முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வருக்கு திருநாவுக்கரசர் எம்.பி. கடிதம்

மக்களுக்குத் தேவையான 
முகக் கவசங்கள், கை கழுவும் சோப்பு, சானிடைசரை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கும்படி முதல்வருக்கு திருநாவுக்கரசர் எம்.பி. கடிதம்
இன்று முதல்வருக்கு  எழுதிய கடிதத்தில், 
ரேஷன் அட்டைதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ஏப்ரல் மாத இறுதி வரையிலான காலத்திற்கு சிறப்பு நிவாரணமாக ரூ.5,000 வழங்கப்பட வேண்டும்.
தமிழக அரசின் கணக்குப்படி அரிசி வழங்கப்படும் குடும்ப அட்டைகள் 1 கோடியே 67 லட்சத்து 21 ஆயிரத்து 538. அந்த்யோதயா அன்ன யோஜனா அட்டைகள் 18 லட்சத்து 62 ஆயிரத்து 615. ஆக மொத்தம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கப்படும் அட்டைகள் 1 கோடியே 85 லட்சத்து 84 ஆயிரத்து 153. அரிசி தவிர்த்து சர்க்கரை வழங்கப்படும் அட்டைகள் 10 லட்சத்து 76 ஆயிரத்து 552. காவலர் குடும்ப அட்டைகள் 61 ஆயிரத்து 61. எப்பொருளும் வழங்கப்படாத அட்டைகள் 60 ஆயிரத்து 827.
ஆக மொத்தம் 1 கோடியே 97 லட்சத்து 82 ஆயிரத்து 593. தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் 33 ஆயிரத்து 222 மூலமாக அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அட்டை வாங்க முடியாதவர்கள், அட்டை வாங்காதவர்கள், அட்டைக்கு மனு செய்தவர்கள் எனக் கணக்கெடுத்தாலும் ஒன்று இரண்டு லட்சம் பேரே கூடுதலாக இருக்கக் கூடும்.
அதேபோல், வெளிமாநிலங்களில் இருந்து வந்து தமிழகத்தில் தங்கிப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் ஒன்று இரண்டு லட்சம் பேர் என கணக்கிட்டாலும் மொத்தத்தில் சுமார் இரண்டு கோடி பேருக்கு நிதி வழங்க வேண்டியிருக்கும். ரூ.5,000 வீதம் வழங்கிட கணக்கிட்டாலும் ரூபாய் பத்தாயிரம் கோடி செலவாகும். மாநில அரசு இதில் ஐந்தாயிரம் கோடி ரூபாயினை மத்திய அரசு தர வேண்டுமென கேட்டு வற்புறுத்திப் பெற வேண்டும்.
தமிழக அரசுக்கும் சரி, மத்திய அரசுக்கும் சரி இப்போதைக்கு மக்களின் உயிரைக் காப்பதைக் காட்டிலும் மக்களைப் பசி பட்டினியில் இருந்தும், நோய் தாக்குதலில் இருந்தும் காப்பதைக் காட்டிலும் முக்கியப் பணி வேறொன்றுமில்லை. மத்திய, மாநில அரசுகள் ராணுவம், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் பல்வேறு திட்ட ஒதுக்கீடுகளில் இருந்து நிதியை எடுத்து தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத அளவில் வீட்டிலேயே முடக்கிப் போட்டு, பசி, பட்டினி, பயம், வேலையிழப்பு, உடல், மன பாதிப்பு என பல்வேறு சோதனைகளுக்கும், கஷ்டங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ள ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் காக்க போர்க்கால அடிப்படையில் கணக்குப் பார்க்காமல் மக்களைக் காத்திட மத்திய, மாநில அரசுகள் உடன் முன் வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கரோனா வைரஸை கண்டறியும் பரிசோதனைக் கூடங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பொது மருத்துவமனைகள் அனைத்திலும் தொற்று நோய் கண்டறியும் மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள் அமைத்து, தேவையான வென்டிலேட்டர்கள், முகக் கவசங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் பயன்பாட்டுக்குத் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் முகக் கவசங்கள், கை கழுவும் சோப்பு, சானிடைசர் ஆகியன ரேஷன் கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழ்வோரைக் கணக்கிட்டு மத்திய அரசோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவசிய அவசர சூழல்களில் சொந்த ஊர் திரும்பி வர அனுமதி பெற்றுத் தரக் கோரும் வெளிநாட்டில் வாழ்வோருக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தனி ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் பொதுமக்கள் தொடர்பு கொள்ள ஏதுவாக தனி தொலைபேசி எண்களையும், போதிய பணியாளர்களையும் நியமித்து தனி அலுவலகம் செயல்படுத்தப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை உடன் நிறைவேற்றிட தமிழக அரசின் மூலமும், மத்திய அரசின் மூலமும் விரைந்து செயல்பட வேண்டும்" என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த