செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி டில்லியில் மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டது குறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சி பிரமுகருமான ப. சிதம்பரம் அவரது எக்ஸ் தளத்தில் இதுபற்றி, "12 சதவீத ஜிஎஸ்டி வரி வரம்பில் உள்ள 99 சதவீத பொருள்கள் இப்போது 5 சதவீத வரி வரம்பில் உள்ளதாகக் கூறி நிதியமைச்சர் பெருமைப்படுவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஜிஎஸ்டி வரிக் குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஒரு கேள்விக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். 5 சதவீத ஜிஎஸ்டி விகிதம் இப்போது நியாயமான, சரியான ஜிஎஸ்டி விகிதம் என்றால், அது ஏன் கடந்த 8 ஆண்டுகளுக்கு நியாயமானதாக, சரியானதாக இல்லை? கடந்த 8 ஆண்டுகளில் 12 சதவீத வரி விதிப்பின் மூலம் மத்திய அரசு, இந்திய மக்களைச் சுரண்டவில்லையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ...
தமிழ்நாடு சிலை கடத்தல் திருட்டு வழக்கு கோப்புகள் மாயம்; தலைமைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
தமிழ்நாடு சிலை கடத்தல் திருட்டு வழக்கு கோப்புகள் மாயம்; தலைமைச் செயலாளருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை தமிழ்நாடு சிலை கடத்தல் தொடர்பான கோப்புகள் அழிக்கப்பட்டது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'தவறினால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்' என, எச்சரிக்கை விடுத்தது. தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக, 41க்கும் மேற்பட்ட கோப்புகள் மாயமான விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் ராஜேந்திரன் முன் வைத்த வாதங்கள்: சிலை கடத்தல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் மாயமானதாக அரசு தரப்பில் சொல்கின்றனர். ஆனால் உண்மையில் அவை திருடப்பட்டுள்ளன. 38 காவல நிலையங்களில் இருந்து, 41 ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது சாதாரண விஷயமல்ல. இதில் காவல் துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். ஏனென்றால். ஆவணங்கள் காணாமல் போன விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் நில...