முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

புதிய வாகனங்கள் பதிவுக்கு கொண்டு வரத் தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவுப் படி ஆணையர் சுற்றறிக்கை

தமிழ்நாட்டில்150 வட்டாரப் போக்குவரத்து அலுவலக யூனிட் அலுவலகங்கள் இயங்குகின்றன. இரண்டு சக்கர வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள் தினமும், 8,000 வரை புதிதாக பதிவு செய்யப்படுகின்றன இவற்றில், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்கள் மட்டுமே, 3,000 முதல் 4,000 வரை பதிவு செய்யப்படடுகின்றன. புதிய வாகனங்களைப் பதிவு செய்யும்போது, அந்த வாகனத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கட்டாயம் கொண்டு வர வேண்டும் என்ற நடைமுறை இதுவரை இருக்கிறது. அதனால், அந்த வாகனத்தின் உரிமையாளரோ அல்லது விற்பனைப் பிரதிநிதியோ, ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்ல வேண்டிய கட்டாயமுள்ளது. தற்போது, மோட்டார் வாகன புதிய சட்டத் திருத்தத்தின்படி, 'சொந்தப் பயன்பாட்டு வாகனங்கள் பதிவின்போது, அவற்றை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வரத் தேவையில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தப் படாமலேயே இருந்தது. இது தொடர்பாக, ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில், 'மோட்டார் வாகன புதிய சட்ட திருத்தத்தின் படி, சொந்த பயன்பாட்டுக்கான புதிய வாகனங்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு வருவதில் விலக்கு...
சமீபத்திய இடுகைகள்

பிள்ளையார்பட்டி சாலையில் அரசு பேரூந்துகள் மோதிய கோர விபத்தில் பலி12 படுகாயம் 34 பேர் தீவிர சிகிச்சை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், நாச்சியார்புரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பிள்ளையார்பட்டி சாலையில் விவேனந்தா பாலிடெக்னிக் கல்லூரி அருகே, காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கிச் சென்ற TN  39 N 0198 அரசுப் பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற TN 63 N 1776 அரசுப் பேருந்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் நேருக்கு நேர் மோதிய நிலையில் விபத்துக்குள்ளானதில், பேருந்துகளில் பயணம் செய்தவர்களில் 12 பேர் பலியாகியுள்ளதாகவும், தற்போது வரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 34 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தகவலறிந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் 108 ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்தவர்கள் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் மற்றும் காரைக்குடி அரசு மருத்துவமனை, மற்றும் சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக்கண்காணிப்பாளர், நாச்சியாபுரம் திருப்பத்தூர் காவல் துறையினர்  சம்பவ இடத்திற்கு விரைந்து ...

ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு குறித்துப் பரவிய வதந்தியின் பின்னணி

ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் ஆய்வாளர் பிரபு குறித்துப் பரவிய வதந்தியின் பின்னணி சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பிரபு ஒரு உணவு விற்பனைக்கடையில் வாரம் தோறும் 10 ஆயிரம் ரூபாய்க்கு உணவு வாங்கி மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு உணவு வாங்கியதாக சில பில்களின் நகல்களும் பதிவு ஒன்றும் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதில் பிரபுவின் படத்தைப் பார்த்ததும் அவரை அறிந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சி. காரணம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதலே அவரை நன்கு அறிந்தவர்கள் பலர் களத்தில் பணியாற்றி வரும் பத்திரிகை ஊடகவியலாளர்கள்.  பல்வேறு காவல் நிலையங்கள் துறைகளிலும் பணியாற்றினாலும் எந்தவித எதிர்மறையான பெயரும் பெறாதவர்.    அந்த பில் நகல்கள் பத்தாயிரம் ரூபாய் என்றெல்லாம் கணக்குக் காட்டவில்லை, ஒன்றிரண்டு பில்கள் Complementary என்று தான் உள்ளன. அதுவும் சிறு தொகைக்குத்தான்.  ஆக, ரூபாய் 10,000, 20,000, 40,000 எல்லாம் இல்லை அங்கே. Mob does'nt think என்பார்கள். அதாவது கூட்டம் சிந்திப்பதில்லை. கூட்டத்தில் ஒருவரைப் பார்த்து அதோ திருடன் ஓடுகிறான் என்று எவரைக் கை காட்டினாலும் கூட்டம் அவரை...

சிறந்த கல்வியும் ஒழுக்கமும் மோலோங்கிய டாக்டர் அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளி

சிறப்புச் செய்தியாளர் :- ரெங்கநாதன் திருப்பதி,                   தமிழ்நாட்டில் அணைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாமல் மிதிவண்டிகள் வழங்கப்படும் திட்டத்தின் படி நீண்ட தூரத்திலிருந்து பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உதவுவது, கல்வி கற்பதை ஊக்குவிப்பு நோக்கத்தில் 2001-2002: ஆம் கல்வியாண்டில் அப்போதைய முதலமைச்சர் டாக்டர் ஜெ.ஜெயலலிதாவால், பெண் கல்வியை ஊக்குவிக்க 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி 2005-2006: ஆம் கல்வியாண்டு இந்தத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 2025-26 ஆம் கல்வியாண்டில் பள்ளி மாணவ - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ், 5.37 லட்சம் மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த மாணவ ...

மேற்குவங்காள ஆளுநர் மாளிகை ராஜ்பவன், இனி லோக்பவன் ஆகும்

மேற்குவங்காள ஆளுநர் மாளிகையான  ராஜ்பவன், இனி லோக்பவன் ஆனது! மேற்குவங்காள ஆளுநர் மாளிகை  ராஜ்பவன் ஏன்பது  பெயர் மாற்றம்: செய்யப்பட்டு , லோக்பவன் ஆனது! மேற்கு வங்காள ஆளுநர் மாளிகையான ராஜ்பவன், 'லோக் பவன்' (மக்களின் மாளிகை) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் வேறு பகுதிகளில் அமைந்துள்ள ஆளுநரின் இல்லங்கள் அனைத்தும் லோக் நிவாஸ் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகை பொதுமக்கள் அணுகக்கூடியதாகவும், 'மக்களின் ஆளுகை'க்கு அடையாளமாகவும் மாற்றும் தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக இந்தப் பெயர் மாற்றம் அமைந்துள்ளது. நவம்பர் மாதம் 25, ஆம் தேதியன்று உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும், ராஜ் நிவாஸ் 'லோக் நிவாஸ்' என்றும் ஒரே மாதிரியாகப் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விக்சித் பாரத் (வளர்ச்சியடைந்த இந்தியா) என்ற நோக்கத்தின் கீழ் ஜனநாயக அமைப்புகளில் மக்களின் பங்கேற்பை வலியுறுத்துவதே இ...

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி 1 டிசம்பர் 2025 முதல் புதிய வழக்குகளின் பட்டியலை ஒழுங்குபடுத்துகிறார்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி 1 டிசம்பர் 2025 முதல் புதிய வழக்குகளின் பட்டியலை ஒழுங்குபடுத்துகிறார். National Judicial Appointments Commission NJAC யை மீண்டும் உயிர்ப்பித்து, கொலீஜியம் முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான மனுவை 'பரிசீலனை' செய்வதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.உயர் மற்றும் உச்சபட்ச நீதித்துறையில் நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான தற்போதைய கொலிஜியம் முறைக்கு பதிலாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (என்ஜேஏசி) புதுப்பிக்க வேண்டும் என்ற மனுவை பரிசீலிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. விசாரணையின் போது வழக்கறிஞர் மேத்யூஸ் நெடும்பாரா NJAC க்காக வாய்மொழி கோரிக்கையை முன்வைத்ததை அடுத்து, இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் மேற்கண்டவாறு தெரிவித்தார். உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பதில் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இறுதி உரிமை கோரும் NJAC சட்டம் மற்றும் 99 வது அரசியலமைப்புத் திருத்தத்தை 2015 ஆம் ஆண்டில்  உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. கொலிஜியம் முறையை மறுபரிசீலனை செய்து NJAC தீர்ப்பை மீண்டும் நடைமுறைப் படுத்துமாறு ...

வேதாரண்யத்திலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்திலிருந்து 110 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 350 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டது.  வங்காள விரிகுடா கடலில், இலங்கைக்கு அருகில் உருவாகியிருக்கும் டிட்வா புயல் தமிழ்நாடு,  தெலங்கானா, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களிலும் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திலும் மழைப்பொழிவு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, டிட்வா புயல், இலங்கை கடற்கரைக்கு அருகில் வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக் கடலையொட்டி நகர்ந்து வருகிறது,   டிட்வா புயல் காரணமாக, நவம்பர் மாதம் 30 ஆம் தேதி இந்தியாவில் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் மாதம். 30 ஆம் தேதி வரை, கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் . கடந்த 6 மணி நேரமாக, டிட்வா புயல் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது பாண்டிச்சேரியிலிருந்து 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 530 கிலோ மீட்டர் தொலைவிலும் கடலில் நிலைகொண்டுள்ளது.மெதுவாக நகர்ந்து நவம...