ஆண்டில் மதுரையில் வெளிச்சத்திற்கு வந்த ரூபாய் . 13,000 கோடிக்கும் அதிப்படியான பிரம்மாண்ட கிரானைட் முறைகேடு வழக்குகளில் இந்த நிறுவனமும் முக்கியப் பங்கு வகித்தது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, கீழவளவு கிராமத்தில் சுமார் 1.21 ஹெக்டேர் பரப்பளவில் இந்த குவாரி அமைந்திருந்தது, கடந்த 2008 ஆம் ஆண்டில், அங்கிருந்த நிலங்களில் 20 ஆண்டுகள் குத்தகைக்கு கிரானைட் கற்களை வெட்டி எடுக்க இந்த நிறுவனம் அரசிடம் அனுமதி பெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி இந்த ஒலிம்பஸ் கிரானைட்ஸ் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக  இருந்தார். 2011-12 ஆம் ஆண்டு காலகட்டங்களில், இந்த நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி, அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கனிம வளங்களைச் சட்டவிரோதமாக வெட்டி எடுத்ததாகப் புகார்கள் எழுந்தன. 2012  ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த உ.சகாயம் ஐ.ஏ.எஸ், கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக வந்த மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்...

வி.எச்.பி. அமைப்பின் மூத்த முன்னோடித் தலைவருமான ஸ்ரீ எஸ். வேதாந்தம் ஜி காலமானார்

விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் அகில உலக செயல் தலைவரும், தமிழக வி.எச்.பி. அமைப்பின் மூத்த முன்னோடித் தலைவருமான ஸ்ரீ எஸ். வேதாந்தம் ஜி (வயது 93), வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் ஆகஸ்ட் 29, 2026 இன்று காலமானார். அவர் 1933 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொல்லத்தில் ஒரு வளமான குடும்பத்தில் பிறந்தார். அவரது 16வது வயதில் 1949 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்  அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு மக்கள் சேவையைத் தொடங்கினார். ஆரம்பத்தில் TVS நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றியவர், சமுதாயப் பணிக்காக அந்த வேலையைத் துறந்து, 1972 ஆம் ஆணடில் வி.எச்.பி-யின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் பொறுப்பை ஏற்றார். கிராமப்புறக் கோவில் பூசாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு ஆகமப் பூஜை முறைகளைப் பயிற்றுவிக்கவும் 1990 ஆம் ஆண்டில் இந்த அமைப்பைத் தொடங்கினார். பூசாரிகளுக்கு அரசு நலவாரியம் மற்றும் ஓய்வூதியம் கிடைக்க முக்கியப் பங்காற்றினார். தொலைதூரக் கிராமங்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா அமைப்பை நிறுவி, பல தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உருவாகக் காரணம...

மதுரை அரசாளும் அன்னை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஷ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம் -வரலாற்றுப் பார்வை

 17 ஆண்டுகளுக்குப் பின் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் 2026 செப்டம்பர் 17 ஆம் தேதியன்று நடைபெறுகிறது புதன்கிழமை காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெறும்   பாண்டியர் குலப் பேரரசி, கயல்விழி, அங்கையற்கன்னி மதுரை ஆளும் மங்கையர்கரசி அன்னை ஸ்ரீ மீனாட்சி தடாதகை பிராட்டியார் மற்றும் சோமசுந்தரரேஷ்வர் தமிழ் சங்கம் கண்ட எந்தை ஈசன் சொக்கநாதப்பெருமான் ஆலயத் திருக்குடமுழுக்கு விழா வைபவம் சிறப்பாக நடைபெறுகிறது. "பூமகள் போற்றப் புவிமகள் துதிக்க, நாமகள் நாவில் நயம்பட விளங்க, திசையனைத்தும் வென்ற சீர்த்திப் பிரதாபி, மலையத்துவசன் பெற்ற மாபெரும் செல்வி,       பாண்டியர் குலவிளக்கு, பராசக்தி வடிவம், தடாதகைப் பிராட்டியார் தண்பதி ஆள,  நவரத்தின மணிமகுடம் நன்முடி சூடி, நவமணிச் செங்கோல் நயம்பட ஏந்தி, அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சி மதுரை மாநகர அரசியாக வீற்றிருந்தாள் வாழ்க"!      "ஸ்வஸ்திஸ்ரீ! சமஸ்த புவனாச்ரய, ஸ்ரீப்ருத்வீ வல்லப, மஹாராஜாதிராஜ, பரமேஸ்வர, பரமபட்டாரக, சகல குணரத்ன ரத்னாகர,பாண்டிய குல திலக, ம...