இலங்கையில் டிட்வா புயல் தாக்குதல் 90 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்கின்றனர். கடும் பேரிடர்ச் சூழல் காரணமாக, கண்டி, பதுளை, அம்பாறை மாவட்டங்களில் மட்டும் 90 உயரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அலுவலர்கள் கூறும் நிலை. கண்டி மாவட்டத்தில் மட்டும் 50 பேர் உயிரிழப்பும் 67 பேர் காணாமல் போனதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் மாதம் 27 ஆம் தேதி புயலானது. அதற்கு திட்வா எனப் பெயர். கடந்த சில நாட்களாகவே இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மிகுந்த சேதம் ஏற்படடள்ளது. இந்தக் கால கட்டத்தில் 219,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. காலை நிலவரப்படி இலங்கையில் கண்டி மற்றும் மதாலே மாவட்டங்களில் சில பகுதிகளில் 40 செ.மீக்கு அதிகமான மழை பதிவாகியுள்ளது. கம்மதுவா பகுதியில் 57.8 செ.மீ மழை பெய்துள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மஹாவெலி, தெதுரு ஒயா, மஹா ஒயா, காலா ஒயா, மெனிக் கங்கா, மல்வாது ஒயா ஆகிய உப ஆறுகளில் வெள்ளப்...
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமைக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் மாம்பழச் சின்னம் உறுதியானது. பாமகவின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தான்!" இந்தியத் தேர்தல் ஆணையம் மருத்துவர் ச.ராமதாசுக்கு எழுதிய கடிதம். கட்சித்தலைவர் பதவி குறித்த உங்களது முரண்பாடுகளைத் தீர்க்க நீதிமன்றத்தை அணுகும்படி மருத்துவர் ச.ராமதாஸ் சார்ந்த சிறிய அணிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்! கட்சியின் சட்டப்பூர்வ அங்கீகாரம் குறித்து நிர்வாகிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் மருத்துவர் அண்புமணி ராமதாஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். "நமக்குத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டார்கள். என்னை கட்சித் தலைவராக அங்கீகரித்துள்ளார்கள். மாம்பழம் சின்னம் நமக்கு ஒதுக்கி விட்டார்கள். தேர்தல் ஆணையம் 'Aபார்ம்' மற்றும் ' Bபார்ம்' கையெழுத்து போடும் அங்கீகாரம் கொடுத்து விட்டார்கள். நீதிமன்றம் அல்லது எங்கு சென்றாலும் எதுவும் ஆகப் போவது கிடையாது. அதைப் பற்றியும் நான் பேசவும் வேண்டாம்" என்று உறுதியளித்தார். மேலும், கட்சியின் நிறுவனர் அய்யா ராமதாஸ் அவர்களைப் பற்றி மாற்றுத் த...