முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகளுக்கு மாற்று மதத்தவர் டார்ச்சர்' கொடுத்ததை தட்டிக் கேட்டதால், பா.ஜ.,க பிரமுகர் வெட்டிக் கொலை

      மகளுக்கு மாற்று மதத்தவர் டார்ச்சர்' கொடுத்ததை தட்டிக் கேட்டதால், பா.ஜ.,க பிரமுகர் வெட்டிக் கொலை .... கொலையாளிகளை கைது செய்யக் கோரி, பா.ஜ.,வினர், அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு, 39. பா.ஜ.க,வின் பாலக்கரை மண்டல செயலாளரான இவர், காந்தி மார்க்கெட் பகுதியில், வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியிலிருந்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, 'மார்க்கெட்'டில், உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்த முகமது பாபு, 20, அங்கு வந்து. விஜயரகுவுடன் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது பாபுமறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயரகுவை கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி ஓடி விட்டார். காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி விஜயரகு இறந்தார். சம்பவம் தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். 10ம் வகுப்பு படித்து முடித்து, வீட்டிலிருந்த விஜயரகுவின் மகளை, முகமது பாபு ஒருதலையாக காதலித்துள்ளார். மகள் வெளியில் சென்றபோது வழிமறித்து, காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதையறிந்த விஜயரகு, முகமது பாபுவை நேரில் சந்தித்து கண்டித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முகமது பாபு, விஜயரகுவை கத்தியால் குத்தியுள்ளார்; விஜயரகுவின் உறவினர் கிருஷ்ணகுமாரையும் வெட்டியுள்ளார். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட முகமது பாபு, தற்போது ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஜயரகுவை, முகமது பாபு வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரை, போலீசார் தேடி வருகின்றனர். விஜயரகு கொலையை அடுத்து, 100க்கும் மேற்பட்ட, பா.ஜ.க,வினர், காலை, 10:00 மணிக்கு, அரசு மருத்துவமனையில் திரண்டனர். முகமது பாபு மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காலை, 11:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில், 30 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த  ஸ்ரீரங்கம் உதவி  கமிஷனர் திரு  ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், விரைவில் கொலையாளியை கைது செய்வதாக கூற.  சாலை மறியல் கைவிடப்பட்டது. காவல்துறை தரப்பில் இது 'மத மோதல் இல்லை' பா.ஜ., பிரமுகர் விஜயரகு, தனிப்பட்ட முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். மத ரீதியாக கொலை நடந்ததாக தெரியவில்லை. கொலை சம்பவத்தில், மூன்று பேர் ஈடுபட்டதாகவும், அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.என  திரு அமல்ராஜ், மத்திய மண்டல ஐ.ஜி.தெரிவித்துள்ளார்இதற்கிடையில் விஜயரகுவின் மகள் காயத்ரி மற்றும் உறவினர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கடந்தாண்டு விஜயரகு வீட்டருகே நடத்தி வந்த டிபன் கடையில் இருந்து மிட்டாய் பாபு செல்போனை திருடினார். அதனை கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதுதான் உண்மையான முன்விரோதம். மற்றபடி இந்து முஸ்லீம் பிரச்சினை என்பதெல்லாம் உண்மையில்லை" என்றனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...