முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரசனையும் இரக்கமும் கொண்ட மகாகவி பாரதியார்

பாரதி "செல்லம்மா..." கீழேயிருக்கும் தன் மனைவியை மாடியிலிருந்து அழைத்தார் பாரதி. அம்மா வாசலில் வந்து நின்று என்னவென்று கேட்டார்கள். "சமையல் ஆகிறதா?" "ஆகப் போகிறது!" "நான் இன்றைக்கு உண்ணாநோன்பிருக்கப் போகிறேன்!" "உங்கள் உடம்பிற்குப் பட்டினி ஒத்துக் கொள்ளும் என்று தோன்றினால் சரிதான்!" பாரதி மாடியின் கைப்பிடிச்சுவரைத் தொட்டுத் தலையை கீழ்நோக்கி நட்டு, அம்மாவை நோக்கிச் சொல்லலானார் : "காந்தி பலநாள் பட்டினி இருக்கிறார். ஒரு நாளாவது செத்ததுண்டா நான் ஒரே ஒருநாள் உண்ணாமலிருந்தால் செத்துவிடமாட்டேன். இன்றைக்கு நான் பட்டினி. நாளைக்கு எனக்கு இன்று எஞ்சியிருக்கும் குழம்பும் மேற்படி கீரைக் கடையலும் அமிர்தம்!" அம்மா எதிர்பாரா வகையில் சொன்னார்கள் : "அப்படியானால் நானும் பட்டினியாக இருந்துவிடுகிறேன்!" "செல்லம்மா, மாடிக்கு வா.இங்கே சுப்புரத்தினத்தைத் தவிர வேறு யாருமில்லை!" அம்மா வந்தார்கள். "நடைமுறையிலுள்ள கத்திரிக்காய், வெண்டைக்காய்களிலும், அவியல் துவட்டல்களிலும் சுவை இருந்தாலும், அது நாள்தோறும் உண்ணப்படுத்தலால் மனத்திற்கு அதில் சுவை தோன்றுவதில்லை. ஆனால் ஒருநாள் பட்டினி இருந்து மறுநாள் உண்ணுகிற எளிய உணவும் சுவையாய் இருக்குமென்று எண்ணுகிறேன். அதற்காகவே பட்டினி. உனக்கும் அப்படித்தானா?"- என்று கேட்டார் பாரதி. "நானும் பட்டினி இருக்கப்போகிறேன். அதற்குக் காரணம் இரண்டு. ஒருநாள் செலவு மிச்சம். ஒருநாள் சமையல் வேலை மிச்சம்!" அவர்கள் இருவரிடையில் குறுக்கிட்டு நான் சொன்னேன் : "இவ்வளவு தொல்லை ஏன்? நாள்தோறும் உண்டாலும் வெறுப்புத் தராத கறிவகையைக் கண்டுபிடித்துவிட்டால்?" பாரதி சொன்னார் : "நாள்தோறும் உண்டாலும் தெவிட்டாத கறிவகை கிடையவே கிடையாது! உண்ண உண்ணத் தெவிட்டாதது ஞானிகட்கு - பெரியோர்கட்கு - துறவிகட்கு, கடவுள் நினைவுதான் என்பார்கள். எனக்குத் தெவிட்டாத ஒருத்தி என் செல்லம்மாதான்!" அம்மா விரைந்து சென்று விட்டார்கள். "செல்லம்மா, பட்டினித் திருநாள் எப்படி?" அம்மா மாடிப்படியிலிருந்து, "கொடி கட்டியாயிற்று!" "சரி!" என்ற பாரதி பாடத் தொடங்கினார்... தோளை வலியுடையதாக்கி - உடற் சோர்வும் பிணிபலவும் போக்கி - அரி வாளைக் கொண்டு பிளந்தாலும் - கட்டு மாறா உடலுறுதி தந்து - மத வேளை வெல்லுமுறை கூறித் - தவ மேன்மை கொடுத்தருள வேண்டும்! இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் மறவாமல் நெஞ்சில் நிறுத்தி - அதை வாழ்நாட்களில் தவறாமல் மேற்கொள்ளவேண்டியது, ஒன்று : பாரதி வாழ்நாட்களில் அவர் அயல் மாதர் அன்னை தான் எழுதியவர் - இந்நிகழ்வில் பாரதி செல்லம்மாவுடன் அருகிருந்த சுப்புரத்தினம். ஆம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இதை உரைத்த நம் உவமைக் கவிஞர் சுரதா அவர்கள்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...