பதவி உயர்வு மறுப்பு, சமூகநீதி இல்லை, படி வழங்குவதில் பாகுபாடு: காவல்துறையினரின் தீர்க்கப்படாத குறைகளை களைய வேண்டும்! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் அறிக்கையில். :- காவல்துறையினரின் பதவி உயர்வு தொடர்பாக நியாயத்தின் அடிப்படையில் கொள்கை முடிவு எடுப்பதற்கு பதிலாக, அனைத்து சிக்கல்களையும் நீதிமன்ற வழக்குகள் மூலம் எதிர்கொள்வதில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருவதால், பல்லாயிரக்கணக்கான காவல்துறையினருக்கு பதவி உயர்வு கிடைக்காத நிலை உருவாகி உள்ளது. காவல்துறையில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியும், நிவாரணமும் வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த த.வெ.க. அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது நியாயமல்ல. கொள்கை முடிவுகளை எடுப்பதில் கடந்த ஆட்சியாளர்களும், இன்றைய ஆட்சியாளர்களும் இழைத்த தவறுகளாலும், தவறுகளை சரி செய்வதில் ஆர்வம் காட்டாததாலும் ஏற்பட்ட அநீதியின் வரலாறு 1994&ஆம் ஆண்டில் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு நீதி வழங்கப்படாததால், அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்...
தஞ்சாவூர் மாவட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பல பிரிவுகள், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து ஆகஸ்ட் 4 அன்று சென்னை நீலாங்கரை இல்லத்திலிருந்து திமுகவின் உதயநிதி காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்கூட்டிய ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன் நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன் ஆஜராகி, உதயநிதியை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பும் எண்ணமில்லை என்றும், விசாரணைக்குப் பிறகு அன்றைய தினமே காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்படுவார் எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிமன்றம், விசாரணையை முடித்தவுடன் அன்றே காவல் நிலைய பிணையில் விடுவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டதுடன், தேவையான போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உதயநிதியையும் அறிவுறுத்தியது. தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த பி...