தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் 2015 ஆம் ஆண்டில் ONGC நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்தவர் பிஆர் பாண்டியன். இவர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநிலத் தலைவராக செயல்படுகிறார். விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு சார்பு அரசியல் சார்ந்த ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.குறிப்பிட்டுக் கூறினால் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை எதிர்ப்பு, நெல் கொள்முதல் நிலையங்கள் மேம்பாடு உள்பட பல விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகிற நிலையில் 2015 ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் ONGC நிறுவனம் சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கண...
விமானங்களின் பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை இண்டிகோ நிறுவன நெருக்கடியால் தற்போது விமானப் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளின்போது சில விமான நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக விமானக் கட்டணங்களை வசூலிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாகக் கவனத்தில் கொண்டுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பவாத கட்டண நிர்ணயத்திலிருந்தும் பயணிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து வழித்தடங்களிலும் நியாயமான கட்டணங்களை உறுதி செய்ய, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதன் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்தியுள்ளது. தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண வரம்புகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தையில் கட்டண நிர்ணய ஒழுக்கத்தைப் கடைப்பிடித்தல், நெருக்கடியான சூழ்நிலையில் உள்ள பயணிகளிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுத்தல், மூத்த குடிமக்கள்,...