முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சுயசார்பு உத்திரப்பிரதேச வேலைவாய்ப்பு இயக்கம் துவங்கிவைத்த பிரதமர்

சுயசார்பு உத்தரப்பிரதேசம் வேலைவாய்ப்பு இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் சுயசார்பு உத்தரப்பிரதேசம் வேலை வாய்ப்பு இயக்கத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று காணொளிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதன் கீழ், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கடந்து செல்ல ஒவ்வொருவராலும் இயலும் என்று கூறினார். இந்த நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, முகத்தை முகக்கவசத்தால் மூடிக்கொள்வது மிகச்சிறந்த தடுப்பு நடவடிக்கை என்று அவர் கூறினார்.  தொற்று பரவி வரும் சூழலில், மக்களை ஊக்கப்படுத்தி, இந்தப் பேரிடரை ஒரு வாய்ப்பாக உத்தரப்பிரதேசம் மாற்றியிருக்கும் விதம் குறித்து பிரதமர் மனநிறைவை வெளியிட்டார். மற்ற மாநிலங்கள், சுயசார்பு உத்தரப்பிரதேச வேலைவாய்ப்பு இயக்கம் குறித்த பல அம்சங்களைக் கற்கும் என்றும், இவற்றினால் அவை ஊக்கம் பெறும் என்றும் அவர் கூறினார். உலகில் மிகப் பெரிய சிக்கலை கொரோனா ஏற்படுத்தியிருக்கும் நிலையில், உத்தரப்பிரதேசம் துணிச்சலையும், அறிவுடைமையையும் காட்டியிருப்பதாக பிரதமர் புகழ்ந்துரைத்தார். இந்தச் சூழ்நிலையை முன்னெப்போதும் இல்லாத வகையில் கையாண்டு, வெற்றி பெற்றிருப்பது பாரட்டத்தக்கது என அவர் கூறினார். உ.பி.யில் மருத்துவர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், காவல்துறை, ஆஷா, அங்கன்வாடி ஊழியர்கள், வங்கிகள், அஞ்சலகங்கள் , போக்குவரத்து சேவை, தொழிலாளர்கள் ஆகியோரின் பங்களிப்பை பிரதமர் போற்றிப் பாராட்டினார். நூற்றுக்கணக்கான ஷ்ராமிக் விரைவு ரயில்களை இயக்க வைத்து, உ.பி. யைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மாநிலத்துக்கு மீண்டும் அழைத்து வந்த மாநில அரசைப் பிரதமர் புகழ்ந்துரைத்தார். நாடு முழுவதும் பரவியிருந்த 30 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கடந்த சில வாரங்களில் உ.பி.க்கு திரும்பி வந்துள்ளனர் என்று அவர் கூறினார்.   இந்த நிலையின் தீவிரத்தை உ.பி. முதலமைச்சர் நன்கு புரிந்து கொண்ட காரணத்தால், அவரது அரசு இதற்குத் தீர்வு காண, போர்க்கால அடிப்படையில் பணியாற்றியிருப்பதாகப் பிரதமர் கூறினார்.   ஏழை மக்கள் பட்டினியுடன் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில், உ.பி. அரசு முன்னெப்போதும் காணாத வகையில் உழைத்திருப்பதாக பிரதமர் பாராட்டினார். பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ், உ.பி. அரசு தீவிரமாகச் செயல்பட்டு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியோருக்கு இலவச ரேசன் பொருள்களை வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இது தவிர, சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய், உ.பி.யின் 75 லட்சம் ஏழைப் பெண்களின் ஜன்தன் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.   ஏழைகள் வேலைவாய்ப்பு இயக்கத்தைச் செயல்படுத்துவது போல, சுயசார்பு என்னும் இயக்கப் பாதையில் வேகமாகப் பயணிக்கும் வகையில்,  உத்தரப்பிரதேசம் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்கிறது என்று பிரதமர் கூறினார். தொழிலாளர்களின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், ஏழைகள் வேலைவாய்ப்பு இயக்கத்தின் கீழ், கிராமங்களில் பல்வேறு பணிகள் துவங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஊரகப்பகுதி மேம்பாடு தொடர்பான திட்டங்களின் கீழ், குறு, சிறு, நடுத்தரத் தொழில் அலகுகளில் சுமார் 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், இது மேலே கூறிய வேலைவாய்ப்பு திட்டத்தில் அடங்கும் என்றும் அவர் கூறினார். இவை தவிர, ஆயிரக்கணக்கான பேருக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், முத்ரா திட்டத்தின் கீழ்,ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.  சுயசார்பு வேலைவாய்ப்பு இயக்கத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கு ஊக்கமளிக்கும் தொழிற்சாலைத் தொகுப்புகள் உருவாக்கப்படும் போது, உ.பி. மகத்தான பயனைப்பெறும் என்று திரு. மோடி கூறினார். சட்டத்தின் கீழ், ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளிலிருந்து விவசாயிகளை விடுவிக்கும் வகையில், விவசாயத்துறையில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்திர்த்தங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போது, விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை இந்தியாவின் எந்தப் பகுதியிலும் விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், விவசாயி தனது பொருளை விதைக்கும் போதே அதற்கான விலையை நிர்ணயிக்க முடியும் என்றும் அவர் கூறினார். நமது கால்நடைகளைப் பராமரிப்பதற்கான பல புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், கால்நடை மற்றும் பால் பண்ணைத் தொழில்களுக்கு என ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு கட்டமைப்பு நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக அறிவித்துள்ளது பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், புத்தமத சுற்றுலாவை மேம்படுத்துவதில் இது முக்கியத்துவம் பெறும் என்று கூறினார். பூர்வாஞ்சலில், விமானப்போக்குவரத்து தொடர்பை வலுப்படுத்தியிருப்பதால், நாட்டிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் மகாத்மா புத்தரின் கோடிக்கணக்கான பக்தர்கள் எளிதாக உ.பி.யை அடைய முடியும்.   கடந்த மூன்று  ஆண்டுகளில், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுதியான வீடுகள் ஏழைகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன என்று கூறிய பிரதமர், உ.பி. திறந்தவெளிக் கழிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். உ.பி. அரசு 3 லட்சம் இளைஞர்களுக்கு வெளிப்படையான முறையில், வேலை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.   மாநிலத்தில், குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விளக்கிய திரு. மோடி, பூர்வாஞ்சலில் ஏராளமான நோயாளிகள் மூளை வீக்க நோயிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில் எவ்வாறு 90 சதவீதம் குணமடைந்தனர் என்று விளக்கினார்.   மின்சாரம், குடிநீர், சாலைகள் போன்ற அடிப்படை உள்கட்டமைப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது பற்றி பிரதமர் குறிப்பிட்டார். கோண்டாவைச் சேர்ந்த சுய உதவிக் குழுத் தலைவர் வினீதா பால், பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் பயனாளியான பஹ்ரைச் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.திலக் ராம், சந்த் கபிர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அமரேந்திர குமார் போன்ற பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார். தங்களது அனுபவங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். மும்பையிலிருந்து திரும்பி வந்த திரு. குர்பான் அலி, கோர்க்காபூர் மாவட்டத்திலிருந்து வந்த திரு. நாகேந்திர சிங், ஜலாவுன் மாவட்டத்திலிருந்து வந்த திரு. தீபு உள்ளிட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுடனும் அவர் கலந்துரையாடினார்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்