முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இந்தியத் திரை உலகின் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் காலமானார்

இந்தியத் திரை உலகின் மூத்த கலைஞர் கே.பாக்யராஜ் இன்று காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலமானார். அவரது இறுதி பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். நடிகர், இயக்குநர், வசன கர்த்தா இசையமைப்பாளர், பத்திரிக்கையாளர்,  அரசியல் தலைவர் எனப் பல பரிமாணங்களில் திரைத் துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தவர் கே. பாக்யராஜ். தமிழ் திரை உலகில் நடிகர்கள் இயக்குநராகவும், இயக்குநர்கள் நடிகர்களாவும் அவதாரம் எடுத்தாலும் இரு கலைகளும் ஒருசேர செய்து இரண்டிலும் சாதித்த வெகு சிலரில் பாக்யராஜும் ஒருவர். தனது தாய் அமராவதி பெயரில் இல்லம், கோபிச்செட்டிபாளையம் வெள்ளாங்கோவில் மக்கள் மண் வாசனை தான் வாழ்வில் தன் உழைப்பு தன் அறிவு தன் முயற்சி மூலம் இந்தப் புகழ் வந்த நிலை,  சமீபத்தில் மறைந்த முதுபெரும் பாரதிராஜாவின் சீடராக இருந்தவர் கே.பாக்யராஜ். பாரதி ராஜாவின் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் ஶ்ரீதேவி நடித்த மயில் கதை 16 வயதினிலே படத்தில் உதவி இயக்குநராக தனது திரைப் பயணத்தைத் ...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம்

தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்புப் பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  மாநில அரசுகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக, டில்லியில் சிறப்பு பிரதிநிதி நியமிக்கப்படுவது வழக்கம்.  இது, அமைச்சர் பதவிக்கு இணையானது.  அந்த வகையில் தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணாவை மாநில அரசு நியமித்துள்ளது. இவர், முதல்வர் சி. ஜோசப் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர். மற்றும் பல வகையில் ஆடசி அமைப்பதில் உதவியாக இருந்நவர், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படி பெற்றுத் தர கோரிக்கைகளை வலியுறுத்துவது, இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முக்கியப் பொறுப்பாகும். கே.வெங்கட் நாராயணா  இந்தியாவின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் . தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பல முன்னணித் திரைப்படங்களை தயாரித்து விநியோகம் செய்துள்ளார். முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் ஜனநாயகன் உள்ளிட்ட பல பிரம்மாண்டமான படங்களின் தயாரி...

பள்ளிக் கல்வித்துறை சார்ந்த ஊழலை அம்பலப்படுத்திய ஸ்ரீ தர் வேம்பு

ஸ்ரீதர் வேம்பு கூறிய திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திலுள்ள 'அரவிந்தோ வித்யாலயா' (Aurobindo Vidhyalaya CBSE) மற்றும் 'அபிஸ்ரீ அகாடமி' ஆகியவற்றின் நிறுவனரும் கல்வியாளருமான வினீதா கோவிந்தசாமி தங்களுக்கு நேர்ந்த ஊழல் மற்றும் நிர்வாகக் கெடுபிடிகள் குறித்த புகார்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அரவிந்தோ வித்யாலயா திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைந்துள்ள ஒரு இணை கல்வி, மூத்த மேல்நிலை உறைவிடப் பள்ளியாகும். மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் CBSE இணைப்பு எண்: 1930624 ன் படி இணைந்த நிறுவனம், கல்விக்கான "பண்டைய மதிப்புகள் கொண்ட நவீனப் பள்ளி" அணுகுமுறையை ஊக்குவிக்கும் முக்கியப் பள்ளி, 2012 ஆம் ஆண்டு விவேகானந்தா கல்வி மற்றும் அறக்கட்டளை வகுப்புகளும் அதற்கு முன் நர்சரி முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை (PCM, PCB) மற்றும் ஆர்ட்ஸ், ஆங்கில அணுகுமுறை மற்றும் முக்கிய தூண்கள் பாடத்திட்டம் முழுமையான வாழ்க்கை முறை பயிற்சியுடன் கல்வி கடுமையையும் ஒருங்கிணைக்கிறது. பள்ளி ஒருங்கிணைக்கிறது, CBSE பாடத்திட்டத்துடன் நேஷனல...

சென்னை மாநகராட்சியில் ரூபாய் .284 கோடிக்கு நடைபாதை ஊழல் டெண்டர் ரத்து

சென்னை பெருநகர் மாநகராட்சியில் ரூபாய் .284 கோடிக்கு நடைபாதை டெண்டரை மாநகராட்சி தற்போது ரத்து செய்தது, ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 8 கோடி’ என மதிப்பீட்டில் 4 மடங்கு உயர்வு; மேயர் பிரியாவின் ஊழல் வெளியான அம்பலம்  அதாவது மாநகராட்சியில்  35 பேக்கேஜ்களாகப் பிரிக்கப்பட்ட திட்டம்; தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு முன்னுரிமை; திட்டச் செலவு உயர்த்தப்பட்டு, அரசுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும் நிலை” முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவில் மாநகராட்சி டெண்டர்கள் ரத்து; மேயர் பிரியா பட்ஜெட்டில் அறிவித்த திட்டம் சர்ச்சையில்; ‘முந்தைய ஆட்சியின் டெண்டர்கள் அனைத்தும் இனி மறுபரிசீலனை’  மாநகராட்சி அதிகாரிகள் தகவல்! சென்னை மாநகராட்சியில் நடைபாதை அமைக்கும் திட்டத்திற்கான ரூபாய் 284 கோடி மதிப்பிலான டெண்டர்களில் பல்வேறு விதமான முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.மாநகராட்சி மேயர் ஆர். பிரியா பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி வெளியிட்ட சென்னை பெருநகர் மாநகராட்சி பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கான நிதியும் ஒதுக்கப்பட்டது. அடுத்த நாளே பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி சிறப்புத் திட்டப் பி...

இந்தியாவின் புதிய உளவுத்துறைத் தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்

இந்தியாவின் புதிய உளவுத்துறைத் தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்: காஷ்மீரில் பணியாற்றிய அனுபவமிக்கவருக்கு முக்கியப் பொறுப்பு! இந்தியாவின் உள்நாட்டு உளவு அமைப்பான ‘இண்டெலிஜென்ஸ் பீரோ’ (IB) வின் புதிய இயக்குநராக மகேஷ் தீட்சித் நியமிக்கப்பட்டுள்ளார். தெலங்கானா மாநில பிரிவைச் சேர்ந்த 1993 ஆம் ஆண்டு கேடர் ஐபிஎஸ் அதிகாரியானவர், தனது பணிக்காலத்தில் மிகவும் சவாலான காலகட்டங்களில் ஸ்ரீநகரில் உள்ள ஐபியின் துணை உளவுப் பிரிவின் (SIB) தலைவராகப் பணியாற்றியவர். குறிப்பாக, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லே ஆகியப் பகுதிகளின் பாதுகாப்பு நிலவரங்களைக் கண்காணிப்பதில் இவரது பங்கு மிக முக்கியமானது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில், அங்கு நிலவிய பிராந்தியப் பாதுகாப்பு சவால்களைக் கையாள்வதிலும், உள்நாட்டு அமைதியை நிலைநாட்டுவதிலும் இவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் முதன்மை உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான 'இன்டெலிஜென்ஸ் பீரோ' (IB) புதிய இயக்குநராக, 1993-ஆம் ஆண்டு அண்ட்ரா கேடரைச் சேர்ந்...

கடல்வழி ஏற்றுமதி நடைமுறை காரணமாக மாம்பழ ஏற்றுமதிக்கான செலவு குறையும்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் கடல்வழி ஏற்றுமதி நடைமுறை காரணமாக மாம்பழ ஏற்றுமதிக்கான செலவு குறைக்கப்படுகிறது. பழங்கள் ஏற்றுமதியில் ஒரு முக்கிய படியாக, இந்திய மாம்பழங்கள் கடல் வழியாக சிங்கப்பூரை வெற்றிகரமாக சென்றடைந்துள்ளன. சர்வதேச சந்தைகளுக்கு குறைந்த விலையில் அதிக அளவில் மாம்பழங்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்தும் முயற்சிகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இந்திய மாம்பழங்கள் அவற்றின் சிறந்த சுவை, மணம் மற்றும் தரத்திற்காக சிங்கப்பூரில் மிகவும் மதிக்கப்படுகின்றன. குறிப்பாக, பங்கனப்பள்ளி, கேசர் போன்ற மாம்பழ ரகங்களுக்கு நாட்டில் அதிக கிராக்கி உள்ளது. ஏற்றுமதியை மிகவும் சிக்கனமாகவும் போட்டித்தன்மையுடனும் செய்ய, லக்னோவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில், மத்திய வெப்பமண்டல தோட்டக்கலை நிறுவனம் மற்றும் வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து, மாம்பழ ஏற்றுமதிக்கான அறிவியல் கடல் போக்குவரத்து அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த முயற்சியின் கீழ், ஆந்திராவில...