தொலைதொடர்புத் துறையின் நிதிசார் மோசடி அபாய குறியீடு உதவியுடன் 6 மாதங்களில் 660 கோடி ரூபாய் அளவிலான ஆன்லைன் மோசடிகள் தடுக்கப்பட்டுள்ளன தொலைதொடர்புத் துறையில் நிதிசார் மோசடி அபாய குறியீடுகள், ஆன்லைன் நிதிசார் மோசடிகளையும் தடுக்கும் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்துள்ளது. இந்த குறியீடுகள் ரிசர்வ் வங்கி, தேசிய கட்டண பரிவர்த்தனைக் கழகம், பெரிய அளவிலான முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், டிஜிட்டல் புலனாய்வு தளத்தில் மூன்றாம் நபரின் விண்ணப்பம் வழங்கும் நடைமுறைகள் ஆகியவற்றுக்கு பெரிதும் உதவியுள்ளதாக தொலைதொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான வங்கிகள் மூன்றாம் தரப்பு விண்ணப்பப் படிவம் வழங்கும் இணையதளங்கள், பணபரிவர்த்தனை நடைமுறைகளை செயல்படுத்தும் நிறுவனங்கள் ஆகியவை இந்த குறியீடுகளை பயன்படுத்த தொடங்கியுள்ளதாக தொலைதொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிசார் மோசடி அபாயக் குறியீடுகளின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை திறம்பட அமல்படுத்தவும் ஏதுவாக தொடர் பயிற்சி வகுப்புகளையும் தொலைத் தொடர்புதுறை நடத்தி வருகி...
தற்சார்பு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு கூட்டுமுயற்சிகள் அவசியம் – குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவை துறையின் 2023, 2024-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகளிடையே குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று உரையாற்றினார். குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் பயிற்சி அதிகாரிகளை வரவேற்ற அவர், பாதுகாப்பு கணக்குகள் துறை 275 ஆண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்தை கொண்ட நாட்டின் மிகப்பழமையான துறைகளில் ஒன்று என்று குறிப்பிட்டார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்த தொலைநோக்குப் பார்வையை உறுதிப்படுத்த குடிமைப்பணி அதிகாரிகள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று தெரிவித்தார். வளர்ச்சி என்பது அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடைக்கோடி பகுதிகளுக்கும் சேவை ஆகியவற்றில் அவசியம் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்று அமிர்த காலத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்த அழைப்பை அவர் நினைவு கூர்ந்தார். இளையோர் சக்தி, இளம் அதிகாரிகளின் புதுமை சிந்தனை ஆகியவை நாட்டை கட்டமைப்பதில் முக்கிய இட...