முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

எஸ் ஐ ஆர் பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம்; இணையத்தில் வெளியீடு

எஸ் ஐ ஆர் பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம்; இணையத்தில் வெளியீடு கணக்கெடுப்புப் படிவம் பதிவேற்றப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் வரும், டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் படி கணக்கெடுப்பு பணி நடப்பதில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளதில், 6.15 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இது, 95.6 சதவீதம் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபா படிவங்கள், நேற்று வரை 2.59 கோடி வாக்காளர்களிடம் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது, 40.4 சதவீதம். வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கீட்டுப் படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டதா என்ற விவரத்தை, தேர்தல் ஆணையத்தின், https://voters.eci.gov.in/இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்...
சமீபத்திய இடுகைகள்

உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 20 பதக்கங்களை வென்ற இந்தியக் குழு

உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 20 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்ற இந்திய குழுவினருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது; “நமது குத்துச்சண்டை வீரர்களின் பிரமிக்கவைக்கும் செயல்பாடு!  உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று நமது நாட்டின் பெருமையை அடுத்த நிலைக்கு உயர்த்தியுள்ள நமது அணிக்கு மனமார்ந்த வாழத்துகள். உங்கள் கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் திறன்கள் வளர்ந்துவரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொன்னான பாதையாகும். உங்களுக்கு என்றும் வெற்றி கிடைக்கட்டும்”

பிரதமர் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி குருக்ஷேத்ரா செல்கிறார்

பிரதமர் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி அன்று குருக்ஷேத்ரா செல்கிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஹரியானாவின் குருக்ஷேத்ராவிற்கு நவம்பர் 25 அன்று செல்கிறார். மாலை 4 மணியளவில் பகவான் கிருஷ்ணரின் புனித சங்கின் நினைவாக புதிதாக கட்டப்பட்ட 'பஞ்சஜன்யா'-வை பிரதமர் திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, மகாபாரத அனுபவ மையத்தைப் பார்வையிடுகிறார். இது மகாபாரதத்தின் குறிப்பிடத்தக்க அத்தியாயங்களை சித்தரிக்கக்கூடியதாகும். அதன் கலாச்சார மற்றும் ஆன்மீக மகத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகும். மாலை  4-30 மணியளவில் சீக்கியர்களின் 9-வது குருவாக மதிக்கப்படும் ஸ்ரீ குரு தேக்பகதூரின் 350-வது தியாக தினத்தை ஒட்டி நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க உள்ளார். அப்போது அவர் குருவின் 350-வது தியாக தினத்தை குறிக்கும் சிறப்பு நாணயத்தையும், அஞ்சல் தலையையும் வெளியிட்டு உரையாற்ற உள்ளார். குரு தேக்பகதூரின் 350-வது தியாக தினத்தை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு ஓராண்டு காலத்திற்கு இதை கடைபிடிக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 5-45 மணியளவில், ஸ்ரீமத் பகவத் கீதையின் தெய்வீக வெளிப்பாட்டுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நாட்ட...

இந்திய உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார்

இந்திய உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார்    ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு பணியில் துவங்கிய 24-05-2019 ஆம் தேதி முதல் 09-02-2027 ஆம் தேதி வரை பதவிக்காலமாகும்  பிப்ரவரி 10 , 1962 ல் ஹரியானா மாநிலம் ஹிசாரில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து. 1981 ஆம் ஆண்டில் ஹிசாரில் உள்ள அரசு முதுகலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1984  ஆம் ஆண்டில்  ரோஹ்தக்கில் உள்ள மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1984 ஆம் ஆண்டில் ஹிசாரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார். 1985 ஆம் ஆண்டில் சண்டிகர் மாநிலத்துக்கு மாறி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சி பெற்றார். அரசியலமைப்பு, சேவை மற்றும் சிவில் விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர். பல பல்கலைக்கழகங்கள், வாரியங்கள், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் உயர் நீதிமன்றத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். ஜூலை 7, 2000 நாள் அன்று ஹரியானாவின் இளைய வயது அட்வகேட் ஜென...

இலங்கை ஜீவன் குமாரவேல் தொண்டமானையும் நாச்சியார் ஸ்ரீ சீதையையும் திருமண பந்தத்தில் இணைத்து வைத்த எஸ்டேட் தொழில்

இலங்கை ஆ.ஜீவன் குமாரவேல் தொண்டமானயும் இரா.நாச்சியார் ஸ்ரீ சீதையையும் எஸ்டேட் தொழிலால் இணைத்து வைத்த திருமண விழா.    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் நேற்று (23.11.2025)  திருமண பந்தத்தில் இணைந்தார். , ஜீவன் குமாரவேல் தொண்டமான் இந்தியா, தமிழ்நாடு மாநிலம் திருப்பத்தூரைச் சேர்ந்த சீதை ஸ்ரீ நாச்சியார் என்பவருடன் திருமண பந்தத்தில் இனைந்துக்கொண்டார். அவருடைய திருமணம் நேற்று (23.11.2025)  திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , அவரது மனைவி மற்றும் பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஜீவன் தொண்டமானின் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.இதேவேளை, இந்தியாவின் அரசியல், சினிமா மற்றும் வர்த்தகத் துறையைச் சேர்ந்த பிரமுகர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இந்தியாவில் திருமண விழாவினைத் தொடர்ந்து இலங்கையில் கொழும்பு மற்றும் கொட்டகலயில் திருமண வரவேற்புகள் நடைபெறவுள்ளன.ஜீவன் தொண்டமான் நாடாளுமன்ற உறுப்பினராக 12. 08. 2020 ஆம் தேதி...