முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் மூத்த தலைவர் இல்.கணேசன் காலமானார்

நாகலாந்து மாநிலத்தின் ஆளுநர் இல்.கணேசன்  உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். இவர்  தமிழ்நாடு மாநில பாரதீய ஜனதா கட்சியின்  முன்னாள் தலைவர் நாகாலாந்து மாநிலத்தின் கவர்னராக பதவியில் உள்ளார்  இவர் திருமணம் செய்து கொள்ளாத முழு நேர ஆர் எஸ் எஸ் தொண்டர் இவர், சென்னையில் உள்ள தனது அண்ணன் வீட்டில் நேற்று திடீரென மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த இல.கணேசனை அவருடைய குடும்பத்தினர் மீட்டு சென்னை ஆயிரம் விளக்கு  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட இல.கணேசன், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் தொடர்ந்து 2-வது நாளாக இல.கணேசன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்.நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அண்ணன் குடும்பம் சென்னையில் உள்ளது. அவர் சென்னை வந்திருந்த நிலையில்,  பாத்ரூமில் வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டதாக கூறப்படடது. அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து நிலையில் அவரது உடல்நிலை க...
சமீபத்திய இடுகைகள்

குப்பைக் குத்தகை வரவு ராம்கி ரெட்டிக்கு ஆனால் செலவு மட்டும் அரசுக்கு

குப்பைக் குத்தகை வரவு ராம்கி ரெட்டிக்கு ஆனால்  செலவு மட்டும் அரசுக்கு    சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது விவகாரத்தில்.  13 நாட்களாக நடந்த தொடர் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறதா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். அவர்கள் கேட்கும் சலுகைகள் எங்கே? அவர்கள் கேட்பது  மாநகராட்சியின்_ -ஊழியர்களாகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே  அரசு அறிவித்த சலுகைகள் தனியார் காண்ட்ராக்ட் ஒப்பந்ததாரர்களிடம் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு கிடைக்குமா  அதோடு  பணிப் பாதுகாப்பு மற்றும் சம்பளம் அரசு உறுதி செய்யுமா என்பதே அனைத்துக் கட்டப் பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில் காவல் துறையினர் குவிப்புக்குப்- பின்னர் கைது. நடவடிக்கைகள் அரசு பணிக்கு சேர்ந்த பின் தனியார் குத்தகை நிறுவனங்கள் மூலம் பணி என்பதை தொழிலாளர் நலச் சட்டம் அனுமதிக்கிறதா என்பது இங்கு எழு வினா ? "தூய்மைப் பணியாளர்களை அப்புறப் படுத்துக" - என உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் கைது நடவடிக்கை என்பதாகத் தான் தகவல். அரசு தானாக இதைச் செய்யவில்லை என்...

தமிழ்நாட்டில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா

தமிழ்நாட்டில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தன. ஜார்ஜ் கோட்டை முகப்பில், புதுப்பிக்கப்பட்ட கொடிக் கம்பத்தில் இந்திய தேசியக்கொடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கொடியிலிருந்து பூக்கள் காற்றில் பறந்து வந்து விழுந்தன. மூன்று வர்ணத்தில் பலூன்களும் பறக்கவிடப்பட்டன. தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது காவல் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். அனைவரும் எழுந்து நின்றனர். அதன்பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- நாட்டு மக்கள் அனைவருக்கும் விடுதலை நாள் வாழ்த்துகள். சுதந்திர தினத்தில் விடுதலை வீரர்கள், அவர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோரை வணங்குகிறேன். விடுதலைக் காற்றை சுவாசிக்க காரணமாக விளங்கும் தியாகிகளை போற்றுவோம். அனைத்து சமூக மக்களும் ரத்தம் சிந்தி பெற்றது நம் விடுதலை மாநில முதல்-அமைச்சர்களும் கொடி ஏற்ற உரிமையைப் பெற்றுத் தந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி. அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என பல தலைவர்கள் கனவு கண்டனர். 1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வரும் முன் த...

பாரதத் திருநாட்டின் 79 வது சுதந்திர தினத்தில் கொடி ஏற்றி பிரதமர் உரை

பாரதத் திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம். என் அன்பான நாட்டு மக்களே, இந்த சுதந்திரப் பெருவிழா 140 கோடி தீர்மானங்களின் திருவிழா. இந்த சுதந்திரப் பெருவிழா கூட்டு சாதனைகள், பெருமை மற்றும் இதயம் உற்சாகத்தால் நிறைந்த ஒரு தருணம். நாடு தொடர்ந்து ஒற்றுமையின் உணர்வை வலுப்படுத்தி வருகிறது. இன்று, 140 கோடி நாட்டு மக்கள் மூவர்ணக் கொடியின் நிறத்தில் வர்ணம் பூசப்படுகிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி உள்ளது, இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும், அது பாலைவனமாக இருந்தாலும் சரி, இமயமலையின் சிகரங்களாக இருந்தாலும் சரி, கடற்கரையாக இருந்தாலும் சரி, மக்கள் அடர்த்தியான பகுதிகளாக இருந்தாலும் சரி, எல்லா இடங்களிலிருந்தும் ஒரே எதிரொலி, ஒரே ஒரு முழக்கம், ஒரே ஒரு புகழ், தாய்நாட்டைப் போற்றும் ஒரு புகழ், நம் உயிரை விட நமக்கு மிகவும் பிரியமானது. என் அன்பான நாட்டு மக்களே, 1947 ஆம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகள் மற்றும் மில்லியன் கணக்கான ஆயுதங்களின் வலிமையுடன், நமது நாடு சுதந்திரம் பெற்றது. நாட்டின் விருப்பங்கள் உயர்ந்த...

தெருநாய்கள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை

தெருநாய்கள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அமர்வு நாளை விசாரணை டெல்லி யூனியன் பிரதேசத்தில் NCR-ல் சுற்றித்திரியும் உரிமையாளர் இல்லாத தெரு நாய்களைப் பிடித்து உரிய காப்பகத்தில் அடைக்க உத்தரவு. இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்கு நல ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமென  டெல்லியில் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் சுற்றித்திரியும் அனைத்து தெருநாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து காப்பகங்களை அடைத்து பராமரிக்கிறது வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு நாய் கூட தெருக்களில் விடக்கூடாது என்பதை உறுதி செய்ய டெல்லி யூனியன் பிரதேச அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு கடுமையாக அறிவுறுத்திய நீதிமன்றம், இந்த நடவடிக்கைக்கு இடையூறு செய்யும் தனிநபர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் அல்லது அமைப்புகள் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் எச்சரித்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு கடந்த திங்கட்கிழமை இந்த உத்தரவை வழங்கியது. இதை மேனகா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் ஆட்சேபனைகள...

மதுரை மாநகராட்சி மேயர் பதவி பறிபோகும் நிலை

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு திமுகவின் மேயர் கணவர் கைதால் பதவி பறிபோகும்  நிலையில், மண்டலத் தலைவர்களை போல் மாநகராட்சி மேயர் இந்திராணியின் பதவியும் பறிக்கப்படலாம் எனத்  தெரிகிறது.  மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி. கணவர் பொன் வசந்த், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாக ராஜன்  ஆதரவாளராக இருந்ததற்கு பொன்வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார். 20024-ஆம் ஆண்டு ஆணையராக இருந்த தினேஷ்குமார், 150 கட்டிடங்களில் சொத்துவரி முறைகேடு நடந்ததாக பூஜ்யக்  குற்றக் காவல்துறையில்   புகார் செய்தார். ஆனால், உள்ளூர் திமுகவின் அரசியல் அழுத்தம் காரணமாக ஆணையர் கொடுத்த புகார் மீது  ஏழு மாதங்களாக வழக்குப்பதிவு செய்யாமல் முடக்கிய நிலையில் 150 கட்டிடங்களில் நடந்த சொத்துவரி குறைப்பு மட்டும் மறுசீரமைக்கப்பட்டு புதிய வரி விதிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சியில் 100 வார்டுகளில் நடந்த பிற வணிகக் கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த குடியிருப்பு வரி, ‘ஏ’ கிரேடுக்கு பதில் ‘பி’ மற்றும் ‘சி’ கிரேடு விதிப்பும் மறுசீரமைக்கப்படாததால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற...