முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டில்லியில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு கட்டணம் ஒழுங்குபடுத்தி நடவடிக்கை

தனியார் மருத்துவமனைகளில் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் குறித்த சுகாதாரக் கணக்கெடுப்புகளில், கோவிட்-19 கையாள்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷாவின் அறிவுறுத்தல்கள் டெல்லியில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. டெல்லி மக்களுக்கு நிவாரணம் அளிப்பதில் மோடி அரசின் கடைமையை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, டெல்லியில் கோவிட்-19 நிலைமை குறித்து தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறார். டெல்லியில் கோவிட்-19 நிலைமை குறித்து கடந்த சில நாட்களில் தொடர்ச்சியாக தனது தலைமையில் நடைபெற்ற கூட்டங்களின் போது மத்திய அமைச்சர் அமித் ஷா அளித்த அறிவுறுத்தல்களின்படி, டெல்லியில் 242 கட்டுப்பாட்டு மண்டலங்களில் வீடு வீடாக சுகாதார கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு நேற்று முடிக்கப்பட்டது. மொத்தம் 2.3 லட்சம் பேர் இதில் ஆய்வு செய்யப்பட்டனர். மேலும், மத்திய உள்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவப் பரிசோதனை செய்யும் திறனை மேம்படுத்தவும், பரிசோதனை முடிவுகளை விரைவாக வழங்கவும், டெல்லியில் தீவிர ஆன்டிஜென் பரிசோதனை நடைமுறையின் படி மருத்துவப் பரிசோதனை நேற்று தொடங்கப்பட்டது. 193 மருத்துவப் பரிசோதனை மையங்களில் மொத்தம் 7.040 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வரக் கூடிய நாட்களில் இன்னும் அதிகமானோருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படும். திரு அமித் ஷா மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து மாதிரிகள் பரிசோதனை எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டது. 2020 ஜூன் 15 முதல் 17 ஆம் தேதி வரையில் 27,263 பரிசோதனை சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முன்பு இது 4,000-4,500 என்ற நிலையில் இருந்து வந்தது.       டெல்லியில் சாமானிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர். வி.கே. பவுல் தலைமையில் ஒரு கமிட்டியை உருவாக்கினார். டெல்லியில் கோவிட்-19 நோயாளிகளுக்கு 60 சதவீத படுக்கைகளுக்கு தனியார் மருத்துவமனைகள் வசூலிப்பதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க இந்தக் குழு அமைக்கப்பட்டது. தனிமைப்படுத்தல் படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி தேவைப்படாத தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்கான கட்டணங்களை இந்தக் குழு நிர்ணயித்துள்ளது. கோவிட்-19 நோய்த் தாக்குதலுக்கு டெல்லி தனியார் மருத்துவமனைகளில் வசூலிப்பதற்கான புதிய கட்டண விகிதம் பிரிவு (தனியார் மருத்துவமனைகள்) புதிய கட்டணங்கள் (ஒரு நாளுக்கு) (PPE மற்றும் மருந்துகள் உள்பட) பழைய கட்டணங்கள் (ஒரு நாளுக்கு) (PPE இல்லாமல்) தனிமைப்படுத்தல் படுக்கைகள் ரூ.  8000 – 10000 ரூ.  24000 - 25000 வென்டிலேட்டர் வசதி தேவைப்படாத தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.  13000 – 15000 ரூ.  34000 - 43000 வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.  15000 – 18000 ரூ.  44000 - 54000 இந்தக் கமிட்டி ஒரு நாளுக்கு (PPE மற்றும் மருந்துகள் உள்பட) ரூ. 8,000 - ரூ.10,000 வரையிலும், ஒரு நாளுக்கு (PPE மற்றும் மருந்துகள் உள்பட) ரூ.13,000 - 15,000 வரையிலும், ஒரு நாளுக்கு (PPE மற்றும் மருந்துகள் உள்பட) ரூ.15,000 - 18,000 வரையிலும் என்று முறையே தனிமைப்படுத்தல் படுக்கைகள், வென்டிலேட்டர் வசதி தேவைப்படாத தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் வென்டிலேட்டர் வசதி தேவைப்படும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்குக் கட்டணங்களை நிர்ணயித்துள்ளது. அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் இது பொருந்தும் (அந்த மருத்துவமனை NABH சான்றளிப்பு பெற்றதா என்பதைப் பொருத்து இது அமையும்). இப்போதுள்ள ஒரு நாளுக்கு ரூ. 24,000 - 25,000 (PPE அல்லாமல்), ரூ. 34,000 - 43,000 (PPE அல்லாமல்),  ரூ.44,000 - 54,000 (PPE அல்லாமல்) என்பதில் இருந்து இது குறைக்கப் பட்டுள்ளது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...