தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் பணி உயர்வுக்கான காலவரம்பைக் குறைத்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையால், 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பதவிஉயர்வு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதென விபரம் தெரிந்த தலைவர் பலரும் குறிப்பிடும் நிலையில். அனைத்துக் காவலர்களும் பயனடையும் வகையில், பதவி உயர்வு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, இப்போது அதற்கு எதிராக செயல்படுவதாக பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையின் இரண்டாம் நிலைக்காவலர்களாக பணியில் சேருபவர்களுக்கு பத்தாண்டுகளில் முதல் நிலைக் காவலராகவும், அடுத்த ஐந்தாண்டுகளில் தலைமைக் காவலராகவும், அடுத்த பத்தாண்டுகளில் சிறப்பு சார்பு ஆய்வாளராகவும் பணி உயர்வும் வழங்கப்படுகிறது. காவலர்களாக பணியில் சேர்பவர்கள் சார்பு ஆய்வாளர்களாகக் கூட பதவி உயர்வு பெற முடியாத சூழல் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் தான், இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு பத்தாண்டுகளில் முதல்நிலைக் காவலர், 13 ஆண்டுகளில் தலைமைக் காவலர், 23 ஆண்டுகளில் சிறப்பு சார்பு ஆய்வா...
அங்கீகாரமில்லாத தனி மனைகளை வாங்கியவர்கள், எப்போது வேண்டுமானாலும் ஆன்லைன் வழியே விண்ணப்பித்து, வரன்முறை பெறலாம் அரசாணை வெளியீடு
நகர் ஊரமைப்பு வளர்ச்சி 2025 - 26 ஆம் ஆண்டிற்கான வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவிப்பு எண். 5 -ல் நாள் 20.10.2016 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ அங்கீகாரம் இல்லாமல் விற்கப்பட்ட தனிமனையினை எந்தக் காலக்கெடுவும் இல்லாமல் இணைய வழி மூலம் விண்ணப்பித்து வரன்முறைப் படுத்திக் கொள்ளுதல் சம்பந்தப்பட்ட அரசாணை வெளியீடு. அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை எனவும், அங்கீகாரம் இல்லாத தனி மனைகள் வரன்முறைக்கு காலவரம்பு இல்லை 'தமிழ்நாட்டில் அங்கீகாரமில்லாத தனி மனைகள் வரன்முறைக்கு, காலவரம்பின்றி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது' என, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு விவசாய நிலங்களில் நஞ்சை தவிர புஞ்சை நிலம் வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாக, 2016 ஆம் ஆண்டில் புகார் எழுந்ததையடுத்து நீதிமன்ற உத்தரவு காரணமாக, அங்கீகாரமில்லாத மனைகள் விற்பனை செய்துள்ள பத்திரப்பதிவுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்தத் தடை உத்தரவுக்கு முன், மனைகளை வாங்கியவர்களுக்கு நிவாரணமாக, நிபந்தனைகள் அடிப்படையில் வரன்முறை செய்யும் திட்டம், 2017 ஆம் ஆண்டில் ...