உணவுப் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில்,உணவுப் பதப்படுத்துதல் மற்றும் கையாளுதலின் போது துருப்பிடிக்காத பிளேடுகள்,கத்திகள் உள்ளிட்ட உபகரணங்களை மட்டுமே பயன்படுத்துவதை உறுதி செய்யுமாறு உணவு வணிக நிறுவனங்களுக்கு FSSAI அறிவுறுத்தல், உணவுப் பாதுகாப்பு மற்றும் தர மேம்பாடு என்பது உணவு உற்பத்தியில் தூய்மையைக் கடைப்பிடிப்பது, ஆபத்துகளைக் குறைப்பது மற்றும் நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவை உறுதி செய்வதாகும். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவை பரிந்துரைத்துள்ள முக்கிய வழிகாட்டுதல்களில் முக்கிய முறைகள் மற்றும் தரநிலைகள் நல்ல உற்பத்தி நடைமுறைகள் (GMP/GHP): உணவு தயாரிப்பு மற்றும் கையாளுதலின் போது தூய்மையான உபகரணங்களைப் பயன்படுத்துதல், கையுறைகளை அணிதல் மற்றும் சுகாதாரமான சூழலைப் பராமரித்தல், (ஆபத்து பகுப்பாய்வு மற்றும் முக்கியமான கட்டுப்பாட்டுப் புள்ளிகள்): உணவு தயாரிப்பில் நிகழக்கூடிய இயற்பியல், வேதியியல் அல்லது நுண்ணுயிரியல் அபாயங்களைக் கண்டறிந்து அவற்றை ஆரம்பத்திலேயே தடுக்கும் முறை.முறையான பொட்டலமிடுதல், உணவின் காலாவதி தேதி, மூலப்...
தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (18.6.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் வெளியிட்ட x தளப் பதிவின் தமிழாக்கம் :-“தமிழக சட்டப்பேரவையில் இன்று புதிய சகாப்தம் உதயமாகிறது என்பதை மக்களுக்குத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மூன்றாண்டுகளுக்குப் பிறகு, ஆளுநர் உரை எந்த இடையூறும் இன்றி இன்று சட்டசபையில் வாசிக்கப்பட்டது மனதுக்கு அளவற்ற திருப்தியைத் தருகிறது. மேலும், மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்கும் இடையே இணக்கமான சூழல் நிலவ வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பை முதன்முறையாக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாடிய வரலாற்று நிகழ்வு ஜனநாயகத்தின் மாண்பிற்குச் சான்றாக விளங்குகிறது - இது மிகையாகாது. ஜனநாயகத்தில், ஆளும் ஒரு அரசாங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைக்கப்பட்ட, இணக்கமான உறவை ஏற்படுத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிறைவேற்றி, நிலையான, முன்மாதிரியான நிர்வாகத்தை நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும். அந்...