முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

BMW கார் வாங்க லோக்பால் முடிவு விவாதமான மூத்த வழக்கறிஞர் கருத்து!

 BMW கார் வாங்க லோக்பால் அமைப்பு விலைப்புள்ளி கோரிய நிலையில் விவாதமான மூத்த வழக்கறிஞர் கருத்து! நாட்டின் பிரதமர், மாநில முதல்வர்கள் அமைச்சர்கள், நடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியிலுள்ள மக்கள் பிரதிநிதிகள் அரசு உயர் பணியில் உள்ளோர் அதிகாரம் மிக்க அலுவலர்கள் உள்ளிட்வர்கள் மீதான லஞ்சம் வாங்கி ஊழல் செய்து முறைகேடாக சொத்துக்களைக் குவித்த புகார்களை விசாரணை செய்வதற்காக உருவாக்கப்பட்டது தான் மத்திய லோக்பால் அமைப்பு மாநில அளவில் லோக் ஆயுக்தா எனப்படுவதும்,  2011 ஆம் ஆண்டு இந்தியாவில் ஊழலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அன்னா ஹஷாரே, அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடி, பிரஷாந்த் பூஷன் என பல சமூக நலன் நல்லிணக்கம் கொண்டஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடத்திய  போராட்டம் நாடு முழுவதும் கவனம் பெற்றது. டெல்லியின் ஜந்தர் மந்திர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதை அடுத்துத் தான் இந்தியாவில் ஊழலைத் தடுப்பதற்கான லோக்பால் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. அதன் மூலம் லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகள் உரு...
சமீபத்திய இடுகைகள்

ஜப்பான் வாக்கெடுப்பில் வெற்றி வரலாற்றில் முதல் பெண் பிரதமரான சனேனே டகாய்ச்சி

ஜப்பான் வாக்கெடுப்பில் வெற்றி வரலாற்றில் முதல் பெண் பிரதமரான டகாய்ச்சி    வானவில் எதிர்ப்பு, feminism எதிர்ப்பு, immigration எதிர்ப்பென தீவிர வலதுசாரியானவர் தற்போது தேர்வானார் Sanae Takaichi  ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஜப்பான் பார்லிமெண்ட்டில் கீழவையில் நடைபெற்ற ஓட்டெடுப்பில் சனேனே டகாய்ச்சி வெற்றி பெற்றார். அவர் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகிறார். ஜப்பானில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை இழந்தததால் பிரதமர் ஷிகெரு இஷிபா அவரது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். பின்னர், அக்கட்சியின் புதிய தலைவராக அமைச்சர் சனே டகாய்ச்சி (வயது 64) தேர்ந்தெடுக்கப்பட்டார்.வெற்றியைத் தொடர்ந்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் அதிகாரப்பூர்வத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார். அதையடுத்து, அவர் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே சனே டகாய்ச்சி பிரதமர் ஆக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், ஜப்பான் பார்லிமெண்ட்டில் ஓட்டெடுப்பு நடைபெற்றது. கீழவையில் நடைபெற்றதில் மொத்தம் உள்ள 465 ஓட்டுக்களில் 237 ஓட்டுகளைப் பெற்று டகாய்ச்சி வெற்றி பெற்றார்.இதையடுத்து, அவர் மேலவையி...

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கியது

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்கியது 8 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை கடந்து சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தங்கச்சிமடத்தில் 17 செ.மீ. மழையளவு பதிவானது; தமிழ் நாட்டில் வடகிழக்குப் பருவமழை இரண்டு வாரம் தாமதமாகவே துவங்கியது. தற்போது சென்னை, திருவள்ளூர் கடலோரம் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களிலம் பலத்த மழை பெய்கிறது. கடந்து சென்ற 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில்17 செ.மீ. மழை பதிவானதுது. பாம்பன் பகுதியில் 5 செ.மீ., மண்டபம் பகுதியில் 14 செ.மீ. மழையளவு பதிவானது. மேலும் தென்மேற்கு வங்காள விரிகுடாக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியானது, வடக்கிலிருந்து வடமேற்காக நகரக்கூடுமென்றும், வட தமிழகத்திலிருந்து தெற்கு ஆந்திரப்பரதேசக் கடலோரம் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை...

சபரிமலை தங்கத் திருட்டில் சிக்கிய திருடன் உன்னியும் சிக்கப்போகும் ஊழல் பெருச்சாளிகளும்

கேரளா மாநிலம்  சபரிமலை ஆலயத்தில் துவார பாலகர் தங்கக் கதவை தாமிரம் என வெளியே கொண்டு சென்றது தற்போது அம்பலமானது-  தங்கத்தகடுகள் மாயமான சம்பவத்தில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு துணை ஆணையர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சபரிமலையில் தங்கத் தகடுகள் பதிக்க 1998-ஆம் ஆண்டு பெங்களூர்  தொழிலதிபர் விஜய் மல்லையா 30.300 கிலோ தங்கமும், 1900 கிலோ பித்தளையும் வழங்கினார். கோவிலின் மேற்கூரை, பக்கச் சுவர்களில் சில பகுதிகள், வாசல், நிலை, படிகள் மற்றும் முன்புறமுள்ள துவார பாலகர் சிலைகள் ஆகியவற்றில் தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட நிலையில், 2019-ஆம் ஆண்டு துவார பாலகர் சிலைகள், முன்பக்கத்தில் உள்ள கதவு, நிலை பராமரிப்பு மற்றும் புதுப்பிக்கும் பணிகளுக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பராமரிப்பு பணி முடிந்த நிலையில் புதிய வாசல், நிலை ஆகியவற்றுடன் பொருத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இந்த சிலைகள் பராமரிப்புப் பணிக்கு இந்த ஆண்டு சென்னை நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, இந்த நிலையில், அதில் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் மாயமானது தற்போது  தெரியவந்தது. ஆனால் 2019-ஆம் ஆண்டு 40 கிலோவுக்கு அத...