முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

காவலர்களின் பணி உயர்வுக்கான காலவரம்பைக் குறைத்தது குறித்து பா ம க தலைவர் மருத்துவர் அன்புமணி கருத்து

 தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பணி உயர்வுக்கான காலவரம்பைக் குறைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவிஉயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதென விபரம் தெரிந்த தலைவர் பலரும் குறிப்பிடும் நிலையில். அனைத்துக் காவலர்களும் பயனடையும் வகையில், பதவி உயர்வு வழங்கப்படும் என  வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அதற்கு எதிராக செயல்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேருபவர்களுக்கு பத்தாண்டுகளில்  முதல் நிலைக் காவலராகவும், அடுத்த ஐந்தாண்டுகளில் தலைமைக் காவலராகவும், அடுத்த பத்தாண்டுகளில் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பணி உயர்வும் வழங்கப்படுகிறது. காவலர்களாக பணியில் சேர்பவர்கள்  சார்பு ஆய்வாளர்களாகக் கூட பதவி உயர்வு பெற முடியாத சூழல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் தான், இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பத்தாண்டுகளில் முதல்நிலைக் காவலர், 13 ஆண்டுகளில் தலைமைக் காவலர், 23 ஆண்டுகளில் சிறப்பு சார்பு ஆய்வா...
சமீபத்திய இடுகைகள்

அங்கீகாரமில்லாத தனி மனைகளை வாங்கியவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து, வரன்முறை பெறலாம் அரசாணை வெளியீடு

நகர் ஊரமைப்பு வளர்ச்சி 2025 - 26 ஆம் ஆண்டிற்கான  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்பு எண். 5 -ல் நாள் 20.10.2016 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அங்கீகாரம் இல்லாமல் விற்கப்பட்ட தனிமனையினை எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் இணைய வழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப் படுத்திக் கொள்ளுதல் சம்பந்தப்பட்ட அரசாணை வெளியீடு. அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை எனவும்,  அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை  'தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத தனி மனைகள் வரன்முறைக்கு, காலவரம்பின்றி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாய நிலங்களில் நஞ்சை தவிர புஞ்சை நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக, 2016 ஆம் ஆண்டில் புகார் எழுந்ததையடுத்து நீதிமன்ற உத்தரவு காரணமாக, அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை செய்துள்ள பத்திரப்பதிவுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவுக்கு முன், மனைகளை வாங்கியவர்களுக்கு நிவாரணமாக, நிபந்தனைகள் அடிப்படையில் வரன்முறை செய்யும் திட்டம், 2017 ஆம் ஆண்டில் ...

ஏடிஜிபிஐ கைது செய்து சிறைக்கு அனுப்பி எம்எல்ஏ ஜெகனை விசாரணை வளையத்தில் கொண்டு வந்த நீதிமன்றத்தின் உத்தரவு சபாஷ்

கீழ் வைத்தினாங் குப்பம் (தனித் தொகுதி) சட்ட மன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி i மக்கள் எதற்காக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள் என்பதை மறந்து நீங்கள் கட்டப் பஞ்சாயத்து செய்யலாமா? 2 விசாரிக்க வந்த காவல்துறையினரை உங்கள் கட்சிக்காரர்கள் தடுப்பது ஏன்? 3 ROLE MODEL ஆக இருக்க வேண்டிய நீங்கள், ஏன் கட்டைப் பஞ்சாயத்து செய்தீர்கள்? யார் உங்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது?           4. 200, 300 பேரைக் கூட்டி வந்தால் நீதிபதி பயந்துவிடுவார் என நினைக்காதீர்கள். விசாரணைக்கு ஒத்துழையுங்கள். 5  நீதிமன்றம் நினைத்தால் 10 நிமிடத்தில் உங்களைக் கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருக்க முடியும்" என்ற நிலையில் கைதான ஏடிஜிபி ஜெயராமன் சிறையில் அடைப்பு சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராம் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று  கைரேகை பதியப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்கு பின் கிளைச்சிறையில் அடைக்கப்படுகிறார் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்ற வளாகத்திலேயே ஏடிஜிபி ஜெயராம் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் ம...

புகார் மனுக்கள் மீது உரிய இரசிதுகளை அரசு அலுவலகங்களில் வழங்க வேண்டும் அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கு வரும் புகார் மனுக்கள் மற்றும் ஜமாபந்தி மனுக்கள் மீதான நடவடிக்கைகளை பதிவேட்டில் பதிவு செய்து பராமரிக்க வேண்டும் செயலாளர், மனிதவள மேலாண்மை துறை சார்ந்த அரசாணை வெளியிடப்பட்டது தலைமைச் செயலாளர் முருகானந்தம் இஆப உத்தரவு. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் இஆப வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது: அரசு அலுவலகங்க ளில் நேரடியாக மற்றும் மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும் குறைகளைவு புகார் மனுக்களின் பரிசீலனை குறித்து மாற்றியமைக்கப்பட்ட நடவடிக்கைகள் வெளியிடப்பட்டன. அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட நடைமுறைகளின்படி 3 நாட்களுக்குள் மனுவை பெற்றுக்கொண் டதற்கான ஒப்புகையை ரசிதுகள் மூலம் வழங்குவதுடன் மனு பெற்றப்பட்ட ஒரு மாத காலததிற்குள் குறை களையப்பட வேண்டும். மேலும் ஜமாபந்தி எனும் வருவாய்த் தீர்வாயம் மூலம் மனு பெறப்படும் நாளிலேயே கடந்த ஆண்டுகளில் தீர்வு காணும் நிலை இருந்தது ஆனால் தற்போது அந்த நிலை இல்லை காரணம் இரயத்துவாரி மனுக்களை மட்டுமே வாங்கி தீர்வு கண்ட நிலை மாறியது, தற்போது ஊழல் காரணமாக மாறியுள்ளது. அரசு அலுவலகங்களில் பெறப்படும் குறைகளைவு மனுக் களை கையாளும் போது ...

விசாகப்பட்டினத்தில் சர்வதேச யோகா தின கொண்டாட்ட ஆய்வுக் கூட்டம்

சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களுக்குத் தயாராகிறது விசாகப்பட்டினம்: ஏற்பாடுகள் குறித்து மூத்த அதிகாரிகளின் முக்கிய ஆய்வுக் கூட்டம் சர்வதேச யோகா தின கொண்டாட்டங்கள் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. 11-வது ஆண்டு கொண்டாட்டம் வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி தேசிய அளவிலான நிகழ்ச்சியை நடத்த விசாகப்பட்டினம் நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து, மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் விரிவான ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். கடைசி நிலையில் உள்ள நபருக்கும் யோகாவை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தெளிவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், நாடு முழுவதும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்திய ராஜேஷ் கோடேச்சா, ஆந்திரப் பிரதேச அரசின் சிறப்பு தலைமைச் செயலாளர் திரு கே. விஜயானந்த் ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ஆயுஷ் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி மோனலிசா தாஷ், விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் எம்.என்.ஹரேந்திர பிரசாத் போன்ற மூத்த அதிகாரிகள் பங்...

நான்கு தேசிய உயர் சிறப்பு மையங்களில் 2 ஆம் நக்‌ஷா திறன் மேம்பாட்டுத் திட்டப் பயிற்சி

நக்‌ஷா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் இரண்டாவது தொகுதிக்கான பயிற்சி, ஜூன் 16 முதல் நான்கு தேசிய உயர் சிறப்பு மையங்களில் தொடங்குகிறது மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் நில வளத் துறை, நக்‌ஷா எனப்படும் தேசிய நகர்ப்புற வாழ்விடங்களின் புவிவெளிசார் அறிவு அடிப்படையில் நில சர்வே திட்டத்தில் திறன் மேம்பாட்டு இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் தொகுதிக்கான பயிற்சியை நாளைமுதல் (ஜூன் 16, 2025) நாட்டில் உள்ள நான்கு சிறப்பு மையங்களில் தொடங்க உள்ளது. நக்‌ஷா திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் கட்டத்திலும் இரண்டாம் கட்டத்தின் முதல் தொகுதியிலும் ஹைதராபாத்தில் 160 முதன்மை பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்பட்ட  பயிற்சி மே மாதம் நிறைவுற்றது.  இரண்டாம் கட்டத்தின் முதல் தொகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் 151 அதிகாரிகளுக்கு 2025 ஜூன் 2 முதல் 7 வரை ஐந்து மையங்களில் வெற்றிகரமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட பயிற்சித் திட்டத்தின் இரண்டாம் தொகுதியை  நிலவளத் துறையின் செயலாளர் திரு மனோஜ் ஜோஷி, நாளை (ஜூன் 16, 2025) காலை 10:00 மணிக்கு காணொலி மூலம்...

சகுரா அறிவியல் உயர்நிலைப் பள்ளித் திட்டம் 2025ற்காக இந்தியாவிலிருந்து 20 மாணவர்கள் ஜப்பான் பயணம்

சகுரா அறிவியல் உயர்நிலைப் பள்ளித் திட்டம் 2025ற்காக இந்தியாவிலிருந்து 20 மாணவர்களை பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் ஜப்பானுக்கு அனுப்பி வைத்தார் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின்  செயலாளர் திரு சஞ்சய் குமார், இந்தியாவிலிருந்து சகுரா திட்டம் 2025 இல் பங்கேற்க ஜப்பானிற்கு அழைக்கப்பட்ட 20 பள்ளிக் குழந்தைகள் அடங்கிய குழுவை அந்நாட்டிற்கு வழி அனுப்பி வைத்தார். பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் இணைச் செயலாளர் திருமதி அர்ச்சனா சர்மா அவஸ்தி, என்சிஐஆர்டி-இன் இணை இயக்குநர் பேராசிரியர் பிரகாஷ் சந்திர அகர்வால் மற்றும் கல்வி அமைச்சகத்தின் பிற அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திரு. சஞ்சய் குமார், ஜப்பான் போன்ற வளர்ந்த நாட்டை ஆராய்வதற்கான ஒரு பொன்னான வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது என்று கூறினார். எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை வடிவமைப்பதிலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதிலும் அதன் ஆழமான தாக்கத்தை அங்கீகரித்து, இந்த சகுரா அறிவியல் பயணத்தின் மகத்தான முக்கியத்துவத்தை அனைத்து மாணவர்களும் அவர்களுடன் வரும் ஆசிரியர்களும் முழுமைய...