அரசியல் சாசன தினத்தை முன்னிட்டுக் குடிமக்களுக்குப் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி இந்தியா முன்னேறும் நிலையில் குடிமக்கள் தங்கள் மனதில் கடமைகளை முதன்மையாக வைக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார் அரசியல் சாசன தினமான நவம்பர் 26 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். 1949-ம் ஆண்டு அரசியல் சாசனம் வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அதில் நினைவுகூர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டுவதில் அதன் நீடித்த பங்களிப்பை சுட்டிக்காட்டியுள்ளார். புனிதமான இந்த ஆவணத்தை மதிக்கும் வகையில், 2015-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று அரசியல் சாசன தினமாக அரசு அறிவித்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், அரசியல் சாசனத்தை செழுமைப்படுத்திய டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பல புகழ்பெற்ற பெண் உறுப்பினர்களைப் பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல், பகவான் பிர்சா முண்டா ஆகியோரின் 150-வது பிறந்தந...
கால்நடைகளைப் பலியிட தடை கோரிய வழக்கு; அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு கடைசி வாய்ப்பு அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் கால்நடைகளை பலியிடத் தடை கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய கடைசி வாய்ப்பளித்து சென்னை உயர் நீதிமன்றமா மதுரை கிளை உத்தர விட்டுள்ளது. இஸ்லாமிய பக்ரீத் பண்டிகையை ஒட்டி, பசுக்கள், எருமைகள், காளைகள் ஒட்டகங்கள் மற்றும் ஆடுகள் திறந்த வெளியில் சட்ட விரோதமாக ஆண்டுதோறும் பலியிடப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுப்பதில்லை. மதத்தின் பெயரால் சட்டவிரோதமாக கால்நடைகளை பலியிடுவதைத் தடுக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் அரசின் உரிமம் பெற்ற இடங்களைத் தவிர, வேறு எங்கும் கால்நடைகளை பலியிடத் தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். என மனுவில் ரங்கராஜன் கூறியிருந்தார். மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மாவட்ட வாரியாக வதைக்கூட விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள...