முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகை வனிதாவை விமர்சனம் செய்பவர்கள் நடிகர் கமலஹாசனையும் நடிகை நயன்தாராவையும் பேசாத காரணம் ஏன்.

தனிப்பட்ட சொந்தப் பிரச்சனையில் வனிதாவை திட்டுகிற சமூகம் நடிகை நயன்தாராவைத் திட்டுவதில்லையே.. இருவரும் செய்யும் செயல் ஒன்றுதான் அடிக்கடி ஆண் நண்பர்களை மாற்றுவது. வனிதாவுக்கு. ஒரு நியாயம் நயன்தாரா வுக்கு ஒரு நியாயமா. ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு வனிதா விஜயக்குமார் திருமணம் செய்தார். இவர்களுக்கு 12 வயதில் ,ஒரு மகளுள்ள நிலையில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டால் இருவரும் தனித்தனியாக பிரிந்து வசிக்கின்றனர் ஆனந்தராஜ் மகளைத் தன்னுடன் ஹைதராபாத்தில் வளர்த்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வனிதா விஜயகுமார் ஹைதராபாத் சென்று தன்னுடைய மகளை தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்வே அதை அறிந்த ஆனந்தராஜ் தன்னுடைய மகளை வனிதா விஜயகுமார் கடத்திச் சென்று விட்டதாக ஹைதராபாத் காவல்துறையில் புகார் செய்ததைத் தொடர்ந்து வனிதா திருவள்ளூர் நீதிமன்றத்தில் தன்னுடைய மகளுக்கு தான் தான் முதல் காப்பாளர் என்ற முறையில் பாதுகாப்பளிப்பதாகக் கூறி தன் கணவரிடம் குழந்தையை ஒப்படைக்க மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணைக்காக நடிகை வனிதா திருவள்ளூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜருமானார். விசாரணைக்காக அவரது கணவர் வராததால் தீர்ப்பு எதுவும் வழங்கப்படவில்லை. பின்னர் வெளியே வந்த வனிதா அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், என்னுடைய மகளை நானே என் முழுப் பராமரிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் முறையிட்டேன், நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறேன் என கூறினார். இதுவரை மூன்று முறை திருமணம் செய்து சாதனை படைத்த நடிகர் விஜயகுமார்.நடிகை மஞ்சுளா மகளானதால் வனிதா மீது பலரும் விமர்சனம் வைக்கிறார்கள் ..ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிகள் கொண்டாடுவது போல இப்போது கூத்தாடிகளின் வீட்டுச் சண்டையை ஊர் பெரிதுபடுத்திப் பார்க்கும் நிலை. பிரபலமான தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் பட்டுக் கோட்டை பகுதியைச் சேர்ந்த நடிகர் விஜயகுமார். நடிகை மஞ்சுளாவைத் திருமணம் செய்துகொண்டார் இவர்களின் மூத்த மகளான வனிதாவும் ஒரு நடிகை பல படங்களில் நடித்துள்ளவர். முதலில் தொலைக்காட்சித் தொடரில் நடித்த ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்து கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்தும் செய்து பிறகு தொழில் அதிபரான ஆனந்தராஜைத் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகளும் பிறந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்தும் பெற்றனர் . அந்த வழக்கில் மகனை யார் பார்த்துக்கொள்வது என்ற பிரச்சனையினால் இவருக்கும் விஜய்குமாருக்கும் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது நடன இயக்குநரான ராபர்ட்டையும் காதலித்தார் வனிதா. அவர்கள் இருவரும் டேட்டிங்கில் இருந்தனர். இருவரும் சேர்ந்து படம் கூட தயாரித்தனர். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரையும் பிரிந்தார். மூன்றாவதாக நடன இயக்குனர் ராபர்டை திருமணம் செயத பின் வனிதா தன்னுடைய தாய் வீட்டிலேயே தங்கிவிட்டார் .இதனால் விஜயகுமார் இது பாவப்பட்ட வீடு என்று கூறி இனி தனக்கும் வனிதாவிற்கும் எந்தத் தொடர்புமில்லை எனப் பிரிந்துவிட்டார் . பின் பாஜகவிலும் இணைந்தார் இதுகுறித்து பஞ்சாயத்துத் தீர்க்க இப்பொழுது மீண்டும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாட என்னை வெளியேறுமாறு கூறி மிரட்டுகிரார் என்று வனிதா அப்போது புகார் கொடுத்தார்.வனிதா மூன்றாவது கணவரைப் பிரிந்த விவகாரத்தில் தகவல் தெரிவித்த பிரபல தயாரிப்பாளரை நடிகை மீரா மிதுன் விமர்சித்துளார். நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை 2020 ஜூன் மாதம் திருமணம் செய்யவே பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் காவல்துறையில் புகார் கொடுத்தார். அது பல சர்ச்சையாகியது அப்போது பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையானதால் அவரை வீட்டை விட்டு வனிதா விரட்டியடித்ததாக தகவல் பரவவே. பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையாகிவிட்டார். வீட்டிற்கே வரவில்லை. எங்கு சென்றாரோ தெரியவில்லை. போனும் சுவிட்ச் ஆஃபில் உள்ளது. அவரது முதல் மனைவியான எலிசபெத் ஹெலனே பீட்டர் பாலுடன் வாழட்டும் நான் குறுக்கே வரவில்லை என்றார். பீட்டர் பாலை நம்பித் தான் ஏமாந்துவிட்டதாகவும் தோல்வியடைந்து விட்டதாகவும் கண்ணீர் மல்க ஒரு காணொலி க் காட்சியில் கூறுகிறார் ஏதோ ஒரு காரணத்திற்காக அவரது வாழ்க்கையில் வந்தேன். நடுவில் வந்தேன் நடுவிலேயே போய்விடுகிறேன் என உருக்கமாகவும் பேசியிருந்தார்வனிதாவின் வீடியோ தான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகையர் மக்களை மகிழ்விக்கும் நபர்கள் அவர்களது பிரச்சினைகளை மக்கள் தங்களுடைய வீட்டு உறவினர்கள் போல பார்க்கப் பழகிவிட்ட நிலை வரக் காரணம் வீட்டில் தொலைக்காட்சி வந்துதான் ..திருமணம் செய்யாமல் நடிகர் கமலஹாசனும் கௌதமியும் 13 வருடம் ஒரே வீட்டில் வாழ நமது நாட்டில் சட்டதிட்டங்கள் அனுமதிக்கும் சூழலில் நடிகை நயன்தாரா மட்டும் அடிக்கடி திருமணம் செய்வதாகவே கூறி திருமணம் செய்யாமல் நண்பர்கள் மாறிக்கொண்டே இருக்க ஆனால் ஒன்றை விவாகரத்து செய்து மற்றொரு நபரைத் திருமணம் செய்யும் வனிதா அதிகம் பேசப்படும் நிலை காரணம் மக்களின் மனநிலை தானே


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...