தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மூத்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு. இராஜகோபால் காலமானார் கடந்த இருபது வருடங்களாக பலருக்குச் சிறந்த தொல்லியல் வழிகாட்டி. 'மரபுசார் ஆர்வலர் குழு' உருவாக்கிய போது, முதல் ஆளாக வந்து வழிகாட்டியவர். 03.07.2026 ல் அஞ்சலி செலுத்த: https://goo.gl/maps/JdkhG35vAjHc7UPP6?g_st=aw பூகோள வரைபடப் பாதை இறுதிச் சடங்கு நிகழ்வு தமிழ்நாடு தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் துறையின் மூத்த கல்வெட்டாய்வாளரும், தொல்லியல் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவருமான முனைவர் சு. ராஜகோபால் மறைவையொட்டி, அவருடைய இறுதிச் சடங்கு நாளை சனிக்கிழமை 04.06.26 காலை 10.00 மணியளவில் திருவொற்றியூர் தேரடி மெட்ரோ நிலையம் அருகிலுள்ள நகரத்தார் விடுதியில் நடைபெறவுள்ளது. அவரது உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்மூத்த கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சு. இராஜகோபால் தமிழ்நாடு தொல்லியல் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி, கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் ஆதாரங்கள் மூலம் தமிழ்நாட்...
தலைமைத்துவம் என்பது, சேவையால் தான் அளவிடப்படுகிறது, அதிகாரத்தால் அல்ல - குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் அஜித் மாதவராவ் கோப்சாடே தொடங்கி வைத்த இரண்டு மாத கால பயிற்சித் திட்டமான 'எம்.பி. லீட் ஃபெலோஷிப்' என்ற பயிற்சித் திட்டப் பங்கேற்பாளர்களுடன் இன்று (02.07.2026) குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்துரையாடினார். இளைஞர்கள் நிகழ்ச்சியில் பேசிய அவர் இளைஞர்கள் தேச சேவையில் அர்ப்பணிப்புள்ள தலைவர்களாக உருவாக வேண்டும் என்று வலியுறுத்தினார். தலைமை என்பது அதிகாரத்தால் அளவிடப்படுவதில்லை எனவும், மாறாக பணிவு, நேர்மை, கருணையுடன் சமூகத்திற்கு சேவை செய்யும் ஒருவரின் திறனால்தான் அளவிடப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் ஒற்றுமையை எடுத்துரைத்த அவர், பிராந்தியம், மொழி, சாதி ஆகியவற்றைக் கடந்து, இமயமலை முதல் கன்னியாகுமரி வரையிலான இந்தியாவின் பகிரப்பட்ட கலாச்சாரமே நாட்டின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறது என்று அவர் தெரிவித்தார். இதுபோன்ற பயிற்சித் திட்டங்கள், இளைஞர்களுக்கு வகுப்பறைகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தை அறிமுகப்படுத்துவத...