பேரரசர் இராஜ இராஜ சோழர் என்பதற்கும் இராசராசசோழன் என்பதற்கும் உச்சரிப்பு வித்தியாசம் உண்டுன்னு சில புதுமை மண்டுகள் அறியவில்லை, சமஸ்கிருதப் பெயர் தான் அவர் விரும்பி கல்வெட்டுகளில் சூட்டிக் கொண்ட பெயர். கல்வெட்டுகள் பலவும் இன்னும் சமஸ்கிருத மொழியில் தான் இருக்கின்றன. அவர் காலம் மட்டுமல்ல அவரது மகன் இராஜேந்திர சோழன் காலமும் தமிழ் கலந்த சமஸ்கிருத மொழிக்கு சிறந்த காலமாகவே இருந்தது, கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலைதான் இருந்தது, ஜாதி என்பது 1980 ஆம் ஆண்டு வரை தமிழ் தான் அதன்பின் தான் பலர் அதை உச்சரிப்பு பிழையாக சாதி என்றனர், அது அவர்கள் அறிந்த அறிவு, நாம் கடைசிவரை தமிழ் எழுத்தாகவே ஜா, ஸ்ரீ, ஸ்,ஷ், ஹா,எனத்தான் படிப்போம் லக்ஷ்மி என்று தான் எழுதுவோம் இதுவே காலகாலமாக நாம் நமது வழிவழி மூதாதையர் கற்றது அதுவே உண்மையான, மக்களுக்கு நீதியும் நிதியும் வழங்கிய ஊழல் லஞ்ச லாவண்யங்கள் இல்லாத மன்னர்கள் காலம் தொட்டு வரும் ஆட்சி முறை தொன்மையான தமிழ் மொழி, திருக்குறள் கூறுவதும் சமஸ்கிரதம் கலந்த தமிழ் தானே, பிரம்மி மற்றும் கிரந்த எழுத்தில், வட்டெழுத்தில் சமஸ்கிருத மொழியில்...
திரைப்பட இயக்குநர், நடிகர் சேரன் வெளிப்படையான கருத்து 'திருமணம்' படம் தேர்வுக குழுவால் புறக்கணிக்கப்பட்டது குறித்து அவரது கேள்விகள், கவனத்தை ஈர்க்க்கிறது.தமிழ்நாடு அரசின் சார்பில் 2016 முதல் 2022 வரையிலான ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள், 2014 முதல் 2022 வரையிலான தொலைக்காட்சித் தொடர் விருதுகள் மற்றும் 2015-16 முதல் 2021-22 வரையிலான கல்வியாண்டுகளுக்கான எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை கலைவாணர் அரங்கில் பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் வழங்க உள்ள நிலையில் இந்த விருது பட்டியலில் நடிகர்கள் விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்களாகவும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சுவாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய படங்கள் மட்டுமே சிறந்த திரைப்படங்களாக அறிவிக்கப்ப...