மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் விராதனூர் கிராமத்தில் கணேசனுடைய மனைவி முருகேசுவரி. கணேசன் 2019-ஆம் ஆண்டு காலமானார். அவரது பெயரிலுள்ள சொத்துக்களை பெயர் மாற்றம் செய்ய இறப்புச் சான்றிதழ் அடிப்படையில் வாரிசுச் சான்றிதழ் கேட்டு முருகேசுவரி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விராதனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சென்ற விண்ணப்பத்தை பரிந்துரை செய்யாமல் லஞ்சம் கொடுக்காத காரணமாக அப்போது நிராகரிக்கப்பட்டதாக தெரிகிறது அதனால் இரண்டாம் முறையாக முருகேசுவரி வாரிசு சான்றிதழ் கேட்டு, விராதனூர் கிராம நிர்வாக அலுவலர் இந்திரா (வயது 46) ஐ அணுகியுள்ளாராம். அப்போது கிராம நிர்வாக அலுவலர் இந்திரா, வாரிசுச்சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்ய வேண்டுமென்றால் ரூபாய்.18 ஆயிரம் எல்லோரும் கொடுப்பது போல் லஞ்சமாகக் கொடுக்க வேண்டுமெனக் கூறியதாகத் தெரிகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத முருகேசுவரி, தன்னிடம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினார். அதுதொடர்பாக மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், துணைக் கண்கா...
திருவள்ளூர் மாவட்டம், வீரகநல்லுார், பெரியார் சமத்துவபுரத்தில் வசிக்கும் 25 பேர், பட்டா இல்லாததால், கடனுதவி மற்றும் அரசு சார்பில் வீடுகள் பழுது பார்க்க முடியாத நிலையில் , பட்டா வழங்கக்கோரி, திருத்தணி தாலுகா வீரகநல்லுார் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் கோட்டீஸ்வரி, (வயது 47),யை அணுகி உள்ளனர். அவர் அவர்களை அலைய வைத்து கேலி பேசியததாகக் கூறப்படுகிறது. சமத்துவபுரம் பகுதி வசிக்கும் பலதரப்பட்ட வாசிகள் தரப்பில், வீரகநல்லுார் தி.மு.க., பிரமுகர் மதுசூதனன், (வயது 57), என்பவர், கோட்டீஸ்வரியிடம் பட்டா வழங்கக் கோரிக்கை வைத்தார். அதற்கு, ஒவ்வொரு பயனாளியும், தலா 3,000 ரூபாய் தந்தால் தான், கணினி பட்டா நகல் தருவதாகக் கூறியுள்ளார். அது குறித்து, மதுசூதனன், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊழல் தடுப்புக் கண்காணிப்புத் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கணேசனிடம் புகார் அளித்தார். நேற்று மதியம் துணைக் கண்காணிப்பாளர் கணேசன், ஆய்வாளர் தமிழரசி மற்றும் குழுவினர், வீரகநல்லுார் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாறு வேடத்தில் வந்தனர். அவர்களின் கண்காணிப்பில், மதுசூதனன் கொண்டுவந்து அலுவலகத்தில் பின...