முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

தேஜக கூட்டணி ஆட்சியா? அதிமுக தனி ஆட்சியா? பழனிசாமியின் இறுதி முடிவுக்குக் காத்திருக்கும் பாஜக!

தேஜக கூட்டணி ஆட்சியா? அதிமுக தனி ஆட்சியா? பழனிசாமியின் இறுதி முடிவுக்குக் காத்திருக்கும் பாஜக!  அ.தி.மு.க.,விலிருந்து முன்னால் செல்வி ஜெ.ஜெயலலிதா மரணத்திற்குப் பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை, கட்சியிலும், அமமுகவை கூட்டணியிலும்  இணைப்பது தொடர்பாக கே.பழனிசாமியின் முடிவு தெளிவாகத் தெரியாததால், கடந்த வாரம் தமிழ்நாடு வரவிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணம் தள்ளி வைக்கப்பட்டதாகவே தகவல் வருகிறது, ஜெ.ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட நாள் முதல் அதிமுக சுயமாக சுய காலில் நடக்கவில்லை, ஜெ.ஜெயலலிதா வி. கே.சசிகலா நடராஜன் குற்றவாளிகள் என தீர்ப்பு வர ஜெ.ஜெயலலிதா மரணமடைந்து வி. கே.சசிகலா நடராஜன் சிறை செல்ல கடசியும் சிதறியது காரணம், பெரியகுளம் தேநீர் கடை ஓ.பன்னீர் செல்வம் போல சிலுவம்பாளையம் வெல்லக்கட்டி கோணிப்பை சணல் சாக்கு வியாபாரம் சிலுவம்பாளையம் கே.பழனிசாமியிடம் கட்சியை ஒப்படைத்துச் செனறவர்களிடம் நேர்மையாகத் திருப்பி அவர் வழங்கவில்லை என்பது முதல் நம்பிக்கை மோசடி இவர் முதல்வராகி இருந்த காலத்தில் மக்களுக்கோ அல்லது கட்சிக்கோ, நாடடுக்கோ நல்லது எதுவும், செய்யவில்லை கடசியை தன்வசப் படுத...
சமீபத்திய இடுகைகள்

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி விடுமுறை புதிய பொறுப்பு டி ஜி பி நியமனம்.

தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி விடுமுறை புதிய பொறுப்பு டி ஜி பி நியமனம். உடல் நிலை சரியில்லாததால் டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி வரை தமிழ்நாடு பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் விடுமுறை பொறுப்பு டிஜிபி பொறுப்பை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபியான  அபய் குமார் சிங் கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவு.  தமிழ்நாடு அரசு மருத்துவ விடுப்பில் சென்ற பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் உடல்நலக்குறைவால் மருத்துவ விடுப்பில் இருப்பதால் அபய்குமார் சிங்-க்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பொறுப்பு டிஜிபிக்கான பணிகளை ஊழல் தடுப்பு பிரிவு டிஜிபி அபய்குமார் சிங் கவனிப்பார்.தமிழ்நாடு காவல்துறையின் பொறுப்பு டிஜிபியாக ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றி வந்த வெங்கட்ராமன், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவின் (DVAC) இயக்குநரான அபய் குமார் சிங் புதிய பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன், திடீரென நெஞ்சுவலி காரணமாக நேற்றிரவு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமத...

வாரிசு சான்றிதழ் தருவதற்கு ரூபாய்.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது.

வாரிசு சான்றிதழ் தருவதற்கு ரூபாய்.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (36 வயது), விவசாயி. இவர் தாயார் வீரம்மாள் மரணமடைந்தார். அதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ்குமார் மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (46 வயது) என்பவரை அணுகினார். அதற்கு அவர் வாரிசு சான்றிதழ் அனுமதிக்க ரூபாய்.3 ஆயிரம் லஞ்சமாகத் தர வேண்டும் எனக் கேட்டதால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், அது குறித்து கரூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் தெரிவித்ததன்பேரில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பினாப்தலின் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சதீஷ்குமாரிடம் பெற்று அரசு சாட்சி முன்னிலையில் வேதியல் பரிசோதனை நடத்திக் கொடுத்து, அதனை கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் அரசு சட்சி முன்னிலையில் கொடுக்குமாறு கூறினர். அதன்படி அந்தப் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சதீஷ்குமார் கொடுத்தார். அதனை பிரபு வாங்கியபோது, மறைந்திருந்து கண்க...