மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர். மலேசியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமரின் தலைமைக்கும், இந்தியா-மலேசியா உறவை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கும் அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர். மலேசியாவில் உள்ள இந்திய ...
டாக்டர் ஜாகிர் உசைனின் பிறந்தநாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மலர் அஞ்சலி செலுத்தினார் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகிர் உசேன் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (பிப்ரவரி 8, 2026) குடியரசுத் தலைவர் மாளிகையில் அவரது திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை அஞ்சலி செலுத்தினார்.பிப்ரவரி மாதம் 1897 ஆம் ஆண்டு பிறந்தநாள் 3 மே 1969 ல் காலமானார் இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967 ஆம் ஆண்டிலிருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை, குடியரசுத் தலைவர் பதவி வகித்தார். 1962-1967 காலத்தில், இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார் இவர் கல்வித்துறையில் சிறந்த அறிஞராகவும், திறமைமிக்க நிருவாகியாகவும் விளங்கினார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில், 1897 பெப்ரவரி 8 ஆம் நாள் அவர் பிறந்தார்.[ உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். அலிகார் முஸ்லிம் பல்கல...