முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மகளுக்கு மாற்று மதத்தவர் டார்ச்சர்' கொடுத்ததை தட்டிக் கேட்டதால், பா.ஜ.,க பிரமுகர் வெட்டிக் கொலை

      மகளுக்கு மாற்று மதத்தவர் டார்ச்சர்' கொடுத்ததை தட்டிக் கேட்டதால், பா.ஜ.,க பிரமுகர் வெட்டிக் கொலை .... கொலையாளிகளை கைது செய்யக் கோரி, பா.ஜ.,வினர், அரசு மருத்துவமனை முன், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு, 39. பா.ஜ.க,வின் பாலக்கரை மண்டல செயலாளரான இவர், காந்தி மார்க்கெட் பகுதியில், வாகன நிறுத்தக் கட்டணம் வசூல் செய்யும் பணியிலிருந்தார். நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, 'மார்க்கெட்'டில், உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்த முகமது பாபு, 20, அங்கு வந்து. விஜயரகுவுடன் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது பாபுமறைத்து வைத்திருந்த அரிவாளால் விஜயரகுவை கால் மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு, தப்பி ஓடி விட்டார். காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி விஜயரகு இறந்தார். சம்பவம் தொடர்பாக, காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். 10ம் வகுப்பு படித்து முடித்து, வீட்டிலிருந்த விஜயரகுவின் மகளை, முகமது பாபு ஒருதலையாக காதலித்துள்ளார். மகள் வெளியில் சென்றபோது வழிமறித்து, காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதையறிந்த விஜயரகு, முகமது பாபுவை நேரில் சந்தித்து கண்டித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன், இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், முகமது பாபு, விஜயரகுவை கத்தியால் குத்தியுள்ளார்; விஜயரகுவின் உறவினர் கிருஷ்ணகுமாரையும் வெட்டியுள்ளார். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட முகமது பாபு, தற்போது ஜாமினில் வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை விஜயரகுவை, முகமது பாபு வெட்டிக் கொலை செய்திருப்பது தெரிந்தது. அவரை, போலீசார் தேடி வருகின்றனர். விஜயரகு கொலையை அடுத்து, 100க்கும் மேற்பட்ட, பா.ஜ.க,வினர், காலை, 10:00 மணிக்கு, அரசு மருத்துவமனையில் திரண்டனர். முகமது பாபு மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, காலை, 11:30 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில், 30 நிமிடம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த  ஸ்ரீரங்கம் உதவி  கமிஷனர் திரு  ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், விரைவில் கொலையாளியை கைது செய்வதாக கூற.  சாலை மறியல் கைவிடப்பட்டது. காவல்துறை தரப்பில் இது 'மத மோதல் இல்லை' பா.ஜ., பிரமுகர் விஜயரகு, தனிப்பட்ட முன் விரோதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். மத ரீதியாக கொலை நடந்ததாக தெரியவில்லை. கொலை சம்பவத்தில், மூன்று பேர் ஈடுபட்டதாகவும், அவர்கள் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதும், முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.என  திரு அமல்ராஜ், மத்திய மண்டல ஐ.ஜி.தெரிவித்துள்ளார்இதற்கிடையில் விஜயரகுவின் மகள் காயத்ரி மற்றும் உறவினர்கள் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கடந்தாண்டு விஜயரகு வீட்டருகே நடத்தி வந்த டிபன் கடையில் இருந்து மிட்டாய் பாபு செல்போனை திருடினார். அதனை கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அடிக்கடி மோதல் ஏற்பட்டது. இதுதான் உண்மையான முன்விரோதம். மற்றபடி இந்து முஸ்லீம் பிரச்சினை என்பதெல்லாம் உண்மையில்லை" என்றனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...