தமிழ்நாடு முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணண் காலமானார்! அவருக்கு வயது 92 ராதாகிருஷ்ணண் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார். அவர் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையராகவும் , உளவுப்பிரிவு டிஐஜியாகவும் பணியாற்றினார். மேலும், சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக சிறப்பாக பணியாற்றி பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். நாமறிந்த நேர்மையான உயர் அதிகாரி எனப் பெயர் எடுத்த ராதாகிருஷ்ணனுக்கு எழுத்து மற்றும் சமூக சேவையில் மிகுந்த ஆர்வம் இந்த நிலையில் காவல்துறை பணியில் இருந்து ஓய்வு பெற்ற இராதாகிருஷ்ணன், உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் இறுதிச்சடங்கு நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் டிஜிபி ஓய்வு இராதாகிருஷ்ணன் மறைவையொட்டி, பல அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், அலுவலர்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு சிவில் சப்ளை சி.ஐ.டி.காவல்துறை டி.ஜி.பி. என பணியில் கலக்கியவர். ராதாகிருஷ்ணன் IPS- ADGP பணி ஓய்வு... ஒரு வரலாற்றுப் பார்வை:- திருநெல்வேலி மாவட்...
மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர். மலேசியாவின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும், இந்தியா-மலேசியா உறவுகளை வலுப்படுத்துவதற்கும் இந்திய சமுதாயத்தினரின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்குவதில் பிரதமரின் தலைமைக்கும், இந்தியா-மலேசியா உறவை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளுக்கும் அவர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர். பிரதமரின் தொலைநோக்குப் பார்வையையும், இந்தியாவை சிறப்பாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர். மலேசியாவில் உள்ள இந்திய ...