உத்திரப்பிரதேசத்தின் பெரேலி நகரில் டில்லியிலிருந்து புலம் பெயர்ந்து திரும்பி வந்த கூலி தொழிலாளிகளை சாலையில் அமர வைத்து அவர்கள் அனைவர் மீதும் சாக்கடைகள் மீது அடிக்கின்ற பிளீச்சிங் பவுடர் கரைசலை அடிப்பதாக வரும் செய்தி உண்மையானதானால் இது கண்டிப்பாக தவறான செயல். இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் யோகி ஆதித்யாநாத் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையா என்ற வினா உண்டு.சிவராத்திரி விழாவுக்கு ஜக்கி வாசுதேவ் வரவழைத்த அயல்தேசத்து ஆட்கள், நடிகைகள், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், எல்லாம் வந்துபோனார்கள். அரசு 15/2/2020 க்குப் பின்னர் இந்தியா வந்தவர்களைகண்டு தனிமைப்படுத்துதல் செய்யவும், அயல்தேசத்தினருடன் தொடர்பு இருக்குமாயின் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்துகிறது. ஜக்கிவாசுதேவின் சிவராத்திரி விழா நடந்தபோது பல வெளி நாட்டு நபர்கள் வந்தார்களே அவர்கள் நிலை தற்போது ஏன்ன.
டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேசம் வந்த அப்பாவி ஏழைமக்களைப் பிடித்துச் சுத்தப்படுத்த ஆடு ,மாடுகள் ,வண்டிகளைக் கழுவுவதுபோல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது உத்திரப்பிரதேசத்தின் மாநில
அரசு. இதேபோல் ஒருவர், ஒரே ஒரு ஜக்கி வாசுதேவ விருந்தினரை பிடித்து தண்ணீர் அடிக்குமா ஏன்று சமூக வலைதளத்தில் பலரும் கருத்துக்களை வெளியிட
இத்தனைக்கும் அவர்களுக்கு தான் Risk of exposure அதிகம், அதீதம். அத்தனை ஐரோப்பியர்கள் அங்கே வந்திருந்தனர்.
அவர்கள் கால் கடுக்க நடந்து செல்லும் சூழல் வராது என்று தெரியும்.
ஆனால்
அவர்கள் மீது அஃறிணைகள் மேல் தண்ணீர் பீய்ச்சுவதுபோல் இங்கே பீய்ச்சமுடியுமா என்ற வினாவிற்கு விடை தான் இல்லை. தனது வாழ்நாளில் ஒரே ஒரு ஐரோப்பியரிடம் கூடத் தொடர்பு ஏற்படுத்த வாய்ப்பில்லாத ,விமானம் ஏறவும் வழியே இல்லாத ஒரு ஏழை ஜனத்திரள் மீது மட்டும் ஆடு மாடுகள் மேல் நீரடிப்பது போல் அடிக்க முடியுமென்றால் இந்த இந்தியா யாருக்கானது, சமத்துவம் என்பது காசு உள்ளவனுக்கு கால் அமுக்குவது தானா. இன்னொரு பதிவு சென்னையில் ஒரு குறிப்பிட்ட ஜாதி மக்களுக்கு மட்டுமே அத்தியாவசியமான பொருள் வழங்கும் ஒரு கும்பல் குறித்து எழும் வினா நீங்களெல்லாம் இந்த 70 வருடமாக எங்கிருந்தீர்கள் இதுவரை நடக்காத நிகழ்வுகள் எல்லாம் நிகழ்வது இது வட இந்திய மக்களுக்கு வேண்டுமானால் பழகியிருக்கலாம் ஆனால் தமிழர்கள் அப்படி இல்லை மனிதன் மதிப்பு அறிந்தவர்கள் பஞ்சம் பிழைக்கவும்,பஞ்சு மிட்டாயும் பலூனும் விற்க வந்து சென்னை மதுரை என ஆக்கிரமித்துக்கொண்ட பின்பும் அமைதியாக இருக்கும் மனிதநேயம் பாரட்டத்தான் வேண்டும். அதுவே நம் தென்னகப் பாரம்பரியம்.
கருத்துகள்