AI தொடர்பாகக் கூகுள் CEO திரு. சுந்தர் பிச்சை தெரிவித்த முக்கியக் கருத்து. "AI ல் இருக்கும் முக்கியப் பிரச்சினை என்பது குறித்து விளக்கிய திரு சுந்தர் பிச்சை, இதனால் இரவு முழுக்க தன்னால் தூங்கவே முடியவில்லை எனத் தெரிவித்தார். அதாவது ஏஐ காரணமாக நமக்குப் பல நன்மைகள் ஏற்படும் அதேநேரம் பல போலியான டீப்ஃபேக்குகள் உருவாக்கப்பட்டு, அவை தவறாக பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் தன்னை இரவில் தூங்க விடாமல் செய்வதாக அவர் குறிப்பிட்டார். AI தொடர்பாக அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு திரு.சுந்தர் பிச்சை அளித்த பேட்டியில், "AI எந்தளவுக்கு வலிமையானது என்பதையும் இனி வரும் காலங்களில் புதிய மருந்துகள், புற்றுநோய் சிகிச்சை எனப் பல்வேறு காரணங்களுக்காக AI உதவும், அதன் அதிவேக வளர்ச்சி காரணமாகச் சில அபாயங்களும் இருப்பதாகவே எச்சரித்தார். அவர் மேலும் "எந்தவொரு தொழில்நுட்பத்திற்கும் இரண்டு வகையான பயன்கள் இருக்கவே செய்யும். சில தீய சக்திகள் AI ஐப் பயன்படுத்தி உண்மையில் இருந்து வேறுபடுத்த முடியாத போலிப் படங்களையும் வீடியோக்களையும் உருவாக்க வாய்ப்பு இருக்கிறது. இது நிஜமாகவே கவலையளிக்க...
உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகம் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைககு வருகிறது
சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பழனிவேல்ராஜன், வழக்கறிஞர்கள் அருண்சுவாமிநாதன், நிரஞ்சன் எஸ்.குமார் ஆகியோரது முன் நடந்த வாதத்தில், 'இந்நீதிமன்ற உத்தரவை அரசு தரப்பு நிறைவேற்றவில்லை. தீபம் ஏற்றச் சென்றவர்களை காவல் துணை ஆணையர் தடுத்தார். ஆட்சேபகரமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இவ்வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்தை ஒரு தரப்பாக இணைத்துக்கொள்ள வேண்டும்' என்றனர். அதையடுத்து நீதிபதி, 'இவ்வழக்கில் கோரிய நிவாரணத்திற்கு அப்பால் மேலும் விரிவாக செல்ல வேண்டாம்,' என்றார். தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ''அவமதிப்பு வழக்கில் இந்த நீதிமன்ற இடைக்கால உத்தரவிற்கு எதிராக தாக்கலான மனுவை, இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. ''இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என, ரிட் மனுவில் உத்தரவிட்டதை எதிர்த்து, அரசு தரப்பில் உயர் நீதிமன்றக் கிளை இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறை...