முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நாடோடிகளின் வாழ்வியலில் ஒரு மாற்றம் கொண்டு வரும் ஸ்வேதா

நாடோடி இனக்குழுவாக வாழும் நரிக்குறவர் மக்கள்ளில் ஸ்வேதா தனித் தன்மை கொண்டவர் தமிழகத்தில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி ஞானசுந்தரி அவரை அடுத்து பொறியியல் பட்டதாரி ஸ்வேதா படித்த கல்லூரியில் வளாக நேர்முகத்தேர்வில் அதிக சம்பளத்துடன் கிடைத்த பணியை ஏற்காமல் இப்போது மூன்று பள்ளிகள் நடத்துகிறார் திருச்சி தஞ்சாவூர் செல்லும் சாலையில் தேவராயநேரி நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ஸ்வேதா. "முதல் நாள் கல்லூரியில் போய் இறங்கியதை மறக்கவே முடியாது. அம்மா, அப்பா, தாத்தானு குடும்பத்தோடு போனோம். எங்க தாத்தா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினேன். தோளில் துப்பாக்கியைத் தொங்கவிட்டுத் தலையில் முண்டாசு கட்டிய தாத்தா ஆசீர்வாதம் பண்ணினார். "எல்லாரும் வைத்த கண் வாங்காமல் என்னை வேடிக்கை பார்க்க. அவங்களுக்கு அது நகைச்சுவை. ஆனால், எனக்கு அது வாழ்க்கை'' என அழகாகப் பேசும் ஸ்வேதாவின் அப்பா மகேந்திரன், தொண்டு நிறுவனத்தின் உதவியால் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர். சீதாவை பதினைந்து வயதில் திருமணம் செய்யவே 10 ஆம் வகுப்பு வரை படிக்க வைத்தாராம் படிக்கும் போதே கர்ப்பமாகிய அம்மாவுக்கு நான் பிறந்ததால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியவில்லை. அவர்களின் தோல்வி தான் என்னைப் படிக்க வைத்தது. முன்பு எங்கள் சமூகத்தில் யாரும் பள்ளிக்குப் போனதில்லை. அப்படியே போனாலும் தொடர்ந்து படிக்க முடியா நிலை இதைச் சொல்லி பள்ளித் தலைமை ஆசிரியர் எனக்குப் பள்ளியில் இடம் கொடுக்க மறுத்தபோது வசந்தகுமார் எனும் தமிழ் நாளிதழ் செய்தியாளர் எங்க அப்பாவுக்குக் கொஞ்சம் பழக்கம் பொது நலனும் சமூக முன்னேற்றம் குறித்தும் அக்கறை உள்ளவர், எங்க இடம் தேடி வந்து எங்கள் மக்களுக்கு உணவும் உடைகளும் தருவார். தீபாவளி, பொங்கலுக்கு குழந்தைகளை அழைத்து துணிகளும் பட்டாசும், கரும்பும், இனிப்பும், சாப்பாடும் தருவார். அவரது சிபாரிசால் எனக்குப் பள்ளியில் படிக்கச் சேரும் இடம் வந்தது, பள்ளியில் நான் சந்திச்ச அவமானங்கள் ஏராளம்.நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பையன், `குறத்தி’னு கிண்டல் பண்ணினான். அதை வீட்டில் சொல்லாம, பள்ளிக்கும் போகாம பத்து நாட்களுக்கும் மேல வீட்டிலேயே அழுததுண்டு. பிறகு விஷயம் தெரிஞ்சு அம்மா பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் பேசி மறுபடியும் விட்டுவிட்டு வந்தாலும் அச் சம்பவம் என் மனதில் ஒரு பயத்தை உருவாக்க பள்ளி வேனில் மற்ற பிள்ளைங்க கூடப் பேசவே பயமாகயிருக்கும். அவங்களும் என்னிடம் நெருங்காமல் தள்ளியே உட்காருவாங்க. நான் படிப்பைப் பாதியில் நிறுத்திவிடக் கூடாதுங்கிறதுல மட்டும் எனது அம்மா விடாப்பிடியாக இருந்தாங்க. ஐந்தாம் வகுப்பிலிருந்தே, எனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க என் சமூகமும் ஊர்க்காரர்களும் நெருக்கடி குடுக்க. அம்மாவும் அப்பாவும் ஊர்ல எங்க சமூகத்துல நடக்கிற நிறைய இளம் வயது திருமணங்களை நிறுத்தி, பிள்ளைகளைப் படிக்க வைக்கச் சொல்லி, பல காலமாப் போராடிய நிலை உண்டு அதுக்குப் பழிவாங்கிறதுக்காக எனக்குத் தாலிகட்டிவிட பல பேர் சுத்துனாங்க. பயந்த அம்மா, என்னை திருச்சி ஃபிலோமினா பெண்கள் பள்ளியில் சேர்க்க முடிவு செய்து அந்தப் பள்ளிக்குப் போகும் போது, 'நுழைவுத்தேர்வு வைத்துதான் இடம் இப்போது தேர்வு முடிந்து விட்டது' என்ற நிலை அம்மாவும் தொடர்ந்து போய் இடம் கேட்டுப் பெற்றார் சரி உன் மகளுக்கு இடம் தருகிறோம்.ஆனால் எக்காரணம் கொண்டும் இடையில் நிற்கக்கூடாதெனும் நிபந்தனையோடு தமிழ் ஆங்கிலம் கணிதம் முதலிய பாடங்களில் நுழைவுத் தேர்வுடன் சேர்த்துக் கொண்டார்கள். திருமணம் சம்பந்தமாக ஊரார் தொல்லைக்காக என்னை அந்தப் பள்ளி விடுதியில் சேர்த்துவிடவே பள்ளிப் படிப்பு முடிந்து திருச்சி எம்.ஏ.எம். பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படிக்க இடம் கிடைத்து. முதல் நாளிலேயே நான் நரிக்குறவப் பெண்ங்கிற விஷயம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தெரிஞ்சதால அவங்களின் வித்தியாசப் பார்வை, ஒதுங்கிப் போற மனநிலை, கிண்டல் எதையும் நான் கண்டுக்கொள்ளவே இல்லை. நோக்கம் படிக்கிறது, அதை விட்டுவிடக் கூடாதுனு கவனமாகவே படித்தேன். "ஒரு கட்டத்தில் அவர்கள் கொடுத்த தொல்லையால் என்னால் அங்கே படிக்க முடியவில்லை. இரண்டாமாண்டில் என்னை எப்படியாவது இங்கேயிருந்து கூட்டிட்டுப் போயிட்டாங்க என கெஞ்ச ஆரம்பித்தேன் அப்போதும் அம்மா தான் ஆறுதல் என் கணவர் அப்போ எனக்கு நல்ல நண்பனாக இருந்த என் சொந்த அத்தைப் பையனும் கூட. அவரும் படி படி என்று ஊக்கம் கொடுக்கவே பொறியியல் படிப்பை முடித்தேன்'' எனும் ஸ்வேதா. கடந்த ஆண்டில் வளாக நேர்காணலில் சண்டிகர் மாநிலத்தில் கிடைத்த வேலைக்குச் செல்வதில்லை என முடிவு எடுத்து. "நான் வேலைக்குப் போனா, என் வாழ்க்கை மட்டும்தான் நல்லா இருக்கும். ஆனா, எங்க சமூக மக்கள் படிக்கவைக் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நரிக்குறவர் மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்து வந்தவர் ஸ்வேதாவின் அப்பா மகேந்திரன். சிறுநீரகக் கோளாறால் 2017 ஆம் ஆண்டில் இறந்து விட "எல்லாத்தையும் படிச்சு, 'இந்தச் சமுதாயத்தை தலைகீழா மாத்தணும்'னு அப்பா சொல்லியது கஞ்சிக்குக் வழி இருக்காது. காமராஜர் காலத்துல எங்க மக்களுக்கு திருச்சி பெல் நிறுவனம் பக்கத்துல இடம் கொடுத்தாங்க. பின் தொழிற்சாலை வருதுனு சொல்லி, தேவராயநேரிக்கு மாற்றிய திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த மலையப்பன் தான், இடம் கொடுத்து குடியிருப்பு கட்ட வழிசெய்து கொடுத்தார். அவர்தான் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்துல பல இடங்கள்ல எங்களது மக்களுக்காக இடம் ஒதுக்கி வாழ வழி செய்தார் அதோடு தன் சொந்த முயற்சியில, எங்க பிள்ளைகளைப் படிக்க வைத்தார். ஆனா, அதை எல்லாம் பயன்படுத்திக்கிற விழிப்புணர்வு இல்லாத மக்கள், அவர் ஏற்படுத்திக்கொடுத்த குடியிருப்புகளை விட்டு அடுத்த நாளே ஓடிவந்த சம்பவமும் உண்டு அவர் நினைவா, திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் எங்கள் மக்கள் வசிக்கிற பல ஊர்களுக்கு 'மலையப்பன் நகர்'னு பெயருமுண்டு "எத்தனை முறை பள்ளிக்கு அனுப்பினாலும் பாசிமணி விற்க ஓடி வந்திடுவாங்க. இந்த நிலைமையை மாத்தாம எதுவும் பண்ண முடியாதுனு புரிஞ்ச பன் 1980 ல் திருவள்ளுவர் குரு குல ஆரம்பப் பள்ளி எனும் பெயரில் தனியார் தொடக்கப்பள்ளி ஒன்றை நடத்திவந்த ஆசிரியர் அப்பாவை கூப்பிட்டு, ஒரு ஹாஸ்டல் தொடங்குங்க, நெறைய எம்.பி.சி நிதி இருக்கு. அதை வைத்து பிள்ளைங்களுக்கு சாப்பாடு போடலாம்னு சொல்லவே அப்பா மலையப்பன் பேயரில ஒரு தங்கும் விடுதியும், நரிக்குறவர் எஜுகேஷன் வெல்ஃபேர் சொசைட்டின்னு ஒரு அமைப்பும் ஆரம்பிச்சு ஹாஸ்டல் தொடங்கியதில் நிறைய மாவட்டங்களிலிருந்து குழந்தைகள் வந்து தங்கிப் படிச்சாங்க. மாணவர்களோட எண்ணிக்கையும் அதிகமாகவே ஹாஸ்டல் குறிப்பா ஆறாவதி லிருந்து எட்டாவது வரை படிக்குற மாணவர்களுக்காகத் தான். பதினஞ்சு வருஷத்துக்கு முன் அந்தப் பள்ளியை நடத்திட்டு இருந்தவங்களால அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் போனதால, பள்ளி நடத்துற பொறுப்பு அப்பா கைகளுக்கு வந்து திருவள்ளுவர் குருகுலம்'கிற பேயரில் ஒரு உண்டு உறைவிடப் பள்ளி ஆரம்பிச்சார் வெறும் பள்ளின்னா யாரும் வர மாட்டாங்க. பாசி, ஊசி விற்க ஊர் ஊராப் போகும்போது பிள்ளைங்களையும் கூட்டிட்டுப் போயிடுவாங்க. அதனால, `நீங்க வியாபாரத்துக்குப் போங்க, பிள்ளைங்களை இங்கே அனுப்பி வையுங்க.தங்கவெச்சு, சாப்பாடு போட்டு படிப்பு சொல்லித் தருகிறோம்'னு சொல்லி வரச் சொன்னார். இப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத்தான் எங்க ஜனங்களுக்குக் கல்வி தரவேண்டியிருந்தது'என வேதனைப்பட்டார் அப்பாவின் நினைவுகளில் மூழ்கிப் போன ஸ்வேதா. அப்பாவின் இறப்புக்குப் பின் அவர் பொறுப்பை தனதாக்கிச் சிறப்பாகச் செயல்படும் ஸ்வேதா. திருச்சி, பெரம்பலூர், சிவகங்கை என மூன்று இடங்களில் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்காக இலவசமாக இப்போது பள்ளிகள் நடத்தி வளர்ச்சிக்காக சென்ற ஆண்டு நடந்த நடிகை ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி கோடீஸ்வரி நிகழ்ச்சியில் ஸ்வேதா பங்கு பெற்று ரூபாய் 3 லட்சத்தி 20,000 ரூபாய் பரிசு பெற்றும் வந்தார். பேராசிரியராக உள்ள இவரது கணவர் ராஜசேகரன், மாமியார், அம்மா மற்றும் சில உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து தான் இந்தப் பள்ளிகளை நடத்தி வருகிறார்கள் படிகளில் ஏறும் பலர் கீழ்நோக்கிப் பார்ப்பதே இல்லை; ஸ்வேதா மேல் படிகளில் ஏறினாலும் கீழ்நோக்கிப் பார்த்து அங்கிருப்பவர்களை கைகொடுத்து மேலேற்றி வரவே இப்படிப்பட்டவர்களால் சமூக மாற்றம் வரும்..."ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க ஆனா உங்களாட்டம் பேரு கெட்டுப் போகமாட்டோம்... எல்லோர்க்கும் நல்லவரா இருப்போமுங்க எங்க கொள்கையிலே எந்.நாளும் மாறமாட்டோம்.. நரிக் கொம்பு வித்தாலும் விப்போமுங்க ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்...பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க ஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்.... நல்ல படி அரிசி கிடைக்கிற காலத்துல நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே நாங்க தெருவோரம் குடியேறத் தேவையில்லே... சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே நாங்க சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே.. எல்லாரும் ஒன்னாக நினைக்கையிலே நாங்க எதையும் எப்பவும் இங்கு மறைப்பதில்லே,என்ற பாடல் தானே உண்மையாகிறது இந்த வெள்ளை மனதான ஸ்வேதாவால் ..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்