முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலப்பட எண்ணைய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவிக்கை மக்களுக்கு எச்சரிக்கை

உணவு கலப்படத் தடுப்பு அலுவலர்கள் எண்ணெய் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், கலப்படத்திற்குப் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டதில் எண்ணெய் வகைகளில் 50 சமையல் எண்ணெய் நிறுவனங்களின் தயாரிப்பு உண்ணத் தகுதியற்றவை.. 250 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மதுரையில் தீபாவளி நேரத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் கலப்பட எண்ணெய் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மதுரையில் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் பெரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வகைகள் விற்பனைக்கு தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. மதுரையில் மட்டும் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் சில்லரை விற்பனை செய்யப்படுகிறநிலையில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது மதுரையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் எண்ணெய் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், கலப்படம் இன்னும் 100 நிறுவன எண்ணெய்களின் ஆய்வு முடிவு வெளியாகாத நிலையில் கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ள 250 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி அதில் தங்கள் ஆய்வில் துல்லியமான சோதனை முடிவு வெளியாகியுள்ள நிலையில், அதை மறுக்கும் நிறுவனங்கள் தாங்கள் கூறும் ஆய்வகத்தில் சோதனை செய்ய விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முந்திரி எண்ணெய் மற்றும் பாமாயில் கலந்து நல்லெண்ணெயும், ரைஸ் பிரான் ஆயில் கலந்து கடலை எண்ணெய் தயாரிப்பது, மட்டுமல்லாது நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்கான வாசம் வர ரசாயனங்கள் உள்ளிட்டவையும் கலக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. உதிரி எண்ணெய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் பொருள்களை வாங்கவும். அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் ரீஃபைண்டு ஆயில் பயன்படுத்துறாங்க. ஆனால் நடுத்தர, ஏழை மக்கள் கடலை எண்ணெயும் பாமாயிலும் காரணம் விலை குறைவு ஆனால், கடலை எண்ணெய் என்கிற பெயரில பாமாயிலும், தவிடு எண்ணெயும், பருத்தி விதை எண்ணெயும் கலந்து மோசடி இந்த ஆய்வில சென்னை, திருச்சி, விழுப்புரம், ஈரோடு, சேலம், தர்மபுரின்னு ஆறு மாவட்டங்களில்14 பிராண்ட் கடலை எண்ணெய் சாம்பிள்கள் சோதித்து எதிலுமே ஒரிஜினல் கடலை எண்ணெய் இல்லை. சந்தேகம் வந்து, சூரியகாந்தி எண்ணெய் சாம்பிள்களையும் சோதிக்க அதிலும் வெவ்வேறு எண்ணெய்கள்தான் இது யதார்த்தமா இங்க நடக்கிறது. லேபிளில் தான் கடலை எண்ணெய்னு போட்டிருக்கு. ஆனா, பாக்கெட் உள்ள இருக்கறது 50 சதவீதம் பாமாயிலும், 50 சதவீதம் பருத்தி எண்ணெயும் கலந்த ஒரு எண்ணெய். ‘‘பொதுவாகவே, சமையல் எண்ணெயுடன் 20 சதவீதம் அளவுக்கு பிற உணவு எண்ணெய்களை சேர்த்துக்கலாம்னு அரசு அனுமதி கொடுத்திருக்கு. ஆனா, யாரும் இந்த விதியை மதிக்கிறதில்ல. அவங்க விருப்பத்துக்கு கலந்துக்கிறாங்க. அப்புறம், 79 சதவீகித பாக்கெட்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் குறியீடு இல்லை. 64 சதவீகித பாக்கெட்களில்லைசென்ஸ் நம்பரே இல்ல. இதோடு விற்பனை அடுத்து, பாக்கெட்டில் ‘கலக்கப்பட்ட வெஜிடபிள் ஆயில்’னு லேபிளும், அக்மார்க் தரக் குறியீடும் இருக்கணும். குறிப்பா, இதுல எண்ணெயின் பெயர், உற்பத்தியாளர் பெயர், முகவரி, பேட்ச் எண், எண்ணெயின் எடை, உற்பத்தி செய்யப்பட்ட நாள், சிறந்த பயன்பாட்டு நாள், ஆர்ஜிமோன் கலப்படம் இல்லங்கிற உறுதிமொழி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2011ன் படி குறிப்பிடப்பட வேண்டியவைனு சில விபரம் இருக்கு. இதுவும் பெரும்பாலான நிறுவனங்களின் பாக்கெட்களில் எழுதப்படவில்லை. மொத்தத்தில், நுகர்வோரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஏமாற்றிப் பணம் பார்க்கிறார்கள். தரமில்லாத எண்ணெயால் பொதுமக்கள் உடல் உபாதைகளை அனுபவிக்க கலப்பட எண்ணெயால் ஆபத்து. இப்போ, பருத்தி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் சமையல் எண்ணெயுடன் அதிகமா கலக்கும் நிலை இதுல பிரச்னை என்னன்னா, இப்போது வருகிற பருத்தி விதைகள்ல 98 சதவீதம் மரபணு மாற்றப்பட்ட விதைகளே அதிகம் அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடல் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது. அடுத்து, ரெண்டு எண்ணெயக் கலக்கும் விதத்திலும் பல சிக்கல்கள் உண்டு ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு கொதிநிலை அளவு இருக்கும். இதை ‘ஸ்மோக்கிங் பாயின்ட்’னு சொல்வாங்க. ஒரே எண்ணெயை பயன்படுத்தும்போது கொதிநிலை சரியா இருக்கும். ஆனா, ஒரு எண்ணெய் 90 சதவீதமும் ஒரு எண்ணெய் 10 சதவீதமும் கலந்து இருக்கிறதென்றால் இந்த எண்ணையை பொரிக்கப் பயன்படுத்தும்போது 90 சதவீத எண்ணெய் கொதிநிலைக்கு வந்துடும். ஆனா, பத்து சதவீத எண்ணெய் கொதிநிலைக்கு வராமலே இருக்கும். இதில் உணவு சமைத்தால், கொதிநிலைக்கு வராத அந்த பத்து சதவீத எண்ணெயால் அஜீரணக் கோளாறு ஏற்படும். அதுக்காக, எண்ணையே சாப்பிடாமல் இருக்க முடியாது. நம் உடலுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு எண்ணெய் சத்துகள் தேவை. இல்லாவிட்டால் வைட்டமின் குறைபாடுகள் வந்துவிடும். அதனால, இந்த மாதிரி கலப்படத்திலிருந்து தப்பிக்க செக்குல ஆட்டிய சுத்தமான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். உடம்புக்கு ஆரோக்கியமானது அதுதான்’ இன்று இயந்திரங்கள் உதவியால கெமிக்கலைச் சேர்த்து எண்ணெயைப் பிரிச்சு எடுக்குற நிலைமை. அதுல சத்துகள் எல்லாம் காணாமல் போய் விடுது. ஆனா, செக்குல எந்த கெமிக்கலும் பயன்படுத்துறதில்ல. கலப்படமும் இருக்காது. எண்ணெயும் கெட்டியாக இருக்கும். பொதுவா, வெளி மார்க்கெட்ல நல்லெண்ணெயை ப்ளீச்சிங் பண்ணி ஒரே கலர்ல கொடுப்பாங்க. ஆனா, செக்குல அப்படியில்ல. எந்தப் பகுதியில எள் விளைஞ்சதோ அதுக்கு ஏற்றபடி கலர் மாறிக்கிட்டே இருக்கும். நமது மக்கள் கொஞ்சம் நிறம் அடர்த்தியா இருந்தாலே ‘அது நல்ல எண்ணெய் இல்லை’ன்னு ஒதுக்கிடுறாங்க. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாம் மரச் செக்குல ஆட்டிக் கொடுக்க நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 260 ரூபாய்க்கு விற்க இதுக்கு இரண்டரை கிலோ எள் வேணும். கருப்பட்டி வேண்டும் அதுவே இப்ப 150 ரூபாய். அதில் கொஞ்சம் கருப்பட்டி போட்டு ஆட்டுவது உண்டு இதோட, ஆள் கூலி எல்லாம் சேர்த்தா அடக்க விலையே அதிகம் ஆனா, பாக்கெட் நல்லெண்ணெய் 20, 30 ரூபாய் கம்மியா இருக்கேன்னு கேக்கறாங்க. கடலை எண்ணெய் 150 ரூபாய்க்குக் கொடுக்க மார்க்கெட்டில் இதில் பாதி விலையில கிடைக்குதுனு தயங்குகிறார்கள். ஒரு கிலோ நிலக்கடலை விலையைவிட கடலை எண்ணெய் விலை எப்படி குறைவாக இருக்க முடியும்? இதையெல்லாம் மக்கள் யோசிக்கணும்!’ ஆரோக்கியம் யோசித்தால் போலிகள் ஒழியும் தானே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்