கால்நடைகளைப் பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடைசி வாய்ப்பு அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் கால்நடைகளை பலியிடத் தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பளித்து சென்னை உயர் நீதிமன்றமா மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. இஸ்லாமிய பக்ரீத் பண்டிகையை ஒட்டி, பசுக்கள், எருமைகள், காளைகள் ஒட்டகங்கள் மற்றும் ஆடுகள் திறந்த வெளியில் சட்ட விரோதமாக ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதைத் தடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எங்கும் கால்நடைகளை பலியிடத் தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என மனுவில் ரங்கராஜன் கூறியிருந்தார். மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மாவட்ட வாரியாக வதைக்கூட விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள...
கோயமுத்தூர் செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது தங்க மோசடி வழக்குப் பதிவு. ரூபாய்.1 கோடி தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு கோயமுத்தூர் கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூபாய்.1கோடி மதிப்புள்ள தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல்துறை ஆய்வாளர் மீது குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்துகின்றனர். கோயமுத்தூர் சிவானந்தாகாலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58), கட்டுமானத் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வீட்டிலிருந்த போது அப்போது பணியில் இருந்த செல்வபுரம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் வந்தவர்கள் சோமசுந்தரத்திடம், நீங்கள் நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ரூபாய் 1 கோடி மதிப்பில் தங்கம் வாங்கி மோசடி செய்துள்ளீர்கள். எனவே உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களை விசாரிக்கவேண்டும் எனக்கூறி அவரை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு கூட்டிச்சென்று அங்கு மிரட்டி நகையை வாங்கினர் பின்னர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமைய...