முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

ஜனவரி 17, 18 தேதிகளில் அசாம் மாநிலத்தில் பிரதமர் பயணம்

பிரதமர் ஜனவரி 17, 18 தேதிகளில் அசாம் மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார் ஜனவரி 17-ம் தேதி போடோ சமூகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க கலாச்சார நிகழ்வான பகுரும்பா த்வோ 2026-ல் பிரதமர் பங்கேற்கிறார் ₹6,950 கோடி மதிப்பிலான காசிரங்கா உயர் வழித்தடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 ஜனவரி 17 18 ஆகிய தேதிகளில் அசாமுக்கு பயணம் மேற்கொள்கிறார். ஜனவரி 17-ம் தேதி மாலை சுமார் 6 மணியளவில், குவஹாத்தியில் உள்ள சருசஜாய் மைதானத்தில் நடைபெறும் பாரம்பரிய போடோ கலாச்சார நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். ஜனவரி 18-ம் தேதி காலை 11 மணியளவில், பிரதமர் ₹6,950 கோடிக்கு மேல் மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நாகோன் மாவட்டத்தில் உள்ள கலியாபூரில் 2 புதிய அம்ரித் பாரத் விரைவு ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பார். குவஹாத்தியில் பிரதமர் குவஹாத்தியில் உள்ள சாருசஜாய் மைதானத்தில் போடோ சமூகத்தின் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் ...
சமீபத்திய இடுகைகள்

காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் திமுக இரண்டாம் சாய்ஸ் தவெக ஆகவே தேமுதிக இலவமரத்துக் கிளி

காங்கிரஸ் கட்சியின் முதல் சாய்ஸ் திமுக இரண்டாம் சாய்ஸ் தவெக ஆகவே தேமுதிக இலவம்பஞ்சு மரத்து கிளி நிலையில் காத்திருக்கக் காரணம் அதுவே.           தமிழ்நாடு சட்டமன்றப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியது: "தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைமை மற்றும் நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  41 பேர் நேற்று கூட்டத்தில் பங்கேற்றனர். ஒவ்வொரு உறுப்பினரும் தங்களது கருத்துக்களைத் தலைமைக்குத் தெரிவிக்க வாய்ப்பும் வழங்கப்பட்டது. சுமார் 3 மணி 30 நிமிஷம் தமிழ்நாடு தலைவர்களுடன் தனித்தனியாகவும், கூட்டாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சித் தலைவர் மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்திற்குத் தேர்தல் முடிவுகள் எடுக்க ஏதுவாகக் கொண்டு சென்றுள்ளோம். இன்றைய விவாதங்களே எதிர்கால முடிவுகளுக்கான வழிகாட்டுதலாக அமையும்." என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ந...

மதகுபட்டியில் சித்தர் பீடம் 9 ஆம் ஆண்டு குருபூஜை விழா

சிறப்புச் செய்திகள் :- ரங்கநாதன் திருப்பதி :-          மதகுபட்டியில் ஒரு சித்தர் பீடம் ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் 9 ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா சிறப்பாக நடந்தது. ஜனவரி மாதம் 17, 2025                                            ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் 8-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா விஷுவவசு வருடம் தை மாதம் 3-ஆம் தேதி சனிக்கிழமை 17 ஜனவரி 2025 மஹா குருவின்  பூராடம் நட்சத்திரத்தில், சித்த யோகம் கூடிய சுபதினத்தில் ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகளின் 9-ஆம் ஆண்டு மஹா குருபூஜை விழா சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில் பாகனேரி சாலையில் அமைந்துள்ள சித்தர் பீடத்தில்  நடைபெற்றது மேற்கண்ட நிகழ்வில் மஹாகுருவின் சீடர்கள். சிவனடியார்கள், ஆன்மீக மெய்யன்பர்கள், பக்த கோடிப் பெருமக்கள் திரளாக வருகை தந்து குருவருளும், திருவருளும் பெற்றுச்சென்ற நிகழ்வில்,   ஓம் ஸ்ரீ பிரம்மரிஷி மகேந்திரகிரி சுவாமிகள் அருளாசி பெற...

சாட்டை துரைமுருகன் கருத்துக்கு உடனே பதிலளித்த தவெக பேச்சாளர்

நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாத மேடையில்,தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பங்கேற்றுப் பேசிய நபர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் நடிகை விஜயலக்ஷ்மி சார்ந்த பாலியல் வழக்கில் மன்னிப்புக்  கேட்டதை சுட்டிக்காட்டிப் பேசினார், அதற்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சித் துரைமுருகன்,அப்படி ஒரு மன்னிப்பை எங்க அண்ணன் கேட்கவே இல்லை, அப்படி மன்னிப்புக் கேட்டதை நிரூபித்தால்,நான் இனி நாம் தமிழர் சார்பாக எங்கேயும் பேச மாட்டேன் எனக் கூறினார். ஆனால் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்புக் கேட்டு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் தீர்ப்பு வந்த தினம் அனைத்து தொலைக்காட்சிகளிலும் Breaking News ஆக வந்தது தான். ஆனால் அப்படி எதுவும் நடக்கவே இல்லை என எப்போதும் போல நாம் தமிழர் கடசி துரை முருகன் பேசியது தவறு என்பதை  நீதிமன்றத்தில் சீமான் அவரது கையெழுத்திட்டு தாக்கல் செய்த மன்னிப்பு Affidavit! மக்கள் பார்வைக்கு.  இதில் தெளிவாக முதல் பத்தி, "மனுதாரரான நான் (Respondent no-2) அதாவது விஜயலட்சுமிக்கு எனது செயலாலும்,வார்த்தைகளாலும் ஏற்...

பல்லாவரம் காவல் நிலையத்தில் நடந்த ரிக்காடு டான்ஸ் பலர் பணி காத்திருப்போர் பட்டியலில் சேர்ப்பு

பல்லாவரம் காவல் நிலையத்தில் நடந்த பொங்கல் கொண்டாட்டத்தில் திரைப்படப் பாடலுக்கு நடனமாடிய ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்;  நடனத்தைக் கைதட்டி ரசித்த 21 காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றி தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவுபொங்கல் நிகழ்ச்சி நடத்தி காவல் நிலையத்தில் நடனமாடிய காவல்துறை அலுவலர்கள் பணியாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். பல்லாவரம் காவல்நிலையத்தில்  பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தி நிகழ்ச்சியில் காவலர்கள் காவல்நிலையத்திலேயே நடனமாடிய காணொளிக் காட்சி பரவியது இந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது தாம்பரம் மாநகரக் காவல் துறை ஆணையர் அமல்ராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.  ஜனவரி 13 ஆம் தேதி தாம்பரம் காவல் ஆணையரகத்தில் காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் பதுவாஞ்சேரியிலுள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதில் காவல்துறை ஆணையகத்திற்குப்பட்டு அனைத்துக் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவைக் கொண்டாடினர். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும்...

மாடுபிடிப்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என முதல்வர் அறிவிப்பு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு

மாடுபிடிப்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என முதல்வர் அறிவிப்பு பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு      ஜல்லிக்கட்டு மாடுபிடிப்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என்று மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார் என்று தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை  குற்றம்சாட்டினார். அவரது அறிக்கையில்; கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில், ஜல்லிக்கட்டுக் காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத் தொகையாக, மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்  முதல்வர் ஸ்டாலின். ஆஹா தமிழ்ப் பண்பாட்டை ஊக்குவிக்கப் போகிறார் என அனைவரும் நினைத்தோம். ஆட்சிக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டன. இதுவரை, ஒரு ரூபாய் கூடக் அவர்களுக்கு கொடுக்கவில்லை. இந்த நிலையில் இன்று, மாடுபிடிப்பவர்களான வீரமானவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப் போகிறோம் என மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஏற்கனவே, ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்ப்பவர்கள் ஒவ்வொருவருக்கும், இந்த ஐந்து ஆண்டுகளில், கொடுக்கப்பட வேண்டிய சுமார் ரூபாய். 60,...