நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கு சட்டம் ஒழுங்கு என்பது காரணமாக இருக்க முடியாது. அப்படி நடந்தால் அரசியல் சட்ட இயந்திரம் முடங்க வழி வகுத்து விடும்,'' என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை மதுரை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து. மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் ஏழுமலை கிராமம் ராமர.விக்குமார் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலையில் உச்சியில் உள்ள தீபத்தூணில் டிசம்பர் மாதம்., 3 ஆம் தேதியில் கார்த்திகைதா தீபத்தை ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும். இந்த ஆண்டு முதல் தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதை உறுதி செய்ய செய்வது காவல்துறையினர் கடமை என உத்தரவிட்ட நிலையில் அதை நிறைவேற்றாததால் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல்துறை ஆணையர் லோகநாதன், திருப்பரங்குன்றம் கோயில் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் யக்ஞ நாராயணன் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக...
காசநோய் ஒழிப்புப் பணிகள் குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா கலந்துரையாடினார் காசநோய் இல்லா இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் தமிழ்நாட்டின் பங்களிப்பு குறித்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா இன்று கலந்துரையாடினார். காசநோய் ஒழிப்பில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், 2015-ம் ஆண்டு காசநோயால் ஒரு லட்சம் பேரில் 237 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2024-ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்து 187-ஆக இருந்தது என்று கூறினார். இது உலக அளவில் சராசரியாக 12 சதவீதமாக இருந்த நிலையில், இந்தியாவில் அந்த சரிவு இரட்டிப்பாக இருந்ததாக தெரிவித்தார். காசநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளதாகவும், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 92 சதவீதத்தைக் கடந்துள்ளதாகவும் கூறினார். இது உலகளாவிய சூழலைவிட அதிகம் என்று அவர் குறிப்பிட்டார். இந்நோய் குறித்து முன்னதா...