முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுயசார்பு உத்திரப்பிரதேச வேலைவாய்ப்பு இயக்கம் துவங்கிவைத்த பிரதமர்

சுயசார்பு உத்தரப்பிரதேசம் வேலைவாய்ப்பு இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் சுயசார்பு உத்தரப்பிரதேசம் வேலை வாய்ப்பு இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் கீழ், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கடந்து செல்ல ஒவ்வொருவராலும் இயலும் என்று கூறினார். இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, முகத்தை முகக்கவசத்தால் மூடிக்கொள்வது மிகச்சிறந்த தடுப்பு நடவடிக்கை என்று அவர் கூறினார்.  தொற்று பரவி வரும் சூழலில், மக்களை ஊக்கப்படுத்தி, இந்தப் பேரிடரை ஒரு வாய்ப்பாக உத்தரப்பிரதேசம் மாற்றியிருக்கும் விதம் குறித்து பிரதமர் மனநிறைவை வெளியிட்டார். மற்ற மாநிலங்கள், சுயசார்பு உத்தரப்பிரதேச வேலைவாய்ப்பு இயக்கம் குறித்த பல அம்சங்களைக் கற்கும் என்றும், இவற்றினால் அவை ஊக்கம் பெறும் என்றும் அவர் கூறினார். உலகில் மிகப் பெரிய சிக்கலை கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசம் துணிச்சலையும், அறிவுடைமையையும் காட்டியிருப்பதாக பிரதமர் புகழ்ந்துரைத்தார். இந்தச் சூழ்நிலையை முன்னெப்போதும் இல்லாத வகையில் கையாண்டு, வெற்றி பெற்றிருப்பது பாரட்டத்தக்கது என அவர் கூறினார். உ.பி.யில் மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறை, ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள், வங்கிகள், அஞ்சலகங்கள் , போக்குவரத்து சேவை, தொழிலாளர்கள் ஆகியோரின் பங்களிப்பை பிரதமர் போற்றிப் பாராட்டினார். நூற்றுக்கணக்கான ஷ்ராமிக் விரைவு ரயில்களை இயக்க வைத்து, உ.பி. யைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மாநிலத்துக்கு மீண்டும் அழைத்து வந்த மாநில அரசைப் பிரதமர் புகழ்ந்துரைத்தார். நாடு முழுவதும் பரவியிருந்த 30 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களில் உ.பி.க்கு திரும்பி வந்துள்ளனர் என்று அவர் கூறினார்.   இந்த நிலையின் தீவிரத்தை உ.பி. முதலமைச்சர் நன்கு புரிந்து கொண்ட காரணத்தால், அவரது அரசு இதற்குத் தீர்வு காண, போர்க்கால அடிப்படையில் பணியாற்றியிருப்பதாகப் பிரதமர் கூறினார்.   ஏழை மக்கள் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், உ.பி. அரசு முன்னெப்போதும் காணாத வகையில் உழைத்திருப்பதாக பிரதமர் பாராட்டினார். பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ், உ.பி. அரசு தீவிரமாகச் செயல்பட்டு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோருக்கு இலவச ரேசன் பொருள்களை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இது தவிர, சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய், உ.பி.யின் 75 லட்சம் ஏழைப் பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.   ஏழைகள் வேலைவாய்ப்பு இயக்கத்தைச் செயல்படுத்துவது போல, சுயசார்பு என்னும் இயக்கப் பாதையில் வேகமாகப் பயணிக்கும் வகையில்,  உத்தரப்பிரதேசம் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். தொழிலாளர்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், ஏழைகள் வேலைவாய்ப்பு இயக்கத்தின் கீழ், கிராமங்களில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஊரகப்பகுதி மேம்பாடு தொடர்பான திட்டங்களின் கீழ், குறு, சிறு, நடுத்தரத் தொழில் அலகுகளில் சுமார் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், இது மேலே கூறிய வேலைவாய்ப்பு திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறினார். இவை தவிர, ஆயிரக்கணக்கான பேருக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், முத்ரா திட்டத்தின் கீழ்,ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  சுயசார்பு வேலைவாய்ப்பு இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு ஊக்கமளிக்கும் தொழிற்சாலைத் தொகுப்புகள் உருவாக்கப்படும் போது, உ.பி. மகத்தான பயனைப்பெறும் என்று திரு. மோடி கூறினார். சட்டத்தின் கீழ், ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் வகையில், விவசாயத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்திர்த்தங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போது, விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், விவசாயி தனது பொருளை விதைக்கும் போதே அதற்கான விலையை நிர்ணயிக்க முடியும் என்றும் அவர் கூறினார். நமது கால்நடைகளைப் பராமரிப்பதற்கான பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், கால்நடை மற்றும் பால் பண்ணைத் தொழில்களுக்கு என ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு கட்டமைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவித்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புத்தமத சுற்றுலாவை மேம்படுத்துவதில் இது முக்கியத்துவம் பெறும் என்று கூறினார். பூர்வாஞ்சலில், விமானப்போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்தியிருப்பதால், நாட்டிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மகாத்மா புத்தரின் கோடிக்கணக்கான பக்தர்கள் எளிதாக உ.பி.யை அடைய முடியும்.   கடந்த மூன்று  ஆண்டுகளில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் ஏழைகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், உ.பி. திறந்தவெளிக் கழிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். உ.பி. அரசு 3 லட்சம் இளைஞர்களுக்கு வெளிப்படையான முறையில், வேலை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.   மாநிலத்தில், குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கிய திரு. மோடி, பூர்வாஞ்சலில் ஏராளமான நோயாளிகள் மூளை வீக்க நோயிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் எவ்வாறு 90 சதவீதம் குணமடைந்தனர் என்று விளக்கினார்.   மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது பற்றி பிரதமர் குறிப்பிட்டார். கோண்டாவைச் சேர்ந்த சுய உதவிக் குழுத் தலைவர் வினீதா பால், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் பயனாளியான பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.திலக் ராம், சந்த் கபிர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அமரேந்திர குமார் போன்ற பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மும்பையிலிருந்து திரும்பி வந்த திரு. குர்பான் அலி, கோர்க்காபூர் மாவட்டத்திலிருந்து வந்த திரு. நாகேந்திர சிங், ஜலாவுன் மாவட்டத்திலிருந்து வந்த திரு. தீபு உள்ளிட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...