முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கலப்பட எண்ணைய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவிக்கை மக்களுக்கு எச்சரிக்கை

உணவு கலப்படத் தடுப்பு அலுவலர்கள் எண்ணெய் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், கலப்படத்திற்குப் பயன்படுத்தக்கூடிய எண்ணெய் வகைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களே சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டதில் எண்ணெய் வகைகளில் 50 சமையல் எண்ணெய் நிறுவனங்களின் தயாரிப்பு உண்ணத் தகுதியற்றவை.. 250 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது மதுரையில் தீபாவளி நேரத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் கலப்பட எண்ணெய் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மதுரையில் நூற்றுக்கணக்கான சிறு மற்றும் பெரு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் வகைகள் விற்பனைக்கு தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. மதுரையில் மட்டும் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் சில்லரை விற்பனை செய்யப்படுகிறநிலையில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையின் போது மதுரையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் எண்ணெய் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், கலப்படம் இன்னும் 100 நிறுவன எண்ணெய்களின் ஆய்வு முடிவு வெளியாகாத நிலையில் கலப்படம் உறுதி செய்யப்பட்டுள்ள 250 நிறுவனங்களுக்கு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பி அதில் தங்கள் ஆய்வில் துல்லியமான சோதனை முடிவு வெளியாகியுள்ள நிலையில், அதை மறுக்கும் நிறுவனங்கள் தாங்கள் கூறும் ஆய்வகத்தில் சோதனை செய்ய விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முந்திரி எண்ணெய் மற்றும் பாமாயில் கலந்து நல்லெண்ணெயும், ரைஸ் பிரான் ஆயில் கலந்து கடலை எண்ணெய் தயாரிப்பது, மட்டுமல்லாது நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்க்கான வாசம் வர ரசாயனங்கள் உள்ளிட்டவையும் கலக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. உதிரி எண்ணெய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் பொருள்களை வாங்கவும். அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் ரீஃபைண்டு ஆயில் பயன்படுத்துறாங்க. ஆனால் நடுத்தர, ஏழை மக்கள் கடலை எண்ணெயும் பாமாயிலும் காரணம் விலை குறைவு ஆனால், கடலை எண்ணெய் என்கிற பெயரில பாமாயிலும், தவிடு எண்ணெயும், பருத்தி விதை எண்ணெயும் கலந்து மோசடி இந்த ஆய்வில சென்னை, திருச்சி, விழுப்புரம், ஈரோடு, சேலம், தர்மபுரின்னு ஆறு மாவட்டங்களில்14 பிராண்ட் கடலை எண்ணெய் சாம்பிள்கள் சோதித்து எதிலுமே ஒரிஜினல் கடலை எண்ணெய் இல்லை. சந்தேகம் வந்து, சூரியகாந்தி எண்ணெய் சாம்பிள்களையும் சோதிக்க அதிலும் வெவ்வேறு எண்ணெய்கள்தான் இது யதார்த்தமா இங்க நடக்கிறது. லேபிளில் தான் கடலை எண்ணெய்னு போட்டிருக்கு. ஆனா, பாக்கெட் உள்ள இருக்கறது 50 சதவீதம் பாமாயிலும், 50 சதவீதம் பருத்தி எண்ணெயும் கலந்த ஒரு எண்ணெய். ‘‘பொதுவாகவே, சமையல் எண்ணெயுடன் 20 சதவீதம் அளவுக்கு பிற உணவு எண்ணெய்களை சேர்த்துக்கலாம்னு அரசு அனுமதி கொடுத்திருக்கு. ஆனா, யாரும் இந்த விதியை மதிக்கிறதில்ல. அவங்க விருப்பத்துக்கு கலந்துக்கிறாங்க. அப்புறம், 79 சதவீகித பாக்கெட்களில் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் குறியீடு இல்லை. 64 சதவீகித பாக்கெட்களில்லைசென்ஸ் நம்பரே இல்ல. இதோடு விற்பனை அடுத்து, பாக்கெட்டில் ‘கலக்கப்பட்ட வெஜிடபிள் ஆயில்’னு லேபிளும், அக்மார்க் தரக் குறியீடும் இருக்கணும். குறிப்பா, இதுல எண்ணெயின் பெயர், உற்பத்தியாளர் பெயர், முகவரி, பேட்ச் எண், எண்ணெயின் எடை, உற்பத்தி செய்யப்பட்ட நாள், சிறந்த பயன்பாட்டு நாள், ஆர்ஜிமோன் கலப்படம் இல்லங்கிற உறுதிமொழி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தர விதிகள் 2011ன் படி குறிப்பிடப்பட வேண்டியவைனு சில விபரம் இருக்கு. இதுவும் பெரும்பாலான நிறுவனங்களின் பாக்கெட்களில் எழுதப்படவில்லை. மொத்தத்தில், நுகர்வோரைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் ஏமாற்றிப் பணம் பார்க்கிறார்கள். தரமில்லாத எண்ணெயால் பொதுமக்கள் உடல் உபாதைகளை அனுபவிக்க கலப்பட எண்ணெயால் ஆபத்து. இப்போ, பருத்தி விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் சமையல் எண்ணெயுடன் அதிகமா கலக்கும் நிலை இதுல பிரச்னை என்னன்னா, இப்போது வருகிற பருத்தி விதைகள்ல 98 சதவீதம் மரபணு மாற்றப்பட்ட விதைகளே அதிகம் அதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உடல் ஒவ்வாமையை ஏற்படுத்தக் கூடியது. அடுத்து, ரெண்டு எண்ணெயக் கலக்கும் விதத்திலும் பல சிக்கல்கள் உண்டு ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு கொதிநிலை அளவு இருக்கும். இதை ‘ஸ்மோக்கிங் பாயின்ட்’னு சொல்வாங்க. ஒரே எண்ணெயை பயன்படுத்தும்போது கொதிநிலை சரியா இருக்கும். ஆனா, ஒரு எண்ணெய் 90 சதவீதமும் ஒரு எண்ணெய் 10 சதவீதமும் கலந்து இருக்கிறதென்றால் இந்த எண்ணையை பொரிக்கப் பயன்படுத்தும்போது 90 சதவீத எண்ணெய் கொதிநிலைக்கு வந்துடும். ஆனா, பத்து சதவீத எண்ணெய் கொதிநிலைக்கு வராமலே இருக்கும். இதில் உணவு சமைத்தால், கொதிநிலைக்கு வராத அந்த பத்து சதவீத எண்ணெயால் அஜீரணக் கோளாறு ஏற்படும். அதுக்காக, எண்ணையே சாப்பிடாமல் இருக்க முடியாது. நம் உடலுக்கு தினமும் குறிப்பிட்ட அளவு எண்ணெய் சத்துகள் தேவை. இல்லாவிட்டால் வைட்டமின் குறைபாடுகள் வந்துவிடும். அதனால, இந்த மாதிரி கலப்படத்திலிருந்து தப்பிக்க செக்குல ஆட்டிய சுத்தமான எண்ணெய்களைப் பயன்படுத்தலாம். உடம்புக்கு ஆரோக்கியமானது அதுதான்’ இன்று இயந்திரங்கள் உதவியால கெமிக்கலைச் சேர்த்து எண்ணெயைப் பிரிச்சு எடுக்குற நிலைமை. அதுல சத்துகள் எல்லாம் காணாமல் போய் விடுது. ஆனா, செக்குல எந்த கெமிக்கலும் பயன்படுத்துறதில்ல. கலப்படமும் இருக்காது. எண்ணெயும் கெட்டியாக இருக்கும். பொதுவா, வெளி மார்க்கெட்ல நல்லெண்ணெயை ப்ளீச்சிங் பண்ணி ஒரே கலர்ல கொடுப்பாங்க. ஆனா, செக்குல அப்படியில்ல. எந்தப் பகுதியில எள் விளைஞ்சதோ அதுக்கு ஏற்றபடி கலர் மாறிக்கிட்டே இருக்கும். நமது மக்கள் கொஞ்சம் நிறம் அடர்த்தியா இருந்தாலே ‘அது நல்ல எண்ணெய் இல்லை’ன்னு ஒதுக்கிடுறாங்க. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாம் மரச் செக்குல ஆட்டிக் கொடுக்க நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 260 ரூபாய்க்கு விற்க இதுக்கு இரண்டரை கிலோ எள் வேணும். கருப்பட்டி வேண்டும் அதுவே இப்ப 150 ரூபாய். அதில் கொஞ்சம் கருப்பட்டி போட்டு ஆட்டுவது உண்டு இதோட, ஆள் கூலி எல்லாம் சேர்த்தா அடக்க விலையே அதிகம் ஆனா, பாக்கெட் நல்லெண்ணெய் 20, 30 ரூபாய் கம்மியா இருக்கேன்னு கேக்கறாங்க. கடலை எண்ணெய் 150 ரூபாய்க்குக் கொடுக்க மார்க்கெட்டில் இதில் பாதி விலையில கிடைக்குதுனு தயங்குகிறார்கள். ஒரு கிலோ நிலக்கடலை விலையைவிட கடலை எண்ணெய் விலை எப்படி குறைவாக இருக்க முடியும்? இதையெல்லாம் மக்கள் யோசிக்கணும்!’ ஆரோக்கியம் யோசித்தால் போலிகள் ஒழியும் தானே.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...