சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையமான USCIRF, ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் எனும் RSSமற்றும் இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா' அதாவது R&AW ஆகியவற்றிற்கு எதிராகத் தடைகளை விதிக்கப் பரிந்துரைத்துள்ள நிலையில்,
ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்துகிறது. உண்மை நிலை தான் என்ன, உலகம் முழுவதும் மதம் தானே ஆட்சி செய்கிறது அதை ஏற்கும் போது இதை தடை செய்ய என்ன அவசியம் வந்தது,
அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ அமைப்பான USCIRF வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையில், இந்தியாவில் மதச் சுதந்திரம் கவலைக்கிடமாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் நடந்த வகுப்புவாத மோதல்களுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளே காரணம் என்று அந்த அமெரிக்க அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்தியாவில் கொண்டு வரப்பட்ட கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்கள் மற்றும் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றையும் அந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த விவகாரத்தை முன்னிறுத்தி இந்தியாவுடனான ஆயுத விற்பனை மற்றும் வர்த்தக உறவுகளை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்த ஆணையம் கோரியுள்ளது. குறிப்பாக, அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கூறி, அதன் மீது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட தடைகளை விதிக்குமாறு டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகத்திற்குப் பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரசியலமைப்புச் சட்டத்தை எதிர்க்கும் மற்றும் மனுஸ்மிருதியின் படி நாட்டை நடத்தத் துடிக்கும் ஓர் அமைப்பான ஆர்.எஸ்.எஸ், இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் சகோதரத்துவத்திற்கும் விஷம் போன்றது. மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சர்தார் வல்லபாய் படேல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தார்.தற்போது அமெரிக்க ஆணையமும் இந்த அமைப்பு மதச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-க்குத் தடை விதிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "அமெரிக்க ஆணையத்தின் மதிப்பீடுகள் ஒருதலைப்பட்சமானவை மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை.
இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட சமூக அமைப்பைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் இது போன்ற அறிக்கைகள் வெளியிடப்படுகிறது" என விளக்கம் அளித்துள்ளது.RSS அமைப்பை அமெரிக்காவில் தடை செய்ய அமெரிக்க மத சுதந்திர அமைப்பு USCIRF பரிந்துரையில்
உண்மை நிலை என்ன
முதலில் .அந்த அமெரிக்க மத சுதந்திர அமைப்பின் பொறுப்பாளர் ஆசிப் முகமது ஒரு பாகிஸ்தானியர் ஆவார். இரண்டாவதாக. ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, இந்தியாவின் உளவு அமைப்பான ரா (RAW) மீதும் தடை விதிக்க வேண்டும் என்றும் USCIRF பரிந்துரைத்துள்ளது
மூன்றாவதாக . மேற்குறிப்பிட்ட USCIRF, அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது வன்மம் பரப்பி வருவதால் அதைக் கலைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஒன்றை நன்றாகச் சிந்தியுங்கள்.
பக்கிஸ்தானியர்களுக்கு பாரதத்தை நேசிக்கும், காக்கும் அமைப்பு மீது வெறுப்பு வரத்தானே செய்யும்? ஆகவே. உலக நாடுகளில் எல்லாம் அவர்கள் சார்ந்த மதம் விலகி விட்டதா, இவர்களுக்கு ஏன் இந்தியா மீது அக்கரை இவர்கள் உலகை ஆளும் உரிமை பெற்றவர்களா. என்பதே இங்கு எழு வினா?


கருத்துகள்