முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கத்தில் கூட்டணி உள்ளிட்ட 17 பேருக்கு வாய்ப்பு வரலாம்

தவெக அரசு அமைச்சரவை விரிவாக்கம்.. விஎஸ் பாபு, சத்யபாமா உள்ளிட்டோருக்கு  காத்திருக்கும் வாய்ப்பு   முதல்வர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவை இரண்டொரு நாளில் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திருப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சத்யபாமா, சேலம் தொகுதி தமிழன் பார்த்திபன், இராணிப்பேட்டை தொகுதி தாஹிரா உள்ளிட்டோர் தவெக சார்பாக அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகத் தகவல் கடந்த மே 4 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியானது. தவெக 108 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. மே 10ஆம் தேதி முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது விஜய்யுடன் மேலும் 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். மேலும் அமைச்சரவை இன்னும் விரிவாக்கம் செய்யப்படவில்லை. வேளாண்மை, உயர்கல்வி, ஹந்து சமய அறநிலையத் துறை, போக்குவரத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தொழிலாளர் நலன், பால்வளத்துறை, மீன்வளத்துறை, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை, வனத்துறை உள்ளிட்ட 20 முக்கிய துறைகளுக்கு இன்னும் அமைச்சர்க...
சமீபத்திய இடுகைகள்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 19 நபர்களை நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 19 பெயர்களை உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை, !சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்ததுஅதேபோல், வழக்கறிஞர்கள் என். ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் 18, மே 2026 ஆம் தேதி அன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 10 வழக்கறிஞர்கள் மற்றும் 9 மாவட்ட நீதிபதிகள் (judicial...

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகி டாக்டர் விஜயகுமார் ரெட்டி

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகியாக அப்பல்லோ மருத்துவமனை தொழிலதிபர் விஜயகுமார் ரெட்டி நியமனம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், 2026 மே மாதம் 7 ஆம் தேதி , அன்று மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ், சங்கத்தின் விதிமுறைகளின் படி அனுப்பப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். சென்னையில் உள்ள புகழ்பெற்ற செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நிர்வகித்து வரும் ' ராஜாசார் வாரிசு முத்தையா செட்டியார் பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளி' (Kumara Rajah Muthiah School of Traditional Arts and Crafts) என்ற பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் தற்காலிக நிர்வாகியாக,  தொழிலதிபர் பி. விஜயகுமார் ரெட்டியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சங்கத்தின் செயலாளரான மீனா முத்தையா கடந்த மே 2, 2026 ஆம் தேதி அன்று காலமானதை அடுத்து இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டது. தொழிலதிபர் அய்யப்பன் எனும் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, அவரது மனைவி கீதா முத்தையா மற்றும் 5 நபர்கள் இணைந்து சென்னை உயர...

சந்திர தரிசனத்தின் சிறப்பு

சிறப்பு செய்திகள் :ரெங்கநாதன் திருப்பதி-    " பித்தாபிறை சூடீபெருமானே அருளாளா    எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை       வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்    அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே"....... சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம்..            பித்தன் எம்பெருமான் ஈசன் பிறையான சந்திரனை சூடியதால் சந்திர தரிசனம் முக்கிய வழிபாடு  சந்திர தரிசனம் கண்டால் தீராத நோய்கள் நீங்கும். வளர்பிறை சந்திர தரிசனம் கண்டால் பார்வை கோளாறுகள் நீங்கும். சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் விருத்தியாகும் ஏனெனில் சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.  நகர வாழ்வில் வீட்டில் மாடியில் நின்று மாலையில் வளர்பிறை சந்திரனை மறக்காம மாலை தரிசனம் பண்ணுவது எளிது  சந்திர தரிசனம் கண்டால் சிவனை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். பிறையைப் பார்த்து வணங்குவது என்பது மிக மேலான சிவபுண்ணியம் ஆகும். கோவிலுக்கு சென்று சிவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டில் இருந்தே சந்திர தரிசனம் பார்க்கலாம். ...

17 ஐ ஏ எஸ் அதிகாரிகள் தமிழ்நாட்டில் பணியிடமாறுதல்

தமிழ்நாடு இன்று 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சாய் குமார் உத்தரவு. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளரான ககன் தீப் சிங் பேடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலாளர் சத்ய பிரதா சாகு, நீர்வளத் துறை செயலாளராகவும்,    போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த சுன்சோங்கம் ஜடக் சிரு, பொதுப்பணித்துறை செயலாளராகவும், தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் முதன்மைச் செயலாளர்/மேலாண்மை இயக்குனர் அனில் மேஸ்ராம் எரிசக்தித் துறை செயலாளராகவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை ஆணையர் வள்ளலார் போக்குவரத்துத் துறைச் செயலாளராகவும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக இருந்த கேஎஸ் பழனிசாமி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை செயலாளராக இருந்த தக்ஷிணாமூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர்...

தொழில் நகரத்தில் புதிய மத்தாப்பு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா சம்பத்

ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்காள முன்னால் முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கடந்து கால வெற்றிக்குப் பின்னால் அமைச்சர் கீர்த்தனா கூட்டுக குழுவில் வழிகாட்டி ஆலோசனைப் பிரதிநிதி என 29 வயதில் அமைச்சர் என கீர்த்தனாவுக்கு சிறு வயதில் மறுபக்கம் உண்டு, சிவகாசி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் ஆன பின் தொழில் அமைச்சர் கீர்த்தானா சம்பத் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற  பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை நம்பவே முடியவில்லை. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு இளமையான ஒரு அமைச்சரவையை நீங்கள் பார்க்க முடியாது என்றே நான் சொல்வேன். எங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பை யாரும் வழங்கியிருக்க மாட்டார்கள்.  நாங்கள் எவ்வளவு சிறப்பாக அரசாங்கத்தை நடத்த முடியும் என்பதை இந்த உலகிற்குக் காட்டப் போகிறோம்." என்றார். கீர்த்தனா சம்பத்        அவர் யார் எனப்  பார்ப்போம். கீர்த்தனா தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசியல் ஆலோசகராகவும் டிஜிட்டல் பிரச்சார உத்தியாளராகவும் பணியாற்றியவர். கீர்த்தனா 'Showtime Consulting' என்ற அரசியல் ஆலோச...