சட்டமன்றப் பேரவை இயற்றிய மசோதக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவர், மற்றும் ஆளுநர்களுக்கு கால நிர்ணயம் செய்த உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் மீது 14 கேள்விகளை எழுப்பிய குடியரசு தலைவர் தொடர்பான வழக்கில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று 111 பக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்துள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டதில் மாநில அரசின் மசோதாக்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் அதேபோல் மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து மூன்று மாதத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பை கேள்வி கேட்கும் வகையில் மே மாதம் 13 ஆம்...
குடியரசுத் தலைவர் நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2025 நவம்பர் 20 முதல் 22 வரை சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 20-ம் தேதி, சத்தீஸ்கர் அரசு அம்பிகாபூரில் ஏற்பாடு செய்துள்ள பழங்குடியினர் கௌரவ தின கொண்டாட்டத்தில் குடியரசுத் தலைவர் தலைமை விருந்தினராக பங்கேற்க உள்ளார். நவம்பர் 21 ஆம் தேதி, ஷெகந்திராபாத்தின் போலாரம் பகுதியில் உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் நடைபெறும் பாரதிய கலா மஹோத்சவ் 2025 விழாவை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விழாவின் இரண்டாவது பதிப்பில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா, தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன்தீவு ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளமான கலாச்சாரம், உணவு மரபுகள் மற்றும் கலை பாரம்பரியங்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட உள்ளன. நவம்பர் 22 ஆம் தேதி, புட்டப்பர்த்தி பிரசாந்தி நிலையத்தில் நடைபெறும் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு அமர்வில் குடி...