முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

எதிர் பார்த்தபடி மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி போட்டி

எதிர் பார்த்தபடி மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.ஜூன் மாதம் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில், தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு நடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டது. அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சி.வி. சண்முகம் அவரது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று நாடாளுமன்ற மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதில் தவெக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்பதவி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போன்று, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பிரவீன் சக்ரவர்த்தி காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந...
சமீபத்திய இடுகைகள்

கனிமவளக் கொள்ளையைத் தடுத்து அரசு வருவாய் கூட்ட முதல்வர் ஆய்வுக் கூட்டம்

முதலமைச்சர் தலைமையில் இயற்கை வளங்கள் துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கனிமவளங்களின் துறை உயர் அலுவலர்கள் வருவாயை பெருக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.  அதில் அரசின் நிலை இனித் தெரியவரும் Ministry of Geological Mines Mineral Resources New Law & Act, Rules மீறாமல் இருந்தால் சரி, தமிழ்நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற ரூபாய் .4,500 கோடி அளவில் நடந்த சட்டவிரோத மணல் கொள்ளை வழக்கில், வேலூர், அரியலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை (ED) ஏற்கனவே சம்மன் அனுப்பியது. மாவடட ஆட்சியர்கள் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.          Supreme Court today called on the Tamil Nadu government to furnish details of all FIRs registered in relation to the alleged Rs.4730 cr worth of illegal sand mining/theft of mineral in the state. Case Title: M.LAKSHMANAN Versus THE UNION OF INDIA AND ORS., SLP(...

தமிழ்நாட்டில் மாறறங்களுடன் சரியான திசையில் பயணிக்கத் துவங்கும அரசுத் துறைகள்

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்காக ஆஜராக இரண்டு மூத்த வழக்கறிஞர்கள் நியமனம் ! இந்திய உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜராகும் வகையில், மூத்த வழக்கறிஞர்களான பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்ரியா பத்மநாபன் ஆகியோர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அந்தஸ்தில் தமிழக அரசின் சட்ட ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக அரசின் உள்துறை (நீதிமன்றங்கள்-IV) துறை சர்பில் அரசாணை வெளியிட்டுள்ளதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் பரிந்துரையின் அடிப்படையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த இரண்டு மூத்த வழக்கறிஞர்களும் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரசாந்தோ சந்திர சென் மற்றும் ஹரிப்ரியா பத்மநாபன் ஆகியோர், தமிழ்நாடு அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதிடுவார்கள். இவர்களுக்கு கூடுதல் அட்வகேட் ஜெனரலுக்கு இணையான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அடுத்ததாக தமிழ்நாடு முழுவதும் பதிவுத்துறையில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நோடல் அலுவவர்கள் நியமனம் ! தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 5...