எஸ் ஐ ஆர் பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம்; இணையத்தில் வெளியீடு கணக்கெடுப்புப் படிவம் பதிவேற்றப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் வரும், டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் படி கணக்கெடுப்பு பணி நடப்பதில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளதில், 6.15 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இது, 95.6 சதவீதம் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபா படிவங்கள், நேற்று வரை 2.59 கோடி வாக்காளர்களிடம் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது, 40.4 சதவீதம். வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கீட்டுப் படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டதா என்ற விவரத்தை, தேர்தல் ஆணையத்தின், https://voters.eci.gov.in/இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்...
உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 20 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்ற இந்திய குழுவினருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது; “நமது குத்துச்சண்டை வீரர்களின் பிரமிக்கவைக்கும் செயல்பாடு! உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று நமது நாட்டின் பெருமையை அடுத்த நிலைக்கு உயர்த்தியுள்ள நமது அணிக்கு மனமார்ந்த வாழத்துகள். உங்கள் கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் திறன்கள் வளர்ந்துவரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொன்னான பாதையாகும். உங்களுக்கு என்றும் வெற்றி கிடைக்கட்டும்”