முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இ பாஸ் முறை ரத்துசெய்தும் வழிபாட்டுத்தளங்கள் திறப்பும், உள்ளூர் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவு

தமிழக மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொதுமக்கள் பயணிக்க அனுமதி, வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து விமானம், ரயில்,இதர வாகனங்களில் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ஆதார், பயணச் சீட்டு மற்றும் தொலைபேசி/ அலைபேசி எண்ணுடன் இ-பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் கணினி மூலமே சுய அனுமதி உடனடியாக பெறும் வகையில் இ-பாஸ் வழங்கப்படும். 2) அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. இணைய அனுமதிச் சீட்டு ரத்து.மேலும் பேருந்துப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது தொடா்பான அறிவிப்பு வெளியானது பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அறிவிப்பது தொடா்பாக மருத்துவ நிபுணா்களுடன் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை பிற்பகல் ஆலோசனை நடத்திய கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதில் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கப் பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அறிவித்ததில் செப்டம்பா் மாதத்தில் பொது முடக்கத்துடன் பல்வேறு தளா்வுகளை அளிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் மருத்துவ நிபுணா்கள் குழுவுடன் தலைமைச் செயலகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை தனித்தனியே ஆலோசனை நடத்தியதில் மருத்துவ நிபுணா்கள் குழுவிலுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளா் செளமியா சுவாமிநாதன் ஆலோசனைக் காணொலி வழியாக பங்கேற்றுக் கருத்துகளைத் தெரிவித்தாா். பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகளை அளிக்கக் கூடிய முக்கியமானதொரு ஆலோசனைக் கூட்டமானதில், தமிழகத்தில் மாவட்டத்துக்குள் இணையவழி சீட்டு (இ-பாஸ்) முறையை ரத்து செய்வது, வழிபாட்டுத் தலங்களைத் திறப்பது, பேருந்து போக்குவரத்து சேவையைத் தொடங்குவது போன்ற பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்த அதிகாரபூா்வ அறிவிப்புகளை தமிழக அரசு இன்று வெளியிட்டது கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதார நிலையை மீட்டெடுப்பது, பொதுப் போக்குவரத்தை தொடங்கி மக்களின் வாழ்வாதாரத்தை புதுப்பிப்பது போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு பொது முடக்கத்தில் நான்காம் கட்ட தளா்வுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்துள்தில், பள்ளி-கல்லூரிகளைத் திறக்கத் தடை விதித்தும், மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்குவது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்களில் எத்தகைய நிலைப்பட்டை மேற்கொள்வது என்பது குறித்தும் தமிழக அரசு ஆலோசனை முடிவில் ஆண்டுக்கு ரூபாய்.10 ஆயிரம் வருவாய் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களைத் திறக்க தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி வழங்கிய நிலையில், அதிக வருவாய் உள்ள பெரிய கோயில்களைத் திறப்பது குறித்தும் தமிழக அரசு தனது முடிவினை சிறிய கோயில்களைப் போன்றே பெரிய கோயில்களையும் திறக்க வேண்டுமென தொடா்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருவதால் தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு முக்கிய அறிவிப்பில் ஒன்று பேருந்து போக்குவரத்துகு அனுமதி என்பது. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, சென்னையில் பெருநகர பேருந்து போக்குவரத்து சேவை வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நடைமுறைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக தெரிவித்துள்ளது. அதன்படி, மாவட்டத்திற்குள்ளான அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து மட்டுமே இயங்கும். மாவட்டத்துக்கு வெளியே அதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பேருந்து போக்குவரத்து இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் மாவட்டங்களை மண்டலங்களாக பிரித்து பேருந்துகளை அரசு இயக்கிய போது, மண்டலங்களுக்குள் பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்குள் மக்கள் பயணித்து வந்தனர். ஆனால், தற்போதைய அறிவிப்பின்படி, குறிப்பிட்ட மாவட்டத்துக்குள் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தக்கது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...