வருமான வரித்துறை வழக்கில் கார்த்திக் ப.சிதம்பரத்தின் குவாஷ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வருமான வரித்துறை வழக்கில் கார்த்திக் ப.சிதம்பரத்தின் குவாஷ் மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரர்களான கார்த்திக் சிதம்பரம் மற்றும் ஸ்ரீநிதி கார்த்திக் சிதம்பரம் ஆகியோருக்காக மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ. கே.டி.எஸ் துளசியும் பொது வக்கீல்களாக திருமதி எம்.ஷீலா மற்றும் திரு.என் பாஸ்கரன் ஆகியோரும் தகவல் தொழில்நுட்பத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தினர் வழக்கறிஞர் திருமதி எம்.ஷீலா.சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது செல்லும் எனக் கூறி கார்த்திக் சிதம்பரம் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
வருமான வரி வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை 2018 ஆம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. வருமான வரிக்கணக்கில் கடந்த 2015-16 ஆம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வட்டம் முட்டுக்காடு கிராமத்தில் உள்ள 1.18 ஏக்கர் நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த வருமானத்தில் 6.38 கோடி ரூபாயை கணக்கில் காட்டவில்லை என குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, 2019 ஜூலை மாதம், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதை எதிர்த்து, கார்த்திக் சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வருமான வரிதுறை வழக்குப் பதிவு செய்த போது எம்.பி.யாக கார்த்திக் சிதம்பரம் இல்லை. எனவே இந்த வழக்கை மாற்றியதை ரத்து செய்ய வேண்டும், அதுவரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுச் செய்திருந்தார்கள்
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரியும், சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிர்த்தும் கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதிகள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றியது செல்லும் என்றும் உத்தரவிட்டனர்.
கருத்துகள்