அஞ்சலக சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்த கடைசி நாள் டிசம்பர் 11
வங்கி சேவையில் இறங்கிய அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்குகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.50ஆக இருந்தது. இதை ரூ.500ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி இந்த விதிமுறை கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. ஏற்கனவே, சேமிப்பு கணக்கு தொடங்கியவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்திக் கொள்ள வரும் டிசம்பர் 11 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்புத் தொகையை ரூ.500 ஆக உயர்த்தாத பட்சத்தில் மார்ச் மாதம் முதல் அபராத கட்டணமாக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து ரூ.100, ஒவ்வொரு ஆண்டும் கழிக்கப்பட்டு இருப்புத் தொகை குறைக்கப்பட்டு, கணக்கு காலாவதி ஆகிவிடும்.
எனவே, அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு வைத்துள்ளவர்கள், சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.500 ஆக வரும் டிசம்பர் 11 ஆம் தேதிக்குள் உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று சென்னை பொது அஞ்சலக முதன்மை அஞ்சல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.
வங்கிகள் கணக்கில் மட்டுமல்ல; இனிமேல் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கிலும், குறைந்தபட்சத் தொகையை பராமரிக்க வேண்டும். இல்லை அபராதம் விதிக்கப்படும் இந்த நடைமுறை, இம்மாதம், 11ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இனி, தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில், குறைந்தபட்சத் தொகையாக, 500 ரூபாயை பரமாரிக்க வேண்டும் என்றும், அப்படி பராமரிக்க இயலாத நிலையில், நிதியாண்டின் இறுதியில், அந்த கணக்கிலிருந்து, 100 ரூபாய் பராமரிப்புக் கட்டணமாக கழித்துக் கொள்ளப்படும் . ஒருவேளை, கழித்துக் கொள்வதற்கான பணம் கணக்கில் இல்லாவிட்டால், அந்தக் கணக்கு முடித்து வைக்கப்பட்டும்.
தற்போது, தபால் அலுவலகச் சேமிப்புக்கு, 4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டித் தொகை, ஒவ்வொரு மாதமும் 10 வது நாளிலிருந்து கடைசி நாள் வரையிலான காலத்தில் பராமரிக்கப்படும் தொகையை கணக்கிட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இனி, இந்த காலகட்டத்தில் குறைந்தபட்சத் தொகை பராமரிக்கப்படாமல், 500 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், அம்மாதத்துக்கான வட்டி வழங்கப்பட மாட்டாது.
கருத்துகள்