இந்திய ‘மரங்களின் தாய்' என அன்புடன் அழைக்கப்பட்ட பத்ம ஸ்ரீ சாலுமரத திம்மக்கா 114வது வயதில் காலமானார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஒரு சரித்திரமாக வாழ்ந்து சாதனைகள் செய்தவர், தனது வாழ்வின் பெரும்பகுதியை, மரங்களை வளர்க்கும் மாபெரும் சேவைக்காக அர்ப்பணித்தார். தனது கணவருடன் இணைந்து, பல லட்சக்க்கணக்கான மரங்களை {ஆலமரம் உள்ளிட்ட) நட்டு, அவை செழித்து வளரும் வரை குழந்தைகளைப் போல் பராமரித்தார். அவரது சூழலியல் பணி அவரை உலகம் முழுவதும் அறியச் செய்தது. வளர்ந்து வரும் காலநிலை மாற்றத்தின் தீங்குகளுக்கிடையில், அவரளித்த பங்களிப்பு ஒப்பிட முடியாதது. ஒரு தனி மனிதரால், சரியான கருவிகள் இல்லாமல், எவ்வளவு பெரிய மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதற்கு காலஞ்சென்ற திம்மக்கா ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்ந்தார். அவரது இயற்கைப் பணி, அவர் நட்டு வளர்த்த மரங்களைப் போலவும், தலைமுறைகள் தாண்டியும் மௌரியப் பேரரசர் சாம்ராட் அசோகர் புகழ் போல நிலைத்து நிற்கும். இயற்கையின் மீதான அவரது காதல் மற்றும் மனித குலத்திற்கான அவரது தன்னலமற்ற சேவை என்றென்றும் நினைவுகூரப்படும். மரங்களின் தாய், சாலுமரத திம்மக்கா அவர்களுக்கு நமது பப்ளிக் ...
குற்றப்பத்திரிகை ஆன்லைன் முறையில் (இ-பைலிங்) இன்று முதல் நீதிமன்றங்களில் தாக்கல் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு விபரம்
குற்றப்பத்திரிகை ஆன்லைன் முறையில் (இ-பைலிங்) இன்று முதல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிழையில்லாத இறுதி குற்ற அறிக்கைகள் தாக்கல் செய்வது அதிகரிப்பு: குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சிகள் அளிக்க ஏற்பாடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பரிந்துரை குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்வதற்கு அனைத்து மாவட்டங்களிலும் சம் பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பயிற்சி வழங்க உயர்நீதிமன்றம் மதுரை பரிந்துரைத்துள்ளது. குற்ற இறுதி அறிக்கை தாக்கல் குறித்து தூத்துக்குடி மாவட்டம் மச்சராஜா, எனபவர் தன் மீது சூரங்குடி காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டில் பதிவு செய்த குற்ற வழக்கை ரத்து செய்யக்கோரி, செஅனை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு.Crl.O.P. (MD) 2025 தாக்கல் செய்த ' மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது கூடுதல் குற்றவியல் அரசு வழக்குரைஞர் டி.செந்தில்குமார் ஆஜராகி, மனுதாரர் மீதான வழக்கில் ஏற்கனவே விசாரணை முடிக்கப்பட்டு விளாத்திகுளம்...