முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

கால்நடைகளைப் பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடைசி வாய்ப்பு

கால்நடைகளைப் பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடைசி வாய்ப்பு        அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் கால்நடைகளை பலியிடத் தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பளித்து சென்னை உயர் நீதிமன்றமா மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. இஸ்லாமிய பக்ரீத் பண்டிகையை ஒட்டி, பசுக்கள், எருமைகள், காளைகள் ஒட்டகங்கள் மற்றும் ஆடுகள் திறந்த வெளியில் சட்ட விரோதமாக ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதைத் தடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எங்கும் கால்நடைகளை பலியிடத் தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என மனுவில் ரங்கராஜன் கூறியிருந்தார். மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மாவட்ட வாரியாக வதைக்கூட விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள...
சமீபத்திய இடுகைகள்

கோயமுத்தூர் செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது தங்க மோசடி வழக்குப் பதிவு

கோயமுத்தூர் செல்வபுரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் மீது தங்க மோசடி  வழக்குப் பதிவு. ரூபாய்.1 கோடி தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு கோயமுத்தூர் கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் ரூபாய்.1கோடி மதிப்புள்ள தங்கத்தை மிரட்டி வாங்கியதாக காவல்துறை ஆய்வாளர்  மீது குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்துகின்றனர். கோயமுத்தூர் சிவானந்தாகாலனியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58), கட்டுமானத் தொழில் நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வீட்டிலிருந்த போது அப்போது பணியில் இருந்த செல்வபுரம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட 7 பேர் வந்தவர்கள் சோமசுந்தரத்திடம், நீங்கள் நகை வியாபாரியான முத்துக்குமார் என்பவரிடம் ரூபாய் 1 கோடி மதிப்பில் தங்கம் வாங்கி மோசடி செய்துள்ளீர்கள். எனவே உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களை விசாரிக்கவேண்டும் எனக்கூறி அவரை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு கூட்டிச்சென்று  அங்கு  மிரட்டி நகையை வாங்கினர்  பின்னர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமைய...

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானாது ரசிகர்கள் மத்தியில் பேரிழப்பு

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா  மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானது ரசிகர்கள் மத்தியில் பேரிழப்பு மரணம் குறித்து இரண்டு நாள் முன் மதியம் தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்துத் தெரிய வந்தது. அதற்கு முன் பல வதந்திகள் ராமர் கோவில் நிறைவு விழா தொடர்பாக நமது செய்தி இரண்டு நாள் தாமதம் தெய்வ சங்கல்பம். பாலிவுட் நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தும் முன்பு அவரது உடல் இறுதிச்சடங்கிற்காக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் இறுதிச்சடங்குகளுக்காக விலே பார்லேயில் உள்ள பவன் ஹென்ஸ் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தர்மேந்திராவின் மனைவி ஹேமாமாலினி, மகள் இஷா தியோல், சஞ்சய் தத், அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஆமீர் கான் ஆகியோரும் வந்திருந்தனர். தர்மேந்திராவின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்ட...

விஜய் கட்சியில் விசில் சப்தம் இணையும் செங்கோட்டையன்

 தவெக தலைவர் நடிகர் விஜய் முன்னிலையில் நவம்பர் மாதம் 27-ஆம் தேதியில் தவெகவில் இணைகிறார் மூன்னால் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் தலைமைக்கு எதிராக சில வாரங்களுக்கு முன் போர் துவங்கிய கே.ஏ.செங்கோட்டையன். அதிமுகவில் இருந்து வெளியேற்றியோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என  கெடு விதித்தார் கோபமடைந்த எடப்பாடி கே.பழனிசாமி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை முதலில் பறித்தார். பின்னர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலா நடராஜன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்லம் உள்ளிட்டோரை செங்கோட்டையன் சந்தித்துப் பேசினார். இதனால் அதிமுகவிலிருந்தே கே. ஏ.செங்கோட்டையனை நீக்கினார் எடப்பாடி கே பழனிசாமி. மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்களையும அதிமுகவில் இருந்து நீக்கினார். இந்த நிலையில்தான் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் கே. ஏ. செங்கோட்டையன் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.கே.ஏ.செங்கோட்டையனின் சகோதரி மகனான முன்னாள் டிஜிபி எம்.ரவி, கடந்த வாரம் நடிகர் விஜய்யை இது தொடர்பாக சந்தித்துப் பேசியிருந்தார். இதனையடுத்து தமது சட்ட...

ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திர் மற்றும் குருச்ஷேத்திரத்திற்கு பிரதமர் வருகை,

பரதப் பிரதமர் அலுவலகத்தின் தரப்பு தரும் செய்தியில் இன்று நவம்பர் மாதம் 25-ஆம் தேதி அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திருக்கு பிரதமர் வருகை, இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி மந்திரின் சிகரத்தில் காவிக்கொடியை பிரதமர் ஏற்றினார் ஸ்ரீராமரின் அபிஜித் முஹூர்த்தம் மற்றும் மா சீதையின் திருமண பஞ்சமியுடன் இணைந்து ராஜ்ய கொடி ஏற்றுதல் நாட்டின் சமூக-கலாச்சார மற்றும் ஆன்மீக நிலப்பரப்பில் ஒரு முக்கியமான நிகழ்வைக் குறிக்கும் வகையில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ஜன்பூமி மந்திர். காலை 10 மணியளவில், மகரிஷி வசிஷ்டர், மகரிஷி விஸ்வாமித்திரர்,  மஹர்ஷிஹர் வால்ஸ்த்ரர்,    ஆகியோரின் கோவில்களைக் கொண்ட சப்தமந்திருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அஹல்யா, நிஷாத்ராஜ் குஹா மற்றும் மாதா ஷபரி. இதைத் தொடர்ந்து ஷேஷாவ்தர் மந்திருக்குச் சென்றார். காலை 11 மணியளவில், பிரதமர் மாதா அன்னபூர்ணா மந்திருக்குச் சென்றார். அதன் பிறகு, அவர் ராம் தர்பார் கர்ப் கிரஹில் தரிசனம் மற்றும் பூஜை செய்தார். அயோத்தியில் உள்ள புனித ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவிலின் சிகர...

எஸ் ஐ ஆர் பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம்; இணையத்தில் வெளியீடு

எஸ் ஐ ஆர் பதிவேற்றப்பட்ட வாக்காளர்கள் விபரம்; இணையத்தில் வெளியீடு கணக்கெடுப்புப் படிவம் பதிவேற்றப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியை, இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக, நவம்பர் மாதம் 4 ஆம் தேதி முதல் வரும், டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் படி கணக்கெடுப்பு பணி நடப்பதில், 68,470 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில், 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளதில், 6.15 கோடி பேருக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. இது, 95.6 சதவீதம் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பபா படிவங்கள், நேற்று வரை 2.59 கோடி வாக்காளர்களிடம் பெறப்பட்டு, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இது, 40.4 சதவீதம். வாக்காளர்கள் பூர்த்தி செய்து வழங்கிய கணக்கீட்டுப் படிவங்கள், 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்யப்பட்டதா என்ற விவரத்தை, தேர்தல் ஆணையத்தின், https://voters.eci.gov.in/இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். அதில், வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப்...

உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 20 பதக்கங்களை வென்ற இந்தியக் குழு

உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 20 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வாழ்த்து உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்ற இந்திய குழுவினருக்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது; “நமது குத்துச்சண்டை வீரர்களின் பிரமிக்கவைக்கும் செயல்பாடு!  உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டியின் இறுதிச் சுற்றில் 9 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 20 பதக்கங்களை வென்று நமது நாட்டின் பெருமையை அடுத்த நிலைக்கு உயர்த்தியுள்ள நமது அணிக்கு மனமார்ந்த வாழத்துகள். உங்கள் கடின உழைப்பு, உறுதிப்பாடு மற்றும் திறன்கள் வளர்ந்துவரும் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொன்னான பாதையாகும். உங்களுக்கு என்றும் வெற்றி கிடைக்கட்டும்”